சமீபத்திய பதிவுகள்

பில்லி சூனியமா ? பிரபாகரனா ?

>> Friday, July 17, 2009

 

pira-pillyசிங்களப் பேரினவாத ஆட்சியாளர் சென்றவாரம் மந்திரவாதி ஒருவரை பிடித்து நாலாவது மாடியில் அடைத்து வைத்திருக்கிறார்கள் என்ற செய்தி உலகத்தின் பல பாகங்களிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

 பிரபாகரனை பில்லி சூனியம் வைத்து கொன்றது தானே என்றும், வரும் செப்டெம்பரில் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சி இல்லாமல் போகும் என்றும் இந்த மந்திரவாதி கூறியிருந்தார். என்ன அடிப்படையில் இவ்வாறு கூறினார் என்பதை அறிய அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக சிங்கள போலீசார் கூறியிருக்கிறார்கள்.

 இதற்கு என்ன அடிப்படை இருக்கப்போகிறது, சுத்தமான கடைந்தெடுத்த மூட நம்பிக்கை என்பதை இயல்பாகவே அறிய முடியாமல், நாலாம் மாடிக்குக் கொண்டுபோய் சித்திரவதை செய்து அறிய முற்பட்டிருக்கிறது அரசு. இந்தக் கட்டுரையை எழுதும்வரை மந்திரவாதி விடுதலையாகவில்லை.

 இது…

 சிரிப்பிற்கிடமான செய்தியா ?

 இல்லை..

 சிந்திக்க வேண்டிய செய்தியா ?

 இரண்டுமே கிடையாது, கண்ணீர் விட்டு அழ வேண்டிய செய்தி !

 காரணம்.. சிங்களப் பேரினவாதம் எவ்வளவு மூட நம்பிக்கைகளால் கட்டப்பட்ட ஒன்று என்பதற்காக அழ வேண்டியதில்லை. அதை அறியமல் அல்லல் பட்ட நம்மை நினைத்தும் அழ வேண்டிய செய்தியாகும்.

 மகிந்த ராஜபக்ஷ மட்டுமல்ல சிங்கள ஆட்சியின் அதிபர்களாக இருந்த அனைவருமே மந்திர தந்திரங்களில் அதிக நம்பிக்கை கொண்டவர்களாகவே இருந்தார்கள், இருக்கிறார்கள்.

 பிரேமதாசா லலித் அத்துலத் முதலி இருவருக்கும் இடையில் நடைபெற்ற அரசியல் மோதலில் பிரேமதாச ஆட்சியை நீடிப்பதற்காக நடாத்திய மந்திரதந்திரங்கள், பூஜைகள், அவற்றிற்காக நடைபெற்ற பல அபத்தமான நிகழ்வுகள் குறித்த செய்திகள் வெளியாகியிருந்தன படித்து அதிர்ந்தோம்.

 பிரேமதாச மட்டுமல்ல மற்றய பல சிங்களத் தலைவர்களும் கூட இரத்தினபுரி, அம்பாந்தோட்டைப் பகுதிகளில் இருக்கும் மாய மந்திhPகம், பில்லி, சூனியம் போன்றவற்றை செய்யும் மந்திரவாதிகளே தமது ஆட்சியை காப்பதாக நம்புகிறார்கள் இதற்கு பல கதைகள் உண்டு.

 இந்த மந்திரவாதிகளின் கதைகளைக் கேட்டுத்தான் சிங்கள அரசு ஓர் இனப்போரை கட்டவிழ்த்து விட்டிருந்தால், இந்த ஆட்சிகளை காப்பதற்கான நரபலிகளாக பல இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்களா என்ற கேள்வியும் மனதில் வரும்..

 முன்னர் ஒரு தடவை இனப்பிரச்சனை தொடர்பாக பௌத்த பிக்குகளை சந்திக்கச் சென்ற பல மாற்று தமிழ் இயக்கங்களின் தலைவர்களுக்கு விகாரையில் இருந்த பிக்குகள் பச்சைத் தண்ணீரும் கொடுக்க மாட்டோம் என்று கூறிய செய்தியை சிலர் அறிந்திருப்பார்கள். தமிழர்களான அவர்களை பிக்குகள் ஜாதியில் குறைந்தவர்கள் என்று கருதி தாகத்திற்கு தண்ணீரும் கொடுக்க மறுத்திருந்தார்கள்.

 புத்தர் ஆடு மேய்க்கும் இடையனிடம் பாலை வேண்டிக்குடித்து, ஜாதிகள் இல்லை என்று சொன்னதை இந்தப் பிக்குகள் விளங்காமல்தான் புத்தமதத்தை நடாத்துகிறார்கள் என்பது கண்ணீர் வரவழைக்கும் உண்மையாகும். ஜாதியில் இருந்து மந்திரம் வரை புத்தமதத்தின் அடிப்படை என்பதற்கு இது ஒரு சாட்சியம்.

 இவ்வாறாக புத்த மதத்துடன் இணைந்துள்ள இந்த மந்திர நம்பிக்கைகள் சிங்கள மக்களிடம் நிரம்பி வழிவதை, சிங்கள கிராமங்களுக்கு சென்று நேரடியாக பார்த்தால், அல்லது அவர்களுடன் வாழ்ந்து பார்த்தால்தான் சரியாகப் புரிந்து கொள்ளலாம்.

 ஒவ்வொரு சிங்களக் கிராமங்களும், அமைதியில் உறைந்து போயிருக்க நள்ளிரவு முழுவதும் நடைபெறும் இந்த பில்லி, சூனிய ஆட்டங்களை பார்த்தால், உலகத்தின் அறிவியல் வளர்ச்சிக்கும், புத்த ஜாதக, மாந்திhPக கேடுகளுக்கும் உள்ள இடைவெளியை இலகுவாக அறியலாம்.

 சிங்கள இராணுவத்தின் இன அழிப்பிற்கு எதிரான போருக்காக ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்களில் எத்தனைபேருக்கு இந்த மந்திர ஆட்டங்களும், சிங்கள சமுதாயமும் என்ற விடயம்பற்றி தெரியும் என்று ஆராய்ந்தால், சிங்களவருக்கு எதிராக நாம் வகுத்த வியூகங்களின் போதாமையை உணரலாம்.

 எரிக் சொல்கெய்ம், பான் கி மூன், பிரிட்டன் பிரதமர் கோர்டன் பிரவுண், பராக் ஒபாமா என்று வீண் காலம் செலவிட்டதைவிட, இந்த சிங்கள மந்திரவாதிகளில் நாலுபேரை பிடித்து, ஒரு யாகம் நடத்தியிருந்தாலே இராணுவத்தை மாவிலாற்றிலேயே தடுத்திருக்கலாமே என்ற உண்மையையும் எண்ணி சிரித்திருக்க முடியும்.

 பில்லி, சூனியத்தால் பிரபாகரனை கொன்றதாகக் கூறும் சிங்கள மந்திரவாத கொள்கைகளுக்கும், அதை முறியடிக்க பிரிட்டன் பிரதமர் கோர்டன் பிரவுணுக்கு மகஜர் கொடுத்த புலம் பெயர் தமிழர் கொள்கைகளுக்கும் உள்ள இடைவெளியின் யதார்த்தங்களையும் அறிந்;திருக்க முடியும்.

 மேலும் மகிந்த அரசு மட்டுமல்ல, ரணில் விக்கிரமசிங்க, அனுரா பண்டாரநாயக்கா, ஜே.ஆர்.ஜெயவர்தனா போன்ற சிங்களத் தலைவர்கள் அடிக்கடி இந்தியா செல்வதும், பிரபல இந்திய சாமியார்களை சந்திப்பதும் ஏன் என்றும் நாம் ஆழமாக சிந்தித்திருக்க வேண்டும்..

 உண்மையாகவே சிங்கள தலைவர்கள் எரிக் சோல்கெய்மைவிட, பான் கீ மூனைவிட இந்த மந்திரச் சாமியார்களின் பலம் பெரிது என்பதை அறிந்திருந்தார்கள். அதனால்தான் பருவம் தவறாமல் இந்திய சாமியார்களுக்கும் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து, அரசியலை நகர்த்தினார்கள். இந்த இடத்தில் இந்து மதத்தின் அவலம் இருக்கிறது.

 காரணம் பெரும்பாலான இந்திய அரசியல் வாதிகளும் தம்மைப்;போலவே இந்த மந்திரச் சாமியார்களின் ஆட்டங்களை நம்பித்தான் ஆட்சி நடாத்துகிறார்கள் என்பது மந்திரவாதிகளின் கால்களில் கிடக்கும் சிங்களவர்களுக்கு தெரியும். பாம்பின் கால் பாம்பறியும் என்பது பழமொழியாகும். சிங்கள ஆட்சியாளர் மீதான இந்திய கரிசனையை ஏற்படுத்த மந்திரச் சாமியார்களின் பங்களிப்பே பெரியது என்ற உண்மையை நாம் அலட்சியப்படுத்தினோம்.

 கடிகாரம், பூ போன்ற பல மந்திரப் பொருட்களை எடுத்துக் கொடுக்கும் பல இந்திய சாமியார்களை வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்களும் கொண்டாடுகிறார்கள். வன்னியில் நடைபெற்ற அவலங்களை இந்த மந்திரச் சாமியார்கள் ஏன் கண்டிக்கவில்லை என்ற கேள்வியை எழுப்பாமல் பூஜைகளில் மூழ்கிக் கிடக்கிறார்கள்.

 தமிழகத்தில் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் மந்திர தந்திரங்களுக்கு எதிரான பகுத்தறிவு போராட்டங்களை நடாத்தினார்கள். அதன் மூலமாக மதவாத நம்பிக்கைகள் கொண்ட காங்கிரஸ் ஆட்சியை தெற்கில் தோற்கடித்தார்கள்.

 அதுபோல வட இந்தியாவில் இருந்த காங்கிரசை தோற்கடிக்க ஒரு பகுத்தறிவு கொள்கை வரவில்லை, அதைவிட மோசமான மூட நம்பிக்கைகள் கொண்ட, பாபர் மசூதியை இடித்த பா.ஜ.க தான் வரமுடிந்தது.

 தமிழகத்தில் உண்டான பகுத்தறிவு அதிகாரமற்ற மாநில ஆட்சியை பிடித்தது !

 வட இந்தியாவில் அத்வானியும், நரேந்திரமோடியும் வளர்த்த மூடநம்பிக்கைகள் நிறைந்த அரசியல் வட இந்திய ஆட்சியை பிடித்தது ! இதுவே இந்தியாவில் நடந்த முரண்பாடு.

 இதை அறிந்த சிங்களத் தலைவர்கள் அதிகாரமற்ற தென்னிந்திய பகுத்தறிவாளரிடம் போகாமல் இந்திய சாமியார்களிடம் போனார்கள், தமது எண்ணங்களை அவர்கள் மூலம் நிறைவேற்றினார்கள்.

 பிரபாகரன் பத்தாண்டுகளுக்கு முன்னரே பெரியாரின் கொள்கைகளை ஆழமாகப் படிப்பதாக சொன்னார்கள்.

 விளைவு சீமான் போன்ற பகுத்தறிவு வாதிகள் அவருக்காக சிறை சென்றார்கள்.

 புகுத்தறிவு சிங்கம் கலைஞர் தனது கறுப்புச் சட்டையை கழற்றி வீசி, மங்கள கரமான மஞ்சள் சால்வை அணிந்து, பா.ஜ.கவுடன் இணைந்ததையும், அவர் பேரன் அதன் பின்னால் உலகத்தின் 59 வது பணக்காரராக வந்ததையும் பலர் அறிவார்கள்.

 கடைசிவரை பகுத்தறிவு கொள்கையாளராக இருந்த அறிஞர் அண்ணா ஏற்றுக் கொண்ட பதவிக்கெல்லாம் பெருமையைத் தந்தாலும், தனது இனிய குடும்பத்திற்கு வறுமையை மட்டுமே தந்ததையும் நாம் அறிவோம். இந்த அவலத்தைப் பார்த்து அண்ணாவின் மகன் டாக்டர் பரிமளம் சில வருடங்களுக்கு முன் விரக்தியால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்ததை ஒரு கொள்கைக்காகக் கூட ஈழத் தமிழர் பேசவில்லை.
 இப்படியாக ஒரு சிங்கள மந்திரவாதியின் கைது நமது உள்ளத்தில் உருவாக்கும் எண்ண அலைகளே மேலே சொல்லப்பட்ட விடயங்கள்.

 உலகத்தில் இதுவரை நடைபெற்ற போர்களெல்லாம் மந்திரவாதிகளால் பூவா, தலையா போட்டுப் பார்த்த பின் செய்யப்பட்ட போர்களே .. என்பது புகழ் பெற்ற மேலைத்தேய பழமொழியாகும்.

 இப்போது பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா என்பதுகூட மந்திர தந்திர மூட நம்பிக்கைகளுக்குள்தான் சிக்குப்பட்டுத் தவிக்கிறது. பிரபாகரன் 80 வயது வரை உயிருடன் இருப்பார் என்ற தமிழகத்தில் ஜோதிடர் ஒருவர் கூறியிருக்கும் கருத்தை நமது புலம் பெயர் தமிழரில் பலர் இப்போது வேகமாக பேசி வருகிறார்கள். கனடாவில் இருக்கும் ஒருவர் பிரபாகரனை 80 வருடங்கள் அசைக்க முடியாது என்று இந்த ஜோதிடரை ஆதாரம் காட்டி கூறிவருகிறார்.

 சிங்கள மந்திரவாத கதையை கேட்டு அழும் நாம், பிரபாகரன் காலத்தால் அழியாத புகழ், வெறும் 80 வருடங்கள் அல்ல அவரது புகழ் வாழ்வு என்று கூட சிந்திக்க முடியாதளவிற்கு நமது மூளைகளை ஜோதிடத்திடம் அடகு வைத்துவிட்டு நிற்பதையும் கொஞ்சம் சிந்தித்தால் நாமும் பெரிய பகுத்தறிவுவாதிகள் அல்ல என்ற கசப்பான உண்மை வெளிப்படும்.

 இஸ்லாமிய மூடத்தனங்களில் பின்லாடனும்..

 கிறீத்தவ மூடத்தனங்களில் ஜோர்ஜ் புஸ்சும் ..

 சிக்குண்ட கதைகளையும் இவற்றோடு கொஞ்சம் இணைத்தால் நமக்கு மேலும் பல உண்மைகள் தெரியவரும்.

 முள்ளை முள்ளால்தான் எடுக்கலாம்..

 மந்திரத்திரத்தால் மாங்காய் விழுத்தப் புறப்பட்டுள்ள ஆட்சியாளரை இந்த மந்திரவாதிகளையும் சாமியார்களையும் வைத்துத்தான் விளங்கவும் முடியும்.   

 கி.செ.துரை

StumbleUpon.com Read more...

இதனை இவன் முடிப்பான் என்றால் …….? – சுவிசிலிருந்து தொல்காப்பியன்

 

  •  

•    வெறும் பானையை வைத்திருக்கும் மகிந்தவால் பசியாற்ற முடியுமா?

'விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த பின்னர் தமிழ் மக்களுக்குப் பொருத்தமான அரசியல் தீர்வொன்றை அரசாங்கம் நடைமுறைப் படுத்தும்" என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ முன்னர் கூறியிருந்தார்.

ஆனால், இப்போது அவரதும், அவரது அரசாங்கத்தினதும் கூற்றுக்கள்; அதற்கு முரணான வகையில் அமைந்திருக்கின்றன. இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவொன்றை (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீங்கலாக) நியமித்த அரசாங்கம் இதுவரைக்கும் அதனைக் காரணம் காட்டியே காலத்தை இழுத்தடித்து வந்தது.

இப்போது, மக்கள் ஆணையின் பின்னரே அரசியல் தீர்வு என்ற புதியதொரு ஆயுதத்தைக் கையில் எடுத்து கவசமாகப் பாவிக்கத் தொடங்கியிருக்கிறார் மகிந்த.

காலத்தை இழுத்தடிப்பது, அரசியல் தீர்வு யோசனை என்ற மாயைக்குள் தமிழ் மக்களையும் சர்வதேச சமூகத்தையும் நீண்டகாலத்துக்கு சிக்க வைத்திருப்பது ஆகியனவே அரசாங்கத்தினது இப்போதைய திட்டம்.

'பானையில் இருந்தால் தானே அகப்பையில் வரும்' என்றொரு பழமொழி இருக்கிறது. உண்மையில் அரசாங்கத்தின் கைவசம் மானசீகமான அரசியல் தீர்வு என்று எதுவுமே கிடையாது. அதனால் தான் அது வெறும் பானையை வைத்தே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறது.

இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கம் நிறையவே குழம்பிப் போயிருக்கிறது. அத்துடன் அது மற்றவர்களைக் குழப்பவும் தவறவில்லை. சர்வதேசத்தை ஏமாற்றல் அல்லது மிரட்டுதல் ஊடாகவும் மறுபுறம் உள்நாட்டு இறைமை என்கின்ற பூச்சாண்டிப் பதங்களோடு காலத்தை இழுத்துச் செல்கையில் இந்தியாவும் தன்பங்குக்கு பாசாங்கு நிலையிலான நெருக்குதல்களை அதிகமாக்கிய போது சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவைக் கொண்டு, ஒரு இடைக்காலத் தீர்வு யோசனையை முன்வைக்கச் செய்தது அரசாங்கம்.

அந்த இடைக்காலத் தீர்வு யோசனை, 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் படி பரிந்துரைத்திருந்தது. இந்த இடைக்காலத் தீர்வு யோசனை பற்றி இப்போது யாரும் கதைப்பதே கிடையாது. சர்வகட்சிக் குழுவின் இறுதி யோசனை தயாரிக்கப்பட்டு விட்டது என்று கடந்த பல வாரங்களாக கூறுகிறது அரசாங்கம். ஆனால், அது இன்னமும் ஜனாதிபதி மகிந்தவிடம் ஒப்படைக்கப் படவில்லை. தயாரித்து முடிக்கப்பட்டு விட்ட தீர்வு யோசனையை கையளிப்பதற்குத் தாமதம் ஏற்படுவது ஏன்? காரணம் இருக்கிறது.

இந்த தீர்வு யோசனையை அரசுக்குள் இருக்கும் தேசியவாத சக்திகள் நிச்சயமாக எதிர்க்கும். அது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என்ற பயமே இந்தத் தாமதத்துக்குக் காரணம்.

13 ஆவது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட தீர்வுக்கு அரசாங்கம் செல்லாது என்று அமைச்சர்கள் சிலர் கூறி வருகின்றனர். ஜனாதிபதி மகிந்தவும் கூட, 13 ஆவது திருத்தத்துக்கு அமைவான அரசியல்
தீர்வு ஒன்று பற்றியே பேசி வந்திருக்கிறார்.

ஆனால், கடந்த மாதம் புதுடெல்லி சென்றிருந்த ஜனாதிபதி மகிந்தவின் சகோதரர்களான பசில் ராஜபக்ஸ, கோத்தாபய ராஜபக்ஸ ஆகியோர் 13 ஆவது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட தீர்வுத் திட்டம் ஒன்றை அரசாங்கம் முன்வைக்கத் தயாராக இருப்பதாக இந்தியாவிடம் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள்.

அப்படியானால், அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாடு என்ன? உண்மையில், அரசியல் தீர்வை எப்படி வழங்குவதென்ற குழப்பத்துக்குகு; கூட முடிவு காணமுடியாத நிலையில் தான் அரசாங்கம் இருக்கிறது.

இதற்குள் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப் படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசாங்கத்துக்குள்ளேயே முரண்பாடுகள் தலைதூக்கத் தொடங்கி விட்டன. ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க, "13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முயன்றால், அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவோம்" என்று பகிரங்கமாக எச்சரித்து இந்த விவகாரத்தை மீண்டும் பூதாகாரப் படுத்தினார். "தமிழ் மக்களுக்கு இப்போது எந்தக் குறையும் இல்லை. அவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், தவிர வேறு எதுவும் தேவையில்லை. 13 ஆவது திருத்தம் நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். அது முழுமையாக அமுல்படுத்தப் படாததால்தான் நாடு மோசமான பாதிப்புகளில் இருந்து தப்பியுள்ளது." என்று கூறியிருந்தார்.

இதற்கிடையே, தேசிய பிக்கு முன்னணியின் தலைவர் தம்பர அமிலதேரர், "அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை நடைமுறைப் படுத்தப் போவதில்லை என்பதை அரசாங்கம் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். இல்லையேல், வரலாறு காணாத போராட்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும்" என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

"தீர்வுத் திட்டம் தொடர்பான மௌனத்தைக் கலைத்துவிட்டு, ஜனாதிபதி மகிந்த தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். நாட்டையும் மக்களையும் ஏமாற்ற முற்பட்டால் தேசிய பிக்கு முன்னணி மேற்கொள்ளும் போராட்டத்தால் ஆட்சியை விட்டே ஓட வேண்டிய நிலை அரசாங்கத்துக்கு ஏற்படும்" என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.

13 ஆவது அரசியல் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் 20 இலட்சம் மக்களை கொண்டு வந்து கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தப் போவதாக ஜே.வி.பி தலைவர் சோமவன்ச அமரசிங்கவும் தனது பங்குக்கு மற்றொரு எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்.

13 ஆவது திருத்தம் தொடர்பாக சிறி லங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளேயும் கருத்து முரண்பாடுகள் இருக்கவே செய்கின்றன.
"வடக்குக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் மேலும் பல பிரபாகரன்கள் உருவாகக் கூடும்." என்கிறார் உள்ளுராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன்.

மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்கவோ, "13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் இணக்கப்பாடு உள்ளது. ஆனால், தற்போதைய சூழலில் மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது யதார்த்தமாக அமையாது. இலங்கை சிறிய நாடு என்பதால் மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கக் கூடாதென்று நாடளாவிய ரீதியில் ஒரு கருத்து நிலவுகின்றது. இவ்வாறான பின்னணியில் மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது யதார்த்தமாக அமையாது." என்று கூறியிருக்கிறார்.

"13 ஆவது அரசியல் திருத்தத்தில் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரங்களை செயற்படுத்தும் சாத்தியம் தற்போதைக்கு இல்லை" என்று கூறியிருக்கிறார் கல்வியமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த.

அமைச்சர்களின் கருத்துக்களின் படி பார்க்கும் போது பொலிஸ் அதிகாரங்களை மாகாணசபைகளுக்கு விட்டுக் கொடுக்கின்ற அளவுக்குக்கே, அரசாங்கம் நெகிழ்வுப் போக்கைக் கடைப்பிடிக்காது என்பது உறுதியாகின்றது.

ஜாதிக ஹெல உறுமயவின் பகிரங்க எச்சரிக்கையை அடுத்து ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் ஒன்றில் இது பற்றி நீண்ட விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன்போது, 13 ஆவது திருத்தம் உள்ளிட்ட எந்தவொரு தீர்வுத் திட்டத்;தையும் கருத்துக்கணிப்பு மூலமான மக்களின் அங்கீகாரத்தைப் பெற்ற பின்னரே  நடைமுறைப் படுத்துவது என்று தீர்மானிக்க வேண்டிய நிலை ஜனாதிபதிக்கு ஏற்பட்டிருக்கிறது. அத்துடன் "மகிந்த சிந்தனையில் அரசியல்தீர்வு குறித்து தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது. தீர்வு யோசனை குறித்து சகல தரப்பினருடனும் பேசி இணக்கப்பாடு எட்டப்பட்ட பின்னர், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும்" என இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கூறியிருக்கிறார்.

ஜாதிக ஹெல உறுமயவும் தேசிய சுதந்திர முன்னணியும் 13 ஆவது திருத்தத்துக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன. 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப் படுத்தினால் அவை அரசாங்கத்தை விட்டு வெளியேறப் போவதாக கூறுகின்றன. இந்த இரு கட்சிகளுக்கும் நாடாளுமன்றத்தில் 20 உறுப்பினர்கள் இருப்பதால்; 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் முடிவை மகிந்த ராஜபக்ஸ ஒருபோதும் எடுக்கமாட்டார் என்பது உறுதி.

அரசியலமைப்பே ஒரு நாட்டில் மிகவும் உயர்வானது. அதை மீறிய எதுவும் இல்லை. ஆனால், நாட்டின் இறைமை, தேசப்பற்று குறித்து வாய் கிழியக் கத்தும் சிங்களத் தலைமைகள் இந்த அரசியலமைப்புக்கே தாம் துரோகம் செய்வதை கவனத்தில் கொள்வதில்லை. ஒரு அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப் படுத்தப் போவதில்லை என்று கூறும் கேவலமான அரசாங்கமும், அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கூடாதெனக் கோரும் அரசியல் சக்திகளும் இலங்கையைத் தவிர வேறெங்கும் இருப்பதற்கே வாய்ப்பில்லை.

அதேவேளை, அண்மையில் 'ஹிந்து' நாளிதழுக்கு வழங்கியுள்ள பேட்டியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, 13 ஆம் திருத்தத்தை அமுலாக்குவது தொடர்பான கேள்விக்கு, "எனது மனதில் ஒரு தீர்வு யோசனை இருக்கிறது. அதை, நாளை நினைத்தாலும் அமுல்படுத்த முடியும். ஆனால் அதை பொது மக்களிடம் இருந்தே எதிர்பார்க்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

அதாவது, தனது மனதில் என்ன இருக்கிறதென்பதை வெளியிட அவர் தயாராக இல்லை. அவரது மனதில் என்ன இருக்கிறது என்பதைச் சொல்வதற்கே தயாராக இல்லாத ஒருவரிடம் இருந்து தெளிவானதும் உறுதியானதுமான தீர்வுத் திட்டத்தை எதிர்பார்க்க முடியாது.

அதுபோன்றே அரசியல் தீர்வு பற்றிய கேள்விக்குப் பதிலளித்துள்ள அவர், "எதை வழங்க வேண்டும், எதை வழங்கக் கூடாது என்பது எமக்குத் தெரியும். அந்த அதிகாரத்தை பொதுமக்கள் எனக்கு வழங்கியுள்ளனர். தீர்வுத் திட்டத்தைக் கோருபவர்கள், நாம் வழங்குவதைத் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்குத் தேவையானது எதுவும் இங்கு கிடைக்காது. இலங்கையில் சம~;டி முறைமைக்கு இடமேயில்லை. அனைத்து சமூகங்களும் ஒன்றித்த வகையில் வாழக்கூடிய ஒரு தீர்வு முறைமையே முன்வைக்கப்படும்"  என திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

இங்கேதான் மகிந்த ராஜபக்ஸவின் கருத்துக்களில் உள்ள முரண்பாடுகள் தெளிவாகின்றன. எதை வழங்க வேண்டும், எதை வழங்கக் கூடாதென்பது தனக்குத் தெரியும் என்று கூறும் மகிந்த, அதற்கான அதிகாரத்தை மக்கள் வழங்கியிருப்பதாகவும் கூறுகிறார். ஆனால், அரசியல்தீர்வு யோசனையை, தான் தீர்மானிக்க மாட்டாராம். மக்களிடம் இருந்தே வர வேண்டும் என்கிறார்.

தீர்மானிக்கின்ற அதிகாரத்தை மக்கள் கொடுத்திருப்பது எதற்காக என்பதைக் கூட விளங்கிக் கொள்ள முடியாத தலைவரா அவர் என்ற கேள்வி தான் எழுகிறது.

மக்கள் தனக்கு அதிகாரம் கொடுத்திருப்பதாகக் கூறும் அவருக்கு அந்த அதிகாரத்தைக் கொண்டு அரசியல் தீர்வை முன்வைக்கும் திராணி தனக்கு கிடையாது என்று கூறமுடியாது. அப்படிக் கூறுவது பொறுப்பில் இருந்து நழுவுவதாகவே இருக்கும். அதுமட்டுமன்றி அரசியல் தீர்வை இப்போதைக்கு நடைமுறைப்படுத்தும் எண்ணமும் அவருக்கு இல்லையாம்.

"தேர்தலின் மூலம் அதற்கான ஆணையை நான் பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்குப் பின்னரே அரசியல் தீர்வு நடைமுறைப் படுத்தப்படும்" எனவும் கூறியிருக்கிறார் மகிந்த ராஜபக்ஸ. இது அவரது கையில் எந்தவொரு அரசியல் தீர்வும் கிடையாது என்பதை உறுதிப் படுத்தியிருக்கிறது. அதேவேளை இன்னொரு தேர்தலுக்குப் பின்னர் மக்களாணையைப் பெற்று அரசியல் தீர்வை நடைமுறைப் படுத்தப் போவதாக அவர் கூறுவதும் சுத்தப் பம்மாத்து. 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப் போவதாக மகிந்த ராஜபக்ஸ வாக்குறுதி கொடுத்திருந்தார். அதற்கு சிங்கள மக்கள் கொடுத்த ஆணையை இப்போது அவர் மறந்து விடடார். இன்னொரு தேர்தலில் ஆணைபெற வேண்டும் என அவர் கூறுவது தேர்தல் வரைக்கும் அரசியல் தீர்வு பற்றி யாருமே பேச முடியாமல் இருக்க வேண்டும் எனும் எதிர:பார்புடன் கூடிய காலத்தை இழுத்தடிக்கின்ற ஒரு தந்திரோபாயமே.

சம~;டி என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதியாகத் தெரிவிக்கும் ஜனாதிபதியால் எத்தகைய தீர்வு யோசனையை முன்வைக்கப் போகிறார் என்பதைக் கூற முடியாதிருக்கிறது.

அதாவது சம~டியை நிராகரிக்கத் தெரிந்த அவரால் சரியானது எது என்பதை தீர்மானிக்க முடியவில்லை என்று கூற முடியாது. அவரது முழுக் கவனமும் இப்போது சிங்களத் தேசியவாதிகளைத் திருப்திப் படுத்துவதிலேயே இருகிறது.

தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்ற நோக்கம் அவரிடம் இருப்பதாகவே தெரியவில்லை. இந்த நிலை தொடருமானால் தமிழ் மக்களின் அபிலாசைகள் என்பது ……?

StumbleUpon.com Read more...

சிறீலங்கா படைகளில் 65,000 பேர் தப்பியோடியுள்ளனர்

படைகளைவிட்டு 65,000 பேர் தப்பியோடியுள்ளனர்

 

சிறீலங்கா படைகளில் இருந்து 65,000 படையினர் தப்பிச் சென்றிருப்பதாகவும், இவர்களில் 2,000 பேர் கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தப்பியோடிய படையினர் கைது செய்யப்படும்போது, அவர்கள் நீதிமன்றில் முன்னிறுத்தப்பட்டு ஒரு வருடம் வரையில் சிறையில் அடைக்கப்படுவதாக, நீதியமைச்சின் செயலர் சுகத கம்லத் தெரிவித்தார்
.

தப்பியோடிய அனைவரும் கைது செய்யப்பட்டால், அவர்களை சிறையில் அடைக்க, இடப்பற்றாக்குறை ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்
.

கைது செய்யப்பட்ட படையினர் நாட்டிலுள்ள பல சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களை தனியாக அடைத்து வைக்க சிறையொன்று தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்
.

யாழ்ப்பாணத்தில் சிறீலங்கா படைகள், மற்றும் துணைப்படைக் குழுக்களுக்கு அஞ்சி தஞ்சமடைந்துள்ள 600 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள், இவ்வாறான இடப் பற்றாக்குறையுடன் அடைத்து வைக்கப்பட்டுள்ள போதிலும், புதிய கட்டிடம் இதுவரை கட்டப்படவில்லை.

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP