சமீபத்திய பதிவுகள்

நாடு முழுவதும் லஞ்சம்: ஒபாமா எச்சரிக்கை

>> Saturday, November 7, 2009


நாடு முழுவதும் லஞ்சம்: ஆப்கான் அதிபருக்கு ஒபாமா எச்சரிக்கை
 வாஷிங்டன், நவ. 6-
 
ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தல் கடந்த மாதம் (அக்டோபர்) நடந்தது. இதில், தேர்தலில் போட்டியிட்ட அந்நாட்டு அதிபர் ஹமீத் கர்சாய் 40 சதவீதம் ஓட்டுகளே பெற்றிருந்தார். ஆப்கானிஸ்தான் அரசியல் சட்டப்படி அதிபர் தேர்தலில் போட்டி யிடுபவர் 40 சதவீதத்துக்கும் மேல் ஓட்டுகளை பெறவேண்டும்.
 
அவ்வாறு கிடைக்காத பட்சத்தில் 2-வது கட்டாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே, நாளை (7-ந்தேதி) 2-வது கட்ட தேர்தலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கர்சாயை எதிர்த்து போட்டியிட்ட அப்துல்லா அப்துல்லா போட்டியில் இருந்து விலகி கொண்டார். எனவே கர்சாய் வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
 
இதை தொடர்ந்து, தேர்தலில் வெற்றி பெற்ற கர்சாய்க்கு அமெரிக்க அதிபர் பரேக் ஒபாமா டெலிபோனில் வாழ்த்து தெரிவித்தார். அப்போது ஆப்கானிஸ்தானில் தலை விரித்தாடும் லஞ்ச லாவண்யத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள்.
 
இறுதியில் அதுதான் நாட்டை காப்பாற்றும் புதிய அதிபராக பொறுப்பேற்று உள்ள தங்கள் புதிய சரித்திரம் படைக்க வேண்டும்  என்றும் வாழ்த்தினார்.
 
இதற்கு பதில் அளித்த கர்சாய், உங்கள் (ஓபாமா) விருப்பத்தை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன் என்றார். ஆனால், இதை வார்த்தையால் சொன்னால் மட்டும் போதாது. செயலில் காட்ட வேண்டும் என்று ஒபாமா கூறினார்.
 
ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 10 ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்ப இருப்பதாக ஒபாமா தெரிவித்தார்.

source:maalaimalar
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம்

 

 அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் 27 ஆண்டுகளில் காணாத உயர்வைக் கண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 1983ம் ஆண்டுக்குப் பிறகு இந்த அளவு வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது இது முதல் முறையாகும். இந்த அக்டோபர் மாதம் மட்டும் வேலை இழப்பின் அளவு 10.2 சதவிகிதத்தை எட்டியுள்ளதாக தெரிகிறது. 

அமெரிக்க தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி இந்த மாதம் மட்டும் 1லட்சத்து 90 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். இது அமெரிக்க பொருளாதார நிபுணர்களின் கணிப்பைவிட 2 சதவிகிதம் அதிகம். இதை சமாளிக்க புதிய நிதிச் சலுகைகளை அரசு அதிகரித்தாக வேண்டும்' என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 அமெரிக்காவில் வேலை இழப்புகள் தொடர்ந்து 22 மாதங்களாக அதிகரித்தபடி உள்ளது. இந்தநிலை ஒபாமா நிர்வாகத்தை பெரிதும் அச்சுறுத்தி வருவதாக அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் சலசலக்கப்படுகின்றன.


source:nakkheeran


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

பிரிஜ்'ஜில் விளையும் காய்கறி

 குளிர் சாதன பெட்டிகள் (பிரிஜ்) காய்கறிகள், உணவுப் பண்டங்களை பதப்படுத்தி வைக்க பயன்படுகிறது. தற்போது இதில் கால மாற்றத்துக்கேற்ப நவீனத்தை புகுத்தி சமையலுக்கு தேவையான காய்கறிகளை வளர்க்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. காய்கறிகளை மட்டுமல்லாமல் கடல் உணவுப் பொருட்களான மீன், நண்டுகளையும் வளர்க்க முடியும்.

இந்த பிரிஜ் பல அடுக்குகளை கொண்டதாக இருக்கும். மேற்புறத்தில் உள்ள அடுக்குகளில் காய்கறிகளை வளர்த்துக் கொள்ளலாம். அதற்கு தேவையான வெப்பம் கிடைக்க வசதி செய்யப்பட்டு உள்ளது. அடிப்பகுதியில் உள்ள அடுக்கில் மீன்களை வளர்க்கலாம். மேலுள்ள தாவரங்கள் வளர்க்கும் அடுக்கில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் கீழே வரும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளதால் மீன்களின் உணவுக்கு கவலைப்படத் தேவையில்லை. மேலும் பயன்படுத்தியதுபோக உள்ள காய்கறி கழிவுகளையும் இதில் போட்டு வைத்தால் அதில் இருந்து எரிபொருளும் தயாரிக்கவும் முடியும். இதைக் கொண்டு ஒரு காரை இயக்க முடியுமாம்.

இந்த பிரிஜ்ஜின் பெயர் `ப்ருகல் பிரிஜ்'. பிலிப்ஸ் நிறுவனம் இதை தயாரித்து உள்ளது. இனி நமக்கு தேவையான காய்கறிகளை வீட்டுத் தோட்டத்துக்கு பதிலாக சமையல் அறையிலேயே வளர்த்துக் கொள்ளலாம். இதனால் ஆரோக்கியமான காய்கறிகளையும், உணவுப் பொருட்களையும் நேரடியாகப் பெறலாம்.

மாறி வரும் வாழ்க்கை முறையில் வருங்காலத்தில் இது எல்லோர் வீட்டிலும் அத்தியாவசியமாகிவிடும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


source:dailythanthi

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP