சமீபத்திய பதிவுகள்

வரலாறு படைத்த பிரபாகரன்!!!-அருட்தந்தை

>> Monday, May 25, 2009

     

        றப்பேனோவேலுப்பிள்ளை பிரபாகரன் தந்த பதிலை? 2002-ம் ஆண்டு நேர்காணலில் நான் கேட்ட 62-வது கேள்வி அது. ""உங்களுக்கு கடும் கோபம் வர வேண்டுமென்றால் நான் என்ன செய்ய வேண்டும்?'' அதற்கு அனிச்சை செயல் வேகத்தோடு அவரிடமிருந்து வந்த பதில்: ""என் தமிழ் இனத்தின் எதிரியாக இருந்து பாருங்கள். அப்ப தெரியும் என்ட கோபம்!''

வலியது வாழும். நியாயம், நீதி, உணர்வுகள், ஒழுக் கம், விழுமியங்கள் எவை பற்றியும் அதிகம் அலட்டிக் கொள்ளாத இயற்கையின் நியதி இது. ஆம், வலியது வாழும். போரின் கொடுமையோ அதனிலும் பெரிது. வெற்றி பெற்றவன் அனைத்தையும் எடுத்துக் கொள்வான், வரலாறு உட்பட. தோற்றுப் போனவன் தலைகுனிந்து குறுகி நிற்க வேண்டும். வேலுப்பிள்ளை பிரபாகரனும், தமிழீழ விடுதலைப்புலிகளும் விட்ட பிழைகளையும், செய்த தவறுகளையும்தான் இனி பலரும் அதிகமாகப் பேசப்புறப்படுவார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தவறிழைக்காத தேவ தூதர்கள் இல்லைதான். அவர்கள் செய்த குற்றங்களை, குற்றமென்று உரைக்கும் ஒழுக்க நிலை நமக்கு இருந்தால் மட்டுமே அவர்கள் முன்னெடுத்த விடுதலைப் போராட் டத்தை போற்றி, தொடர்ந்து அப்போராட்டத்தின் அரசியல் இலக்குகளை அம்மக்களுக்கு உறுதி செய்யும் செயற்பாடுகளை நாம் மேற்கொள்ள முடியும்.

மாற்றுக் கருத்துடைய பலரை அரசியல் களத்திலிருந்து அகற்றியது, உலக அளவிலான அரசியல் தலைமைத் துவங்களை உருவாக்காதது, "போர் வெற்றி' தொடர்பான மிகைப்படுத்தப்பட்ட நம்பிக்கைகளை மக்களிடையே உருவாக்கி தங்களை மக்களின் "பந்தயக் குதிரைகளாக' நிறுத்தி -மக்களை அரசியல்மயப்படுத்த தவறியது, ராஜீவ்காந்தி படுகொலையில் சம்பந்தப் பட்டது -அல்லது சம்பந்தப்படவில்லை யென்றால் அதனை சரிவர விளக்காதது... என தமிழீழ விடுதலைப்புலிகள் விட்ட பிழைகள் பல உண்டு.

எனினும் தமிழீழ விடுதலைப்புலிகள் இல்லாத தமிழ் வரலாறும், அவர்தம் வரலாற்றோடு தொடர்பற்ற தமிழர் எதிர்கால எழுச்சியும் இல்லை என்பதே நிதர்சனம். தமிழர் வரலாற்றின் அகற்றமுடியா ஆதர்ச மாகவும் வரலாற்றுப் பிரமாண்டமாகவும் வேலுப்பிள்ளை பிரபாகரன் நிலைபெற்று விட்டார் என்பதுதான் உண்மை. எனவேதான் அவரைப் பற்றின சரியான புரிதல் தமிழ் நாட்டுத் தமிழர்களாகிய நமக்கும் முக்கியமானதாகிறது. தமிழர்களாகிய நமது எதிர்கால எழுச்சிக்கும் அது முக்கியம்.

உலகின் ஒரு மூலையில் மிகச்சிறியதோர் தமிழ்க் கூட்டத்திலிருந்து முன்னுதாரணமான தோர் விடுதலைப் போராட்டத்தை கட்டி யெழுப்பியவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். அந்தப் போராட்டம் நமது இனத்தில் பிறந்த தென்பது, உணர்வுகளைத் தவிர வேறெதுவும் பெரிதாகப் பங்களிக்காத நமக்கும் பெருமையே.

நாற்புறமும் நீர்சூழ்ந்த சிறியதோர் நிலப்பரப்பில், இலங்கையோடு சுற்றியிருக்கும் பெரிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், சீனா நாடுகளினது நெருக்குவாரங்களுக்கு ஈடுகொடுத்து, மரபுவழித் தாக்குதல் படை யணிகள், சிறப்புப் படை பிரிவுகள், பீரங்கிப் பிரிவு, கடற்படை, உலக உளவு அமைப்புகள் மெச்சும் மிகத்திறன் கொண்ட புலனாய்வுத் துறை, 70-க்கும் மேலான கப்பல்களை கொண்ட அனைத்துலக ஆயுத கொள்வனவுப் பிரிவு, அரை உரிமை கொண்ட ஒரு செயற்கைக்கோள் -இவற்றிற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் 2002-முதல் ஓர் அரசுக்கு இருக்க வேண்டிய துறைசார் அலகுகளுடன் கூடியதோர் நடை முறை அரசை உருவாக்கி பல உலக நாடுகளை விடவும் நேர்த்தியான முறையில் அதனை நிர்வகிக்கும் திறனும், கண்ணியமும், ஒழுக்கமும் கொண்ட நிர்வாக ஏற்பாட்டையும் உருவாக்கி சாதனை செய்தவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். உலகெங்கும் யூதர்கள் இருந்தாலும் இஸ்ரேல் அவர்களது உரிமை பூமியாய் இருப்பதுபோல் உலகெங்குமுள்ள எட்டு கோடித் தமிழர்கள் தம் இனத்திற்கும் ஒரு நாடு இருக்கிறது என்று பெருமையுடன் பேசும் நிலைக்கு வெகு அருகில் தமிழினத்தை கொண்டு வந்தவர் அவர்.

அவற்றிற்கெல்லாம் மேலாய் இயல்பாகவே தாழ்வு மனப்பான்மை, இலக்கு நோக்கிய விடாப் பிடியான உறுதியின்மை, அதிகாரவர்க்கத்தை கண்டு அஞ்சுதல் போன்ற குணாதியங்களைக் கொண்ட தமிழ் இனத்தினது மனவெளியில் கண்ணுக்குப் புலப்படாத போராட்டமொன்று நடத்தி, நம்பிக்கை ஊட்டி, துணிவுடன் நிமிர வைத்து, பிறர் வாழ தம் உயிரை மனமுவந்து ஈகம் செய்யும் தலைமுறை ஒன்றினை புடமிட்டு, நானும் பிறந்து பாக்கியம் பெற்ற இத்தமிழினத்தின் சிந்தனை இயக்கத்தையும் போக்கையும் மாற்றியமைத்ததுதான் வேலுப்பிள்ளை பிரபாகரன் படைத்த உண்மையான வரலாறு.

முல்லைத்தீவில் பல்லாயிரம் போராளிகளையும், பலநூறு கோடி ரூபாய் பெறுமதியுடைய ஆயுதங்களை யும் முற்றாக இழந்து ராணுவரீதியாய் நிர்மூலமாகி விட்டாலும்கூட -வேலுப்பிள்ளை பிரபாகரன் படைத்த இந்த மகத்தான வரலாற்றையும், கால் நூற்றாண்டிற்கு முன் தமிழர்கள் கற்பனைகூட செய்து பார்த்திராத அரசியல் உச்சநிலைக்கு தமிழினத்தை அவர் அழைத்து வந்துவிட்டதையும் தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும். ராஜீவ்காந்தி படுகொலையில் அவர் குற்றவாளியென்றால் அவ்வாறே இருக்கட்டும். தீர்ப்பு எழுதப்படட்டும், தண்டனையும் தரப்படட்டும். அதேவேளை சில குற்றங்களையும், சில தவறுகளையும் கடந்து அவர் படைத்த இவ்வரலாற்றி னை பெருமையுடன் சுவீகரித்துக் கொள்ளும் உரிமை தமிழராகிய நமக்கு இல்லையென்று சொல்ல எந்த அரசுக்கும், அதிகார அமைப்புக்கும் உரிமை யில்லை.

தனிப்பட்ட மனிதனாகவும், தன் வாழ்விலும் ஒரு இனத்தின் மாபெரும் நாயகனாகப் போற்றப்படும் இயல்புகள், ஒழுக்கங்கள் கொண்டிருந்தார் அவர் என்பதும் முக்கியமானது. ""தலையை குனியும் நிலையில் இங்கே புலிகள் இல்லையடா, எவனும் விலைகள் பேசும் நிலையில் எங்கள் தலைவன் இல்லையடா'' என அவர்கள் பாடும் பாடல் மிகவும் தகுதி யானதே. ""உலகத் தமிழ் மக்கள் உங்களை தேசியத் தலைவர் எனப் போற்றுகிறார்கள். இத்தகுதியை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?'' என்று 2002-ல் நான் கேட்ட கேள்விக்கு அவர் தந்த பதில் இவரைப் போலொரு நேர்மை யான தலைவரை நாமறிந்த தமிழர் வரலாறு பெற்றிருக்கவில்லை என்ற உணர்வினை அன்றே என்னுள் உருவாக்கியது.

இதோ அவர் சொன்ன அதே வார்த்தைகள்: ""என்னை நானே மிகைப்படுத்திக்கொள் ளும் எண்ணம் எனக்குக் குறைவு. இப்படி தகுதியையெல் லாம் அடைய வேண்டு மென நான் உழைத்ததை விட என் இனத்திற்கான கடமையை செய்ய வேண்டும், எனது மக்களின் விடுதலைக்காக நான் அர்ப்பணிப்போடு போராட வேண்டும் என்ற எண்ணம்தான் மேலோங்கி யிருந்தது. கடமை உணர்வுதான் எனக்கு அதிகம். அதற்கு அப்பால் என்னை நானே பெரிதாக சிந்திக்கிற பழக்கம் எனக்கு இல்லை. என்னோடு கூட நிற்கும் தளபதியர், போராளிகள், அவர்களோடு போராட்ட சவால்களுக்கெல் லாம் ஈடுகொடுக்கும் எமது மக்கள் -எல்லோராலும்தான் போராட்ட சாதனைகள் உருவாக்கப்படுகின்றன''.

தொடர்ந்து நான் கேட்டேன், ""தமிழ் மக்கள் உங்களை அசாதாரணமான ஆற்றல்கள் கொண்ட ஒருவராகப் பார்க்கிறார்களே?'' -இக்கேள்விக்கு அவர் தந்த பதில் எனது வாழ்வில் பெற்ற நேர்காணல் பதில்களிலெல்லாம் அற்புதமானது. ""எல்லோரையும்போல் நானும் ஒரு சாதாரண மனிதன்தான். ஆனால் தமிழ் மக்களுக்கு ஒரு பலவீனம் உண்டு. ஒருவருக்கு பெரிய உருவம் கொடுத்து, தெய்வம் போன்ற மாயையை அவரைச் சுற்றி உருவாக்கி, எல்லா பொறுப்பையும் அவர் மீது போட்டு, தங்கள் கடமை முடிந்ததென்று ஒதுங்கிக் கொள்வார்கள். தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமைகளை நானும் செய்திருக்கிறேன். ஒவ்வொரு தமிழரும் தமிழரென்ற வகையில் தாம் செய்யவேண்டிய கடமைகளை செய்தார்களென்றால் என்னை சுற்றின இந்த பிரம்மாண்டம் இருக்காது. நான் தலைவராகவே உங்களுக்குத் தெரியமாட்டேன்''. என்னே தெளிவு. என்னே நேர்மை! என்னே தன்னம்பிக்கை!

முல்லைத்தீவு பேரழிவிலிருந்து தங்களையும் விடுதலைப் போராட்டத்தையும் தற்காத்துக்கொள்ள ஒரே ஒரு வாய்ப்பு தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு இருந்தது. கடந்த ஜனவரி 24 அன்று வன்னிப்பரப்பிலுள்ள கல்மடு குளத்தை புலிகள் உடைத்துவிட நூற்றுக்கணக்கான ராணுவத்தினர் பலியான செய்தியை நக்கீரன் வாசகர்கள் அறிந்திருப்பீர்கள். கல்மடு குளத்தைவிட பன்மடங்கு பெரியது இரனைமடு ஏரி. இரனைமடு ஏரியை உடைத்திருந்தால் ஊழிப்பெருக்குபோல் பெருவெள்ளம் புறப்பட்டு வன்னிப் பரப்பு முழுதையும் விழுங்கி பூநகரி வரையுள்ள மரம், செடி, உயிர் அனைத் தையும் அழித்துத் தீர்த்திருக்கும். மிகக் குறைந்தபட்சம் 40,000 சிங்கள ராணுவத் தினர் செத்து மிதந்திருப்பர். அவர்தம் பல்லாயிரம் கோடி பெறுமதியுடைய ஆயுதங்கள், ராணுவ கட்டுமானங்களும் புதையுண்டு போயிருக்கும். இந்த மரண அடியிலிருந்து அடுத்த பத்து ஆண்டு களுக்கு சிங்கள ராணுவம் எழும்பியிருக் காது.

ராஜபக்சே சகோதரர்களின் அரசிய லும் முடிந்திருக்கும். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தளபதிகள் இறுதி அஸ்திர மாக இரனைமடு ஏரியை உடைக்கும் ஆலோசனையை முன்வைத்தபோது யோசனைகளுக்கு இடம் கொடுக்காம லேயே பிரபாகரன் சொன்னாராம், ""நீங்க சொல்றது சரிதான். இரனை மடுவெ உடைச்சா சிங்கள ஆர்மிகாரனுக்கு மரண அடி கொடுக்கலாம். ஆனால் வன்னியின்றெ பொருளாதாரமும் அதோட போகும். அடுத்த நூறு ஆண்டுக்கு அந்த மண்வளத் தையும் விவசாய பொருளாதாரத்தையும் ஒருத்தராலயும் மீட்டெடுக்க முடியாது.

நம் வன்னி சனம் எத்தனையோ கஷ் டங்கள்பட்டு விடுதலைப்போராட்டத் தோடு நிக்கிறாங்கள். அந்த சனத்துக்கு நாம் இப்படியொரு துரோகம் செய்ய ஏலாது.'' பேரழிவு நெருங்கிவந்த பொழுதில்கூட தனது மக்களின் வாழ்வுக்கான ஆதார வளங்களை அழித்து தன்னையும் இயக்கத்தையும் பாதுகாக்க மறுத்த இந்த மாமனிதனா பயங்கரவாதி? ஐயப்படும் அன்பர் களுக்கும், ஆங்கில ஊடகத்து அந்நியர்களுக்கும் இவற்றையெல் லாம் எடுத்துரையுங்கள். அவர்கள் வனைவு செய்த பயங்கரவாத வர்ணஜாலங்களுக்கு அப்பால் இதயம் கொண்டதொரு மனி தன் பிரபாகரன் என்பதை உரத்துச் சொல்லுங்கள்.

StumbleUpon.com Read more...

தலைவர் மரணம்?:புலிகளின் பேச்சாளர் அறிவிப்பை தமிழர்கள் ஏற்றுக்கொண்டார்களா.



அதிர்வு

StumbleUpon.com Read more...

பெண்களுக்கு மட்டும்!!!:நீங்கள் மாமியாராகவோ,அல்லது மருமகளாகவோ இருந்தால் கண்டிப்பாக இது படியுங்கள்

 
ஹைய்யா..!
* மருமகளை தன்னுடைய மகளை போல் பாவித்தால் கண்டிப்பாக பிரச்சினையே ஏற்படாது. மருமகளுக்கு புரியாததை புரியும்படி, மெதுவாக எடுத்து சொல்லி புரியவைப்பது மாமியாரின் கடமை. மருமகளை குறை சொல்லிக் கொண்டிருந்தால் சிக்கல்கள் அதி கரிக்குமே தவிர, குறையாது. மருமகளின் மகிழ்ச்சியில்தான் உங்கள் மகனின் மகிழ்ச்சியும் உள்ளது. மொத்தத்தில் உங்களின் குடும்பத்தின் மகிழ்ச்சியும் அடங்கியுள்ளது.

* கணவரின் பாராட்டை விட மாமியார், மாமனார் மற்றும் குடும்பத்தில் உள்ள பிற உறுப்பினர்களின் பாராட்டுதலையே மருமகள் மிகவும் விரும்புவாள். அப்படி பாராட்டும் போது உச்சி குளிர்ந்து போவாள். பிறந்த வீட்டிலும், தன்னுடைய தோழிகளிடமும் இதை பெருமையாக சொல்லி மகிழ்வாள். அதனால் மருமகளிடம் நட்பு பாராட்டி, பின்னர் குறைகளை சொன்னால் கண்டிப்பாக மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொள்வாள்.

* மாமியார் மற்றும் மருமகள் இருவருமே உங்கள் வீட்டின் அஸ்திவாரம் நீங்கள்தான் என் பதை உணருங்கள். உங்களுக்குள் தோன்றும் நியாயமான கருத்துகளை அனைவருமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதும், அதற் காக வாக்குவாதம் செய்வதும் தவறு. மாமியாரின் நியாயமான கருத்தை மருமகள் நிராகரிப்பதும், மரு மகளின் முடிவு சரி என தெரிந்தும் வேண்டுமன்றே அதற்கு முட்டுக்கட்டை போடும் மாமியாரும் பிரச்சி னைகளுக்கு இன்னும் விளக்கேற்றி வைக்கிறார் கள்.

* உங்கள் வீட்டுப் பிரச்சினைகளை வெளி ஆட் களிடம் சொல்ல வேண்டாம். அதனால் எந்த நன்மையும் உண்டாகாது. இதனால் சிக்கல்கள் இன்னும் அதிகரிக்கும். அதனால் உங்கள் வீட்டுப் பிரச்சினைகளை பெரிதாக்காமல் நீங்களே பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் ஒரே குணத்துடன் இருக்கமாட்டார்கள். ஆனால் நல்ல பேச்சுவார்த்தை, நயமான அணுகுமுறை பிரச்சினைகளை குறைக்கவே செய்யும்.

* புரிந்து கொள்ளுதல் என்பதே அன்பின் வெளிப்பாடுதான். அன்பு இல்லை என்றால் புரிந்து கொள்ளவும் முடியாது. குடும்பம் என ஆகிவிட்டால் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அன்பினை முழுமையாக வெளிக்காட்ட வேண்டும். உங்களுக்கு வேண் டியவரை நீங்கள் கவர வேண்டும் என்றால் புரிந்து கொள்வது அவசியம். இதை மாமியார், மருமகள் இருவரும் தெரிந்து கொள்ளுங்கள்.


* மருமகள்களும், தங்களுடைய மாமியார், மாமனாரை அம்மா, அப்பாவாக நினைத்துக் கொண்டாட வேண்டும். மைத்துனர், நாத்தனார் ஆகிய குடும்பத்து உறுப்பினர்களை, பிறந்த வீட்டு சொந்தம் போல் நினைத்தால் உங்கள் வாழ்க்கையும் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும். பூமியில் ஒருவர் பிறக்கும்போதே பல உறவுகளைக் கொண்டவராகத் தான் பிறக்கிறார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

* அன்பைப் புரிந்து கொண்டவர்களால் மட்டுமே அளவிலா ஆனந்தம் அடைய முடியும். மாமியார், மருமகள் இருவரும் அளவில்லா அன்பை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதே குடும்பத்திற்கு நல்லது. தனக்கு என்ன பிடிக்கிறதோ அதைத் தான் மருமகளும் செய்ய வேண்டும் என மாமியார் அடம் பிடிப்பது கூடாது. தன்னுடைய மருமகளை நல்ல தோழி யாகவும், மகளாகவும் நினைத்துக் கொண்டாலே போதும்.


* எப்பொழுதும் நம்மைச் சுற்றி உள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும்போது தான் நாமும் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதை மாமியார், மருமகள் இருவரும் புரிந்து கொள்ளுங்கள். மாமியார், மருமகள் இருவரும் பிரச்சினை இன்றி மகிழ்ச்சியாக வாழ்ந்தால் வீட்டில் அமைதியும், ஆனந்தமும் அதிகரிக்கும். இதனால் ஆண்களுக்கு ஆன்ம பலமும், ஆயுள் பலமும், வருமானமும் அதிகரிக்கும்.

* மருமகள்கள் தங்களுடைய அன்பின் அருமையை புகுந்த வீட்டு உறுப்பினர்கள் புரிந்து கொள்ளும்வரை பொறுமையாக இருப்பது நல்லது. அதே போல் புகுந்த வீட்டில் உள்ளவர்களிடம், எப்போதும் பிறந்த வீட்டுப் பெருமையை பேசிக் கொண்டு இருக்கக் கூடாது. புகுந்த வீட்டில் உள்ளவர்கள் ஏதாவது சிறிய தவறு செய்து விட்டாலும், பெரிது படுத்தாமல் அதை அவர்களுக்கு உணர்த்தினாலே போதும்.

* மருமகள்கள் புகுந்த வீட்டில் உள்ள பெரியவர்களுக்குக் கொடுக்க வேண்டிய மரி யாதையையும், அன்பையும், செய்ய வேண்டிய கடமைகளையும் தவறாமல் செய்ய வேண் டும். பிறந்த வீட்டில் இருந்ததைப் போன்று அன்பு, கடமை, உரிமை மற்றும் பொறுமையை கடைபிடிப்பது மருமகள்களுக்கு மிகவும் அவசியம். மருமகள்களுக்கு பிறந்த வீட்டை விட புகுந்த வீடே மேன்மையானது.

 

StumbleUpon.com Read more...

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: விடுதலைப்புலிகள் உளவு பிரிவு அறிவிப்பு

 
 
 

Claims and scepticism sans evidence

 
The head of the LTTE's Department of International Relations on Sunday announced that the LTTE Leader Velupillai Pirapaharan attained martyrdom fighting the military oppression of the Sri Lankan state on 17 May. However, the LTTE's Department for Diaspora Affairs (DDA) told TamilNet that it would not comment without explicit authorisation from the LTTE leadership. In the meantime, the Intelligence Department of the Tigers reiterated on Sunday that the LTTE leadership is safe and it will re-emerge when the right time comes.

Tamil Nadu leaders, Mr. Vaiko and Mr. Pazha Nedumaran have expressed scepticism Sunday on the reports of Mr. Pirapaharan's demise.

Meanwhile, the general opinion prevails is that Colombo has failed in conclusively establishing the evidence for Pirapaharan's demise. It has not taken any credible efforts to verify evidence either.

Failure in the responsibility of coming out with the truth also falls on the Indian Establishment. The Indian Intelligence has recorded all the details of LTTE leader's physiognomy when it has taken him into custody in mid-80's in India. It should have verified his death with evidence at least for its legal purposes. But observers think that India maybe having its own reasons for its silence.

Even 'omnipotent' powers of the information age have not come out with any authentic statement.

As TamilNet is being heavily pressed by its readership to know the truth, it has become a necessity to state that TamilNet doesn't take any responsibility for any of the stands taken, as these are beyond its independent verification.

StumbleUpon.com Read more...

தலைவர் பிரபாகரன் பற்றி பத்மநாதன் வெளியிடப்பட்ட செய்தி ஒரு சர்வ தேச சதிச்செயல் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்

புலம்பெயர் மக்களே அவதானமாக அறிக்கைகளை ஆய்வு செய்யுங்கள்

 

புலம்பெயர் மக்களே அவதானமாக அறிக்கைகளை ஆய்வு செய்யுங்கள்

லங்கா தீபா என்ற சிங்களப் பத்திரிகையில் „காட்டிலிருந்து தப்பிய புலிகளை கட்டுப்படுத்தல்...'என்ற கட்டுரை வடிவிலான செய்தியை உலகத்தமிழ் செய்திகள் இணையத்தளம் 22.05.09 அன்று மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தது.


இவ்வாய்வுக் கட்டுரையின் கருத்து மையமாக லங்காதீபா பத்திரிகை புலம்பெயர் மக்களின் தமிழீழ விடுதலைக்கான எழுச்சியை தளர்நிலைக்கு கொண்டுவருவதற்காக தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேசத் தொடர்பாளர் திரு.கே.பத்மநாதனை குறி வைத்து இலங்கை அரசு செயலாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.


இதனடிப்படையில் இன்று திரு.கே.பத்மநாதன் அவர்களால் வெளியிடப்பட்ட தமிழீழத் தேசியத் தலைவரின் மரணம் தொடர்பானதாக கூறப்பட்ட செய்தியாகும்.


ஒரு முக்கியமான விடயத்தை தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். புலம்பெயர் தமிழர்கள் மனக் கிலேசமடையவோ அல்லது கலக்கமடையவோ தேவையில்லை. புலம்பெயர் தமிழர்கள் மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.


தமிழர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்துவதற்காக பல சதிகள் இடம்பெறுகின்றன. தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் உயிரோடு பாதுகாப்பாக இருக்கிறார்.அவரின் பாதுகாப்பான இடத்தை அறிய முயற்சிக்கும் நடவடிக்கைகளே இன்று வெளிவந்த அறிக்கை.


சர்வதேசத்திற்கு பொறுப்பாக  ஒருவரை நியமித்து அவரின் அறிவித்தல்கள் மூலமாக தமிழர்களை முரண்பட வைப்பதன் மூலம் தமிழீழ விடுதலைப் போரில் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு பிளவுபட வைப்பதன் நோக்கமாக இந்த அறிவித்தல்களை நோக்க வேண்டியள்ளது.


திரு.கே.பத்மநாதன் அவர்களால் வெளியிடப்பட்ட தகவலானது அவருக்கு அதற்கான நெருக்கடி ஏன் எந்தச் சூழ்நிலையைக் கொண்டது என்பதை மிகவும் தெளிவு பெற வேண்டும்.


சம்பந்தப்பட்ட அறிக்கை நிச்சயமாக புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்ட  செயலாகும்.


சர்வதேச உளவு நிறுவனங்களின் முனைப்பான செயல்பபாடுகளுக்குள் சர்வதேசத் தொடர்பாளர் சிக்குண்டுள்ளார், அவர் அதற்குள்ளிருந்து தன்னை சுதாகரித்துக் கொண்டு இயல்பு நிலைக்கு வரச் சில நாட்களாகும்.


புலம்பெயர் தமிழர்களையும் சர்வதேசத் தொடர்பாளரையும் முரண்பட வைக்கக்கூடிய சூழ்நிலை தோன்றியுள்ளது. இந்த விடயத்தில் புலம்பெயர் மக்கள் கூரான கத்தியில் நடப்பது போன்றதே.


இன்னும் கொஞ்சம் இது பற்றி ஆய்வு நோக்கில் எழுதலாம்.ஆனால் அது பாதகமான நிலையை ஏறபடுத்தும் என்பதனால் சிலவற்றை தவிர்த்துக் கொள்கின்றேன்.


எனவே திரு.கே.பியின் கடிதத்தை கருத்தில் கொண்டு உங்களுக்குள் கலக்கத்தை ஏற்படுத்த வேண்டாம்.தமிழீழத் தேசியத்தலைவர் பாதுகாப்பாக உயிரோடு இருக்கின்றார்.இந்தக் கடிதத்திற்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கின்றது.அந்தக் காரணத்தை இங்கே எழுத விரும்பவில்லை.நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள்.இக்கடிதம் ஒரு நிர்ப்பந்த நிலையாகக்கூட கருத இடமுண்டு.


இலங்கை ஜனாதிபதியை போர்க் குற்றவாளியாக்குகின்ற பாரிய நடவடிக்கையினை தடுக்கும் தடைகளில் ஒன்றாக இக்கடிதத்தைப் பார்க்க முடிகின்றது.


திரு.கே.பி அவர்கள் இனி ஜனநாயக ரீதியாகவே இப்போராட்டம் இடம்பெறும் என்று சொன்ன  வாரத்தைப் பிரயோகத்தின் மூலம் அவரின் இக்கட்டான சூழ்நிலையைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.


றோ,இன்ரர்போல்,சிஐஏ போன்றவற்றின் செயல்பாடுகள் எப்படியானவை என்பதை நீங்கள் அறிவீர்கள். திரு.கே.பி அவர்கள் இச்சூழ்நிலைக்குள் அகப்பட்டுக் கொண்டாரா என்ற கேள்வியைத் தவிர்க்க இயலாது.
புலம்பெயர் மக்கள் மத்தியில் தமிழீழ உணர்வைச் சிதைக்கும் திட்டமாவே இக்கடிதத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.


ஒரு நாட்டின் மீது பிரயோகிக்கும் இராஜதந்திர அழுத்தத்தைப் போன்றதொரு அழுத்தத்தை தமிழர்கள் மீது பிரயோகிக்கபபட்டு வருகின்றது. அதற்கான காரணம் தமிழர்களின் முனைப்பான வல்லமையேயாகும்.


வன்னிநிலப்பரப்பின் படுகொலை வெளிச்சத்திற்கு வருவதைத் தடுப்பதற்கும் தடைமுகாம்களில் 10,000 புலிப் போராளிகளிருப்பதாகக் கூறி இன்னும் 10,000 தமிழர்களை படுகொலை செய்ய அரசு எடுக்கும் நடவடிக்கையை தமிழர்கள் அவதானிக்க தவற வேண்டும் எனபது அரசின் திட்டமிடலாகும்.


எனவே தமிழீழத் தேசியத் தலைவர் தொடர்பாக வெளிவந்த செய்தி ஒரு சதிச் செயல் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

 

-அங்கயற்பிரியன்-

StumbleUpon.com Read more...

இனிமேல் தமிழர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்:தமிழ்க் குடும்பத்தினரை தாக்கி சிங்களக் காடையர்கள் அட்டகாசம்


தமிழ்க் குடும்பத்தினரை தாக்கி சிங்களர்கள் அட்டகாசம்

இலங்கையின் நீர்க்கொழும்பு பகுதியில் தமிழ்க் குடும்பத்தினரை சிங்களர்கள் சிலர் தாக்கி காயப்படுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வென்று விட்டதாக இலங்கை அரசும், ராணுவமும் அறிவித்ததைத் தொடர்ந்து சிங்களர்கள் வெற்றி விழாவைக் கொண்டாடி வருகின்றனர். இந்தக் கொண்டாட்டங்களின் போது தமிழர்களை கேலி செய்வதும், தாக்குவதும், பெண்களின் நகைகளைப் பறிப்பதுமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது சிங்களர்களின் அட்டகாசம்.

இந்த நிலையில் நீர்க் கொழும்பில் உள்ள தமிழர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிங்களக் கும்பல் ஒன்று, தங்களது கொண்டாட்டத்திற்காக தமிழர்களிடமிருந்து பணம் வசூலித்தது.

பணம் தர மறுத்தவர்களை அக்கும்பல் தாக்கியுள்ளது. மேலும் தமிழர்கள் மீது அழுகிய முட்டைகளை வீசியும், காய்கறிகளை வீசியும் கேவலமாக நடந்து கொண்டுள்ளனர்.

நீர்க்கொழும்பு கடற்கரைப் பகுதியில் நடந்து சென்ற தமிழ் இலைஞரைத் தாக்கி காயப்படுத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இனிமேல் தமிழர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் எனவும் அந்தக் கும்பல் எச்சரித்து விட்டுச் சென்றுள்ளதாம்.

 

StumbleUpon.com Read more...

ஆயிரம் வீரர்கள் தீயினில் போயினர்




            யிரம் வீரர்கள் தீயினில் போயினர்


ஆயினும் போரது நீறும், புலி

ஆடும் கொடி நிலம் ஆறும்.

பேயிருள் சூழ்ந்திடும் கானகம் மீதினில்

பாசறை ஆயிரம் தோன்றும், கருப்

பைகளும் ஆயுதம் ஏந்தும்.

மத்தளம், பேரிகை, கொட்டு புலிப்படை

மாபெரும் வெற்றிகள் சூடும், அந்த

சிங்கள கூட்டங்கள் ஓடும்.

-இணையத்தில்இன்று காலை நான் கண்ட கவிதை இது. எழுதியவர் புதுவை இரத்தினதுரையாக இருக்க லாம். படித்துச் சிலிர்த்து நின்ற வேளை தொலைபேசி அழைப்பொன்று வந் தது. கடந்த நான்கு நாட்களாய் தொலைபேசிய அந்த முக்கியமான வரை தொடர்பு கொள்ள நூறு முறையேனும் முயன்று மனக் களைப்புற்றிருந்தேன். களநிலை பற்றின பொய்யும் புனைவுமிலா உண்மையை தரவல்ல நிலையில் உள்ளவர் அவர். வானகத்தின் தூதுவன் நேரிடை வந்தது போல வந்தது அந்த அழைப்பு. அவர் சொன்னார்: ""கவலை ஏதும் வேண்டாம். தலைவர் பாதுகாப்பாக உள்ளார். அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக உறுதி செய்யப்பட்டபின் உலகோடு அவர் பேசு வார்''. தமிழீழ எல்லைகளின் காவலன் நல் லூர் முருகனும் எனது லூர்து மாதாவும் துணையிருந்தார்கள். படித்த கவிதை சந்தம் கட்டி என் மனதில் பாடலாய் துள்ள லாயிற்று. "பேயிருள் சூழ்ந்திடும் கானகம் மீதினில் பாசறை ஆயிரம் தோன்றும், கருப்பை களும் ஆயுதம் ஏந்தும்'.

எட்டு பத்து ஆண்டுகளுக்கு முன் இதே புதுவை ரத்தினதுரை எழுதிய கவிதையின் மறக்க முடியாத சில வரிகள் நினைவு வெளியில் கை வீசி நடந்தன.

""வா பகையே... வா...

வந்தெம் நெஞ்சேறி மிதி.

பூவாகவும் பிஞ்சாகவும் மரம் உலுப்பிக் கொட்டு.

வேரைத் தழித்து வீழ்த்து.

ஆயினும் அடிபணியோம் என்பதை மட்டும்

நினைவில் கொள்!''

புதுவை ரத்தினதுரையின் கவிதைகள்பால் எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது 1995-ம் ஆண்டு. அதிபர் சந்திரிகா குமார துங்கே யுத்த வெறி கொண்டு முப்படைகளையும் அவிழ்த்து விட்டு யாழ்ப்பாணத்தை சிறைப்படுத்திய காலம். யாழ்ப்பாணத்தில் சிங்க முத்திரை பொறித்த சிங்களக் கொடியை ஏற்ற அன்றைய ராணுவ அமைச்சர் அனுருத்த ரத்வத்தே வந்தார். அக்கொடியை சுமந்து வந்தது யாழ்ப்பாணத்து மேயராக இருந்த தமிழர். பெயர் மறந்துவிட்டேன். வடதமிழீழத்து இதயமாம் யாழ்ப்பாணத்திற்கு சிங்கக் கொடி சுமந்து வந்த மேயர் மீது புதுவைக்குச் சீற்றம். நீண்ட கவிதையொன்று எழுதியிருந்தார். இரண்டு வரிகள் மட்டும் அடித்த ஆணிபோல் நினைவில் பதிந்து நிற்கின்றன.

""மேயர் அவர்களே

நீவிர் சிங்கக் கொடியை சுமந்து வந்தபோது

மின்னும் ஜரிகை கரை கொண்ட

பட்டு வேஷ்டி கட்டி வந்ததாய் அறிந்தேன்.

கக்கூஸ் வாளிக்கு தங்க முலாம் பூசுவதில்லையே?!

-அறுபதாயிரத்திற்கும் மேலான அப்பாவித் தமிழ் உயிர்களை கொன்றழித்து, இரண்டரை லட்சம் பேரை சொந்த மண்ணில் அகதிகளாக்கி, முப்பதாண்டு கால விடுதலைப் போராட்டத்தை நீசத்தனமாய் நிர்மூலம் செய்த ராஜபக்சே கும்பலுக்கு வன்னிப்பரப்பில் சிங் கக் கொடி தூக்க நாக்கை தொங்கவிட்டுக் காத்திருக்கும் ஆனந்தசங்கரி வகையறாக்கள் ஒரு கணம் நினைவுக்கு வந்தபோது புதுவையின் கவிதையும் உடன் சேர்ந்து வந்தது. ""கக்கூஸ் வாளிகளுக்கு தங்க முலாம் பூசுவதில்லையே...?! ராஜபக்சேக்களுக்கு லாவணி பாடும் ஆனந்த சங்கரிகளே இருக்கிறவரை ஏதேனும் நாற்காலியில் இருந்துவிட் டுப் போங்கள். தங்க முலாம் பூசிய கக்கூஸ் வாளிகளுக்கும் கருணை செய்து ஓய்வூதியம் தர வேலுப்பிள்ளை பிரபாகரன் விரைவில் வருவான். உங்களுக்காக வரவில்லையென்றாலும் முல்லைத்தீவு முற்றுகையின் கடைசி நாள் நடந்த மன்னிக்க முடியா துரோகத்திற்கு நீதி செய்யவேனும் அவன் வருவான்.

கடைசி நாளில் -அதாவது கடந்த சனிக்கிழமை நடந்தது இதுதான். வேலுப்பிள்ளை பிரபாகரனும் எதிர்காலத்தில் போராட்டத்தையும் இயக்கத்தையும் மீள் கட்டமைப்பு செய்வதற்கு முக்கியமானவர்களான சில தளபதியர்களும் பாதுகாப்பாக அகன்றபின் களத்தின் இறுக்கம் தணிகிறது. கை ஒடிந்து, கால் முறிந்து, உடலின் சில பகுதிகள் சிதைந்து ரத்தம் வழிந்தே பாதி செத்துப் போன சுமார் 12,000 அப்பாவி மக்களையும், அவ்வாறே காயமுற்ற சுமார் 3,000 போராளிகளையும் எப்படியேனும் அப்புறப்படுத்திக் காப்பாற்றும் முடிவினை விடுதலைப்புலிகள் எடுக்கி றார்கள். கடற் புலித் தளபதி சூசை மதுரையில் ஒருவரோடு தொடர்பு கொண்டு காயமுற்ற மக்களையேனும் பாதுகாப்பாய் வெளியேற்ற 48 மணி நேர சண்டை நிறுத்தம் வேண்டுகிறார்.

மதுரை தமிழரோ உணர்வாளர் சுப.வீ. என்ற சுப.வீரபாண்டியன் அவர்களை மன்றாட சுப.வீ. அவர் கள் கனிமொழி அவர்களின் கருணையை கேட்கிறார். கனிமொழி அவர்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கியமான ஒருவரோடு பேச "அதிகாரப்பூர்வமற்ற', ஆனால் யதார்த்த மான முடிவொன்று தரப்பட்டது. ""விடுதலைப் புலிகளின் அனைத்துலக பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாபன் கொழும்பிலுள்ள இந்திய தூதுவருக்கு ஆயுதங்களை ஒப்படைக்க தயாராக உள்ளோம் என்ற முடிவினை எழுத்துப் பூர்வமாய் தொலைநகல் (எஆல) வழி உடனே தெரிவிக்க வேண்டும். மற்றவையெல்லாம் இந்தியா பார்த்துக் கொள்ளும்''. இரவு 10 மணி ஆயிற்று. இந்தக் கட்டத்தில் நானும் இணைந்தேன். லண்டனிலுள்ள எனது நண்பர்கள் மூலம் செல்வராஜா பத்மநாபன் அவர்களுக்கு தகவல் சொல்லப்பட அவரும் மின்னல் வேகத்தில் இயங்கினார். ""இந்தியாவிடமே நாங்கள் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருக்கிறோம். அது சாத்தியமில்லையென்றால் ஐ.நா. ஏற்பாட்டில் ஒப்படைக்கிறோம்'' என்ற முடிவை விடுதலைப் புலிகள் இரவு 11.50-க்குத் தெரிவித்தார்கள். கனிமொழி தயக்கத்துடன் காங்கிரஸ் பெரியவரை தொடர்பு கொள்ள அவரும் விழித்தே இருந்தார். ""கால அவகாசமில்லை. இந்தியாவிடம் சரணடைவதற்கான சாத்தியப்பாடுகள் இப்போது இல்லை. இலங்கை ராணுவத்திடமே சரணடைவதுதான் இப்போதைய நெருக்கடி நிலையில் ஆகக் கூடியது'' என்கிறார் அப்பெரியவர்.

மக்களை காக்க வேண்டி இலங்கை ராணு வத்திடமே ஆயுதங்களை ஒப்படைக்கும் முடிவினை சனி நள்ளிரவு புலிகள் எடுத்தார்கள். ஞாயிறு காலை கொழும்பு இந்திய தூத ரகத்தின் உதவியுடன் இலங்கைத் தமிழர் பாராளுமன்ற உறுப்பினர் கஜன் பொன்னம்பலம் ராஜபக்சேவோடு பேச்சுவார்த்தை கள் நடத்த முடிவொன்று ஏற்படுகிறது. "முல் லைத்தீவு களத்தில் நிற்கும் புலிகளின் தளபதிகள் வெள் ளைக்கொடி பிடித் துக் கொண்டு இலங் கை தளபதிகளிடம் வரட்டும். ஆயுதங் களை ஒப்படைப்பது, காயமுற்றோரை அப்புறப்படுத்துவது தொடர்பான நடைமுறை ஒழுங்குகளை அவர்களே கலந்து பேசி முடிவு செய்யட்டும்' என்பதாக அந்த ஏற்பாடு.

இம்முடிவினை ராஜபக்சே அலுவலகம் ராணுவத் தலைமைக்கும், முல்லைத் தீவு கட்டளைத் தளபதிகளுக்கும் அறிவிக்கிறது. இந்த ஏற்பாடுகள் முடியவே ஞாயிறு இரவாகி விடுகிறது.

ராஜபக்சேவுடன் நடந்த விவாதங்களையும் முடிவுகளையும் கஜன் என்ற கஜேந்திரன் பொன்னம்பலம்... செல்வராஜா பத்மநாபனுக்குத் தெரிவிக்க முல்லைத்தீவு களத்தில் நின்ற விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவுப் பொறுப்பாளர் நடேசனுடன் இவற்றை திங்கள் அதிகாலை 2.30 மணிக்கு விவாதிக்கிறார் பத்மநாபன். யுத்தம் 500 மீட்டர் அருகில் வந்த போதும் கூட உலகோடு உரையாடும் செயற் கோள் வசதிகளை விடுதலைப்புலிகள் கொண்டிருந்தார்கள் என்பது ஒரு ராணுவ அரசியல் இயக்கமாக எத்துணை ஆழமாக வளர்ந்திருந்தார்கள் என்பதற்குச் சான்றாகத் தெரிந்தது. விடிந்ததும் நடேசன், சிறப்புத் தளபதி ரமேஷ் -இவர் முன்பு கருணாவின் துணை தளபதியாக இருந்தவர், புலிகளின் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் மூவரும் வெள்ளைக் கொடி ஏந்தி சிங்களத் தளபதியர்களை சந்திக்கச் செல்வ தாய் ஏற்பாடு.

வெடிபொருள் புகை கவிந்த முல்லைத் தீவு பரப்பு விடிந்தது. வெள்ளைக் கொடி ஏந்தி மூவரும் நடந்தார்கள். சிங்களத் தளபதியர்களின் கூடாரம் அருகே வந்தார்கள். ஏன், என்னவென்ற பேச்சின்றி சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பின்னர்தான் தெரிய வந்தது அவர்களைச் சுட்டுக் கொல்லும் உத்தரவை ராஜபக்சேவின் சகோதரனும் ராணுவ அமைச்சருமான கோத்தபய்யா ராஜபக்சே பிறப்பித்திருந்த சதி.

வெள்ளைக் கொடியேந்தி சரணடையவோ, பேச்சுவார்த்தை நடத்தவோ வருகிறவர்களுக்குத் தீங்கிழைப்பது யுத்தக் குற்றம். அனைத்துலக சட்டதிட்டங்கள் இதனை கடுமையாக வலியுறுத்துகின்றன. ஆனால் சிங்கள இனவெறி பிடித்தாடும் கோத்தபய்யாவை பொறுத்தவரை தமிழருக்காகப் பேச எவருமே உயிரோடு இருக்கக்கூடாது. நடேசனும், புலித்தேவனும் சரணடைந்து கைது செய்யப்பட்டாலும் அவர்கள் யுத்தக் கைதிகளாகவே நடத்தப்பட வேண்டும். நாளை அனைத்துலக ஏற்பாட்டில் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கும் போது புலிகள் தரப்பிலும் பிரதிநிதிகள் இருக்க வேண்டுமென உலக நாடுகள் நிச்சயம் வலியுறுத்தும். அத்தகு சூழலில் தகுதியோடு தமிழரை பிரதிநிதித்துவப்படுத்த எவருமே இருக்கக்கூடா தென்பதுதான் கோத்தபய்யாவின் கணக்கு. முக்கிய செய்தி என்னவென்றால் இந்தியா சொல் வதையோ, அண்ணன் ராஜபக்சே சொல்வதையோ கேட்பதற்கு கோத்தபய்யா தயாராக இல்லை என்பதுதான்.

கொடுமை அத்தோடு முடியவில்லை காயமுற்று பாதி உயிரோடு முனகிக் கிடந்த பத்தாயிரத்திற்கும் மேலான அப்பாவி மக்களை புல்டோசர்கள், செயின் புளக்-கள் ஏற்றிக் கொன்றுவிட்டு ஆதாரங் கள் ஏதுமின்றி அதிநவீன ரசாயனக் கலவைகள் ஊற்றி எரித்திருக்கிறார் கள். அவ்வாறே காய முற்றிருந்த சுமார் 3,000 போராளிகளையும் கரு ணை இரக்கமின்றி சுட்டுக் கொன்று வெறி தீர்த்திருக்கிறார்கள். வேறெதற் கும் இல்லையெனினும் கோத்தபய்யாவிற்கு நீதி சொல்லவேனும் வேலுப்பிள்ளை பிரபாகரன் வருவான், நிச்சயமாய் வருவான்.

மரணத்தின் நிழலில் வளர்ந்த அதீதப் பிறவி பிரபாகரன். மாத்தையா அவரது வாகனத்திற்கு அடியிலேயே வெடிகுண்டு பொருத்தினார். ஆனால் வெடிக்கவில்லை. ஏன் வெடிக்கவில்லை என்பதற்கு மனித அறிவு சார்ந்த விளக்கம் எதுவுமில்லை. சாவகச்சேரி நகர் வளைவு திறக்கும் நிகழ்வின் போது அவரோடு மூத்த தளபதிகள் யாவரதும் கதை முடிக்க மாத்தையா ஏற்பாடு செய்திருந் தார்.

விழாவுக்குப் புறப்படும் போது மோசமான வயிற்று நோவு வர விழாவிற்கு அவர் வரவில்லை. வந்திருந்தால் அன்றே அவர் வரலாறு முடிந்திருக்கும். திருநெல்வேலி தாக்குதலின் போது அவரது துப்பாக்கியில் ரவை தீர்கிறது. குனிந்து ரவை நிரப்புகிறார். புறத்தே மின்னல் தெரிகிறது. சக தோழர்களின் பறக்கிற ரவைகள் என நினைக்கிறார். காலையில் பார்த்தால் தான் குனிந்தபோதுதான் நின்ற இடத்திலேயே எதிரியின் ரவைகள் பாய்ந்து வந்திருக்கின்றன. அக்கணம் குனிந்திராவிட்டால் அன்றே அவர் முடிந்திருப்பார். ""கடவுள் காத்து வருகிறார் எனக் கருதலாமா?'' என 2002-ல் அவரிடம் கேட்டேன். ""இன்னும் நான் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கிறதென இயற்கை நினைக்கிறது போலும்'' என்றார். தமிழர்களே, நண்பர்களே, முல்லைத்தீவில் கதை முடிய வில்லை. புதிய கதை தொடங்குகிறது. உலகத் தமிழினம் இனி நடக்கப் போவது புதிய தடங்களில்.

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP