சமீபத்திய பதிவுகள்

உயிரோடு இருப்பவருக்கு சிலை வைக்கும் அறியாமை

>> Wednesday, November 24, 2010

உயிரோடு இருக்கும் இயேசுவுக்கு ஒரு சிலை வைத்து அதில் தங்க கிரீடம் வைக்கும் அறியாமையை நினைத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை.





உலகின் மிக உயரமான புதிய யேசு கிறிஸ்த்துவின் சிலை போலந்தில் திறக்கப்பட்டுள்ளது.
இச்சிலையின் அறிமுக விழாவுக்காக சுமார் 15,000 யாத்திரிகள் போலந்தின் ஸ்வெய்பாட்ஷின் நகரின் பாலிஸ் டவுன் எனும் இடத்தில் குவிந்தனர்.

இது தொடர்பில் போலந்து ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், யேசு கிறித்தவை பெருமைப்படுத்தும் விதத்தில் மாபெரும் விழாவாக இந்நிகழ்வு கொண்டாடப்படுவதாகவும், 'இப்பிரபஞ்சத்தின் மாமன்னர் கிறிஸ்த்து' என பொறிக்கப்பட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை யாத்திரிகர்கள் ஏந்தியவண்ணம் இவ்விழாவில் கலந்துகொண்டதாகவும் கூறியுள்ளன.
33 வருடங்கள் யேசு கிறிஸ்த்து பூமியில் வாழ்ந்ததன் அடையாளமாக 33 மீற்றர் உயரத்தில் இச்சிலை கட்டப்பட்டுள்லது.

இதுவரை உலகில் மிக உயரமான யேசு கிறிஸ்த்துவின் சிலையாக இருந்து வந்த பிரேஸிலின் ரியோ டி ஜனேரியோ, ரெடிமீர் கிரிஸ்த்து சிலையிலும் பார்க்க, போலந்திலுள்ள இச் சிலை மூன்று மீற்றர் உயரம் கூடியதாகும்.

இச்சிலை 33 மீற்றர் உயரம் என்ற போதும், 3 மீற்றர் உயரத்தில் தங்கக்கிரீடம் பொருத்தப்பட்டிருப்பதால் இச்சிலையின் மொத்த உயரம் 36 மீற்றர் ஆகும். இதன் மொத்த எடை 440 டொன் ஆகும்.

போலந்துக்கு வரும் கத்தோலிக்க யாத்திரிகள் மத்தியில் இச்சிலை மாபெரும் வரவேற்பை பெறும் என தெரிவிக்கப்படுகிறது.






source:uyir

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP