சமீபத்திய பதிவுகள்

தம்பதியர் சேர்ந்து குளித்தால் விவாகரத்தை தவிர்க்கலாம்*மலேசிய அரசு அறிவுப்பு

>> Monday, November 16, 2009

  

கோலாலம்பூர்:வியர்வை நாற்றத்தின் காரணமாக மலேசியாவில் இளம் தம்பதிகளுக்கிடையேயான விவாகரத்து அதிகரித்துள்ளது.மலேசியாவில் சமீபகாலமாக விவாகரத்து அதிகரித்துள்ளது. பத்து திருமணம் நடந்தால் அவற்றில் மூன்று திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. குறிப்பாக, 25 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கின்றனர்.



இதனால், வருத்தமடைந்துள்ள மலேசிய அரசு, பெருகி வரும் விவாகரத்தை குறைக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.முஸ்லிம் மத சட்டதிட்டங்களை பின்பற்றும் மலேசியாவில் கணவன்-மனைவி உறவு குறித்து அரசே வெளிப்படையாக பேச ஆரம்பித்து விட்டது.



வியர்வை நாற்றம், கவர்ச்சியான உடை அணியாதது ஆகியவை தான் இளம் தம்பதியர்களுக்கிடையே வெறுப்பை ஏற்படுத்துகிறது, என்பதை கண்டறிந்த மலேசிய தகவல் தொடர்புத்துறை, இளம் தம்பதியர்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. மகிழ்ச்சியாக வாழும் தம்பதியர்கள், தங்கள் துணைவரை எப்படியெல்லாம் வசீகரிக்க முடியும் என்பது குறித்த குறிப்புகளை இந்த கருத்தரங்கில் விளக்குகின்றனர்.



தம்பதியர்களுக்கிடையே நெருக்கத்தை ஏற்படுத்தும் வாசனை திரவியங்களை தயாரிக்கும் படி, நறுமண பொருள் தயாரிப்பு நிறுவனங்களை மலேசிய அரசு கேட்டு கொண்டுள்ளது.தொள தொளவென காணப்படும் பைஜாமா, டி ஷர்ட்கள் போன்றவற்றை அணியாமல் உடலை சிக்கென பிடிக்கும் உடைகளை அணியும் படியும் மலேசிய தகவல் தொடர்புத்துறை தலைவர் முகமது ரம்லி நூ தெரிவித்துள்ளார்.



முடைநாற்றம் வீசும் துணிகளை அணியாமல் துவைத்த துணிகளை அணிந்து தங்கள் துணைவருடன் பழகும் படியும், தம்பதியர் சேர்ந்து குளிக்கும் படியும் முகமது ரம்லி அறிவுறுத்தியுள்ளார்."கேலந்தன் மாகாணத்தில் உள்ள வயதான ஒற்றுமையுடன் வாழும் தம்பதியர்களிடம் விசாரித்த போது அவர்கள் பேரன் பேத்தி பிறந்த பின்பும் சேர்ந்து குளிப்பதாக கூறுகின்றனர். அவர்களின் ஒற்றுமையின் ரகசியத்தை அப்போது புரிந்து கொண்டேன்' என்கிறார், முகமது ரம்லி.

source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

பிளாஷ் டிரைவில் அப்ளிகேஷன் புரோகிராம்கள்

 
 

எளிதான டேட்டா பரிமாற்றத்திற்கு உதவியபிளாஷ் டிரைவ்கள், தற்போது மேலும் பல பயன்களைத் தரும் வகையில் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக சில அப்ளிகேஷன் புரோகிராம்களை, கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடாமல் பயன்படுத்த இந்த பிளாஷ் டிரைவ்கள் பயன்படுகின்றன. 


பிளாஷ் டிரைவ்களில் காப்பி செய்து அப்படியே கம்ப்யூட்டரில் செருகிப் பயன்படுத்த ஆங்காங்கே இணையத்தில் கிடைக்கும் புரோகிராம்கள் குறித்து சில தகவல்கள் ஏற்கனவே இந்த பக்கங்களில் தரப்பட்டுள்ளன. ஆனால் அண்மையில் ஓர் இணைய தளம் இத்தகைய அப்ளிகேஷன் புரோகிராம்கள் பலவற்றை வகை வகையாய் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அந்த இணைய தளத்தின் முகவரி: http://portableapps.com/appsஇங்கே நூற்றுக் கணக்கில் இலவச அப்ளிகேஷன் புரோகிராம்கள் கிடைக்கின்றன. இவை அனைத்தும் பிளாஷ் டிரைவில் எடுத்துச் சென்று அப்படியே வைத்துப் பயன்படுத்தக் கூடிய தன்மை உடையவை என்பது இவற்றின் சிறப்பு. இவை அனைத்தும் கீழே குறிப்பிடப்படும் தலைப்புகளில் குழுக்களாக அமைத்துத் தரப்பட்டுள்ளன. அவை:  Accessibility, Development Education Games Graphics & Pictures Internet Music & Video Office Operating Systems, Utilities.



இவற்றை பிளாஷ் டிரைவில் பதிய முதலில் பிளாஷ் டிரைவினைக் கம்ப்யூட்டரில் இணைக்க வேண்டும். பின் இந்த புரோகிராம் மீது கிளிக் செய்தால்,எங்கு இன்ஸ்டால் செய்திட என்ற கேள்வி கேட்கப்படும். அப்போது பிளாஷ் டிரைவின் டிரைவைக் கிளிக் செய்தால், பிளாஷ் டிரைவில் அந்த புரோகிராம் பதியப்படும். பின் அதனை எடுத்துச் சென்று, கம்ப்யூட்டரில் இணைத்து நேரடியாகப் பயன்படுத்தலாம். புரோகிராமினை கம்ப்யூட்டருக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.



இணையப் பக்க அச்சில் உங்கள் பெயர்
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8ல் இணைய தளங்களில் பிரவுஸ் செய்திடும் பக்கங்களை அப்படியே அச்சுக்கு அனுப்புகிறீர்களா! அப்படியானால் அதில் உங்கள் பெயர், நீங்கள் விரும்பும் தலைப்பு ஆகியவற்றையும் அச்சிடலாம். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8, தானாகவே சில விஷயங்களைத் தலைப்பில் அச்சிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஹெடரில் பக்கத்தின் தலைப்பு மற்றும் பக்க எண் / மொத்த பக்க எண் ஆகியவை அச்சிடப்படும். புட்டரில் இணைய தள முகவரி மற்றும் சுருக்கமாக தேதியும் அச்சிடப்படும். இது போல மாறா நிலையில் உள்ளதை மாற்றி நாம் நம் விருப்பத்திற்கேற்ப பயன்படுத்தலாம். ஏனென்றால் நாம் அதிக பக்கங்களை அச்சிடுவதாக இருந்தால் கூடுதலான சில தகவல்களை அவற்றில் சேர்க்க விரும்பலாம். எடுத்துக் காட்டாக நெட்வொர்க் பிரிண்டர் என்றால் உங்களுக்கான பக்கங்களில் உங்கள் பெயர் இணைக்க விரும்பலாம். அப்போதுதான் மற்றவர்களும் அச்சுக் கொடுக்கும் வேளையில் உங்கள் பக்கங்களைத் தனியே பிரித்து எடுக்க வசதியாக இருக்கும். 



இதற்குக் கீழ்க்காணும் வழிகளில் செட் செய்திடவும். 
1. பேஜ் செட் அப் டயலாக் பாக்ஸ் செல்லவும். மெனு பாரில் பைல் மற்றும் பேஜ் செட் அப் என இதனைப் பெறலாம். கமாண்ட் பார் கிடைத்தால், பிரிண்டர் பட்டனை அழுத்தி அதில் பேஜ் செட் அப் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இரண்டும் கிடைக்கவில்லை என்றால், Alt+F  அழுத்திப் பின் க் அழுத்தவும்.
2. பேஜ் செட் அப் டயலாக் பாக்ஸ் உங்களுக்கு இப்போது கிடைக்கும். இதில் ஹெடர்ஸ் அன்ட் புட்டர்ஸ் என்ற பிரிவில் இரண்டு பிரிவுகள் இருப்பதைக் காணலாம். அவை ஹெடர் மற்றும் புட்டர். இவை ஒவ்வொன்றிலும் முதலில் விரிக்கையில் இடது பக்கம் என்ன டெக்ஸ்ட் அச்சாகும் என்பது காட்டப்படும். இரண்டாவதாக விரிக்கையில் நடுவில் அச்சாவதும், மூன்றாவதாக விரிக்கையில் வலது பக்கம் அச்சாவதும் காட்டப்படும். இவற்றில் நாம் தேர்ந்தெடுக்க ஆப்ஷன்களாகக் கீழ்க்கண்டவை காட்டப்படும். 



Title



* URL



* Page number



* Page # of total pages



* Total Pages



* Date in short format



* Date in long format



* Time



* Time in 24hr format



* Custom



இவற்றில் நீங்கள் "Custom" என்பதைத் தேர்ந்தெடுத்தால், இதில் அச்சாக விரும்பும் எந்த டெக்ஸ்ட்டையும் இதில் தரலாம். இதில் உங்கள் பெயர் அல்லது முகவரியையும் இணைக்கலாம்.Customஹெடர் மற்றும் புட்டரில் பக்க தலைப்பு, தேதி, நேரம் போன்றவற்றையும் கீழ்க்காணும் வழிகளில் இணைக்கலாம். 
&w: Title



&u: URL



&p: Page number



Page &p of &P: Page number of total pages



&P: Total Pages



&d: Date in short format



&D: Date in long format



&t: Time



&T: Time in 24hr format



&&: Single ampersand



எடுத்துக் காட்டாக "முருகேசன் -தீ" என டைப் செய்தால் முருகேசன் என அச்சிடப்பட்டு அதன்பின் அந்த பக்கத் தலைப்பு அச்சாகும். 
இந்த டயலாக் பாக்ஸில் தேவைப்பட்டவை எல்லாம் மாற்றிவிட்டு பின் ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடிவிடவும்.



வேர்ட் ஷார்ட் கட் கீகள்
டாகுமெண்ட் உருவாக்குதல், பார்த்தல், பதித்தல்
CTRL+N: புதிய டாகுமெண்ட் ஒன்றைத் திறக்க
CTRL+Oஏற்கனவே உள்ள டாகுமெண்ட் டைத் திறக்க
CTRL+W : டாகுமெண்ட் ஒன்றை மூடிட
ALT+CTRL+S:  டாகுமெண்ட் விண்டோவை இரண்டாக்க
ALT+SHIFT+C: டாகுமெண்ட் விண்டோ பிரித்ததை மீண்டும் ஒன்றாக்க
CTRL+S:  டாகுமெண்ட்டை சேவ் செய்திட
ALT+F4:  வேர்ட் புரோகிராமில் இருந்து வெளியேற
சொல் தேடி செயல் மேற்கொள்ள
CTRL+F : டெக்ஸ்ட்டில் குறிப்பிட்ட சொல்லை அல்லது மற்றவற்றைத் தேடி அறிய
ALT+CTRL+Y : பைண்ட் விண்டோவை மூடிய பின்னர் பைண்ட் அண்டு ரிபிளேஸ் விண்டோவைச் செயலுக்குக் கொண்டுவர
CTRL+H : நீக்கிய டெக்ஸ்ட் மற்றும் சார்ந்த ஐட்டங்களை மீண்டும் அதே இடத்தில் வைத்திட 
CTRL+G: குறிப்பிட்ட புக்மார்க், பக்கம், புட் நோட், டேபிள், கமெண்ட், கிராபிக் ஆகியன இருக்கும் இடத்திற்குச் செல்ல 
ALT+CTRL+Z: டாகுமெண்ட் மற்றும் டாகுமெண்ட்டின் ஒரு பிரிவுக்கு மாறி மாறிச் செல்ல
ALT+CTRL+HOME: தேர்ந்தெடுத்த தேடல் வகைப்படி செல்ல
செயல்களை ரத்து செய்திட, நீக்கிட, மீண்டும் கொண்டு வர
ESC :  ஒரு செயல்பாட்டினை ரத்து செய்து நிறுத்திட
CTRL+Z: மேற்கொண்ட செயல்பாட்டை அப்படியே பழைய நிலைக்கு மாற்ற 
CTRL+Y: மேற்கொண்ட ஒரு செயலை மீண்டும் மீண்டும் செய்திட
வியூ மாற்ற
ALT+CTRL+P பிரிண்ட் லே அவுட் வியூ 
ALT+CTRL+O: அவுட்லைன் வியூ 
ALT+CTRL+N  நார்மல் வியூ 
ALT+R:  ரீடிங் வியூ
அட்டவணையில் ஊர்வலம்
TAB: ஒரு வரிசையில் அடுத்த செல்லுக்குச் செல்ல
SHIFT+TAB:  ஒரு வரிசையில் முந்தைய செல்லுக்குச் செல்ல
ALT+HOME:  படுக்கை வரிச

StumbleUpon.com Read more...

ஈழம் - தமிழ் திரையுலகினர் ஆவேசம்




மிழ் திரையுலகினர் ஈழத்திற்காக ஆவேசமாக, ஆத்திரமாக, வேதனையாக தங்களை பதிவு செய்திருக்கிறார்கள்.

  இந்தப்பதிவுகள் 
'ஈழம்-மௌணத்தின் வலி'என்று தனிப்புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன், நடிகர் சத்யராஜ், நடிகர் சூர்யா, நடிகர் பிரகாஷ்ராஜ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இயக்குநர்கள் பாலா,அமீர், சேரன், லிங்குசாமி, மிஸ்கின்,ஏ.ஆர்.முருகாதாஸ், கே.வி.ஆனந்த், பாலாஜிசக்திவேல், கவிஞர்கள் வைரமுத்து, அப்துல்ரகுமான்,இன்குலாப், பா.விஜய்.தாமரை, தமிழச்சி, கபிலன், நா.முத்துக்குமார், அறிவுமதி, மு.மேத்தா முதலானோர் தங்களது ஈழ உணர்வுகளை பதிவு செய்துள்ளனர்.

நேற்று சென்னையில் நடந்த இப்புத்தகத்தின் வெளியீட்டு விழாவிற்கு நடிகர்கள் சூர்யா, பிரகாஷ்ராஜ், சிவக்குமார், இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், மிஸ்கின் ஆகியோர் பங்கேற்றனர்.

நடிகர் பிரகாஷ்ராஜ்,  ''ஒரு மானை வேட்டையாடினால் தண்டிக்க சட்டம் இருக்கிறது. போராட அமைப்பும் இருக்கிறது. ஆனால் மனிதர்களை வேட்டையாடி கொல்கிறார்களே இதை தடுக்க சட்டம் இல்லையா? பெரியவர்களை கொல்ல காரணம் பல சொல்லலாம்.
 
ஆனால் குழந்தைகளை கொல்ல காரணம் சொல்ல முடியுமா? இதை இப்படியே விட்டு விட முடியாது'' என்று 
பேசினார்.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்,  ''கற்பனைக்கும் எட்டாத சிந்திக்க முடியாத ஒரு கொடூரம் என்பதை கேள்விபட்டிருந்தாலும் கூட, இந்த புத்தகதில் உள்ள புகைப்படங்களைப் பார்க்கும்போது, ஒரு காட்டுமிராண்டி காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ என்ற சந்தேகம் எழுகிறது.

 ஏன் என்றால் இதில் நிறைய விஷயங்கள் நமக்கு தெரியவே இல்லை. நம்ம அறிவுக்கு இதுவெல்லாம் வரவே இல்லை என்று நினைக்கும்போது யாரோட தப்பு. ஏன் இவ்வளவு தகவல் தொழில் நுட்பத்தில் பயங்கரமாக இருக்கிறோம். 

வானத்தை எட்டி விட்டோம் என்று சொல்கிறோம். அனால் இதுவெல்லாம் நமக்கு தெரியவே இல்லை என்று சொல்லும் போது வெட்கமாக இருக்கிறது. 

ஒரு நார்த் இண்டியாவில் போய் இதையெல்லாம் சொன்னால் 'ய தி ஸ்ரீலங்கா பிராபலம்' என சாதாரணமாக கேட்பார்கள். குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டால், நிதி திரட்டுவதில் தமிழன் தான் முதல் இடத்தில் இருக்கணும். கார்கில் வார் நடந்தது என்றால் நிதி திரட்ட தமிழன்தான் முதல் இடத்தில் நிற்கணும். ஆனால் ஒரு இனம் அழிவது உங்க அறிவுக்கே வராதா? 

உங்களுக்கு அப்படி ஒன்று நடப்பதே தெரியாதா? யார் தப்பு இது. அரசியல் ஈகோவா? மதமா? இல்ல பழிவாங்கலா? எனக்கு தெரியல.

செயற்கைக்கோளில் இருந்து பார்க்கும்போது மரத்தில் உட்காந்திருப்பது குருவியா, காக்காவா என பார்க்கக்கூடிய அறிவியல், முகாம்களில் எத்தனை பேர் செத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது பதியவே இல்லையா? தமிழனை பார்த்தவுடனேயே அந்த கேமரா திரும்பிடுச்சா? போர் குற்றம் நடக்கிறது என்று ஐ.நா. சோதனை செய்ய வரும்போது, ஒரே நாளில் கிட்டதட்ட 50 ஆயிரம் தமிழர்கள் புல்டவுசரால் நசுக்கப்பட்டிருக்கிறார்கள். 

எல்லாமே ஊனமுற்றவர்கள், வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள். ஏன் என்றால் அவர்கள் அடையாளத்தை மறைக்கிறார்கள். பேசினால்தான் தமிழன். தமிழ் பேசும்போது தமிழனாகிறான். தமிழ் பேசும்போது கொலை செய்கிறார்கள். 

ஆனால் பேசாத 
குழந்தை. குழந்தைக்கு இன்னும் மொழியே தெரியாது. அந்த குழந்தை என்ன பாவம் செய்தது. அப்பாவி குழந்தைகளை கொலை செய்திருக்கிறார்கள். 

பணத்துக்காக கொலை செய்யும் கூலிப்படைக் கூட ஒரு கொள்கை வைத்திருக்கிறார்கள். அதாவது குழந்தைகள், பெண்களை கொலை செய்ய மாட்டோம் என்று. கூலிப்படைக்கு இருக்கிற ஒரு கட்டுப்பாடு கூட ஒரு ராணுவத்துக்கு கிடையாது. 

அணுகுண்டுக்கும், புத்தகத்துக்கும் ஒரே வித்தியாசம்தான். அணுகுண்டு வீசும்போதெல்லாம் வெடிக்கும், புத்தகம் 
படிக்கும்போதெல்லாம் வெடிக்கும். இந்தப் புத்தகம் அந்த மாதிரியான புத்தகமாக இருக்க வேண்டும். 

அமெரிக்காவுக்கம் வியட்நாமுக்கும் நடந்த போரை தடுத்து நிறுத்தது ஒரே ஒரு புகைப்படம் தான். ஒரு சிறுமியின் நிர்வாணமாக நடந்து வருவதுபோல் உள்ள புகைப்படம்தான். இங்கு அதைவிட கொடூரமான புகைப்படங்கள் இருக்கின்றன. இந்தப்புகைப்படத்திற்கு இந்த உலகம் என்ன பதில் சொல்லப்போகிறது. 

அப்பாவித் தமிழர்கள் எல்லாம் சாகும்போது, போர்க்குற்றம் என்றால், அதைப் பார்த்து வாய் மூடி, கண் மூடி இருப்பது வரலாற்றுக் குற்றம்.

தரையில் முட்டி அழ வேண்டும் போல் இருக்கிறது. தமிழர்களின் ஒற்றுமையின்மையால் தான் நாம் அழிந்து கொண்டு வருகிறோம். இனியாவது நாம் ஒற்றுமையாக இருந்து இந்த கொடுமைகளை தடுக்க வேண்டும்'' ''என்று பேசினார்.

நடிகர் சிவக்குமார் இப்புத்தகத்தில் உள்ள உணர்வுகளை சிலவற்றை மேடையில் படித்தார்.

திரையுலகினரை தவிர பத்திரிக்கையாளர் நக்கீரன்கோபால், சத்குரு ஜக்கிவாசுதேவ் முதலானோர்களும் இவ்விழாவில் பங்கேற்று தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள்.

-வடபழனிவாலு


source:nakkheeran

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP