சமீபத்திய பதிவுகள்

பிரபாகரன் விரைவில் வீறுகொண்டு வெளிப்படுவார்:

>> Sunday, June 21, 2009

பிரபாகரன் விரைவில் வீறுகொண்டு வெளிப்படுவார்: பழ.நெடுமாறன் அச்சிடு E-mail
 

altகர்நாடக தமிழர் பேரவையின் ஆண்டுவிழா ஊப்ளியில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வந்தார்.


 

அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா? இருந்தால் எப்போது வெளியே வருவார்?

பிரபாகரன் நலமாக இருக்கிறார். உரிய நேரம் வரும்போது வெளியே வருவார். இதற்கு முன் பல தடவை பிரபாகரன் இறந்து விட்டதாக சிங்கள அரசு செய்திகளை பரப்பியது.

அந்த செய்திகள் எல்லாம் பொய்த்தன. அதேபோல இப்போது சிங்கள அரசு பரப்பும் செய்தியும் பொய்யான செய்தியாகும். தமிழீழ விடுதலை போராட்டத்தை முன்னிலும் வீறுகொண்டு நடத்த பிரபாகரன் விரைவில் வெளிப்படுவார்.

தமிழீழ இயக்கத்தில் உள்ள சிலரே பிரபாகரன் இறந்து விட்டதாக கூறுகிறார்களே. இதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

இயக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சிலர் இப்படி பொய்யான செய்திகளை பரப்புகிறார்கள். உதாரணமாக பத்மநாதன் என்பவர் ஆயுதம் வாங்கும் வேலையில் ஈடுபட்டு இருந்தார்.

அதில் அவர் சில தவறுகளை செய்ததால் அவரை அந்த பொறுப்பில் இருந்து பிரபாகரன் நீக்கி விட்டார். அதன்பிறகு அவர் சர்வதேச செயலகத்தில் ஒரு பொறுப்பாளராக மட்டுமே இருந்தார். இவருக்கு மேல் பல பொறுப்பாளர்கள் இருக்கிறார்கள். அறிக்கை விடுவதற்கு பத்மநாதனுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

பிரபாகரனுக்கு ஏதாவது நேர்ந்து இருந்தால் அதை அறிவிக்கும் அதிகாரம் அவருடன் களத்தில் நின்ற தளபதிகளுக்கு மட்டுமே உண்டு.

களத்தில் இல்லாமலும் சர்வதேச போலீசாரால் தேடப்பட்டு வருபவரும் எந்த கட்டத்திலும் தன்னை வெளிப்படுத்த முடியாமல் தலைமறைவாக இருப்பவருமான பத்மநாதனால், களத்தில் நடந்ததை எப்படி அறிந்து கொள்ள முடியும்?

இந்திய "ரா'' உளவுத்துறை பிடியில் சிக்கி இத்தகைய அறிக்கைகளை அவர் வெளியிடுகிறார். உலக தமிழர்களின் மன உறுதியை குறைக்கவும், தமிழர்களை குழப்பவும் "ரா"  உளவுத்துறை அவரை பயன்படுத்துகிறது.

StumbleUpon.com Read more...

நடிகர் ஷாருக்கான் இஸ்லாம் மதத்திலிருந்து நீக்கம்:அவருடைய திருமணமும் செல்ல்லாது:மதகுருக்கள்

நடிகர் ஷாருக்கான் இஸ்லாம் மதத்திலிருந்து  நீக்கமா


இந்தி திரையுலகின் பிரபல நடிகர் ஷாருக்கான் சமீபத்தில் வெளியான ஒரு வார இதழில் எழுதிய ஒரு கட்டுரையில் நபிகள் நாயகத்தை பற்றி சர்ச்சையான கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், முஸ்லிம்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.


 இந்த சூழ்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பெரேலியில் உள்ள தருல்-உலும் மஜேஹர் இஸ்லாம் அமைப்பின் தலைவர் முப்தி மோதியுர் ரகுமான் ரிஸ்வி மற்றும் மற்றொரு அமைப்பின் தலைவர் முப்தி முகமது சுயேப் ரஸா ஆகியோர் ஷாருக்கானுக்கு எதிராக இன்று தனித்தனியாக `பட்வா` உத்தரவு பிறப்பித்தனர்.

அதில், `சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்துகளை வெளியிட்ட ஷாருக்கான், இஸ்லாம் மதத்தில் இருந்து நீக்கப்படுகிறார். அவருடைய மனைவியுடன் செய்து கொண்ட திருமணம் (நிக்காஹ்) சட்ட விரோதமானதாக கருதப்படுகிறது. மனைவியுடன் அவரது உறவுமுறையும் சட்ட ரீதியானது அல்ல.

தான் தெரிவித்த கருத்துகளுக்காக அவர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால், மயான பூமியில் அவருக்கு இடம் அளிக்கப்பட மாட்டாது' என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, `முகமது நபிகளுக்கு எதிரான கருத்துகளோ சிந்தனையோ தன்னிடம் கிடையாது என்றும் எழுத்துப் பிழை காரணமாக அத்தகைய தவறு ஏற்பட்டு விட்டது' என்றும் நடிகர் ஷாருக்கான் விளக்கம் அளித்து இருக்கிறார்.

StumbleUpon.com Read more...

புலிகள் ஏன் பொய் சொன்னார்கள்?

 
 
தாய் மண்ணை விடுவிக்கும் போராட்டத்தை புதிய வியூகத்துடனும் பழைய வேகத்துடனும் தொடர்ந்து செல்வதற்கான வழிமுறைகளில் தீவிரமாக இருக்கிறது ஈழத் தமிழினம். புலம் பெயர்ந்து வாழும் அவர்களின் சொந்தங்கள் இதற்கான முழு ஒத்துழைப்பையும் அளித்து வருகிறது.
 
 
பிரபாகரன் மர்மம்! புலிகள் சொல்வது நிஜமா? - நக்கீரன்

 

 

தாய் மண்ணை விடுவிக்கும் போராட்டத்தை புதிய வியூகத்துடனும் பழைய வேகத்துடனும் தொடர்ந்து செல்வதற்கான வழிமுறைகளில் தீவிரமாக இருக்கிறது ஈழத் தமிழினம். புலம் பெயர்ந்து வாழும் அவர்களின் சொந்தங்கள் இதற்கான முழு ஒத்துழைப்பையும் அளித்து வருகிறது.

இந்நிலையில், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புலனாய்வுத்துறையின் வெளியகப் பணிப்பிரிவு பொறுப்பாளர் கதிர்காமத் தம்பி அறிவழகனிடமிருந்து நம்பமுடியாத ஓர் அறிக்கை வெளி யானது.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு வீரவணக்கம் செலுத்தி தொடங்கியுள்ள அந்த அறிக்கையில், "எமது தேசியத்தலைவர் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் சரணடைந்ததாக வும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின் கொல்லப்பட்டதாகவும் அவர் தற்கொலை செய்துகொண்டார் எனவும் பல்வேறு மாறு பட்ட செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. எமது தலைவர் சரணடையவோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை சிறிலங்கா படை யினருடன் போரிட்டே வீரகாவியம் ஆகினார்' என்று அறிவழகனின் அறிக்கை தெரிவிக் கிறது.


பிரபாகரன் பற்றி விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் வெளியிட்ட அறிக்கையை உட னடியாக மறுத்து அறிக்கை விட்டவர்தான் அறிவழகன். அவர் பத்மநாதன் வழியில் இப்போது அறிக்கை வெளியிட்டிருப்பதால் உலகத் தமிழினம் பதைபதைப்பும் குழப்பமும் அடைந்திருக்கிறது. இந்த அறிக்கையின் பின்னணி என்ன என்பது பற்றி விடுதலைப்புலிகளின் சர்வதேச அளவிலான செயல்பாட்டாளர்களிடம் நாம் விசாரித்தோம்.

""இறுதிக்கட்டப் போரின்போது சிங்களப் படையினர் திணறிப்போகும் வகையில் ஊடறுப்புத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி, விடுதலைப்போராட்டத்தைத் தொடர் வதற்காக வெளியேறினார் எங்கள் தேசியத் தலைவர். சிங்கள அரசோ விடுதலைப் புலிகளை முற்றிலுமாக அழித்துவிட்டதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறது. அது சொல்லிக் கொண்டிருக்கும் பொய் எங்களுக்கு ஒரு வழியில் நல்லதுதான்.

உலகில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப் பட்டுள்ள தடையை நீக்குவதுதான் இப் போதைய எங்களின் முதல்பணி. பிரபாகரன் இல்லை என சிங்கள அரசாங்கமே சொல் லும் போது விடுதலைப்புலிகள் இயக்கத்துக் கான தடை தேவையற்றது என்ற வாதத்தை வைத்து நாங்கள் தடையை நீக்கப் போராடு வோம். அந்த நிலைப்பாட்டின் அடிப்படை யில்தான் அறிவழகனின் அறிக்கையும் வெளியாகியுள்ளது. இதுவும் விடுதலைப் போரின் ஒரு யுக்திதான்.

ஈழத்தமிழர்கள் குறிப்பிடத்தக்க அளவில் வாழும் ஆஸ்திரேலியாவில் புலிகள் இயக்கத்திற்கு தடை கிடையாது. இப்போது அங்கும் தடை விதிக்கக் கோரியது இலங்கை அரசு.

ஆனால், ஆஸ்திரேலிய அரசோ, புலிகள் இயக்கத்தை அழித்துவிட்டதாக நீங்களே சொல்கிறீர்கள். பிறகு எதற்கு தடை. நாங்கள் தடை விதிக்க முடியாது எனச் சொல்லிவிட்டது. இதே அடிப்படையில் மேற்குலக நாடுகளில் எங்கள் இயக்கத்திற்கு உள்ள தடையை நீக்கப் பாடுபடுவோம்.

சிங்கள அரசின் மனிதஉரிமை மீறல்கள் வெளிப்படையாகக் கண்டிக்கத் தொடங்கி யுள்ள அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் எங்கள் இயக்கத்திற்கு உள்ள தடையை நீக்கி, விடுதலைப் போராட் டத்திற்கான ஆதரவைத் திரட்டுவதுதான் தற்போதைய எங்கள் திட்டம். நாடு கடந்த தமிழீழத் தாயகம் என்ற முறையில் செயல்படத் தொடங்கியுள்ளோம்.

தற்போதைய நிலையில் தமிழீழக் குடியரசை வெளிநாட்டில் நிறுவுவது என்றும் அதன் மூலமாக சர்வதேச சமுதாயத்தின் ஆதரவைப் பெருக்குவது, புலிகள் மீது தடையில்லா உலகத்தை உருவாக்கியபின், எங்கள் தேசியத் தலைவரின் தலைமையில் இலங்கை மீது போர் தொடுப்பது என நீண்ட திட்டங்கள் உள்ளன. இவை சிதைந்து விடக்கூடாது என்ற அடிப்படையில்தான் அறிவழகனின் அறிக்கை வெளியாகியுள்ளது.

புலிகள் இயக்கத்திற்கு தடை விதிக்க மறுத்த ஆஸ்திரேலியாவிலோ அல்லது புலம் பெயர் தமிழர்கள் பெருமளவில் உள்ள கனடா விலோ நாடு கடந்த தமிழீழத் தாயகத்தை நிறுவுவதற்கான பணிகளை ருத்திர குமாரன் தலைமையிலான ஈழத்தமிழர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். நேதாஜி இப்படித்தான் வெளிநாட்டிலிருந்து கொண்டு சுதந்திர இந்தியாவை பிரகடனம் செய்தார். இன்று விடுதலைப்போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும் பலர் இதே முறையில் செயல்படுகின்றனர். உலக நாடுகளின் ஆதரவைப் பெறும் வகையில் எங்களின் நாடு கடந்த தமிழீழக் குடியரசின் பணிகள் இருக்கும்'' என விரிவாகத் தெரிவித்தனர்.

ஈழ விடுதலைப் போராட்டத்தை சர்வதேச அளவில் எழுச்சி பெறச் செய் திருக்கிறது ராஜபக்சே அரசின் மனிதத் தன்மையற்ற கொடூரத் தாக்குதல்.

StumbleUpon.com Read more...

பிரபாகரன் மர்மம்! புலிகள் சொல்வது நிஜமா? - நக்கீரன்

 

  

 

தாய் மண்ணை விடுவிக்கும் போராட்டத்தை புதிய வியூகத்துடனும் பழைய வேகத்துடனும் தொடர்ந்து செல்வதற்கான வழிமுறைகளில் தீவிரமாக இருக்கிறது ஈழத் தமிழினம். புலம் பெயர்ந்து வாழும் அவர்களின் சொந்தங்கள் இதற்கான முழு ஒத்துழைப்பையும் அளித்து வருகிறது.

இந்நிலையில், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புலனாய்வுத்துறையின் வெளியகப் பணிப்பிரிவு பொறுப்பாளர் கதிர்காமத் தம்பி அறிவழகனிடமிருந்து நம்பமுடியாத ஓர் அறிக்கை வெளி யானது.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு வீரவணக்கம் செலுத்தி தொடங்கியுள்ள அந்த அறிக்கையில், "எமது தேசியத்தலைவர் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் சரணடைந்ததாக வும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின் கொல்லப்பட்டதாகவும் அவர் தற்கொலை செய்துகொண்டார் எனவும் பல்வேறு மாறு பட்ட செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. எமது தலைவர் சரணடையவோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை சிறிலங்கா படை யினருடன் போரிட்டே வீரகாவியம் ஆகினார்' என்று அறிவழகனின் அறிக்கை தெரிவிக் கிறது.


பிரபாகரன் பற்றி விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் வெளியிட்ட அறிக்கையை உட னடியாக மறுத்து அறிக்கை விட்டவர்தான் அறிவழகன். அவர் பத்மநாதன் வழியில் இப்போது அறிக்கை வெளியிட்டிருப்பதால் உலகத் தமிழினம் பதைபதைப்பும் குழப்பமும் அடைந்திருக்கிறது. இந்த அறிக்கையின் பின்னணி என்ன என்பது பற்றி விடுதலைப்புலிகளின் சர்வதேச அளவிலான செயல்பாட்டாளர்களிடம் நாம் விசாரித்தோம்.

""இறுதிக்கட்டப் போரின்போது சிங்களப் படையினர் திணறிப்போகும் வகையில் ஊடறுப்புத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி, விடுதலைப்போராட்டத்தைத் தொடர் வதற்காக வெளியேறினார் எங்கள் தேசியத் தலைவர். சிங்கள அரசோ விடுதலைப் புலிகளை முற்றிலுமாக அழித்துவிட்டதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறது. அது சொல்லிக் கொண்டிருக்கும் பொய் எங்களுக்கு ஒரு வழியில் நல்லதுதான்.

உலகில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப் பட்டுள்ள தடையை நீக்குவதுதான் இப் போதைய எங்களின் முதல்பணி. பிரபாகரன் இல்லை என சிங்கள அரசாங்கமே சொல் லும் போது விடுதலைப்புலிகள் இயக்கத்துக் கான தடை தேவையற்றது என்ற வாதத்தை வைத்து நாங்கள் தடையை நீக்கப் போராடு வோம். அந்த நிலைப்பாட்டின் அடிப்படை யில்தான் அறிவழகனின் அறிக்கையும் வெளியாகியுள்ளது. இதுவும் விடுதலைப் போரின் ஒரு யுக்திதான்.

ஈழத்தமிழர்கள் குறிப்பிடத்தக்க அளவில் வாழும் ஆஸ்திரேலியாவில் புலிகள் இயக்கத்திற்கு தடை கிடையாது. இப்போது அங்கும் தடை விதிக்கக் கோரியது இலங்கை அரசு.

ஆனால், ஆஸ்திரேலிய அரசோ, புலிகள் இயக்கத்தை அழித்துவிட்டதாக நீங்களே சொல்கிறீர்கள். பிறகு எதற்கு தடை. நாங்கள் தடை விதிக்க முடியாது எனச் சொல்லிவிட்டது. இதே அடிப்படையில் மேற்குலக நாடுகளில் எங்கள் இயக்கத்திற்கு உள்ள தடையை நீக்கப் பாடுபடுவோம்.

சிங்கள அரசின் மனிதஉரிமை மீறல்கள் வெளிப்படையாகக் கண்டிக்கத் தொடங்கி யுள்ள அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் எங்கள் இயக்கத்திற்கு உள்ள தடையை நீக்கி, விடுதலைப் போராட் டத்திற்கான ஆதரவைத் திரட்டுவதுதான் தற்போதைய எங்கள் திட்டம். நாடு கடந்த தமிழீழத் தாயகம் என்ற முறையில் செயல்படத் தொடங்கியுள்ளோம்.

தற்போதைய நிலையில் தமிழீழக் குடியரசை வெளிநாட்டில் நிறுவுவது என்றும் அதன் மூலமாக சர்வதேச சமுதாயத்தின் ஆதரவைப் பெருக்குவது, புலிகள் மீது தடையில்லா உலகத்தை உருவாக்கியபின், எங்கள் தேசியத் தலைவரின் தலைமையில் இலங்கை மீது போர் தொடுப்பது என நீண்ட திட்டங்கள் உள்ளன. இவை சிதைந்து விடக்கூடாது என்ற அடிப்படையில்தான் அறிவழகனின் அறிக்கை வெளியாகியுள்ளது.

புலிகள் இயக்கத்திற்கு தடை விதிக்க மறுத்த ஆஸ்திரேலியாவிலோ அல்லது புலம் பெயர் தமிழர்கள் பெருமளவில் உள்ள கனடா விலோ நாடு கடந்த தமிழீழத் தாயகத்தை நிறுவுவதற்கான பணிகளை ருத்திர குமாரன் தலைமையிலான ஈழத்தமிழர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். நேதாஜி இப்படித்தான் வெளிநாட்டிலிருந்து கொண்டு சுதந்திர இந்தியாவை பிரகடனம் செய்தார். இன்று விடுதலைப்போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும் பலர் இதே முறையில் செயல்படுகின்றனர். உலக நாடுகளின் ஆதரவைப் பெறும் வகையில் எங்களின் நாடு கடந்த தமிழீழக் குடியரசின் பணிகள் இருக்கும்'' என விரிவாகத் தெரிவித்தனர்.

ஈழ விடுதலைப் போராட்டத்தை சர்வதேச அளவில் எழுச்சி பெறச் செய் திருக்கிறது ராஜபக்சே அரசின் மனிதத் தன்மையற்ற கொடூரத் தாக்குதல்.

StumbleUpon.com Read more...

லிடியா அரை நிர்வாணமாக காட்சி

சேகுவாரா பேத்தியின் அரைநிர்வாண ஆர்ப்பாட்டம்


ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தென் அமெரிக்க மக்களை திரட்டியவர்  சேகுவாரா. கியூபா புரட்சிக்கு தளகர்த்தராக இருந்தவர். இவரது பேத்தி லிடியா குவாரா, இவர் இன்னொரு புரட்சிக்கு கொடி பிடித்து இருக்கிறார்.


அவர் சைவ உணவுக்கு ஆதரவான விளம்பரப்புரட்சியில் பங்கு கொண்டு இருக்கிறார்.

மிருகவதை தடுப்பு இயக்கம் உலகம் முழுவதும் விளம்பரங்களை செய்து வருகிறது. இந்த இயக்கம், உணவுக்காக ஆடு மாடுகளை வெட்டுவதையும், உடைக்காக ஆடு, கரடி ஆகியவற்றின் தோல்களை எடுப்பதற்காக அந்த மிருகங்களை கொல்வதையும் எதிர்த்து உலக முழுவதும் புரட்சி விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது.

இந்த விளம்பரங்களில் பெண்கள் அரை நிர்வாணமாக காட்சி அளிப்பது உண்டு. அப்படி ஒரு விளம்பரத்தில் லிடியா தோன்றி இருக்கிறார்.

அவர் அரை நிர்வாணமாக மேலாடை இல்லாமல் தோன்றிய விளம்பரம் வருகிற அக்டோபர் மாதம் முதல் பத்திரிகைகளில் வெளியாக இருக்கிறது. இந்த விளம்பரம் முதலில் அர்ஜென்டைனா நாட்டில் வெளியாக இருக்கிறது. இந்த நாட்டில் தான் லிடியா தோன்றினார்.

24 வயதான லிடியா, சைவ உணவை மட்டுமே சாப்பிடுபவர் என்பதை அறிந்ததும் அந்த இயக்கம் அவரை இந்த விளம்பரத்தில் தோன்றும்படி கேட்டுக்கொண்டது. அவரும் இதற்கு சம்மதித்தார்.

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP