சமீபத்திய பதிவுகள்

பிச்சை எடுத்து, ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி வரும் ஊனமுற்றவர்

>> Monday, October 25, 2010

"பிச்சை புகினும் கற்பித்தல் நன்றே':புது மொழி படைக்கும் ஊனமுற்றவர்



காரைக்குடி : பிச்சை எடுத்து, ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறார் காரைக்குடியை சேர்ந்த செல்வராஜ் (69). மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த இவர், மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியில் படித்து, பி.ஏ., பொருளாதார பட்டம் பெற்றவர். போலியோ தாக்கி கால்கள் செயல் இழந்ததால், கைகளில் செருப்பை மாட்டி கொண்டு, தவழ்ந்து செல்கிறார். திருமணம் செய்து கொள்ளாத இவருக்கு வேலையும் கிடைக்கவில்லை. உசிலம்பட்டியில் சைக்கிள் பழுதுபார்க்கும் கடை நடத்தி, நஷ்டமானதால், காரைக்குடிக்கு இடம் பெயர்ந்தார்.



யாசகம்: தற்போது இவரது தொழில் யாசகம் செய்வது. இது தவறு தான். ஆனால், "கற்கை நன்றே, கற்கை நன்றே. பிச்சை புகினும் கற்கை நன்றே' என்ற நன்னெறியை தழுவி, கடந்த நான்கு ஆண்டாக, ஏழை மாணவர்களுக்கு (இலவச) கல்விச்செல்வம் கொடுத்து வருகிறார். மாலையில் டியூசன் எடுப்பது, புத்தகம், நோட்டு வாங்கி கொடுப்பது என இவரது வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது.



அவர் கூறுகையில், ""காலை, மாலையில் மூன்று மணி நேரம் பிச்சை எடுப்பேன். 300 ரூபாய் வாடகையில் குடிசை பகுதியில் வசிக்கிறேன். பிச்சை எடுப்பது வருத்தம் அளித்தாலும், மாணவர்களுக்கு உதவுவது திருப்தி தருகிறது. கல்விக்காக பிச்சை எடுப்பதை கவுரமாக கருதுகிறேன்,'' என்றார்


source:dinamalar


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

சமூக வலைதளம் மூலம் சம்பாதிக்கும் சிறுவன்



பெங்களூரு : இணையதளங்களால், மாணவர்கள் தவறான பாதைக்கு செல்வதாக புகார்கள் எழும் நிலையில், சமூக வலைதளம் வாயிலாக, 13 வயது சிறுவன் ஒரு தொகையை சம்பாதித்து வருகிறான். இணையதளங்களில், அண்மைக்காலமாக பாலியல் மற்றும் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இணையதளங்களை பயன்படுத்துவதற்கு அனுமதிக்க தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும், ஆர்குட், பேஸ்புக் மற்றும் பிளாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பிளாக்கில் எழுதுவதற்கு பெரும்பாலானோர் ஆர்வம் காட்டுகின்றனர். டீன்-ஏஜ் பிள்ளைகள் சமூக வலைதளங்களில் அதிக நேரங்களை செலவிடுகின்றனர்.

பெங்களூரில் உள்ள சர்வதேச பள்ளி ஒன்றில், 9ம் வகுப்பு படித்து வரும் விஷால் என்ற மாணவன், பிளாக்கில் எழுதுவதன் மூலம் மாதந்தோறும் 3,680 ரூபாய் சம்பாதித்து வருகிறான். 

அவனது பிளாக்கில் எழுதுவதால், விளம்பரத்திற்கென்று உள்ள பகுதிகளில், பல்வேறு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் விளம்பரம் அளிக்கின்றனர். இதனால், அவனுக்கு விளம்பர வருவாய் கிடைக்கிறது. இதுதவிர, மற்றவர்களில் பிளாக்குகளை மேம்படுத்தி, விளம்பரம் செய்வதன் வாயிலாகவும், டிசைன் செய்து தருவதாலும் வருவாய் ஈட்டுகிறான். பிளாக் உட்பட இரண்டு இணையதளங்களையும் வைத்துள்ளான். அவற்றின் வாயிலாகவும் வருவாய் வருகிறது. இதுதவிர, இ-புத்தகம் ஒன்றையும் எழுதி வருகிறான்.

இதுகுறித்து விஷால் கூறியதாவது: முதலில், வலைதளங்களில் எழுதுவதற்கு எனது வயது தடையாக இருந்தது. ஆனால், ஆறு மாதம் வரை மட்டுமே அந்த சிரமம் இருந்தது. தற்போது, வயதே எனக்கு சாதகமாகி விட்டது. தற்போது, 60 பக்கம் கொண்ட இ-புத்தகம் ஒன்றை எழுதி வருகிறேன். அது முடியும் தறுவாயில் உள்ளது. எனது நண்பர்கள் பிளாக்கில் எழுதுவதற்கு உதவுவதோடு, அவர்களின் பிளாக்குகளை பிரபலப்படுத்தவும் உதவி செய்கிறேன். இவ்வாறு விஷால் கூறினான்


source:dinamalar


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP