சமீபத்திய பதிவுகள்

கடல்கன்னி அகப்பட்டதாகக் கூறும் வீடியோவில் தில்லுமுல்லு

>> Monday, November 2, 2009

 

அம்பாறையில் அமைந்துள்ள கல்முனை பகுதியிலிருந்து 10 கி.மீ தொலைவிலுள்ள நிந்தாவூர் என்னும் இடத்தில் முஸ்லிம் மீனவர் வலையில் இறந்த நிலையில் அகப்பட்ட கடற்கன்னியால் அப்பகுதி மக்களிடத்தில் பரபபரப்பை ஏற்படுத்தியுள்ளது என பல இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தது. அத்துடன் அதற்கு ஆதாரமாக வீடியோக் காட்சியும் வெளியாகியிருந்தது.

அந்த வீடியோ காட்சிகளை நாம் உற்றுநோக்கினால், அதில் கடற்கன்னியின் வாலை காட்டும்போது பின்னால் சென்ரல் கீட்டிங்(லண்டன் போன்ற ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் "central heater") நன்றாகத் தெரிகிறது. எனவே இந்த வீடியோ ஏதே ஒரு ஐரோப்பிய நாட்டில் எடுக்கப்பட்டு பின்னர் அது கல்முனையில் அகப்பட்டதாகவும், அதனை உடனே தாம் பதிவுசெய்து இணையத்திற்கு அனுப்பியதாகவும் யாரோ பொய்யான தகவலைக் கொடுக்க பொறுப்பற்ற வகையில் பல இணையத்தளங்கள் அதனை பிரசுரித்துள்ளன.

போதாக் குறைக்கு கிழக்கில் கடவுள் தோன்றியதாகவும், கிழக்கில் பல அதிசயங்கள் நடப்பதாகவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முனைகின்றனர் சிலர். ஊடகங்கள் இவ்வாறான செய்திகளைச் சரிவர கையாளவேண்டும், பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும், இது அதிர்வு வாசகர்களால் சுட்டிக்காட்டப்பட்ட ஒரு விடையமே அன்றி வேறு எந்த ஊடகங்களையும் தாக்கும் நோக்கில் எழுதப்படவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.


--
www.thamilislam.co.cc






















source:athirvu

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

1 கருத்துரைகள்:

anuz November 2, 2009 at 9:25 PM  

இல் ஆமாம்..அந்த காணொளி நான் பல மாதங்களுக்கு முன்பே youtube' இல் பார்த்திருகிறேன்...tamilwin.com இல் comment போட முடியல...உங்களிடம் சொல்லுகிறேன்.

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP