சமீபத்திய பதிவுகள்

1 1/2 வயது குழந்தையின் தலையை துண்டித்து ரத்தம் குடித்த மந்திரவாதி மனைவியுடன் கைது

>> Monday, July 26, 2010

திருடிச் சென்று நரபலி கொடுத்தார்
 


ராமநாதபுரம், ஜுலை.25-

1 1/2 வயது குழந்தையை கடத்திச் சென்று தலையை துண்டித்து நரபலி கொடுத்து ரத்தம் குடித்த மந்திரவாதி மனைவியுடன் கைது செய்யப்பட்டார்.

பூவரசியின் கொலைவெறி போல்...

சென்னையில், காதலன் ஏமாற்றி விட்ட கோபத்தில் அவரது 4 வயது மகனான ஆதித்யா என்ற சிறுவனை கடத்திச் சென்று கொலை செய்து சூட்கேசில் பிணத்தை அனுப்பிய சம்பவத்தில் பூவரசி என்ற பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மதுரையில் ரத்த வெறி பிடித்த மந்திரவாதி ஒருவர், பச்சிளம் குழந்தையை கடத்திச்சென்று கொலை செய்து ரத்தத்தை குடித்த பயங்கரம் சம்பவம் நடந்து உள்ளது.

ரத்தத்தை உறைய வைக்கும் இந்த கொடூர சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:-

1 1/2 வயது ஆண் குழந்தை

மதுரை அருகே உள்ள எஸ்.ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கவுஸ் பாட்சா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்தில் இறந்து விட்டார். இதைத்தொடர்ந்து அவருடைய மனைவி சிரின் பாத்திமா மன நிம்மதிக்காக தன் குழந்தை காதர் ïசுப்புடன் (வயது 11/2) மதுரை கோரிப்பாளையம் தர்காவில் தங்கி இருந்தார்.

அங்கு தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த அப்துல் கபூர் என்ற மந்திரவாதியும் தன் மனைவி ரமலா பீவியுடன் தங்கி இருந்தார். அப்போது குழந்தை காதர் ïசுப்புடன் மந்திரவாதி நெருங்கிப் பழகினார். அந்த குழந்தையை தூக்கி கொஞ்சி விளையாடி மகிழ்ந்தார். குழந்தையின் தாய் சிரின் பாத்திமாவின் நிலையை கண்டு பரிதாப்படுவது போல் நடித்தார்.

கடந்த வாரம் சிரின் பாத்திமா தனது குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்துவிட்டு அவரும் தூங்கிக்கொண்டு இருந்தார்.

மந்திரவாதி கைது

அவர் தூங்கி எழுந்தபோது குழந்தை காதர் ïசுப்பை காணவில்லை.

இதுகுறித்து சிரின் பாத்திமாவின் உறவினர்கள், தல்லாகுளம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, மந்திரவாதி அப்துல் கபூரும், அவருடைய மனைவி ரமலாவும் குழந்தையை கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து காயல்பட்டினத்தில் அப்துல் கபூரையும், ரமலாவையும் போலீசார் தேடி பிடித்து கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, குழந்தையை கடத்திக் கொன்று விட்டதாக, மந்திரவாதி கூறிய தகவலால் போலீசார் அதிர்ச்சி அடைந்தார்கள்.

மந்திரவாதி அப்துல் கபூர் போலீசாரிடம் கூறியதாவது:-

நரபலி

"கோரிப்பாளையம் தர்காவில் நான் தங்கி இருந்தபோது கனவில், தலைப்பிள்ளையாக பிறக்கும் ஆண் குழந்தையை நரபலி கொடுத்து அதன் ரத்தத்தை குடித்தால் மாந்திரீக சக்தி அதிகரிக்கும் என்று அசரீரி கூறியது. இதனால் நானும், என் மனைவியும் குழந்தை காதர் ïசுப்பை கடத்திக்கொண்டு காயல்பட்டினம் அருகே உள்ள ஏரல் கிராமத்திற்கு சென்றோம்.

அங்கு சிறுவனின் உடலை துண்டுதுண்டாக வெட்டி 2 பெரிய தூக்குவாளிகளில் அடைத்தோம். பின்னர் குழந்தையின் உடலில் இருந்து சேகரித்த ரத்தத்தையும், தலைப் பகுதியையும் குலசேகரன்பட்டினம் செல்லும் வழியில் உள்ள கல்லாமொழி கடற்கரைக்கு கொண்டு சென்றோம்.

அங்கு ரத்தத்தை குடித்து பரிகாரம் செய்தபின் குழந்தையின் தலையை அங்கேயே புதைத்துவிட்டு, ஏர்வாடியை அடுத்த காட்டுப்பள்ளி பகுதிக்கு வந்து தங்கி இருந்தோம். அங்கு குழந்தையின் உடல் பாகங்களை புதைத்து விட்டு தப்பிச் சென்றுவிட்டோம்.''

இவ்வாறு அப்துல்கபூர் கூறினார்.

அடையாளம் காட்டினார்

இதைத்தொடர்ந்து தல்லாகுளம் போலீசார் நேற்று காலை மந்திரவாதியுடன், ஏர்வாடியில் குழந்தை புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்திற்கு சென்றனர். அங்கு குழந்தையின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை அப்துல் கபூர் அடையாளம் காட்டினார்.

உடனே, கடலாடி தாசில்தார் காளிமுத்து, கீழக்கரை போலீஸ் துணை சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சங்கு மற்றும் ஏர்வாடி போலீசார் முன்னிலையில் இந்த இடத்தை தோண்டிப்பார்த்தனர். அங்கு சிறுவனின் உடல் புதைக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்த பின் மூடிவிட்டனர்.

கொலையாளி தெரிவித்த தகவலின்படி சிறுவனின் தலை புதைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் கல்லாமொழி கிராமத்திற்கு போலீசார் விரைந்து உள்ளனர். அங்கு தலையை கைப்பற்றியபின், ஏர்வாடியில் புதைக்கப்பட்ட உடலை இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.



source:dailythanthi

--
http://thamilislam.tk

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP