சமீபத்திய பதிவுகள்

சிங்களர்கள் ஒத்துழைத்தால் மட்டுமே தமிழர்களுக்கு தீர்வு அளிக்க முடியும்

>> Friday, January 29, 2010

 

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இரண்டாவது முறையாக அதிபராகி இருக்கும் அவர், கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழர் உரிமைக்கான திட்டத்தை விரைவில் அறிவிப்பேன். இலங்கையை அடிப்படையாக கொண்ட அரசியல் தீர்வாக, அந்த திட்டம் இருக்கும். இலங்கை பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு, தமிழர் தலைவர்களுடன் அது குறித்து ஆலோசனை நடத்துவேன்.

இலங்கைக்கும் அதன் அரசியல் சட்டத்துக்கும் எப்போதுமே உதவிகரமாக இந்தியா இருந்து வருகிறது. எனவே, தமிழர் உரிமை திட்டத்துக்கும் ஆதரவு அளிக்கும். இந்தியா முன்வைத்த 13 வது சட்டத் திருத்தம் என்றால் என்ன? அது, அரசியல் சட்ட விதிகளில் இருக்கிறது. தற்போது, அதை விட அதிகமாக பெற வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.

அதே நேரத்தில், இலங்கையின் பெரும்பான்மை இன மக்கள் (சிங்களர்கள்) ஒப்புதல் அளித்தால் மட்டுமே தமிழர்களுக்கு எந்தவொரு தீர்வும் அளிக்க முடியும். இல்லாவிட்டால், அதை செயல்படுத்த முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறினார்

source:uyarvu

--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP