சமீபத்திய பதிவுகள்

மனித உடலின் உள் அமைப்பைக் கண்டுபிடித்தவர்

>> Saturday, October 10, 2009

 
பதினாறாம் நூற்றாண்டு வரை பெரும்பாலான மருத்துவர்கள் மனித உடலின் உள் அமைப்பைப் பற்றி அதிகம் அறியாமலே இருந்தனர். அதுவரை, தசைகள் மற்றும் எலும்புகள் பற்றி முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க மருத்துவரான கேலன் எழுதி வைத்த குறிப்புகளையே அவர்கள் பின்பற்றி வந்தனர்.


கேலனின் கருத்துகளை முதன்முதலில் மறுத்தவர், பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரியாஸ் வெசாலியஸ்தான். பாரீசில் மருத்துவ மாணவராக இருந்தபோது, அவராகவே நேரடியாக ஆராய்ந்து மனித உடலின் உள்கட்டமைப்பு பற்றிய தகவல்களைத் தெரிந்து கொண்டார். அந்தக் காலகட்டத்தில் பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பாவின் பல பகுதிகளில் மனித உடலை வெட்டிப் பகுப்பதற்குத் தடை இருந்தது. எனவே கல்லறைகளில் எலும்புக்கூடுகளைத் தோண்டியெடுத்து அவற்றின் எலும்புகளை ஆராய்ச்சி செய்தார் வெசாலியஸ்.

ஒருமுறை, பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டு அழுக விடப்பட்ட ஒரு மனிதனின் எலும்புக்கூட்டை வெசாலியஸும் அவரது நண்பரும் திருடினர். அதன்பின் வெசாலியஸ் பல மணி நேரம் அதை ஆராய்ச்சி செய்து, எலும்புக் கூட்டின் அமைப்பைப் படமாக வரைந்துகொண்டார்.

வெசாலியஸ் தனது இருபதாவது வயதின் தொடக்கத்தில் இத்தாலியில் உள்ள படுவா பல்கலைக்கழகத்தில் மனித உடலமைப்பு மற்றும் அறுவை சிகிச்சைத்துறை பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அவர் பாடம் நடத்தும்போது, மனித சடலங்களை நேரடியாக வெட்டிப் பகுத்துக் காண்பிப்பது வழக்கம். (அப்போது சடலங்களை வெட்டுவதற்கான தடைச் சட்டம் இத்தாலியில் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்படவில்லை.) அதனால் மிகவும் பிரபலமான வெசாலியஸிடம் ஐரோப்பா முழுவதிலும் இருந்து ஏராளமான மாணவர்கள் வந்து சேர்ந்தனர்.

வெசாலியஸ் தனது ஆசிரியப் பணிக்கு இடையே ஆராய்ச்சியையும் தொடர்ந்தார். அவர் 1543-ம் ஆண்டில் புத்தகம் ஒன்றை வெளியிட்டார். அப்போது அவருக்கு சுமார் 30 வயதுதான் இருக்கும். அந்த நூலின் பெயர், `டி கார்போரிஸ் ஹிïமானி பேப்ரிகா' என்பதாகும். அதாவது, `மனித உடலின் அமைப்பு' என்று அர்த்தம். கேலனின் கருத்துகள் பலவற்றை தவறு என அந்தப் புத்தகம் சுட்டிக் காட்டியதால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் அப்போது இருந்த அறிவுஜீவிகள் வெசாலியஸியன் கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொள்ள மறுத்ததுடன், அவருடைய பெருமையைக் குலைக்கும் வண்ணம் தகாத வார்த்தைகளால் இகழ்ந்து பேசியதால், வெசாலியஸ் தான் பார்த்துக் கொண்டிருந்த பேராசிரியர் வேலையை ராஜினாமா செய்தார். மனம் வெறுத்துப்போய், மனித உடல் அமைப்பு பற்றிய ஆராய்ச்சியையும் வெசாலியஸ் கைவிட்டார்.

ஆனாலும் வெசாலியஸ் எழுதிய அந்த ஒரு புத்தகமே அறிவியல் உலகில் அழியாத புகழை அவருக்குப் பெற்றுத் தந்தது. பல்வேறு விதமான எலும்புகள் மற்றும் தசைகளின் இயற்கை அமைப்பை மிகவும் நுட்பமாகவும், தெளிவாகவும் விளக்கும் முதலாவது நூலாக அது அமைந்தது. அற்புதமான அழகுடன் திகழ்ந்த மனித உடல் அமைப்பு ஓவியங்களை வெசாலியஸுக்கு உதவியாகத் தீட்டியவர் அவரது ஒரு மாணவர்.

காலம்காலமாகப் பின்பற்றப்பட்ட கேலனின் கருத்துகளைத் தகர்த்தெறிந்துவிட்டு நவீன மனித உடல் அமைப்பைத் தெரிந்து கொள்ள வெசாலியஸ் எழுதிய `பேப்ரிகா' நூல் உதவியது.

source:thinathanthi

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

நடிகைகளின் அங்க அவயவங்களை வெளிச்சம்போட்டுக் காட்டி, தங்களது விற்பனையை அதிகரித்துக் கொள்வதுடன் பத்திரிகைகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்


 
ஒரு தமிழர் உலக சாதனை படைத்திருக்கிறார். இந்தியர் ஒருவருக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கிறது. அதைப் பற்றி எழுதாமல் சமுதாயத்துக்கு எந்தவிதத்திலும் பயனில்லாத ஒரு விஷயம் பற்றி எழுத வேண்டிய துர்பாக்கியத்தை நினைத்து நொந்து கொள்வதைத்தவிர வேறு என்ன வழி?

நல்ல விஷயம் பற்றி எழுத நாலு நாள் தள்ளிப்போகலாம். ஆனால் தவறுகள் உடனடியாகச் சுட்டிக்காட்டப்பட வேண்டும். இல்லையென்றால் தவறான முன்னுதாரணம் உருவாகிவிடும்.

பத்திரிகைகள் வியாபார நோக்கத்துடன் செயல்படுகின்றன என்பதையும், சமுதாயத்துக்குப் பயனில்லாத விஷயங்களுக்கு முன்னுரிமை அளித்து வெறும் பரபரப்பை மட்டுமே நம்பிச் செயல்படுகின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. எல்லாத் துறைகளிலும் உள்ளதுபோலவே பத்திரிகைத் துறையிலும் தரக்குறைவு ஏற்பட்டிருப்பது உண்மை.

சமீபத்தில் ஒரு பத்திரிகையில் புகைப்படங்களுடன் வெளியிடப்பட்ட திரையுலகப் பிரமுகர்கள் சம்பந்தப்பட்ட செய்தி, எந்தவிதத்திலும் சமுதாய வளர்ச்சிக்கும், மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கப் போவதில்லை என்பது தெளிவு. இப்படிச் செய்திகள் பிரசுரிக்கப்படுவது கண்டனத்துக்குரியது என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.

திரைப்பட நடிகைகளின் ஒழுக்கத்தைப் பொது விவாதமாக்குவதால் யாருக்கு என்ன லாபம்? அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கவோ, அவர்களது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தவோ பத்திரிகைகளுக்கு யார் அதிகாரம் அளித்தது? பெரிய, பெரிய வண்ணப்படங்களைப் போட்டு நடிகைகளின் அங்க அவயவங்களை வெளிச்சம்போட்டுக் காட்டி, தங்களது விற்பனையை அதிகரித்துக் கொள்வதுடன் பத்திரிகைகள் நிறுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, இதுபோல வரம்புமீறி விமர்சனம் செய்யும் உரிமை பத்திரிகைகளுக்குக் கிடையாது.

அதேநேரத்தில், நடிகைகளின் படங்களை ஆபாசமாகப் போட்டு பெண்ணினத்தையே வெறும் போகப்பொருளாகக் காட்ட முயலும்போதெல்லாம் பாயாத பெண்கள் வன்கொடுமைக்கு எதிரான சட்டம், சம்பந்தப்பட்ட செய்திக்காகப் பயன்படுத்தப்பட்டிருப்பது விசித்திரமாக இருக்கிறது. நடிகைகள் தங்களது ஒழுக்கத்தைப் பற்றிய விமர்சனத்துக்காக அந்தப் பத்திரிகையின்மீது தனித்தனியாக அவதூறு வழக்குப் போடலாமே தவிர, பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் எப்படி, ஏன், எதற்காக இந்தப் பிரச்னையில் கையாளப்பட்டிருக்கிறது என்பது புதிராக இருக்கிறது.

நடிக, நடிகையர் ஒன்றுகூடி நடிகர் சங்க வளாகத்தில் நடத்திய கூட்டத்தில், பத்திரிகையாளர் பற்றிய விமர்சனங்களும், செவிகூசும் வார்த்தைகளால் சில பிரபல நடிக, நடிகையர் நடத்திய சொல்அபிஷேகங்களும் அவரவர் தரத்தையும் கலையுலகத்தின் தராதரத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. நா கூசாமல் பேசும் இவர்களுக்கு, நாசூக்கான விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ளும் சக்திகூடக் கிடையாது என்பது ஊரறிந்த உண்மை.

பிராந்திக்கும், பிரியாணிக்கும், பணத்துக்கும் விலைபோகிறவர்கள்தான் பத்திரிகையாளர்கள் என்று பொத்தாம்பொதுவாக நடிக, நடிகையர் விமர்சிக்கலாம் தவறில்லை. காரணம், அவர்கள் கலைச்சேவையில் ஈடுபட்டிருப்பவர்கள். தங்களது செய்திகளும், படங்களும் பிரசுரமாவதற்காக இவர்கள் தயாரிப்பாளர்களின் செலவில் மேலே குறிப்பிட்ட தானதர்மங்களை அல்லது கையூட்டல்களைக் கொடுக்கலாம் தவறில்லை. காரணம் அவர்கள் கலைச்சேவையில் ஈடுபட்டிருப்பவர்கள். இது ஈயத்தைப் பார்த்து பித்தளை இளித்த கதை என்று யாரும் கருதலாகாது. காரணம் அவர்கள் கலைச்சேவையில் ஈடுபட்டிருப்பவர்கள்.

கலையுலகம், கலையுலகம் என்று கூக்குரலிடும் இன்றைய கலையுலகத்தின் சமுதாயப் பங்களிப்புதான் என்ன? ஒட்டுமொத்த தமிழ் சினிமாவால் ஆண்டொன்றுக்குச் செய்யப்படும் மொத்த விற்றுமுதல் (பன்ழ்ய்ர்ஸ்ங்ழ்) எவ்வளவு தெரியுமா? சுமார் நூறோ, இருநூறோ கோடிகள். அதுவும் பெரிய படங்கள் வந்தால் மட்டுமே. திருப்பூரிலும் சிவகாசியிலும் இருக்கும் பல தனியார் நிறுவனங்களின் வருட வருமானம்தான் சினிமாத்துறையின் ஒட்டுமொத்த விற்றுமுதல்!

ஆனால் ஊடகங்களில் கலைத்துறையினருக்கு அளிக்கப்படும் முக்கியத்துவமோ பல மடங்கு அதிகம். இவர்களது கலைச்சேவையால் மொழி வளர்ச்சி அடைகிறதா? நமது கலாசாரம் மேன்மையடைகிறதா? சமுதாயப் பிரச்னைகள் முன்னுரிமை பெறுகின்றனவா? நாளைய தலைமுறைக்கு நல்ல பல கருத்துகளை முன்வைத்துக் கடமையாற்றுகிறதா? வரிவிலக்குக்காக தமிழில் பெயரை வைத்துவிட்டு தமிழையும் தமிழனின் கலாசாரத்தையும் சீரழிப்பதைத்தவிர இவர்களது கலைச்சேவைதான் என்ன என்று யாராவது விளக்கினால் நலம்.

அரிதாரம் பூசும் நடிகர்கள், தங்களது துறையில் ஈடுபட்டிருக்கும் கடைநிலை ஊழியர்களுக்காகவும், ஏனைய தொழில்நுட்பக் கலைஞர்களுக்காகவும் எந்தவிதத்தில் எந்த அளவுக்கு உதவுகிறார்கள் என்பதை அவர்களது மனசாட்சியே கூறும். இவர்கள் மற்றவர்களைக் குறை கூறுவதற்கு முன்னால் தங்களது முகத்தைத் தாங்களே ஒருமுறை கண்ணாடியில் பார்த்துக்கொள்வது நலம். நடிகரானாலும் நடிகையானாலும் இவர்களது சாதனைகளின் அடிப்படை எழுத்தாளர்களின் கற்பனாசக்தியும் பேனா வலிமையும்தான். நல்ல கதை அமையாத திரைப்படங்கள் நடித்தது யாராக இருந்தாலும் ஓடுவதில்லை என்பதுதான் திரையுலக சரித்திரம் கூறும் உண்மை.

பத்திரிகைகள் தரம் தாழ்ந்து செய்திகளை வெளியிடுவது கண்டனத்துக்குரியது. நடிக, நடிகையர் வரம்புமீறி ஒட்டுமொத்தப் பத்திரிகையாளர்களையும் கொச்சைப்படுத்துவதும் கண்டனத்துக்குரியது. துணிவிருந்தால் இருசாராருமே மற்றவரைச் சாராமல் வாழட்டுமே, அதற்குத் தயாரா? இவர்கள் பிராந்தி, பிரியாணி, பணம் கொடுக்கவும் வேண்டாம். அவர்கள் வாங்கவும் வேண்டாம். செய்வார்களா?

பத்திரிகையில் வெளிவரும் செய்தி தவறானால் அவதூறு வழக்குத் தொடரலாமே தவிர, சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்வது எப்படி நியாயம்? ஒரு பத்திரிகைச் செய்திக்காக செய்தி ஆசிரியரை எப்படிக் கைது செய்யலாம்; அதுவும் பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில்? ஒரு தவறான முன்னுதாரணம் உருவாக்கப்பட்டிருக்கிறதே அது ஏன்? எந்தவிதத்திலும் சமுதாயத்துக்குப் பயனில்லாத ஒரு விஷயம் விவாதப் பொருளாகியிருப்பது வேதனையிலும் வேதனை!



-- 
www.thamilislam.co.cc
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ஓபாமாவுக்கு நோபல் பரிசு ஒரு கேடா?



நோபல் பரிசுக்கு ஓபாமா தகுதியானவரா?



நோபல் பரிசு ஒரு துறையில் சாதித்தவர்களுக்கு கொடுக்கப்படுவதை நாம் அறிந்ததே.

ஆனால் ஓபாமா என்ற பதம் உலக அரங்கில் ஒலிக்கத் தொடங்கியதே கடந்த வருடம் அமேரிக்க தேர்தலை முன்னிட்டுதான்.அதிலும் மிகப்பெரிய இரட்சகனாக,சூப்பர் மேன்,ஜேம்ஸ் பாண்ட்,ஸ்பைடர் மேன் போன்ற கதகளின் கதாநாயகர்களை போல திடிர் என்று வந்து உலக மக்களை குறிப்பாக அமெரிக்க மக்களை பெரிய விடிவுக்குள்ளாக கொண்டு செல்வார் என்ற பகல் கனவுகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தகர்ந்து இந்த நிலையில் அமைதிக்கான நோபல் பரிசை அவருக்கு அளித்து அந்த பரிசின் நல்ல நோக்கத்துக்கு கழங்கம் விளைவித்துள்ளானர்.

அப்படி ஓபாமா சாதித்தது என்ன?

ஈராக்கில் இருந்து படைகளை வாபஸ் பெற்றுவிட்டாரா?

ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை வாபஸ் பெற்றுள்ளாரா?

அல்லது பாக்கிஸ்தானுக்கான ஆயுத உதவிகளை நிறுத்தியுள்ளாரா?

ஈரான் மீது அழுத்தம் கொடுப்பதை குறைத்துள்ளாரா?

எல்லாவற்றையும் விட ஆயிரக்கணக்கான தமிழர்களை சிங்களக் காட்டேரிகள் கொன்று குவித்ததை தடுத்தாரா?

இல்லை அடிமைகள் போல் அகதி முகாமில் வாழும் மக்களை விடுவிக்க தைரியமாக அழுத்தம் கொடுத்தாரா?

இவை எதுவுமே செய்யாத ஒரு புண்ணியவானுக்கு நோபல் பரிசு ஒரு கேடா?

 
ஏன் அமேரிக்க பொருளாதாரத்தை என்ன தூக்கி நிறுத்திவிட்டார இவர்?


எதுவுமே இல்லை,இல்லை,இல்லை என்பதுதான் பதில் 

ஒரு குட்டி நாடான இலங்கையை தட்டிக்கேட்க கூட தைரியம் இல்லாத இவருக்கு நோபல் பரிசு ஒரு கேடா?


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

நாங்கள் இங்கு இறக்கப் போகிறோம், எங்களை விடுவியுங்கள் :பி.பி.ஸி. செய்தியாளர் விவரிப்பு

நாங்கள் இங்கு இறக்கப் போகிறோம், எங்களை விடுவியுங்கள் என்ற குரலே முகாம் முழுவதிலும் கேட்கிறது: பி.பி.ஸி. செய்தியாளர் விவரிப்பு


bbc_news_channela_512குடிப்பதற்கு அல்லது குளிப்பதற்கு நீர் இல்லை. நாங்கள் இங்கு இறக்கப் போகிறோம். மெனிக் பார்ம் முகாம் எங்கிலும் எங்களை விடுவியுங்கள் என்ற பரிதாபக்குரலே முகாமகள் எங்கும் கேட்கிறது என, பிரிட்டனின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் மைக் டொஸ்டருடன் அங்கு விஜயம் மேற்கொண்ட பி.பி.ஸி.செய்தியாளர் சார்ள்ஸ் ஹவிலான்ட் தெரிவித்துள்ளார்.

அரசு இந்தப் பிரச்சினைகளைத் தீவிரமாக எடுக்கவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர் எனத் தெரிவித்துள்ள பி.பி.ஸி செய்தியாளர் இது குறித்து மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:

முகாமின் உட்கட்டமைப்பு குறித்து நெருக்கமாக அவதானிப்பதற்கு பி.பி.ஸிக்கு கிடைத்த முதல் வாய்ப்பு இதுவாகும். மெனிக் பார்மில் உள்ள வலயங்களில், வலயம் 2 அதிகளவு சன நெரிசல் கொண்டது. இங்கு தொடர் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் பருவப் பெயர்ச்சி மழை காலத்தில் வெள்ளத்தைத் தடுப்பதற்கு இது உதவும் என அரசு தெரிவிக்கின்றது. உள் வீதிகளில் சிறிய கடைகளைக் காண முடிகின்றது. முகாமில் உள்ளவர்கள் சிறிதளவு பணம் சம்பாதிப்பதற்கு கிடைத்த சிறிய வாய்ப்பே இந்தக் கடைகள். நிலக்கண்ணி வெடிகள் உள்ள பகுதிகளுக்கு மக்கள் செல்லமுடியாது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனினும் முகாமில் உள்ளவர்களுடன் நாம் உரையாடிய ஐந்து நிமிடங்கள் மிகவும் வேதனையளிப்பனவாக அமைந்தன.

15 தடவைகள் இடம்பெயர்ந்தோம்

பெண்ணொருவர் எமது காரின் கண்ணாடி ஊடாகப் பேச ஆரம்பித்தார். பின்னர் ஒவ்வொருவராகத் தமது நம்பிக்கையற்ற கதைகளைத் தமிழில் தெரிவித்தனர். ஒவ்வொருவரும் ஒலிவாங்கியில் பேச விரும்பினர். எனினும் அவர்களிடம் கேள்வி கேட்பதற்கோ அல்லது அவர்களுடைய குடும்பங்கள் பற்றி விசாரிக்கவோ அவகாசம் இருக்கவில்லை. கடந்த மூன்று வருட காலப்பகுதியில் தாங்கள் 15 தடைவைகள் இடம்பெயர்ந்துள்ளனர் எனவும், தற்போது 24 பேருடன் கூடாரமொன்றில் வாழ்கின்றனர் என்றும் பெண்ணொருவர் தெரிவித்தார். இப்படி எவ்வாறு வாழ்வது என்பது எனக்குத் தெரியாது. எம்மை இதைவிடச் சிறந்த இடத்துக்கோ அல்லது எமது வீடுகளுக்கோ தயவு செய்து திருப்பி அனுப்புங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

எம்மால் அவர்களை எப்படியாவது வீடுகளுக்கு திருப்பி அனுப்பமுடியும் என்ற பரந்துபட்ட கருத்து அவர்களிடம் காணப்பட்டது. அது இயலாது என்று அறிந்து நம்பிக்கையின்மையால் எழுந்த கதறலாகக் காணப்பட்டது.

எதுவுமே இடம்பெறாததால் நாங்கள் வேதனையடைந்துள்ளோம்.

கல்வி கற்கும் குழந்தைகளுக்குக்கூட எதுவும் இல்லை. பென்சில், பேனா, புத்தகம் எதுவுமில்லை என்றும் குடிதண்ணீரோ குளிப்பதற்கு நீரோ இல்லை. நாங்கள் இங்கேயே மரணிக்கப் போகிறோம் என அவர்கள் தெரிவித்தனர்.தமக்கு வழங்கப்படும் உணவை அனைவரும் காண்பித்தனர்.

சமைப்பதற்கு பானைகள் கூட இல்லை. பருப்பு, அரிசி, கோதுமை மா, சீனி மாத்திரம் உரிய உணவாக அமையாது என்றனர். உணவு சமைப்பதற்குப் பானைகளோ நீர் அருந்துவதற்கு கோப்பைகளோ இல்லை என்றும் சுட்டிக்காட்டினர். கூடாரங்களில் தொடர்ந்து தங்கியிருப்பதால் பலர் நோய்க்குப் பலியாகின்றனர் என பெண் ஒருவர் தெரிவித்தார். "இங்கு மிகவும் வெக்கையாக உள்ளது. அடைக்கப்பட்ட நிலையில் உள்ளோம். எம்மை வீடுகளுக்கு அனுப்புங்கள்" என அவர் கேட்டார்.

அந்த மக்கள் தாங்கள் குளிக்கும் இடத்தைச் சுட்டிக்காட்டி அது எருமை மாடுகள் வழமையாகக் குளிக்கும் பகுதி. அதில் மனிதர்கள் குளிக்க முடியுமா? எனக் கேள்வி எழுப்பினர். பெண் ஒருவர் எங்களைத் தன்னுடைய கூடாரத்திற்கு வருமாறு அழைத்தார். அங்கு மிகவும் மெலிந்த நிலையில் தரையில் சுருண்டு படுத்திருந்த தனது கணவனைக் காண்பித்தார். நாம் ஏழு பேரும் இந்த ஒரேயொரு கூடாரத்தில் இருப்பது கஷ்டம். உறங்குவதற்கு இடமில்லை என்றார் அவர்.

மூன்று நாள்களுக்கு 20 லீற்றர் தண்ணீர்

எனது கணவர் நோய்வாய்ப்பட்டுள்ளார். மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் தற்போதே இங்கு தங்கியுள்ளார். நான் அவரை மருத்துவமனைகள் பலவற்றுக்கும் கொண்டு சென்றுள்ளேன். அங்கு கூட இடமில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

மக்கள் நீர்க்குழாயிலிருந்து நீர் சேமிப்பதை நாம் பார்த்தோம். இந்த நீர் விநியோகத்தைக் கண்காணிக்கும் ஒருவர் மூன்று நாளைக்கு 20 லீற்றர் குடிதண்ணீர் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார். இது போதுமானது அல்ல. சில வேளைகளில் குடிதண்ணீர் வழங்கும் லொறிகள் போதியளவு குடிதண்ணீரை வழங்குவதில்லை. இதன் காரணமாக மக்கள் வேறு இடங்களை நாடவேண்டியுள்ளனர் என்றார் அவர்


source:nerudal 

StumbleUpon.com Read more...

இது மடிக்கணிணி மட்டும் இல்லை மடிக்கும் கணிணி:Laptop with flexible display









StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP