சமீபத்திய பதிவுகள்

மலேசியாவில் இந்து கோவில் பூசாரியை நிர்வாணப்படுத்தி தாக்குதல்

>> Sunday, December 20, 2009

 
கோலாலம்பூர், டிச. 20-
 
மலேசியாவில் உள்ள கீலனா ஜெயா என்ற இடத்தில் உள்ள ஒரு இந்து கோவிலில் பூசாரியாக பணி புரிபவர் கனகராஜன் (27). கடந்த 2 வருடங்களாக இங்கு பூசாரியாக வேலை பார்த்து வருகிறார். தனக்கு கூடுதலாக சம்பளம் வழங்கும்படி கோவில் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வந்தார். இது கோவில் அறங்காவலர் குழு தலைவரின் மகனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
 
இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி இவர் கோவிலில் பூஜை செய்து கொண்டிருந்தார். கோவில் முழுவதும் பக்தர்கள் அதிக அளவில் திரண்டிருந்தனர்.
 
அப்போது அங்கு வந்த அறங்காவலர் குழு தலைவரின் மகன் பூசாரி கனகராஜனை கடுமையாக தாக்கினார். எனவே அவரிடம் இருந்து தப்பிக்க கனகராஜன் ஓட்டம் பிடித்தார்.
 
ஆனால் அவர் விட வில்லை. பூசாரி கனகராஜனின் வேட்டியை அவிழ்த்து நிர்வாணப்படுத்தினார். அதன் பிறகும் அவரை தொடர்ந்து தாக்கினார். இதில் அவரது தலை உடைந்து ரத்தம் கொட்டியது.
 
இதைப்பார்த்த கோவில் அறங்காவலர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
 
இச்சம்பவம் குறித்து கனகராஜன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

source:maalaimalar

--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP