சமீபத்திய பதிவுகள்

டைசனிடம் ரூ.125 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு

>> Wednesday, October 20, 2010


புகைப்படக்காரர் மீது தாக்குதல்:டைசனிடம் ரூ.125 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு

லாஸ்ஏஞ்சல்ஸ், அக். 20-

பிரபல குத்துச்சண்டை வீரர் டைசன் கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்று இருந்தார். விமான நிலையத்தில் அவரை புகைப்பட நிபுணர் அன்டோனியா படம் எடுத்தார். இதனால் கோபம் அடைந்த டைசன் புகைப்பட நிபுணரை தாக்கினார். அவரது கேமராவையும் பறித்து உடைத்தார்.
இது தொடர்பாக டைசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் போதிய ஆதாரம் இல்லை என்று கூறி டைசனை கோர்ட்டு விடுவித்துவிட்டது.
இந்த நிலையில் அன்டோனியா லாஸ்ஏஞ்சல்ஸ் கோர்ட்டில் டைசன் மீது சிவில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் டைசன் என்னை தள்ளி கேமராவையும் உடைத்து அவமானப்படுத்திவிட்டார். இதற்காக டைசன் ரூ.125 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் என்று கூறியுள்ளார்.
டைசன் தாக்கியதால் தனது தண்டுவடம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது. அதில் டைசனுக்கு அபராதம் விதிக்கபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது



source:maalaimalar
--
http://thamilislam.tk

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP