சமீபத்திய பதிவுகள்

கோயிலில் கூட்ட நெரிசலில் சி்க்கி 70 பக்தர்கள் பலி

>> Thursday, March 4, 2010

பிரதாப்கார் (உ.பி): கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் 70 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம், பிரதாப்கார் நகரில் ராம்ஜானகி கோயில் உள்ளது. கிரிபால்ஜி மஹராஜ் என்ற சுவாமிஜி இன்று இக்கோயிலுக்கு வந்திருந்தார். இந்த சுவாமிஜியிடம் பிரசாதம் வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் திரண்டிருந்தனர். பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவுக்கு கூடியது. பெரும் கூட்டத்தினர் முண்டியடித்து கோயிலுக்குள் செல்ல முற்பட்ட போது, நுழைவாயிலில் இருந்த கதவு உடைந்து விழுந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்தும், ஏறி மிதித்துக்கொண்டு ஓடினர். சிறுவர்கள், முதியோர் கூட்டத்தில் சிக்கி திணறினர். பலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தனர். தகவல் அறிந்ததும் உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய பலர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
source:dinakaran


NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP