சமீபத்திய பதிவுகள்

உடலுறுப்புகளை தானம் செய்ததால் இறந்தும் வாழ்கிறார் பஸ் கண்டக்டர்

>> Friday, January 8, 2010


 

சென்னை: விபத்தில் சிக்கிய பஸ் கண்டக்டர் மூளைச்சாவு நிலையை அடைந்தார். "அவரைக் காப்பாற்றத் தான் முடியவில்லை. அவர் மூலம் மற்றவர்கள் வாழட்டும்' என, குடும்பத்தினர் உடல் உறுப்புகளை தானம் செய்தனர்.



சென்னை அடுத்த செங்குன்றம் மொண்டியம்மன் நகரைச் சேர்ந்தவர் ராஜன்பாபு(49); மாநகர போக்குவத்து துறை, மாதவரம் டிப்போவில் கண்டக்டராக பணிபுரிந்தார். புத்தாண்டு தினத்தில் செங் குன்றத்திலிருந்து ஊத்துக்கோட்டை செல்லும் (தடம் எண்:592) பஸ்சில் கண்டக்டராக சென்றார். ஊத்துக்கோட்டை அருகே பஸ் சென்றபோது, பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துவிட்டு தனது இருக்கைக்கு திரும்பினார். படிக்கட்டு அருகே நடந்து சென்றபோது, திடீரென டிரைவர் பிரேக் போட்டதில் நிலை தடுமாறி படிக்கட்டு வழியாக உருண்டு கீழே விழுந்தார். தலையில் பலத்த அடிபட்டு, ஆபத்தான நிலையில் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். உயிரைக் காப்பாற்றுவது கடினம் என, டாக்டர்கள் கைவிரித்த நிலையில், தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.



சிகிச்சையில் முன்னேற்றம் இல்லாமல் ராஜன்பாபு "மூளைச் சாவு' நிலையை அடைந்தார். உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என உணர்ந்த அவரது மனைவி கஸ்தூரி மற்றும் உறவினர்கள்,"அவர் தான் உயிரோடு இல்லை; அவரது உடல் உறுப்புக்களால் மற்றவர்கள் உயிரைக் காப்பாற்றுங்கள்' எனக் கூறினார். இதையடுத்து, நேற்று ராஜன்பாபுவின் இதயம், கல்லீரல், கிட்னி உள்ளிட்டவை அகற்றப்பட்டு, ஏற் கெனவே சிகிச்சைக்கு தயாராக இருந்தோருக்கு, பொறுத்தும் பணியில் டாக்டர்கள் குழு ஈடுபட்டது. ராஜன்பாபு மனைவி கஸ்தூரி கூறுகையில்,"என் கணவர் சாகவில்லை. இறந்தும் மற்றவர்கள் மூலமாக உயிர் வாழ்கிறார்' என்றார்


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

தகுந்த மரியாதையுடன் அமரர் வேலுப்பிள்ளையின் இறுதிக்கிரிகைகள்

தீருவில் வெளியில் அமரர் வேலுப்பிள்ளையின் இறுதிக்கிரிகைகள்

 

சிவாஜிலிங்கம் எம்.பி யால் அமரர் வேலுப்பிள்ளை அவர்களின் பூத உடல் கையேற்கப்பட்டு, தற்போது வவுனியாநோக்கி சென்றுகொண்டு இருப்பதாக அறியப்படுகிறது. நாளை (09.01.2010) காலை வவுனியா சென்று, அங்கிருந்து ஏ9 பாதையூடாக யாழ் வல்வெட்டித்துறைக்கு கொண்டுசெல்லப்படும் பூதவுடலை, குமரப்பா புலேந்திரன் ஆகியோர் தகனம் செய்யப்பட்ட தீருவில் வெளியில் தகனசெய்ய ஏற்பாடாகியுள்ளதாக அறியப்படுகிறது. இப் பூத உடல் செல்லும் வாகனத் தொடரணியில் தேசிய தலைவரின் தாயாரும் உடன் செல்வதாக அதிர்வு இணையம் அறிகிறது.

தீருவில் வெளியில் அமரர் திருவெங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் உடல் தகுந்த மரியாதையுடன் தகனமாகும் என திரு சிவாஜிலிங்கம் எம்.பி தெரிவித்தார். தான் அரசியலுக்காக இதைச் செய்வதாக சில இணையத் தளங்கள் செய்திவெளியிட்டிருப்பதை மறுத்த சிவாஜிலிங்கம், அப்படி என்றால் அமரர் வேலுப்பிள்ளை அவர்களை சிங்கள அரசு அனாதைப் பிணத்தைப் போல எரிப்பதையா இந்த இணையத்தளங்கள் விரும்புகின்றன எனக் காரசாரமாகத் தெரிவித்தார்.

எதைச் செய்தாலும் அதனை தமக்கு ஏற்றவாறு விமர்சிக்கும் சில இணையத்தளங்கள் பல தமிழர்கள் மத்தியில் குழப்பதை உண்டுபண்ணும் நோகில் இயங்கிவருகிறது. ஜரோப்பாவில் இருந்து விமர்சிக்கும் இந்த இணையத்தளங்களும், சில தனி மனிதர்களும், இலங்கை சென்று அமரர் வேலுப்பிள்ளையின் பூத உடலை பொறுப்பேற்க்கத் தயாரா என அவர் கேள்வியைத் தொடுத்துள்ளார். எனவே விமர்சிப்பதை முதலில் நிறுத்தி, தமிழர்கள் ஒன்றுபடவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். 






--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

விமான நிலையங்களில் அமெரிக்கா கெடுபிடி ஈராக், பாக்., உட்பட 14 நாடுகள் கடும் எதிர்ப்பு

 

Top global news update 

வாஷிங்டன்:அமெரிக்க, "போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு நிர்வாகம்' (டி.எஸ்.ஏ.,) காட்டும் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு தெற்காசிய நாடுகளில் உள்ள பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.கடந்த டிச., 25ம் தேதி, அமெரிக்க விமானத்தை வெடிகுண்டு மூலம் தகர்க்க முயன்ற நைஜீரிய நாட்டு பயங்கரவாதியின் கைதுக்குப் பிறகு, அமெரிக்காவின், "போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு நிர்வாகம்' (டி.எஸ்.ஏ.,) பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தியுள்ளது.



குறிப்பாக அந்நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக சமீபத்தில், ஒருவரின் உடல் மற்றும் அவரது பொருட்கள் அனைத்தையும் ஊடுருவி ஸ்கேன் செய்யும் புதிய கருவியையும் விமான நிலையங்களில் அமெரிக்கா பொருத்தியுள்ளது.



இந்த விஷயத்தில் இஸ்ரேல் பின்பற்றும் நடைமுறைய அமெரிக்கா பின்பற்றவும் உரிய நடைமுறைகள் வகுக்கப்படுகின்றன.தற்போது அமலாகியிருக்கும் இப்புதிய முறையின் மூலம், ஆப்கன், அல்ஜீரியா, கியூபா, ஈராக், ஈரான், லெபனான், லிபியா, நைஜீரியா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய 14 நாடுகளிலிருந்து வரும் பயணிகள் மட்டும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர்.



இதற்குக் கண்டனம் தெரிவித்து இந்நாடுகளில் உள்ள சாயா சி.டி.சி., மைத்ரி, சக்தி பியர் குழுமம், சீக்கியக் கூட்டமைப்பு, தெற்காசிய அமெரிக்கர்களின் முன்னணி, தெற்காசியர்களின் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய சீக்கியர்கள் உள்ளிட்ட அமைப்புகள் கூட்டறிக்கை விடுத்துள்ளன.



அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:அமெரிக்காவின் இந்தப் பாதுகாப்பு கெடுபிடி கள், குறிப்பிட்ட மத நம்பிக்கை உள்ள நாடுகளிலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் வரும் விமானப் பயணிகளிடையே இன,மத வேறுபாடுகளைப் புகுத்துவதாக உள்ளன. குறிப்பாக இஸ்லாமிய சிறுபான்மை நாடுகளைக் குறிவைத்துத்தான் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதில் சந்தேகமில்லை.பாதுகாப்பு குறித்த புதிய கொள்கை களை உருவாக்குவதை விடுத்து, இன, மத மற்றும் நாடுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.



இவை, இந்நாடுகளின் மீது ஏற்கனவே இருக்கும் தவறான அபிப்பிராயங்களை அதிகரிக் கச் செய்யும். அது மட்டுமில்லாமல், பாதுகாப்புக்கு இடையூறு செய்யும். அமெரிக்காவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும். இவை மனித உரிமை மற்றும் சமத்துவத்துக்கு எதிரானவை.அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைகள், 2001, செப்., 11ல் இருந்தே தொடங்கிவிட்டன.



பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டுமானால் இதுபோன்ற நடவடிக்கைகளை சார்ந்திராமல், மேம்படுத்தப்பட்ட கொள்கைகளை உருவாக்கி அவற்றை நடைமுறைப்படுத்தும் வழியைப் பார்க்க வேண்டும்.இவ்வாறு அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



source:dinamalar
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

சனல் 4 வீடியோ உண்மையானது: ஐ.நாவில் பிலிப் அல்ஸ்டன் அதிரடி

 

நேற்றைய தினம் நியூயோர்க்கில் நடைபெற்ற ஐ.நா மாநாட்டில் உரையாற்றிய பிலிப் அல்ஸ்டன், சனல் 4 இல் ஒலிபரப்பான வீடியோ உண்மையானது எனத் தெரிவித்துள்ளார். சட்டத்திற்கு புறம்பான படுகொலைகள் மற்றும் யுத்தக் குற்றங்களை விசாரணைசெய்யும் ஐ.நா வின் உயரதிகாரி பிலிப் அல்ஸ்டன் அவர்கள் நேற்றைய தினம் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டை நடத்தியிருந்தார். அதில் அவர் பிரித்தானியாவில் சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய வீடியோக் காட்சிகள் நிஜமானவை என தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

கைகள் கட்டப்பட்ட நிலையில் முழு நிர்வாணமாக, தமிழ் இளைஞர்களை இலங்கை இராணுவம் சுட்டுக் கொல்லும் காட்சிகள் ஆகஸ்ட் மாதம் வெளியாகி இருந்தது. இதனையடுத்து 4 பேர் கொண்ட அவுஸ்திரேலியா வாழ் இலங்கை நிபுணர்களைக் கொண்டு இலங்கை அரசு அந்த வீடியோவை பரிசீலித்து, அது பொய்யான வீடியோ என உலகை ஏமாற்ற முனைந்தது. இதனால் பிலிப் அல்ஸ்டனின் உயரதிகாரிகள் இது குறித்து அவரை ஆராயுமாறு பணித்தனர் என்று கூறுகிறார் பிலிப் அல்ஸ்டன். 

இந்த வீடியோவை ஆராய பிலிப் அல்ஸ்டன் 3 தடய வல்லுனர்களை நியமித்துள்ளார். டானியல் சுமித், என்பவர் தடய வல்லுனர் , பீட்டர் டயட்டாக், வீடியோ வல்லுனர் மற்றும் ஜேஸ் ஸ்பிபாக் ஆயுத வல்லுனர். இவர்கள் மூவரும் சேர்ந்து இந்த வீடியோவை ஆராய்ந்து இது உண்மையான காட்சிகள் அடங்கிய வீடியோ என சான்றிதழ் அளித்துள்ளனர். சுமார் ஜூலை 17ம் திகதி இக் கொலைகள் நடைபெற்றிருப்பதாக அந்த வீடியோக் காட்சிகளை பதிவுசெய்த செல்போன் தேதி மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து பிலிப் அல்ஸ்டன் இலங்கை அரசிடம் விளக்கம் கோரியுள்ளதுடன், சுதந்திரமான விசாரணைகளுக்கு தம்மை அனுமதிக்கவேண்டும் என்றும் கோரியுள்ளார். இதனை இலங்கை அரசு நிராகரித்தால், மேலும் பல பின் விளைவுகளை இலங்கை அரசு சந்திக்க நேரிடும் என அறியப்படுகிறது. பிலிப் அல்ஸ்டன் அவர்களை அதிர்வு இணையம் பிரத்தியேகமாகத் தொடர்புகொண்டுள்ளது. இன்னும் சில நாட்களில் இது குறித்து அவர் அதிர்வுக்கு பிரத்தியேக நேர்காணல் ஒன்றைத் தரவுள்ளார். 

அவர் நேற்று நடத்திய ஐ.நா மாநாட்டின் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. 



source:athirvu





--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP