சமீபத்திய பதிவுகள்

குவைத் இளவரசர் சுட்டுக் கொலை: உறவினர் வெறிச்செயல்

>> Saturday, June 19, 2010


 
குவைத் இளவரசர்    சுட்டுக் கொலை:    உறவினர் வெறிச்செயல்துபாய், ஜூன். 19-
 
 குவைத் நாட்டு இளவரசர் ஷேக் பாசல் (52). கடந்த சில நாட்களுக்கு முன்பு துபாயில் இவர் தனது உறவினருடன் காரில் சென்று கொண்டிருந்தார்.
 
அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது முற்றி தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த உறவி னர் அவரை துப்பாக்கியால் சிட்டார்.
 
இதனால் உயிருக்கு போராடிய அவரை துபாயில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
 
அவரது இறுதி சடங்கு இன்று நடைபெறுகிறது. இந்த தகவலை குவைத் அரசு தெரிவித்துள்ளது. இதற் கிடையே, அவரை சுட்ட உறவினரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
ஏற்கனவே, இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. பல முறை துப்பாக்கியால் சுட்டும் இவர் தப்பி விட்டார். தற்போது துப்பாக்கி குண்டுக்கு பலியாகி விட்டார் என்ற தகவல் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
சுட்டுக் கொல்லப்பட்ட இளவரசர் ஷேக் பாசல் குவைத்தின் 12-வது அரசர், ஷேக் ஷாப் அல்சலீம் அல்சபாவின் பேரன் ஆவார். இளவரசர் ஷேக் பாசலின் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

source:maalaimalar
--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

15 வருடங்களுக்கு முன் காணாமல்போன குழந்தைகளை ஃபேஸ் புக்கில் கண்டுபிடித்த தாய்

15 வருடங்களுக்கு முன் தந்தையால் கடத்திச் செல்லப்பட்ட தனது குழந்தைகளை ஃபேஸ்புக்கின் உதவியுடன் தாயார் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். பிரின்ஸ் செகாலா என்ற பெண்ணின் 2 வயது மகனும் 3 வயது மகளும் 1995ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தனது தந்தையால் கடத்திச்செல்லப்பட்டார்கள்.

 

எங்கு தேடியும் பிள்ளைகளைக் கண்டுபிடிக்க முடியாத செகாலா மிகவும் மன உளைச்சளுக்கு ஆளானார். சில மாதங்களுக்கு முன்னர் செகாலாவின் கணவர் குழந்தைகள் மெக்சிகோவில் இருப்பதாக தகவல் அளித்தார்.

 

இதையடுத்து செகாலா தனது குழந்தைகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார். அவரால் முடியவில்லை. இந்நிலையில்தான் அவருக்கு இந்த யோசனை தோன்றியது, தனது குழந்தைகளின் பெயரை ஃபேஸ்புக்கில் புகுந்து தேடத் தொடங்கினார்.

 

செகாலா நினைத்தது போல் அவரது மகளின் பெயரைக் கொண்ட ஒரு பெண் இருந்தார், முதலில் அவருடன் நண்பராகப் பழகினார் செகாலா. இந்த நட்பின் மூலம் அந்த பெண்ணின் குடும்பப் படத்தைப் பார்த்தார். பாரத்தவருக்கு பெரும் மகிழ்ச்சி. அந்த பெண்தான் தனதுமகள் என்பதை அறிந்துகொண்டார்.

 

ஆனால், இதையறிந்த செகாலாவின் மகள் இதற்காகச் சந்தோசப்படாமல் தனது தாயாருடனான உறவை முறித்துக் கொண்டார். ஃபேஸ்புக்கின் பக்கங்களையும் பார்வையிடமுடியாதவாறு மறைத்துவிட்டார். எனினும் சோர்வடையாத செகாலா காவல்துறையில் புகார் செய்தார்.

 

இதனை விசாரித்த காவல்துறையினர் செகாலாவின் கணவரை கடந்த மாதம் 26ம் திகதி கைது செய்தனர். தற்போழுது செகாலாவின் 16 வயது மகனும், 17 வயது மகளும் மீட்கப்பட்டு ஃபுளோரிடாவில் உள்ள ஒரு குழந்தைகள் நலக் காப்பகத்தில் உள்ளனர். இந்த வழக்கு பற்றிய விசாரணை களிபோர்னியாவிலுள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.



--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP