சமீபத்திய பதிவுகள்

காதலை ஒப்புக் கொண்ட கர்ப்பிணி பெண் கல்லால் அடித்து கொலை

>> Friday, November 20, 2009

காதலை ஒப்புக் கொண்ட கர்ப்பிணி பெண் கல்லால் அடித்து கொலை சோமாலியா நாட்டு மத கோர்ட்டு தண்டனை மொகாதீசு, நவ.21- சோமாலியா நாட்டின் தெற்கு பகுதிகளில் மத தீவிரவாதிகளின் கோர்ட்டு உள்ளன. இவர்கள் மத கோட்பாடுகளை மீறுவோருக்கு மரண தண்டனை விதிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். நேற்று முன்தினம், வாஜித் என்ற நகரில் 20 வயது பெண் ஒருவரை மத கோர்ட்டு நீதிபதி ஷேக் இப்ராகிம் அப்திரகுமான் கல்லால் அடித்துக் கொல்லும்படி உத்தரவிட்டார். அந்த பெண் 29 வயது இளைஞன் ஒருவனை காதலித்து அவன் மூலம் கர்ப்பிணியாக்கி விட்டாள். இது மத கோட்பாட்டை மீறிய செயல் என்று கூறி அவளுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது. இதையொட்டி நேற்று அந்த பெண் பொது மக்கள் 200 பேர் முன்னிலையில் கல்லால் அடித்து கொல்லப்பட்டாள். இடுப்பளவு குழி தோண்டி அதற்குள் அவளை புதைத்து வைத்து இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவளது காதலனுக்கு 100 கசையடி கொடுக்கப்பட்டது.


source:dailythanthi

--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP