சமீபத்திய பதிவுகள்

சிறையில் மெழுகுவர்த்தி செய்ய கற்றுக்கொள்ளும் கனிமொழி

>> Wednesday, June 22, 2011



புதுடில்லி:ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜ்யசபா எம்.பி., கனிமொழி, ஓய்வு நேரத்தில் மெழுகுவத்தி செய்ய கற்றுக்கொள்வதாக, சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராஜ்யசபா எம்.பி.,யும், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி, ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், கடந்த மாதம் 20ம் தேதி கைது செய்யப்பட்டார். திகார் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், புத்தகங்களை படிப்பதில் நேரத்தை கழித்து வந்தார். இந்நிலையில், தற்போது, தன் ஓய்வு நேரங்களில், பெண் கைதிகளோடு இணைந்து மெழுகுவத்தி தயாரிக்கும் முறையை கற்று வருவதாக, சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவரது ஜாமின் மனுக்கள் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்ட போதும், அதுகுறித்து எந்தவித வருத்தமும் அடையாமல் சிறையில் இயல்பாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று முன்தினம், கனிமொழியின் தந்தை கருணாநிதியும், தாயார் ராஜாத்தியும் சிறைக்கு வந்து, கனிமொழியை சந்தித்தனர். அப்போது, அவருக்குப் பிடித்தமான முறுக்கு உள்ளிட்ட உணவுப் பண்டங்களை கொடுத்துவிட்டுச் சென்றனர்.

source:dinamalar

--
http://thamilislam.tk

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP