சமீபத்திய பதிவுகள்

சிவசேனா குரங்குகளின் படை;நடிகை கஜோல்

>> Saturday, February 6, 2010

  


அந்த படையால் எங்களை எதுவும் செய்ய முடியாது:  

 மும்பையில் பாகிஸ்தான் வீரர்களை விளையாட அனுமதிக்க மாட்டோம் என்று சிவசேனா அறிவித்தது. ஆனால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்கள் இடம் பெற வேண்டும் என்று பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் கூறினார்.
 
இதையடுத்து ஷாருக்கானுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா மிரட்டல் விடுத்தது. ஷாருக்கானுக்கு தேசப்பற்று இல்லை. பாகிஸ்தான் வீரர்களை ஆதரித்துப்பேசியதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்  என்று சிவசேனா எச்சரித்தது. ஷாருக்கான் படங்களை மும்பையில் திரையிட விட மாட்டோம் என்றும் எச்சரித்தது.
 
ஆனால் ஷாருக்கான் மன்னிப்பு கேட்க மறுத்து விட்டார். இந்த நிலையில் ஷாருக்கான் இன்று மும்பை திரும்பினார். சிவசேனா போராட்டத்தை எதிர்க்கொள்ள தயார் என்று அவர் அறிவித்துள்ளார்.
 
இந்த நிலையில் நடிகர் ஷாருக்கானுக்கு இந்தி நடிகர், நடிகைகள் தங்களது ஒட்டு மொத்த ஆதரவை தெரிவித்துள்ளனர். ஷாருக்கான் கருத்தில் எந்த தவறும் இல்லை என்று நடிகர், நடிகைகள் கூறி உள்ளனர்.
 
நடிகை காஜோல், ஷாருக்கானுக்கு ஆதரவு தெரிவித்ததோடு மட்டுமின்றி சிவசேனா கட்சியையும் கடுமையாக சாடி உள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் இணையத்தளத்தில்,
 
''சிவசேனா கட்சி நமது நாட்டின் ஜோக்கர் கட்சியாக மாறி விட்டது. அவர்கள் எப்போதும் வெறுப்பை வெளியிட்டு வருகிறார்கள்.
 
சிவசேனாவை குரங்குகளின் படை என்று தான் சொல்ல வேண்டும். அந்த குரங்கு படையால் எங்களை எதுவும் செய்ய இயலாது. தேர்தலில் தோல்வியை சந்தித்த பிறகும் அவர்கள் பாடம் கற்றுக் கொள்ள வில்லை.
 
இப்படிப்பட்ட அசிங்கம் பிடித்த அரசியலால் தான் நாம் உலகில் பின்னணியில் இருக்கிறோம். நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். அதன் மூலம் தான் நாம் ஜனநாயக சக்தியை உலகுக்கு காட்ட முடியும்''என்று தெரிவித்துள்ளார்.


source:nakkheeran


--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

1 கருத்துரைகள்:

asee.com February 7, 2010 at 11:02 PM  

Super................

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP