சமீபத்திய பதிவுகள்

`வீடியோ கேம்' உடற்பயிற்சி

>> Saturday, November 28, 2009

 

 விளையாட்டு உடலை உறுதிப்படுத்துவதும், மனதிற்கு மகிழ்ச்சி தருவதுமான நல்ல பயிற்சி. சைக்கிள் மிதிப்பதும் ஒரு சிறந்த உடற்பயிற்சி. தற்போது இந்த இரண்டையும் சேர்த்து அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் ஒரு புதுவித வீடியோ கேம் உடற்பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இன்றைய கால குழந்தைகளின் பொழுதுபோக்கே வீடியோ கேம்தான். நகர்ப்புறக் குழந்தைகளில் வீடியோகேம் விளையாடத் தெரியாத குழந்தைகளே இல்லை எனலாம். கிராமப்புறங்களிலும் வீடியோ கேம் ஆர்வம் குழந்தைகளிடையே அதிகரித்து வருகிறது. வீடியோ கேம்கள் குழந்தைகள் விளையாடும் வகையில் எளிமையாக வடிவமைக்கப்பட்டு இருப்பது இதன் சிறப்பம்சமாகும்.

உதாரணமாக `பைக் ரேஸ்' விளையாட்டு என்றால் குழந்தைகள் இயக்குவதற்கென்று தனி மோட்டார் சைக்கிள் இருக்கும். அதை பட்டன் மூலம் இயக்கலாம். மற்ற பைக்குகள் தானாகவே நகரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு இருக்கும். தானாக நகரும் பைக்குகளை முந்துவதற்காக தங்களது பைக்கை குழந்தைகள் ஓட்டும் வேகம் (பட்டனை அழுத்தும் வேகம்), அவர்களின் முக பாவனை களைப் பார்த்தால் உற்சாகத்தையும், மனக்கிளர்ச்சியையும் ஏற்படுத்தும்.

அதுபோன்ற உற்சாகத்தை தரும் வகையில்தான் இந்த வீடியோ கேம் உடற்பயிற்சி கருவி வடிவமைக்கப்பட்டு உள்ளது. கம்ப்ïட்டரில் விளையாடும்போது நாம் பயன்படுத்தும் பைக்கிற்கு பதிலாக வெளியில் உள்ள (படத்தில் காண்க) மோட்டார்சைக்கிளை பயன்படுத்தலாம். இதற்கும் வீடியோ கேமிற்கும் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு இருக்கும். விளையாட்டில் கையால் பட்டனை அழுத்துவதுபோல் இதில் கால்களால் சைக்கிளை மிதிக்கும் வேகத்திற்கு ஏற்ப கேமில் நமது பைக் நகரும். கணினி மூலம் தானாக இயங்கும் பைக்குகளுடன் போட்டி போடுவதற்காக வேகமாக ஓட்டுவதால் உடலுக்கும் பயிற்சியாகிறது. உள்ளமும் பூரிப்படைகிறது. வெற்றி கிடைத்தால் இன்னும் சந்தோஷம் உச்சத்துக்கு சென்றுவிடும். இதனால் மற்ற பயிற்சிகளைவிட வேகமாக உடல் உறுதிப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் சிறுவர்கள் மட்டும் அல்லாது பெரியவர்களும் உற்சாகமாக இந்த பைக்கில் கம்ப்ïட்டருடன் போட்டி போட்டு உடலை பலப்படுத்தி, மனதிலும் மகிழ்ச்சி அடையலாம்.

இங்கிலாந்தில் இந்த வீடியோ கேம் பைக் தயாரிக்கப்பட்டு உள்ளது. என்ன... இந்த பைக்கை எப்படியாவது வாங்கணும்னு ஆசையா இருக்கா? கொஞ்ச நாள் காத்திருங்க...`சைபர் பைக்' எனப்படும் இந்த விளையாட்டு பைக் 2010 ஜனவரி மாதம் முதல் விற்பனைக்கு வர இருக்கிறது. இதை வடிவமைத்தவர் நின்டின்டோ வி என்னும் பெண்மணி ஆவார்.


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

புலிகளின் தலைமையகத்தில் இருந்து மாவீரர் நாள் உரை




StumbleUpon.com Read more...

ஈரான் பெண் வக்கீலிடம் இருந்து அமைதிக்கான நோபல் பரிசு பறிமுதல்

டெக்ரான், நவ.28- ஈரான் பெண் வக்கீலும், மனித உரிமை போராளியுமான ஷரீன் எபாடிக்கு கடந்த 2003-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவர் பெண்கள் குழந்தைகள் உரிமைக்காக பாடுபட்டதற்காக இந்த பரிசு அவருக்கு அளிக்கப்பட்டது. இந்த பரிசை இப்போது ஈரானிய அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர். இந்த தகவலை நார்வே நாட்டு அரசாங்கம் தெரிவித்து உள்ளது. நோபல் பரிசு சரித்திரத்தில் இப்படி நடப்பது இது தான் முதல் முறை ஆகும். இந்த பரிசை எபாடி லாக்கரில் பத்திரமாக வைத்து இருந்தார். இதை கடந்த வாரம் ஈரான் அதிகாரிகள் கைப்பற்றினார்கள். இந்த செயல் தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக நார்வே வெளிநாட்டு மந்திரி ஜோனாஸ் கர் ஸ்டோர் தெரிவித்தார். நோபல் பரிசை ஒரு நாட்டு அரசாங்கமே பறிமுதல் செய்வது இதுதான் முதல் முறை ஆகும் என்றும் அவர் தெரிவித்தார். நார்வே வெளிநாட்டு அமைச்சரகம் ஈரான் நாட்டு தூதரை அழைத்து தன் எதிர்ப்பை தெரிவித்தது. எபாடியின் கணவரும் கைது செய்யப்பட்டு கடுமையாக அடித்து உதைக்கப்பட்டார். அதோடு அவரது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. அவரது பென்ஷனும் முடக்கப்பட்டன. ஈரான் ஜனாதிபதி தேர்தல் முறைகேடுகள் குறித்து எழுந்த சர்ச்சையின் போது அவர் அகமதினிஜாத்தை விமர்சித்தார். அதோடு உலகம் முழுவதும் சுற்றி வந்து, தேர்தல் முடிவை உலக நாடுகள் ஏற்கக்கூடாது என்று வலியுறுத்தினார். மீண்டும் தேர்தல் நடத்தவேண்டும் என்றும் கோரினார். எபாடியின் இந்த நடவடிக்கை தான் நோபல் பரிசு பறிப்புக்கு காரணம் ஆகும் என்று கூறப்படுகிறது.


source:dailythanthi
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசு, காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது இங்கிலாந்து எதிர்ப்பு

லண்டன், நவ.28- தமிழர்களை கொன்று குவித்ததன் மூலம் மனித உரிமைகளை மீறிய இலங்கை அரசு, காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என்று இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். 53 நாடுகள் அமைப்பு இங்கிலாந்து நாட்டின் காலனி ஆதிக்கத்தில் இருந்த நாடுகள் ஒன்று சேர்ந்து தங்களின் பொதுநலன்களுக்காக ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்புக்கு காமன்வெல்த் என்று பெயர். இந்த அமைப்பில் 53 நாடுகள் உள்ளன. ஆண்டுதோறும் இந்த அமைப்பு ஒவ்வொரு நாட்டிலும் மாநாடு நடத்துவது வழக்கம். அப்போது அனைத்து உறுப்பு நாடுகளின் தலைவர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு இந்த மாநாடு டிரினிடாட் அண்ட் டொபாகோ நாட்டில் நடந்தது. அடுத்த ஆண்டு இந்த மாநாட்டை எங்கு நடத்துவது என்பது பற்றிய ஆலோசனையும் நடந்தது. இலங்கை அரசாங்கம் கோரிக்கை அப்போது அடுத்த மாநாட்டை இலங்கையில் நடத்த வேண்டும் என்று அந்த நாடு கேட்டுக்கொண்டது. இதற்கு இங்கிலாந்து நாட்டு பிரதமர் கார்டன் பிரவுன் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மற்ற தலைவர்களுடன் பேச்சு நடத்துவார் என்றும், இந்த பிரச்சினையில் இங்கிலாந்து உறுதியாக இருக்கிறது என்றும் இங்கிலாந்து அதிகாரி ஒருவர் கூறினார். இது தொடர்பாக அவர் கூறுகையில், இலங்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் முள்வேலிக்குள் உள்ள முகாம்களில் எந்த வசதியும் இல்லாமல் அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இது போன்ற மனித உரிமையை மீறிய செயல்களில் ஈடுபட்டுள்ள நாட்டுக்கு கவுரவம் அளிக்கும் விதத்தில் காமன்வெல்த் மாநாடு நடத்த அனுமதி அளிக்க முடியாது என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார். மனித உரிமைகளை மதிக்கும் நாட்டில் காமன்வெல்த் நெறிமுறைகளை பிரதிபலிக்கும்படியும் சட்டத்தின்படி ஆட்சி நடத்தும், மனித உரிமைகளை மதிக்கும் ஒரு நாட்டில் தான் மாநாடு நடத்தப்பட வேண்டும் என்று இங்கிலாந்து விரும்புகிறது என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார். விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை நடந்து கொண்ட விதம் குறித்து ஏற்கனவே இங்கிலாந்து அரசாங்கம் விமர்சித்து உள்ளது.


source:dailythanthi
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

பிரபாகரனின் இறப்பு சான்றிதழ் தாக்கல் செய்யப்படவில்லை ராஜீவ்காந்தி கொலை வழக்கு மீண்டும் தள்ளிவைப்பு

சென்னை, நவ.28- விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இறப்பு சான்றிதழ் தாக்கல் செய்யவில்லை என்பதால், ராஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரணை மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது. ராஜீவ்காந்தி கொலை சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். அவருடன் பொட்டு அம்மான், அகிலா, நளினி, முருகன் உட்பட பலர் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டனர். சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இந்த வழக்கு, சென்னையை அடுத்த பூந்தமல்லியில் தனியாக அமைக்கப்பட்ட தடா கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. பிரபாகரன், பொட்டு அம்மான், அகிலா ஆகியோர் சி.பி.ஐ.யிடம் சிக்கவில்லை. எனவே வழக்கு பிரிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட நளினி, முருகன் உட்பட சிலர் மீதான வழக்கு மட்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சாட்சி விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 17 ஆண்டு விசாரணை கடைசிவரை பிடிபடாத பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோர் மீதான வழக்கு 1992-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தனியாக பிரிக்கப்பட்டது. இந்த வழக்கு, சென்னை முதலாம் கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது. கடந்த 17 ஆண்டுகளாக பிரபாகரன், பொட்டு அம்மான் மீதான வழக்கு தொடர்ந்து விசாரணைக்கு எடுக்கப்படுகிறது. வழக்கின் முக்கியத்துவம் கருதி நீதிபதியின் அறையில் இந்த வழக்கின் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரபாகரன், பொட்டு அம்மான் மீதான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. முதலாம் தடா கோர்ட்டு நீதிபதி பி.ராமலிங்கம் விடுமுறையில் சென்றிருப்பதால், 6-வது கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதி எம்.ஏ.ஆனந்தகுமார் அறையில் நேற்று காலையில் விசாரணை நடந்தது. சி.பி.ஐ. அதிகாரி மற்றும் வக்கீல் ஆஜராகி 4 மூலைகளிலும் சீலிட்ட கவர் ஒன்றை தாக்கல் செய்தனர். அதைத் தொடர்ந்து அடுத்த கட்ட விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி 3-ம் வாரத்துக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். இறப்பு சான்றிதழ் இலங்கையில் நடந்த போரில் பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகின. அவர்கள் இறப்பு சான்றிதழை சி.பி.ஐ. தாக்கல் செய்தால்தான் வழக்கு முடிவுக்கு வரும். நேற்றைய விசாரணையில் அவர்களின் இறப்பு சான்றிதழ் தாக்கல் செய்யப்படவில்லை என்று கோர்ட்டு வட்டாரம் தெரிவித்தது. பிரபாகரனின் இறப்பு சான்றிதழை இலங்கை அரசு கொடுக்க வேண்டும். எனவே இவர்களின் இறப்பு சான்றிதழைக் கேட்டு இலங்கை அரசிடம் சி.பி.ஐ. தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.



SOURCE:DAILYTHANTHI

StumbleUpon.com Read more...

தமிழகத்தில் 1,000 ரூபாய் கள்ள நோட்டு அதிகரிப்பு : அதிர்ச்சி தகவல் அம்பலம்

 
 

Front page news and headlines todayதமிழகம், புதுச்சேரியில் 1,000 மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்துள்ளது; இதனால், மக் கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்தியாவில் நிகழும் பயங் கரவாத சதிகளுக்கு ஊக்கமளிக்கும் பாகிஸ்தானின் "ஐ.எஸ்.ஐ.,' உளவு அமைப்பு, இந்திய போலி கரன்சிகளையும் அதிகளவில் அச்சடித்து இந்தியாவில் புழக்கத்தில் விடுகிறது. இதன் ஏஜன்ட்கள் மூலமாக, கடல் மற்றும் தரை வழியாக கடத்தி வரப்படும் 1,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் கள்ள நோட் டுகள், நாட்டின் பல் வேறு பகுதிக்கும் சப்ளையாகிறது. இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக் கும் இது போன்ற சதி செயல் களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் திணறுகின்றன. இதனால், கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்துள்ளது.



சமீபத்தில், கேரளா வழியாக கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 100 ரூபாய் கள்ள நோட்டுகள், மாநகர போலீசால் பறிமுதல் செய்யப்பட்டு, மூவர் கைது செய்யப் பட்டனர். மேலும், கோவை நகரிலுள்ள தனியார் வங்கி ஏ.டி. எம்.,மெஷினில் கள்ள நோட்டு வந்ததாக, வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்து, ஏ.டி.எம்., மையத்தை முற்றுகையிட்டனர். போலீசார் வந்து சமரசம் செய்ததை தொடர்ந்து போராட் டத்தை கைவிட்டனர். இந்நிலையில் 1,000 ரூபாய் கள்ள நோட்டு தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.



1,000 ரூபாய் கள்ள நோட்டு: கோவை, குனியமுத்தூரைச் சேர்ந்தவர் அபூபக்கர் (35) என்பவர், வர்த்தக கண்காட்சிக்கான அரங்குகளை அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளார். சமீபத்தில், புதுச்சேரி சென்ற அவர், அங்கு கண்காட்சிக்கான அரங்குகளை அமைத்தார். அதற் கான தொகையை அவர் பெற்று, அங்குள்ள ஐ.சி. ஐ.சி.ஐ.,வங்கியில் செலுத்தினார். அவர் அளித்த ரூபாய் நோட்டுகளை பெற்ற வங்கி அதிகாரிகள், ஒரு 1,000 ரூபாய் நோட்டை கள்ள நோட்டு எனக்கூறி, மூன்று பாகங்களாக கிழித்து, இரு பாகங்களை அபூபக்கரிடம் கொடுத்தனர். அதிர்ச்சியடைந்த இவர், வாக்குவாதம் செய்தார்; பலனில்லை. இதே போன்று, கள்ள நோட்டுகள் சென்னை மற்றும் கோவையிலுள்ள வங்கிகளிலும் அதிகம் பிடிபட்டுள்ளன. இதனால், சில பெட்ரோல் பங்க், தனியார் பள்ளி, கல்லூரிகளில் 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை பெறுவதில்லை என்ற அறிவிப்பு வைத்துள்ளனர். மக்களின் குழப்பத்தை தீர்க்க, "கள்ள நோட்டுகள் எப்படியிருக்கும்' என்ற பட விளக்கங்களுடன் நோட்டீஸ்களை போலீசார் வினியோகித்து வருகின்றனர். எனினும், கள்ள நோட்டு அச்சம், மக்களிடம் நீடிக்கிறது.



இது குறித்து, போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோவையில் 1,000 மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டு புழக்கம் இருப்பதாக ஏற்பட்ட அச்சம் காரணமாக, கல்வி நிறுவனங்கள் வாங்க மறுப்பதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது; எனினும், புகார் ஏதும் இல்லை. கள்ள நோட்டு புழக்கம் ஏழை மற்றும் நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கிறது. ஏதாவது ஒரு வகையில் அறியாமல் கள்ள நோட்டுகளை பெறும் மக்கள், செலுத்தும் போது உண்மையை அறிகின்றனர். கள்ள நோட்டை வங்கியில் செலுத்தும் போது, வங்கி ஊழியர்கள் கிழித்து அழித்து விடுகின்றனர். மீண்டும், அதே நோட்டு புழக்கத்துக்கு போய்விடக்கூடாது என்றே, கிழித்து அழிக்கப் படுகிறது. இதனால், ரூபாய் இழப்புக்கு உள்ளாகும் மக்கள் அதிர்ச்சி அடைகின்றனர். இது போன்ற பாதிப்பை தவிர்க்க, மக்கள் உஷாராக இருப்பது அவசியம். ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை பெறும் போது, ஒரிஜினல் நோட்டா என்பதை சோதித்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். கள்ள நோட்டாக இருப்பின் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கலாம். கள்ள நோட்டு கும்பலின் "நெட்வொர்க்' மற்றும் புழக்கத்தை கண்டறிய சி.பி.சி.ஐ.டி.,யில் பிரத்யேக பிரிவு செயல்படுகிறது; அங்கு தகவல் தெரிவித்தாலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு, போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.



கண்டறிவது எப்படி? ஆயிரம் மற்றும் 500 ரூபாய் ஒரிஜினல் கரன்சி நோட்டுகளை உறுதி செய்வது தொடர்பான ரிசர்வ் வங்கியின் குறிப்புகள்:



பாதுகாப்பு இழை: 3 மி.மீ., அகலப்பட்டை வெவ்வேறு கோணங்களில் பார்க்கையில் பச்சையாகவும், நீலமாகவும் மாறி மாறி தெரியும். இடையில் "பாரத்' என்று இந்தியிலும், கீஆஐ என்று ஆங்கிலத்திலும் நோட்டின் முன் பக்கத்தில் தெரியும். "அல்ட்ரா வயலட்' விளக்கில் மஞ்சளாக ஜொலிக் கும். வெளிச்சத்தில் தூக்கி பார்க்கையில் தொடர்ச்சியான கோடாக தெரியும்.



நீர்க்குறியீடு: மகாத்மா காந்தியின் உருவப்படமும் நோட்டின் மதிப்பு எண்ணும், அதற்கு பின்னால் பல நேர்கோடுகளும், வெளிச்சத்தில் தூக்கி பார்க்கையில் துல்லியமாக தெரியும்.



மறைந்திருக்கும் மதிப்பு எண்: மகாத்மா காந்தி படத்திற்கு பக்கத்திலுள்ள செவ்வகப்பட்டையில் ரூபாய் நோட்டின் மதிப்பு எண் அச்சடிக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டை பக்கவாட்டில் கண்ணுக்கு நேராக சற்றே சாய்த்து பார்க்கையில் மதிப்பு எண் தெரியும்.



தடவி உணரும் அச்சு: மகாத்மா காந்தியின் உருவம், ரிசர்வ் வங்கியின் பெயர், இந்திய அரசின் உத்தரவாதம், அசோகா தூண் சின்னம், ரிசர்வ் வங்கி கவர்னரின் கையொப் பம், அடையாள குறியீடு ஆகியன தடவி உணரும் வகையில் மேலெழுந்தவாறாக அச்சடிக்கப்பட்டிருக்கின்றன.



நுண்ணிய எழுத்துக்கள்: மகாத்மா காந்தியின் உருவத்திற்கும், செவ்வகப்பட்டைக்கும் இடைப்பட்ட பகுதியில் கீஆஐ பெயரும், மதிப்பு எண்ணும் மிக நுண்ணிய எழுத்துக்களால் அச்சடிக்கப்பட்டிருக்கிறது.



சரித்துப்பார்க்கையில் மாறும் நிறம்: ரூபாய் நோட்டின் முன்பக்கத்தினை மேலும் கீழும் சரித்துப் பார்க்கையில், அதன் மதிப்பு எண் பச்சை நிறத்திலிருந்து நீல நிறமாக மாறும்.



சீரான பதிவு: ரூபாய் நோட்டின் முன்னும் பின்னும் பூ இதழ்போல அச்சடித்திருப்பதை, வெளிச்சத்தில் தூக்கிப் பார்த்தால் ரூபாய் நோட்டின் மதிப்பு எண் துல்லியமாகத் தெரியும். இந்த மதிப்பு எண் முன்னும் பின்னும் அச்சடிக்கப்பட்டிருந்தாலும், வெளிச்சத்தில் தூக்கிப்பார்க்கும் போது முன்னும் பின்னும் சீராகப் பதிந்து மதிப்பு எண் துல்லியமாகத் தெரியும். இந்த குறிப்புகளை கொண்டு ஒரிஜினல் கரன்சி நோட்டுகளை உறுதிப்படுத்தலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.



source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP