சமீபத்திய பதிவுகள்

மைக்ரோசாப்ட் ஆன்லைன் சேவை

>> Wednesday, February 10, 2010


 

சிறிய மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்கள் தங்கள் நிர்வாக நடவடிக்கை களுக்கான செலவினைக் குறைக்கும் வழிகளை மைக்ரோசாப்ட் தன் ஆன்லைன் சேவை மூலம் வழங்குகிறது. டில்லியில் அண்மையில் இந்த சேவை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இதன் தொடக்க கட்டணம் மாதம் ரூ.95 (2 டாலர்). மின்னஞ்சல், இன்டர்நெட் ஒருங்கிணைப்பு, இன்டர்நெட் வழி கான்பரன்சிங் மற்றும் இவை சார்ந்த வழிகளை ஒரு நிறுவனம் தனக்கெனப் பெற்றுப் பயன்படுத்த முடியும். இந்த சேவையினைwww.microsoft.com/india/onlineservices என்ற முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவன இணைய தளம் சென்று பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம். பயன்படுத்தும் சேவைக்கேற்ப கட்டணம் செலுத்தினால் போதும். இதன் மூலம் வணிக நிறுவனங்கள் தங்களுக்கென இணைய தள சேவையை கூடுதல் செலவின்றி பெற முடியும். மேலும் இந்த சேவையினைத் தங்கள் நிறுவன வளாகம் மட்டுமின்றி, எந்த இடத்திலிருந்தும் பெற முடியும். இதனால் நிறுவனத்தின் நிர்வாகத்திறன் உயரும் வாய்ப்புகள் அதிகமாகிறது. இன்றைய போட்டி மிகுந்த உலகில், வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் தங்களின் ஒவ்வொரு செயல்பாட்டுப் பிரிவிலும் கூடுதல் கவனத்தைச் செலுத்தி, செலவினங்களைக் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. அந்த வகையில் நிர்வாகக் காரணங்களுக்கான செலவை மிச்சப்படுத்த இந்த ஆன்லைன் வசதி கை கொடுக்கும் என இதனை அறிமுகப்படுத்திய விழாவில் மைக்ரோசாப்ட் பிசினஸ் குரூப் தலைவர் ஸ்டீபன் குறிப்பிட்டார். இந்த சேவைகளை நிறுவனங்களுக்கு வழங்குவதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் எச்.சி.எல். இன்போசிஸ்டம்ஸ், இன்போசிஸ் மற்றும் விப்ரோ ஆகிய முன்னணி நிறுவனங்கள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இந்த சேவை முறை, சோதனை முறையில் கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் ஏறத்தாழ 1,800 பேர் இதனைப் பயன்படுத்தினார்கள். அவர்கள் நிறைவான வரவேற்பினைத் தெரிவித்ததால், சென்ற நவம்பர் 7 முதல் இது முழுமையாக அறிமுகமாகியுள்ளது. இந்த சேவைப்பிரிவில் மின்னஞ்சல்களுக்கு ஆன்லைன் எக்சேஞ்ச், இணைய தளங்களைப் பயன்படுத்த ஆபீஸ் ஷேர் பாய்ண்ட், வாடிக்கையாளர்கள் மற்றும் நிறுவன அலுவலர்கள் இடையே கலந்தாய்வு மேற்கொள்ள ஆபீஸ் லைவ் மீட்டிங், இன்ஸ்டண்ட் மெசேஜ் அனுப்பி பதில் பெற மைக்ரோசாப்ட் ஹோஸ்டட் சர்வீசஸ் மற்றும் மைக்ரோசாப்ட் கம்யூனிகேஷன்ஸ் ஆன்லைன் ஆகிய வசதிகள் தரப்படுகின்றன.


source:dinamalar
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

துருக்கி : மகளை உயிருடன் புதைத்த தந்தை கைது

 
இளைஞர்களுடன் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த தந்தையும், தாத்தாவும் 16 வயது பெண்ணை குழி தோண்டி உயிருடன் புதைத்தனர். துருக்கியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது.தென்கிழக்கு துருக்கியில் உள்ளது காடா நகரம். அங்கு வசிப்பவர் அய்கான். அவருக்கு 9 குழந்தைகள். அவர்களில் ஒருத்தி 16 வயது மதினா மெமி. இவளை கடந்த 40 நாட்களாக காணவில்லை என அக்கம்பக்கத்தினரிடம் இருந்து போலீசுக்கு தகவல் சென்றது. 

சந்தேகம் அடைந்த போலீசார், தந்தை, தாத்தாவிடம் விசாரித்தனர். இருவரும் சேர்ந்து வீட்டின் பின்பகுதியில் 6 அடி ஆழ குழி தோண்டி மதினாவை உயிருடன் புதைத்த கொடுமை தெரிய வந்தது. இதையடுத்து மதினாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. 

குழிக்குள் உட்கார்ந்த நிலையில் பின்னால் கைகள் கட்டப்பட்டு மதினா உடல் இருந்தது. ''எங்கள் எச்சரிக்கைகளை மீறி தொடர்ந்து இளைஞர்களுடன் மதினா பேசி வந்ததால் குடும்ப கௌரவம் பாதிக்கப்படும் என்று பயந்தோம். அதனால், அவளை உயிருடன் புதைத்தோம்'' என்று இருவரும் தெரிவித்தனர்

source:z9world

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ப.சிதம்பரத்துக்கு மூக்கறுப்பு: தலைவர் பிரபாகரனின் மரண சான்றிதழை இதுவரை வழங்கவில்லை:சி.பி.ஐ

புதுடெல்லி, பிப்.10- விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் மரண சான்றிதழை இலங்கை அரசு இதுவரை வழங்கவில்லை என்று சி.பி.ஐ. இயக்குனர் தெரிவித்துள்ளார். சான்றிதழ் கிடைத்ததா? இலங்கையில் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பிரபாகரன் தேடப்படும் குற்றவாளி ஆவார். எனவே, இந்த வழக்கு விசாரணைக்காக, பிரபாகரனின் மரண சான்றிதழை அளிக்குமாறு இலங்கை அரசிடம் சி.பி.ஐ. கேட்டுக்கொண்டது. சமீபத்தில், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதில் அளித்த சி.பி.ஐ., பிரபாகரனின் மரண சான்றிதழை இலங்கை அரசு இன்னும் அனுப்பவில்லை என்று கூறியது. ஆனால், மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் டெல்லியில் பேட்டி அளித்தபோது, பிரபாகரனின் மரண சான்றிதழை இலங்கை அரசு அனுப்பி விட்டதாக கூறினார். இதனால் இவ்விவகாரத்தில் குழப்பம் நிலவியது. சி.பி.ஐ. இயக்குனர் தகவல் இந்நிலையில், பிரபாகரனின் மரண சான்றிதழை இலங்கை அரசு அளிக்கவில்லை என்று சி.பி.ஐ. இயக்குனர் அஸ்வினி குமார் கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:- பிரபாகரனின் மரண சான்றிதழை அளிக்கும்படி இலங்கை வெளியுறவு அமைச்சகத்திடம் சி.பி.ஐ. கோரியுள்ளது. விரைவில் அது கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், இதுவரை எங்களுக்கு எந்த ஆவணமும் அளிக்கப்படவில்லை. இலங்கை அரசு அளிக்கும் எந்தவொரு ஆவணத்தையும் கோர்ட்டில் தாக்கல் செய்வோம். அதன்பிறகு வழக்கை முடித்துக்கொள்வது பற்றி கோர்ட்டு இறுதி முடிவு எடுக்கும். நளினி விடுதலை ராஜீவ் கொலை வழக்கின் ஆயுள் தண்டனை கைதி நளினியின் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசுதான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். ஒருவேளை நளினி விடுதலை செய்யப்பட்ட பிறகு, அவரது நடமாட்டத்தை கண்காணிக்கும்படி கோர்ட்டு அறிவுறுத்தினால், அதற்கான நடவடிக்கைகளை புலனாய்வு அமைப்புகள் மேற்கொள்ளும். இவ்வாறு அஸ்வினி குமார் கூறினார்.


source:dailythanthi

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

பென்சேகாவுக்கு வி.புலிகள் செய்யமுடியாததை மகிந்த செய்திருக்கிறார்

 

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா மீது கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தற்கொலைக்குண்டு தாக்குதல் மூலம் அவரை கொல்லமுடியவில்லை. ஆனால், பொன்சேகாவினால் தண்டனை பெற்ற இராணுவ அதிகாரி மானவடுவை அனுப்பி கைது என்ற பெயரில் சரத் பொன்சேகாவை கேவலமான முறையில் நடத்தி, உலகெங்குமுள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களை திருப்திப்படுத்தியிருக்கிறார் மகிந்த ராஜபக்ச.

.இவ்வாறு தெரிவித்துள்ளது எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு. எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவின் கைது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

சரத் பொன்சேகா இந்த நாட்டில் 30 வருடங்களாக நடைபெற்ற போரை முடிவுக்கு கொண்டுவந்தவர் மட்டுமல்ல. கடந்த அரசதலைவர் தேர்தலில் நாட்டிலுள்ள 42 லட்சம் வாக்காளர்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் தலைவர். அப்படிப்பட்ட பெருமைக்குரிய ஒருவரை அரசாங்கம் கைது செய்வது என்ற பெயரில் இழுத்து சென்று விசாரித்துவருவது அருவருக்கத்தக்கது.

அரச அடக்குழுறைக்கு இலக்காகியுள்ள பொன்சேகாவை விடுதலை செய்வதற்கு நாட்டு மக்கள் கிளர்ந்தெழவேண்டும். அரசின் இந்த தாான் தோன்றித்தனமான செயற்பாட்டை எதிர்க்கட்சிகள் வன்மையாக கண்டிக்கின்றன - என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



source:athirvu

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP