சமீபத்திய பதிவுகள்

பிரபாகரனின் மரணமும் திருநாவுக்கரசின் பேட்டியும் தரும் சந்தேகங்கள்.

>> Tuesday, July 21, 2009

 
விடுதலைப் புலிகளின் மிகச் சிறந்த ஊடகவியலாளர் திருநாவுக்கரசு உயிருடன் தப்பினார் என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. விடுதலைப் புலிகளின் ஊடகங்களூடாக மிகத்தெளிவாகவும் உகந்த ஆழ அகல ஆய்வுகளுடனும் விடுதலைப் புலிகளின் நிலைப் பாட்டை மக்களுக்கு விளக்கியவர் இவர். மற்ற ஒரு சிறந்த ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி இலங்கைப் படையினரால் கொல்லப் பட்டு விட்டார்.

திருநாவுக்கரசு ஜுனியர் விகடனுக்கு சொன்னவற்றில் சில:

•எத்தகைய சூழலிலும் தோல்வி குறித்த அச்சம் அவரிடத்தில்(பிரபாகரனிடத்தில்) இல்லை. ஆனால், இறுதி நேரம் முழு நம்பிக்கையும் தகர்ந்து போகிற அளவுக்குக் கொடூரமானதாக மாறி விட்டது.
•சரணடைவதில் கடைசி வரை பிரபாகரனுக்கு விருப்பம் இல்லை. 'சரணடைவதைவிட சாவதே மேல்' என்பதுதான் அவருடைய உறுதியான எண்ணம்.
•கடைசி நேரத்திலும் வல்லமை மிக்க போராளிப்படை, பிரபாகரனைச் சுற்றி நின்றது.
•அவர் கடைசிக் கணத்தில் என்ன முடிவெடுத்தார் என்பதெல்லாம் அவரைச் சுற்றி நின்றவர்களுக்குக்கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மற்றபடி, இந்தக் கேள்விக்கு(''பிரபாகரனின் நிலை என்ன ஆனது?'') யூகமான பதிலை சொல்வது சரியானதாக இருக்காது!
•''பிரபாகரனின் பிரேதம் என சிங்கள ராணுவம் காட்டிய படம்..?''

''அதற்கு முன்னர் நான் பிரபாகரனை பார்த்திருக்கிறேன். முக அமைப்புகள் எல்லாம் அவரைப் போலவேதான் இருந்தது. ஜோடிப்பு செய்யப் பட்டிருக்கலாம் என மக்கள் மத்தியில் பேச்சிருந்தது.

•பிரபாகரன் தன்னுடைய குடும்பத்தினர் அனைவரையுமே ஈழத்து மண்ணில்தான் வைத்திருந்தார்.

•போர் மிகத் தீவிரமாக உருவெடுத்தபோது, பிரபாகரனின் மனைவி மதிவத னியை வெளியே அனுப்ப சிலர் முயற்சி எடுத்தார்கள். ஆனால் 'மதிவதனி வெளியேறக் கூடாது...' என உறுதியாக அறி வித்து விட்டார் பிரபாகரன். 'மக்கள் வேறு... குடும்பத்தினர் வேறு...' என்று அவர் ஒருநாளும் பிரித்துப் பார்த்ததில்லை.

•பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் ஆண்டனி போரில் மடிந்ததை நேரில் பார்த்தவர்களே உறுதி செய்திருக்கிறார்கள். அதே நேரம் துவாரகா, பாலச்சந்திரன், மதிவதனி ஆகியோர் என்ன ஆனார்கள் என்பது முகாமில் இருந்த எனக்கு சரிவரத் தெரியவில்லை.

•பொட்டுஅம்மான் ராணுவத்தின் கஸ்டடி யில் இருப்பதாக சொல்வதில் நிஜமில்லை!(உண்மையில்லை)
திருநாவுக்கரசு அவர்களால் எப்படித் தப்பிக்கமுடிந்தது?
பலத்த கெடுபிடிகளின் மத்தியில் இருக்கும் வன்னி முகாமில் இருந்து திருநாவுக்கரசு அவர்களால் எப்படித் தப்பிக்க முடிந்தது? இவருக்கு யார் உதவிசெய்தார்கள்? முகாம்களில் இருப்பவர்களை சிங்கள அரசுடன் சேர்ந்து இயங்கும் தமிழ் ஆயுதக் குழுக்கள் பணம் வாங்கிக்கொண்டு தப்பிச் செல்ல உதவுவதாக கதைகள் அடிபடுகின்றன! இவருக்கு அப்படி யாராவது உதவியிருக்கலாம். அல்லது அப்படிப்பட்டவர்கள் யாராவது இவருக்கு நெருங்கிய உற்வினராயிருக்கலாம்! இவற்றைவிட இவரை எஞ்சியுள்ள புலிகளிக்கு எதிராகப் பயன் படுத்த யாரவது முயற்சிக்கிறார்களா? என்ற சந்தேகமும் ஏற்படவாய்ப்புண்டு! ஆனால் விடுதலைப் புலிகளுக்கோ அதன் தலைவருக்கோ எந்தவித களங்கமும் ஏற்படுத்தக் கூடிய வகையில் இவர் பேட்டியளிக்கவில்லை. இந்த நிலை தொடரும் என நம்புவோமாக. ஆனால் ஒரு நியாயமான சந்தேகம் இங்குண்டு: தடைசெய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த இவரை ஏன் இந்திய அரசு கைது செய்யவில்லை? இதற்கான விடைக்கு நாம் பொறுத்திருக்க வேண்டும்.

அவர் கடைசிக் கணத்தில் என்ன முடிவெடுத்தார் என்பதெல்லாம் அவரைச் சுற்றி நின்றவர்களுக்குக்கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மற்றபடி, இந்தக் கேள்விக்கு யூகமான பதிலை சொல்வது சரியானதாக இருக்காது. இப்படி திருநாவுக்கரசு சொல்லும் போது வெளிநாட்டில் இருப்பவர்களால் எப்படி பிரபாகரனின் மரணத்தைப் பற்றிக் கூறமுடிகிறது?

பேட்டியில் முரண்பாடு
வழமையில் தெளிவாக எல்லாவற்றையும் ஊடகங்கள் மூலமா மக்களுக்கு விளக்கும் திருநாவுக்கரசு விகடனுக்கு வழங்கிய பேட்டியில் ஏன் முரண்பாடுகள் இருக்கிறது என்ற சந்தேகம் பின்னுள்ள இரு வாசகங்களைப் பார்த்தவுடன் ஏற்படுகிறது:
1. புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு, நிகழப்போகும் நிகழ்வுகளை முன்கூட்டியே அனுமானிக்கக்கூடிய சக்தி அதிகம்.
2. இந்தியாவைக் கடந்து அமெரிக்காவால் உதவ முடியாது என்பதை புலித் தலைவர்கள் தாமதமாக... அதாவது காலம் கடந்த பிறகே புரிந்து கொண்டனர்.
இருகருத்துக்களும் ஒன்றுடன் ஒன்று முரண்படுகின்றன.

'திருநாவுக்கரசுகூறியது: "போரின் இறுதி நேரத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் ராணுவத்திடம் சரணடைந் தார்கள்.மொத்தமாக புலிப்படையில் 24ஆயிரம் புலிகள் இருந்தார்கள். போரின்போது ஏழாயிரத் துக்கும் மேற்பட்ட புலிகள் வீரச்சாவு அடைந் தார்கள். இதுதவிர, இரண்டாயிரத்துக்கும் மேற் பட்ட புலிகள் இப்போது காடுகளுக்குள் பதுங்கி இருக்கிறார்கள். அவர்கள் மேற்கொண்டு தாக்குதல்கள் நடத்துவதற்கு இப்போதைக்கு சாத்தியங்கள் ஏதுமில்லை. அவர்களை ஒருங் கிணைக்க இப்போதைக்கு வழியுமில்லை."
இக்கூற்றில் கணக்கு உதைக்கிறது! 5000 புலிகளுக்கு என்ன நடந்தது? அது மட்டுமல்ல திருநாவுக்கரசு இங்கு காட்டிக் கொடுத்துவிட்டார். சனிக்கிழமை இப்பேட்டி வெளிவந்தது. வெளிவந்த சில மணித்தியாலங்களில் இலங்கை விமானப் படை காட்டுப் பகுதிகளில் குண்டுகள் வீசின. இவர் 2000 புலிகளை காட்டிக் கொடுத்துவிட்டார். பேட்டியின் இப்பகுதியைத் தவிர்த்திருக்கலாம்.

வேல் தர்மா

StumbleUpon.com Read more...

Ithretholam jayam thanna daivathinu

StumbleUpon.com Read more...

முக்கிய செய்திகளை அறிந்துகொள்ளுங்கள்


 1,128 நக்சலைட் வன்முறைச் சம்பவங்கள் கடந்த ஆறு மாதங்களில் இந்தியாவில் நடந்து உள்ளன! 


1,276சிறைகள் நாடு முழுவதும் உள்ளன! 


1,23,34,987 பேர்-தமிழகத்தில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை!


37 ரூபாயை மாதம் ஒன்றுக்கு தனிநபர் மருத்துவத்துக்காக இந்திய அரசு செலவு செய்கிறது! 



39,000 கண்கள் ஆண்டுதோறும் இந்தியாவில் தானம் செய்யப்படுகின்றன!



6,450 இந்தியர்கள், உலகம் முழுவதும் உள்ள வெளிநாட்டுச் சிறைகளில் கைதிகளாக உள்ளனர்!
 
 
நன்றி:விகடன்
 

StumbleUpon.com Read more...

நான் சர்வாதிகாரியா? பேசுகிறார் பிரபாகரன்!

 

 
 

பி.பி.சி.ஆனந்தி அக்கா-சந்திரகாந்தன் மதிய உணவு உரையாடல் முழுக்க தமிழீழ விடுதலைப்போராட்டத்தையே மையமாகக் கொண்டிருந்தது. சந்திரிகா- புலிகள் குறுகிய கால சமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில் வன்னிக்குச் சென்று வந்திருக்கிறார் ஆனந்தி அக்கா. ""தலைவரெ பார்த்து சில கேள்விகள் கேட்கணு மென்டுதான் நானும் போனேன். ஆனா அங்கு கட்டி வச்சிருக்கிற "செஞ்சோலை' குழந்தைகள் இல்லத்தைப் பார்த்த பிறகு எனக்குள்ளேயே என்னையுமறியாத ஒரு மாற்றம். என்ட மனக்கசடுகளெல்லாம் கழுவப்பட்டு புதுசா பிறந்த மாதிரியான உணர்வு. வன்னியிலிருந்து திரும்பி பி.பி.சி வந்து "செஞ்சோலை' பற்றி நிகழ்ச்சி தயாரித்தபோது "என் தெய்வம் வாழும் திருக்கோயில் நின்றேன்' என்டுதான் தலைப்பிட்டேன்'' என்றார். தொடர்ந்தவர், ""பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவியப்பா. என்ன வசீரமென்டே விளங்கெயில, நேரா சந்திச் சீங்களெண்டா அப்படியொரு குழந்தைத்தனம் இருக்கும். நானும் "சனத்துக்கு இவ்வளவு கஷ்டம் ஏன்? உங்க ளாலெதானே' என்டெல்லாம் கேட்கணுமென்டுதான் போனேன். ஆனால் நேரா பார்க்கேக்க நினைச்சு பார்க்கேலாத உரிமையும் பாசமும் வந்திடுது'' என்றார்.

உண்மையில் அரு கில் பார்க்க வேலுப் பிள்ளை பிரபாகரன் அப்படித்தான். அச் சுறுத்தும், யோசிக்க வைக்கும் முகபாவனை களை சல்லியளவும் அவ ரிடம் நீங்கள் காணமாட் டீர்கள். குழந்தைத்தன மானதொரு வசீகரம் வேட மின்றி நிழலாடிக்கொண்டே இருக்கும். நான்கூட அவரை சந்தித்தபோது எழுதிக்கொண்டு போகாத எடக்கு மடக்கான கேள்விகளை யெல்லாம்கூட துணிவாகக் கேட்கத் தொடங்கி விட்டேன். ஏதோ துணிவை வரவழைத்துக் கொண்டு கேட்டேன் என்று சொல்வதுகூடத் தவறு. இயல்பாக உரையாடி, அளவளாவி, வாதிட்டு சண்டையிடும் இறுக்கமற்ற சூழமைவை அவரது மென்மையான ஆளுமை உருவாக்குகிறதென்பதுதான் உண்மை.

ஜனநாயகரீதியான தேர்தல்களில் மக்களைச் சந்திக்கிற துணிவு விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இருக்கிறதா?'' என்று அவரிடம் கேட்டேன். அவர் பின்வாங்குவார் என்றுதான் நான் எதிர்பார்த்தேன். அவரோ தெளிவாகச் சொன்னார். ""அதுபற்றின எந்த தயக்கமும் எங்களுக்கு இல்லை. சமீப காலங்களில் இங்கு நடந்த தேர்தல்களில்கூட விடுதலைப்புலிகள் இயக்கம் ஆதரித்த கூட்டணிதான் மக்களால் அங்கீகரிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் இன்று ராணுவ ஆட்சிக்குள் இருக்கின்ற போதும்கூட எங்களுக்கு ஆதரவான "பொங்குதமிழ்' நிகழ்ச்சியெல்லாம் பல்கலைக்கழகத்திற்குள்ளேயே நடக்கிறது. இவற்றிலெல்லாம் சந்தேகமிருந்தால் இப்போகூட ஒரு தேர்தலை வைத்துப் பாருங் கள். மக்கள் மத்தியில் எங்களுக்கு ஆதரவு இருக்கிறதா, இல் லையா என்பதை நிரூபிப் பதற்காக நாங்களும் அத்தேர் தலில் நிற்போம்'' என்றார்.

அவருடைய நேர்மை யான சந்தேகத்திற்கிடமற்ற பதில் எனக்கு வியப்பாயிருந் தது. இறுக்கமற்ற சூழல் எனது கேள்வி கேட்கும் சுதந்திரத்திற் கான தளத்தை எல்லையின்றி விரிவாக்கியிருந்ததாய் உணர்ந்தேன். அந்த உணர்வில் விடாது கேட்டேன், ""ஜனநாயக ரீதியான மக்கள் போராட்டங்களை விடுதலைப் புலிகள் இயக்கம் வரவேற்குமா, அது விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கெதிரான போராட்டமாக இருந்தாலும்கூட?'' அதற்கும் அவர் தயங்காமல் "நிச்சயமாக' என்றார். ""மக்களை அழைத்துப்பேசி எனன பிரச்சனையென்பதை அறிந்து அதை சரி செய்வோம்'' என்றார்.

நான் நிறுத்தவில்லை. ""புலிகள் ஜனநாயக மற்றவர்கள், சர்வாதிகாரிகள், மாற்றுக் கருத்தை சகிக்க முடியாதவர்கள்'' என்ற உலகப்பார்வைக்கு ஒரு பதிலை அவரிடமிருந்தே பெற்று பதிவு செய்யவேண்டும் என்ற உறுதியோடு கேட்டேன். ""நாளை கிளிநொச்சியில் மக்கள்கூடி "விடுதலைப் புலிகள் ஒழிக! "வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற சர்வாதிகாரி ஒழிக!' என்றெல்லாம் முழக்க மிட்டுப் போராடுகிறார்களென்று வைத்துக் கொள்வோம் அவர்களை எப்படி அணுகு வீர்கள்?'' என்றேன். இக்கேள்விக்காவது கொஞ்சம் கோபப்படுவார். குறைந்தபட்சம் முகம் கோணு வார் என்று எதிர்பார்த்தேன். அப்போதும் அவர் பொறுமையாகவே பதில் சொன்னார். ""அப்படியான நிலை வந்தாலும்கூட அவர்களை சந்தித்து அவர்களுடைய பிரச்சனைகளைத் தீர்ப்போம். முன்பு இப்படியான சில அதிருப்தி கள் எழுந்தபோதெல்லாம் அவற்றை பேசி நிவர்த்தி செய்திருக்கிறோம். நாங்கள் சர்வாதி காரிகள் இல்லை என்பதும் நீங்கள் சொல்வது போன்று எங்களுக்கும் மக்களுக்குமிடையே இடைவெளி இல்லை என்பதுதான் உண்மை'' என்றார்.

இதற்குப் பின்னரும்கூட நான் அவரை விடவில்லை. ""உங்களுடைய போராளிகள் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறி குற்றம் புரிந்தால் என்ன செய்வீர்கள்?'' என்று கேட்டேன். உள்ளார்ந்த தன் னம்பிக்கையோடு அவர் பதில் சொன்னார் : ""பொதுவில் போராளிகளுக்கும் மக்களுக்கு மிடையேயான உறவு ஆழமானது. மக்கள் தலைமை மீது கொண்டி ருக்கும் நம்பிக்கையும் உறுதி யானது. சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு போராளிகள் பொதுமக்களை அடித்தால்கூட "தலைவர் உங்களை இப்படி அடிக்கச் சொல்லித் தந்தவரோ?' என்றுதான் கேட் பார்கள். அந்தளவுக்கு தலைமை மீது மக்களுக்கு நம்பிக்கை உண்டு. அதேவேளை போராளியாக இருப்பவர் தனது ஆயுதங்களைத் தவறாகப் பயன்படுத்தி னால் அவரை அமைப்பிலிருந்து நீக்கி எமது தமிழீழ சிவில் நிர்வாக காவல்துறையிடம் ஒப்படைத்து விடுவோம். காவல்துறை அவரை சிவில் சட்டங்களின் படி விசாரணைக்கு உட்படுத்தி தண்டனை வழங்கும். இப்படித்தான் எங்கள் அமைப்பு முறை உள்ளது.''

உள்ளபடியே விடுதலைப்புலிகளின் சிவில் நிர்வாகம் கட்டுக்கோப்புடன் நடந்து வந்ததற்கான காட்சித் தெறிப்புகளையும் நான் வன்னியில் இருந்தபோது கண்டேன். கொழும்பிலிருந்து பழக்க மான நண்பர் ஒருவரது பஜேரோ வாகனத்தில்தான் நான் கிளிநொச்சி சென்றிருந்தேன். எனக்கு வாகனம் ஓட்டுவது, அதுவும் ஜப்பான் தயாரிப்பு வாகனங்க ளென்றால் ரசித்து ஓட்டுவேன். கொழும்பிலிருந்து வவுனியாவரை ஓட்டுநர் ஓட்டி வந்தார். அதற்குப் பிறகு ஓமந்தையில் புலிகளின் குடிவரவு சுங்கப் பிரிவு தாண்டியபின் நானே ஓட்டினேன். கிளிநொச்சி நகர் எல்லை தொடங்கி வேகத்தடை 40 கி.மீட்டருக்குள் என இருந்தது. நான் சற்று வேகமாகவே ஓட்டி வந்தேன். தமிழீழ காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, "ஏன் இந்த வேகத்தடை ஒழுங்கு, கடந்த ஒருமாதத்தில் மட்டுமே இரண்டு பள்ளிக்குழந்தைகள் விபத்துகளில் உயிரிழக்க நேர்ந்தது ' என விளக்கி பொறுமையாய் அறிவுறுத்தி அனுப்பினார்கள். என்னோடு வாகனத்தில் இருந்தவர் புனர்வாழ்வுக்கழக தலைவர் ரெஜி. அவரை அங்கு எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆயினும் அதைப்பற்றியெல்லாம் அவர்கள் அக்கறைப்படவில்லை. கடமையைப் பணிவுடனும் பண்புடனும் செய்தார்கள்.

எனது கெட்ட நேரம்... திரும்பி வரும் போதும் அதே காவலரிடம் சிக்கிக்கொண்டோம். நல்லவேளை நான் ஓட்டவில்லை. அப்போதும் ரெஜி உள்ளிருந்தார். ""இரண்டாம் முறையாக இந்த வாகனம் தவறு செய்கிறது. ரெஜி, உமக்கு இங்கே யுள்ள ஒழுங்குகள் தெரியும்தானே? இன்னும் ஒரு முறை இப்படி நடந்தா அபராதம் விதித்து வழக் குப்பதிவு செய்யவேண்டி வரு''மென எச்சரித்தார்.

புலிகள் ஏதோ சர்வாதிகார ராணுவ பயங்கரவாத ஆட்சி நடத்தினார்களென்ற பொய் பரப்புரையின் மாயத்திரைகள் எனது கண்முன்னே கிழிந்து அகன்றுபோன நாட்கள் அவை.

வன்னியில் நான் இருந்தபோது அறிந்து கொள்ள ஆர்வம் காட்டிய மற்றொரு விஷயம் சந்திரிகா அம்மையாரின் ஐந்தாண்டு கால தொடர் யுத்தம் மற்றும் நீக்குப்போக்கில்லா பொருளாதாரத் தடையிலிருந்து எப்படி 5 லட்சம் மக்களை புலிகள் காப்பாற்றினார்கள் என்பது. அப்போதைய அரசியல் பிரிவு பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களிடம் இதுபற்றிக் கேட்டேன். ""எல்லாமே தலைவரின் தீர்க்கதரிசனம்தான் ஃபாதர். சந்திரிகா பாரிய யுத்தமொன்று தொடங்குவாரென்பதும், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு அந்த யுத்தம் தொடருமென்பதும் தலைவருக்குத் தெரிந்திருந்தது. எங்களையெல்லாம் அழைத்து முதலில் அவர் கதைத்தது மக்களுக்கான உணவு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு பற்றித்தான். அதன்படி எங்கள் கட்டுப்பாட்டிலுள்ள விவ சாயம் செய்யத் தகுதியுள்ள நிலங்களையெல்லாம் துல்லியமாகப் பட்டியலிட்டோம். பணப்பயிர் களை தடை செய்தோம். விதை நெல்கள் சேமித் தோம். இயற்கை உரங்களுக்குப் பழகினோம். பூச்சிக்கொல்லிகளை இயற்கையாக எதிர்கொள் ளும் வழிகளை கற்றறிந்து செயற்படுத்தினோம்... சொன்னால் நம்பமாட்டீர்கள் இவற்றையெல்லாம் நாங்கள் அதிகமாக அறிந்துகொண்டது உங்கட தொலைக்காட்சியின் "வயலும் வாழ்வும்' நிகழ்ச்சியைக் கேட்டுத்தான். அதோட 5 லட்சம் சனத்துக்கும் தேவையான வைட்டமின், புரதச் சத்து தேவைகளுக்கேற்றபடி பிற காய்கறி வகை களையும் விவசாயம் செய்ய வைத்தோம். இப்ப டித்தான் சந்திரிகா அம்மையாரின் கொடுமை யான இரக்கமற்ற பொருளாதாரத் தடையினை எதிர்கொண்டு வெற்றி கண்டோம்'' என்றார். நீண்ட யுத்த காலத்தில் பஞ்சம் பட்டினியிலிருந்து மக்களைக் காப்பதென்பது எளிதான விடயமே அல்ல. ஆனால் அதனை புலிகள் திறம்படச் செய்தார்களென்பது வியப்புத் தந்ததென்றால் நாம் பெரிதாகப் பாராட்டாத வயலும் வாழ்வும் நிகழ்ச்சி அவர்களுக்கு உதவியதென்பதை அவர்கள் வாயால் கேட்க சிலிர்ப்பாகத்தான் இருந்தது. பெரும் பட்டினிச் சாவினை தவிர்க்க நமது "வயலும் வாழ்வும்' உதவியதென்பது பெருமைதானே? இவற்றையெல்லாம் நான் இங்கு எழுதக் காரணம் புலிகளை வன்முறையாளர் களாகவே சித்தரித்த இந்திய ஊடகங்கள், அவர் கள் விவசாயம், அமைப்பு நிர்வாகம், கலை- பண்பாடு, நீர்வள மேலாண்மை இன்னபிற துறைகளுக்கு ஆற்றிய அளப்பரிய பங் களிப்புகளை திட்டமிட்டே இருட்டடிப்பு செய்ததை கோடிட்டுக் காட்டவும்தான்.

உட்கார்ந்து உரையாடும் வெகு யதார்த்தமான, சுவாரஸ்யமான மனிதர் வேலுப்பிள்ளை பிரபாகரன். அப்படித் தான் இயக்கத்திலும் சமூகத்திலும் எழுந்த பல சிக்கல்களையும், முரண்பாடுகளையும் அவர் தீர்த்து வைத்திருப்பார் என நான் எண்ணுகிறேன்.

ஒருநாள்...

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP