சமீபத்திய பதிவுகள்

போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள்:சிங்கள ராணுவ தளபதியிடம் விசாரணை நடத்த அனுமதிக்க முடியாது:இலங்கை கண்டிப்பு

>> Monday, November 2, 2009

போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள்: சிங்கள ராணுவ தளபதியிடம் விசாரணை நடத்த அனுமதிக்க முடியாது அமெரிக்காவிடம் இலங்கை கண்டிப்பு கொழும்பு, நவ.3- "மனித உரிமை மீறல்கள் பற்றி எங்கள் ராணுவ தளபதியிடம் விசாரணை நடத்த அனுமதிக்க மாட்டோம்'' என்று அமெரிக்காவிடம் இலங்கை கண்டிப்புடன் கூறி உள்ளது. அமெரிக்கா விசாரணை இலங்கையில், விடுதலைப்புலிகளுடன் சிங்கள ராணுவம் நடத்திய இறுதிக்கட்ட போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இது தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபக்சேவின் சகோதரரும் இலங்கை பாதுகாப்பு துறை செயலாளருமான கோத்தபய ராஜபக்சே மீது அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை போர்க்குற்ற விசாரணையை தொடங்கி உள்ளது. ராணுவ தளபதி இந்த நிலையில், இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா அமெரிக்கா சென்று உள்ளார். அங்குள்ள ஓக்லஹாமா நகரில் அவர் தங்கி இருக்கிறார். அவரது தலைமையில் தான் இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்தது. எனவே, போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து சரத் பொன்சேகாவிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ள அமெரிக்க அரசு, இது தொடர்பாக அவருக்கு அழைப்பு விடுத்து இருக்கிறது. ஓக்லஹாமா நகரில் இன்று (புதன்கிழமை) அவரிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இலங்கை எதிர்ப்பு அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கை இலங்கை அரசுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சரத் பொன்சேகாவிடம் விசாரணை நடத்துவதற்கு இலங்கை கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. இது தொடர்பாக, இலங்கை வெளியுறவு அமைச்சகம் கொழும்பு நகரில் உள்ள அமெரிக்க தூதர் பட்ரிசியா புட்டனிசை நேற்று அழைத்து, சரத் பொன்சேகாவிடம் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்து இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதை அமெரிக்க தவிர்க்க வேண்டும் என்றும் கண்டிப்புடன் கேட்டுக்கொண்டது. இந்த தகவலை இலங்கை வெளியுறவு மந்திரி பொகல்லகாமா நேற்று கொழும்பு நகரில் நிருபர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அனுமதிக்க முடியாது இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பாக வேறொரு நாட்டிடம் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் அதிகாரம் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு கிடையாது. இலங்கை அரசின் முன் அனுமதியும் ஒப்புதலும் இல்லாமல் சட்டபூர்வமாக அவர் யாருடனும் தகவல்களை பகிர்ந்து கொள்ள முடியாது. மனித உரிமை மீறல்கள் புகார் பிரச்சினையில், பாதுகாப்பு துறை செயலாளர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான தகவல்களை பெற சரத் பொன்சேகாவை பயன்படுத்த திட்டமிட்ட உள்ளனர். எனவே அவரிடம் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்த அனுமதிக்க முடியாது. போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை கூறி இருப்பது குறித்து விசாரணை நடத்த குழு ஒன்றை அமைக்க அதிபர் ராஜபக்சே முடிவு செய்து இருக்கும் தகவலை அமெரிக்க தூதரிடம் தெரிவித்து இருக்கிறோம். இந்த பிரச்சினையில், ராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு தேவையான சட்ட உதவிகளை இலங்கை அரசு வழங்கும். இவ்வாறு பொகல்லகாமா கூறினார்.

:source:dailythanthi
--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP