சமீபத்திய பதிவுகள்

முஸ்லீம்களின் பள்ளிவாசலில் துப்பாக்கி சுடு நடத்தும் முஸ்லீம்கள்

>> Friday, May 28, 2010

முஸ்லீம்களில் ஒரு பிரிவினரான அஹமதியாக்களின் மசூதியில் தொழுகை நேரத்தில் உள்ளே புகுந்த சன்னி முஸ்லீம் தீவிரவாதிகள் செய்த அட்டூழியங்கள்



பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல்
2 மசூதிகளில் புகுந்து சுட்டனர்: 80 பேர் குண்டு பாய்ந்து பலி


லாகூர், மே.29-

பாகிஸ்தானில் லாகூர் நகரில் உள்ள 2 மசூதிகளில் தீவிரவாதிகள் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் 80 பேர் பலி ஆனார்கள். மேலும் 100 பேர் காயம் அடைந்தனர்.

மசூதிகளில் நுழைந்தனர்

பாகிஸ்தானில் அவ்வப்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். நேற்று லாகூர் நகரில் 2 மசூதிகளுக்குள் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 80 பேர் பலி ஆனார்கள்.

லாகூரில் மாடல் டவுண், கர்கி சாகு ஆகிய இடங்களில் உள்ள சிறுபான்மை அகமதி பிரிவினரின் மசூதிகளில் உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் 1.45 மணி அளவில் வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டு இருந்தது. அப்போது துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் திடீரென்று தீவிரவாதிகள் அந்த மசூதிகளுக்குள் புகுந்தனர். அவர்களில் சிலர் உடலில் வெடிகுண்டு ஜாக்கெட்டுகளையும் அணிந்து இருந்தனர்.

தாக்குதல்

உள்ளே நுழைந்த தீவிரவாதிகள் தொழுகை நடத்திக்கொண்டிருந்தவர்களை நோக்கி வெடிகுண்டுகளை வீசியபடி, துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டனர். இதனால் தொழுகையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து எழுந்து பாதுகாப்பு தேடி அங்கும், இங்குமாக ஓடினார்கள். சிலர் அங்குள்ள அறைகளுக்குள் சென்று பதுங்கினார்கள்.



இந்த தாக்குதல் பற்றிய தகவல் கிடைத்ததும் போலீசாரும், துணை ராணுவப்படையினரும் 2 மசூதிகளுக்கும் சென்று சுற்றி வளைத்தனர். தீவிரவாதிகளின் பிடியில் பணயகைதிகளாக இருந்தவர்களை மீட்க பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து அவர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.

80 பேர் பலி

தீவிரவாதிகள் நடத்திய இந்த கொடூர தாக்குதலில் 80 பேர் பலி ஆனார்கள். மேலும் சுமார் 100 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாடல் டவுண் மசூதி தாக்குதலில் உயிர் இழந்தவர்களில் பாகிஸ்தான் ராணுவ முன்னாள் லெப்டினன்ட் ஜெனரலும் ஒருவர் ஆவார்.

கர்கி சாகு மசூதியில் நடந்த தாக்குதல் பற்றி செய்தி சேகரிப்பதற்காக சென்ற டி.வி. நிருபர் ஒருவர் குண்டு காயம் அடைந்து, பின்னர் சிகிச்சை பலனின்றி ஆஸ்பத்திரியில் உயிர் இழந்தார். இதில் சில போலீசாரும் அடங்குவார்கள்.

தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் சிலர் போலீசாரும் உயிர் இழந்தனர். மேலும் ஒரு போலீஸ் சூப்பிரண்டு உள்பட 7 போலீசார் காயம் அடைந்தனர்.

தீவிரவாதிகளின் தலைகள்

மாடல் டவுண் மசூதியில் தாக்குதல் நடத்திய 7 தீவிரவாதிகளில் 5 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றதாகவும், 2 பேர் காயத்துடன் பிடிபட்டதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கர்கி சாகு பகுதியில் உள்ள மசூதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி துப்பாக்கியால் சுட்டதோடு, தங்கள் உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதனால் அவர்கள் பலியானதாகவும், துண்டாகி கிடந்த அவர்களுடைய தலைகள் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் மாவட்ட நிர்வாக தலைவர் சஜ்ஜத் புட்டா தெரிவித்தார்.

கர்கி சாகு மசூதியில் நடந்த தாக்குதலில் மட்டும் 40-க்கும் அதிகமான பேர் உயிர் இழந்ததாக மீட்புக்குழுவின் செய்தித்தொடர்பாளர் பாகிம் ஜகன்ஜெப் கூறினார்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் தெரிக்-இ-தலீபான் தீவிரவாத இயக்கம் பொறுப்பு ஏற்று உள்ளது.

source:dailythanthi
--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

இதெல்லாம் கொஞ்சம் "ஓவர்!'

 





பெங்களூரு : எட்டு மாதம் முதல் ஒரு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு மழலையர் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. இங்கல்ல, பெங்களூரில்! கொஞ்சம், "ஓவரா' தெரியுதுல்லே?


பெங்களூரிலுள்ள, "போடர் ஜம்போ கிட்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மழலையர் பள்ளிக்கூடத்தில், தற்போது குழந்தைகள் சேர்க்கை தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பள்ளியில், எட்டு மாதம் முதல் ஒரு வயது வரையுள்ள குழந்தைகளுக்கென்றே பிரத்யேக பாடத்திட்டங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதில், குழந்தைகளின் மனவளர்ச்சி, பேச்சுத்திறன், உடல் தகுதி போன்றவற்றை மேம்படுத்தும் விதத்தில் தினசரி பாடங்களும், பயிற்சிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பாடத்திட்டத்திற்கு, "மனவள மேம்பாடு' என்று பெயரிடப்பட்டுள்ளது.


குழந்தைகள் விரும்பும் வண்ணங்களை கொண்டு, எளிமையான படங்களும், எழுத்துக்களும் உருவாக்கப்பட்டிருப்பது இந்த பாடத்திட்டத்தின் சிறப்பம்சமாகும். ஒரு வயதுக்குபட்ட இந்த குழந்தைகளுடன், அவர்களின் அம்மாக்களும் பள்ளிக்கூடத்திற்கு வர வேண்டும். வகுப்புகள் 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை, வாரத்திற்கு மூன்று நாட்கள் நடைபெறும். பெற்றோர்களிடம் இந்த மழலையர் பள்ளிக்கூடங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், பல்வேறு இடங்களில் இந்த பள்ளிகளை திறக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தாயின் அரவணைப்பில் வளரும் சூழ்நிலை மாறி போய், பள்ளிகளின் அரவணைப்பில் குழந்தைகள் வளரும் காலம் வந்து விட்டது.


source:dinamalar



--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

கூகுள் குரோம் எக்ஸ்டன்ஷன் வடிவில் வைரஸ்

 

குரோம் பிரவுசருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதனால், மால்வேர் புரோகிராம்களைத் தயாரித்து அனுப்புபவர்கள், குரோம் எக்ஸ்டன்ஷன் என்ற பெயரில் வைரஸ் அல்லது மால்வேர் புரோகிராம்களைத் தயாரித்து மறைமுகமாக அனுப்பத் தொடங்கி உள்ளனர். கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களுக்கு, தானாக ஒரு செய்தி அனுப்பப்படும். அதில் டாகுமெண்ட்ஸ் மற்றும் இமெயில் செய்திகளை கூடுதல் வசதியுடன் பார்க்க, குரோம் எக்ஸ்டன்ஷன் ஒன்று தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், அதனைப் பெற இந்த லிங்க்கில் கிளிக் செய்யுமாறும் கூறப்படும். இந்த செய்தியை உண்மை என நம்பி, கிளிக் செய்தால், உடனே நாம் வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவோம். அந்த தளம் கூகுள் குரோம் எக்ஸ்டன்ஷன்களைத் தரும் தளம் போலவே தோற்றமளிக்கும். ஆனால் நீங்கள் எதிர்பார்த்த எக்ஸ்டன்ஷன் புரோகிராமிற்குப் பதிலாக, வேறு ஒரு புரோகிராம் தானாகக் கம்ப்யூட்டரில் பதியப்படும். இது ஒரு மால்வேர் புரோகிராம். கம்ப்யூட்டரில் இருந்து கொண்டு, கம்ப்யூட்டரில் உள்ள பெர்சனல் தகவல்களை, பாஸ்வேர்ட், பேங்க் அக்கவுண்ட் எண் போன்றவை, எடுத்து இந்த மால்வேர் புரோகிராமினை பரப்பியவருக்கு அனுப்பி வைக்கும். பின் அவற்றைப் பயன்படுத்தி, நிதி மோசடியில் இதனை அனுப்பியவர்கள் ஈடுபடுவார்கள்.
இந்த மால்வேர் புரோகிராம் வழக்கமான எக்ஸ்டன்ஷன் போலவே தோற்றமளிக்கும். அது உள்ள தளம், முகப்பு போன்றவை அப்படியே நம்மை ஏமாற்றும். உஷாரானவர்களாக இருந்தால், அந்த புரோகிராமின் துணைப் பெயர், எக்ஸ்டன்ஷனுக்கான '.crx' என்று இல்லாமல், '.exe' என்று இருப்பதனைப் பார்க்கலாம்.
இதனை பிட் டிபன்டர் (Bit Defender) Trojan.Agent.20577 எனக் கண்டறிந்துள்ளது. இது பெர்சனல் தகவல்களைத் திருடுவதுடன், கூகுள் மற்றும் யாஹூ இணையப் பக்கங்களுக்கு நம்மைச் செல்லவிடாமல் தடுக்கிறது. குரோம் வெப் பிரவுசரில் எப்போது 'google.[xxx]'  அல்லது '[xx].search.yahoo.com'  என டைப் செய்தாலும், உடனே 89.149.xxx.xxx  என்ற இன்டர்நெட் முகவரிக்கு நாம் தள்ளப்படுவோம். இதன் மூலம் நாம், இந்த திருட்டு புரோகிராமினை எழுதியவர்களின் இணைய தளத்திற்கே எடுத்துச் செல்லப்படுவோம். எனவே எக்ஸ்டன்ஷன் எது குறித்துத் தகவல் வந்தாலும், அது நமக்குத் தேவையா என்று ஒரு கணம் சிந்தியுங்கள். பின் அதனைத் தரும் தளம் சரியானதுதானா என்று சோதனை செய்திடவும். பைலின் பெயரை பலமுறை சோதனை செய்து அறியவும். உடனே அதனை அமல்படுத்தாமல், டவுண்லோட் செய்து வைத்து, அல்லது குறித்து வைத்து பின்னர் அது பற்றி முடிவெடுக்கவும். ஏனென்றால், பாதிக்கக் கூடிய எக்ஸ்டன்ஷன் எனில் உடனே இது குறித்த அறிவிப்பு இணையத்தில் கிடைக்கும்.


source:dinamalar



--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

ரயில்வே துறைக்கு எதிராக 65 தாக்குதல்; இன்று பலி 65 ;காயம்; 200 ; ரூ. 500 கோடி இழப்பு

 


கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் இருந்து மும்பை நோக்கி வந்து கொண்டிருந்த பயணிகள் ரயில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதில் 70  பேர் வரை பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 100 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். மாவோ., நக்சல்கள் நடத்தி வரும் வெறி தாக்குதல் தொடர்ந்த வண்ணமே உள்ளதே தவிர மத்திய அரசு இன்னும் ஓடுக்கும் விஷயத்தில் தெளிவான முடிவை அறிவிக்கவில்லை.

 

தொடர்ந்து வரும் தாக்குதல்கள் : இந்தியாவில் மவோயிஸ்ட் நக்சல்கள் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு தாக்குதலை நடத்தியுள்ளனர். பெரும் உயிரிழப்பு மற்றும் பொதுச்சொத்து தேசம் என மத்திய அரசுக்கு விடாத தலைவலியாகவே இருந்து வருகின்றனர். மலைப்பகுதியில் பதுங்கி இருக்கும் இந்த நக்சல்கள் தாக்குதலின் உச்சக்கட்டமாக கடந்த மாதம் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 76 பேரை கண்ணி வெடி வைத்தும் துப்பாக்கியால் சுட்டும் கொன்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநேரத்தில் நக்சல்கள் ஒடுக்கும் விஷயத்தில் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மட்டுமே நடத்தப்பட்டது. உறுதியான முடிவுகள் எடுக்கப்படவில்லை. 76 வீரர்களை கொன்றதாக 6 பேர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். மே மாதம் 17 ம் தேதியன்று சட்டீஸ்கரில் பயணிகள் பஸ் ஒன்று கண்ணி வெடி வைத்து தகர்க்கப்பட்டதில் 36 பேர் கொல்லப்ட்டனர். இதில் 12 பேர் சிறப்பு படை போலீசார். தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் முகாம் மீதும் தாக்குதல் நடத்தினர், இதிலும் சில வீரர்கள் கொல்லப்பட்டனர். இன்னும் இவர்கள் தாக்குதல் வெறி அடங்காமல் அவ்வப்போது அதிரடி தாக்குதலை நடத்தி வருகின்றனர். கடந்த 14 ம் தேதி டீசல் ஏற்றிவந்த டாங்கர் ரயில் தீ வைத்து எரிக்கப்பட்டது.

 

வெடிக்கும் சப்தம் கேட்டது: இன்று ( வெள்ளிக்கி‌ழமை ) அதிகாலை 1. 30 மணி அளவில் மேற்குவங்கத்தில் இருந்து மும்பை நோக்கி ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. மேற்கு மிட்னாபூரில் தண்டவாளத்தில் பெரும் வெடிக்கும் சப்தம் கேட்டது. இதனையடுத்து ரயில் கவிழ்ந்தது. இதில் 13 ரயில் பெட்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி சரிந்து விழுந்தன. பயணிகள் அலறல் சப்தம் மட்டுமே அதிகம் ஒலித்ததாக அருகில் இருந்த கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இதில் 65  பேர் வரை உயிரிழந்து விட்டனர். 200 க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றுள்ளனர். இதில் பலர் ரயில் பெட்டிகளின் இடிபாடுகளில் சிக்கியபடி இருக்கின்றனர். கோல்கட்டாவில் இருந்து 135 கி.மீட்டர் தொலைவில் கேமாசோலி, சார்தியா ரயில்வே ஸ்டேஷன் இடையே இந்த சம்பவம் நடந்துள்ளது. இன்னும் உயிர்ப்பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

 

கவிழ்ந்த ரயில் மீது மோதியது சரக்கு ரயில் : கவிழ்ந்து கிடந்த ரயில்மீது இந்த வழியாக வந்த சரக்கு ரயிலும் மோதியது. இதனால் பெரும் சேதம் ஏற்பட்டது. பயணிகளை மீட்கும் பணிக்காக தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு அவசரகால படை வீரர்கள் மற்றும் விமான படையும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிக்கிய பயணிகளை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே தண்டவாளத்தில் குண்டு வெடித்தது உண்மை தான் என ரயில்வே துறை அமைச்சர் மம்தா ஒப்புதல் தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சகம் இது குறித்து இன்னும் எவ்வித செய்தியும் வெளியிடவில்லை. மத்திய அமைச்சர் பிரணாப்முகர்ஜி, ரயில்வே துறை அ‌மைச்சர் மம்தாவை அழைத்து விசாரித்தார், இந்த நிலைமை குறித்து பிரதமரிடம் விளக்கப்பட்டது. சம்பவத்தை அடுத்து இப்பகுதியில் ஹவுரா வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 150 பேர் வரை காயமுற்றிருப்பதாகவும், உயிர்ப்பலி அதிகம் இருக்கும் என அஞ்சப்படுவதாகவும், உள்துறை செயலர் ஜி.கே., பிள்ளை கூறினார். இந்த சம்பவத்தின் பின்னணியில் மாவோ., நக்சல்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக ரயில்வே போர்டு போக்குவரத்து துறை உறுப்பினர் விவேக் ஷகாய் கூறினார்.

 

வெல்டிங் மூலம் உடைத்து மீட்பு : ரயில் பெட்டிகள் ஒன்றோடு ஒன்றாக மோதி கிடப்பதால் பயணிகள் பலர் பெட்டிகளின் உடைந்த இரும்பு தளவாடங்கள் இடையே சி்க்கியிருக்கின்றனர். இவர்கள் மீட்கும் பணியில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கிய பயணிகளை மீட்க வெல்டிங் மூலம் தளவாடங்கள் உடைக்கப்பட்டு மீட்கப்பட்டு வருகின்றனர்.

 

சம்பவ இடத்தில் மம்தா: சம்பவம் நடந்துள்ள பகுதிக்கு ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி விரைந்தார். தாக்குதல் நடந்த சம்பவம் குறித்து நேரிடையாக கேட்டறிந்தார். மேலும் அங்கு நடக்கும் மீட்பு பணிகளை பார்வையிட்டு அங்கிருந்தபடியே உத்தரவு பிறப்பித்த வண்ணமாக இருந்தார். இதில் பலியானவர்களுக்கு நிவாரணமாக ரூ. 5 லட்சமும், காயமுற்றவர்களுக்கு ரூ. 2 லட்சமும் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்‌ளார்.

 

தாமதமாக வந்த மீட்பு படையினர்: அதிகாலை பொழுதில் நடந்த இந்த விபரீதத்தில் சிக்கிய பயணிகள் மீட்பு படையினரின் தாமத வருகைக்காக காத்திருந்தனர். 1. 30 மணி அளவில் சம்பவம் நடந்து உதவி கேட்டு கதறிக்கொண்டிருந்தோம், ஆனால் மீட்பு படையினர் 5 மணி அளவில் தான் வந்து சேர்ந்தனர். என்றனர் விபத்தில் சிக்கிய பயணிகள் வே‌தனையோடு.

 

நாங்கள் பொறுப்பல்ல மம்தா பேட்டி : சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே துறை அமைச்சர் மம்தா கூறுகையில்: இது நக்சல்கள் நடத்திய சதி திட்டம். இந்த சம்பவத்திற்கு ரயில்வே துறை பொறுப்பேற்க முடியாது. பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு மாநில மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஐ.முற்போக்கு கூட்ணியில் அங்கம் வகிப்பதால் உள்துறை குறித்து வெளிப்படையாக விமர்சிக்க முடியவில்லை என்பதே பேட்டியின் உள் குறிப்பு.

 

இது சதிச்செயலாக இருக்கும் என்கிறார் ப. சி., : இந்த தாக்குதல் சம்பவம் நக்சல்களின் சதிச்செயலாக இருக்கும் என கூறியுள்ளார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துகொள்கிறேன். மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. வெடிகுண்டுகள் வெடித்தனவா என்பகு குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது. இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

 

மம்தா பேச்சுக்கு எதிர்ப்பு : மம்தாவின் மாநில அரசின் மீது குறை கூறுவது பொறுப்பற்ற செயல் என்று பா.ஜ., மற்றும் இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனரர். தனது பொறுப்பை தட்டிக்கழிக்கும் விதமாக நடந்து கொள்கிறார். இவரது பேச்சு தவறானது என்றும் ரயில்‌ பாதுகாப்பில் ரயில்வே துறைக்கும் பொறுப்பு உண்டு என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ரயில்வே துறைக்கு ரூ 500 கோடி நஷ்டம்: ரயில்வே துறைகை குறி வைத்து நக்சல்களின் கடந்த ஆண்டு தாக்குதல் மொத்தம் 65 . இதில் மே மாதம் மட்டும் 4 முறை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. ரயில்வே சொத்துக்கு சேதம் ஏற்படுத்துதல், தண்டவாளம் தகர்ப்பு , ரயில்வே அலுவலகம் சூறை , குண்டு வைத்தல் முக்கிய வேலையாக ‌நக்சல்கள் செய்து வருகின்றனர். இதுவரை ரூ. 500 கோடி ரயில்வே துறைக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.



source:dinamalar

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

கூர்கா லீக் தலைவர் கொலை காட்சிகள் யூடியூபில் வெளியானதால் பரபரப்பு

Madan Tamang, President All India Gorkha League 

டார்ஜிலிங் : கூர்கா லீக் தலைவர் மதன் தமாங் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ( 21.05.10) அன்று மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அவரது ஓட்டல் அறையில் இருந்து இந்த வீடிஙயோவை எடுத்துள்ளார். வீடியோவில் மஞ்சள் நிற சட்டை அணிந்த ஒருவன் குர்கி எனப்படும் ஆயுதத்தால் தமாங்கை தாக்கி விட்டு ஓடுவதும், பின்னர் மீண்டும் திரும்பி வந்து தமாங் இறந்து விட்டாரா என்பதை உறுதி செய்து விட்டு ஓடும் காட்சிகளும் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சிகள் யூடியூபில் வெளியாகியுள்ளன. இது வீடியோ பரவலாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

source:dinamalar

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP