சமீபத்திய பதிவுகள்

இஸ்லாமியர்களுக்கு சுவிசேஷம் அவசியமா இல்லையா?

>> Sunday, January 18, 2009

பத்து வயதில் சிறுமிக்கு திருமணம்



http://thamilislam.blogspot.com/2009/01/blog-post_7860.html

1)


2)
http://flickr.com/photos/82982298@N00/2467844279/

அப்பா தன் மகளை பார்த்து சொல்கிறார்: நீ அந்த மனிதனை திருமணம் செய்துக்கொள்ளவேண்டும்.
மகள்: இல்லை நான் செய்யமாட்டேன்
அப்பா: அப்படியானால், நீ கற்பழிக்கப்படுவாய், பிறகு இந்த நாட்டில் உன்னை காப்பாற்ற எந்த சட்டமும், எந்த பெரியவரும் வரமாட்டார். உனக்கு தண்டனை நிச்சயம்.

நம் இந்தியாவில் சொல்வார்கள், "இப்படிப்பட்ட அப்பாவின் வயிற்றில் பிறக்க என்ன புன்னியம் செய்தாளோ இந்தப் பெண்".

வாழ்க அப்பா
வாழ்க்க அப்பாவின் அறிவுரை




 
Quote:
"My father beat me and told me that I must marry this man, and if I did not, I would be raped and no law and no sheikh in this country would help me. I refused but I couldn't stop the marriage," Nojoud Nasser told the Yemen Times. "I asked and begged my mother, father, and aunt to help me to get divorced. They answered, 'We can do nothing. If you want you can go to court by yourself.' So this is what I have done," she said.

Nasser said that she was exposed to sexual abuse and domestic violence by her husband. "He used to do bad things to me, and I had no idea as to what a marriage is. I would run from one room to another in order to escape, but in the end he would catch me and beat me and then continued to do what he wanted. I cried so much but no one listened to me. One day I ran away from him and came to the court and talked to them."
 


இந்த பெரிய அறிஞருக்கு முதல் மரியாதை செய்ய எல்லாரும் ஆயத்தம் ஆகிவிடுங்கள். இவரையும் இவர் பின்பற்றும் இவரது தலைவரையும் நாமும் பின்பற்றலாம் வாருங்கள்.

என்னே ஒரு கோட்பாடு, ஒரு வயது குழந்தையோடும் நாம் திருமண ஒப்பந்தம் செய்துக்கொள்ளலாமாம். எங்கே போனது, இஸ்லாமிய பெண் விடுதலை, எங்கே போனார்கள் இஸ்லாமிய பெண்களின் விடுதலைக்காக பாடுபடும் மாமனிதர்கள்.

சிலர் லாஜிக் கூட சொல்வார்கள், "பார்த்தீர்களா? இந்தியாவில் திருமணம் ஆகாமல் அனேகர் கன்னிகளாகவே கழித்துவிடுகிறார்கள், இதற்கு அம்மதத்தில் உள்ள சடங்காசாரங்களும், கோட்பாடுகளும் தான் காரணம், ஆனால், இஸ்லாமை பாருங்கள், பிறந்த பெண் குழந்தைக்கு எதிர்காலத்தில் திருமணம் நடக்கும் வாய்ப்பு ஒரு வயதிலேயே வந்துவிடுகிறது, அக்குழந்தையின் பெற்றோருக்கு கவலையே இருக்காது, இதுவல்லவா இஸ்லாம் உலகிற்கு செய்யும் உதவிகள், இதற்காகத்தான் சொல்கிறேன், இஸ்லாம் இனிய மார்க்கம் தான்".என்று மேடையில் முழங்குவார்கள்,



3)


4) சௌதியில் 8 வயது சிறுமி நீதிமன்றத்தில் கேட்ட விவாகரத்தை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது, காரணம் என்ன, அந்த சிறுமி இன்னும் ருதுவு எய்தவில்லை(அதாவது பெரிய மனுஷி என்றுச் சொல்வார்கள்) அதனால், அவள் ருதுவு எய்தும் வரை இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்.


அப்படியானால், ருதுவு எய்தாத சிறுமியை திருமணம் செய்துக்கொள்ள அனுமதிக்கிறதே, அதே நீதி மன்றம்! இது என்ன நியாயம் ? 58 வயதுடைய கிழவனை ருதுவு எய்தாத சிறுமியை திருமணம் செய்துக்கொள்ள அனுமதிக்கிறதே? இது எப்படி நியாயம்?


வேலியே தோட்டத்தை மேய்கிறது என்பது இது தான்.

இது "இஸ்லாமியரின் புனித ஸ்தலமான மக்கா இருக்கும், புன்னிய(!?!) பூமியின் நீதிகள்".

 
Quote:
A Saudi court has rejected a plea to divorce an eight-year-old girl married off by her father to a man who is 58, saying the case should wait until the girl reaches puberty.


http://krishna109.newsvine.com/_news/2008/12/22/2237381-saudi-court-rejects-divorce-plea-from-eight-year-old-girl-married-to-58-year-old-man

இப்போது சொல்லுங்கள், இஸ்லாமியர்களுக்கு சுவிசேஷம் அவசியமா இல்லையா?

 

 

StumbleUpon.com Read more...

பிரான்சின் கிழக்குப் பாகத்திலிருக்கும் ஐரோப்பாவின் இதயம் என்று வர்ணிக்கப்படும் ஸ்ராஸ்பூர்க் நகரத்திலுள்ள ஐரோப்பிய பாராளுமன்ற முன்றலில் 14.01.2009 இன்று கண்டன ஒன்று கூடல் நடைபெற்றிருந்தது.

15.01.2009 பிரான்ஸ் பாரிஸ் வாழ் தமிழ்மக்கள் தொல் திருமாளவன் அவர்களின் உண்ணாவிதரப்போராட்டத்துக்கு நன்றி தெரிவித்து ஆர்பாட்டத்தை முன்னெடுத்தனர்.அதன் காணொளி இணைக்கப்பட்டுள்ளது.

15.012009  பிரான்சின் ஸ்ராஸ்பேர்க் என்னுமிடத்தில் கண்டன ஆர்பாட்டம் இடம்பெற்றது அதன் காணொளி இணைக்கப்பட்டுள்ளது

10.01.2009 அன்று பிரான்ஸ் பரிஸ் றீப்பிப்பிளிக் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்ட பேரணியின் காணொளி இணைக்கப்பட்டுள்ளது.

StumbleUpon.com Read more...

இலங்கை இனப்பிரச்சினை

இலங்கை இனப்பிரச்சினை

கோவி லெனின்
 

 

               ப்போது வரைபடத்தை பார்த்தாலும் ஒரு கண்ணீர்த்துளி இந்தியாவின் காலடியில் கிடந்து கருணையை எதிர்பார்ப்பது போன்ற தோற்றத்தில்தான் இருக்கும் இலங்கைத் தீவு. புவியியலின்படி இந்திய நிலப்பகுதியும் இலங்கை நிலப்பகுதியும் பன்னெடுங்காலம் முன்னே இணைந்திருந்தவை என்றும் கடல்கோள்களால் அவை பிரிக்கப்பட்டன என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். சிலப்பதிகாரத்தில் கூறப்படும் ஏழ்தெங்கம் என்ற நாடுதான், கடலால் பிரிக்கப்பட்டு ஈழம் ஆனது என்று குறிப்பிடுகிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். தாயின் தொப்புள் கொடியிலிருந்து குழந்தையை தனியே பிரித்தெடுப்பதுபோல கடல் இரு நாடுகளையும் பிரித்துவிட்டது.

இலங்கையில் நீண்டகாலமாகவே தமிழர்கள் வாழ்ந்து வருவதை அந்நாட்டின் வரலாற்று நூலான மகாவம்சம் எனும் நூலிலே தெரிவிக்கிறது. குவெய்னி என்ற தமிழ் அரசி ஆட்சி செய்த காலத்தில் வடஇந்தியாவின் லாலாதேசம் என்ற பகுதியிலிருந்து விஜயன் என்பவர் தலைமையில் கப்பலில் வந்து சேர்ந்தவர்களே பின்னர் சிங்கள இனத்தவர்களாயினர் என்பதை மகாவம்சம் விளக்குகிறது. எல்லாளன் என்ற தமிழ் அரசனது ஆட்சியில் ஒரே குடையின் கீழ் இலங்கை இருந்ததையும் அந்நுகில் விளக்குகிறது. பின்னர், இந்தியாவைப் போலவே பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்து விடுதலை பெற்ற நாடுதான் இலங்கை.

சுதந்திர இலங்கையில் அமைந்தது பெரும் பான்மையினரான சிங்களர்கள் தலைமையிலான அரசு. சிறுபான்மைத் தமிழர்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திரிகோணமலை உள்ளிட்ட இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வசித்து வந்தனர். ஒரே நாட்டில் வாழ்ந்த போதும் தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்தி வந்தது சிங்கள அரசு. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இலங்கை மலைத் தோட்டங்களில் வேலை செய் வதற்காக இந்தியாவிலிருந்து அழைத்துச் செல்லப் பட்டு காலம் காலமாக இலங்கையின் பொருளா தாரத்தை முன்னேற்றிய தமிழர்கள் 10 லட்சம் பேரின் குடியுரிமையையும், வாக்குரிமையையும் பறித்தது, இலங்கையின் முதல் பிரதமரான சேனநாயகா தலைமையிலான அரசு.

தமிழர் பகுதிகளுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. இது குறித்து தமிழ் தலைவர்கள் எழுப்பிய கோரிக்கைகளுக்கு இலங்கை அரசு செவி சாய்க்கவில்லை. ஈழத்தந்தை என்றழைக்கப்படும் செல்வா (செல்வநாயகம்) தலைமையிலான தமிழரசு கட்சி அறவழிப் போராட்டங்களை மேற்கொண்டது. தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்ற அக்கட்சி 1976ஆம் ஆண்டில் வட்டுக்கோட்டை என்ற இடத்தில் இலங்கைத் தமிழருக்கான கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து மாநாடு நடத்தியது. தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்தும் சிங்கள அரசுடன் சேர்ந்திருக்க முடியாது என்றும் தனிநாடு பெறுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அந்த மாநாட்டில் அறிவித்தார் செல்வா. இதற்கு தமிழ் மக்களின் ஆதரவைக் கோரினார். 1977-ல் நடந்த தேர்தலில் இலங்கையின் 32 தமிழ்த் தொகுதிகளில் 31-ல் தமிழர் கூட்டணியை வெற்றி பெறவைத்து தனி நாட்டிற்கான தங்கள் ஏற்பளிப் பைத் தெரிவித்தனர் ஈழத் தமிழ் மக்கள்.

செல்வாவைத் தொடர்ந்து அமிர்தலிங்கம் உள் ளிட்ட தலைவர்கள் அறப்போராட்டங்களை மேற்கொண்டனர். ஆனால், இலங்கை அரசு தமிழர் நலனில் அக்கறை செலுத்தவில்லை. தமிழர்களின் உரிமைகளைத் தொடர்ந்து பறித்து வந்ததுடன், தமிழர் பகுதிகளில் சிங்களர்களைக் குடியேற்றி இலங்கையை முழுமையான சிங்கள நாடாக மாற்றும் முயற்சியை மேற்கொண்டது. இதனால் கொதித்துப்போன தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

1983ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள வெலிக் கடை சிறைச்சாலையில் குட்டிமணி, ஜெகன், தங்க துரை உள்ளிட்ட தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர். குட்டிமணி தனது கண்களை தானம் செய்ய பதிவு பண்ணியிருந்தார். தான் இறந்தாலும் தானம் செய்யப்படும் கண்களால் தமிழர்களின் சுதந்திர நாட்டை பார்ப்பேன் என்று அவர் சொல்லியிருந்ததால் அவரது கண்களைத் தோண்டி எடுத்துவிட்டு அவரது உயிரை பறித்தனர் சிங்கள வெறியர்கள். இலங்கை அரசின் ஆதர வுடன் தமிழர்கள் வேட்டையாடப்பட்டனர். தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் வன்முறையை காவல்துறை ராணுவம் உள்ளிட்டவை மேற் கொண்டன. இலங்கையின் மிகப் பெரியதும் பழைமையானதுமான யாழ்ப்பாணம் நுகிலகம் தீ வைத்து எரிக்கப்பட்டது.

அரசே முன்னின்று நடத்திய படுகொலைகளாலும் வன்முறைகளாலும் இலங்கை மண்ணில் வாழ முடியாமல் ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக இந்தியாவுக்கு வந்தனர். அவர்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலும் அகதி முகாம்கள் அமைத்து தரப் பட்டன. இலங்கை ராணுவத்துடன் ஆயுதப் போராட்டம் மேற்கொண்ட தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கு இந்தியாவில் பயிற்சிக் களம் அமைக்க அனுமதியளித்தார் அப்போதைய இந்திய பிரதமர் இந்திராகாந்தி.

அவரது மறைவுக்குப்பின் பிரதமரான ராஜீவ் காந்தி இலங்கைப் பிரச்சினையில் அமைதி ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கையுடன் இலங்கை அதிபராக இருந்த ஜெயவர்த்தனாவுடன் ஒப்பந்தம் ஒன்றை போட்டார். ஆனால், இந்த ஒப்பந்தத்தை சிங்கள கட்சிகள் ஏற்கவில்லை. ஒப்பந்தத்திற்குப் பின் இலங்கை சென்ற ராஜீவ் காந்தியை ராணுவ வீரர் ஒருவர் மரியாதை அணிவகுப்பின்போது துப்பாக்கியால் தாக்க முயன்ற சம்பவம் உலகத்தையே அதிர்ச்சியடையவைத்தது. ஒப்பந்தத்தின்படி இலங் கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிகாப்புபடை சிங்களர்களின் எதிர்ப்புக்குள்ளானதுடன் தமிழர் களுக்கு எதிராகவே அப்படை போரிட நேர்ந்தது. ஒப்பந்தம் நிறைவேறாமல் தோல்வியடைந்தது.

1991-ல் திருப்பெரும்புதூரில் நடந்த மனிதவெடி குண்டு தாக்குதலில் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட இலங்கை பிரச்சினையிலிருந்து ஒதுங்கி நிற்கத் தொடங்கியது இந்தியா. இலங்கையில் ஆயுதப் போராட்டம் நடத்தி வரும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இந்தியாவில் தடை விதிக்கப் பட்டது. இதன்பின்னர் இலங்கையில் தொடர்ந்து போர்களும் தமிழர்கள் மீதான சிங்கள ராணுவத்தின் வன்முறையும் நீடித்தன. போரில் விடுதலைப்புலிகளின் கை ஒரு கட்டத்தில் ஓங்குவதும் பின்னர் சிங்கள ராணுவம் அந்தப் பகுதிகளை மீட்பதுமாக 25 ஆண்டுகால அவலம் தொடர்கிறது. இலங்கைத் தமிழர் பகுதியில் மின்சாரம் கிடையாது. பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருளுக்கும் தட்டுப்பாடு. அரிசி ஒரு கிலோ 100 ரூபாய் வரை விற்பனையாகிறது. இவையெல்லலாம் போர் ஏற்படுத்திய கொடூர விளைவுகள்.

ஜப்பானும் ஐரோப்பிய நாடுகளும் இலங்கையில் அமைதியை ஏற்படுத்த முயன்றன. நார்வே நாடு மேற்கொண்ட சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஏறத்தாழ ஐந்தாண்டு காலத்திற்கு போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. தற் போதைய அதிபர் ராஜபக்சே பதவி ஏற்றபிறகு மீண்டும் போர் தொடங்கியது. விடுதலைப்புலிகள் அமைப்பினர் வான்படை அமைத்து தாக்குதல் நடத்தும் ஆற்றல் பெற்றவராயினர். அவர்களிடம் தரைப்படையும் கடற்படையும் ஏற்கனவே இருக்கிறது. தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் கல்வி நிலையங்கள், காவல் நிலையங்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்கள் ஆகியவற்றை அவர்கள் நிர்வகித்து வருகின்றனர். இப்பகுதிகளை மீட்க பல நாடுகளின் உதவியுடன் போரைத் தீவிரப்படுத்தியுள்ளது. இப்போரினால் அப்பாவி தமிழ்மக்கள் குண்டுவீச்சுக்கு ஆளாகி தங்கள் உயிரை இழப்பதும் தங்கள் வாழ்விடங்களை இழந்து காட்டுக்குள் பதுங்கி வாழ்வதும் மனித நேயம் உள்ள யாரையுமே கலங்கச் செய்துவிடும்.

இவர்களுக்கு ஐ.நா. அவை, செஞ்சிலுவை சங்கம் போன்றவை உதவ முன்வந்தாலும் இலங்கை அரசு அனுமதிப்பதில்லை. அதனால்தான் இந்தியா உதவி செய்ய வேண்டும் என்ற குரல் தாய்தமிழகத்திலிருந்து கட்சி எல்லை கடந்து ஒலிக்கிறது. அப்பாவி தமிழர்களைக் கொல்லும் இலங்கை அரசுக்கு செய்யப்படும் ராணுவ உதவிகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, உடை, மருந்து உள்ளிட்டவற்றை செஞ் சிலுவை சங்கம் போன்ற சர்வதேச அமைப்புகள் வாயிலாக வழங்கவேண்டுமென்றும் இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு அமைதியான வாழ்க்கைக்கு தமிழ் மக்கள் திரும்புவதற்கு ஆவன செய்ய வேண்டுமென்றும் இந்திய அரசை தமிழக முதல்வர் தலைமையில் கூடிய தமிழக அனைத்துக்கட்சிக் கூட்டம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கை பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்ற தன் நிலைப் பாட்டை இந்திய அரசு வெளிப்படுத்தியுள்ளது. இந்தியாவின் அக்கறை மிகுந்த நடவடிக்கைளால் மட்டுமே இலங்கை பிரச்சனையை முடிவுக்கு வரமுடியும்.
 
 

StumbleUpon.com Read more...

ஆபிரகாம் லிங்கனை பின்பற்றிய ஒபாமா!


 

அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒபாமா வரும் இருபதாம் தேதி பதவி ஏற்கிறார்.  இதற்காக அவர் இன்று வாஷிங்டன் போய்ச்சேர்ந்தார்.


இதற்கு முன்னதாக அவர் 1776-ம்ஆண்டு அமெரிக்க சுதந்திர போராட்டம் முதன்முதலாக தொடங்கப்பட்ட நகரான பிலடெல்பியாவுக்கு சென்றார். அங்கு இருந்து அவர் ரெயிலில் புறப்பட்டு 220கி.மீ.தொலைவில் உள்ள வாஷிங்டன் சென்றார்.

1861ம்ஆண்டு ஆபிரகாம் லிங்கன் ஜனாதிபதியாக பதவி ஏற்பதற்கு முன்பு இந்த நகரில் இருந்து தான் ரெயிலில் வாஷிங்டன் சென்றார். லிங்கன் வழியை பின்பற்றி ஒபாமாவும் பிலடெல்பியாவில் இருந்து வாஷிங்டன் சென்றார். அவருடன் அவர் மனைவியும் பயணம் செய்தார். வழிநெடுக திரளான மக்கள் கூடிநின்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அந்த ரெயில் வழியில் பல இடங்களில் மக்கள் கூட்டம் காரணமாக ஊர்ந்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. வில்மிங்டன் நகரில் ரெயில்நின்றபோது,அந்த ஊரை சேர்ந்த துணை ஜனாதிபதி ஜோ பிடன் அந்த ரெயிலில் ஏறினார்.

இந்த ரெயிலில் அவர்கள் வாஷிங்டன் போய்ச்சேர்ந்தபோது அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=2149

StumbleUpon.com Read more...

விசுவமடுவில் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்: கைக்குழந்தையும் 6 சிறுவர்களும் உட்பட 9 பேர் பலி; 33 பேர் காயம்

 
 
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு பகுதி பொதுமக்கள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 மாதக் குழந்தையும் 2 சிறுவர்களுமாக 6 பேர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 33 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
விசுவமடுவில் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணியளவில் சிறிலங்கா படையினர் கண்மூடித்தனமான முறையில் எறிகணைத் தாக்குதல் நடத்தினர்.
இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 33 பேர் படுகாயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் கைக்குழந்தையும் 6 சிறுவர்களும் அடங்குவர்.
காயமடைந்தவர்களில் 14 மாதக் குழந்தையும் ஒன்றரை வயதுக் குழந்தையும் உட்பட 6 சிறுவர்களும் அடங்குவர். 

 




கறுப்பையா பெருமாள் (வயது 49)

பெருமாள் இந்திரா (வயது 40)
பெருமாள் சிந்துஜா (வயது 15)
பெருமாள் துசியந்தி (வயது 09)
பெருமாள் தர்மினி (வயது 08)
பெருமாள் கயல்விழி (08 மாத குழந்தை)
சோமசுந்தரம் உதயகுமார் (வயது 45)
ரகுநாதன் கீர்த்தனா (வயது 10)
 
தங்கராசா தவக்குமார் (வயது 14)
ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.

 






தமிழினி (14 மாதங்கள்)
பிரான்சிகா ( ஒன்றரை வயது)
யதுசன் (வயது 07)
மதிவாணி  (வயது 08)
இ.இளநிலா (வயது 10)
மதிவண்ணன் (வயது 11)
ரதிகரன் (வயது 15)
திபாகரன் (வயது 15)
ச.தியாகராசா (வயது 56)
கருணாநிதி ரஞ்சினிதேவி (வயது 46)
சசிதரன் (வயது 26)
கதிர்காமநாதன் (வயது 37)
இராமநாதன் (வயது 71)
நடராசா (வயது 76)
பவளராணி (வயது 58)
இரட்ணராசா (வயது 46)
வினிதா (வயது 35)
வினோகௌரி (வயது 48)
இராஜ்குமரன் (வயது 47)
சுதர்சினி (வயது 37)
சிலம்பரசன் (வயது 19)
சசிகுமார் (வயது 26)
கயல்விழி (வயது 24)
இராமலிங்கம் (வயது 53)
சஞ்ஜீவன் (வயது 19)
சிவனம்மா (வயது 64)
விஜிகரன் விந்துஜா (வயது 21)
ஜெனிரோஸ் (வயது 31)
கண்ணகியம்மா (வயது 60)
சதீஸ் (வயது 28)
நல்லதம்பி இராசதுரை (வயது 70)
தங்கராசா கணேஸ் (வயது 09)
துரைராசா தங்கராசா (வயது 37)
ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

 

 

StumbleUpon.com Read more...

முல்லைத்தீவில் பொதுமக்கள் மீது தடைசெய்யப்பட்ட கிளஸ்ரர் குண்டுத் தாக்குதல்: வெடிக்காத நிலையில் குண்டுகள் மீட்பு

 




 

http://www.swisstamilweb.com/

StumbleUpon.com Read more...

சிறிலங்கா படையினரின் தொடர் எறிகணைத் தாக்குதலில் நேற்று மட்டும் 4 பேர் பலி; 4 சிறுவர்கள் உட்பட 11 பேர் காயம்

சிறிலங்கா படையினரின் தொடர் எறிகணைத் தாக்குதலில் நேற்று மட்டும் 4 பேர் பலி; 4 சிறுவர்கள் உட்பட 11 பேர் காயம்
 
புதுக்குடியிருப்பு மற்றும் விசுவமடு பகுதிகள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 4 சிறுவர்கள் உட்பட 11 பேர் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் மற்றும் இன்னுமொரு குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களுமாக 11 பேர் காயமடைந்துள்ளனர்.
 




அருள்சிறீதரன் சசிகலா (வயது 24)
அருள்சிறீதரன் சரண்யா (வயது 06)
சிறீறஞ்சன் மிதுசன் (வயது 10)
சிறீறஞ்சன் சிந்துஜா (வயது 08)
விமலநாதன் றஞ்சிதா (வயது 15)
அந்திரேஸ் இனற்றோசானி (வயது 25)
புண்ணியசிங்கம் கருணாகரன் (வயது 25)
மகேஸ்வரன் ரேவதி (வயது 38)
கார்த்திகேசு கவிதாசன் (வயது 30)
ஞானேஸ்வரன் ஞானசீலன் (வயது 37)
வேலுச்சாமி நாதன் (வயது 49)
ஆகியோர் காயமடைந்துள்ளனர்.
கொல்லப்பட்டவர்களின் பெயர் விவரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

 


 

 

StumbleUpon.com Read more...

இறுதிப் போர் யாருக்கு சாதகம்?

இறுதிப் போர் யாருக்கு சாதகம்?
முல்லைத்தீவில் இறுதிப்போரில் படையினர் ஈடுபட்டுள்ளனர். முல்லைத்தீவைச் சுற்றி சகல முனைகளிலும் குவிக்கப்பட்டுள்ள படையினர் ஆங்காங்கே பாரிய தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். எனினும் விடுதலைப் புலிகளின் கடும் பதில் தாக்குதல்களால் பின்னடைவையும் சந்திக்கின்றனர். தங்களது சகல வளங்களையும் திரட்டி முல்லைத்தீவை குறிவைத்துள்ள படையினருக்கு புலிகளின் பதில் நடவடிக்கைகள் குறித்தும் பலத்த சந்தேகங்கள் உள்ளன. இதுவரை காலமும் பின்வாங்கிய புலிகளின் பதில் நடவடிக்கைகள் எப்படியிருக்கும் என்பது குறித்தும் படையினர் தீவிர கவனம் செலுத்தியுள்ளனர்.

வன்னிப் போரில் படையினரின் கையே ஆரம்பம் முதல் ஓங்கியுள்ளது. வன்னியில் பெரும்பாலான பகுதிகளை அவர்கள் கைப்பற்றி விட்டனர். வவுனியா, மன்னார் மாவட்டங்களும் யாழ்.மாவட்டமும் தற்போது படையினரின் பூரண கட்டுப்பாட்டில் உள்ளது. கிளிநொச்சியின் பெரும் பகுதியையும் அவர்கள் கைப்பற்றியுள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் கணிசமான அளவு பகுதிகளுக்குள்ளும் சென்றுள்ளனர். இதன் மூலம் முல்லைத்தீவையும் விரைவில் முழுமையாகக் கைப்பற்றிவிட முடியுமென்றும் கருதுகின்றனர். இதனால் முல்லைத்தீவில் படையினர் தங்கள் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர். முல்லைத்தீவைச் சுற்றி எட்டு முனைகளில் இந்தப் பாரிய படைநகர்வு நடைபெறுகிறது.

இந்தப் போரில் 50,000 படையினர் வரை ஈடுபட்டுள்ளதாக படைத்தரப்பு கூறுகின்ற போதும் வன்னியின் அனைத்துப் பகுதியிலும் அதிலும் குறைவான படையினரே நிலைகொண்டுள்ளதாக கூறப்படுகிறது. யாழ்.குடாவை படையினர் முழுமையாகக் கைப்பற்றியதன் மூலம், அங்கு நிலைகொண்டிருந்த ஆயிரக்கணக்கான படையினரில் கணிசமானோர் வன்னிப் போர் முனைக்கு வந்துள்ளனர். புலிகளைத் தற்போது முல்லைத்தீவுக்குள் மட்டும் முடக்கியுள்ளதால் படையினரின் முழுக்கவனமும் முல்லைத்தீவிலேயே மையங் கொண்டுள்ளது. அவர்களது ஆயுத வளங்களும் முல்லைத்தீவைச் சுற்றியே குவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவுக்குள் முடங்கிப் போயிருக்கும் புலிகளை முற்?க அழித்து விட வேண்டுமென்பதற்காக முல்லைத்தீவைச் சுற்றி சகல முனைகளிலும் ஆட்லறிகள், பல்குழல் ரொக்கட்டுகள், கனரக மோட்டார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கவசப் படையணியின் யுத்த டாங்கிகளும் முல்லைத்தீவை நோக்கி நகர்ந்து வருகின்றன.

கிளிநொச்சியை படையினர் கைப்பற்றி விடுதலைப் புலிகளை "ஏ9' வீதியின் கிழக்குப் புறத்தினுள் தள்ளியபோது புலிகள் 40 கிலோ மீற்றர் X 40 கிலோமீற்றர் பரப்பளவுக்குள் முடக்கப்பட்டனர். எனினும் அதன் பின்னரான போரின் மூலம் புலிகள் தற்போது 30X20 கிலோமீற்றர் பரப்புக்குள் முடங்கியுள்ளதாக படைத்தரப்பு தெரிவிக்கின்றது. புலிகளுடன் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களும் இந்தச் சிறிய இடத்திற்குள் முடங்கியுள்ளதால் இந்தப் போரில் அப்பாவி மக்களின் இழப்பு தினமும் அதிகரித்து வருகிறது. கடந்த ஒருவாரத்தில் ஷெல் மற்றும் விமானத் தாக்குதல்களால் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும் 150 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துமுள்ளனர். எங்கு ஷெல் விழுந்தாலும் அங்கு பொது மக்களுக்கு இழப்புகள் ஏற்படுகின்றன. புலிகளின் பகுதி மிகவும் குறுகிவிட்டதால் ஒவ்வொரு விமானத் தாக்குதலிலும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

வன்னிக்குள் படையினர் பாரிய படைநகர்வை ஆரம்பித்து எப்படி படிப்படியாக நிலங்களைக் கைப்பற்றி புலிகளை பின்நகரச் செய்தார்களோ அப்படி புலிகளின் பின்நகர்வுகளின் போது மக்களும் பின்நகர்ந்தார்கள். இந்தப் பாரிய படைநகர்வின் போது புலிகளின் பகுதிகளிலிருந்து மக்களை தங்கள் பகுதிகளுக்குள் வரவழைக்க அரசும் படைத்தரப்பும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் அது பலனளிக்கவில்லை. தற்போது இறுதிப் போர் நடைபெற்று வரும் பகுதியில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். இந்தப் போரில் தினமும் அவர்கள் பலத்த இழப்புகளைச் சந்தித்து வருகின்றனர். எனினும் மக்களின் இழப்புகள் குறித்து எந்தவொரு நாடும் சிறிதும் அலட்டிக் கொள்ளவில்லை. தினமும் இடம்பெறும் கடும் ஷெல் வீச்சாலும் விமானத் தாக்குதலாலும் பெருமளவானோர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் வருகையில் அங்கிருந்து ஒருவாறு வெளியேறி வரும் மக்களின் தொகையும் ஓரளவு அதிகரித்தே வருகிறது. இதனால் மக்களை அங்கிருந்து மேலும் மேலும் வெளியேற்றுவதற்காக அங்கு தாக்குதல்களும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

வன்னியில் ஒவ்வொரு படைநகர்வின் போதும் பெருமளவு பிரதேசங்களைக் கைப்பற்றிய படையினர் அவற்றை தக்கவைப்பதற்காக பெருமளவு படையினரை ஒவ்வொரு பகுதியிலும் நிறுத்த வேண்டியிருந்தது. இவ்வாறு படையினர் கைப்பற்றிய பகுதிகளைத் தக்கவைப்பதற்காக அதிகளவானோரை ஈடுபடுத்தியுள்ளதால் தொடர்ந்தும் சில படையணிகளே முன்னேற்ற முயற்சியில் ஈடுபடுவதுடன் போரில் பலத்த இழப்புகளையும் சந்தித்து வருகின்றன. முன்னைய காலங்களைப் போலன்றி தற்போது வடக்கிலும் கிழக்கிலும் மிகப்பெரும்பாலான பகுதிகள் படையினர் வசமுள்ளதால் அவற்றைத் தக்கவைப்பதற்காக அனைத்துப் பகுதிகளிலும் நிறுத்தப்பட்டுள்ள படையினரின் எண்ணிக்கை மிக மிக அதிகம். அப்படியிருக்கையில் முல்லைத்தீவுக்கான இறுதிப் போரில் ஐம்பதாயிரம் படையினரை எப்படி அவர்களால் ஈடுபடுத்த முடிகிறது என்ற கேள்வியும் எழுகிறது. இத?ல் இறுதிப் போரில் ஈடுபடும் படையினரின் எண்ணிக்கை குறித்து மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியிடப்படுகின்றன, அல்லது புலிகள் வசமிருந்து கைப்பற்றிய பகுதிகளில் மிக மிகக் குறைவானவர்களை நிறுத்திவிட்டு பெரும்பாலானோரை யுத்த முனையில் நிறுத்தியுள்ளார்களோ என்ற கேள்வியும் எழுகிறது.

படையினர் கைப்பற்றிய பகுதிகளைத் தக்க வைப்பதற்காக நிறுத்தப்பட்டுள்ள படையினரின் எண்ணிக்கை மிகக் குறைவென்றால், முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டுள்ள படையினரின் பின்புறப் பகுதி பலவீனமாகவும் வெற்றுக் கோதாகவுமேயிருக்கும். இது பாரிய சமரின் போது புலிகள் முறியடிப்புத் தாக்குதலை அல்லது ஊடறுப்புத் தாக்குதலை மேற்கொண்டு முன்னேறி?ல் படையினருக்கு பெரும் பாதகமாகிவிடும். கோதாக இருக்கும் பகுதிகளுக்குள் புலிகளின் ஊடுருவலும் அதிகரித்து விடும். இது படையினரை புலிகள் பின்புறத்தால் தாக்க வழிசமைத்து விடுமென்பதுடன் படையினரின் கனரக ஆயுதங்களுக்கும் ஆபத்தாகிவிடும். இத?ல் கடைசிப் போரில் புலிகளின் பாரிய ஊடுருவல்களைத் தடுக்க வேண்டிய கட்டாய தேவை படையினருக்கு ஏற்பட்டுள்ளது. அதேநேரம் முல்லைத்தீவுக்குள் மிகக் குறைந்தளவு புலிகளே முடங்கிப் போயிருப்பதாக படையினர் கணக்குப் போடுவதால் புலிகளின் முறியடிப்புத் தாக்குதல் அல்லது ஊடறுப்புத் தாக்குதல் பாரியளவில் இருக்காதென படைத்தரப்பு கருதுகிறது. எனினும் புலிகளின் நடவடிக்கை குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு இராணுவத் தளபதி போர் முனைத் தளபதிகளை எச்சரித்துள்ளார்.

வவுனியாவுக்கு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை விஜயம் செய்த இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா வன்னிக் கட்டளைத் தலைமையகத்தில் போர் முனைத் தளபதிகளைச் சந்தித்து இறுதிப் போருக்குரிய பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளார். படையினரால் கைப்பற்றப்பட்ட பகுதிகளுக்குள் புலிகளின் ஊடுருவல்களைத் தடுக்க, முடிந்தவரை பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு அவர் கூறியுள்ளார். மோதல்கள் உச்சக் கட்டத்தை அடையும் போது புலிகள் ஊடறுப்புத் தாக்குதல்களை நடத்துவதன் மூலமும் ஊடுருவல்கள் மூலமும் படையினர் கைப்பற்றிய பகுதிகளுக்குள் நுழைந்து விட்டால் மோசமான விளைவுகள் ஏற்பட்டுவிடுமென்பதே அவரது இந்த எச்சரிக்கைக்கு காரணம். இதனால் இறுதிச் சமரின் போது புலிகளின் பகுதிகளை நோக்கி படையினர் முன்னேறும் அதேநேரம் அடர்ந்த காடுகளினூடாக புலிகள், படையினர் வசமுள்ள பகுதிகளுக்குள் ஊடுருவுவதையும் தடுக்க வேண்டிய கட்டாய தேவையும் ஏற்பட்டுள்ளது.

இதேநேரம், அரசும் படைத்தரப்பும் பிரசாரப் போரையும் தீவிரப்படுத்தியுள்ளன. தமிழ் மக்களை, குறிப்பாக விடுதலைப் புலிகளுக்கு பல்வேறு வழிகளிலும் உதவும் புலம் பெயர்வாழ் தமிழ் மக்களின் மனோபலத்தை தகர்க்கும் நோக்கில் இந்தப் பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ளன. புலிகளின் கதை முடிந்து விட்டது. புலிகள், போரிட்டு மடிவதா அல்லது படையினரிடம் சரணடைவதா அல்லது தற்கொலை செய்வதா எனத் தெரியாது தடுமாறி வருவதாக அந்தப் பிரசாரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. புலிகளின் தலைவர் பற்றியும் முக்கிய தளபதிகள் பற்றியும் தினமும் புதுப்புதுக் கதைகளும் பரப்பப்பட்டு வருகின்றன. ஒருபுறம் கடும் போரைத் தொடுத்துள்ள அரசு மறுபுறம் பிரசாரப் போரையும் தீவிரப்படுத்தியுள்ளது. தற்போதைய நிலையில் இறுதிப்போர் தங்களுக்கு மிகவும் சாதகமாயிருப்பதாகக் கூறும் படையினரும், புலிகளால் இனித் தப்பிக்கவோ அல்லது தாக்குதல் நடத்தவோ முடியாதென்றே கூறிவருகின்றனர். புலிகள் வசமுள்ள பகுதி மிகவும் குறுகிவிட்டதாலும் அவர்கள் வசமிருக்கும் போராளிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டதாலும் இறுதிப் போரில் படையினர் சுலபமாக வெற்றிபெறுவரென்றே படையினரும் கூறிவருகின்றனர். தினமும் படைநகர்வுகள் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லப்படுவதுடன் இதன் மூலம் புலிகளின் பகுதிகள் மேலும் மேலும் விரைவாகச் சுருங்கி வருவதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த நிலையில் புலிகளால் இனியும் தொடர்ந்து பின்நகர முடியாது. இனிமேல் அவர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு பின் நகர்வுகளும் மிக மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். கிளிநொச்சியை இழந்த பின்னராவது அவர்கள் தற்காப்புச் சமரை விடுத்து தாக்குதல் சமரில் இறங்குவரென அனைவரும் எதிர்பார்த்தனர். மிகக் குறுகலான பகுதிக்குள்ளிருந்து எவ்வாறு பாரிய தாக்குதல் சமரை ஆரம்பிக்க முடியுமென்ற கேள்விகளும் எழுப்பப்பட்டன. குறுகிய பிரதேசத்திற்குள்ளிருந்து மேற்கொள்ளும் தாக்குதல் சமர் தோல்வியடைந்தால் அது நிலைமையை மோசமடையச் செய்துவிடலாமென்ற கருத்துக்களும் நிலவுகின்றன. புலிகளின் தொடர்ச்சியான பின் நகர்வுகள் குறித்து படையினர் மத்தியிலும் பலத்த சந்தேகம் நிலவுகிறது. கடைசி நேரத்தில் புலிகள் தங்கள் ஆட்பலம் மற்றும் ஆயுதவளங்களை ஒருமித்து திரட்டி மிகப்பெரும் தாக்குதலை நடத்தலாமென்ற சந்தேகமிருப்பதால் முல்லைத்தீவு நோக்கிய முன்நகர்வில் அவர்கள் சற்று கவனம் செலுத்துகின்றனர். முழு அளவில் போர் தீவிரமடையாத போதிலும் படையினர் தங்கள் நெருக்குதலைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். முல்லைத்தீவுக்குள்ளிருக்கு��
�் மக்களை முடிந்தவரை வெளியேற்றவும் முயன்று வருகின்றனர்.

இதேநேரம், இறுதிப் போர் குறித்து புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களுக்கு சில வேண்டுகோள்களை விடுத்துள்ளார். எதிரிகூறுவது போல் விடுலைப் புலிகள் பலவீனமடையவில்லை. தமிழீழப் போராட்டத் திற்கு புலம்பெயர் வாழ் மக்கள் தொடர்ந்தும் பூரண ஆதரவை வழங்க வேண்டுமென அவர் கேட்டுள்ளார். புலிகளின் தலைவரும் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசனும் அருகருகே இருந்து உரையாற்றும் ஒளிப்பதிவு நாடாக்கள் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில், "விடுதலைப் புலிகள் இதுவரை தற்காப்புச் சமரில் மட்டுமே ஈடுபட்டு வந்தனர். இந்த தற்காப்புச் சமருக்காகவே இதுவரை புலிகள் பின்நகர்வுகளை மேற்கொண்டு வந்ததுடன் தங்கள் வசமிருந்த பகுதிகளையும் இழக்க வேண்டியிருந்தது. பெருமளவில் போராளிகள் கொல்லப்படுவதைத் தடுப்பதற்காகவும் போராளிகளின் எண்ணிக்கையையும் ஆயுத வளங்களையும் தொடர்ந்தும் அதிக எண்ணிக்கையில் பேணிப் பாதுகாப்பதற்காகவும் இவ்வா?ன தந்திரங்களை பயன்படுத்த வேண்டியிருந்தது. தற்போது தற்காப்புச் சமரை நிறுத்தி தாக்குதல் சமரை ஆரம்பிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகிவிட்டன. தங்களது நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பமாகுமென்றும் தாங்கள் தொடர்ந்தும் விடுதலை இராணுவமாகவே செயற்படுவோமென்றும் விடுதலைப் புலிகள் கெரில்லா அமைப்பாக மீண்டும் மாற்றப்படாதெனவும் கூறியுள்ளதுடன் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் முழு ஆதரவையும் கோரியுள்ளனர்.

புலிகளின் தலைவரதும் அரசியல் துறைப் பொறுப்பாளரதும் இந்த உரைகளை அரசும் படைத்தரப்பும் நன்கு அறிந்திருக்கும். அதற்கேற்ப அவர்களும் தங்கள் நடவடிக்கைகளை அமைத்திருப்பர்.
புலிகள் தற்போது வடமராட்சி கிழக்கின் சுண்டிக்குளம் முதல் தென்மேற்கே பரந்தன்முல்லைத்தீவு வீதியை (ஏ35) முரசுமோட்டைப் பகுதியில் ஊடறுத்து இரணைமடுக்குளம் வரை பாரிய பாதுகாப்பு அரண்களை உருவாக்கியுள்ளதாக படைத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்னியில் அனைத்துப் பகுதிகளிலும், யாழ்.குடாநாட்டிலிருந்த தங்கள் முழு ஆள்பலத்தையும் ஆயுத வளத்தையும் புலிகள் முல்லைத்தீவின் அனைத்துப் பகுதிகளிலும் குவித்துள்ளனர். இராணுவத் தளபதி கூறுவது போல் புலிகள் வசம் 2000 பேர் வரைதான் இருக்கின்?ர்களா என்பது தெரியாது. ஆனால், அவர்களது எண்ணிக்கை அவர் கூறியதை விட பல மடங்கென சுயாதீனத் தகவல்கள் கூறுகின்றன. குடாநாட்டை புலிகள் முழுமையாக இழந்ததன் மூலம் அவர்கள் வசமிருந்த கடலோரப் பிரதேசமும் மிகவும் குறுகிவிட்டது. முன்னர் முல்லைத்தீவு முதல் வடமராட்சி கிழக்கு வரை சுமார் 40 கிலோ மீற்றர் கரையோரப் பகுதி அவர்களது கட்டுப்பாட்டிலிருந்தது. ஆனால், தற்போது வடமராட்சி கிழக்கை முற்றாக இழந்து விட்டதால் சுமார் 20 கிலோ மீற்றர் கடலோரப் பகுதியே அவர்கள் வசமுள்ளது. இந்தப் பகுதியை கடற்படையினர் 24 மணிநேரமும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
முல்லைத்தீவுக்கான போரின் போது படையினருக்கான விநியோகங்களை இலகுவாக மேற்கொள்ளக் கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. "ஏ9' வீதி, "ஏ.34' வீதி (மாங்குளம் முல்லைத்தீவு வீதி), பரந்தன் முல்லைத்தீவு வீதியிலும் (ஏ35) படையினர் தர்மபுரம் வரை சென்றுள்ளதால் அவர்களுக்கான விநியோகப் பாதைகள் மிக நன்றாகவே உள்ளன. வடக்கே மாரி மழையும் முடிந்து விட்டதால் வன்னியில் கனரக ஆயுதங்கள் சகிதம் புலிகளின் பகுதிகளுக்குள் மேலும் முன்னேறுவதற்கு படையினர் தொடர்ந்தும் முயற்சித்து வருகின்றனர். புலிகளும் மிகக் கடுமையான பதில் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்தச் சமர்களில் புலிகள் பலத்த இழப்புகளைச் சந்தித்து வருவதாக படைத்தரப்பு கூறுகின்ற போதும் படையினரும் கணிசமான இழப்புகளைச் சந்தித்தே வருகின்றனர். தற்போதைய நிலையில் முல்லைத்தீவைச் சுற்றி சகல முனைகளிலும் கடும் சண்டை நடைபெற்று வருகிறது. முல்லைத்தீவு நகரைக் கைப்பற்றி முல்லைத்தீவு கடலோரத்தை கைப்பற்றிவிட படையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். விடுதலைப் புலிகள் இந்த முனையில் கடும் பதில் தாக்குதலை நடத்தி வருவதால் படையினர் இங்கு நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர்.

முல்லைத்தீவு மீதான இறுதிப்போருக்கு இந்தியாவின் ஆசி கிடைத்தது இலங்கை அரசுக்கு மிகவும் வாய்ப்பாகிப் போய்விட்டது. ஒரு புறம் இனவாதிகள் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை தொடர்ந்தும் கூறிவந்தாலும் இந்தியா தமிழர்களோடில்லை என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். இந்தியாவின் நிலைப்பாட்டை வரவேற்றுக் கொண்டு இந்த யுத்தத்தை செய்வதன் மூலம் இந்தியாவுக்கு சங்கடத்தை கொடுக்கக் கூடாதென்பதால் இந்தியாவுக்கெதிரான கருத்தைக் கூறி இந்தியாவை இலங்கை எப்போதுமே விரோதியைப் பார்ப்பதுபோல் பார்க்கிறதென்ற உணர்வை ஏற்படுத்திக் கொண்டு அவர்களிடமிருந்து இராணுவ உதவியையும் ஆதரவையும் பெறுவதில் இனவாதிகள் வெற்றி பெற்றுவிட்டார்களென்றே கூற வேண்டும். ஏழுகோடித் தமிழர்களை விட இந்தியா இலங்கை அரசுக்கு ஆதரவு வழங்கவேண்டுமென்பதில் மிகத் தீவிரமாகவே செயற்பட்டு வந்தது. இந்தப் போரில் புலிகளை இலங்கைப் படையினர் தோற்கடித்து விட்டால் இலங்கைத் தமிழருக்கான குரலாக தான் செயற்படலாமெனக் கருதியே இந்தியா இலங்கைப் படையினருக்கு உதவிகளை வழங்கியதென்?ல் அதன் எண்ணம் ஒருபோதும் ஈடேறமாட்டதென்பது உண்மை.

விடுதலைப் புலிகள் பலமாயிருக்கும்போதே இலங்கையை பணியவைக்க முடியவில்லையென்?ல் அதன் பின் எப்படி இந்தியாவால் இலங்கையை பணிய வைக்க முடியும். எதிரி யார், நண்பன் யார் எனத் தெரியாது இந்தியா எடுத்த முடிவுகள் இன்று தமிழீழத்தையல்ல இந்தியாவில் தமிழ் நாட்டையே பிரிந்து செல்லும் போராட்டத்திற்குள் தள்ளிவிட்டு வருகிறதென்றால் இந்தியாவின் துரோகம் ஈழத் தமிழருக்கு மட்டுமல்ல, இந்தியத் தமிழருக்கும் எதிரானதென்பது தற்போது தெளிவாகிவிட்டது

தினக்குரல்
http://www.swisstamilweb.com/

StumbleUpon.com Read more...

சிறிலங்காவுக்கு பதிலடி கொடுத்த ஜேர்மனி

சிறிலங்காவுக்கு பதிலடி கொடுத்த ஜேர்மனி
 
சிறிலங்கா அரசாங்கம் ஜேர்மனி நாட்டு தூதுவரை அழைத்து விசாரணைகளை நடத்திய 24 மணி நேரத்தில் ஜேர்மனி அரசாங்கம் தனது நாட்டில் உள்ள சிறிலங்கா தூதுவரை அழைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
அண்மையில் படுகொலை செய்யப்பட்ட "சண்டே லீடர்" வார ஏட்டின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் இறுதி நிகழ்வின் போது சிறிலங்காவுக்கான ஜேர்மனி தூதுவர் ஜேர்ஜன் வீத் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக கோபமடைந்த சிறிலங்கா அரசாங்கம், அவரை அழைத்து தனது கண்டணத்தை தெரிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து ஜேர்மனிக்கான சிறிலங்கா தூதுவர் ரி.பி.மதுவேகெடராவை ஜேர்மனி நாட்டின் வெளிவிவகார அலுவலகம் அழைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்ட 24 மணி நேரத்திற்குள் ஜேர்மனி அரசாங்கம் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லசந்த விக்கிரமதுங்கவின் இறுதி நிகழ்வின் போது ஜேர்ஜன் வீத் அப்படி எதனைத் தவறாக கூறியிருந்தார் என கூறமுடியுமா என ஜேர்மனி வெளிவிவகார அலுவலகம் ரி.பி.மதுவேகெடராவை கேட்டிருந்ததாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

http://www.puthinam.com/full.php?2b1VoKe0dIcYK0ecAA4K3b4C6DN4d2f1e2cc2AmS2d434OO2a030Mt3e

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP