சமீபத்திய பதிவுகள்

பெண்கள் பள்ளியை தகர்த்தனர் தலிபான்கள்

>> Tuesday, December 15, 2009


 

பெஷாவர் : பாகிஸ்தானின் கைபர் பழங்குடியின பகுதியில் இருந்த பெண்கள் பள்ளி ஒன்றை, தலிபான்கள் வெடி வைத்து தகர்த்தனர்.



பாகிஸ்தானின் கைபர் பழங்குடியின பகுதியில், லண்டி கோட்டல் துணை மண்டல பிரிவில் அமைந்துள்ள பெண்கள் தொடக்கப்பள்ளி ஒன்றை, தலிபான்கள் வெடி வைத்து தகர்த்தனர். இதில், பள்ளியில் உள்ள அனைத்து அறைகளும் சேதமடைந்தன. ஆனால், யாருக்கும் காயமேற்படவில்லை.பெண்கள் மற்றும் இருபாலர் பள்ளிகள் ஆகியவற்றிற்கு பயங்கரவாதிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில், அவர்கள் நூற்றுக்கணக்கான பள்ளிகளை தீயிட்டு கொளுத்தி உள்ளனர். இவற்றில் பெரும்பாலானவை பெண்கள் பள்ளிகள்.இதற்கிடையில், பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர், லஷ்கர்-இ-இஸ்லாம் குழுவினருக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஒராக்சாய் பழங்குடியின பகுதியில், நேற்று முன்தினம் நடந்த தாக்குதலில், பாக்., ராணுவ வீரர்கள் இரண்டு பேர் மற்றும் பயங்கரவாதிகள் பத்து பேர் பலியாயினர். தெற்கு வாசிரிஸ்தான் பகுதியில் இருந்து தப்பி ஓடிய, தலிபான் பயங்கரவாதிகள், பழங்குடியின பகுதியில் தஞ்சம் அடைந்திருப்பதாக அந்நாட்டு புலனாய்வுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

sourceLdinamalar

--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP