சமீபத்திய பதிவுகள்

உலகின் மிக உயர்ந்த கட்டடம் துபாயில் இன்று திறப்பு

>> Tuesday, January 5, 2010


 
 

Top global news updateதுபாய் : துபாயில் 160 தளங்களை கொண்ட உலகின் மிக உயரமான கட்டடம்  இன்று திறக்கப்படுகிறது. நட்சத்திர ஓட்டல்கள், குடியிருப்புகள், வர்த்தக வளாகங்கள், பொழுது போக்கு மையங்கள் என பலதரப்பட்ட அம்சங்களை கொண்ட 160 அடுக்கு கொண்ட உலகின் மிக உயரமான கட்டடத்துக்கு பர்ஜ் துபாய் என்று பெயரிடப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த இந்த கட்டடத்தின் கட்டுமான பணிகள் முடிந்து இன்று திறப்பு விழா காண்கிறது. 2,684 அடி ( 818 மீட்டர்) உயரமுள்ள இந்த கட்டடத்தில் 57 லிப்டுகளும், எட்டு தானியங்கி படிகட்டுகளும் உள்ளன.
அமெரிக்காவின் 101 அடுக்குகள் கொண்ட எம்பயர் ஸ்டேட் கட்டடத்தின் உயரம் 381 மீட்டர்; தைவான் நாட்டில் உள்ள கட்டடத்தின் உயரம் 448 மீட்டர். தற்போது துபாயில் திறக்கப்பட உள்ள கட்டடத்தின் உயரம் 504 மீட்டர். எனவே, இந்த கட்டடம், உலகின் மிக உயர்ந்த கட்டடமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.


source:dinamalar


--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP