சமீபத்திய பதிவுகள்

இளமை 20 : 36 வயதிலும் அசைக்க முடியாத ஹீரோ சச்சின்

>> Sunday, November 15, 2009


 
 

Front page news and headlines today


சர்வதேச கிரிக்கெட் அரங்கில் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் காலடி எடுத்து வைத்து இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. 16வயதில் இந்திய அணிக்காக "பேட்' பிடித்த இவர், 36 வயதிலும் அசைக்க முடியாத "ஹீரோவாக' ஜொலிக் கிறார்.



சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 175 ரன்களை விளாசிய இவர், தனது ஆட்டத்தில் இன்னும் இளமை மாறவில்லை என்பதை அழுத்தமாக நிரூபித்தார். மிக நீண்ட காலமாக அசத்தி வரும் இவரது சாதனை பயணத்தை பார்ப்போம். கடந்த 1973, ஏப்., 24ம் தேதி மும்பையில் பிறந்த சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் இளம் பருவத்தில் இருந்தே கிரிக்கெட் மீது ஆர்வமாக இருந்தார். அண்ணன் அஜித் ஊக்கம் அளிக்க, உள்ளூர் போட்டிகளில் தூள் கிளப்பினார். முதலில் பள்ளி அளவிலான "ஹாரிஸ் ஷீல்டு' போட்டியில் சாதித்து காட்டினார். சிரத்தாஸ்ரமம் பள்ளி அணிக்காக ஆடிய இவர் வினோத் காம்ப்ளியுடன் (349) சேர்ந்து 664 ரன்கள் சேர்த்தார். இதில் சச்சின் மட்டும் 329 ரன்கள் விளாசினார். தியோதர், துலீப், இரானி டிராபி தொடரில் அசத்திய இவர், ஒரு நாள் வலை பயிற்சியின் போது கபில் தேவ் பந்துவீச்சைசுலபமாக சமாளித்தார். இதைகவனித்த மும்பை அணியின் கேப்டன் வெங்சர்க்கார், இவரை தேர்வு செய்தார். இந்த சீசனில் மும்பை அணி சார்பில் அதிக ரன் எடுத்து சாதித்தார் சச்சின். இதையடுத்து இந்திய அணியில் வாய்ப்பு தேடி வந்தது.



டெஸ்ட் அறிமுகம் : கடந்த 1989, நவ. 15ம் தேதி கராச்சியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் சச்சின் அறிமுகமானார். அப் போது அவருக்கு வயது 16 தான். இப்போட்டியில் பாகிஸ்தான் "வேகங்களை' மிக எளிதாக சமாளித்த இவர் 15 ரன்கள் எடுத்தார். சியால் கோட்டில் நடந்த கடைசி டெஸ்டில் வக்கார் யூனஸ் வீசிய பந்து சச்சினின் வாயில் பட்டு ரத்தம் கொட்டியது. இதை பார்த்த கேப்டன் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் "இளம் கன்று பயமறியாது' என்பதற்கேற்ப சிகிச்சை கூட எடுத்துக் கொள் ளாமல் தொடர்ந்து துணிச்சலாக ஆடினார். தனது 17வது வயதில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் டெஸ்ட் சதம் விளாசினார். தொடர்ந்து கலக்கிய இவர் டெஸ்டில் அதிக சதம், அதிக ரன் எடுத்து சாதித்தார்.



ஒரு நாள் போட்டியில் : கடந்த 1989, டிச., 18ம் தேதி குஜ்ரன்வாலாவில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சச்சின் அறிமுகமானார். இதில் வக்கார் யூனஸ் பந்தில் "டக்' அவுட்டானார். முதல் போட்டி ஏமாற்றம் அளித்த போதும், பின்னர் துவக்க வீரராக களமிறங்கி திறமை நிரூபித்தார். 78வது ஒரு நாள் போட்டி வரை சதம் அடிக்காதஇவர், இன்றைக்கு அதிக சதம்,அதிக ரன் அடித்து மகத்தானசாதனையாளராக உள்ளார். சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 175 ரன்களளை விளாசிய இவர், ஒரு நாள் அரங்கில் 17 ஆயிரம் ரன்களை கடந்து, மற்ற வீரர்களால் எட்ட முடியாத சாதனையை நிகழ்த்தினார். இவர் மைதானத்தில் களமிறங்கினாலே ஏதாவது ஒரு சாதனை அரங்கேறிவிடும் என வர்ணிக்கப்படும் அளவுக்கு தொடர்ந்து சாதித்து வருகிறார். "இந்தியாவில் கிரிக்கெட் மதம் என்றால்; சச்சின் தான் கடவுள்' என்று கூறலாம். நாட்டில் அனைத்து தரப்பினரையும் கவர்ந்த இவர், சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமானவர். இதனால் தான் இவரது பெயரில் "காமிக்ஸ்' புத்தகங்கள் கூட எழுதப்பட்டன.



சில சர்ச்சைகள் : கடந்த 20 ஆண்டுகளாக விளையாடி வரும் சச்சின் பெரிய அளவில் சர்ச்சை எதிலும் சிக்கவில்லை. 2001ல் நடந்த தென் ஆப்ரிக்க தொடரின் போது பந்தை சேதப்படுத்தியதாக இவர் மீது புகார் எழுந்தது. பின்னர் இதிலிருந்து விடுபட்டார். டெஸ்ட் அரங்கில் 29வது சதம் அடித்து ஆஸ்திரேலிய ஜாம்பான் பிராட்மேன் சாதனையை சமன் செய்ததற்காக, இவருக்கு "பெராரி' கார் பரிசாக அளிக்கப்பட்டது. இதனை இந்தியாவுக்கு கொண்டு வர வரிவிலக்கு கோரியதற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார். பின்னர் பெராரி கார் நிறுவனமே வரியை செலுத்தி பிரச்னைக்கு தீர்வு கண்டது.



ஒழுக்கமானவர் :  கிரிக்கெட் அரங்கில் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியுள்ள சச்சின், சொந்த வாழ்க்கையில் மிகவும் ஒழுக்கமானவர். களத்தில் எதிரணி வீரருடன் வீணாக மோதிக் கொள்ளாத இவர், மிகவும் பணிவானவர். புகழின் உச்சியில் இருந்த போதும் அடக்கத்துடன் நடந்து கொள்வார். இதனால் தான் அடுத்த தலைமுறை வீரர்களின் "ரோல் மாடலாக' உள்ளார். தனது குழந்தை சச்சின் போல வரவேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் நினைக்கும் அளவுக்கு மிகச் சிறந்த வீரராக உள்ளார்.



அடுத்த இலக்கு : வரும் 2011ல் இந்திய துணை கண்டத்தில் நடக்க உள்ள உலக கோப்பை தொடரில் பங்கேற்க காத்திருப்பதாக சச்சினே அறிவித்துள்ளார். இவர் 2015, உலக கோப்பை தொடரிலும் விளையாடுவார் என கேப்டன் தோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இவர், கிரிக்கெட் அரங்கில் 100 சதங்கள் கடக்க வேண்டும், உலக கோப்பை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் நினைக்கின்றனர். இதனை மனதில் வைத்து இன்னும் பல ஆண்டுகள் விளையாடி ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பார் என நம்புவோம்.



நிரந்தர முதல்வன் : ஒருநாள் போட்டியில் அதிக ரன் எடுத்துள்ளார் சச்சின். இதுவரை 436 ஒருநாள் போட்டியில் பங்கேற்றுள்ள இவர் 45 சதம், 91 அரைசதம் உட்பட 17178 ரன்கள் எடுத்துள்ளார். 154 விக்கெட், 132 கேட்ச் பிடித்துள்ளார். இவரை தொடர்ந்து இலங்கையின் ஜெயசூர்யா (13377 ரன்கள்), ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (12311 ரன்கள்) உள்ளனர்.



சத நாயகன்: ஒருநாள் போட்டியில் இதுவரை 45 சதம் பதிவு செய்துள்ள சச்சின், அதிக சதம் கடந்தவர்கள் வரிசையில் முதலிடத்தில்நீடிக்கிறார். இவரை தொடர்ந்து பாண்டிங் மற்றும் ஜெயசூர்யா(இலங்கை)இருவரும் தலா 28 சதம் பதிவு செய்து இரண்டாவது இடத்தில் உள்ளனர்.



டெஸ்டிலும் "ஹீரோ' : டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற பெருமையை சச்சின் தன்வசப்படுத்தியுள்ளார். இவர் இதுவரை 159 டெஸ்ட் போட்டியில் விளையாடி 42 சதம், 53 அரைசதம் உட்பட 12773 ரன்கள் எடுத்துள்ளார். 44 விக்கெட், 102 கேட்ச் பிடித்துள்ளார்.



* டெஸ்ட் போட்டியில் அதிக சதம் கடந்த வீரர்கள் வரிசையில் சச்சின்முதலிடத்தில் உள்ளார். இவர் இதுவரை 42 சதம் பதிவு செய்துள்ளார்.



தொடர் நாயகன் : ஒருநாள் போட்டியில் அதிக முறை தொடர் நாயகன் விருது வென்ற வீரர்கள் வரிசையில் சச்சின் முதலிடத்தில் உள்ளார். இதுவரை இவர் 14 தொடரில் தொடர் நாயகன் விருது வென்றுள்ளார். இவரை தொடர்ந்து இலங்கையின் ஜெயசூர்யா (11 முறை), தென் ஆப்ரிக்காவின் போலக் (9 முறை) உள்ளனர்.



சகவீரர்கள் யாருமில்லை : கடந்த 1989,நவ., 15ல் இந்திய அணிக்காக பாகிஸ்தானுக்கு எதிராக அறிமுகமானார் சச்சின். அப்போது முதல் டெஸ்டில் இவருடன் விளையாடிய இந்திய வீரர்கள் யாரும் இப்போது அணியில் இல்லை. இவர் மட்டும் இன்னும் நீடிக்கிறார். அந்த அணி விபரம்:ஸ்ரீகாந்த் (கேப்டன்), சித்து, மஞ்ச்ரேக்கர், அசார், மனோஜ் பிரபாகர், சச்சின், ரவி சாஸ்திரி, கபில் தேவ், கிரண் மோரே, அர்ஷத் அயூப், சலீல் அங்கோலா.



தவறான தீர்ப்புகள் : அம்பயர்களின் தவறான தீர்ப்புகளால் கிரிக்கெட் அரங்கில் அதிகம் பாதிக்கப் பட்ட வீரர் சச்சின் தான். கடந்த 1997 ம் ஆண்டு முதல் இது வரை சுமார் 63 முறை அம்பயர்கள் சச்சினுக்கு தவறாக தீர்ப்புஅளித்துள்ளனர்.



இது உண்மை... :



* சச்சின் சதம் அடித்த போட்டிகளில் இந்திய அணியின் நிலைமை?
சச்சின் ஒரு நாள் போட்டிகளில் 45 சதம் அடித்துள்ளார். இதில், 32 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி "சேஸ்' செய்த போட்டிகளில் சச்சின் 14 சதம், 28 அரை சதம் உட்பட 5033 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 56. 55 சதவீதம். ஒரு நாள் தொடரில் 39 பைனல்களில் சச்சின் விளையாடி உள்ளார். இவற்றில் 6 சதம் 10 அரை சதம் உட்பட 1833 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 55.54 சதவீதம். இது ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங்கை (40 போட்டி, 1344 ரன்கள்) விட அதிகம்.



* சச்சின் பலவீனமான அணிகளுக்கு எதிராக அதிக ரன் குவித்துள்ளாரா?
இந்தக் கருத்தும் பொய் தான். சச்சின் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிகம் சாதித்துள்ளார். டெஸ்டில் 7, ஒரு நாள் போட்டிகளில் 9 சதங்களை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பதிவு செய்துள்ளார். இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட உலகின் தரம் வாய்ந்த அணிகளுக்கு எதிராகவும் அதிக ரன்களை குவித்து அசத்தியுள்ளார்.



* நெருக்கடியான நேரங்களில் சச்சின் சொதப்புகிறார் என்ற கருத்து உண்மையா?
இல்லை. சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐதராபாத்தில் நடந்த 5 வது ஒரு நாள் போட்டியில் தனி ஆளாக இந்திய அணியின் வெற்றிக்குப் போராடிய சச்சின் 175 ரன்கள் குவித்தார். பைனல் போட்டிகளில் 6 சதம் அடித்த ஒரே வீரர் சச்சின் தான். வெற்றி இலக்கை "சேஸ்' செய்த போட்டிகளில் சச்சின் 17 சதங்களை கடந்துள்ளார். இதில் 14 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.



* அந்நிய மண்ணைக் காட்டிலும் இந்திய மண்ணில் அதிகம் சாதித் துள்ளாரா? 
இந்தியாவை காட்டிலும் அந்நிய மண்ணில் தான் சச்சின் அதிகம் சாதித் துள்ளார். டெஸ்ட் அரங்கில் சச்சின் பதிவு செய்த 42 சதங்களில் 24 அந்நியமண்ணில் அடித்தவை. இந்தியாவில் அடித்தவை 18 சதம். ஒரு நாள் அரங்கில் அடித்த 45 சதங்களில் அந்நிய மண்ணில் அடித்தவை 28. இந்தியாவில் 17 சதங்கள்.



சச்சின் வாழ்க்கையில் "மறக்க முடியாத 20' : 1. சச்சின் டெண்டுல்கரின் தந்தை ரமேஷ் டெண்டுல்கர் மராத்திய மொழியில் நாவல்கள் பல எழுதியுள்ளார். பிரபல இசை அமைப்பாளர் சச்சின் தேவ் வர்மன் மீதான ஈர்ப்பின் காரணமாக, தனது மகனுக்கு சச்சின் டெண்டுல்கர் என பெயரிட்டார். 
2. தனது சிறு வயதில் வேகப்பந்து வீச்சாளராக வேண்டும் என்று தான் சச்சின் விரும்பினார். போதிய உயரம் இல்லாததால்,ஆஸ்திரேலிய பவுலர் டெனிஸ் லில்லி, சச்சினை பேட்டிங்கில் கவனம் செலுத்தும்படி ஆலோசனை வழங்கினார். 
3. சச்சினின் பயிற்சியாளர் ராம்காந்த் அச்ரேகர் "ஸ்டெம்பின்' மீது ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து, சச்சினை அவுட்டாக்கும்பவுலர்களுக்கு அது பரிசு என்பார்.பவுலர்கள் தோல்வி அடைய, சச்சின் 13 நாணயங்களை பரிசாகப் பெற்றார். 
4. தன்னை விட 5 வயது மூத்த அஞ்சலியை கடந்த 1995 ம் ஆண்டு காதலித்து மணந்தார் சச்சின். இவர்களுக்கு சாரா(12 வயது) என்ற மகளும், அர்ஜூன்(10 வயது) என்ற மகனும் உள்ளனர். 
5. அடுத்தவர்களுக்கு உதவும் குணம்சச்சினுக்கு அதிகம் உண்டு. "அப்னாலயா' என்ற என்.ஜி.ஓ., மூலம் 200 ஏழைக் குழந்தைகளுக்கு ஆண்டு தோறும் "ஸ்பான்சர்' செய்து வருகிறார். 
6. பேட்டிங், பவுலிங், பீல்டிங் எனஅனைத்திலும் வலது கை பழக்கம்கொண்டவர் சச்சின். ஆனால் எழுதுவதும், ரசிகர்களுக்கு "ஆட்டோ கிராப்'வழங்குவதும் இடது கையில் தான். 
7. சச்சின் 14 வயதில் இருக்கும் போது, கவாஸ்கர் தனது கால் "பேடுகளை' அவருக்குப் பரிசாக வழங்கினார். தவிர, ரஞ்சிக் கோப்பையில் முதன் முதலாக களமிறங்கும் போது, திலீப் வெங்சர்க்கார் தனது "பேட்டை' சச்சினுக்கு பரிசளித்தார். 
8. கடந்த 1999 ம் ஆண்டு உலககோப்பை தொடரின் போது, சச்சினின் தந்தை ரமேஷ் டெண்டுல்கர் மரணமடைந்தார். தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட பின், மீண்டும் இங்கிலாந்து திரும்பினார் சச்சின். கென்யாவுக்கு எதிரான போட்டியில் சதமடித்து அதனை தந்தைக்கு சமர்ப்பித்தார். 
9. ராஜிவ் கேல் ரத்னா (1997-98), அர்ஜூனா விருது (1994), பத்ம ஸ்ரீ (1999), விஸ்டன் சிறந்த வீரர் விருது (1997), பத்ம விபூஷன் (2008) ஆகிய விருதுகளை சச்சின் பெற்றுள்ளார்.
10. "ஆல்-டைம்' சிறந்த டெஸ்ட், ஒருநாள் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 2 வது இடம் வழங்கி சச்சினை கவுரவித்துள்ளது பிரபல விஸ்டன் இதழ். 
11. நியூசிலாந்துக்கு எதிராக கடந்த 1994 ம் ஆண்டு நடந்த ஒரு நாள் போட்டியில், காயம் காரணமாக துவக்க வீரர் சித்து விலகினார். இதனால் சச்சின் முதன் முதலாக துவக்க வீரராக களமிறங்கினார்.
12. பிராட்மேன், சுனில் கவாஸ்கர், வாசிம் அக்ரம், ஷேன் வார்ன், சனத் ஜெயசூர்யா, பிரையன் லாரா ஆகியோரது ஆட்டங்கள் சச்சினை மிகவும் கவர்ந்தவை. 
13. திருமணத்துக்குப் பின் தீபாவளி திருநாளை தனது குடும்பத்தாருடன் சச்சின் இதுவரை கொண்டாட வில்லை. இடைவிடாத போட்டிகள் தான் இதற்கு காரணம். 
14. ஒரு முறை பி.பி.சி., தொலைக்காட்சியில் பேட்டி அளித்த சச்சினிடம், உங்கள் கனவுப் பெண் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த சச்சின்,எனது மனைவி அஞ்சலி தான் என்றுபதிலளித்தார். 
15. ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவான் ஷேன் வார்ன் "50' சிறந்த கிரிக்கெட் வீரர்கள்பட்டியலை கடந்த 2007 ம் ஆண்டு வெளியிட்டார். அதில் சச்சினுக்கு முதலிடம் அளித்து பெருமைப் படுத்தினார்.
16. உலக பிரபலங்களை கவுரப்படுத்தி வரும் லண்டனை சேர்ந்த "மேடம் டுஸாட்ஸ்' மியூசியம், சச்சினுக்கு மெழுகுச் சிலை தயாரித்து அவரை பெருமைப்படுத்தியது. 
17. 1992 ம் ஆண்டு முதல் இதுவரை 5 உலககோப்பை (50 ஓவர்) தொடர்களில் விளையாடியுள்ள சச்சின், வரும் 2011 ம் ஆண்டு சொந்த மண்ணில் நடக்க உள்ள உலககோப்பை தொடரில் விளையாட காத்திருக்கிறார்.
18. தொடர்ந்து அதிக ஒரு நாள் போட்டிகளில் விளையாடியவர் என்ற சாதனைக்கும் சச்சின் தான் சொந்தக்காரர். இவர் 185 ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்றுள்ளார்.
19. ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் (8,227) சேர்த்த ஜோடி (176 இன்னிங்ஸ்) என்ற பெருமையை சச்சின், கங்குலி ஜோடி பெற்றுள்ளது. 
20. ஒரு நாள் போட்டிகளில் இதுவரை 17 முறை 90 ரன்களுக்கு மேல் எடுத்து சதத்தை நழுவ விட்டுள்ளார் சச்சின். இப்பட்டியலிலும் இவர் தான் முதலிடம்.



சரியாத சச்சின் "மார்க்கெட்' : கிரிக்கெட் அரங்கில் பல்வேறு சாதனைகளை படைத்த வீரர் என்ற பெருமை பெற்றவர் சச்சின்.தவிர, விளம்பர தூதராக அதிக பணம் சம்பாதித்த கிரிக்கெட் வீரரும் இவர் தான். 20 ஆண்டுகளாக கிரிக்கெட்டில் அசத்தி வரும் சச்சின், முதன் முதலாக "பூஸ்ட்' விளம்பரத்தில் சக வீரர் வினோத் காம்ப்ளியுடன் தோன்றினார். அதற்குப் பின் 100 விளம்பரங்களுக்கு மேல் தோன்றியுள்ளார். 20 ஆண்டுகளாக விளம்பர மார்க் கெட்டில் நீடிக்கும் அவரது மதிப்பு குறையவில்லை. கடந்த 1995 ம் ஆண்டு சர்வதேச தொலைதொடர்பு நிறுவனமான "வேர்ல்டு டெல்', சச்சினை ரூ. 30 கோடிக்கு விளம்பர தூதராக நியமித்தது. இதே நிறுவனம் 2001 ம் ஆண்டு அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ. 80 கோடிக்கு சச்சினுடன் ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொண்டது.



ரூ. 180 கோடி ஒப்பந்தம் : இதனையடுத்து ஷாட்சி அண்டு ஷாட்சி விளம்பர நிறுவனம், சச்சினை ரூ. 180 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. "பாலிவுட்' சூப்பர் ஸ்டார்களான அமிதாப் பச்சன், ஷாருக் கானுக்கு நிகராக விளம்பர உலகில் கொடிகட்டிப் பறக்கிறார்.



மூன்று ஓட்டல்கள் : இவற்றை தவிர, சச்சின், "டெண்டுல்கர்ஸ்', "சச்சின்ஸ்' என்ற பெயர்களில் மும்பையிலும் "சச்சின்ஸ்' என்ற பெயரில் பெங்களூருவிலும் ஓட்டல்களை நடத்தி வருகிறார்.



தற்போது சச்சினிடம் உள்ள விளம்பர ஒப்பந்தங்கள்:பெப்சி (1992 முதல்), கேனான் (2006-2009), சன்பீஸ்ட் (2007-2014), பூஸ்ட் (2002 முதல்), அடிடாஸ் (2000-2010), ரெனால்ட்ஸ் (2007 முதல்), ஈ.ஸ்.பி.என் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (2002 முதல்), சான்யோ பி.பி.எல்.,(2007 முதல்). இவைகள் தவிர்த்து கோல்கேட் பாமோலிவ், எம்.ஆர்.எப், பிலிப்ஸ், விசா, அவிவா, ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்து ஆகிய நிறுவனங்களும் சச்சினை ஒப்பந்தம் செய்துள்ளன.



பிராட்மேன் பாராட்டு : சச்சின் ஆட்டம் குறித்து கருத்து மறைந்தஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட் மேன் கூறுகையில்,"" சச்சின் ஆட்டத்தை நேரில் பார்த்ததில்லை. பலமுறை"டிவி'யில் பார்த்துள்ளேன். அவர் என்னைப்போலவே விளையாடுகிறார். தற்போது நான் விளையாடவில்லை என்றாலும் எனது ஆட்டத்தை சச்சினிடம் பார்க்கிறேன்,'' என்றார்.



கனவுத் தொல்லை : ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து ஜாம்பவான்வார்ன் கூறுகையில்,"" நான் தூங்கும் போதுகனவில் கூட, எனது பந்தை இறங்கி வந்து சிக்சர் அடிப்பது போல உள்ளது. எனது தூக்கத்தில் கூட தொல்லை தரும்வீரர் இவர் தான்.பிராட்மேனுக்கு அடுத்து சிறந்த வீரர் சச்சின் தான்,'' என்றார்.



இரண்டாவது இடம் : அதிக ஒருநாள் போட்டியில் விளையாடிய வீரர்கள் வரிசையில் சச்சின் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர் இதுவரை 436 ஒருநாள் போட்டியில் பங்கேற்றுள்ளார். முதலிடத்தில் இலங்கையில்ஜெயசூர்யா (441 போட்டி) நீடிக்கிறார்.



ஆட்ட நாயகன் : ஒருநாள் போட்டியில் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற வீரர்கள் வரிசையில் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் முன்னிலை வகிக்கிறார். இவர் இதுவரை 60 முறை ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். இவரை தொடர்ந்து இலங்கையின் ஜெயசூர்யா (48 முறை), வெஸ்ட்இண்டீசின் ரிச்சர்ட்ஸ் மற்றும் இந்தியாவின் கங்குலி தலா 31 முறை ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளனர்.



கிரிக்கெட் கடவுள் : கிரண்மோரே (முன்னாள் இந்திய வீரர்): பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் அவரை கவனித்தேன். அச்சுறுத்தும் பவுலர்களான வாசிம் அக்ரம், வக்கார் யூனஸ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களை துணிச்சலாக எதிர்கொண்டார். அப்போதே, இவர் இந்திய அணிக்காக மிக நீண்ட காலம் விளையாடுவார் என எனக்குத் தோன்றியது. முதல் போட்டியில் இருந்த அவரது துணிச்சலான திறன் தான், காயம் காரணமாக சிறிது காலம் ஓய்வு எடுத்தாலும், மீண்டும் வெற்றிகரமாக திரும்பி வரச் செய்கிறது. அவர்தான் இந்திய கிரிக்கெட்டின் கடவுள்.



சூப்பர் ஜோடி ; ஒருநாள் போட்டியில் எந்த ஒரு விக்கெட் டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடி வரிசையில் இந்தியாவின் சச்சின்,டிராவிட்முதலிடத்தில்உள்ளனர். இந்த ஜோடி (1999, எதிரணி நியூசி.,) 2வது விக்கெட் டுக்கு அதிகபட்சமாக 331 ரன்கள் சேர்த்தது.



கிரிக்கெட்டின் "சூப்பர் மேன்' : அஜித் வடேகர் (முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர்): என்னைப்பொறுத்த வரையில் கிரிக்கெட்டின் "சூப்பர் மேன்' சச்சின் தான். ஏனெனில் நீண்ட காலமாக வெற்றிகரமாக தொடர்ந்து இருந்து வருகிறார்.சச்சினை கடந்த 1989ல் இருந்தும், அதற்கு முன்பும் பார்த்து வருகிறேன். அவர்கடவுளால் இந்தியாவுக்கு அனுப்பப் பட்டஅதிசயம்.20 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வந்தாலும்அவரது ரன் எடுக்கும் வேட்கை இன்னும் குறையவில்லை என்பதற்கு, ஐதராபாத்தில் அவர் எடுத்த ரன்களே சாட்சி.



source:dinamalar
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

98 வயதில் விவாகரத்து இப்படியும் சாதனை


 

 

லண்டன்:பிரிட்டனை சேர்ந்த தம்பதியர் தங்களின் 98 வயதில் விவாகரத்து செய்து, உலகிலேயே மிக அதிக வயதில் விவாகரத்து செய்தவர்கள் என, உலக சாதனை படைத்துள்ளனர்.இதுகுறித்து, அந்நாட்டு பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தி:பிரிட்டனை சேர்ந்தவர்கள் பெர்டி மற்றும் ஜெஸ்சி உட். இவர்கள் இருவரும் தங்கள் 98 வயதில் விவாகரத்து செய்துள்ளனர். அத்துடன் அவர்களின் 36 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.



விவாகரத்து பெற்ற சில மாதங்களிலேயே, தன் 99வது பிறந்த நாளுக்கு முன்னரே, பெர்டி காலமானார். ஜெஸ்சி தற்போது, பராமரிப்பு இல்லம் ஒன்றில் வசித்து வருகிறார்.இவர்கள் இருவரும், கடந்த 1972ம் ஆண்டு, லண்டனில் உள்ள எல்ஸ்ட்ரீ கிராமத்தில் திருமணம் செய்து கொண்டனர். நான்காண்டுகளுக்கு பின், அவர்கள் பால்மவுத் கார்ன்வால் பகுதிக்கு சென்றனர்.



ஆனால், கடந்த 2008ம் ஆண்டு, ஜெஸ்சி விவாகரத்து கோரி விண்ணப்பித்தார். அதன் பின்னர் அவர்கள் தங்களின் 98 வயதில் விவாகரத்து பெற்றனர். ஆனால், இவர்களின் விவாகரத்திற்கான காரணம் குறித்து எவ்வித தெளிவான தகவல்களும் இல்லை.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது

source:dianamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

சரத் பொன்சேகாவுக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் நடந்தது என்ன?

 

இலங்கையின் போர் கதாநாயகனான ஜெனரல் சரத் பொன்சேகா என்ன காரணத்தால் தமது உயர் பதவியைத் துறந்து மக்களுக்காக (?) வேறு வழியில், பெரும்பாலும் அடுத்த ஜனாதிபதியாக சேவையாற்றப்போகிறார் என்பது பலருக்கும் தெரிந்ததே. சரத் கொடுத்த ராஜினாமா கடிதத்தின் தகவல்கள் கசிந்துள்ளதிலிருந்து என்ன தெரிய வந்துள்ளது என்றால், சரத் ராணுவத் சதித்திட்டம் ஏதும் தீட்டிவிடுவாரோ என அரசு கொண்ட பயமும் அதனால் இலங்கையின் முதலாவதும் சேவையிலுள்ளவருமான நான்கு-நட்சத்திர தரத்திலுள்ள ஜெனெரல் மீது அரசுக்கு ஏற்பட்ட தவறான நம்பிக்கையுமே இப்போது ராஜினாமா வரை கொண்டு சென்றுள்ளது என்பதாகும்.

'இங்கு ஒரு ராணுவ சதிப்புரட்சி வரலாம், அந்த நேரத்தில் உதவிக்கு வருவதற்காக இந்திய ராணுவத்தைத் தயாராக வைத்திருங்கள்' என்று இந்திய அரசை கடந்தமாதம் இலங்கையரசு விழிப்பூட்டியிருந்த செய்கையானது சரத்தை எவ்வளவு தூரத்துக்குக் குழப்பியுள்ளது என்பதை அவர் எழுதியுள்ள கடிதத்தின் தொனியிலிருந்தே தெரிகிறது. அந்தக் கடிதத்தில் சரத் 16 காரணங்களை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பீரங்கிக் குண்டுகள் போல மஹிந்த மீது எறிந்துள்ளார். இவ்வாறு எனக்குச் செய்துவிட்டீர்கள், என்னைக் காயப்படுத்திவிட்டீர்கள், என்மீது சந்தேகம் கொண்டுவிட்டீர்கள், ஒருவித கட்டளை அதிகாரமும் இல்லாத ஒரு உயர் பதவியில் என்னை இருத்திவிட்டீர்கள் என்று சரத்தின் குற்றச்சாட்டுகள் நீண்டு செல்கின்றன. 

மேலும் இதுவரை காலமும் ராணுவ தலைமைப்பீடத்தின் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்த சிங்க படையணியானது சரத் பொன்சேகாவிற்கு கீழ் இயங்கியவர்கள். அவர்கள் சரத் பொன்சேகாவுக்கு விசுவாசமானவர்கள் என்பதால் அவர்களை நீக்கிவிட்டு பாதுகாப்புச் செயலரும் மஹிந்தவின் சகோதரருமான கோத்தபாயவின் நம்பிக்கைக்கு பாத்திரமான நெருக்கமான ராணுவத்தினர் சேவையிலீடுபடுத்தியதையும் சரத் சுட்டிக் காட்டியுள்ளார்.

சரத் பொன்சேகா என்றாலே தமிழ் மக்கள் வெறுப்புக் காட்டுகிறார்கள். எல்லாவற்றுக்கும் காரணம் இந்த சரத் பொன்சேகா தான் என அவர் மீது வெறுப்பை உமிழ்வதில் ஈழத் தமிழர்களுக்கு அளவுகடந்த பிரியம் உள்ளது. ஆனால் தமிழ் மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்ற தொனியில் சரத் எழுதியுள்ள விடயங்கள் அவரது அரசியல் ஆதாயத்துக்காகும்.

தனது கட்டளை அதிகாரியான மஹிந்தவுக்காக தாம் போரை வெற்றியீட்டிக் கொடுத்தும் அதைப் பயன்படுத்தி சமாதானத்தைக் கட்டியெழுப்ப அவர் தவறிவிட்டதாகவும் மேலும் ஒரு கருத்து எழுதியுள்ளார் சரத். தமிழ் மக்களின் சிந்தனைகளையும், இதயங்களையும் கவருவதற்கான தெளிவான கொள்கை எதுவும் அரசிடம் இல்லை என்று கூறியுள்ள அவர், தமிழ் மக்களைத் தொடந்தும் தடுத்து வைப்பதானது போர் வெற்றியைச் சிதைத்து விடும் என்றும், இதுவே இன்னொரு காலத்தில் மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டத்துக்கு வழிசமைத்துவிடும் என்றும் கூறியுள்ளார்.

சரத் பொன்சேகாவைத் தீர்த்துக்கட்ட 2006 இல் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட திட்டம் தோல்வியடைந்த பின்னர், வன்னியில் நடந்த போரில் ராணுவம் வெற்றி மேல் வெற்றி ஈட்டி வந்ததால் சரத் பொன்சேகா ஒரு கதாநாயகனாக பிரபலமடையத் தொடங்கினார். அவருக்குரிய புகழ், அதிகாரம் அனைத்தும் மேலும் வளர்ந்து ஜனாதிபதி மஹிந்தவையே மிஞ்சும் நிலைக்கு வந்தது. எனவே சரத்தின் கோரிக்கைகளுக்கு மஹிந்த எதுவித மறுப்பும் கூறாத ஒரு நிலையில் நிறைவேற்றி இருந்தார்.

போர் முடிவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் சிரேஷ்ட ஆசிரியர் ஒருவரை பாகிஸ்தானின் உயர் ராஜதந்திர பதவிக்கு நியமித்தார் மஹிந்த. குறித்த நபர் குடும்பத்துடன் இஸ்லாமபாத் சென்று பதவியை ஏற்ற கையுடனேயே காரணம் எதுவும் கூறாமல் அவரை மீண்டும் இலங்கை திரும்புமாறு அவசர உத்தரவிட்டார் மஹிந்த. இதற்கு சொல்லப்பட்ட காரணம் என்னவென்றால், தமக்காக பாதுகாப்புச் செய்திகளைச் சேகரித்தவரைக் கடத்திய ராணுவத்தை எழுத்தாளர் குற்றம் சாட்டியிருந்ததால், சரத் பொன்சேகா தான் உடனும் ஆசிரியரை பதவியிலிருந்து தூக்க வேண்டும் என மஹிந்தவைக் கேட்டார் என்பதாகும்.

சரத் பொன்சேகாவின் அதிகாரம் இவ்வாறாக மேலோங்கியிருந்ததால் பொதுமக்களின் தலமைத்துவமானது பெரும் அச்சத்தில் இருந்ததாக பலர் கூறினர். மஹிந்தவுக்கு நெருக்கமான பலரும், ஜனாதிபதியை விட ராணுவத்தளபதிக்கு அதிகாரம் கூடிக்கொண்டு செல்வதாக வெளிப்படையாகவே அவரிடம் கூறியுள்ளனர். ஆனால் மஹிந்தவோ சரத் பொன்சேகாவின் தாளத்துக்கு ஆடிக் கொண்டிருந்தாலும் தந்திரமாக நடந்து கொண்டார். சரத் பொன்சேகாவின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் மிக அவதானமாகக் கவனித்து வந்த அவர், சரத்தைக் கழற்றிவிடும் சந்தர்ப்பத்துக்காக காத்திருந்ததுடன், இரு மாதங்களில் சரத் பொன்சேகாவின் துருப்பினர் வெற்றிகரமாக போரை நிறைவு செய்ததும், கூட்டுப்படைத் தலைமையதிகாரி என்ற அதிகாரமற்ற பதவிக்கு அவரை மாற்றி தனது ஆதங்கத்தைத் தீர்த்துக் கொண்டார்.

தாம் தந்திரமாகத்தான் தப்பான பாதைக்கு வழி காட்டப்பட்டு, அதிகாரங்கள் அற்ற உயர் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்துகொள்ள சரத் பொன்சேகாவுக்கு அதிக நாட்கள் செல்லவில்லை. அதோடு தமக்குக் கொடுத்த பதவியிலிருந்து கொண்டு மஹிந்தவின் சகோதரரும், ராணுவத்தில் தமக்கு கீழே உள்ளவருமான பாதுகாப்புச் செயலர் கோத்தபாயவின் சம்மதம் இல்லாமல் எதுவித ஆலோசனையும் வழங்கமுடியாது என்பதும் அவருக்கு மேலும் மனத்தாக்கத்தையே உருவாக்கியிருந்தது.

இந்த மனத்தாங்கலை தமது கடிதத்தில் இவ்வாறு எழுதியுள்ளார் சரத், "எனது புதிய பதவியில் நான் அமர முன்னர், அப்பதவியானது எனது முந்தைய பதவியை விட அதிகாரமும் பொறுப்பும் கூடியது எனக் கூறப்பட்டிருந்தேன். ஆனால் கூட்டுப்படைத் தலைமையதிகாரிக்கான பதவிக்கடிதம் கிடைத்தவுடன்தான், அப்பதவியானது ஒருவித கட்டளை அதிகாரமும் அற்ற வெறும் இணைப்பாளர் பதவி என்பது எனக்கு தெரிய வந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார். "என்மீது கொண்ட அவநம்பிக்கை காரணமாக, போரை வெற்றிகொள்வதற்கான சகல செயற்பாடுகளும் முடிவடைந்த பின்னர் எனக்கு நீங்களும் (ஜனாதிபதி) அரசாங்கமும் கட்டளை அதிகாரமுள்ள பதவி தர தயாரில்லை என்பதையே இது காட்டுகிறது" என்று தொடர்ந்து குறிப்பிட்டுள்ளார் சரத்.

இதைத்தொடர்ந்து சேவை கட்டளைத் தளபதிகளுடனான கூட்டத்தில், 'கூட்டுப்படைத் தலைமை அதிகாரியிடம் முப்படைகளினதும் செயற்பாட்டு கட்டுப்பாட்டைக் கொடுத்தால் அது பெரிய ஆபத்தாக முடியும்' என்று கோத்தபாய அவசியமே இல்லாமல் அனைத்து கீழ்மட்ட படைத் தளபதிகள் முன்னிலையில் கோத்தபாய வெளிப்படையாகக் கூறி அவமானப்படுத்தியமையும் சரத் பொன்சேகாவால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ராஜபக்ஷ சகோதரர்கள் கொண்ட ராணுவ சதித்திட்டப் பயம் காரணமாகவே சரத் வேறு பதவிக்கு உயர்த்தப்பட்டார் என ஆய்வாளர்கள் பலரும் நம்புகிறார்கள். சரத் பொன்சேகாவுக்கு புதிய பதவி கொடுப்பதற்கு இரு வாரங்களுக்கு முன்னர் அரச பத்திரிகையான டெய்லி நியூஸில், ஜூன் 28 இல் ஹொண்டுராஸில் நடந்த ராணுவப் புரட்சி குறித்த கட்டுரை முன்பக்கத்தில் வெளியாகியிருந்தமை தற்செயலாக நடந்ததல்ல. ஹொண்டுராஸ் நாட்டுடன் இலங்கைக்குள்ள உறவுகள் மிக மிக சொற்பமானவை, ஆனால் ஏன் அந்நாட்டு வரலாற்றுக்கு அப்பத்திரிகை முக்கியத்துவம் கொடுத்தது? 

இவ்வாறான மறைமுக தாக்கங்கள் அரசின் போக்கு எவ்வாறு அமையப்போகிறது என்பதை சரத்துக்கு நன்கு உணர்த்தின. நாளாக நாளாக முறுகல் வலுத்து, ஜனாதிபதிக்கும் ஜெனெரலுக்கும் இடையிலான இடைவெளி வளர்ந்து அரச அமைச்சர்கள் வரை பரந்துபட்டுப் போனது. மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவமே ராணுவ வெற்றிக்கு வழி சமைத்தது என அமைச்சர்கள் பொதுக் கூட்டங்களில் பேசினார்கள். இதன்பின்னர், கருத்து வெளியிட்ட சரத்தோ, போரில் வெற்றி கொண்டதற்கு 95 வீதமான பங்களிப்பும் அர்ப்பணமும் படையினரையே சாரும் எனக் கூறினார்.

இவ்வாறாக குழம்பிப் போயுள்ள குட்டையில் மீன்பிடித்தவர்கள் எதிர்க்கட்சியினர் ஆகும். இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய அவர்கள் ஜெனெரல் சரத்தைத் தமது வலையில் விழ வைத்து ரகசிய பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினர். ஜனாதிபதி தேர்தலை அறிவிக்கும்போது அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்றால் தமது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சரத் என எதிர்க்கட்சியினரின் இலக்கு அமைந்தது. 

இதேவேளை ஜெனெரல் சரத்பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளர் ஆகுவதைத் தாமும் வரவேற்பதாக மார்க்கிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுனவும் சைகை காட்டியுள்ளது. இவற்றையடுத்து செய்திகளை அறிந்த மஹிந்த குழம்பிப் போய் அவரது கொழுகொழு முகம் பொலிவிழந்துவிட்டது. அவருக்கு எதிரான நடவடிக்கைகள் ஆரம்பித்துவிட்டன. மஹிந்த கவலைகளைச் சுமந்த மனிதராகிவிட்டார்.

சர்ச்சைக்குள்ளான அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு கடந்த வாரம் வியாழக்கிழமை இலங்கை வந்த சரத் பாதுகாப்புச் செயலருடன் சொற்போரை ஆரம்பித்துள்ளதாக சண்டே டைம்ஸ் கூறுகிறது. இந்தச் சண்டையானது போர்க்குற்றங்கள் புரிந்த கோத்தபாயவை அடையாளம் காட்டும்படி அமெரிக்கா கேட்டுக்கொண்ட விசாரணைகள் குறித்து அல்லாமல், ராணுவத்தினரின் நடத்தைகள் குறித்த சந்தேகங்களுக்காக நடப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகா மஹிந்தவுடனும், கோத்தபாயவுடனும் சேர்ந்து எடுத்துக் கொண்ட படங்களுடன் கொழும்பு சாலை முழுவதும் கட்டப்பட்டிருந்த பனர்கள், பதாகைகள் அனைத்தும் நீக்கப்பட்டன அல்லது கிழிக்கப்பட்டன. போர்க் கதாநாயகன் ஒரு வெற்று மனிதனாக அரசாங்கத்துக்குத் தெரியத் தொடங்கியுள்ளார். ஆனால் அரசியலில் நுழைவது குறித்து சரத் பொன்சேகா வரும் சில நாட்களில் அறிவித்த பின்னரே இவர்களுக்கிடையிலான உண்மையான போர் ஆரம்பமாக உள்ளது. 

அரசியல் நோக்கத்தையும் கூட சரத் தனது கடிதத்தின் இறுதிப் பந்தியில் சுட்டிக்காட்டியுள்ளார். "யுத்தம் முடிவடைந்து விட்டதால் சமாதானமானது நாடு முழுதும் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. மக்கள் எதிர்கொள்கின்ற பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்துள்ளன இதேவேளை ஊழலும் விரயமும் அதன் எல்லையைக் கடந்து போகின்றன. ஊடக சுதந்திரமும் பிற ஜனநாயக உரிமைகளும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றன. எமது தாய்நாட்டுக்கு சமாதானத்தையும், சுபீட்சத்தையும் ஏற்படுத்த வேண்டும் எனில், போரை முடிவுக்குக் கொண்டுவர ராணுவம் செய்த பல தியாகங்கள் வீணாகிப் போகக் கூடாது' என உள்ளது அப்பந்தியில்.

சரத்துக்கும் ராஜபக்ஷவுக்கும் இடையிலான முறுகல் குறைவதற்கு சாத்தியங்கள் இல்லை. சரத் பொன்சேகா அரசியலில் நுழைவதைத் தடுக்கும் நடவடிக்கைகளிலும் தீவிர தேசியவாதிகள் முயன்றுள்ளனர். புத்த பிக்குமார் சரத் பொன்சேகாவும் அரசியல் பிரவேசத்தைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று கூட அவர்கள் முயற்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இப்போது தேசியவாதியான சரத் பொன்சேகாவோ, ஐ.தே.க மற்றும் முன்னாள் வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீரவின் இலங்கை சுதந்திர கட்சி மகாஜன அணி ஆகியவற்றோடு மட்டுமல்லாமல் முஸ்லிம்கள், இந்திய தமிழர்கள் தேவைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சியின் கூட்டணியில் இணையவுள்ளார் என பிற தேசியவாதிகளால் குற்றம் சாட்டப்படுகிறார்.

கனடியன் நஷனல் போஸ்ட் பத்திரிகைக்கு 2008 செப்ரம்பரில் பேட்டி கொடுத்தபோது "இலங்கை சிங்களவர்களுக்கு உரிய நாடு, ஆனால் அங்கு சிறுபான்மை இனத்தவர்களும் உள்ளனர், அவர்களை எங்கள் மக்கள் போலவே நாங்கள் நடத்துகிறோம். அவர்கள் எங்களுடன் இலங்கையில் வசிக்கலாம். ஆனால் சிறுபான்மையினத்தவர் என்பதையே காரணம் காட்டி அவர்கள் தமக்கு அளவுக்கு அதிகமான உரிமைகளைப் பெற முயற்சிக்க கூடாது" என சரத் பொன்சேகா கூறியிருந்தார். 

போரில் வெற்றிகொண்டதும் பெரும்பான்மை சிங்களவர்கள் தெருக்களில் நடத்திய அநாகரிகமான வெற்றிவிழாக்களால் அநேக தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மஹிந்தவுக்கும் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் ஒரு வேறுபாட்டையுமே காணவில்லை. கடைசிக் கட்ட போரில் ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் இறந்ததால் கதிகலங்கிப் போயுள்ளதாலும், லட்சக்கணக்கான மக்கள் தடுப்பு முகாம்களில் இன்னல் பட்டுவரும் நிலையிலும் தமிழர்கள் சரத்துக்கும் சரி மஹிந்தவுக்கும் சரி ஆதரவு வழங்கும் நிலையும் இல்லை. எனினும், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒட்டுமொத்த குரலாக பாராளுமன்றத்துக்கு அனுப்பபட்ட த.தே.கூ ஐயும் தமது கூட்டணியில் இணைத்ததன் மூலமாக எதிர்க்கட்சியினர் தமிழர்களின் வாக்குகளைக் குறி வைக்கின்றனர்.

மேற்படி இருவருமே தமிழ் மக்களுக்குள்ள பிரச்சனைக்கு ஒரு தீர்வைக் காண்பார்கள் என பெரும்பாலான தமிழர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. இதேவேளை அரசின் சில குறிப்பிட்ட ரகசியங்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்ற பயமும் இப்போது அரசாங்கத்துக்குத் தொற்றியுள்ளது. இந்த ரகசியங்கள் வெளிவரும்போது சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு இலங்கை அரசுக்கு எதிராக மனித உரிமைகள் மீறல் விசாரணைகள் நடத்த விடுத்துள்ள அழைப்புக்கு தாம் இதுவரை கொடுத்துவரும் டிமிக்கி இனிச் செல்லாததாகிவிடுமே என்ற கவலையில் உள்ளனர் மஹிந்த தரப்பினர்.


source:athirvu


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

வகுப்பறைக்கு அரை குறை ஆடை அணிந்து வந்த மாணவி நீக்கம்: பிரேசிலில் பெரும் சர்ச்சை


 

 

சா பாவுலோ:பிரேசிலில் வகுப்பறைக்கு அரை குறையாக உடையணிந்து வந்த மாணவி, பல்கலையில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி சம்பந்தபட்ட பல்கலைக்கு, பிரேசில் அரசு உத்தரவிட்டுள்ளது.பிரேசிலின் சா பாவுலோ நகரில், பன்டரினேட் என்ற பல்கலைக் கழகம் உள்ளது. இங்கு கெய்சி அர்ருதா (20) என்ற மாணவி படித்து வந்தார்.



விதம், விதமான புதுமையான உடைகளை அணிவதில் ஆர்வம் உடையவர் அர்ருதா. சில நேரங்களில் அவர் அரைகுறையான உடைகளை அணிந்து வரத் துவங்கினார். இதுகுறித்து, பல்கலை நிர்வாகம் அவரை சில முறை எச்சரித்து இருந்தது. ஒரு நாள், இளம் சிவப்பு நிறத்திலான, உயரம் குறைவான உடைகளை வகுப்பறைக்கு அணிந்து வந்தார். இதையடுத்து, பாதுகாவலர்களின் உதவியுடன் அவர், வகுப்பறையை விட்டு வெளியேற்றப் பட்டார்.



பேராசிரியர்கள் முன் நிறுத்தப்பட்டார். அவர்கள் அர்ருதாவை கடுமையாக திட்டினர். பின்னர், அவர் பல்கலையில் இருந்து நீக்கப்பட்டார். அரை குறை ஆடை அணிந்து வந்ததன் மூலம், மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், ஒழுக்கம் தவறி நடந்து கொண்டதாகவும், பல்கலையின் பெருமையை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும் அவர் மீது புகார் கூறப்பட்டது.



இத்துடன் நிற்காமல்,தங்கள் பல்கலை சார்பில் வெளியாகும் ஒரு பத்திரிகையிலும், அர்ருதாவை பற்றிய செய்தியை வெளியிட்டு, மாணவர்கள் வகுப்பறையில் எப்படி நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அதில் தெரிவித்து இருந்தனர்.இந்த விவகாரம் தற்போது பிரேசிலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



அர்ருதா, பல்கலையில் இருந்து நீக்கப்பட்டதற்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்கும்படி, சம்பந்தபட்ட பல்கலைகழகத்துக்கு, பிரேசில் அரசு உத்தரவிட்டுள்ளது.

source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ஆட்டய போடுவதில் உலகின் நெம்பர் -1 இந்தியா தானாம்

 
 

Front page news and headlines todayபுதுடில்லி : வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும் "சென்ட்'களில் ஒவ்வொன்றாய் திறந்து, சட்டையில் அடித்து வாசனை பார்ப்பதில் சிலருக்கு அலாதி பிரியம்.குண்டூசி டப்பா, பிளேடுகள், பென்சில், பேனா, ரப்பர் போன்றவற்றை "அமுக்கி' விடுவதில் சிலர் மகா கில்லாடிகள்.



தண்ணீர், குளிர்பான பாட்டிலை திறந்து குடித்துவிட்டு, அங்கேயே போட்டு விட்டு நடையை கட்டுவோரும் உண்டு. சுயசேவை வசதி உள்ள அங்காடிகளில் (மால்) இது போல தினமும் நடக்கத்தான் செய்கிறது. இப்படி "ஆட்டய' போடுவதால் இந்தியாவுக்கு பெரும் "பெருமை' கிடைத்துள்ளது தெரியுமா? ஆம், உலகில், 41 நாடுகளில் தான் கடைகளில் "லபக்'குவது அதிகமாக நடக்கிறது; அந்த பட்டியலில் இந்தியா தான் நெம்பர் 1."குளோபல் ரீடெய்ல் தெப்ட் பாரோமீட்டர்' என்ற சர்வே ஒவ்வொரு ஆண்டும் பல நாடுகளில் நடக்கிறது. தனியார் அமைப்புகள் சேர்ந்து நடந்தும் இந்த சர்வேயில் தான் இந்தியாவின் "சாதனை' அம்பலமாகி உள்ளது.சர்வேயில், இந்தியா பற்றி கிடைத்த சில தகவல்கள்: கடைகளில் குண்டூசி முதல் நகைகள் வரை "லபக்'கப்படுகின்றன.



மொபைல் போன், ஐபாட், எம்.பி.,3, உட்பட கையடக்க எலக்ட்ரானிக் சாதனங்கள், சென்ட், லிப்ஸ்டிக் போன்ற அழகு சாதனங்கள், ஜட்டி, பிரா, பனியன், உள்ளாடைகள், டீ ஷர்ட், சுரிதார் போன்ற துணிவகைகள், நகைகள் ஆகியவை தான் அதிக அளவில் "எடுக்கப்'படுகின்றன. இல்லாதவர்கள் தான் திருடுகின்றனர் என்ற எண்ணவேண்டாம்; வசதி படைத்தவர்களும் "ஜாலி'க்காக இப்படி செய்கின்றனர். இளம் வயதினர் தான் இதில் கணிசமான பேர்."சென்ட்' அடித்துப்பார்ப்பது, குளிர் பானம் பருகுவது போன்ற செயல்களை இளம் வயதினர் தான் செய்கின்றனர்.இப்படிப்பட்ட "லபக்'குகள் எல்லாம் "மால்'களில் தான் அதிகம் நடக்கின்றன. இந்தியா முழுவதும் இந்த "லபக்'குகளால் ஒரு நாளைக்கு 33 கோடி ரூபாய்க்கு சில்லரை வர்த்தக இழப்பு ஏற்படுகிறது. ஒரு ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய்."ஆட்டய' போடுவதில் 41 நாடுகள் உள்ளன. அதில் , இந்தியாவில் மொத்த சில்லரை வர்த்தகத்தில் 3.2 சதவீதம் இதனால் இழப்பு ஏற்படுகிறது.


source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP