சமீபத்திய பதிவுகள்

படுகொலைகளை நேரில்பார்த்த ஊடகவியலாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்

>> Tuesday, February 2, 2010

 

சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களை பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாயவின் உத்தரவின் பேரில் சிறிலங்கா இராணுவத்தின் 58 ஆவது டிவிஷன் படையணி தளபதி சவீந்திர டி சில்வா படுகொலை செய்ய கட்டளையிட்டார் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு தகவல் தெரிவித்த சிங்கள ஊடகவியலாளரை சிறிலங்கா குற்ற புலனாய்வு துறையினர் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அரச தலைவர் தேர்தல் முடிவடைந்த பின்னர், நாட்டை விட்டு வெளியேறுவதற்கு அனுமதி வழங்கவேண்டாம் என்று சிறப்பு அறிவித்தலுடன் பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்ட பெயர் பட்டியல் ஒன்று கட்டுநாயக்க விமானநிலையத்தில் குடிவரவு அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. இந்த பட்டியலில் மேற்படி ஊடகவியலாளரின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இதனைஅடுத்து, குறிப்பிட்ட ஊடகவியலாளரை தேடி அனுப்பப்பட்ட குற்ற புலனாய்வு பிரிவின் விசேட குழுவினர் அவரை கடந்த வெள்ளி இரவு கைது செய்துள்ளனர். 

பொன்சேகா தலைமையிலான குழுவினரின் பேச்சாளராக கடமையாற்றும் பொறுப்பு, பொன்சேகா தரப்பினரால் இந்த ஒரு ஊடகவியலாளருக்கே வழங்கப்பட்டிருந்தது என்று குற்ற புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிறிலங்கா இராணுவத்தின் 58 டிவிஷன் படையினரிடம் வெள்ளை கொடியுடன் சென்று சரணடைந்த விடுதலை புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் மற்றும் சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவன் உட்பட நடேசனின் மனைவி உட்பட பலர் படுகோலை செய்யப்பட்டதை குறிப்பிட்ட சிங்கள ஊடகவியலாளர் நேரில் கண்டதாகவும் சரணடைவதற்கு வரும் விடுதலை புலிகள் எவரையும் ஏற்றுக்கொள்ளவேண்டாம் என்று டிவிஷன் தளபதி சவீந்திர டி சில்வாவுக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய தொலைபேசியில் அறிவுறுத்தியிருந்தார் என்றும் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



source:athirvu

--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP