சமீபத்திய பதிவுகள்

பைல்களை மறைத்து வைக்கலாம்

>> Wednesday, November 11, 2009

 
  

 ஒரே கம்ப்யூட்டரை அலுவலகத்திலும், வீட்டிலும் பலர் பயன்படுத்தும் சூழ்நிலை இன்று எங்கும் காணப்படுகிறது. இதனால் ஒருவரின் உழைப்பில் உருவான பைலை மற்றவர்கள் திருத்தாமல் இருக்கவும், மேலும் மற்றவர்கள் அறியாமல் இருக்கவும் இது போல பாதுகாக்க வேண்டியதுள்ளது.  இத்தகைய தேவைகளை நிறைவேற்று வதற்கென பல தேர்ட் பார்ட்டி புரோகிராம்கள் அதிக எண்ணிக்கையில் இன்டர்நெட்டில் உள்ளன. இங்கு தேர்ட் பார்ட்டி என்பது மைக்ரோசாப்ட் இல்லாமல் மற்ற சாப்ட்வேர் தயாரிப்பவர்கள் தயாரித்து வழங்கும் புரோகிராம்களாகும். ஆனால் இவற்றை எந்த அளவிற்கு நம்ப முடியும் என்பது ஒரு கேள்விக் குறியே. எனவே நாம் விண்டோஸ் தயாரித்து வழங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் வசதிகளையே காணலாம். 

ஒரு போல்டரை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாப்பது என்று ஏற்கனவே பல முறை எழுதி உள்ளோம். பாதுகாக்க வேண்டிய போல்டரைத் தேர்ந்தெடுத்து, ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் ஷேரிங் அண்ட் செக்யூரிட்டி என்ற பிரிவில் கிளிக் செய்தால் அங்கு போல்டருக்கு பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாப்பதற்கான வழிகள் தரப்பட்டிருக்கும். மேலும் ஒரு வழியினை இங்கு பார்க்கலாம். இந்த செயலை மேற்கொள்ள நமக்கு கிடைக்கும் கட்டளை Attrib  என்பதாகும். இந்த சொல் ஒரு பொருளுக்கு நாம் அமைக்கும் பண்பினைக் குறிக்கிறது. இங்கு ஒரு பைலுக்கு நாம் அளிக்கும் பண்பே அது. படிக்க மட்டும், மறைத்து வைக்க மற்றும் சிஸ்டம் பயன்படுத்த (Read only, Hidden and System attributes)  என மூன்று வகைகளில் பொதுவாக பண்புகளை கொடுக்கலாம். கீழ்க்காணும் வழிகளில் செயல்பட்டு உங்கள் போல்டருக்கு இந்த பண்புகளை அளிக்கலாம். இதற்கு உங்கள் கம்ப்யூட்டரில் நீங்கள் அட்மினிஸ்ட் ரேட்டராக லாக் இன் செய்திருக்க வேண்டும். இனி மறைக்க வேண்டிய தகவல் உள்ள பைல்களை அடைத்து வைக்க ஒரு புதிய போல்டர் ஒன்றை உருவாக்கவும். எடுத்துக் காட்டாக உட்ரைவில் Personal  என ஒரு போல்டரை உருவாக்கலாம். இதில் அனைத்து பைல்களையும் கொண்டு வரவும். மறைக்கப்பட வேண்டிய இந்த பைல்களுக்கு காப்பி பைல்கள் வேறு எங்கும் இருக்கக்கூடாது. பின் Start  பட்டன் அழுத்தி ரன் பாக்ஸில் CMD  என டைப் செய்திடவும். பின்Ok அழுத்த உங்களுக்கு டாஸ் இயக்க கட்டளைப் புள்ளி (command prompt) கிடைக்கும். இங்கு நீங்கள் குறிப்பிட்ட பைல்கள் அடங்கிய மறைத்து வைத்திட வேண்டும் என்று திட்டமிடுகின்ற போல்டரின் பெயரை அதற்கான பாத் உடன் பின்வருமாறு டைப் செய்திட வேண்டும். இங்குள்ள எடுத்துக்காட்டின்படி அந்த கட்டளைச் சொற்கள் "attrib +s +h E:\Personal" என இருக்க வேண்டும். (மேற்கோள் குறிகள் டைப் செய்யப்படக்கூடாது) இந்த கட்டளை உங்கள் ஈச்tச் போல்டரை E  டிரைவில் மறைத்து வைத்திடும். உடனே நீங்கள் விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறந்து சோதித்துக் கொள்ளலாம். இவ்வாறு மறைத்து வைத்திருப்பதை "Show hidden files and folders"  என்ற கட்டளை கொடுத்தெல்லாம் பார்க்க முடியாது. சரி, மறைத்து வைத்துவிட்டீர்கள். என்றாவது ஒரு நாள் அல்லது ஒரு நேரம் இதனை வெளியே தெரியும் படி வைக்க எண்ணலாம். அல்லது மேலும் சில பைல்களை, இதன் பின் மறைத்து வைக்க எண்ணி, இந்த போல்டரில் போட்டு வைக்க திட்டமிடலாம். அப்போது "attrib s h E:\Personal"என டைப் செய்திட வேண்டும். இதற்கு இந்த போல்டரின் பெயர் மற்றும் டைரக்டரியின் பெயர் உங்களுக்கு நினைவில் இருக்க வேண்டும். 
ஒரு பைலை மட்டும் தனியாக மறைக்க, அதற்கு மட்டும் ஒரு பாஸ்வேர்ட் கொடுப்பது பற்றி இங்கு ஏற்கனவே தகவல்கள் தரப்பட்டுள்ளன. ஒரு பைலை யாரும் எதற்கும் அனுமதிக்காத வகையில் பாஸ்வேர்ட் தரலாம். அல்லது பார்ப்பதற்கு மட்டும் அனுமதிக்கலாம். எடிட் செய்வதனைத் தடை செய்திடலாம். இந்த வசதிகள் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் உள்ள புரோகிராம்கள் அனைத்திற்கும் உள்ளன. 



எடுத்துக்காட்டாக வேர்டில் உருவாக்கப்படும் ஒரு பைலுக்கு எப்படி பாஸ்வேர்ட் கொடுப்பது என்று பார்க்கலாம். 
பைலைத் திறந்து பின் File > save as எனச் செல்லவும். இப்போது Save   அண் விண்டோ கிடைக்கும். இந்த விண்டோவின் வலது மூலையில் டூல்ஸ் என்று ஒரு பிரிவு இருக்கும். இதில் கிளிக் செய்திடவும். கீழாக விரியும் மெனுவில் Security Options என்று ஒரு பிரிவு இருக்கும். இதில் Password to Open, Password to Modify என்று இரு பிரிவுகள் இருக்கும். இதில் எந்த வகையில் நீங்கள் பைலை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க வேண்டுமோ அந்த வகையில் பாஸ்வேர்ட் கொடுக்கலாம். ஆனால் கொடுத்த பாஸ்வேர்டினை நினைவில் வைத்திருக்க வேண்டும்.



ஜி-மெயில்கள் உங்கள் கம்ப்யூட்டரில்
ஜிமெயில் என்னும் கூகுள் சர்வரில் நீங்கள் இமெயில் அக்கவுண்ட் வைத்திருந்தால், அந்த சர்வர் சென்று அதில் உள்ள உங்களுக்கான இன்பாக்ஸைத் திறந்து மெயில்களைப் பார்க்கிறீர்கள். இணைய இணைப்பு இல்லாத போது ஏற்கனவே வந்த மெயில்களைப் பார்க்க வேண்டும் என்றால் பார்க்க முடியாது. ஏனென்றால் அவை கூகுள் சர்வரில் தான் சேமித்து வைக்கப்படுகின்றன. இதற்கு மாறாக உங்கள் கம்ப்யூட்டரிலேயே அவற்றைக் கொண்டு வந்து, சேமித்து வைத்து, விரும்பும்போது இணைய இணைப்பின்றி அவற்றைக் காணும் வசதியை, கூகுள் தருகிறது. இதனை எப்படி செட் செய்வது என்று பார்ப்போம்.
முதலில் உங்கள் கூகுள் அக்கவுண்ட்டில் கூகுள் Gears  என்னும் புரோகிராம் நிறுவப்பட்டிருக்க வேண்டும். இல்லை எனில்  http://tools.google.com/ gears என்ற தளம் செல்லவும். அங்கு கூகுள் கியர்ஸ் நிறுவுவதற்குத் தேவையான புரோகிராமின டவுண்லோட் செய்திடவும். பின் அதனை இயக்கி இன்ஸ்டால் செய்திடவும். இதன் பின் உங்கள் பிரவுசரை மீண்டும் இயக்கவும். பின்னர் ஜிமெயில் அக்கவுண்ட் சென்று அங்கு more கிளிக் செய்து அதில் Labs என்பதைத் தேர்வு செய்திடவும். இங்கு வரிசையாக நிறைய இது போன்ற வசதிகள் தரப்பட்டிருக்கும். அதில் offline enable என்று உள்ள இடத்திற்குச் சென்று அங்கு அந்த வசதியை enable  செய்திடவும். அவ்வாறு தரப்பட்டுள்ள இடத்தில் உள்ள ரேடியோ பட்டனைக் கிளிக் செய்தால் போதும். பின் இதன் கீழ் கடைசியாகச் சென்று Save பட்டன் அழுத்தி சேவ் செய்திடவும்.



பின்னர் உங்களின் ஜிமெயில் இன்பாக்ஸ் வரவும். இங்கு செட்டிங்ஸ் அருகில் உள்ள Offline கிளிக் செய்திடவும். அதன் பின் கிளிக் நெக்ஸ்ட் கிளிக் செய்திடுக. அடுத்ததாக install offline access for gmail  என்று கேட்கையில் அடுத்துள்ள Next பட்டன் கிளிக் செய்திடவும். அடுத்தபடியாக Permissionகேட்கையில் ஓகே கொடுக்கவும். பின் ஜிமெயில் உங்கள் டெஸ்க்டாப்பிற்கு வந்துவிடும். இனி உங்கள் மெயில் யாவும் உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் ஆகும். உங்கள் கம்ப்யூட்டரிலேயே டவுண்லோட் ஆவதால், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் மெயிலைப் படிக்கலாம்.



வழி நடத்தும் இன்டர்பேஸ்
மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டர்களைப் பற்றி எழுதுகையில் அதில் பயன்படுத்தப்படும் யூசர் இன்டர்பேஸ் மிகச் சிறப்பாக உள்ளது என்ற தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதன் பொருள் என்ன? ஒவ்வொருவரும் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் ஒன்றை எண்ணிக் கொண்டு இதுதான் யூசர் இன்டர்பேஸ் என்று எண்ணிக் கொண்டு செல்கின்றனர். இது எதனைக் குறிக்கிறது? இதன் செயல்பாடு என்ன என்று பார்ப்போமா?
கம்ப்யூட்டரில் ஒவ்வொரு முறை நீங்கள் ஒன்றைப் பயன்படுத்தத் தொடங்குகையில், யூசர் இன்டர்பேஸ் என்னும் இந்த வழி நடத்தும் வசதியைச் சந்திக்கிறோம். அந்த புரோகிராமோடு அல்லது கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டு செயல்படுத்தப்பட இருக்கும் துணை சாதனத்தோடு உங்களை இணைத்து வழி நடத்தும் வேலையை இந்த யூசர் இன்டர்பேஸ் செய்கிறது. இந்த இன்டர்பேஸ் என்பதில் பல துணை சாதனங்கள் இருக்கும். மெனு, லிங்க், பட்டன், பைல், சவுண்ட் போன்ற அனைத்தும் கலந்தே ஒரு யூசர் இன்டர்பேஸாக உருவெடுக்கிறது. 
எடுத்துக்காட்டாக, ஒரு புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடு கையில், முதல் முதலில் நீங்கள் சந்திப்பது அதன் யூசர் இன்டர்பேஸைத்தான். அந்த புரோகிராமினை இயக்கி, அதன் பயனைப் பெற உங்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாய் இது வழிகாட்டும். எனவே தான் சாமானியர்களும் புரிந்து கொள்ளும் வகையில் இவை மிக எளிதாகத் தகவல்களைக் காட்டி, அதில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியதையும், பல ஆப்ஷன் களாகத் தருகிறார்கள்,. இந்த இன்டர்பேஸ்களும் பல வகைகளில் வடிவமைக்கப்படுகின்றன. சில கிராபிக்ஸ் வடிவங்களில் அமைக் கப்படும். அல்லது எச்.டி.எம்.எல். பைலாக, ஓர் இணைய தள பக்கமாகக் காட்டப்படும். சில கட்டளை வரிகளாகக் காட்டப்பட்டு, உங்களிடமிருந்து பதில் தகவலை வாங்கிச் செயல்படும். 



நீங்கள் எத்தகைய புரோகிராமினைப் பயன்படுத்தத் தொடங்குகிறீர்கள் என்ப தைப் பொறுத்து இது அமையும். தொடக்கத்துடன் இல்லாமல், புரோகிராம் பயன்படும் காலம் முழுவதும் இந்த இன்டர்பேஸ் வழி காட்டிக் கொண்டே இருக்கும். இதன் எளிய சிறப்பான தன்மை ஒரு புரோகிராமின் பயன்தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் இருக்கும்


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

அடிப்பது போல் அடித்த அமெரிக்காவும் அழுவது போல் அழுத பொன்சேகாவும்

 

பொன்சேகா pulikal.net"சிறிலங்காவின் தலைநகரம் என்ன?" – என்று கேட்டால் கூட "சரத் பொன்சேகா" என்று கூறுமளவுக்கு எல்லாமே மறந்துபோய் பொன்சேகா காய்ச்சல் பிடித்த அரசியல் நோயாளிகளாக பிதற்றும் நிலைக்கு சிறிலங்கா அரசியல்வாதிகள் தள்ளப்பட்டுள்ளனர். இன்றைய கொழும்பு நிலைவரம் இதுதான். போர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதுகூட அப்போதைய இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் பெயர் இவ்வளவு அடிப்பட்டதில்லை.

சிறிலங்காவில் இடம்பெற்ற போரின் முடிவை – தாம் செய்த உதவிகளின் அடிப்படையில் – முன்னமே ஊகித்துக்கொண்ட சர்வதேச சமூகத்தினால், தற்போது கொழும்பில் வீசும் அரசியல் சுனாமியை சில மாதங்களுக்கு முன்னர்வரை ஊகித்திருக்கமுடியாது. அவ்வளவுக்கு கொழும்பு அரசியல் மாற்றங்கள் சடுதியாக மாற்றம் கொண்டது மட்டுமல்லாமல் அதில் சர்வதேச சமூகத்தையும் வலுக்கட்டாயமாக உள்ளே பிடித்து இழுத்திருக்கிறது.

இந்த மாற்றங்களின் மகுடம்தான் சரத் பொன்சேகா விவகாரம்.

போர் முடிவடைந்தகையோடு சிறிலங்கா அரசு மீதான போர்க்குற்ற விசாரணைகளுக்கான அழுத்தம் பெருகிக்கொண்டிருக்க, மறுபறுத்தில், போரினை முன்னின்று நடத்திய சிறிலங்காவின் மூவர் அமெரிக்க பிரஜைகளாக உள்ளனர் இவர்களுக்கு எதிராக அமெரிக்க அரசு தனது நாட்டு சட்டங்களுக்கு கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும். பாரிய மனிதப்பேரவலத்தை தமிழ்மக்களுக்கு மேல் கட்டவிழ்த்துவிட்ட இந்த மூவரும் போர்க்குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரணை செய்யப்படுவதற்கு போதிய தகுதியுடையவர்கள் என்று சாதாரண மனித உரிமைகள் அமைப்பு முதல் சர்வதேச மன்னிப்புச்சபை உட்பட பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளும் குரல் எழுப்ப ஆரம்பித்தன. ஆனாலும், இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ தளபதி சரத் பொன்சேகா, பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய, அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் எறும்புக்கும் தீங்கிழைக்காத புனிதர்கள் போல உலகவலம் வந்துகொண்டிருந்தார்கள்.

 

இந்நிலையில், போருக்கு பின்னரான அரசியல்நிகழ்ச்சிநிரலை மகிந்த அரசு தான் நினைத்தது போல வரைய ஆரம்பித்தது. தனது இந்த திட்டத்திற்கு முன்னால் இடறுப்படும் எந்த நாட்டையும் விட்டுவைக்காமல் எல்லாவற்றுடன் முரண்பட ஆரம்பித்தது. சீனாவின் கைப்பிள்ளையாக இருந்துகொண்டு மேற்குலகம், இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா. என்று பெரும் சக்திகளையெல்லாம் சர்வசாதாரணமாக தூக்கியெறிந்து நடந்துகொண்டது மட்டுமல்லாமல், அவற்றுக்கு முகத்தில் அறைந்தாற்போல் அரசின் முக்கிய அமைச்சர்கள் அறிக்கைகளையும் விடுத்தனர். போரில் வெற்றிபெற்ற ஆணவத்தில் நடந்துகொள்கிறார்களா என்று பொறுத்திருந்து பார்த்த சர்வதேச சமூகத்துக்கு சிறிலங்காவின் தொடர்ச்சியான போக்கு அதிர்ச்சியளித்தது. இலங்கை விவகாரத்தில் நீ முந்தி நான் முந்தி என்று அங்கு போய்நின்று தமக்கிடையிலான பலப்பரீட்சைக்கு அந்நாட்டை களமாக்கிகொண்ட இந்தியாவும் அமெரிக்காவும்கூட சிறிலங்காவின் இந்தப்போக்கினால் ஒரேயடியாக குழம்பிபோயின.

ஒருகட்டத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் இலங்கைவிவகாரத்தில் தாங்கள் இணைந்து நடந்தால் சீனாவின் பிடியிலிருந்து சிறிலங்காவை விடுவிக்கலாம் என்ற முடிவோடு காய்களை நகர்த்தின. ஆரம்பத்தில் இலங்கையும் அனுசரித்துப்போய் அதன் எதேட்சதிகாரப்போக்கை தருணம் பார்த்து நெத்தியடியாக அடித்து மடக்கி தமது வழிக்கு கொண்டுவருவதாகவே இருநாடுகளும் இராஜதந்திர வியூகங்களை வகுத்தன. ஆனால், சிறிலங்காவுக்கு இந்த அமெரிக்க – இந்திய கூட்டுத்திட்டம் சாதுவாக புரிய ஆரம்பித்து இருநாடுகளையுமே கறிக்கு கறிவேய்ப்பிலை போன்று பயன்டுத்துவதற்கு ஆரம்பித்தது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடனை பெறவும் ஐ.நா. பாதுகாப்பு சபையில் தனக்கு ஆதரவான வாக்குகளை பெறவும் என தந்திரமாக காய்களை நகர்த்தி, பக்குவமாக படைநகர்த்தலாம் என்ற திட்டத்துடன் நகர்ந்த அமெரிக்காவையும் இந்தியாவையும் சிறிலங்கா பகடைக்காயாக்கி தனது காரியங்களை நிறைவேற்றிக்கொண்டது.

சிறிலங்காவின் இந்த திருக்கூத்துக்களுக்கு முடிவு கட்டுவதற்கு தீர்மானித்த அமெரிக்கா கடந்த மாதம் தனது முதலாவது அடியினை தூக்கிவைத்தது. அதாவது, அமெரிக்க இராஜாங்க திணைக்களம் விடுத்து மிகமுக்கியமான அறிக்கையில், சிறிலங்கா படைகள் தமிழ்மக்களுக்கு எதிராக மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான விரிவான அறிக்கை ஒன்றை விடுத்து, சிறிலங்காவுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினையும் பரபரப்புக்கு உள்ளாக்கியது. இதற்கு அடுத்ததாக சிறிலங்காவின் உள்நாட்டு அரசியலையே லாவகமாக பயன்படுத்தி திமிறிக்கொண்டிருக்கும் மகிந்த அரசின் தலையில் குட்டு வைப்பதற்கு முடிவுசெய்தது.

அதாவது, சிறிலங்காவில் போர் முடிவடைந்தகையோடு அப்போதைய இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு அந்நாட்டு அரச அதிபர் மகிந்த எவருமே எதிர்பாராத முடிவை அறிவித்தார். அதாவது, அவரை இராணுவ தளபதி பதவியிலிருந்து கீழிறக்கி எந்த அதிகாரமும் அற்ற வெற்றுப்பதவி ஒன்று அவருக்கு வழங்கப்பட்டது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை களத்தில் நின்று வழிநடத்தி அதில் வெற்றியை படைத்த மாவீரன் என்று சிறிலங்கா படையினர் மத்தியில் மட்டுமல்லாமல் சிங்கள மக்கள் மத்தியிலும் அவரது பிரபலம் பரவிவிட்டதாக மகிந்த சகோதரர்களுக்கு தொற்றிய தீராத பயமே, பொன்சேகாவை இராணுவ தளபதி பதவியிலிருந்து கீழிறக்குவதற்கு ஆதார காரணமாக அமைந்தது. இதனை அடுத்து, கொழும்பில் சரத் பொன்சேகா தரப்புக்கும் மகிந்த அரசுக்கும் இடையில் உள்ளுர பலத்த முறுகல் நிலவிவந்தபோதும் அது வெளியில் தெரிய இருதரப்புமே விடவில்லை.

 

ஆனால், தமது உத்தரவுக்கு கட்டுப்படாதது மட்டுமல்லாமல் தம்மையே ஏக எதிரியாக பார்க்கும் மகிந்தவுக்கு பாடம் கற்பிப்பதற்கு தருணம் பார்த்துக்கொண்டிருந்த அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் சரத் பொன்சேகா – மகிந்த முறுகல் விவகாரம் அருமருந்தாக அமைந்தது. இதனை பயன்படுத்தியே நாடகத்தை ஆரம்பித்து அரங்கேற்றிவிட முடிவெடுத்த அமெரிக்கா, தனது சார்பு ஐக்கிய தேசிய கட்சியுடன் பேச்சுக்களை நடத்திய பின்னர் காய்களை நகர்த்த ஆரம்பித்தது.

அதன் ஒவ்வொரு கட்டமாக,

- அமெரிக்க விசாவை நீடிப்பதற்காக அங்கு சென்ற சரத் பொன்சேகாவை விசாரணை செய்யப்போவதாக ஒரு கதையை உலாவ விட்டு, தாம் சரத் பொன்சேகாவை மனித உரிமைகளை மீறிய நபராக பார்ப்பதாக ஒரு விம்பத்தை உருவாக்கி, அவரை மகிந்த அரசின் ஆளாகவே தாம் பார்ப்பதாகவும் ஒரு பிரமையை தோற்றுவித்துவிட்டு -

- சிறிலங்காவின் அடுத்த அரச தலைவர் தேர்தலில் போட்டியிடுமாறும் அதற்கு சகல ஆதரவும் ஆசீர்வாதமும் தம்பக்கமிருந்து கிடைக்கும் என்று உறுதியுமளித்து -

பொன்சேகாவுக்கு கை காட்டி அனுப்பிவைத்திருக்கிறுது அமெரிக்கா. ஜே.ஆர். முதல் ரணில் வரை அமெரிக்காவுக்கு ஆராத்தி எடுக்கும் ஐக்கிய தேசிய கட்சியும் – இழுத்து மூட வேண்டிய நிலையில் உள்ள – தமது கட்சியின் தற்போதைய நிலையை தூக்கிநிறுத்துவதற்கு இதுவே சரியான சந்தர்ப்பம் என்ற முடிவுடன் பொன்சேகாவை அடுத்த அரச தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவதற்கு அடித்துப்பிடித்துக்கொண்டு நிற்கிறது. ஓய்வுபெற்ற – சிங்கள மக்கள் மத்தியில் பிரபலாமன – இராணுவ அதிகாரியை அரசியலுக்கு கொண்டுவரவேண்டும் என்று ஜானக பெரேரா விடயத்தில் ஐ.தே.க. மேற்கொண்ட நகர்வு அவரது மறைவுடன் மறைந்துபோயிருந்து. தற்போது, பொன்சேகாவை கண்டவுடன் ஐ.தே.க. பூரித்துப்போயுள்ளது.

மறுபுறத்தில்

மகிந்த அரசை வழிக்கு கொண்டுவரவேண்டும் என்று இந்தியா விரும்பியிருந்தபோதும், ஐக்கிய தேசிய கட்சியை ஆட்சிக்கு கொண்டுவரவேண்டும் என்ற ஆர்வம் அதற்கு இருந்ததில்லை. ஆனாலும், அணில் ஏற விட்ட நிலையிலுள்ள இந்தியாவுக்கு தற்போது இதைவிட்டால் வேறு வழியுமில்லை.

வேகமாக அரங்கேறும் அமெரிக்காவின் இந்த அதிரடி திட்டங்களால் திகைத்துப்போயுள்ள இந்தியா, எதிர்க்கட்சி தலைவர் ரணிலை அவசர அவசரமாக இந்தியாவுக்கு அழைத்து, பொன்சேகா விவகாரம் தொடர்பாக பேச்சு நடத்திவருகிறது.

இந்த அரசியல் ஆடு – புலி ஆட்டத்தில் தமிழர் நிலைப்பாடு என்ன என்பதை அடுத்த பத்தியில் பார்ப்போம்.

நன்றி: ஈழநேஷன்


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ரத்த வெறி யுத்ததில் கிச்சன் கேபினெட்


த்தனையோ உயிர்களை இரக்கமின்றி அழித்துமுடித்த இலங்கை மண்ணில், அதிகாரத்தில் இருந்தவர்களே மோதிக்கொள்ளும் காட்சிகளில்கூட நெஞ்சதிர வைக்கும் திருப்பங்கள்..! நெருங்கிய நண்பர்களாக இருந்த இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவும், ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாவும் பகைவர்களாக முறுக்கிக்கொண்ட விவகாரம்... இப்போது ராஜபக்ஷே குடும்பத்துக்குள்ளேயே எதிர்பாராத சச்சரவைக் கிளப்பிவிட்டிருக்கிறது. எல்லாமே பதவி மற்றும் உயிர் பயத்தில் அரங்கேறும் திருப்பங்கள்தான்!

அமெரிக்க அரசின் 'போர்க்குற்ற விசாரணை'க்குப் போகாமல் இலங்கைக்கே திரும்பிவிட்ட ஃபொன்சேகா... ஏர்போர்ட்டில் குழுமியிருந்த மீடியாக்களிடம்,

'நாட்டைக் காட்டிக் கொடுக்கும் எந்த விதமான மோசமான நிகழ்வுகளையும் நான் செய்ய மாட்டேன்!' என வீரா வேசமாகப் பேசியிருந்தார். ''இதுவே ஒருவகை அரசியல் அறைகூவல்தான்!'' என்று விளக்கம் கொடுக்கிறார்கள், இலங்கைப் பத்திரிகையாளர்கள். அவர்களிடத்தில் பேசினோம்.

''ஃபொன்சேகா, அமெரிக்கா விசாரணைகளில் கலந்து கொள்ளாமல் நாடு திரும்பிட்டார்னு தெரிஞ்சதும், இலங்கை அதிபர் தரப்பு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. ஆனால், அந்தத் தரப்புக்கேதெரியாமல் அமெரிக்காவிடம் சில வாக்குமூலங்களைக் கொடுத்து விட்டுத்தான் திரும்பியிருக்கிறார் ஃபொன்சேகா. அவர் அமெரிக்காவிலிருந்து கிளம்புவதற்கு முதல் நாள்... நவம்பர் 3-ம் தேதி, அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் சிலர் அவரை சந்திச்சிருக்காங்க. அப்போது ஒரு டேப்பை அவருக்குப் போட்டுக் காட்டி னார்கள். இலங்கையின் அம்பலாங்கொடையில் நடந்த ஒரு விழாவில் ஃபொன்சேகா பேசிய உரை அதில் இருந்தது. புலிகளுடனான இறுதி யுத்தத்தின்போது உலக ராணுவச் சட்டங்களை மீறி செயல்பட வேண்டியிருந் ததாகவும், வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த ஆயிரத்துக்கும் அதிகமான புலி உறுப்பினர்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றதாகவும் ஃபொன்சேகா அதில் கூறியிருந்தார்.

'ஐ.நா-வின் சர்வதேச நீதிமன்றத்தில் போர்க்குற்றங்கள் தொடர்பான வழக்கைப் பதிய இந்த டேப் ஆதாரம் ஒன்றே போதும்...' என அமெரிக்க அதிகாரிகள் ஃபொன் சேகாவுக்கு கிடுக்கிப்பிடி போட்டிருக்கிறார்கள். உடனே, 'முப்படைகளின் தளபதி என்ற முறையில் அதிபர் இடும் உத்தரவுகளை நான் நிறைவேற்றித்தான் ஆகவேண்டும். அந்த வகையில் அதிபரின் உத்தரவுப்படிதான் எல்லாமே நடந்தது!' என்ற ரீதியில் ஒரு வாக்குமூலத்தைக் கொடுத்த ஃபொன்சேகா, சில ஆதாரங்களையும் அளித்திருக்கிறார். அதோடு, இலங்கையின் அதிபர் தேர்தலில் பொது வேட்பாளராய் தான் களமிறங்க நினைப்பதையும் கூறியிருக்கிறார். 'உங்களின் அதிகாரபூர்வமான விசா ரணையில் நான் கலந்துகொண்டால், என் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டை இலங்கையில் பாய்ச்சுவார்கள். அதன்பிறகு நான் தேர்தலில் போட்டியிட முடியாமல் போகும்!' என்று தன் நிலையை விளக்கியிருக்கிறார்.

தேவைப்படும்போது வேறு வழிகளில் ஒத்துழைக்க வேண்டும் என்றநிபந்தனையோடுதான் அவர்திரும்பிப் போக, அமெரிக்காவும் சம்மதித்தது. தற்போது, வாக்குமூலத்தோடு அவர் அளித் திருக்கும் சில ஆதாரங்களை வைத்து வருகிற 24-ம் தேதிக்குள் சர்வதேச நீதிமன்றத்தில் போர்க்குற்றங்கள் தொடர்பாக வழக்குப் பதிய அமெரிக்கா முயற்சி செய்தது. இதெல்லாம் தாமதமாகத்தான் அதிபர் தரப்புக்குத் தெரிந்திருக்கிறது. உடனே அலரி மாளிகைக்கு வந்து அதிபரையும், பாதுகாப்புச் செயலர் கோத்தபயவையும் சந்தித்து விளக்கங்களை அளிக்கும்படி ஃபொன்சேகாவுக்கு உத்தரவு அனுப்பியிருக்கிறார், அதிபரின் முதன்மைச் செயலர் லலித் வீரதுங்க. கிட்டத்தட்ட ஐந்து முறை உத்தரவு அனுப்பியும் அலரி மாளிகைக்கு செல் வதையே தவிர்த்திருக்கிறார் ஃபொன்சேகா. அதிபர் ராஜபக்ஷேவே ஒரு முறை தொடர்புகொண்டும், பேசுவதைத் தவிர்த்திருந்திருக் கிறார்.

இதில் கோபத்தோடு பதற்றமும் அடைந்துவிட்டது அதிபர் தரப்பு. ஃபொன்சேகாவை எந்த வகையிலும் நம்பமுடியாது என்று முடிவெடுத்து, அதிரடியாகச் சில காரியங்களைச் செய்துள்ளது. இலங்கையில் அதிபர் மற்றும் அரசு பாதுகாப்பு விஷயங்களை, ஃபொன்சேகா கட்டுப்பாட்டிலுள்ள சிங்கள ரெஜிமென்ட்தான் இவ்வளவு காலமாகச் செய்து வந்தது. தற்போது, அந்த ரெஜிமென்ட்டை அந்தப் பணியிலிருந்து விலக்கி, கஜபா ரெஜிமென்ட்டிடம் அந்தப் பணியைக் கொடுத்திருக்கிறார்கள். அதோடு, கொழும்பில் முக்கியப் பணிகளில் இருந்த ஃபொன்சேகாவின் நம்பிக்கைக்குரிய ராணுவ அதிகாரிகளையும் தலைநகரிலிருந்து உஷாராக பணியிட மாற்றம் செய்து, வடக்குப் பிரதேசத்துக்கு அனுப்பிவிட்டனர். கூடவே, ஃபொன்சேகாவின் பாது காப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த ராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த எட்டு அதிகாரிகள் உட்பட 28 பேரை வேறு பணியிடங்களுக்கு கோத்தபயவின் உத்தரவுப்படி மாற்றியிருக்கிறார், அந்தப் பிரிவின் பொறுப்பாளரான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர. ஒருவேளை, நாட்டில் ராணுவப் புரட்சியை ஏற்படுத்தவும், அதிபர் குடும்பத்தைச் சிறைப்பிடிக்கவும் ஃபொன் சேகா திட்டமிட்டால்... அதை சமாளிக்கவே இந்த நடவடிக்கைகள் என்று அதிபரின் அலரி மாளிகையிலிருந்தே தகவல் கசிகிறது.'' என்று கூறுகிறார்கள் இந்தப் பத்திரிகையாளர்கள்.

இதற்கிடையே, தற்போதைய ராணுவத் தளபதியான ஜெனரல் ஜெகத் ஜெயசூர்ய, 'ஃபொன்சேகாவுக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்பது தவறு. வன்னி வெற்றிக்காகவே கூட்டுப்படைகளின் ராணுவத் தளபதியாக அவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதுவு மில்லாமல் அதிபர் மகிந்தாவின் அரசியல் தலைமையே இந்த ராணுவ வெற்றிக்குக் காரணமேயன்றி, வேறு யாரும் இந்த ராணுவ வெற்றிக்கு சொந்தம் கொண்டாட முடியாது' என மீடியாக்களிடம் ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார். இதில், ஃபொன்சேகா தரப்பும் ரொம்ப சூடாகி, 'இலங்கையில் அரசியலில் ஈடுபடும் உரிமை அனைவருக்கும் உண்டு. இதுதொடர்பாக கேள்வி எழுப்பும் உரிமை யாருக்கும் இல்லை' என பதிலடி கொடுத்திருக்கிறது. இதனிடையே, 'இப்படியே இந்த விவகாரங்களை நீடிக்க விடமுடியாது... கூட்டுப்படைகளின் தலைமைத் தளபதி பதவி உள்ளிட்ட எல்லாப் பதவிகளையும் ஃபொன்சேகா ராஜினாமா செய்துவிட்டு, தன் பலத்தை உடனடி யாக அதிபர் குடும்பத்துக்குக் காட்டவேண்டும்' என்று அவருடைய ஆதரவாளர்களும் உசுப்பத் தொடங்கியிருக்கிறார்களாம். ஃபொன்சேகாவோ, 'என் பதவி முடியும் டிசம்பர் 18-ம் தேதிக்குப் பிறகு அதிரடியைப் பாருங்கள்' என்று அவர்களை சமாதானப்படுத்தி வருகிறாராம். இந்தக் கூத்துகளுக்கு நடுவில்தான் ராஜபக்ஷே குடும்பத்துக்குள்ளேயே புதிய புயல் வீசத் தொடங்கியிருக்கிறது! ராஜபக்ஷேவின் மனைவி சிராந்தியும், ஃபொன்சேகாவின் மனைவி அனோமாவும் ரொம்ப நெருக்கமானவர்கள். அதிபருக்கும் ஃபொன்சேகாவுக்கும் மோதல்கள் உச்சத்தை அடைந்தாலும்... இவர்களுக்குள் நட்பு இழை இன்னும் அறுபடவில்லையாம். அண்மையில் அதிபர் மனைவி சிராந்தியை தொடர்புகொண்ட அனோமா, 'நடக்கும் அத்தனை குழப்பங்களுக்கும் பாதுகாப்புச் செயலரான கோத்தபயவின் அவசர முடிவுகள்தான் காரணம்' என குற்றம்சாட்டி இருக்கிறாராம். இதனால் பிரச்னையை சுமுகமாக்க நினைக்கும் சிராந்தி, 'கோத்தபயவை பதவியிலிருந்து நீக்கி விட்டால் ஃபொன்சேகாவை சமாதானப்படுத்தி அரசியல் களத்தில் இறங்கவிடாமல் தடுக்கலாம்' என ராஜபக்ஷேவிடம் கூறியதோடு, 'உங்கள் பதவியைக் காப்பாற்றிக்கொண்டு, ஃபொன்சேகாவையும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அதுவே வழி' என்றும் கூறத் தொடங்கியிருக்கிறாராம். கோத்தபயவை நீக்கிவிட்டு முன்னாள் ராணுவத் தளபதி ஜயலத் வீரக்கொடியை பாதுகாப்பு செயலராக நியமிக்கவேண்டும் என அதிபர் ராஜபக்ஷேவை நெருக்குகிறாராம் அவர் மனைவி.

ஆனால், மற்றொரு சகோதரான பசில் ராஜபக்ஷே உள்ளிட்டோர், 'எக்காரணம் கொண்டும் கோத்தபயவுக்கு வீழ்ச்சி ஏற்படுத்துவதை ஏற்க முடியாது' என்று அதிபரின் குடும்பத்துக்கு எதிராகத் திரும்பும் முடிவில் இருக்கிறார்களாம். நாட்டுப் பிரச்னை இப்படி வீட்டுக்குள்ளும் புயல் கிளப்புவதால் திண்டாடுகிறாராம் அதிபர். ஆனால் சிராந்தியோ, கோத்தபய பாதுகாப்பு செயலர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்ற உறுதிமொழியுடன் முதல் கட்டமாக சமாதானத் தூதராக அனோமாவை நேரில் அழைத்து சந்திக்கப் போவதாக பலமான ஒரு பேச்சு உலவுகிறது.

கொலைவெறி அரசியலோடு இப்போது குடும்ப அரசியலும் சேர்ந்துகொள்ள... இலங் கையில் பரபரப்புக்குப் பஞ்சமேயில்லை!

இதற்கிடையில், 'ஃபொன்சேகா அதிபர் தேர்தலில் நிற்கும் பட்சத்தில் தமிழர் கட்சிகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். நாங்கள் கூறும் நான்கு விஷயங்களை ஏற்றுக்கொண்டால் அவரை ஆதரிக்கத் தயார்!' என வெளிப்படையாக அறிவித்திருக்கிறார், தமிழ் கட்சிகளில் ஒன்றான 'ஜனநாயக மக்கள் முன்னணி'யின் தலைவரும் எம்.பி-யுமான மனோ கணேசன்.

அவரிடம் பேசினோம். ''வவுனியாவில் முள்வேலிக்குள் அடைபட்டுக்கிடக்கும் மக்களை அவர்களது சொந்த இடத்தில் மீள் குடியமர்த்துவது, தமிழர்களின் பாரம்பரிய இடங்களில் சிங்கள ஆக்கிரமிப்பைத் தடுத்துக் குடியேற்றத்தைச் சிதைக்காமல் செய்வது, ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்வது, இலங்கையில் நிகழும் தேசிய இனப்படுகொலையைத் தடுக்க முயல்வது போன்ற விஷயங்களில் சரத் ஃபொன்சேகா சாதகமாக பதிலளித்தால்... அவரைப் பொது வேட்பாளராக ஆதரிக்க நாங்கள் தயார்!'' என்றார்.  

இலங்கை அரசியல் நோக்கர்களோ, ''வரப்போகும் அதிபர் தேர்தலில் ராஜ பக்ஷேவை தோற்கடிப்பதற்காகவே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி இருக்கின்றன. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு, சிஹகய உறும, தமிழ்க் கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணி உள்ளிட்ட 20 கட்சிகள் ஒன்றிணைந்துதான் இந்தக் கூட்டணியை உருவாக்கியிருக்கின்றன. இலங்கையில் தமிழர்களிடம் பெரும்பான்மை பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இந்தக் கூட்டணியில் இணையும் வாய்ப்புகள் சாத்தியம். அதோடு ஃபொன்சேகா பொது வேட்பாளராக நிறுத்தப்படும் பட்சத்தில் தாங்களும் இந்தக் கூட்டணிக்கு ஆதரவளிக்கத் தயார் என ஜே.வி.பி-யும் கூறியுள்ளது. இந்தக் கூட்டணியின் சார்பாகத்தான் பொது வேட்பாளராக ஃபொன்சேகா அதிபர் தேர்தலில் முன்னிறுத்தப்படவிருக்கிறார். மிக வலுவான இந்தக் கூட்டணியின் பலத்தோடு சிங்கள மக்களிடம் தற்போது ஃபொன்சேகாவுக்கு இருக்கும் ஆதரவும் வெளிப்படும் பட்சத்தில், ராஜபக்ஷேவை மிக எளிதில் ஃபொன்சேகா தோற்கடித்து விடுவார். அதிபர் தேர்தலில் அவர் வெற்றியடைந்ததும் அமையப் போகும் தற்காலிக அரசின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்படுவதாகத்தான் அவர்களுக்குள் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது...'' என்கிறார்கள்.

இந்நிலையில் கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கேயை சந்தித்த பத்திரிகையாளர்கள், ஃபொன்சேகா பொதுவேட்பாளராக நிறுத்தப்படுவது குறித்துக் கேட்டனர். ''பொதுவேட்பாளரை களத்தில் நிறுத்துவதில் எனக்கு சம்மதம்தான். ஃபொன்சேகா பொதுவேட்பாளராக வேண்டுமென்றால், அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஜே.வி-பியும் ஒத்துழைக்க வேண்டும். அதுவுமில்லாமல் ஃபொன்சேகா தமிழ் மக்கள் தொடர்பான தனது நிலைப்பாட்டை விளக்குவதோடு, அவர்களுக்குத் திருப்தி அளிக்கக்கூடிய வாக்குறுதிகளையும் அளிக்க வேண்டும்!'' என்று சொல்லியிருக்கிறார்.

- மு.தாமரைக்கண்ணன்   
 

source:vikatan
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

கொம்புசீவும் அமெரிக்காவும் தடுமாறும் இந்தியாவும் – இதயச்சந்திரன்

 

amarikka ithyaபோர் முடிவடைந்ததும் நடைபெறப்போகும் தேர்தல்கள், புதிய களமுனைகளைத் திறந்துள்ளன. இதில் ஜெனரல் சரத் பொன்சேகாவை மையமிட்டுச் சுழலும் அரசியல் காய்நகர்த்தல்கள் புதிய கூட்டணிகளை உருவாக்குகின்றன.

ஜனாதிபதி தலைமையிலான ஆளும் கட்சிகள், ரணிலை முன்னிலைப்படுத்தும் எதிர்க்கட்சியினர் தமிழ்தேசியக் கூட்டமைப்பினரோடு இணையும் சிறுபான்மையின தேசியக் கட்சிகள் என்பவற்றோடு நான்காவதொரு அணியாக அரசியல் களத்தில் ஜெனரல் சரத் பொன்சேகாவும் சேர்ந்து கொள்வாரென எதிர்வு கூறப்படுகிறது.அவர் தேர்தலில் இறங்கி தற்போதைய ஆட்சியாளர்களுக்குச் செல்லும் வாக்குகளைப் பிரிக்க வேண்டுமென இரண்டு தரப்பினர் விரும்புகின்றனர். உள்நாட்டைப் பொறுத்தவரை ஆட்சியைக் கைப்பற்ற விரும்பும் ரணில் தலைமையிலான எதிர்க்கட்சியினரும் வெளியுலக வல்லரசாளர்களைப் பொறுத்தவரை அமெரிக்க தலைமையிலான மேற்குலகினருமே இந்த இரு தரப்புகளுமாகும். ஜெனரல் சரத் பொன்சேகா, அமெரிக்கப் பயணம் மேற்கொள்ளும் முன்பாக அவரை உசுப்பேற்றி கொம்பு சீவி விடும் பிரசாரங்களில் எதிர்க்கட்சியினர் மறைமுகமாக ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் முன்பு எழுந்தன.

படைத் தரப்பினர் அரசியலில் ஈடுபடக் கூடாதெனவும் அது குறித்த சர்ச்சைகளைக் கிளறி விடுவது குற்றமாகுமென்றும் அரசு சில எதிர்நகர்வுகளை மேற்கொண்டது. ஆனாலும் குடும்ப ஆட்சிமுறை நோக்கி, நாட்டை நகர்த்துவதாக குறை சொல்லும் சில சிங்கள கடும் போக்குக் கட்சிகள், அரசின் அச்சுறுத்தல்களைக் கவனத்தில் கொள்ளாது ஜெனரலுடன் பல சந்திப்புகளை நிகழ்த்தின. தமது அரசியல் இருப்பிற்காகவும் எதிர்கால நலனுக்காகவும் சரத்தின் அரசியல் பிரவேசத்தை ஜே.வி.பி.யும் ஜாதிக ஹெல உறுமயவும் மனதார வரவேற்பார்களென்பதே உண்மையாகும். அதேவேளை, பிரதான எதிர்க்கட்சியின் தந்திரோபாயம், இதிலிருந்து முற்றாக வேறுபடுகிறது. ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சியின் ஏகோபித்த வேட்பாளராக சரத் பொன்சேகாவை நிறுத்தினால் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு மற்றும் மனோ கணேசனின் ஆதரவு தமக்குக் கிடைக்காதென்பதை ரணில் அறிவார்.

இருப்பினும் சரத் பொன்சேகாவை அரசியல் ஆடுகளத்தில் மிதக்க விட்டு இறுதியில் வேறொருவரை ஜனாதிபதி முதன்மை வேட்பாளராக நிறுத்துவது என்கிற உத்தியை எதிர்க்கட்சியினர் மேற்கொள்ளவும் கூடும்.அண்மையில் மேற்கு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட எதிர்க்கட்சி முக்கியஸ்தர் ஒருவர் இத்தகைய கருத்தொன்றை புலம்பெயர் தமிழ் மக்களிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.""பச்சை அட்டை" (green card) வதிவிட அனுமதி கிடைக்கப் பெற்ற ஜெனரல் சரத் பொன்சேகாவின் அமெரிக்க விஜயமும் உள்நாட்டு பாதுகாப்புத் திணைக்களம் மேற்கொள்ள உத்தேசித்திருந்த விசாரணைகளும் கொழும்பு அரசியலில் பல அதிர்வுகளை உருவாக்கியிருந்தன.போரின் இறுதி நாட்களில் நிகழ்ந்தேறிய குற்றங்கள் குறித்து பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ஷவிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகளை சரத்பொன்சேகாவிடம் ஏன் அமெரிக்கா முன்வைக்க முயல்கிறது என்கிற பிரச்சினையும் எழுந்தது.

ஆனாலும் அமெரிக்க அரசோ, இத்தகைய சந்தேகக் கணைகளுக்கும் உத்தியோகபூர்வ அரசின் கேள்விகளுக்கும் எதுவித பதில்களையும் வழங்காமல் கண்ணை மூடிய பூனை போல் இருந்தது. அமெரிக்க அரசின் உள்நாட்டு பாதுகாப்புத் திணைக்களம், சரத் பொன்சேகா மீது விசாரணை நடத்தவிருப்பதாகத் தகவல்கள் வெளிவந்ததும், தேசப்பற்று, தேசிய இறைமைக்கு ஆபத்துவந்துவிட்டது போல் அனைத்து சக்திகளும் ஒருமித்த குரலில் ஆர்ப்பரிக்கத் தொடங்கின. தேசிய அரசியலில் இருந்து அந்நியப்படுத்தப்படும் கையறு நிலைக்குள் தள்ளப்பட்டவர்களே அதிகம் பேசினார்கள். மௌனமாகவிருந்து செயற்பட்டு அமெரிக்கா சீவிய கொம்பு, தேர்தல் களத்தில் ஆளும் கட்சியினரைப் பதம் பார்க்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மேற்குலகின் பாரம்பரிய நட்புச் சக்தியான ஐ.தே. கட்சியினர் மறுபடியும் ஆட்சி பீடமேறுவதற்கு ஜனாதிபதியைப் பலவீனப்படுத்தும் சக்திகளை இயக்க வேண்டிய பிராந்திய நலன் சார்ந்த தேவை அமெரிக்காவுக்கு இருக்கிறது.

அந்த வகையில் ஆளும்கட்சியினரின் வாக்கு வங்கியைச் சிதைத்து தமக்குச் சார்பானவர்களை ஆட்சிக் கட்டிலில் அமர்த்த வேண்டுமாயின் சிலரின் சுய முனைப்பையும் சுய கௌரவத்தையும் சீண்டி விடக் கூடிய தந்திரோபாய உளவியல் செயற்பாட்டினை அதிகரிக்க வேண்டும். இந்த உளவியல் சார்ந்த உத்தியினையே எதிர்க்கட்சியினரும் கையாள முற்படுகிறார்கள். அமெரிக்காவின் விசாரணைகளை உதாசீனம் செய்து தாய்நாட்டுக்குத் திரும்பிய சரத் பொன்சேகா குறித்து பிரமாண்டமான கதாநாயகத்துவ பிம்பம், சிங்கள மக்களிடையே முன்னெப்பொழுதும் இல்லாதவாறு பரந்து விரிந்து உயர்ந்து நிற்கிறது. இந்த விசாரணை விவகாரம், ஒரு தனித்துவமான ஒப்பற்ற சிங்கள தேசிய ஆளுமையை ஜெனரலுக்கு வழங்கியுள்ளமையை ஆட்சியாளர்களும் உணர்வார்கள். சம்பள அதிகரிப்பு மற்றும் போரில் பாதிப்புற்றோர் மீதான கரிசனை போன்ற விடயங்கள், அமெரிக்க விசாரணைக் காலத்தில் நடந்ததை குறித்துக் கொள்ள வேண்டும்.

அத்தோடு வடக்கு கிழக்கில் நிலை கொண்டுள்ள படையினரின் ஆட்சியாளர் குறித்த பார்வை, தென்னிலங்கை மக்களிடையே குறிப்பிடத்தக்க அளவிற்கு அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது. இவை தவிர, எதிர்க்கட்சிகளுக்கிடையே உருவாகும் புதிய கூட்டுகள் குறித்தும் அண்மிக்கும் தேர்தல்களில் அவை உருவாக்கப் போகும் வலிமைமிக்க தாக்கங்கள் பற்றியும் நோக்க வேண்டும். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் ஸ்ரீல.சு.க. (மக்கள் பிரிவு)வும் முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி (மனோ கணேசன்)என்பவற்றோடு பல சிறு கட்சிகளும் இணைந்து ஐக்கிய தேசிய முன்னணி என்கிற புதிய கூட்டு உருவாகியுள்ளது. அதேவேளை இப் பிரதான எதிர்க்கட்சிகளின் கூட்டில் அங்கம் வகிக்கும் அதே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் மனோவின் ஜனநாயக மக்கள் முன்னணியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிலான சிறுபான்மைத் தேசிய இனங்களின் புதிய கூட்டணியிலும் இணைந்து கொள்கின்றன.

இனப்பிரச்சினைத் தீர்விற்கான பொதுக் கருத்தொன்றை நிர்மாணிக்கவும் எதிர்கால அரசியல் வேலைத் திட்டங்களுக்கான புதிய தளமொன்றை உருவாக்கவும் இக்கூட்டணி நிறுவப்படுவதாகச் சொல்லப்படுகிறது. எந்த வேளையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாரிக்கும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முழுமையான வரைவு வெளியிடப்படலாம் என்கிற நிலையில் அவை குறித்து சிறுபான்மை தேசிய இனக் கட்சிகளுக்கிடையே ஒரு தெளிவான புரிதல் உருவாகி, எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இறுதியான தீர்வுத் திட்டம் வெளிவர முன்னர், பொதுத் தேர்தல் அல்லது ஜனாதிபதி தேர்தல் நடைபெறலாம். அதற்கான சாத்தியப்பாடுகளே அதிகம் காணப்படுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். ரணில் வகுத்திருக்கும் தேர்தல் வியூகத்தில் முஸ்லிம் காங்கிரசையும் ஜனநாயக முன்னணியைப் பயன்படுத்தி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமையிலான புதிய கூட்டை தேர்தல் காலத்தில் தமது அணியில் இணைத்துக் கொள்ளலாமென்கிற தந்திரோபாயமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும்,கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் கட்சியும் இணைந்து கொள்ளும் சாத்தியப்பாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. பயங்கரவாதத்தை ஒழித்த மஹிந்த ராஜபக்ஷவுக்கே வருகிற ஜனாதிபதித் தேர்தலில்தனது முழுமையான ஆதரவு கிட்டுமென முதலமைச்சர் பிள்ளையான் பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதில் இந்தியா என்கிற பிராந்திய மேலாதிக்க மனோ நிலையாளர்கள், இத்தேர்தலில் எந்தக் கூட்டிற்குத் தமது மறைமுகமான ஆதரவை வழங்குவார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். போர் வெற்றியின் பிராந்தியப் பங்காளர்கள், தமது ஆதரவைத் தொடர்ந்தும் ஆட்சியாளர்களுக்கே வழங்குவார்களென்று தெரிகிறது. அதாவது சீனா, அமெரிக்கா மேலாதிக்க ஊடுருவலை தடுக்க வேண்டுமாயின், போர்க்கள உறவினை நீடிக்க வேண்டும்.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் அரசியல் பிரவேசம் நிஜமானால் தற்போதைய ஜனாதிபதியின் வாக்கு வங்கியில் சரிவு நிலை ஏற்படும். அந்த அக்கினிப் பிரவேசத்தை இந்தியாவால் தடுக்க இயலாது போனாலும் சில வேளைகளில் எதிர்க்கட்சிக் கூட்டோடு இணைய வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடுத்திட அதனால் முடியும். ஏனெனில் ஜனாதிபதித் தேர்தலில் மும்முனை மோதல் ஏற்படுமாயின் தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை கவர்ந்து கொள்பவருக்கே 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்கும் சாத்தியமுண்டு. அரைப் பங்கு இல்லாவிட்டால் அதிகாரமில்லை என்பதே ஜே.ஆர். எழுதிய ஜனாதிபதிக்கான அரசியல் சாசனம்.

இந்நிலையில் புலிகளுக்கு எதிரான போரில் ஒன்று திரண்ட பிராந்திய சர்வதேச வல்லரசாளர்கள், இனி அதிகாரத்தில் யாரை இருத்துவது என்கிற விவகாரத்தில் முட்டி மோதப் போகிறார்கள். தேர்தல் சூறாவளி மையங் கொள்ளும் இந்நிலையில் மே 19 போர் ஓய்விற்குப் பின்னரான முதல் நகர்வில் எவ்வாறு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தனது காலடியை எடுத்து வைக்கப் போகிறதென்பதை தாயக, புலம்பெயர் தமிழ் மக்கள் மிக உன்னிப்பாக அவதானிக்கிறார்கள். போரின் கொடூரங்களும் ஆழ்மனத்தின் ஆறாத இரணமாகி இன்னமும் வலிகளை உயிர்ப்பிய்த்துக் கொண்டிருக்கும் கோர நினைவுகளும் தொலைந்த இருப்புக்களும் தமிழ் மக்களை முட்கம்பி வேலிக்குள்ளும் வதைத்தபடியே இருக்கிறது. 83 இனப்படுகொலை துரத்திய பல மலையகத் தமிழர்கள், வன்னியில் குடியேறி, இன்று வவுனியா முகாம்களில் வாழ்வதையும், இதே நவம்பர் மாதத்தில் இழப்பதற்கு ஏதுமற்ற பெருந்தோட்ட பாட்டாளி மக்கள் நாடற்றவராகியதையும் மறக்க முடியாது.

-இதயச்சந்திரன்

நன்றி.வீரகேசரி



--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

''பாவம் போக்க வந்தீர்களா..?''

 

இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் சகோதரி நிருபமா ராஜபக்ஷேவும் அவரது கணவர் திருக்குமரன் நடேசனும் கடந்த 7-ம் தேதி இரவு திருச் செந்தூர் வந்திருந்தனர். மறுநாள் ராமேஸ்வரம் டிரிப். இந்தத் தகவல் தெரிந்து அங்கு திரண்டுவிட்ட இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர், திருக் குமரன் தம்பதி இருந்த இடத்தில் கறுப்புக்கொடிகாட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இருவரும் கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு, தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்றபோது, அங்கேயும் சிலர் கறுப்புக் கொடி காட்டினார்கள். இந்த இரண்டு சம்பவங்களிலும் சேர்த்து 18 பேரைக் கைது செய்தது காவல் துறை. ராமேஸ்வரத்தில் நிருபர் ஒருவர், ''இலங்கையில் தமிழினத்தை அழித்த பாவத்தைப் போக்கத்தான் ராமேஸ்வரம் வந்தீர்களா..?'' என்று கேட்டு விட... சட்டென்று சூடாகிப் போன திருக்குமரன், ''முட்டாள்தனமாகப் பேசாதீர்கள்...'' என்று சொல்லி விட்டு விருட்டென கிளம்பிவிட்டார்.


source:vikatan

 

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP