சமீபத்திய பதிவுகள்

விண்டோ கண்ட்ரோல் உங்கள் கைகளில்

>> Friday, November 6, 2009

 
 

கம்ப்யூட்டர் பயன்படுத்துகையில் நாம் எப்போதும் காணும் விண்டோ குறித்து யாரும் கவலைப் படுவதில்லை. அது எப்படி இருந்தாலும், அப்படியே இருக்கட்டுமே என்று விட்டுவிடுகிறோம். இந்த விண்டோவினை உங்கள் ஸ்கிரீனில் சரியாக அமைப்பது, விரித்து பின் குறைப்பது குறித்து இங்கு காணலாம்.  ஒவ்வொரு புரோகிராம் விண்டோவின் வலது மேல் மூலையில் நமக்கு மூன்று பட்டன்கள் தரப்பட்டுள்ளன.



முதல் பட்டனைக் கிளிக் செய்தால் அது புரோகிராம் விண்டோவைச் சுருக்கி டாஸ்க் பாரில் வைத்திடும். அடுத்ததாக இரண்டு கட்டங்கள் ஒன்றின் மீது ஒன்றாக இருப்பது போன்ற சிறிய படம் உள்ள பட்டனைக் கிளிக் செய்தால் அது பெரியதாக இருக்கும் புரோகிராம் விண்டோவைச் சுருக்கும். இதனை மீண்டும் கிளிக் செய்தால் விரிக்கும். மூன்றாவதாக பெருக்கல் அடையாளம் அல்லது எக்ஸ் அடையாளம் இருப்பதைக் கிளிக் செய்தால் புரோகிராம் விண்டோ மூடப்படும். சரி. ஆனால் பல முறை நாம் இந்த பட்டன்களை மாறி கிளிக் செய்துவிடுகிறோம். சுருக்குவதற்குப் பதில் விரித்தால் மீண்டும் சரியான பட்டனை அழுத்தலாம். ஆனால் பெருக்கல் அடையாள பட்டனை அழுத்திவிட்டால் புரோகிராம் மூடப்படும் வரை காத்திருக்க வேண்டும். பணியாற்றிக் கொண்டிருக்கிற நமக்கும் எரிச்சலாக இருக்கும். இந்த டிஜிட்டல் விபத்துக்களை எப்படி தடுப்பது? இந்த பட்டன் கட்டங்கள் சிறிது பெரியதாக இருக்கக் கூடாதா? என்ற ஆதங்கத்தை எப்படி ஆற்றிக் கொள்வது? இந்த பட்டன்களைப் பெரிதாக வைத்துக் கொள்ள விரும்புகிறீர்களா?



கீழ்க்காணும் வழிமுறைகளைக் கையாளுங்கள்.
1. டெஸ்க் டாப் திரையில் ரைட் கிளிக் செய்து அதில் Properties என்பதைத் தேர்ந்தெடுங்கள். 
2. பின்னர் கிடைக்கும் டேப்களில் Appearance  டேபைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவராக இருந்தால் Advanced என்ற பட்டனை எடுத்துக் கொள்ளுங்கள். 
3. "Item"  என்ற கீழ் விரியும் பாக்ஸில் Active Title Bar என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். 
4. இந்த கீழ் விரியும் பாக்ஸுக்கு அடுத்ததாக அளவை செட்டிங் செய்திடும் இடம் இருக்கும். அதில் மேல் நோக்கி உள்ள அம்புக்குறியை அழுத்த அழுத்த பட்டன் சைஸ் அளவு பெரிதாகும்.
நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் –– எந்த அளவிற்கு பட்டன்களைப் பெரிதாக்குகிறீர்களோ அந்த அளவிற்கு டைட்டில் பாரும் பெரிதாகும். அனைத்தையும் முடித்து, ஓகே அழுத்தி வெளியேறவும். இனி உங்கள் புரோகிராம் விண்டோக்கள் அனைத்திலும் வலது மேல் முனைப் பட்டன்கள் பெரிதாக இருக்கும். 



நியூமெரிக் கீ பேடில் மவுஸ்
சில வேளைகளில் நம் மவுஸ் செயல்படாமல் போகும். இதற்குக் காரணங்கள் பலவாக இருக்கலாம். மவுஸ் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்ட போர்ட்டில் பழுது இருக்கலாம். அல்லது சரியாக இணைக்கப்படாமல் இருக்கலாம். மவுஸ் சுத்தம் செய்யப்படாததால் சில நேரங்களில் சில நிலைகளில் இயங்காமல் இருக்கலாம். இது போன்ற வேளைகளில் நாம் மவுஸின் செயல்பாட்டினை கீ போர்டிலேயே மேற்கொள்ளும் வழிகளைக் கையாளலாம். 
மவுஸால் செயல்படுத்தப்படும் பல ஆணைகளைக் கீ போர்டில் உள்ள கீகளைக் கொண்டு செயல்படுத்தலாம். ஆனால் அவற்றை நியூமெரிக் கீ போர்டில் உள்ள கீகளைக் கொண்டே செயல்படுத்த முடியும். இதற்கு முயற்சிப்பதற்கு முன்னால் அதற்கான செட்டிங்ஸை அமைக்க வேண்டும். 
1. கண்ட்ரோல் பேனலை (Control Panel) முதலில் திறந்து கொள்ளுங் கள்.
2. அதில் (Control Panel) என்னும் பிரிவைக் கிளிக் செய்து கொள்ளுங்கள்.
3. பின் இதில் மவுஸ் என்னும் டேபைத் தேர்ந்தெடுக்கவும். 
4. இதில் மவுஸ் கீஸ் (Mouse keys)  என்னும் பிரிவிற்கு எதிரே உள்ள கட்டத்தில் டிக் மார்க் செய்திடவும். இதில் செட்டிங்ஸ் என்ற இடத்தில் கிளிக் செய்தால் தோன்றும் மெனுவில் கீ போர்டு மூலம் மவுஸ் இயக்கத்தினை எவ்வளவு வேகத்தில் இயக்கலாம் என்றும் அமைத்துக் கொள்ளலாம். இதே இடத்தில் Show Mouse key status on screen என்ற இடத்தில் உள்ள பாக்ஸில் டிக் செய்திட்டால் இந்த இயக்கம் செயல்பாட்டில் உள்ளதா என்று அறியும் வகையில் மவுஸ் ஐகான் டாஸ்க் பாரில் வந்து அமர்ந்து கொள்ளும். இதை எல்லாம் அமைத்த பின்னர் அனைத்திற்கும் ஓகே சொல்லி மூடவும். 
இந்த வழிகள் இல்லாமல் ஒரே வழியில் நியூமெரிக் கீ போர்டு வழியாக மவுஸ் இயக்கம் வேண்டுமென்றால் Alt +Left Shift + Num Lock என்ற கீகளை அழுத்தவும். கவனம், இதில் அழுத்த வேண்டியது இடது பக்கம் இருக்கும் ஷிப்ட் கீயை. இந்த மூன்று கீகளையும் அழுத்தினால் ஒரு செய்தியும் மெனுவும் திரையின் நடுவில் கிடைக்கும். அதில் மவுஸ் கீ இயக்கம் வேண்டுமென்றால் ஓகேயும், வேண்டாமென்றால் கேன்சல் பகுதியையும் கிளிக் செய்திட வேண்டும். இதனை ஏற்றுக் கொண்ட பின்னர் நம் லாக் கீ பேட் மூலம் மவுஸின் செயல்பாட்டினை மேற்கொள்ளலாம். 



ட்ரான்ஸெண்ட் டிஜிட்டல் போட்டோ பிரேம்
ஸ்டோரேஜ் மற்றும் மல்ட்டி மீடியா பிரிவு களில் பல சாதனங் களைத் தயாரித்து விற்பனைக்கு அளித்து வரும் ட்ரான்ஸென்ட் நிறுவனம், தன் டிஜிட்டல் போட்டோ பிரேம் வரிசையில், அண்மையில் புதிய 7 அங்குல பிரேம் ஒன்றை அறிமுகப்படுத்தியதுள்ளது. இதன் திரையின் ஆஸ்பெக்ட் ரேஷியோ 16:9. அனைத்து வகை பிளாஷ் டிரைவ்களையும் ஏற்றுக் கொண்டு செயல்படுகிறது. போட்டோக்களை ஒவ்வொன்றாகவோ, கட்டங்களில் பல கொண்டோ பார்க்கலாம். இந்த டிஸ்பிளே திறனுடன், ஒரு வீடியோ மற்றும் எம்பி3 பிளேயராகவும் இது செயல்படுகிறது. போட்டோக்களுக்கு பார்டர் மற்றும் தீம் அமைத்து காணும் வசதி இதில் தரப்பட்டுள்ளது. மேலும் கவர்ச்சியான எலக்ட்ரானிக் கடிகாரம் மற்றும் காலண்டராகவும் இது உள்ளது. இதனுடன் தரப்படும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இதில் பதியப்படும் போட்டோக் களை சிறப்பாகவும் எளிதாகவும் இயக்க முடிகிறது. கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் கிடைக்கும் இந்த டிஜிட்டல் பிரேம் இரண்டு ஆண்டு வாரண்டியுடன் ரூ. 6,000 என விலையிடப்பட்டுள்ளது



source:dinamalar
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

அமெரிக்காவும் இலங்கையும்; யார் கையில் யார்?

 

mahindarajapaksha_americanpresidentஇலங்கையில் நடந்து முடிந்த ஈழப் போரின் இறுதி நாட்களில் நடந்த போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்டவற்றில் கோதபயா ராஜபக்சேவுக்கு உள்ள தொடர்புகளுக்கான ஆதாரங்களை வழங்குமாறு இலங்கை கூட்டுப் படைத் தலைவர் சரத் பொன்சேகாவை கேட்டுள்ளது அமெரிக்க அரசு.

தற்போது சரத் பொன்சேகா அமெரிக்கா வந்துள்ளார். தனது கிரீன் கார்டு காலாவதியாகி விடாமல் காப்பாற்றுவதற்காக அவர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் கோதபயாவுக்கு எதிரான சாட்சியத்தை வழங்குமாறு பொன்சேகாவிடம் அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போரின் இறுதிக் கட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அட்டூழியங்கள், போர்க் குற்றங்கள், படுகொலைகள், மனித உரிமை மீறல்கள், கற்பழிப்புகள் உள்ளிட்ட அனைத்து குற்றச் செயல்களிலும் கோதபயாவுக்கு உள்ள பங்குகள் குறித்த ஆதாரங்களையும், வாக்குமூலங்களையும் அளிக்குமாறு பொன்சேகாவை அது கேட்டுக் கொண்டுள்ளது.

பொன்சேகாவிடம் அமெரிக்க அரசு இவ்வாறு கேட்டுக் கொண்டிருப்பது உண்மைதான் என்று இலங்கை வெளியுறவு அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து இன்று வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லகாமா இலங்கை அரசின் கருத்தை தெரிவிக்கவுள்ளதாகவும் அது கூறியுள்ளது.

தனக்கு அமெரிக்க அரசு விடுத்துள்ள கோரிக்கை குறித்து வாஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார் பொன்சேகா.

தற்போது பொன்சேகா ஓக்லகாமா நகரில் தனது மகள் வீட்டில் தங்கியுள்ளார். அவரது மருமகன் தொலைபேசி மூலம் பொன்சேகாவைத் தொடர்பு கொண்ட அமெரிக்க அதிகாரிகள், கோதபயாவுக்கு எதிராக வாக்குமூலம் அளிக்குமாறு கேட்டுக் கொண்டனராம்.

தன்னிடம் அமெரிக்க அதிகாரிகள் கேட்டுக் கொண்டதை அப்படியே கடிதம் மூலம் இலங்கை தூதரகத்திற்குத் தெரிவித்துள்ளார் பொன்சேகா.

முன்னதாக அமெரிக்க உள்துறை அமைச்சக அதிகாரிகள் பொன்சேகாவை விசாரிக்கவுள்ளதாகம், இதற்காக அவரை உள்துறை அமைச்சக விசாரணை அலுவலகத்திற்கு அழைத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இதனால் இலங்கை அரசு அதிர்ச்சியும்இ பீதியும் அடைந்தது.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்பான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை அமெரிக்க அரசு தீவிரப்படுத்துவதாக அது சந்தேகமடைந்துள்ளது.

கடந்த அக்டோபர் 22ம் தேதி அமெரிக்க வெளியுறவு அமைச்சகம், நாடாளுமன்றத்தில், இலங்கை போர்க்குற்றம் தொடர்பா அறிக்கையை தாக்கல் செய்தது என்பது நினைவிருக்கலாம். அதில் கோதபயா ராஜபக்சே, சரத் பொன்சேகா உள்ளிட்டோர் போர்க் குற்றம் புரிந்ததற்கான சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோதபயா ஏற்கனவே அமெரிக்க குடியுரிமை பெற்றவர் ஆவார். பொன்சேகா விரைவில் அமெரிக்க குடியுரிமையைப் பெறப் போகிறார். இந்த நிலையில் கோதபயாவை அமெரிக்கா குறி வைத்திருப்பதும், அதற்கு பொன்சேகாவை சாட்சிக்கு அழைப்பதும், ராஜபக்சே சகோதரர்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என தெரிகிறது.

அமெரிக்காவிடமிருந்து 'தப்ப' ராஜபக்சே தீவிரம்!

இந் நிலையில் ஈழப் போர் குறித்து என்ன மாதிரியான விளக்கம் தேவைப்பட்டாலும் அதுகுறித்து நேரடியாக என்னிடமே அமெரிக்கா கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என அதிபர் ராஜபக்சே அமெரிக்காவுக்குத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பொன்சேகாவை விரைவில் அமெரிக்காவிலிருந்து கொழும்புக்கு வரவழைக்கவும் முயற்சிகளை இலங்கை அரசு முடுக்கி விட்டுள்ளதாம். ஒரு நாள் கூட அமெரிக்காவின் விசாரணைக்கு பொன்சேகா உட்பட்டு விடக் கூடாது என்றும் இலங்கை அரசு தீவிரமாக உள்ளதாம்.

இதுதொடர்பாக மூத்த அமைச்சர்களை அழைத்து அவசர ஆலோசனை ஒன்றை நடத்தியுள்ளார் ராஜபக்சே.

மேலும், போர்க் குற்றம் தொடர்பாக யாருக்கேனும், குறிப்பாக அமெரிக்காவுக்கு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் தன்னையே நேரடியாக கேட்கலாம் என்று அப்போது கூறினாராம் ராஜபக்சே.

முப்படைகளின் தலைவர் என்ற முறையில் நானே அனைத்து விவரங்களையும் சொல்ல முடியும் என்றும் ராஜபக்சே தெரிவித்தாராம்.

இதுதொடர்பாக அமெரிக்க அரசுக்கும் உரிய முறையில் தகவல் தெரிவித்துள்ளதாம் இலங்கை அரசு.

மேலும், உடனடியாக பொன்சேகாவை அமெரிக்காவிலிருந்து வரவழைப்பது தொடர்பாகவும் முக்கியமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பு சிறுவர்களைத் தமது படைக்குச் சேர்த்ததாகவும்,இலங்கைப் படைகள், போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறித்ததாகவும், தம்மிடம் சரண் அடைந்த போராளிகளைக் கொன்றதாகவும்இபடையினர் அல்லது அரசு சார்பு ராணுவக் குழுக்கள் தமிழ்ப் பொது மக்களை குறிப்பாக சிறுவர்களையும் இளைஞர்களையும் கடத்திச் சென்று கொன்றதாவும் அமெரிக்க வெளியுறவுத்துறை சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் வெள்ளைக் கொடியுடன் யார் சரணடைய வந்தாலும் ஈவு இரக்கமே இல்லாமல் சுட்டுக் கொன்று விடும்படி கோத்தபயா உத்தரவிட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சர்வதேச அளவில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அமெரிக்க அரசு கூறியிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இலங்கை அரசு தானே ஒரு விசாரணையை நடத்துவதாக அவசரம் அவசரமாக அறிவித்தது.

இந்த நிலையில் அமெரிக்கா நேரடியாக களத்தில் இறங்கியிருப்பது போல தெரிவதால் இலங்கை அரசு பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.

நன்றி; நெருடல்


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

மகிந்தவை குறிவைக்கும் மரணப் பொறிகள்

 

 இலங்கை அரசு தமிழ் மக்களிற்கு எதிரான போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக அமெரிக்கா தனது அறிக்கையில் சுட்டி காட்டி இருந்தது அதனை இலங்கை அரசு வாசிக்காமலே உடன் மறுத்திருந்தது. பின்னர் அந்த அறிக்கைகளை கவனமாக வாசித்த பின்னர்தான் அவர்கள் பீதியடைந்தனர். அதன் பின்னர் தாமே அந்த உரிமை மீறல்கள் பற்றி உள் நாட்டில் விசாரிக்க போவதாக மகிந்த அண்மையில் தெரிவித்திருந்தார்.

sniper-header-makinthaஎனினும் அதனை சர்வதேச மனித உரிமை ஸ்தாபனங்களான  அனைத்துலக அபைய ஸ்தாபனம், மனித உரிமை கண்காணிப்பகம், ஐக்கிய நாடுகள் சபை ஆகியன மகிந்த அவர்களின் உள் நாட்டு விசாரணையினை ஏற்று கொள்ள முடியாது எனவும் காசா பாணியிலான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைகுழுவினை அமைத்து அவர்கள் தான் விசாரிக்கவேண்டும் எனவும் வாதிட்டு வருகின்றனர். இந்த நிலையில் முக்கிய போர் குற்றவாளிகளான மகிந்த இராஜபக்ஸ, அவரது சகோதரர் கோத்தபாய , மற்றும் இராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோர்கள் கூறப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் அழுத்தம்

இலங்கையில் சீன இந்திய அழுத்தங்கள் மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான நாடுகளுடனான பொருளாதார இராணுவ உறவுகள் ஆகியவற்றால் அமெரிகா மகிந்த மீதும் தற்போதய அரசாங்கத்தின் மீதும் கொண்டுள்ள அவ நம்பிக்கை ஆகியவற்றால் பல சந்தர்ப்பங்களை எதிர்பார்த்து கொண்டுதான் இருந்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் தமது சர்வதேச கொள்கை என்பதனால்   விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு ஊக்கமளித்தும். அதே நேரம் மனித உரிமை, போர்க்குற்றம் என்ற பேரில் மகிந்தவுக்கு அழுத்தம் கொடுத்து அவர்களை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான முயற்சி ஆகியவற்றை  கொண்ட இரட்டை அணுகுமுறையில் செயற்பட்டது அமெரிக்கா. இந்த வகையில் இப்போது மகிந்தவை அகற்றுவதற்கான காலம் கனிந்து விட்டதாகவே அமெரிக்கா பார்க்கின்றது எனலாம்.

இந்தவகையில் தற்போது இலங்கையில்  இராஜபக்ஸ குடும்பத்தினருக்கும், சரத் பொன்சேகா வின் குடும்பத்தினருக்கும் இடையே ஆன இடைவெளிகளை எதிரணிகள் பாவிப்பதற்கு அமெரிக்காவும் உற்சாகப்படுத்தியது. இப்போஅதிகரித்த இடைவெளிகளை பயன்படுத்தி விசாரணைகளை மேற்கொண்டு   தமது திட்டங்களை துரிதகதியில் செயற்பட ஆரம்பித்துள்ளது.

அமெரிக்காவின் நகர்த்தல்கள்

கோத்தபாய அமெரிக்க குடியுரிமை பெற்றவர், சரத் பொன்சேகா கிறீன் காட்  வதிவிட உரிமை பெற்றவர். ஆகவே அமெரிக்க உள் நாட்டு சட்டத்தின்படி (DHS Law) இந்த இரு நபர்களையும் விசாரிக்கும் உரிமை அமெரிக்காவுக்கு உண்டு இதன்படிதான் அமெரிக்காவில் உள்ள தமிழர் அமைப்புக்களும் தமது சட்ட ரீதியான பணிகளை முடுக்கி விட்டனர். இந்தவகையில் அமெரிக்கா தனது முதலாவது  நெருக்குவாரத்தினை  கடந்த மாதம் திரு கோத்தபாய அவர்களுக்கு கொடுத்தது. அதாவது கோத்தபாய கடந்த மாதம் அமெரிக்காவுக்கு ஐ. நா விக்கான கூட்டம் ஒன்றிற்கு சென்ற வேளை அவரை அமஎரிக்க குடியுரிமை பெற்றிருந்தும் ஒரு மணி நேரம் விசாரிக்கப்பட்டார்.இதனை கோத்தபாய அப்போது யாருக்கும் சொல்ல கூடாது என கண்டிப்பாக உத்தரவிட்டார்.

ஆனால் நேற்று வெளி நாட்டு இலங்கை அமைச்சர் ரோகித போகொல்லாம அதனை உறுதிப்படுத்தி உள்ளார். உண்மையில் கோத்தபாய அவர்களும் பரீட்சார்த்த முயற்சியாக தான் இலங்கை தூதுகுழுவினருடன் அமெரிக்கா சென்றிருந்தார் என்பதும் குறிப்பிடதக்கது. இந்த விடயங்கள் ஒருபுறமிருக்க  அமெரிக்க அதிகாரிகள் இரகசியமாக இலங்கையில் பணிபுரியும்  அரச சார்பற்ற நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள், பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், எதிர்கட்சியினர் ஆகியோரிடம் வலுவான போர்மீறல் தொடர்பான  சாட்சியங்களை தொடர்ந்தும் சேகரித்து வருகின்றனர்.

தற்போது சரத் பொன்சேகா மீதான விசாரணை

சரத் பொன்சேகா மீது கோத்தபாயவுக்கு செய்த விசாரணைபோல் கடுமையாக வானூர்தி நிலையத்தில் எதுவும் செய்யப்படவில்லை. மிக மரியாதையாக முன்கூட்டியே திகதி அறிவித்தல் கொடுத்து நாளை விசாரிக்கப்படவுள்ளார். மட்டுமன்றி நேற்று முந்தினம்  உள்னாட்டு அதிகாரிகளின் சட்ட பிரிவினரால்  சரத் பொன்சேகா  தொலைபேசியில் பவ்வியமாக விசாரிக்கப்பட்டுள்ளார்.

இந்த விசாரணையின் தொனி கோத்தபாய அவர்கள் மீதான குற்ற சாட்டுக்களுக்காக உறுதிப்படுத்தல்களை வழங்க முடியுமா என்ற தொனியிலேயே இருந்ததாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். ஆகவே மகிந்த – சரத் ஆகியோருக்கு இடையிலேயான பகைமையினை கூட்டுவதா? ஆலது உண்மையாகவே சரத் பொன்சேகா கோத்தபாயமீது கோபமாக இருப்பதால்  கோத்தபாய அவர்களை போட்டுக்கொடுக்கும் திட்டத்தில் இருக்கிறாரா என்பதனை அமஎரிக்க அதிகாரிகள் பரிசோதனை செய்கின்றனரா? அல்லது இந்த விசாரணைமூலம் மகிந்த குடும்பத்தினை மீண்டும் விரட்டி ஏதேனும் பணியவைப்பதற்கான முயற்சியா? என்பது தெரியவில்லை.

இலங்கை அரசின் வெளியார்ந்த துள்ளலும் உள்ளார்ந்த பணிவும்

தாம் மனிதாபிமான அடிப்படையில் தான் போர் செய்தோம், எந்தவிதமான போர்மீறல்களிலும் ஈடுபடவில்லை என ஒவ்வொரு நாளும் கதைஅளந்து கொண்டிருக்கும் மகிந்த இராஜபக்க்ஷ குடும்பம், வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் ஆகியோர், அமெரிக்காவின் போர் மீறல் பற்றிய அறிக்கை, ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை, ஜி.எஸ்.பி வரிசலுகை நிறுத்தம், ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைகுழு எண்ணம் ஆகியவற்றால் ஆடிப்போய் உள்ளனர் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆகவே தான் ஒருபக்கம் தாம் யாருக்கும் பயமில்லை என உள்ளூர் மக்களுக்கு சண்டித்தனம் காட்டிக்கொண்டு மறைமுகமாக சர்வதேச அழுத்தத்திற்கு பணிந்து போவதாகவே அண்மைய சம்பவங்கள் காட்டுகின்றன. குறிப்பாக இந்தவாரம் நாள்தோறும் 2000 மக்கள் வரையில் தடுப்பு முகாம்களில் இருந்து விடுவிக்கபட்டு கொண்டிருக்கின்றனர். அத்துடன் சில நிபந்தனைகளையும் மறைமுகமாக ஏற்று கொள்வதாகவே அறியமுடிகின்றது.

இது இவ்வாறு இருக்க மகிந்த அரசாங்கம் தான் நல்லவர்கள் தம்மில் எதுவித குற்றங்களும் இல்லை எனக்கூறுபவர்கள் ஏன் சர்வதேச விசாரணை குழுவினை அனுமதிக்கமுடியாது? இஸ்ரேல் ஐ. நா வின் குழுவினை அனுமதித்தது போல ஏன் இவர்கள் அனுமதிக்க முடியாது? அல்லது பத்திரிகையளர்களை ஏன் அனுமதிக்கவில்லை? அல்லது சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தை கூட ஏன் முகாம்களுக்கு அனுமதிக்கவில்லை? என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றது.

சனல் 4 ஒளிப்ப்பட தொகுப்பு தொடர்பாகவும் பிரித்தானியாவில் வழக்கு தொடரப்போவதாகவும் இலங்கை அரசு எச்சரித்து அங்கு ஒரு குழுவினையும் அனுப்பி இருந்தனர். ஆனால் அது மெதுவாக  கைவிடப்பட்டுள்ளது என தகவல். அடுத்து மகிந்த அவர்கள் கடந்த மாதம் கொழும்பில் நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிடும்போது தாம் சர்வதேச நீதிமன்ற விசாரணையினையும் நாட்டிற்காக எதிர்கொள்வேன் என முழக்கமிட்டார். அவ்வாறு எனின் தற்போது ஏன் அமெரிக்க விசாரணைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றார்? னேற்று கூட சர்வதேச நீதி மன்றங்கள் எம்மை விசாரிக்க தேவை இல்லை உள் நாட்டிலேயே எமது பிரச்சினைகளை தீர்க்கமுடியும் என கூறியுள்ளார். தன்னை சிங்களவர் மத்தியில் ஓர் வீரனாக காட்டிகொள்ளும் மகிந்த தற்போது விசாரணை என்றவுடன் துள்ளி குதிப்பது ஏன்? அடுத்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர செயலராக இருக்கும் பாலித கேகன்ன அவர்களின் குரலை காணோம் மெளனமாகி விட்டார். வழமையாக  இப்படியான செய்திகள் வந்ததும்  அனைத்து சட்டங்களையும் ஆய்வு செய்து  வெளி நாட்டு அணுகுமுறைகளை குறைகூறுபவர் இப்போ அமைதியாகியுள்ளார்.

ஆகவே உண்மையாகவே இலங்கைக்கு பீதி ஏற்பட்டுள்ளது என்பது திண்ணம். இங்கு கேள்வி என்னவெனில் அமெரிக்காவிடம் சரத் பொன்சேகா தம்மை காட்டி கொடுத்து விடுவாரா என்ற பயமா அல்லது ஒட்டுமொத்தமாகவே தமது அரசியல் எதிர்காலத்தினை எண்ணிய பயமா ? என்பதே ஆகும்.

மகிந்த அழுத்தங்களில் இருந்து தப்பிக்க என்ன செய்வார்?

வழமையாக பொருளாதார அரசியல் அழுத்தங்களை சமாளிக்க பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் தமிழ் மக்கள் மீது போரை ஏவி விட்டு அனைத்து அழுத்தங்களையும் போர் மீதும் , புலிகள் மீதும் போடுவார். இப்போ புலிகளும் இல்லை போரும் இல்லை சமாதானம் நிலவுகின்றது என அறிக்கை விட்டுள்ள நிலையில்  தற்போது சர்வதேசத்தின் அழுத்தங்கள்  தொடர்கின்றன. அதாவது தமிழர் பிரச்சினையினை, தமிழர் மீதான மனித உரிமை மீறல்கள், குறிப்பாக தமிழ் மக்களை முகாம்களில் அடைத்து வைத்திருத்தல் போன்றவற்றை அடிப்படையாக வைத்து சர்வதேசங்கள் தமது அழுத்தத்தினை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது.

இதே நேரம் பொருளாதார நெருக்கடிகளும் அதிகரித்த  வண்ணம் இருக்கின்றது.  இந்த நெருக்கடிகளை போக்க உள்ளூராட்சி தேர்தல், மாகாண சபை தேர்தல்கள் என உள் நாட்டில் மக்களையும் அரசியல் வாதிகளையும் பொழுதுபோக்கவைத்தது மட்டுமன்றி அனைத்துலகத்திற்கும் மக்கள் தம்முடன் இருக்கின்றார்கள் என்பதனை காட்டி நெருக்கடிகளை, மிரட்டி குறைக்க பார்த்தார். ஆனால் அதுவும் நீண்டக்கலத்திற்கு எடுபடவில்லை. ஆகவே முகாமில் இருக்கும் மக்களை சிறிது சிறிதாக விடுவித்து தனது நெருக்கடிகளை குறைக்க பார்க்கின்றார். ஆனால் இதுவும் எத்தனை நாளைக்கு? ஆகவே தான் மக்களை விடுவதற்கு முன்பாகவே தேர்தல் ஒன்றினை வைத்து தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பின்னர் எதனையும் எதிர்கொள்ள முடியும் என்பதே மகிந்த திட்டம்.

ஆனால் சர்வதேசமும் உள்ளூர் அரசியல்வாதிகளும் மக்களை தேர்தலுக்கு முன்பாக விடுவித்து, தமிழர்களுக்கு என்ன தீர்வு என்பதனை முன்வைக்க வேண்டும் என வாதிட்டு வருகின்றனர். இதற்கு தலமை தாங்குவது அமெரிக்காவின் தென் ஆசிய அதிகாரி ரொபேட் பிளேக். ஆகவே இது மகிந்தவுகு ஓர் மரணப்பொறி போலதான் அமைந்துள்ளது.

இந்த மரணப்பொறிகளில் இருந்து விடுதலை பெற யாருடைய காலில் விழமுடியும் என்பதே மகிந்தவின் அடுத்த நகர்வாக இருக்கும்.

சீனாவிடம் போய் ஐக்கிய நாடுகள் சபையினை சமாளிக்க சொல்லி கேட்கலாம், நிதி உதவி பெறலாம்(மட்டுப்படுத்தப்பட்ட) ஆனால் தற்போதய நெருக்கடிகளை தீர்க்குமாறு கேட்கமுடியாது. ஏனெனில் மக்களை முகாம்களில் இருந்து விடவேண்டியது மனிதாபிமான பிரச்சினை. அமெரிக்கா விசாரணை செய்வது அமெரிக்காவின் உள் நாட்டு பிரச்சினை.ஆகவே சீனா தலையிட முடியாது. வேண்டுமென்றால் நிதியினை மட்டும் வழங்கமுடியும்.

இந்தியாவிடம் போகமுடியுமா?

இந்தியாவுக்கும் இலங்கைமீது அமெரிக்காவின் கரிசனை போன்று  பல கோணங்களில் உள்ளது. இந்தியா ஒரு காலத்தில் உலகமட்டத்தில் அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக பலம் இல்லாத நிலையில் இலங்கையினை தமது தேவைக்கு ஏற்ப ஆட்டிப்படைக்க குறைந்த செலவில்  தமது திட்டங்களை செயற்படுத்தியது. அதாவது தமிழ் குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்கி (விடுதலைப்புலிகளை அல்ல) தமது கட்டுப்பாட்டில் வைத்து இலங்கை மீது தமது செல்வாக்கினை செலுத்தி வந்தது.

ஆனால் என்று தமிழர் விடுதலைப்போராட்டம் சர்வதேச மயப்படுத்தப்பட்ட நிலைக்கு வந்ததோ, என்று விடுதலைப்போராட்டம் தமது சொந்த காலில் நிற்க ஆரம்பித்ததோ அன்றில் இருந்து இந்தியாவுக்கு அது ஒரு பிரச்சினையாகவே உருவெடுத்தது. ஆகவே இப்போது இந்தியா அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக பெரும் பூதமாக சர்வதேசத்தில் உருவெடுத்து வருவதால் இலங்கை அரசாங்கத்தின் மீது செல்வாக்கை செலுத்த , கட்டுப்படுத்த பெரும் பொருட்செலவில் எந்த திட்டத்தினையும் செய்ய தயாராக இருக்கின்றது. அதாவது விடுதலைப்போராட்டத்தினை அல்லது விடுதலைப்புலிகளை ஆதரிக்கவேண்டிய அவசியம் தேவை இல்லை.

ஆனால் இந்தியாவின் இந்த தப்பான கொள்கை அவர்கள் தலையில் மண்ணை தூவும் நிலைக்கு இட்டு செல்கின்றதுஎன்றே கூறவேண்டும். ஏனெனில் இலங்கையின் தேவைகளை நாளுக்கு நாள் பெரும் பொருட்செலவில் செய்து கொண்டு வந்தாலும் இலங்கையானது அவர்களுக்கு செய்யும் பிரதிபலன்கள் குறைவாகவே இருக்கின்றது. இதனால் இந்தியா அதிருப்திக்குள்ளாகும் நிலையில் உள்ளது.

ஆகவே தான் இந்தியாவும் அமெரிக்காவும் சேர்ந்து இலங்கைக்கு எவ்வாறு நெருக்கடிகளை கொடுக்க முடியும் என்ற ஓர் பொது வேலைத்திட்டமும் இந்திய, மற்றும் அமெரிக்க ( ரொபேட் பிளேக்) அதிகாரிகளினால் வகுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் பிள்ளையான் ஆகியோரிடம் மகிந்தவுக்கு எதிரான அரசியலையே செய்யுமாறு கூறியுள்ளது. அடுத்ததாக தனது தனியார் வாணிப அமைப்புக்களை தமிழர் தாயகங்களில் நிறுவுவதில் பெரும் முனைப்பில் ஈடுபட்டுள்ளது. தவிர அவ்வப்போது பல அழுத்தங்களையும் இலங்கை அரசுக்கு வழங்கி வந்தாலும் அண்மைய சம்பவங்கள் இந்தியாவுக்கு இலங்கை மீது தொடர்ந்து அதிருப்தியினையே ஏற்படுத்தி வருகின்றது.

அதாவது குமரன் பத்ம நாதன் அவர்களை பாகிஸ்தான் அதிகாரிகள் விசாரிக்க அனுமதித்தமை ஆனால் இந்திய அதிகாரிகளுக்கு அனுமதி கொடுக்க மறுத்தமை. தேசிய தலைவர் திரு வே.பிரபாகரன் அவர்களின் மரண சான்றிதளை கொடுக்க மறுத்து வருகின்றமை ஆகிவற்றால் இந்தியாவிற்கு சினம் எழுந்துள்ளது. இவ்வாறான தொருநிலையில் இந்தியாவிடம் அமெரிக்காவினை சமாளிக்க ஏதாவது உதவி கேட்க முடியுமா? அவ்வாறு கேட்க போனால் இந்தியா குமரன் பத்ம நாதன் அவர்களை தருமாறு கேட்கலாம்.ஆகவே இலங்கை அரசு அதற்கு உடன்படுமா?  இவ்வாறு உடன்பட்டாலும் இந்தியாவால் அமெரிக்காவின் அழுத்தங்களை தணிக்க முடியுமா?

என்பதே கேள்வி.

எது எப்படி நடப்பினும் நடக்கின்ற காரியங்கள்  அனைத்தும் சர்வதேசங்கள் தமது நோக்கங்களை அடிப்படையாக வைத்து செய்யப்பட்டாலும் அதில் தமிழ் மக்களுக்கு எந்தெந்த வழிகளில் நன்மை வரும் என சிந்தித்து தமிழர் செயற்படவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்பதே யதார்த்தம். அதே நேரத்தில் ஒட்டுமொத்தமாக இறுதியில் தமிழர்களின் விடுதலைக்கு இந்த சர்வதேச காய் நகர்த்தல்கள் உதவுமா என்பதில் கேள்விக்குறியே!

- ஈழநாதம்


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

பொன்சேகாவைக் காத்திருக்கும் காலம்(ன்)…….


 

sarath_mahindaதனது கிரீன்காட் விசாவை புதுப்பிக்கவும், மற்றும் சில சுய அலுவல்கள் காரணமாகவும் அமெரிக்காவிற்கு விஜயம் செய்த முன்னாள் இலங்கையின் இராணுவத் தலைமை அதிகாரியான சரத் பொன்சேகாவினை அமெரிக்க அரசு, மனித உரிமைமீறல் தொடர்பாகவும், இலங்கை அரசின் யுத்தக்குற்றங்கள் தொடர்பாகவும் பல விசாரணைகள்…….
மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்ககப்பட்ட நிலையில் அவர்மீது அத்தகைய ஓர் விசாரணையை நடத்தப்படுமாயின் அமெரிக்காவின்மது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜே.வி.பி யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க அமெரிக்காவை எச்சரிக்கை செய்துள்ளார்.

அதே போல் இலங்கையின் பௌத்த குருமார்களின் கூட்டமைப்பும், இலங்கையின் அமைச்சர்களின் மேல்மட்டக் குழுவினரும் அதே எச்சரிக்கையை அமெரிக்காவிற்குக் கூட்டாக விடுத்துள்ளனர்.

இவர்களின் இந்த எச்சரிக்கைக்கு அடிபணிந்து அமெரிக்கா சரத் பொன்சேகாவிடமான தனது விசாரணையை தொடராமல் விட்டாலும், இல்லை அந்த விசாரணையை தொடர்நதாலும், அதன் போது சரத் பொன்சேகா எந்த உண்மையைச் சொன்னாலும், இல்லை சொல்லாமல் அவர் இலங்கை அரசைக் காப்பாற்ற முனைவதன் மூலம் தானும் யுத்தக் குற்றவாளிகளைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட குற்றத்திற்காகவும், வேறு பல இன்னோரன்ன குற்றங்களுக்காகவும் அவர் தனது கிரீன்காட் விசாவை இழக்க நேரிடுவதுடன், யுத்தக் குற்றவாளியாக நீரூபிக்கப்படவேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
அல்லது கிரீன்காட் பறிக்கப்பட்ட நிலையில் அவர் தனது தாயகத்திற்கு திருப்பி அனுப்பப்படலாம். இல்லையென்றால் அவர் தனது உண்மையான கண்ணால் கண்ட சாட்சிகள் அனைத்தையும் ஒப்புக்கொண்டு யுத்தக்குற்றத்தினின்றும் தன்னை விடுவித்துக்கொண்டு அமெரிக்காவிலேயே தங்கிவிடலாம்.

ஆனால் இவர் என்ன செய்தாலும் தாயகம் திரும்பும் பட்சத்தில் இவருக்கான தீரபபு அங்கே திருத்தி எழுதப்பட்டு தயார் நிலையில் உள்ளதை அவர் மிகவும் கவனத்திலெடுக்க வேண்டிய இறுக்கமான சூழ்நிலையில் உள்ளார் என்பது யாவரும் அறிந்ததே.

ஈழத்தமிழினத்தின் அழிப்பு நடவடிக்கையின்போது பல சாட்சியங்கள் வீடியோப் பிரதிகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவை யாவும் இலங்கை அரசின் மீது அதிருப்தியடைந்த இராணுவத்தினராலும், மற்றும் தமிழ் மக்கள் மீதான இனஅழிப்பையும், யுத்தத்தினையும் ஏற்றுக்கொள்ளாத சிங்கள புத்திஜீவிகளாலும் வெளிக்கொணரப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஆனால் இதனை எப்படியோ மோப்பம் பிடித்து ஒருசிலவற்றைக் கண்டுபிடித்து விடும் இலங்கையின் புலனாய்வுத்துறையினர், அந்த சாட்சியங்களுக்கு உரியவர்களை ஏதோ ஒரு வகையில் (என்கவுண்டர் முறையிலாவது) அவர்களை கொலைசெய்து வருவது இன்று நாள்தோறும் பத்திரிகைச் செய்திகளாக நாம் படித்து வருவது தெரிந்ததே.

அதற்கு அவர்கள் இடும் பெயர் அந்த சாட்சியத்திற்கு உரியவர்கள் சிங்களப் புலிகள் அல்லது புலி முகவர்கள் அல்லது புலிகளிடம் பணம்பெற்றுக்கெண்டு அவர்களுக்கு உதவியவர்கள் என்பதாகும்.
இந்த வகையில் தாயகம் திரும்பும் சரத் பொன்சேகாவிற்கும் ஏதாவது ஒரு நவீனமுறை அங்கே காத்திருக்கின்றது. அந்த முறை இலங்கையின் புலனாய்வுத் துறைக்கு கைவராவிட்டால் இருக்கவே இருக்கின்றன அண்டைநாடுகளின் புலனாய்வுத் துறைகள்.

அவர்கள் இந்த விடயத்தில் கைவந்த கில்லாடிகள். தங்கள் சொந்த நாட்டு அரச தலைவர்களையும், அவர்களின் உறவுகளையும் போட்டுத் தள்ளிவிட்டு மாற்றான் தலையில் பழியைப் போட்டுத் தப்பிக் கொள்வதில் அவர்களுக்கு நிகர் யாருமில்லை.

எனவே சரத் பொன்சேகாவின் தலைவிதியையும் ஒரு குறித்த தொகைக்கு பேரம் பேசிக் கொடுத்த விடுவார்கள். எப்படியோ தாயகம் திரும்பும் சரத்தின் தலை எத்தனை லகரங்களோ, கோடிகளோ மேலே உள்ளவனுக்குத்தான் வெளிச்சம்.

அதுமட்டுமல்லாது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மகிந்தராஜபக்சவின் முன்னே பூதாகாரமாக நிற்பவர்கள் இருவர். ஒருவர் சரத் என். சில்வா (முன்னாள் பிரதம நீதியரசர்), மற்றவர் சரத் பொன்சேகா என்பது மட்டும் யாவரும் அறிந்த உண்மை.

எப்படியோ இந்த இரண்டு சரத்தும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னாதாக மகிந்தரின் அரசியல் பாதையில் இருந்து நீக்கப்படவேண்டியவை என அடிக்கோடிடப்பட்டுவிட்டது.

அது எப்போது? எங்கே? எப்படி? யார் மேல் பழியைப் போடுவது? என்பதுதான் கேள்விக்குறி?
- சங்கிலியன் 


source:tamilspy

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

சவூதியில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள் கட்டாயத்தின் பேரிலேயே குற்றத்தை ஒப்புக்கொண்டனர்

 

கொலை மற்றும் களவு குற்றச்சாட்டுகளை அடுத்து நேற்று முன்தினம் புதன்கிழமை சவூதியில் சிரச்சேதம் செய்யப்பட்ட இரு இலங்கையர் மற்றும் ஒரு இந்தியர் ஆகியோர் போலீஸ் காவலில் இருந்தபோது, போலீசின் கட்டாயத்தின்பேரிலேயே தாம் குற்றம் செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர் என சர்வதேச மன்னிப்புச் சபை தனது அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது. சவூதியின் மரண தண்டனை நிறைவேற்றத்துக்கு மன்னிப்புச் சபை தனது பலத்த கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.

இலங்கைப் பெண்ணான ஹலீமா நிஸா காதர் ஒரு குழந்தையின் தாயார். இவரது கணவர் முஹமட் நௌஷாத் பார்மில், இவர் ஒரு இந்தியர், மற்றும் இலங்கையரான பண்டாரநாயக்கா ஆகியோரே 2005 நவம்பரில் கொலை, கொள்ளை புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, அவர்களுக்கு ஜூன் 2007 இல் மரண தண்டனை தீர்ப்பாக அளிக்கப்பட்டது. மேற்படி மூவரும் தடுப்புக் காவலில் இருந்தபோதும் சரி அவர்களது விசாரணைகள் நடந்தபோதும் சரி அவர்களுக்கென சட்டத்தரணிகள் எவருமே நியமிக்கப்பட்டிருக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டிய மனித உரிமைகள் சபை தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.



source:athirvu

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

செல்போன் ரிங்டோன்களுக்கு தீவிரவாதிகள் தடை

செல்போன் ரிங்டோன்களுக்கு தீவிரவாதிகள் சோமாலியாவில் தடை
 நைரோபி, நவ. 4-
 
சோமாலியா நாட்டில் அல்ஷபாப் என்ற அமைப்பை சேர்ந்த தீவிவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். சமீபத்தில் இவர்கள் சோமாலியாவில் உள்ள கிஷ்மாயூ என்ற துறைமுக பகுதியையும் தெற்கு பகுதி யையும் கைப்பற்றினர்.
 
இதைத் தொடர்ந்து அப்பகுதியில் அவர்கள் தங்கள் அதிகாரத்தை செலுத்த தொடங்கி விட்டனர். மோகாடிசுவை தலைநகராக அறிவித்துள்ளனர். தங்களுக்கு என்று தனி சட்ட திட்டங்கள் அடங்கிய கோர்ட்டுகள், தனி கொடி என்று அமைத்துள்ளனர்.
 
தங்கள் ஆளுமைக்குட்பட்ட பகுதிகளில் சினிமா, நடன நிகழ்ச்சிகள் மற்றும் திருமண நிகழ்ச்சிகள், மற்றும் விளையாட்டுகளை தடை செய்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் செல்போன்களில் பயன்படுத்தி வந்த ரிங் டோன்களுக்கு தடை விதித்துள்ளனர்.
 
அந்நாட்டு மக்கள் இந்திப்பட பாடல்கள் மற்றும் தாங்கள் பின் பற்றும் மத பாடல்களை செல்போன்களில் ரிங்டோன் களாக பயன்படுத்தி வந்தனர். அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவற்றை பயன்படுத்த முடிய வில்லை.
 
தீவிரவாதிகளின் தடையை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனையும் வழங்கப்படுகிறது. அலி முகமது யூசுப் (20) என்ற வாலிபர் தனது செல்போன் மூலம் இசை மற்றும் வீடியோ மூலம் படங்களை பார்த்து ரசித்தார்.
 
இதை அறிந்த தீவிரவாதிகள் அவரை நடுரோட்டில் நிறுத்தி வைத்து சவுக்கால் அடித்து தண்டனையை நிறைவேற்றினர். தங்கள் மதத்துக்கு எதிரான கொள்கைகளை குறிப்பாக இசை மற்றும் செக்ஸ் வீடியோ காட்சிகளை அனுமதிக்க முடியாது என அல் ஷபாப் தீவிரவாத அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஷேக் ஹாசன்யாகூப் தெரிவித்துள்ளார்

source:maalaimalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP