சமீபத்திய பதிவுகள்

தமிழ்மக்களை ஒட்டுமொத்தமாக கொன்றொழிக்க மகிந்தா கொடுர திட்டம்-திடுக்கிடவைக்கு தகவல்

>> Saturday, February 28, 2009

நிஜமான காட்டுத் தீயையே ஆயுதமாக்கித் தாக்குகிற பயங்கரத் திட்டத்தில் இருக்கிறதாம் இலங்��

ஈழத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு மேற்கொள்ளும் அராஜக நடவடிக்கைகளைப் பற்றிய செய்திகள்தான் இவ்வளவு நாளாகக் காட்டுத் தீயாக நம்மைப் பொசுக்கிக் கொண்டிருந்தது.

ஆனால், நிஜமான காட்டுத் தீயையே ஆயுதமாக்கித் தாக்குகிற பயங்கரத் திட்டத்தில் இருக்கிறதாம் இலங்கை அரசு. விடுதலைப் புலிகள் மட்டுமல்லாதுஸ அப்பாவித் தமிழர்களையும் சேர்த்தே காவுவாங்கக்கூடிய அந்த 'காட்டுத் தீ திட்டம்' குறித்து இலங்கையில் இருக்கும் சிங்களப் பத்திரிகையாளர் சிலர், உலகளாவிய மீடியாக்களின் கவனத்துக்குக் கொண்டுபோகும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்.

சமீபத்தில் இங்கிருந்து தப்பித்து மதுரைக்கு வந்த இலங்கைப் பத்திரிகையின் உதவி ஆசிரியர் ஒருவர் தமிழக போலீஸாரால் வளைக்கப்பட்டார். இலங்கைப் பத்திரிகையாளர்களின் போன் பேச்சுகளை ஒட்டுக்கேட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் அது. அதனால் உங்கள் எண்ணுக்கு வெளிநாட்டில் இருக்கும் வேறு சிலர் மூலமாகத் தகவல்களைச் சொல்கிறோம்ஸ" என அச்சத்தோடு சொன்னார்கள். அடுத்த சில நிமிடங்களிலேயே பல தரப்பிலிருந்தும் சிங்கள ராணுவத்தின் அடுத்த கட்ட மூவ் குறித்து வந்த தகவல்கள், நம்மைக் குலைநடுங்க வைத்துவிட்டன!

"கடந்த பிப்ரவரி 4-ம் தேதி இலங்கையின் சுதந்திர தினம். அப்போதே புலிகளின் கைவசம் இருக்கும் மொத்தப் பகுதிகளையும் வளைத்து, இரண்டாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடத் திட்டமிட்டிருந்தது இலங்கை. ஆனால், புலிகள் அந்தத் திட்டத்தை நிறைவேற்றவிடாமல் ஊடறுப்புத் தாக்குதல் நடத்தினார்கள். ராணுவத்தின் டாங்கிப் படைகள் மீது வலிந்த தாக்குதலை நடத்திய புலிகள், அடுத்தடுத்த தாக்குதலில் ராணுவத்தின் 57-வது பட்டாலியனை கூண்டோடு அழித்தார்கள். இந்தக் கோபத்தில்தான் பாதுகாக்கப்பட்ட வளையத்தில் வந்து தங்கிய மக்கள் மீது வெறித்தனமான தாக்குதலை நடத்திப் பழிதீர்த்துக் கொண்டது ராணுவம். மக்கள் மீதான தாக்குதலை அரங்கேற்றினால்தான், புலிகளின் வேகத்துக்கு அணை போட முடியும் என நினைத்து, ராணுவம் தொடர்ந்து தமிழ் மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றொழித்துக்கொண்டு இருக்கிறது.

தற்போது புதுக்குடியிருப்பும், வன்னி காட்டுப் பகுதியும்தான் புலிகளின் வசம் இருக்கிறது. கிளிநொச்சி தொடங்கி முல்லைத்தீவு வரை அதிரடியாகக் கைப்பற்றிக்கொண்டு வந்த ராணுவம், புலிகளின் வசமிருக்கும் மீத பகுதிகளை நெருங்க முடியாமல் இருபது நாட்களுக்கும் மேலாகத் திண்டாடி வருகிறது. இதற்கிடையில் உலக நாடுகள் பலவும் போர் நிறுத்தத்துக்கு வலியுறுத்தி கோரிக்கை வைத்ததும், 'புலிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டார்கள். எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அவர்களை முடக்கிப் போட்டிருக்கிறோம். இந்த நேரத்தில் எங்களின் பல்லாண்டுக் கனவைத் தகர்த்து விடாதீர்கள்!' என்று சிங்கள அரசு ரகசியத் தகவல்களைப் பரப்பியது. இதனால் உலக நாடுகள் சில காலம் அமைதி காக்கலாம் என்கிற முடிவுக்கு வந்தன. ஆனால், சிங்கள அரசு பரப்பிய தகவல்களை நொறுக்கும் விதமாக கொழும்பிலும், கட்டுநாயகாவிலும் விமானத் தாக்குதலை நடத்தி உலகுக்கே தங்கள் பலத்தைச் சொன்னது புலிகள் தரப்பு. இதற்கு பதிலடியாக க்ளஸ்டர் மற்றும் பாஸ்பரஸ் குண்டுகளைப் பயன்படுத்திஸ புலிகள், மக்கள் எனப் பிரித்துப் பார்க்காமல் சகட்டுமேனிக்கு வெறித்தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது ராணுவம். இந்நிலையில் அமெரிக்காவும், ஐ.நா-வும் ஒருசேர போர் நிறுத்தம் குறித்து வலியுறுத்த, அவர்களிடம் சில வார அவகாசம் கேட்டிருக்கிறது இலங்கை அரசு. அந்த அவகாசத்துக்குள் ராணுவம் அரங்கேற்ற வைத்திருக்கும் திட்டத்தைப் பற்றிய யூகங்கள்தான் மொத்த மீடியாக்களையும் மிடறு விழுங்க வைத்திருக்கின்றன!" என்றவர்கள், அந்த அபாயங்களையும் பட்டியல் போட்டார்கள்.

"வன்னிக் காடுகளுக்குள் அடியெடுத்து வைப்பது தான் சிங்கள ராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறது. காடுகளுக்குள் பதுங்கியிருக்கும் புலிகளின் படையணியினர் ராணுவம் முன்னேறும்போதெல்லாம் கடும் தாக்குதலை நடத்தி, ஆயுதங்களையும் அள்ளிச் சென்றுவிடுகிறார்கள். சமீபத்தில் புலிகள் நடத்திய விமானத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துகள் அனைத்துமே சிங்கள ராணுவத்திடம் இருந்து கைப்பற்றப்பட்டவைதான். தங்கள் ஆயுதங்களால் தாங்களே அழியும் நிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள் ராணுவத்தினர். இதற்கெல்லாம் காரணமாக இருப்பது வன்னிக்காடுகள்தான். இங்கிருக்கும் மிருகங்கள், கொடிய ஜந்துக்கள், விஷத் தாவரங்கள் என்று பலவும் ராணுவத் தரப்பை முன்னேறவிடாமல் பயமுறுத்துகிறது. அதனால் வன்னிக் காடுகளுக்குள் புகுந்து, புலிகளை அழிக்கும் திட்டத்தை ஒருபோதும் ராணுவத்தால் செயல்படுத்த முடியாது என்பது உறுதியாகிவிட்டது.

தற்போது புலிகளோடு ஆயிரக்கணக்கான மக்களும் வன்னிக் காடுகளுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் புலிகளோடு கைகோத்துப் போரில் ஈடுபடுவார்கள் என உறுதியாக நினைக்கும் ராணுவம், ரசாயன குண்டுகள் மூலமாகத் தாக்குதல் நடத்தும் முடிவில் இருக்கிறது. மீடியாக்களை மொத்தமாக முடக்கிவிட்டு, ரசாயனத் தாக்குதல் நடத்தி, ஒரு சில தினங்களிலேயே லட்சக்கணக்கான மக்களை பஸ்பமாக்கும் திட்டம் ராஜபக்ஷேவிடம் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான் அவர் 'புலிகளின் கட்டுப்பாட்டில் தற்போது இருப்பது வெறும் எழுபதாயிரம் மக்கள்தான்' என்று பொய்யான தகவலை மீடியாக்களிடமும் உலக நாடுகளிடமும் தெரிவித்தார். அதே கருத்தைத்தான் மத்திய அமைச்சரான பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்திலும் வாசித்தார்.

வன்னிப் பகுதியில் இரண்டரை லட்சம் மக்கள் இருக்கிறார்கள் என செஞ்சிலுவை சங்கம் சொல்லி இருக்கிறது. ஆனால், வெறும் எழுபதாயிரம் மக்களே இருப்பதாகச் சொல்லப்படும் தகவலின் பின்னணியில்தான் சிங்கள ராணுவத்தின் சதிக்கான ஒரு முனை மறைந்து கிடக்கிறது. ரசாயன குண்டுகளைப் பயன்படுத்தியோ, காட்டுத் தீயை உருவாக்கியோ லட்சக்கணக்கான மக்களையும் புலிகளையும் ஒருசேர அழிக்க நினைக்கிறது ராணுவம். ரசாயன பாதிப்புகள் உலக நாடுகளையே கொந்தளிக்க வைத்துவிடும் என்பதால், இப்போது காட்டுத் தீ திட்டத்தை கையில் எடுக்கப் பார்க்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க பல நாட்கள் ஆனது போல, வன்னிக் காடுகளின் தீயை அணைப்பதும் சுலபமான காரியமாக இருக்காதுஸ" என்றார்கள் கவலை கொப்பளிக்க.

இதற்கிடையில், "ஜெர்மனியிலும் ருவாண்டாவிலும் நடந்த கொடூரங்களைக் காட்டிலும் எமகாதகக் கொடூரத்தை அரங்கேற்ற சிங்கள ராணுவம் திட்டமிட்டிருக்கிறது. அத்தகைய அபாயங்கள் அரங்கேறிவிடாமல் தடுக்க வேண்டும்!" என்று கோரி ஐ.நா. பொதுச் செயலாளருக்கும், அமெரிக்க, ரஷிய நாட்டுத் தலைவர்களுக்கும் கடிதம் எழுதி, 'தமிழினத்தைக் காப்பாற்றுங்கள்' என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள் வைகோ உள்ளிட்ட ஈழ ஆர்வலத் தலைவர்கள்.

ஐம்பது, நூறு என அனுதினமும் ஈழத்தில் தமிழர்கள் மடியும் துயரம் போதாதென, ஆயிரக்கணக்கான மக்களை ஒருசேர அழிக்கிற முடிவில் இருக்கும் சிங்கள அரசை யார் கண்டிப்பதுஸ யார் தண்டிப்பது? இந்த கண்ணீர்க் கேள்விக்கு காலத்தின் பதில், மௌனமாகத்தானே இருக்கிறது!

 

http://www.tamilnews.dk/index.php?mod=article&cat=srilankannews&article=11892

StumbleUpon.com Read more...

கிளர்ந்தெழுவாய் மானுட சமுதாயமே!

 27/02/2009


தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கையின் உள்நாட்டுப் போரில் கடந்த டிசம்பர் மாதத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 10 பேர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. இப்பொழுது நாள் ஒன்றுக்கு 100 பேர் வீதம் கொலை செய்யப்படுவதை ஊடகச் செய்திகள் உறுதி செய்கின்றன. ஒருவர் குண்டடிப்பட்டு மரணமுற்றால் குறைந்தது ஐந்து பொது மக்கள் படுகாயம் அடைவார்கள் என்பது பொதுவானக் கணக்கு.

வன்னிப் பகுதியில் அண்மைக் காலத்தில் நடைபெறும் தாக்குதலில் பொதுமக்களில் குறைந்தது மூவாயிரம் பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. கொல்லப்பட்டிருப்பது மூவாயிரமாக இருப்பின் மொத்தம் 15 ஆயிரம் பேர் காயப்பட்டிருக்க வேண்டும்.

நார்வே அரசாங்கம் முன்னின்று உருவாக்கிய போர் நிறுத்தத்தை முதலில் முறித்துப் போட்ட பின் தங்கள் சொந்த விருப்பத்தினால் இந்த போரை இலங்கையின் ராஜபக்ஷ அரசு நடத்துகிறது. தங்கள் கோரமான உருவத்தை மறைத்துக் கொள்ள புலிகளின் ஆபத்துக்கு எதிரான யுத்தம் என்ற புகை மண்டலம் ஒன்று இன்றைய இலங்கை அரசாங்கத்துக்குத் தேவைப்படுகிறது. தமிழ் மக்களை முற்றாக அழித்து ஒழிப்பதற்கு இதை விடவும் வசதியாக வேறு எதுவும் இருக்க முடியாது. நீதிசார் சமூகத்தின் நியதிப்படிப் பார்த்தால் வெறி கொண்டு போரை நடத்திக் கொண்டிருக்கும் இலங்கை அரசுதான் போர் தந்த பெரும் துயரங்கள் அனைத்துக்குமான முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும். இதனை ஏற்கவில்லை என்பது மட்டுமல்லாது கருணை கொண்டு உதவி செய்ய வருபவர்களையும் இலங்கை அரசு அச்சுறுத்தி விரட்டியடிக்கிறது என்பது தான் வேதனைக்குரியது.

மக்கள் முல்லைத்தீவை நோக்கி நகர்ந்து ஒரு குறுகிய இடத்தில் வாகனங்களும் பொது மக்க ளுமாகக் குவிந்து கிடக்கின்றனர். இந்த மக்கள் மூன்று லட்சம் வரை இருக்கலாம். பெரும் போராட்ட வாழ்வில் ஈழத்தமிழ் மக்கள் அரைப்பட்டினி வாழ்க்கைக்கு பழகியவர்கள் தான் என்ற போதிலும் முழுப்பட்டினியில் எத்தனை நாட்கள் தான் இவர்களால் உயிருடன் இருக்க முடியு ம்?  இதைத் தவிர குடி நீருக்காகவும் கழிப்பிட வசதிகளுக்காகவும் இந்த மனிதக் கூட்டம் சந்திக்கும் அவதியை விவரிப்பது சுலபமானதாகத் தெரியவில்லை.

2009-ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதிக்குப் பின்னர் எந்த உணவுப் பொருளும் மருந்துப் பொரு ளும் வன்னிப்பகுதிக்குப் போய்ச் சேரவில்லை என்று ஐ.நா.வின் மேற்பார்வையில் செயல்படும் அமைப்புகள் கூறுகின்றன. உலக உணவு திட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டு வந்த உணவுப் பொருள்கள் அங்கு செல்வதற்கும் இலங்கை அரசு முற்றாக தடை விதித்துவிட்டது. தமிழகத்திலிருந்து திரட்டி அனுப்பப்பட்ட பொருள்களில் ராணுவத்தினர் களவு எடுத்தது போக மீதி ஒரு சிறுபகுதி மட்டும் மக்களுக்குப் போய் சேர்ந்ததாகத் தெரிகிறது. விமான எறிகணை குண்டு வீச்சுத் தாக்கங்களில் இருந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மக்கள் காக்கைக் கூட்டத்தைப் போல கத்திக் கத்திப் பார்க்கிறார்கள். பயன் எதுவுமில்லை. கொல்லப்பட்ட மக்கள் சாலையோரங்களில் அப்படியே கிடக்கிறார்கள்.

காயப்பட்டவர்களின் உயிர்காக்கும் மருத்து வமனைகளும் மனிதர்களைப் போலவே குண்டு களுக்கு இரையாகி மரணமுற்றுக் கிடக்கின்றன. புதுக்குடியிருப்பு பகுதியின் மருத்துவ மனையில் குண்டுகள் போடப்பட்டு 62 நோயாளிகள் கொல்லப்பட்டுள்ளனர். முல்லைத்தீவில் பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை புலம் பெயர்ந்த தமிழர்களின் தன்னார்வ உணர்வில் கட்டப்பட்ட நவீன வசதிகளைக்கொண்ட மருத்துவமனை. இது குண்டுகளுக்கு இலக்காகி முற் றாக அழிந்து கிடக்கிறது. மருத்துவமனை குண்டுகளுக்கு இலக்காகி பாழ்பட்டு போன பின்னரும் மருத்துவர்களும்இமருத்துவத்துறைச் சார்ந்த பணியாளர்களும் மிகுந்த மன உறுதி யுடன் ஆதரவற்ற மக்களுக்கான சேவையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களுடன் 600 பேருக்கு உடனடியாக வெளியே றும் அதிரடி உத்தரவு இலங்கை அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தங்கள் உயிர் இழப்பைப் பற்றி கவலை கொள்ளாத மனிதநேயம் கொண்ட மனித உயிர் காக்கும் மருத்துவத் துறையினரை அச்சுறுத்தி வெளியேற்றுதல் எத்தகைய கொடூரமான செயல். மனிதக் கேடயமாக பயன்படுத் தப்பட்ட மக்களை மீட்டு விட்டோம் என்று கூறிக்கொள்ளும் அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்ற மக்களின் நிலை என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. ஒரே குடும்பத்தைப் பிரி த்து இளைஞர்களை தனியாக அழைத்துச் சென்று கொல்லுவதாகவும் பெண்கள் பாலியல் பலா த்காரத்தில் சிதைக்கப்படுவதாகவும் செய்திகள் வெளிவருகின்றன. இதனை இல்லை என்று மறுக்கும் தார்மிகம் இலங்கை அரசுக்கு இல்லாமல் போய்விட்டது. காரணம் உள்நாட்டு வெளி நாட்டு ஊடகங்கள் அங்கு சென்று நேரில் பார்ப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்கும் சர்வதேச அமைப்புகளும் அங்கு அனுமதிக்கப்படுவதும் இல்லை.

மோதல் நிறைந்த உலகு என்று சிலப் பகுதிகளை இன்று சர்வதேச சமூகம் மதிப்பிட்டு வைத்து ள்ளது. இவைகளில் முக்கியமானவை ஆப்கானிஸ்தான் ஈராக் காங்கோ ஜனநாயகக் குடியரசு சோமாலியா இலங்கை போன்ற நாடுகள் ஆகும். இந்த நாடுகளிலேயே மிகவும் கூடுதலான மனிதப் பெருங்கொடுமைகளை சந்தித்துக் கொண்டிருக்கும் நாடு இலங்கை என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மதிப்பிட்டுச் சொல்கின்றன. ஆயுத மோதல் தீவிரம் அடைந்துள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு எந்த விதமான பாதிப்புகளும் ஏற்பட்டு விடக்கூடாது என்று சர்வதேச விதிகள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு வளையங்கள் என்று அறிவித்தப் பகுதிகளில் தயக்கம் எதுவும் இல்லாமல் மக்கள் மீது குண்டு போட்டுக் கொல்லும் கொடுமையை இலங் கையின் ராணுவம் இப்போது செய்து கொண்டிருக்கிறது.

இறந்து போன மனித உடலை கெளரவத்துடன் அடக்கம் செய்தல் மானுடத்தின் அடிப்படை கடமைகளில் ஒன்று. இதைக்கூட இனவெறி பகைமையுடனேயே இலங்கை அரசு அணுகுகி றது. பெரும் தீமையாய் சுற்றிச் சுழன்றாடும் போரின் நெருப்பு தின்று முடித்த மனித உடல்கள் வன்னிப்பிரதேசம் எங்கும் கருகிப் போய்க்கிடக்கின்றன. இறந்து போன உடல்களுக்கு இறுதி கெளரவம் அளிப்பதற்கு அங்கு யாரும் மிச்சமாக இல்லை. நாளாக நாளாக இந்த உடல்களும் அழுகத் தொடங்கி விடுகின்றன. யாராக இருந்தாலும் இவர்களை கெளரவமாக அடக்கம் செய்வ தற்கு அல்லது பொறுப்பானவர்களிடம் ஒப்படைப்பதற்கு செஞ்சிலுவைச் சங்கம் இது நாள் வரை பொறுப்பேற்று செயல்பட்டு வந்தது. கபடம் மிகுந்த இலங்கை அரசு பொய்க் காரணங்களைக் கூறி அவர்களை இன்று கட்டாயமாக வெளியேற்றிவிட்டது. இதற்கு இலங்கை அரசு சொல்லும் காரணம் தான் நமக்கு பெரும் அருவெறுப்பைத் தருகிறது.

வன்னிப் பிரதேசத்தில் செயல்பட்டு வரும் செஞ்சிலுவைச் சங்கம் மாதம்தோறும் 2500 சவப்பை களை தங்கள் தலைமை அலுவலகத்திலிருந்து பெற்று வந்தன. இந்த மாதம் 3500 சவப்பைகள் வேண்டும் என்று இது கடிதம் எழுதியிருக்கிறது. இலங்கை ராணுவத்திற்குத் தெரியாமல் பொது மக்கள் கொல்லப்படுவதை வெளி உலகிற்கு அறிவிக்கும் சதி என்று சங்கத்தை வெளியேற்றி யுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் இந்தக் குற்றத்தை எவ்வாறு மன்னிக்க இயலும்?

தமிழகத்தில் கொதிநிலை அடைந்துள்ள மக்களின் பேரெழுச்சியும் புலம்பெயர்ந்த ஈழத்து மக்களின் சமரசமற்றப் போராட்டங்களும் புவிப்பரப்பெங்கும் அதிர்வுகளை எழுப்பியுள்ளன. இதற்குரிய கண்டனத்தை உலகில் பல நாடுகள் மிகவும் வெளிப்படையாக அறிவித்துள்ளன. அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய உலகம் ஜப்பான் முதலான நாடுகள் இந்த மனிதப் படுகொலைகளை வன்மையாகக் கண்டித்துள்ளன. இதைப் போன்றே ஐக்கிய நாடுகளின் பல்வேறு துணை அமைப்புகளும் செஞ்சிலுவைச் சங்கமும் இதற்கான எதிர்ப்பை தெரிவித்துப் பார்த்துவிட்டன. உலக சமூகத்தின் இந்த வேண்டுகோள்களை அடங்கா திமிருடன் இலங்கை அரசு நிராகரித்துவிட்டது.

மனிதர்களில் ஈரமில்லாத நெஞ்சு இருப்பவர்களைப் போலவே சில நாடுகளும் இருக்கின்றன. இவர்கள் நெஞ்சில் ஈரமில்லாமல் தனது சொந்த ஆதாயத்துக்காக பிறருக்கு எத்தகைய தீமை யையும் செய்யக் கூடியவர்கள். முதலில் அதிரடியான நடவடிக்கைகளின் மூலம் சுற்றி இருப்ப வர்களை அச்சுறுத்திப் பார்ப்பார்கள். பின்னர் மக்களின் பொது வீரத்தை மழுங்கடிக்க வைக்கும் தந்திரங்களின் மூலம் சமூகத்தை தங்கள் உலகத்தின் ஆளுமைக்குள் கொண்டுவர முயற்சி செய்வார்கள். நெஞ்சில் ஈரமில்லாத மனிதர்களைப் போலவே நெஞ்சில் ஈரமில்லாத நாடு என்றுதான் இலங்கையை அழைக்க வேண்டும்.

புரூஸ்பெயின் என்ற புகழ்பெற்ற அமெரிக்க வழக்கறிஞரின் கணக்குப்படி ராஜபக்ஷ ஆட்சி கால த்தில் 3700 பேர் சட்டத்துக்குப் புறம்பாக கொல்லப்பட்டுள்ளார்கள். 30 ஆயிரத்துக்கும் அதிகமா னவர்கள் காயம் அடைந்துள்ளார்கள். அங்கு நடைபெறும் ஆட்சியை ஒரு ஜனநாயக ஆட்சி என்று எப்படிக் கூற முடியும்? ராணுவ சர்வாதிகாரம் காட்டெருமையைப் போல அனைத்து ஜனநாயக மரபுகளையும் தனது காலில் போட்டு மிதித்துக் கொண்டே ஒரு சுயநல வெறிபிடி த்தக் குழுவின் உத்தரவின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர் கள் மட்டுமே தான் இந்த உயர் நிலைக்குழுவில் அங்கம் பெறமுடியும். இத்தகைய இலங்கை இறையாண்மையின் மீது யார்தான் நம்பிக்கை வைக்க முடியும்? ராஜபக்ஷவை உலக நீதிமன் றம் போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். வெட்கமற்று ஒரு மறைமுகமாக யுத்தத்தை நடத்திக்கொண்டே உள்நாட்டுப் போரை முடித்தவுடன் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமையை ராஜபக்ஷ தருவார் என்கிறது இந்தியா. இவர்களை எவ்வாறு நம்புதல் இயலும்.

முழு மானுடமும் ஒன்றுபட்டு கிளர்ந்தால் மட்டுமே இலங்கைத் தமிழ் மக்களுக்கான அரசியல் விடுதலையை சாத்தியப்படுத்த முடியும். இதற்கு மாறாக அரசியல் தீர்வு அளிக்கும் பொறுப்பை இலங்கையின் ராஜபக்ஷவிடம் அவர் ஆக்கபூர்வமான எதையும் முன் வைக்க மாட்டார்.


சி.மகேந்திரன்

 

http://www.tamilkathir.com/news/1097/58//d,full_view.aspx

StumbleUpon.com Read more...

புலிகளின் விமானத்தாக்குதல் தோல்வியடைந்துவிட்டது?-வீடியோ



StumbleUpon.com Read more...

சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது:ஜாமீனில் வெளியே வாராத வகையில்

சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: 1வருடத்திற்கு வெளியே வர முடியாத நிலை
இயக்குநர் சீமான் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதாக அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஈழத்தமிழருக்கு ஆதரவாக புதுச்சேரியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணாவிரதத்தில் மாணவர்களை வாழ்த்திப்பேசவந்த இயக்குநர் சீமான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிதாக புதுச்சேரி போலீசார் அவர் மீது வழக்கு தொடர்ந்தது.

இதைத்தொடர்ந்து அவரை புதுச்சேரி போலீசார் தேடி வந்தனர்.போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கும் போதே சீமான் சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் நடந்த ஈழதமிழர் ஆதரவு போராட்டத்தில் கலந்து கொண்டு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசினார்.

புதுச்சேரி போலீசார் சீமானை கைது செய்வதற்கு தமிழக போலீசாரின் உதவியை நாடியது.

தமிழக சட்டசபையில் சீமான் ஏன் இன்னும் கைதாகவில்லை என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி, இன்னும் 2நாட்களுக்குள் கைதாகிவிடுவார் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் சீமான் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ஈழத்தமிழருக்கு ஆதரவாக வக்கீல்கள் நடத்திய பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவரை கைது செய்வதற்கு புதுச்சேரி போலீசார் விரைந்துவந்தனர். ஆனால் அதற்குள் சீமான் தனது பேச்சு முடிந்தவுடன் அவ்விடத்தை விட்டு சென்றுவிட்டார்.

புதுச்சேரி போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியது. அச்சமயம், தானே நேரில் வந்து ஆஜராவதாக சீமான் அறிவித்தார்.

அதன்படி நெல்லை காவல்துறை ஆணையர் முன்பு சீமான் நேரில் ஆஜரானார். நெல்லை காவல்துறை ஆணையர் சீமானை புதுச்சேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

புதுச்சேரி நீதிமன்றத்தீர்ப்பின் படி அங்கே காலாப்பட்டு மத்தியசிறையில் அடைக்கப்பட்டார் சீமான்.

பாளையங்கோட்டையில் பேசியபோதும் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக நெல்லை போலீசாரும் சீமான் மீது வழக்கு தொடர்ந்தது.

க்ரைம் நம்பர் 308/2009, இந்திய தண்டனை சட்டம் 505, சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் 13(1), (B), 13(2) ஆகிய சட்டப்பிரிவுகளில் காவல்துறை சீமான் மீது வழக்குப் பதிவு செய்தது.

இந்நிலையில் இன்று, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்படும் தமிழக அரசின் உத்தரவை புதுச்சேரி சிறையில் இருக்கும் சீமானிடம் பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் நாகராஜன் வழங்கினார்.

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சீமான் சிறையில் அடைக்கப்படுவதால் அவர் 1வருடத்திற்கு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ஈடுபடும் எண்ணத்தில் இருந்தார் சீமான். இந்த நிலையில் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது

 

http://www.swisstamilweb.com/

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP