சமீபத்திய பதிவுகள்

ஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உமரின் பதிலும் - 1

>> Sunday, January 17, 2010

 

 
ஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உமரின் பதிலும்
 
 
முன்னுரை: என் பெயர் உமர் (புனைப் பெயர்), நான் ஈஸா குர்ஆன் என்ற பிளாக்கரில் இஸ்லாமிய கிறிஸ்தவ கட்டுரைகளை மறுப்புக்களை எழுதிக்கொண்டு வருகிறேன். 2008ம் ஆண்டிலிருந்து இதர நண்பர்களின் உதவி கொண்டு ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் ஆங்கில கட்டுரைகளை தமிழாக்கம் செய்து பதித்துக்கொண்டு இருக்கிறேன். தமிழ் கிறிஸ்தவர்கள்என்ற தளத்திலும் கட்டுரைகள் பதிக்கப்படுகின்றன. எழுத்து விவாதத்திற்கு இஸ்லாமியர்கள் விரும்பினால், அதற்கு தயார் என்றுச் சொல்லி, 2007ம் ஆண்டில் தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளத்தில் நடந்த ஒரு உரையாடலில் பதித்தேன் (அவ்வுரையாடலை இங்கு காணலாம்).


கடந்த வாரம் (ஜனவரி 7ம் தேதி) அர்ஷத் ரஹ்மான் என்ற பெயரிலிருந்து ஒரு மெயில் வந்தது, அதாவது பீஜே அவர்களுடன் நேரடி விவாதத்திற்கு தயாரா? என்று கேள்வி கேட்டு வந்தது, மற்றும் ஆன்லைன் பீஜே தளத்திலும் இக்கேள்வியைக் கேட்டு பீஜே அவர்கள் அழைப்பு விடுத்து இருந்தார்கள். 

முதலில் எனக்கு மெயில் அனுப்பிய சகோதரருக்கு பதிலை கொடுத்துவிட்டு, பிறகு பீஜே அவர்கள் எழுதியவைகளுக்கு பதிலை தருகிறேன். 

எனக்கு மெயில் அனுப்பிய அர்ஷத் ரஹ்மான் அவர்களுக்கு பதில்:
 
அர்ஷத் ரஹ்மான் எழுதியது:

\\ஈசா குரான் உமர் அவர்களுக்கு! உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!//
 
உமர் எழுதியது:

அன்பான சகோதரர் அர்ஷத் ரஹ்மான் அவர்களுக்கு, உங்கள் மீதும் இறைவனின் சாந்தி சமாதானம் உண்டாவதாக.
 
அர்ஷத் ரஹ்மான் எழுதியது:

//இஸ்லாத்தை விமர்சனம் செய்யும் நீங்கள் உங்கள் கொள்கையில் உண்மையாளராக இருந்தால் முஸ்லிம்களுடன் நேரடி விவாதத்துக்கு வர வேண்டும்.//
 
உமர் எழுதியது:

இதைத் தான் நானும் கேட்கிறேன், இஸ்லாம் மீதும் அதன் கொள்கைகள் மீதும் உண்மையிலேயே உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், ஏன் நீங்கள் எழுத்து விவாதத்திற்கு வரக்கூடாது? 

நேரடி விவாதம் செய்தால் தான், ஒருவரின் நம்பிக்கை உண்மையானது என்று நிருபிக்கப்படும் என்பது சரியான வாதமல்ல, அதற்கு பதிலாக எழுத்து வடிவத்தில் எடுத்துவைக்கும் விவரங்கள் உண்மையானதாகவும், ஆதாரபூர்வமானதாகவும் இருக்கின்றதா என்பதைத் தான் கவனிக்கவேண்டும், இதனை எல்லாரும் ஒப்புக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
 
அர்ஷத் ரஹ்மான் எழுதியது: 

//அதை விடுத்து எழுத்து விவாதத்துக்கு மட்டும் தான் நான் வருவேன் என்று நீங்கள் கூறுவது கோழைத்தனமானது.//
 
உமர் எழுதியது: 

நேரடி விவாதத்தை மட்டும் தான் நாங்கள் ஒப்புக்கொள்வோம் என்றுச் சொல்வதும் கோழைத்தனம் தானே! உங்கள் மார்க்கம் மீது உங்களுக்கு இருக்கும் நம்பிக்கையின்மை தானே! வீரர்களுக்கு புல்லும் ஆயுதம் என்ற சொற்றடருக்கு இணங்க, நீங்கள் வீரர்களாக உங்களை கருதிக்கொண்டால், கிறிஸ்தவர்களுடன் எழுத்து விவாதத்தையும் செய்யலாமே!
 
அர்ஷத் ரஹ்மான் எழுதியது: 

//மக்கள் மத்தியில் விவாதம் செய்வதுதான் அதிக மக்களுக்கு சத்தியத்தை கொண்டு செல்ல உதவும். எழுத்து வடிவ விவாதத்தின் மூலம் பாமர மக்களை சென்றடைய முடியாது.//
 
உமர் எழுதியது: 

உங்களின் இந்த வாதத்தை முழுவதுமாக நான் அங்கீகரிக்க முடியாது. நேரடி விவாதத்திற்கும் எழுத்து விவாதத்திற்கும் அதற்குரிய நன்மைகள் உண்டு. ஏனென்றால், ஒரு சமயத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நடத்தப்படும் விவாதத்தை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ளவர்கள் தான் காணமுடியும், மற்றும் மற்றவர்கள் அந்த நிகழ்ச்சியை மறுபடியும் காணவேண்டுமானால், அதன் வீடியோக்களை டவுன்லோட் செய்து பார்க்கவேண்டும், இதற்கு அதிகபடியான நேரம் எடுத்துக்கொள்ளும். அல்லது சீடிக்களை வாங்கி பார்க்கவேண்டும் இதே எழுத்து விவாதமென்றால், இணையத்தில் பதித்தால் அதனை ஒரு சில நிமிடங்களில் டவுன்லோட் செய்து படிக்கமுடியும். ஒரு நபர் ஒரு எழுத்துவிவாத கட்டுரையை பிரிண்ட் எடுத்து அனேகருக்கு தரலாம், அதனை படிக்க சாதாரண மக்களுக்கு கணினியோ, வீடியோ பிளேயரோ தேவையில்லை. பேருந்தில் பிரயாணம் செய்யும் போதும், வீட்டில் மின்சாரம் இல்லாத நேரத்திலும் பகலின் வெளிச்சத்திலும் படித்துக்கொள்ளமுடியும். அதாவது, மனது இருந்தால் மார்க்கமுண்டு. இரண்டு வகையான விவாத முறையிலும் அதற்குரிய பயன்பாடுகள் உண்டு. எனவே, ஒருவகை தான் சரியானது என்பது ஏற்க முடியாது.
 
அர்ஷத் ரஹ்மான் எழுதியது:

//கிருஸ்தவ மதமானது அதிக மக்கள் கடைபிடிக்கும் ஓன்று. எனவே எழுத்து விவாதம் என்பது இந்த உலகளாவிய சர்ச்சைக்கு பெரிய தீர்வாக அமையாது.//
 
உமர் எழுதியது: 

தீர்வு உங்கள் கையில், என் கையில் இல்லை. இந்தியாவில் எத்தனை சதவிகித கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள்? அவர்கள் எத்தனை சதவிகித மக்களுக்கு தமிழ் தெரியும், இவர்களில் எத்தனை சதவிகித மக்கள் நேரடி விவாதத்தை பார்ப்பார்கள்? இவர்களில் எத்தனை சதவிகிதம் பேர் வீடியோக்களை டவுன்லோட் செய்து பார்ப்பார்கள்? ஆக, அதிக மக்கள் தொகை இருப்பதால் நேரடி விவாதம் தான் சரியானது என்பதும் ஏற்பதற்கில்லை.
 
அர்ஷத் ரஹ்மான் எழுதியது:

//பீ.ஜைனுலாபிதீன் அவர்கள் உங்களை போன்று ஒளிந்து கொண்டு இஸ்லாத்தை விமர்சனம் செய்பவர்களுக்கு தன்னுடைய இணையதளத்தில் பகிரங்க விவாத அழைப்பு விடுத்துள்ளார் (www.onlinepj.com).//
 
 
உமர் எழுதியது: 

 
ஒளிந்துக்கொள்ளாமல் பகிரங்கமாக பொய்களையும், தங்கள் சொந்த யூகங்களையும் முன்வைத்து ஆதாரமில்லாமல் கட்டுரைகளை புத்தகங்களை எழுதும் எல்லா இஸ்லாமிய அறிஞர்களுக்கும் 2007ம் ஆண்டே, நானும் எழுத்து விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளேன். விரும்புகிறவர்கள் என் கட்டுரைகளுக்கு பதில்களை எழுதலாம், எழுத்து விவாதத்தில் ஈடுபடலாம். பீஜே அவர்களின் விவாத அழைப்பிற்கு இக்கட்டுரையில் பதிலை நான் கீழே கொடுத்துள்ளேன்.
 
அர்ஷத் ரஹ்மான் எழுதியது:

//உங்களுக்கு உண்மையில் உங்கள் கொள்கையில் உறுதி இருந்தால்,கிருஸ்தவத்தின் மீது எள் முனையளவாவது ஈடுபாடு இருந்தால்,சத்தியத்தை நீருபிக்க திராணி இருந்தால் இந்த விவாத அழைப்பை ஏற்று விவாதத்துக்கு வருமாறு உங்களை அழைக்கிறோம்.பிரச்சினை வரும் என்றெல்லாம் போலி சாக்குகளை கூறி நழுவாதீர்கள். காவல்துறையின் பாதுகாப்பை வேண்டுமானாலும் நாடலாம்.\\
 
உமர் எழுதியது: 

அப்படியானால், எழுத்து விவாதத்திற்கு வரமாட்டீர்கள், இஸ்லாமிய அறிஞர்கள் எழுத்து விவாதத்திற்கு பயப்படுகிறார்கள் என்று மக்கள் கருதலாமா? இஸ்லாமிய அறிஞர்கள் நேரடி விவாதத்திற்கு வீரர்கள், எழுத்து விவாதத்திற்கு கோழைகள் என்று மக்கள் கருதிக்கொள்ளலாமா? 

எங்களிடம் உண்மை இருக்கிறது என்பதால் தான் கடந்த மூன்று ஆண்டுகளாக, தொடர்ந்து பதில்களை கொடுத்துக்கொண்டு கேள்விகளை தொடுத்துக்கொண்டு இருக்கிறோம். 

உங்களுக்கும் இஸ்லாம் மீது அணு அளவாவது நம்பிக்கை இருந்தால், எழுத்து விவாதத்திற்கு வாருங்கள், அப்படி வரவில்லையானாலும் சரி, நான் தொடர்ந்து எழுதுவதை நிறுத்தப் போவதில்லை. காவல் துறைப்பற்றி சொல்லிய விஷயம் பற்றி பீஜே அவர்களின் பதிலில் எழுதுவேன். 

முடிவாக, அர்ஷத் அவர்களே, எழுத்து விவாதம் என்றால் தான் என்னால் வரமுடியும், நேரடி விவாதம் என்றால் முடியாது. 

இணையத்தில் எழுதினால் என்ன, ஒளிந்துகொண்டு எழுதினால் என்ன? சொல்லப்படும் செய்தி உண்மையா? ஆதாரமுண்டா? என்று பார்க்கவேண்டுமே தவிர, இவன் (உமர்) நேரடி விவாதத்திற்கு வரமாட்டான் என்பதை தெரிந்துக்கொண்டே "இஸ்லாமிய அறிஞர்கள் விவாதத்திற்கு அழைத்தால், உமர் வரவில்லை" இதனால், இஸ்லாம் தான் உண்மையானது என்ற கிளிப்பிள்ளைப் பேச்சை சொல்வதை நிறுத்திக்கொண்டு, என் கட்டுரைகளுக்கு உங்களால் இயன்ற பதிலை எழுதி, என் கட்டுரையின் தொடுப்பையும் கொடுத்து (உங்களுக்கு பயமில்லையென்றால்) உங்கள் தளத்தில் பதித்தால், படிக்கும் வாசகர்களுக்கு உண்மை புரியும். இது என் தாழ்மையான வேண்டுகோள். இதைச் செய்வீர்களா?

 
 
இப்போது, ஆன்லைன் பீஜே தளத்தில் பீஜே அவர்களின் வரிகளுக்கு என் பதிலைத் தருகிறேன் 
(http://onlinepj.com/vimarsanangal/vivathakalam/).
 
பீஜே அவர்கள் எழுதியவை: 

//கிறித்தவர்களின் அழைப்பு 

இயேசு இறைமகனா? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலவர் பி.ஜைனூல் ஆபிதீன் புத்தகத்திற்கு பதில் 1 தமிழ் உலகின் இஸ்லாமிய அறிஞர்கள் அனைவருக்கும் ஈசா குரான் உமர் எழுத்து வடிவ விவாததுக்கு பகிரங்க அழைப்பு 

என்று ஈஸா குரான் உமர் என்பவர் அழைப்பு விடுகிறார். இதற்கு என்ன பதில் என்று ஒரு சகோதரர் கேடிருந்தார். 

அதற்கு நாம் அளித்த பதில்

விவாதம் என்றால் நேருக்கு நேராக இருக்க வேண்டும். அது குறித்து ஒப்பந்தம் செய்ய வேண்டும். அப்போது தான் யார் கூறுவது தவறு என்று மக்களுக்குத் தெரியும்.//
 
உமர் எழுதியது 

கட்டுரைகளில் அல்லது எழுத்துக்களில் பதில்களைச் சொன்னாலோ அல்லது கேள்விகளை கேட்டாலோ அது விவாதமாக இருக்காதா? ஒப்பந்தம் என்பது இன்ன இன்ன தலைப்புக்களில் எழுதலாம், கேள்விகளை கேட்கலாம் என்று கூட போட்டுக்கொள்ளலாமே. 

பீஜே அவர்களே! யார் சொல்வது தவறு என்று மக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டுமானால், சொல்லப்பட்ட விவரத்திற்கு ஆதாரமாக வசனங்களையோ, ஹதீஸ்களையோ கொடுத்தார்களா? என்று மக்கள் கவனித்தால் போதுமே! அதை விட்டுவிட்டு, நேரடி விவாதம் செய்தால் தான் யார் சொன்னது தவறு, சரி என்று மக்கள் தெரிந்துக் கொள்வார்கள் என்பது ஒரு வரட்டு வாதமாகும். உங்களைப் போல நிலையில் இருக்கும் ஒரு பெரிய இஸ்லாமிய அறிஞர் இப்படிப்பட்டவைகளைச் சொல்வது உங்கள் தகுதிக்கு சரியானதல்ல என்பது என் கருத்து. 

உதாரணத்திற்கு, உங்களின் ஆன்லைன் பீஜே தளத்தில் வெறும் விவாதம் புரிந்த வீடியோக்களை மட்டுமா நீங்கள் பதிக்கிறீர்கள்? எழுத்து வடிவில் கட்டுரைகள் பதிக்கவில்லையா? எழுத்து வடியில் உங்கள் பதில்கள் இல்லையா? சொல்லப்பட்ட செய்திக்கு ஆதாரமாக விவரங்களை எழுத்துவடிவில் கொடுத்தாலே போதுமே...படிக்கும் வாசகர்கள் அவைகள் சரியானவையா என்பதை சோதித்துப் பார்த்து தெரிந்துக்கொள்வார்கள். அவ்வளவு ஏன், இன்னும் சில முக்கியமான விடியோ விவாதங்கள் அதிகபடியான மக்களை சென்று அடையவேண்டும் என்பதற்காக, மாதாந்திர பத்திரிக்கையில் எழுத்துவடிவில் பதிப்பதில்லையா? அவைகளை எழுத்துவடியில் மாற்றி கட்டுரைகளாக தளங்களில் பதிப்பதில்லையா? எனவே, நேரடி விவாதம் புரிந்தால் தான் மக்களுக்கு சத்தியம் சென்று அடையும் என்பது பொருந்தாத விஷயம். இவைகள் எழுத்து விவாதத்திற்கு ஒப்புக்கொள்ளக்கூடாது என்று பயப்படும் இஸ்லாமிய அறிஞர்களின் வார்த்தைகளாகும். (ஏன் ஒட்டுமொத்த இஸ்லாமிய தமிழ் அறிஞர்கள் அனைவரும் பீஜே உட்பட எழுத்து விவாதத்திற்கு தயங்குகிறார்கள் என்பதை ஒருமுறை குர்‍ஆனையும், ஹதீஸ்களையும் முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரத்தையும் தனக்கு புரியும் மொழியில் படிக்கும் சராசரி மனிதன் புரிந்துகொள்வான்).
 
பீஜே அவர்கள் எழுதியவை: 

மேலும் இயேசு இறை மகனா என்ற் தலைப்பில் நாம் எடுத்து வைக்கவுள்ள வாதங்கள் அனைத்தும் நூல் வடிவில் அவர்களிடம் உள்ளது. எனவே நாத்திகர்களுடன் நடந்தது போல், ஜெபமனி என்ற கிறித்தவ பாதிரியாருடன் நடந்தது போல் அவர்கள் விவாதத்துக்கு தயாரா என்று கேட்டு எழுதுங்கள். நான் தயாராக இருக்கிறேன்.
 
உமர் எழுதியது: 

எங்களிடம் இயேசு இறைமகனா என்ற உங்களின் புத்தகம் உள்ளது என்பதை தெரிந்து வைத்திருக்கும் நீங்கள், அப்புத்தகத்திற்கு நாங்கள் கொடுத்த ஒரு சில பதில் கட்டுரைகளை படித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன். அக்கட்டுரைகளுக்கு ஏதாவது பதிலை நீங்கள் (பீஜே அவர்கள்) கொடுத்துள்ளீர்களா? மட்டுமல்ல, இவ்வாண்டு முக்கியமாக உங்களின் ஒவ்வொரு கிறிஸ்தவ விமர்சனத்திற்கும் பதிலை தர நான் விரும்புகிறேன். 

நேரடி விவாதத்திற்கு வரமுடியாது, எழுத்துவிவாதத்திற்கு பீஜே அவர்கள் தயார் என்றால் நானும் தயார்.
 
பீஜே அவர்கள் எழுதியவை: 

ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் என்று பொருந்தாக் காரணம் சொல்வார்களானால் அதனால் ஏற்படும் எந்த விளைவுக்கும் நான் பொறுப்பு என்று எழுதித் தருகிறேன், தேவைப்பட்டால் காவல் துறை பாதுகாப்பையும் பெறுவோம்.
 
உமர் எழுதியது: 

எழுத்து விவாதத்தில் ஈடுபட்டால், இஸ்லாமியர்களுக்கு என்ன அசம்பாவிதம் நடந்துவிடும்? ஏன் நீங்கள் எழுத்து விவாதத்திற்கு வரக்கூடாது? 

காவல் துறையின் பாதுகாப்பை நாடலாம் என்று நீங்கள் சொல்வது மிகவும் வேடிக்கையானது. நான் இங்கு காவல் துறையை அவமதிக்கவில்லை, ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறது என்பதைச் சொல்கிறேன். இந்தியாவில் இலட்சக்கணக்கில் பாதுகாவலர்கள் இருக்கிறார்கள், கோடிக்கணக்கான பணம் இராணுவத்திற்கும், புலனாய்வு துறைக்கும் செலவிடப்படுகிறது. இப்படி இருந்தும், இஸ்லாமிய தீவிரவாதிகளின் கைவரிசை தொடர்ந்து காட்டப்பட்டுக்கொண்டே இருக்கிறது, மும்பை தாக்குதல், இதற்கு ஒரு உதாரணம். மதபாகுபாடு இன்றி திருட்டு, கொள்ளை, கற்பழிப்பு என்று அனைத்து வித சமுதாய கேடுகளும் அவ்வப்போது ஆங்காங்கே நடக்கின்றன. பாதுகாப்பு துறையில் நாங்கள் தான் முன்னிலையில் இருக்கிறோம் என்று நம்பிக்கொண்டு இருந்த அமெரிக்காவிலேயே அனேக இஸ்லாமிய தீவிரவாத செயல்கள் நடந்துள்ளன. நான் சொல்ல வருவது என்னவென்றால், கோடிக்கணக்கான மக்கள் உள்ள நாட்டில், பாதுகாவலர்கள் என்ன தான் பாதுகாப்பு அளித்தாலும் எல்லாருக்கும், எல்லா நேரத்திலும் பாதுகாப்பு அளிக்கமுடியுமா? அது முடியாத காரியம். ஏதோ ஒரு நாட்டில் யாரோ ஒருவர் கார்ட்டூன் வரைந்தான் என்பதற்காக, வேறு நாட்டில் வாழும் ஒரு முஸ்லீம் சம்மந்தமே இல்லாத மக்களை கொல்லும் கொடூரம் நடந்துக்கொண்டு இருக்கும் போது, பாதுகாப்பு பற்றி அதுவும் இஸ்லாமியர்களிடமிருந்து பாதுகாப்பு வேண்டும் என்பது பற்றி பேசுவது வேடிக்கையானது. எப்போது தனி மனிதன் குற்றம் இழைக்கமாட்டேன் என்று முடிவு எடுத்து வாழ்வானோ அன்று தான் குற்றங்கள் முழுவதுமாக குறையுமே தவிர, இந்தியா போன்ற ஜனத்தொகை உள்ள நாட்டில் பாதுகாலவர்களினால் 100% குற்றங்களை குறைக்கமுடியாது. 

நான் பீஜே அவர்களிடம் சொல்ல விரும்புவது, நீங்கள் எழுத்துவிவாதத்திற்கு தயார் என்றால், நானும் தயார்.
 
பீஜே அவர்கள் எழுதியவை:

பொருளாதாரச் செலவு குறித்து அவர்களுக்குத் தயக்கம் என்றால் அதையும் நாம் ஏற்றுக் கொள்வோம் என்று கூறி பகிரங்க விவாதத்துக்கு தொடர்ந்து அழைப்பு கொடுங்கள்.
 
உமர் எழுதியது

பொருளாதார செலவு ஒரு பிரச்சனை இல்லை.
 
பீஜே அவர்கள் எழுதியவை:

இந்த அழைப்பை அனைவருக்கும் தெரியும் வகையில் பரவலாக்குங்கள். அவர்கள் ஒப்புக் கொண்டால் எங்கே தொடர்பு கொள்ள வேண்டும் என்று தெரிவித்தால் நான் சென்று விவாத ஒப்பந்தம் செய்யத் தயார். இதை அவர்களுக்குத் தெரிவித்து வலியுறுத்துங்கள். கிறித்தவ நண்பர்கள் உங்களுக்கு இருந்தால் அவர்கள் மூலமாகவும் நெருக்கடியை ஏற்படுத்துங்கள்.
 
உமர் எழுதியது: 

2007ம் ஆண்டிலிருந்து என் எழுத்து விவாத அழைப்பு பரவலாக இணையத்தில் இருக்கிறது, உங்களுக்கு எவ்வளவு நெருக்கடியை எங்கள் கட்டுரைகள் உருவாக்கியிருக்கிறது என்பதை என்னால் உணரமுடிகிறது. 

நாங்கள் ஒரு குழுவாக ஒரு சில நண்பர்கள் சேர்ந்து இந்த மொழியாக்க வேலையைச் செய்கிறோம். நாங்கள் ஒரு சங்கத்தை ஸ்தாபனத்தை அமைத்து செயல்படவில்லை. 

தமிழ் கிற்ஸ்தவர்கள் இஸ்லாமிய அறிஞர்களின் விமர்சனங்களை படித்துள்ளார்கள், அதுபோல கிறிஸ்தவ பதில்களையும் படித்துக்கொண்டு இருக்கிறார்கள், இஸ்லாம் பற்றி ஓரளவிற்கு அவர்களுக்கு புரிந்துவிட்டது, எனவே, யாரும் எங்களுக்கு நெருக்கடி கொடுக்கமுடியாது. 

எழுத்துவிவாதத்திற்கு வந்தால், நாங்கள் ஒப்புக்கொள்வோம். நேரடி விவாதத்திற்கு மட்டும் வரமுடியாது. இது தான் எங்கள் பதில்.
 
 
நான் நேரடி விவாதத்திற்கு வர மறுத்துவிட்டேன், இனி பீஜே அவர்கள் ஈஸா குர்ஆன் கட்டுரைகள் பற்றி என்ன முடிவு எடுக்கப்போகிறீரக்ள்? 

பீஜே அவர்களே, எழுத்து மூலமாகவும் இஸ்லாம் பதிலைத் தரும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்குமானால், இதுவரை நாங்கள் (ஈஸா குர்ஆன், மற்றும் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்) பதித்த தமிழ் கட்டுரைகளை உங்கள் தளத்தில் குறிப்பிட்டு, அவற்றிற்கு பதிலைக் கொடுப்பீர்களானால், தமிழ் பேசும் மக்கள் இஸ்லாம் பற்றி ஒரு நல்ல முடிவிற்கு வருவார்கள். இப்படி செய்யாமல், வெறும் சொல்லிய விஷயத்தை கிளிப்பிள்ளையைப் போல சொல்லிக்கொண்டு இருந்தால், "இஸ்லாமியர்கள் மேடையில் தான் பேசுவார்கள், எழுத்துக்களில் இவர்களால் பதிலைத் தரமுடியவில்லை" என்று மக்கள் நினைத்துக்கொள்வார்கள். 

நேரடி விவாதத்திற்கு ஒப்புக்கொள்பவர்களிடம் நேரடியாக விவாதம் புரியுங்கள், எழுத்து மூலம் விவாதம் புரிபவர்களிடம் எழுத்து மூலமாக விவாதம் புரியுங்கள். 

நீங்கள் எங்கள் தள தொடுப்புக்களை கொடுப்பீர்களோ இல்லையோ, நாங்கள் மட்டும் உங்கள் விமர்சனங்களை எழுதி அதற்கு பதிலை கொடுத்துக்கொண்டே இருப்போம். 

இன்னும் அனேக இஸ்லாமிய சகோதரர்கள் பீஜே அவர்களின் விவாதத்திற்கு வரமுடியுமா என்று கேட்டு மெயில்களை தொடர்ந்து அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள், அவர்களில் ஒருவர் "ரிமைன்டர் 1" என்று ரிமைன்டரும் அனுப்பிக்கொண்டு இருக்கிறார், அவரிடம் நான் கேட்கிறேன், 2007ம் ஆண்டிலிருந்து எத்தனை ரிமைன்டர்களை நீங்கள் பீஜே அவர்களுக்கு அனுப்பியிருக்கிறீரக்ள்? எழுத்துவிவாதத்திற்கு ஏன் ஒப்புக்கொள்ளும் படி அவருக்கு நெருக்கடியை கொடுத்திருக்கிறீர்களா? இனியாவது கொடுங்கள், எழுத்துவிவாதத்திற்கு ஒப்புக்கொள்ளுங்கள் என்று அவருக்கு சொல்லுங்கள்.
 
 
Umar



--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

விண்டோஸ் 7 எந்த பதிப்பு உங்களுக்கு?

 
 


 மிகப் பெரிய அளவிலான தொழில் நுட்ப மாற்றங்களுடன் சென்ற அக்டோபர் 22 அன்று, மைக்ரோசாப்ட் உலக நாடுகள் அனைத்திலும் தன் புதிய விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. புதிய வசதிகள், தொழில் நுட்ப மாற்றங்கள் ஆகியவற்றினால், இதன் வெளியீடு ஏறத்தாழ 18 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்டது. டில்லியில் இதனைத் தன் சிஸ்டம் கூட்டாளிகளான எச்.சி.எல்., எச்.பி. மற்றும் ஏசர் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து இந்த பதிப்பை மைக்ரோசாப்ட் வெளியிட்டது. புதிய வசதிகளாக வேடிக்கை அம்சங்கள், எளிமையான இயக்கம் மற்றும் இதுவரை இல்லாத வகையில் கூடுதல் பாதுகாப்பு எனப் பல முனைகளில் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் அமைக்கப் பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் இந்தியா பிரிவின் தலைவர் அறிவித்துள்ளார்.



புதிய வசதிகளை உருவமைக்க ஏறத்தாழ 600 வகையான கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்டன. இதன் சோதனைத் தொகுப்பினை, இதுவரை ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரலாற்றில் இல்லாத வகையில், 80 லட்சம் பேர் உலகின் பல நாடுகளில் சோதனை செய்தனர். அவர்கள் அளித்த அறிவுரைகளுக்கேற்ப இவற்றில் இருந்த பல பிரச்னை களுக்குத் தீர்வுகள் காணப்பட்டன. இதற்கு முன் வெளிவந்த விஸ்டா சிஸ்டம், வாடிக்கையாளர்களிடம் இடம் பெறாமல் போவதற்குப் பல காரணங்கள் இருந்தன. கம்ப்யூட்டர் கட்டமைப்பில் பல புதிய கூடுதல் வசதிகளை விஸ்டா எதிர்பார்த்ததால், பலர் தங்களின் கம்ப்யூட்டர்களை 2001ல் வெளியான விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திலேயே தொடர்ந்து இயக்கி வந்தனர். இதனை மனதில் கொண்டே விண்டோஸ் 7 உருவாக்கப்பட்டது.
விண்டோஸ் 7 அதன் பாதுகாப்பிற்கென பல அம்சங்களைக் கொண்டிருப்பதால், இனி இதற்கென பிற நிறுவனங்கள் அமைத்து வழங்கும் பாதுகாப்பு புரோகிராம்கள் தேவையில்லை எனப் பல நிறுவன வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர். இந்த வகையில் பல தேர்ட் பார்ட்டி புரோகிராம்களை விலை கொடுத்து வாங்க வேண்டியதில்லை என்பதால், முதலீடு செலவு கணிசமாகக் குறையும். இதனைச் சோதனைக்கென பயன்படுத்திப் பார்த்த பெங்களூரு இண்டர்நேஷனல் ஏர்போர்ட் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளது. பல முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் கம்ப்யூட்டர்களை விண்டோஸ் 7 தொகுப்பிற்கு மாறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த புதிய பதிப்பு வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளை நிறைவேற்ற ஆறு வகைகளில் வெளிவந்துள்ளது.



அவை: விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம், புரபஷனல், ஸ்டார்ட்டர், ஹோம் பேசிக், என்டர்பிரைஸ் மற்றும் விண்டோஸ் 7 அல்ட்டிமேட். இவற்றில் எது நம் தேவைகளுக்குச் சரியானதாக இருக்கும் எனக் கண்டறிந்து அறிவதே, தற்போதைய கேள்வியாக பலருக்கு உள்ளது. இவற்றின் விலை ரூ.5,800 முதல்  ரூ.11,000 வரை உள்ளது. இந்த சிஸ்டம் இயக்கத்திற்குத் தயாராகும் நேரம் மிகவும் குறைவாக இருக்கும்படி அமைக்கப் பட்டுள்ளது. இது பல வாடிக்கையாளர்களுக்குத் திருப்தி அளிக்கிறது. கம்ப்யூட்டர் சுவிட்சை ஆன் செய்துவிட்டு தயாராகும் நேரத்தில், டீயில் பாதி குடிக்கும் வேலை எல்லாம் இனி இருக்காது. இந்த புதிய சிஸ்டத்தில் அனைத்து மல்ட்டி மீடியா வேலைகளும், புதிய முறையில் இனிமை யாகவும் எளிமையாகவும் இயக்கும் முறையில் இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
பல கம்ப்யூட்டர் நிறுவனங்கள், தாங்கள் விற்பனை செய்திடும் கம்ப்யூட்டர்களிலும், குறிப்பாக நெட்புக் கம்ப்யூட்டர்களிலும், விண்டோஸ் 7 பதிப்பை பதிந்து தரத் தயாராகிவிட்டன. குறிப்பாக எச்.பி. இந்தியா, எச்.சி.எல்., ஏசர் ஆகியவை இவ்வகையில் ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எச்பி இந்தியா நிறுவனம் விண்டோஸ் 7 சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டர்களை ரூ. 27,990 முதல் ரூ. 90,000 வரையிலான விலையில் அறிவித்துள்ளது. ஏசர் பி.சி. நிறுவனம் ரூ. 15,000 முதல் ரூ.35,000 வரை விலை அறிவித்துள்ளது.



நோட்புக் கம்ப்யூட்டர்கள் ரூ. 21,000 முதல் ரூ.71,000 விலையில் உள்ளன. இனி தொழில் நுட்ப தகவல்கள் மற்றும் வசதிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
1. இரண்டு வகை சிஸ்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவை 32 பிட் மற்றும் 64 பிட் ஆகும். இவற்றில் ஸ்டார்ட்டர் எடிஷன் 32 பிட் வகையில் மட்டுமே கிடைக்கிறது.
2. 64 பிட் சிஸ்டம் வகையில் பிசிகல் மெமரி, ஹோம் பிரிமியம் சிஸ்டத்தில் 16 ஜிபி, புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட் வகையில் 192 ஜிபி ஆக உள்ளன. ஸ்டார்ட்டர் எடிஷனில் இது இல்லை.
3.ஸ்டார்ட்டர் மற்றும் ஹோம் பிரிமியம் வகை ஒரு சிபியு மட்டுமே சப்போர்ட் செய்கிறது. புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட் வகை இரண்டு சிபியுக்களை சப்போர்ட் செய்கிறது.
4. ஹோம் குரூப் உருவாக்கி இணைவது என்ற வசதியைப் பொறுத்தவரை, ஸ்டார்ட்டர் எடிஷனில் இணையும் வசதி மட்டுமே தரப்பட்டுள்ளது. மற்ற மூன்றிலும் உருவாக்கி இணையும் வசதி உள்ளது. 
5. நெட்வொர்க்கில் பேக்கப் செய்து மீண்டும் பெறுவது புரபஷன்ல் மற்றும் அல்ட்டிமேட் வகைகளில் மட்டுமே தரப்பட்டுள்ளது.



6.ஸ்டார்ட்டர் தவிர மற்றவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட பல மானிட்டர் களை இணைக்கலாம்.



7. மாற்றக்கூடிய டெஸ்க்டாப் வால் பேப்பர், டெஸ்க்டாப் விண்டோ மேனேஜர், விண்டோஸ் மொபிலிட்டி சென்டர், விண்டோஸ் ஏரோ, மல்ட்டி டச், பிரிமியம் கேம்ஸ், விண்டோஸ் மீடியா சென்டர், விண்டோஸ் மீடியா பிளேயரை ரிமோட்டில் இயக்குவது ஆகியவை ஸ்டார்ட்டர் எடிஷன் தவிர மற்றவற்றில் தரப்பட்டுள்ளன. 


8. விண்டோஸ் எக்ஸ்பி மோடில் இயக்கும் வசதி புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட் ஆகியவற்றில் மட்டுமே தரப்பட்டுள்ளது.


9. விர்ச்சுவல் ஹார்ட் டிஸ்க் மூலமாக பூட் செய்திடும் வசதி அல்ட்டிமேட் எடிஷனில் மட்டுமே தரப்பட்டுள்ளது.


விண்டோஸ் ஸ்டார்ட்டர் எடிஷன் என்பது, இத்தொகுப்பின் மிக எளிய வகை பதிப்பாக நெட்புக் கம்ப்யூட்டர்களுக்கு மட்டுமே கிடைக்கும். விண்டோஸ் எக்ஸ்பி அல்லது விஸ்டாவிலிருந்து இதற்கு அப்கிரேட் செய்திட முடியாது. விண்டோஸ் 7 தொகுப்பின் புதிய மற்றும் சிறப்பம்சங்களாக நாம் கருதும் பல விஷயங்கள் இதில் கிடைப்பதில்லை. 32 பிட் இயக்கம் மட்டுமே இதில் உள்ளது. விண்டோஸ் மீடியா சென்டர் மற்றும் விண்டோஸ் மீடியா பிளேயர் இதில் சேர்க்கப்படவில்லை. எக்ஸ்பியில் மட்டுமே இயங்கும் புரோகிராம்களுக்காக, விண்டோஸ் 7 பதிப்பில் எக்ஸ்பி மோட் என்று ஒரு வசதி தரப்பட்டுள்ளது. அந்த வசதி ஸ்டார்ட்டர் எடிஷனில் இல்லை. ரிமோட் டெஸ்க்டாப் ஹோஸ்ட், பிட் லாக்கர் டிரைவ் என்கிரிப்ஷன் மற்றும் மல்ட்டி டச் சப்போர்ட் ஆகிய வையும் இதில் தரப்பட வில்லை. அப்புறம் என்ன தான் ஸ்டார்ட்டர் எடிஷனில் உள்ளது என்று கேட்கிறீர் களா? டாஸ்க்பாரில் புரோகிராம்களை பின் செய்து கொள்ளலாம். புரோகிராம் விண்டோக்களை மிக வேகமாக ரீசைஸ் செய்து கொள்ளலாம். வேகமாக்கப்பட்ட விண்டோஸ் சர்ச் வசதி உள்ளது. 
இதனை அடுத்துள்ள ஹோம் பிரிமியம், கம்ப்யூட்டர்களைப் பரவலாகப் பயன் படுத்துவோருக்கேற்ற ஒன்றாக உள்ளது. மைக்ரோசாப்ட், தன் வாடிக்கையாளர்கள் என்ன என்ன வசதிகள் புதியதாக இணைக்கப் பட்டிருப்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறதோ, அவை அனைத்தும் இதில் உள்ளன. புரோகிராம்களின் செயல்பாட்டினை முன்கூட்டியே அறிதல், டெஸ்க்டாப் பிலிருந்து தேவையற்ற ஐகான்களை நீக்குதல், புரோகிராம் விண்டோக்களை ரீசைஸ் செய்திடும் ஏரோ ஸ்நாப், ஊடுறுவிப்பார்க்கும் வகையில் டாஸ்க்பாரின் தோற்றம் காட்டும் ஏரோ ஸ்கின் மற்றும் விண்டோ பார்டர்ஸ் ஆகிய அனைத்தும் இதில் தரப்பட்டுள்ளன. விண்டோஸ் மீடியா பிளேயர் மற்றும் விண்டோஸ் மீடியா சென்டர் ஆகிய வசதிகள் சிறப்பாக இயக்கும் முறையில் தரப்பட்டுள்ளன. ஹோம் குருப் உருவாக்கி ஒரு சிலருக்குள் மியூசிக் சார்ந்த பொழுது போக்கு பைல்களையும் மற்ற பைல்களையும் பகிர்ந்து கொள்ளலாம். இதில் 64 பிட் பதிப்பு இருந்தாலும், ராம் பிசிகல் மெமரி 16 ஜிபி வரை மட்டுமே கிடைக்கிறது. ஹோம் பிரிமியம் எடிஷனை எந்த நேரத்திலும் புரபஷனல் அல்லது அல்ட்டிமேட் எடிஷனுக்கு அப்கிரேட் செய்து கொள்ளலாம்.



முழுமையான வசதிகள் பல இருந்தாலும், விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம், புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட் பதிப்புகளில் உள்ள பல வசதிகளைக் கொண்டிருக்கவில்லை. நெட்வொர்க் டிரைவில் இணைக்கப் பட்டிருக்கையில் பேக் அப் வசதியை இயக்க முடியாது. பிட் லாக்கர், ஆப் லாக்கர் வசதிகள் இல்லை. எக்ஸ்பி மோட் இல்லை. 
மற்ற இரண்டும், புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட், அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளன. எந்த பிரச்னையும் தடையும் இன்றி பயன்படுத்தலாம். 
விஸ்டாவின் இயக்கத்தினால் ஏமாந்திருந்த விண்டோஸ் வாடிக்கையாளர்கள், நிச்சயம் விண்டோஸ் 7 பதிப்பை மனதார வரவேற்பார்கள் என்றே எதிர்பார்க்கலாம். இந்த புதிய பதிப்பிற்கு மாறும் முன் உங்கள் சிஸ்டம் இதனைத் தாங்கிக் கொண்டு சிறப்பாக இயங்குமா என்பதை உறுதி செய்து கொள்ளவும். இதனைத் தெரிந்து கொள்வதற்கான புரோகிராம்களையும், வழிமுறைகளையும், மைக்ரோசாப்ட் தன் இணையதளத்தில் கொண்டுள்ளது


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

SWARNAMUKHI'S FAMOUS PEACOCK DANCE

Sis. Veronica Swarnamukhi hails from a family of Film Artists and Film Producers from South India. She is Dr. Shoury Babu Kona's wife. The words: "EXQUISITE", "MARVELOUS", "ENCHANTING" and"CAPTIVATING" are inadequate to describe Swarnamukhi's Indian Classical dance-"BHARATANATYAM". She hasREPRESENTED INDIA IN 52 COUNTRIES.She has mastered ALL THE 108 KARNAS as sculptured in Ancient Hindu temples, 2000 years ago, she was chosen as the "DANCE LAUREATE" of Tamil Nadu Government and was a recipient of the much covetedKALAIMAMANI Title.  She won FIRST PRIZE in the INTERNATIONAL MUSIC AND DANCE FESTIVAL at ROME in the year of 1977.


Her International dance programmes were so hectic that she used to perform several times at London in the morning, at Paris in the afternoon and at Frankfurt in the night. She could conduct her dancing programs in 19 countries within a short period of 3 months every year. She established Dance Schools in U.S.A., Canada, Australia, Singapore, Malaysia and Srilanka. Her dance performances won the appreciation of Presidents, Prime Ministers, and World Dignitaries. Several documentaries were made on her art and life. She was a leading exponent of the snake and peacock dance and she had performed in many films in Hindi, Tamil, Telugu and Malayalam.

 

SWARNAMUKHI'S FAMOUS PEACOCK DANCE
Swarnamukhi Performing Karnas at ROME
One of The 108 Karnas

Swarnamukhi Performing Karnas at ROME

One of The 108 Karnas

with President of India 
H.E. R. VENKATARAMAN
with India's Second President
Dr. S. RADHA KRISHNAN who gave his first salary to Swarnamukhi and said she is the "BONELESS WONDER"
with The Foreign Minister of UNITED KINGDOM H.E. JEFERY HOWE
with The President &
First Lady of BELGIUM
with The President &
First Lady of NORWAY
with SOVIET UNION'S
Defence Minister - MOSCOW
Receiving honours from
The President of SWEDEN
with The Prime Minister of
India (late) Mr. RAJIV GANDHI
with The President General ZERUZISKY of POLAND & Governor of Tamil Nadu
with The President of SRILANKA (late)
Mr. RANASINGA PREMADASA - COLOMBO
with The President &
First Lady of TANZANIA
with First Lady of SRILANKA
Mrs. HEMALATHA PREMADASA
Swarnamukhi honouring The Father of MAURITIUS-President RAMKOLAM
Swarnamukhi with President of India 
Mr. R. VENKATARAMAN
Swarnamukhi with Deputy Prime Minister of India Mr. DEVILAL
with First Lady of SRILANKA
Mrs. HEMALATHA PREMADAS
receiving state award from Chief Minister of TAMIL NADU (Late) 
Dr. M. G. RAMACHANDRAN
with The Late Prime Minister of
India Mr. MORARJI DESAI&
Governor of Tamil Nadu 
Mr. PRABHUDOSS PATWARI
Young Swarnamukhi at the age of 7 with Chief Minister of
Tamil Nadu (Late) Mr. BAKTHAVATSALAM
with Kalaingar Thiru. M. KARUNANITHI
- Chief Minister of Tamil Nadu
receiving the prestigious KALAIMAMANI Award from Governor of Tamil Nadu & Chief Minister Dr. M. G. RAMACHANDRAN
with Mr. ANJAYYA,
Chief Minister of ANDHRA PRADESH
with Mr. JAYAPRAKASH NARAYAN,
Founder of The JANATHA PARTY- India
In a State Function With
Chief Minister Dr. M. G. RAMACHANDRAN & Governor PRABHUDOSS PATWARI
with The Famous Hindi Film Personalities HEMAMALINI, DHARMENDAR, & BISHWAJIT
In a State Function With
Chief Minister Dr. M. G. RAMACHANDRAN & Governor PRABHUDOSS PATWARI
with Punjab's Chief Minister
with Deputy Prime Minister of India
Mr. DEVILAL
with Famous Hindi Actress
HEMAMAINI
Swarnamukhi receiving awards from Famous Film Artists of South India
Swarnamukhi was chosen as a STATE DANCERof Tamil Nadu  
Receiving Award from Governor of
Tamil Nadu
Swarnamukhi - Honoured Guest at PRESIDENTIAL PALACE - New Delhi
Signed a Guest Register
With SOVIET UNION'S Minister of Defence and officials
"WE HAVE DECIDED TO FOLLOW JESUS - NO TURNING BACK"

-- source:wordoflifeindia
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

"தம்பி உயிரோடு நலமாக இருக்கிறான்: என்னை வந்து பார்ப்பதாக சொல்லிச்சென்றான்"

 

"தம்பி உயிரோட நலமாக இருக்கிறான். அவன் என்னை சந்திப்பதாக சொல்லியே சென்றான்" - என்று தேசிய தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மா தெரிவித்துள்ளார் என விடுதலை சிறுத்தைகள் அணி தலைவர் தொல் திருமாவளவன் விகடனுக்குத் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக தமிழகத்திலிருந்து வெளிவரும் ஆனந்தவிகடன் சஞ்சிகைக்கு திருமாவளவன் வழங்கியுள்ள விரிவான செவ்வி வருமாறு:-



தமிழகம் திரும்பியதும் கனடாவில் வசிக்கும் பிரபாகரனின் சகோதரியான விநோதினிக்கு ஒரு நண்பர் மூலம் தகவல் சொல்லிவிட்டு, விசா எடுப்பதற்கான வேலைகளில் தீவிரமானேன். அதற்குள்ளே என் கனவுத் தாழி உடைந்துபோய் விட்டது.

கடந்த ஆறாம் தேதி இரவு அய்யா வேலுப்பிள்ளை இறந்ததாகச் செய்தி வந்தது. ஒரு மாவீரனின் தந்தையை மீட்கவும் காப்பாற்றவும் முடியாத கையறு நிலையில் துடித்தேன். அவசரகதியில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம், செல்வம் அடைக்கல நாதன், ஆகியோரிடம் பேசி, 'வேலுப்பிள்ளையின் இறுதி அஞ்சலி நிகழ்வில் நான் கலந்துகொள்ள வேண்டும். இலங்கை அரசிடம் பேசி ஏ-9 பாதையால் செல்ல ஏற்பாடு செய்யுங்கள்' எனச் சொன்னேன். ஒருவழியாக அனுமதி கிடைக்க, எட்டாம் தேதி இலங்கைக்கு பயணமானேன். வேலுப்பிள்ளைக்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு இட்டிப்பான மன பாரத்தோடு திரும்பி இருக்கிறேன்!'' என்ற திருமாவளவனிடம் நம் கேள்விகளை அடுக்கினோம்.

''இலங்கை போய் இறங்கியவுடன் முதலில் எங்கு போனீர்கள்?''


''எம்.பி-யான செல்வம் அடைக்கலநாதன்தான் என்னை அழைக்க வந்திருந்தார். கொழும்பில் இருந்து வவுனியா 280 கிலோமீட்டர் தூரம். ஒன்பதாம் தேதி விடியற்காலை மூன்று மணிக்கு செல்வம் அடைக்கலநாதன், அரியனேந்திரன், தோமஸ் வில்லியம் ஆகிய எம்.பி-க்களோடு நானும் தமிழக வழக்கறிஞர்களான சந்திரசேகர், பிரபு ஆகியோரும் புறப்பட்டோம். வவுனியாவில் உள்ள 'ஸ்வர்கா' என்ற ஹோட்டலில் வேலுப்பிள்ளை அவர்களின் உடலை ராணுவப் பாதுகாப்போடு வைத்திருந்தார்கள். அங்கே பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாவும் இருந்தார். முதலில் அவரைத்தான் பார்த்தோம். அங்கு வரும் வரை பார்வதி அம்மாவுக்கு தன் கணவர் இறந்தது தெரியவில்லை. முதுமையும் வேதனையும் அவரை ரொம்பவே சுகவீனமாக்கி இருந்தது.

அந்தத் தாயைப் பார்த்ததுமே என் கண்கள் பொங்கி நிறைந்துவிட்டன. அவர்களை நெருங்கி என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினேன். ''ஐயா...'' என வேலுப்பிள்ளை குறித்து நான் வாய் திறந்ததுமே, ''அவர் சாமி கும்பிடப் போயிருக்கார், அல்லவா... சீக்கிரமே வந்திடுவார்...'' எனச் சொன்னார். அவரிடம் அந்த நிமிடம் வரை அப்படித்தான் சொல்லி வைத்திருக்கிறார்கள் என்பது அப்போதுதான் எனக்குப் புரிந்தது.

''அம்மா... நீங்கள் என்னோடு இந்தியாவுக்கு வந்து விடுகிறீர்களா?'' எனக் கேட்டேன். ''ஐயா வந்ததும் அவரை கேட்டுவிட்டுச் சொல்கிறேன்...'' என்றார். கணவர் மீது அவர் வைத்திருந்த மரியாதையைப் பார்த்து என் கண்கள் குளமாகிவிட்டது!''

''வேலுப்பிள்ளை சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக ஒரு கருத்து இருக்கிறதே..?''

''தமிழ் மக்கள் அடைக்கப்பட்டிருக்கும் வழக்கமான அகதிகள் முகாம்களில் மேதகு பிரபாகரனின் பெற்றோர் தங்க வைக்கப்படவில்லை. ராணுவ முகாமான பனாகொடா முகாமில்தான் அய்யா வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மாவும் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

சிலநாட்களாகவே அய்யா வேலுப்பிள்ளைக்கு உடல்நிலை சரியில்லையாம். உயர் ரத்த அழுத்தத்தால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். அவரை வெளியே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், உள்ளுக்குள்ளேயே சிகிச்சை அளித்திருக்கிறார்கள். ஒரு மாதத்துக்கு முன்பு வரை வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மாளும் அருகருகேதான் வைக்கப்பட்டு இருந்தார்களாம். வேலுப்பிள்ளைக்கு சிகிச்சை அளிப்பதாகச் சொல்லி அவரை மட்டும் பிரித்து வேறெங்கேயோ தங்க வைத்திருக்கிறது ராணுவம்.

கடந்த ஆறாம் தேதி இரவே வேலுப்பிள்ளை இறந்து விட்டாராம். அந்தத் தகவலை ராணுவத் தரப்பு அடுத்த நாள் காலையில்தான் வெளியிட்டிருக்கிறது. பிரபாகரனின் சகோதரியான விநோதினியின் வேண்டுகோளை ஏற்று, வேலுப்பிள்ளையின் உடலை சிவாஜிலிங்கம் எம்.பி-யிடம் ஒப்படைக்க ராணுவம் முடிவெடுத்தது.

வேலுப்பிள்ளை இறந்த தகவல் பார்வதி அம்மாளிடம் சொல்லப்பட, அவர் அதை நம்பாமல் அழத் தொடங்கிவிட்டார். ''எங்க ஐயா செத்திருக்க மாட்டார்...'' எனத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். உடல் நிலை சரியில்லாததால், அவர் இறந்து விட்டதாக ராணுவத்தினர் பார்வதி அம்மாவிடம் சொல்லி இருக்கின்றனர். அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ராணுவத்தினர் ஏதோ செய்து விட்டதாகவே அவர் அஞ்சுவதாகத் தெரிகிறது. அய்யா வேலுப்பிள்ளை சித்திரவதை செய்யப்பட்டிருப்பாரோ என்கிற சந்தேகம் எனக்கும் உண்டு. ஆனால், அதை எப்படி உறுதிப்படுத்த முடியும்? முறையாக பிரேதப் பரிசோதனை செய்து, பாடம் பண்ணி, முகச் சவரம் செய்து, தலை வாரி, புது உடை உடுத்தி, வெண் பட்டுத் துணியால் போர்த்தி அவரை சவப்பெட்டிக்குள் வைத்திருந்தார்கள். அவருடைய நெற்றியையும் காலடிகளையும் தொட்டு வணங்கினேன்!''

''இறுதிச் சடங்குகள் எப்படி நடந்தன? அப்போது அங்கிருந்த தமிழ் மக்களின் மனநிலை எப்படி இருந்தது?''


''வல்வெட்டித்துறையில் உள்ள தீருவில் என்னும் பகுதியில் புலேந்திரன், குமரப்பா ஆகிய 12 பேருக்கான நினைவிட மைதானம் உள்ளது. அய்யா வேலுப்பிள்ளையின் உடல் அங்குதான் கொண்டு வரப்பட்டது. ஒன்றரை ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த சதுக்கத்தில், வேலுப்பிள்ளையின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மக்கள் ஏதோவொரு பயத்தோடு தூரத்தில் நின்றே வேலுப்பிள்ளையின் உடலை பார்த்தார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி-க்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதி ராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், பத்மினி சிதம்பரநாதன், ஸ்ரீகாந்தா, வினோ உள்ளிட்டோர் அங்கு வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

சைவ மரபுப்படி அய்யா வேலுப்பிள்ளைக்கு அனைத்து சடங்குகளும் நடக்கத் தொடங்கின. அவருடைய உடம்பு பாடம் செய்யப்பட்டிருந்ததால், அதன் மேல் தண்ணீர் பட்டுவிடாமல் அவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. வாழைப்பழம், தயிர், வெல்லம், பால் என பலவித அபிஷேகங்களும் அவரது உடலுக்கு அருகே செய்யப்பட்டது. ஒருபுறம் தேவாரம், திருவாசகம் ஓதப்பட்டது.

வேலுப்பிள்ளையின் மைத்துனர்களில் ஒருவரான (வேலுப்பிள்ளையின் தாத்தா வழி உறவான) ராமசாமி என்பவர்தான் இறுதிச் சடங்குகளை முன்னின்று செய்தார்.

ராணுவக் கண்காணிப்பு இருப்பது தெரிந்தும் வேலுப்பிள்ளையின் உடலை நோக்கி கண்ணீரோடு வந்த ஒரு தாய், ''மாவீரனை பெத்துக் கொடுத்த ராசாவே... என்னிக்கு இருந்தாலும் நாம நாடு அடையாம விடமாட்டோம்யா... நீங்கள் நிம்மதியாப் போய் வாருங்கோ!'' எனக் கதறினார். கொந்தளிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டவர்களாக தமிழ் இளைஞர்கள் பலரும் இறுக்கத்தோடு அங்கே நின்று கொண்டிருந்தார்கள். சில இளைஞர்கள் துக்கத்தை வெளிக்காட்டும் விதமாக வாண வெடிகளைக் கொளுத்தினார்கள். ஒன்பதாம் தேதி காலையில் நிறைய இளைஞர்கள் தைரியமாக வேலுப்பிள்ளையின் உடலைப் பார்வையிட வந்தார்கள். அவர்கள் உணர்ச்சி வேகத்தோடு, ''கண்டிப்பாக தமிழீழம் மலரும். தலைவரின் கனவு நனவாகும்!'' என சத்தமிட்டார்கள். காலை 10.40 மணிக்கு அந்த சதுக்கத்திலிருந்து, மூத்த மகள் ஜெகதீஸ்வரியின் வீட்டுக்கு வேலுப்பிள்ளையின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கே பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதார்கள்.

பார்வதி அம்மாள் அடக்க முடியாத வேதனையில் கணவரின் சடலத்துக்கு அருகே அமர்ந்து குமுறிக் குமுறி அழுது கொண்டேயிருந்தார். 'என்னைய விட்டுட்டு எங்கேயும் போக மாட்டீங்களே... ஏன்யா எங்கிட்ட சொல்லாம போனீங்க..?' என அங்கே இருந்த நான்கு மணி நேரமும் அரற்றியபடியே இருந்தார். அவரைத் தேற்றுவதற்குள் தெம்பற்றுப் போய் நானும் குலுங்கத் தொடங்கிவிட்டேன்!''

''பிரபாகரனின் தாயாரோடு நீங்கள் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தீர்களாமே... தன் மகன் பிரபாகரன் குறித்து அவர் ஏதாவது சொன்னாரா?''


''தலைவர் பிரபாகரன் குறித்து நான் கேட்டபோது, 'அவர் பத்திரமா இருக்கார்...' என்றே பார்வதி அம்மா திரும்பத் திரும்ப சொன்னார். போர்க் காலங்களில் பார்வதி அம்மா எங்கிருந்தார், யார் யாரெல்லாம் அவரை சந்தித்தனர் என்பது உள்ளிட்ட தகவல்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார். வயதான நிலையிலும் மிகுந்த கவனத்தோடு பார்த்துப் பார்த்துப் பேசினார். 'தலைவர் பிரபாகரன் உங்களைப் பார்த்தாரா' என நான் கேட்டபோது, 'தம்பி உயிரோடு நலமாக இருக்கிறார். என்னை கனடாவில் வந்து சந்திப்பதாகச் சொல்லிச் சென்றார்' என்றார். அவருடைய உறவினர்கள் சிலருடைய பெயரைச் சொல்லி நான் சில விஷயங்கள் கேட்டபோதும், அவர்களின் பெயர்களை மிகத் திருத்தமாக, நல்ல சுவாதீனமாகவே சொன்னார். தற்போது சிவாஜிலிங்கத்தின் கவனிப்பில் இருக்கும் பார்வதி அம்மாவை கனடாவுக்கோ இந்தியாவுக்கோ அழைத்துக்கொள்ள அடுத்தகட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்!'' என்ற திருமாவளவன், அங்கே எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.



source:athirvu

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP