சமீபத்திய பதிவுகள்

புள்ளி ராஜாவிற்கு எய்ட்ஸ் வருமா?

>> Tuesday, July 6, 2010


 

 

வியாபாரத்தைப் பெருக்குவதற்கு மட்டும் அல்ல... மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தவும் விளம்பரங்கள் தேவை. சமூகத்துக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்திய சில விளம்பரங்கள் இவை...

1980-களில் 'Just Say No' என்கிற வார்த்தை அமெரிக்காவில் பட்டிதொட்டி எல்லாம் ஒட்டப்பட்டது. அப்போது நிறைய இளைஞர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி இருந்தார்கள். 'சக நண்பர்கள் போதைப் பழக்கத்தை அறிமுகப்படுத்தும்போது இந்த மந்திரச் சொல்லை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்' என்று விளம்பரப் படுத்தியதில் பலர் பாதை மாறாமல் தப்பித்தார் கள்.

எய்ட்ஸ் எமனாகப் பரவிய நேரத்தில் மும்பையில் 'பல்பீர் பாஷாவுக்கு எய்ட்ஸ் வருமா?' என்ற விளம் பரம் கலக்கி எடுத்தது. அதுவே, தமிழ்நாட்டில் புள்ளிராஜாவாக அவதாரம் எடுத்தது. அதற்கடுத்துப் பல மாநிலங்களில் பல்பீர் பாஷா பல பெயர் தரித்து விழிப்பு உணர்வு கொடுத்தார்.

இப்போது உலகத்துக்கே ஒட்டுமொத்தமான பிரச்னை... புவி வெப்பமயமாதல். 'மரங்களை வெட்டாதீர்கள். இயற்கையைப் பாதுகாப்போம்' என்று பல நாடுகளும் பல வழிகளில் விளம்பரப்படுத்திக் கொண்டு இருக்கின்றன. 2050 என்கிற கேள்வியோடு உலக உருண்டை இல்லாமல் வெறும் அச்சை மட்டும் காட்டி அச்சத்தை விளம்பரப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்!


source:vikatan


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

நபிகள் நாயகம் குறித்து அவதூறு கேள்வித்தாள்-பேராசிரியர் கை துண்டிப்பு


கொச்சி: கேரளத்தில் கல்லூரி வினாத் தாளில் முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் கேள்வியை சேர்த்த பேராசிரியரின் வலது கை வெட்டப்பட்டது.

இடுக்கி மாவட்டம் தொடுப்புழாவில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியர் ஜோசப், கடந்த ஏப்ரலில் அக் கல்லூரியில் நடைபெற்ற பி.காம் 2ம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுக்கு வினாத்தாளை உருவாக்கினார்.

அதில் முகம்மது நபி தொடர்பாக ஒரு கேள்வி இடம் பெற்றது. இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் அமைந்த இந்தக் கேள்வித் தாள் காரணமாக ஜோசப்புக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன.

இதையடுத்து ஜோசப்பின் செயலுக்காக அந்தக் கல்லூரி நிர்வாகம் மன்னிப்பு கேட்டது. மேலும் ஜோசப்பை கல்லூரியை விட்டும் தாற்காலிகமாக நீக்கியது.

இதற்கிடையே ஜோசப்புக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் [^]அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது [^] செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில் ஜோசப், அவரது தாயார், சகோதரி ஆகியோர் நேற்று தேவாலயத்தில் பிரார்த்தனை முடிந்து காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது காரை ஒரு கும்பல் வழிமறித்து அரிவாளால் அவர்களைத் தாக்கிவிட்டு தப்பியோடியது.

இதில் ஜோசப்பின் வலது கை துண்டானது. கால்களிலும் வெட்டு விழுந்தது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP