சமீபத்திய பதிவுகள்

நாய்களுக்கான இரத்த வங்கி

>> Thursday, April 29, 2010


 

 
நாய்களின் இரத்தம் சேமிக்கப்பட்டு வைக்கப்படும் இடம்
நாய்களின் இரத்தம் சேமிக்கப்பட்டு வைக்கப்படும் இடம்
ஆசியாவில் நாய்களுக்கான முதலாவது இரத்த வங்கி சென்னையில் திறந்து வைக்கப்பட்டிருப்பதாக தமிழ் நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான டாக்டர். பி. தங்கராஜு தமிழோசைக்கு தெரிவித்துள்ளார்.


துரித நகரமயமாதல் மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தல் காரணமாக வீட்டு வளர்ப்பு விலங்குகள் விபத்தில் சிக்குதல் மற்றும் காயமடைதல் அதிகரித்துள்ளன.

ஆகவே அவ்வாறான சந்தர்ப்பங்களில் அத்தகைய விலங்குகளுக்கு சிகிச்சை வழங்குவதற்கு அவற்றுக்கான இரத்த சேமிப்பு அவசியமாகிறது. அந்த வகையில் ஆசியாவிலேயே நாய்களுக்கான முதலாவது இரத்த வங்கி சென்னையில் தற்போது திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

நாயொன்றிடம் இருந்து இரத்தம் எடுக்கப்படுகிறது
நாயொன்றிடம் இருந்து இரத்தம் எடுக்கப்படுகிறது
வீதிகளைக் கடக்கும் போதும், அடுக்குமாடி வீடுகளில் இருந்து விழுவதன் மூலமும் நாய்கள் அடிக்கடி காயமடைகின்றன. ஆகவே அவற்றுக்கான அறுவைச் சிகிச்சைக்கான போதிய இரத்தம் உடனடியாக கிடைக்காவிட்டால் அவை இறக்கும் வீதமும் அதிகரிக்கும் என்றும் டாக்டர். தங்கராஜு கூறுகிறார்.

ஒரு வயது முதல் 8 வயது வரையிலான மற்றும் சுமார் 20 கிலோ எடையுடைய நாய்கள் இங்கு இரத்ததானம் செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவெங்கிலும் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அழைத்து வரப்படும் நாய்களில் 10 வீதம் விபத்துக்களால் காயமடைந்த நிலையிலேயே வருகின்றன.

 source:BBC

--
http://thamilislam.tk

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP