சமீபத்திய பதிவுகள்

மனைவியின் பழைய காதல் ................

>> Sunday, July 31, 2011



பட்டாம் பூச்சிகளின் கதை! (7)

ஹலோ ரீடர்ஸ்... "பட்டாம்பூச்சிகளின் வாழ்க்கை, எங்கள் மனசை பிசைகிறது...' என்று எழுதியிருந்தீர்கள். என்ன செய்வது? பறவைகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம் என்பர். இந்த வாரம் நாம் பார்க்கப் போவது, என் கல்லூரித் தோழியின் கதை...
என் தோழியின் பெயர் காஞ்சனா - பெயர் மாற்றியுள்ளேன்; நன்றாகப் படிப்பாள். இவர்கள் வீட்டில் நான்கு சகோதரிகள்; என் தோழி, இரண்டாவது பெண். தோழிக்கும் வந்தது காதல். இவள், உயர் ஜாதியைச் சேர்ந்த பணக்காரப் பெண். இவளது காதலனும் பணக்காரன்; ஆனால், சமுதாயத்தால் தாழ்ந்த ஜாதி என்று வர்ணிக்கப்படுபவன்.
அப்பாவி பெண்களுக்குக் கூட, காதல் வந்ததும் எப்படித்தான் வீரம் வருமோ... காஞ்சனாவின் அக்கா, ஒருவரை விரும்பினாள். விஷயமறிந்த பெற்றோர், காதலை காலில் போட்டு நசுக்கி, வீட்டில் அடைத்து வைத்திருந்து, வேறு ஒருவனுக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.
அக்காவின் கணவருக்கு, தன் மனைவியின் பழைய காதல் தெரிய வந்ததும், தினமும் அடி, உதை; எதற்கெடுத்தாலும் சந்தேகம் என, கொடுமைகளை அனுபவிக்கிறாள் தோழியின் அக்கா.
இதனால், காஞ்சனா தன் காதலனிடம், "எங்க வீடு, காதலுக்கு பயங்கரமான எதிரி. எனவே, கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் போதே, வீட்டுக்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொள்வோம்...' என்று சொல்லி, இருவரும் திருட்டுத்தனமாக, "அலைபாயுதே' ஸ்டைலில் திருமணம் செய்து கொண்டனர்.
படிப்பு முடிந்தது. ஜோடிகள் வீட்டை விட்டு, "எஸ்கேப்' ஆகும் நேரம் வந்தது. விடிகாலை, 5:00 மணிக்கு, பையில் துணியுடன், பஸ் ஸ்டாண்டில் காஞ்சனா வெயிட்டிங்; காதலன் வந்து விடவே, இருவரும் பறக்க இருந்த நேரம் பார்த்து, அந்த ஊர் போலீஸ்காரர் பார்த்து, காதலனைப் பிடித்து, கேள்வி மேல் கேள்வி கேட்டார்.
"நீ யாரு... என்னை கேள்வி கேட்பதற்கு? இவள் என் மனைவி...' என்று சொல்ல, கொத்தாக அள்ளிச் சென்று, அவனை காவலில் வைத்து விட்டார்.
காஞ்சனா வீட்டிற்கு நியூஸ் பறந்தது. ஓடி வந்த பெற்றோர், மகளை அடி, அடியென அடித்தனர். பதிவு திருமணம் செய்து கொண்ட செய்தி கேட்டு, துடிதுடித்துப் போய் விட்டனர். காரணம், எங்கள் ஊர்க்காரர்களால், கேவலமாக எண்ணப்படும் கீழ் ஜாதியை சேர்ந்தவன் மாப்பிள்ளை.
பெண் வீட்டாரின், "பலத்தால்' காதலனை, பின்னி பெடலெடுத்து விட்டனர் போலீசார். ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து, பதிவு திருமணத்தை, "வாபஸ்' வாங்கினர். காஞ்சனாவை வீட்டுக்காவலில் வைத்தனர்.
பின், பெரிய நகர் ஒன்றில், தீராத விளையாட்டுப் பிள்ளையாக, உருப்படாமல் திரிந்த, பணக்கார பையனுக்கு, யாரும் பெண் கொடுக்க வராததால், காஞ்சனாவை அவன் தலையில் கட்டினர்.
தன் மகனுக்கு, பெண் கொடுக்க வந்தனர் என்ற குஷியில், பெண்ணை பற்றி அதிகம் விசாரிக்காமல், சட்டுபுட்டுன்னு கல்யாணத்தை முடித்தனர்.
கணவர் சரியான பொறுக்கி. மாமியாருக்கு எப்படியோ காஞ்சானாவின் முந்தைய திருமண விஷயம் தெரிந்து, அதிர்ந்தாள். தன் மகன் என்னதான் பொறுக்கியாக இருந்தாலும், தன் மருமகளின் லீலைகள், அவளை மிகவும் பாதிக்கவே, தினமும், "டார்ச்சர்' தான்.
"ஏண்டி... நானே எத்தனையோ பொண்ணுங்களுக்கு, "அல்வா' கொடுத்தேன்; ஆனால், நீ எனக்கே அல்வா கொடுத்து, என்னை, இரண்டாவது புருஷன் ஆக்கிட்டியே டீ...' என, குடித்துவிட்டு வந்து கலாட்டா செய்கிறான் கணவன்.
இப்போது, தினமும் செத்து, செத்து பிழைக்கிறாள் காஞ்சனா.
அங்கே போலீஸ் அடித்த அடியில், மனநிலை பாதிக்கப்பட்டு, பைத்தியமாகவே ஆகி விட்டான் காதலன். இங்கே, காஞ்சனாவின் மற்ற இரு தங்கைகளும், 30 வயதை நெருங்கி கொண்டிருக்கின்றனர். ஒருவரும் பெண் கேட்டு வருவதில்லை.
தாழ்ந்த ஜாதி எனக் கூறப்படுவதால், காதலை பிரித்து, ஏமாற்றி இன்னொருவர் தலையில் கட்டியதால் வந்த வினையை பார்த்தீர்களா? ஏன் இந்த விபரீதம்; இதனால், எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்...
உங்கள் பிள்ளைகள், வரம்பை மீறி சென்ற பின், அவர்கள் வாழ்க்கையை நாசம் செய்யாதீர் பெற்றோர்களே...
— தொடரும்.

- ஜெபராணி ஐசக்
 

StumbleUpon.com Read more...

மு.க., ஸ்டாலின் கைது- பஸ்கள் ‌கண்ணாடி நொறுக்கப்பட்டன.

>> Friday, July 29, 2011


திருவாரூர்: தி.மு.க., மாவட்ட செயலர் பூண்டி கலைவாணனை கைது செய்ய வந்த போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்த மாஜி துணை முதல்வர் மு.க., ஸ்டாலின், மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் மற்றும் தி.மு.க,வினரை போலீசார் கைது செய்தனர். இதனால் மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பதட்டம் நிலவுவதால் போலீசார் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ளனர். 
சேலம் மாநகர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில், இன்று 3 வது நாளாக கையெழுத்து போட வந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தைப் போலீசார் மீண்டும் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்ட வீரபாண்டியை கோவை மத்திய சிறையில் அடைக்க போலீசார் கொண்டு செல்கின்றனர். சுபம் மெட்ரிகுலேஷன் பள்ளிக்குச் சொந்தமான நிலத்தை வாங்கியது தொடர்பான வழக்கில் இவர் தற்போது கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. போலீஸ் நிலையம் முன் கூடியிருந்த தி.மு.க.,வினர் இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். போலீசாருடன் தி.மு.க.,வினர் மோதலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட வீரபாண்டி ஆறுமுகம், உடனடியாக நீதி மன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சேலம், அங்கம்மாள் காலனி நிலம் மற்றும் பிரீமியர் மில் நில அபகரிப்பு வழக்கில், முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திடம், ஐகோர்ட் உத்தரவுப்படி, மாநகர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில், 3 நாள் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப் பின், சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, "மாநகர் மத்திய குற்றப்பிரிவு போலீஸில், தினமும் காலை 8 மணிக்கு நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்' என, நீதிபதி உத்தரவிட்டார். அந்த உத்தரவில், எத்தனை நாள் ஆஜராகி, கையெழுத்துப் போட வேண்டும் என்பது பற்றி குறிப்பிடப்படவில்லை.


அதன்படி, முதல் நாளான 28ம் தேதி காலை 8 மணிக்கு ஆஜராக வேண்டிய வீரபாண்டி ஆறுமுகம், 10 நிமிடம் காலதாமதமாக, காலை 8.10 மணிக்கு ஆஜரானார். இந்த காலதாமத்துக்கு எழுத்துப்பூர்வமாக விளக்கம் தரும்படி போலீசார் வலியுறுத்தினர். அதனால், வீரபாண்டி ஆறுமுகம் டென்ஷனானார். 2வது நாளான நேற்று, வீரபாண்டி ஆறுமுகம், 10 நிமிடத்துக்கு முன்னதாகவே, காலை 7.50 மணிக்கு, காரில் ஸ்டேஷனுக்கு வந்து இறங்கினார். 100 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஸ்டேஷனுக்குள், 7.51 மணிக்கு நுழைந்த வீரபாண்டி ஆறுமுகம், 9 நிமிடம் நாற்காலியில் அமர்ந்தபடி காத்திருந்தார். சரியாக 8 மணி ஆனதும், வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு விட்டு, 8.01 மணிக்கு வெளியே வந்தார். திரண்டிருந்த தி.மு.க.,வினர், வீரபாண்டி ஆறுமுகத்தை வாழ்த்தியும், அரசுக்கு எதிராகவும் கோஷமிட்டனர். அப்போது, சிரித்த முகத்தோடு போலீசார், 8.05 மணிக்கு வீரபாண்டி ஆறுமுகத்தை வழியனுப்பி வைத்தனர்.


3வது நாளாக அவர் கையெழுத்திட வந்தபோது அவரை போலீசார் கைது செய்தனர். இந்நேரத்தில் போலீசாருக்கும், தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


2பஸ்கள் உடைப்பு : இவரது கைதுக்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க., தொண்டர்கள் சில இடங்களில் பஸ்கள் மீது கல்வீசி தாக்கினர். கலெக்டர் ஆபீஸ் மற்றும் அரசு ஆஸ்பத்திரி அருகே 2 பஸ்கள் ‌கண்ணாடி நொறுக்கப்பட்டன. இதனையடுத்து நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.



தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கைது : சென்னை திரு‌வல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் திடீரென கைது‌ செய்யப்பட்டார். கைதான அன்பழகன் தென்சென்னை மாவட்ட தி.மு.க.செயலாளர் ஆவார். இவர் தியாகராயநகரில் உள்ள அவரது வீட்டில் இரு்ந்த போது போலீசார் வரை அதிகாலையில் கைது செய்தனர். நிலவிவகாரம் தொடர்பாக உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த மில் அதிபர் சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதற்காக அவர் திருப்பூர் அழைத்து செல்லப்படுகிறார்.


source:dinamalar


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

பத்திரிகையாளனா நீ? எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படுவாய்!”

>> Thursday, July 28, 2011

 
 

"லுடிர படிவ ரள கயஅந யனே படிடின ளவயவரள. க்ஷரவ றந றயவேநன டிடேல லடிர. றுhல hயஎந லடிர டநகவ ரள டமைந வாளை?"

இப்படிச் சொல்லி கதறி அழுதவர் ஜோதிர்மயி தேவின் சகோதரி லீலா. தேவ் பிரபல ஆங்கில நாளிதழான 'ஆனை னயல' யின் குற்றச் செய்திகள் பிரிவின் ஆசிரியராகப் பணியாற்றியவர். கடந்த சில தினங்களுக்கு முன்னால் மும்பையில் மாலை மூன்றரை மணியளவில் சில மர்ம ஆசாமிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதோ ஒரு சிறிய உரையாடல்:
"நீங்கள் பத்திரிகையாளராகப் பணியாற்றுகிறீர்களா?"
"ஆமாம்."

"மூடி மறைக்கப்படும் உண்மைகளை எல்லாம் நீங்கள் பத்திரிகையில் துணிச்சலோடு எழுதி வெளியிடுகிறவரா?"
"ஆமாம்! கண்டிப்பாக அதுவே பத்திரிகை தர்மம்."
"அப்படியானால் எந்த நேரத்திலும் நீங்கள் மர்ம ஆசாமிகளால் கொல்லப்படலாம்."

'நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே' என்று இறைவனிடம் வாதாடிய 'நக்கீரன்' தோன்றியபோதே முதல் பத்திரிகையாளன் தோன்றி விட்டான் என்று சொல்லப்படுகிறது. அந்த முதல் பத்திரிகையாளனிலிருந்து - இன்றைய ஜோதிர்மயி தேவ் வரை அனைவருமே துயரத்திற்குள்ளாகிப் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்பது தொடர் கதையாய் முடிவின்றி நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழில் 1996 முதல் 2005 வரை புகைப்படக்காரராகப் பணியாற்றிய தேவ், 'இந்துஸ்தான் டைம்ஸ்' நாளிதழிலும் அதன் பிறகு மூன்று ஆண்டுகள் பணியாற்றியவர் 'ஷ்சைடி னுயைட' என்ற ஆங்கில நூலின் ஆசிரியரான இவர் பத்திரிகைத் துறையில் இருபத்தைந்து ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்.

இவர் எதற்காகக் கொல்லப்பட்டார்? இவரைக் கொன்றவர்கள் யார்?
பல குழப்பமான பதில்கள் வெளிவரத் தொடங்கி இருக்கின்றன.
மும்பை நிழலுலக தாதாக்கள் பற்றிய இவரது புத்தகமே இவரைச் சுட்டுக் கொல்வதற்கு காரணமாயிற்று என்று சிலர் சொல்கிறார்கள்.
கடந்த சில மாதங்களாக மும்பை கடலோரத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த டீசல் கடத்தல் தொடர்பான தகவல்களை வெளியுலகுக்குத் தெரியப்படுத்தி, அந்த மாபியா கும்பல் காவல்துறையால் கைது செய்யப்பட காரணமாக இவர் இருந்ததே இவரது உயிர் பறிப்புக்கு காரணமாயிற்று என்றும் பலர் சந்தேகப்படுகிறார்கள்.
தேவ் சம்பவத்தன்று மாலை மூன்றரை மணி அளவில் தனது மோட்டார் சைக்கிளில் காட்கோபர் மேற்கு அம்ருத் நகர் பகுதியிலுள்ள டி-மார்ட் வணிக வளாகம் அருகே சென்று கொண்டிருந்தபோது மிகக் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு கொலைவெறியர்கள் காட்டுமிராண்டித் தனமாக அவரைச் சாகடித்திருக்கிறார்கள். அவரது கழுத்து, மார்பு, வயிறு போன்ற பகுதியில் எட்டு இடங்களில் மாறி மாறிச் சுட்டு அவரைக் கொன்றுவிட்டு, பட்டப் பகலில் தப்பித்தும் ஓடி விட்டார்கள். அவரைக் காப்பாற்ற யாராலும் முடியவில்லை.

இது என்ன ஒரு கொடுமை?
இன்று பத்திரிகைகள் உண்மைகளை எழுதவில்லை என்றால் அனைத்து ஊழல்களும் வெளியே தெரியாமல் மூடி மறைக்கப்பட்டு விடாதா? 'நான்காவது தூண்' என்று பெருமையோடு அழைக்கப்படுகிற பத்திரிகை உலகத்தைச் சேர்ந்தவர்களையெல்லாம் இப்படிக் கொன்றழித்து விட்டார்கள் என்றால், அநீதிகளையும், 
அக்கிரமங்களையும் அம்பலப்படுத்த யார் முன்வருவார்கள்? நியாயத்தையும், நீதியையும் யார் முன்னிறுத்த வருவார்கள்?

மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் அம்பிகா சோனி உட்பட பல அமைச்சர்களும் இந்த அநாகரீக வன்முறைச் செயலைக் கண்டித்திருக்கிறார்கள். மும்பை பிரஸ் கிளப் இந்தக் கொலைக்குக் காரணமான குற்றவாளிகளை காவல்துறை உடனடியாகக் கண்டுபிடித்து அவர்களைக் கைது செய்து தகுந்த தண்டனை வழங்க வேண்டுமாய்க் கேட்டிருக்கிறது. மும்பை திரையுலகமும் (க்ஷடிடடலறடிடின) மிகவும் அதிர்ச்சி அடைந்திருப்பதாகச் செய்திகளை வெளியிட்டுள்ளது. பத்திரிகை உலகம் மிகவே கவலையும், அதிர்ச்சியும் அடைந்திருப்பதும் தெரிய வருகிறது.

உண்மையைச் சொல்ல வந்தவர்களின் உயிர்களைக் கொன்றழிப்பது ஒரு நியாயமான செயல்தானா? நீதிக்காகக் குரல் கொடுப்பவர்களின் குரல்வளைகளை ஈவு இரக்கமின்றி நெரித்துச் சாகடிப்பது ஒரு நாகரீக சமுதாயத்தில் நடைபெறும் செயலாக இருக்க முடியுமா?
எழுத்தாளர்கள் சமுதாயத்தின் மனசாட்சி என்பதை மிக எளிதாக மறந்துவிட நினைக்கிறீர்களே... நியாயத்தின் குரல் வான மண்டலங்களையும் அசைக்கும் என்பதை கொலைக் குற்றவாளிகள் மறந்துவிட வேண்டாம்.

தேவின் இறுதிச் சடங்கின்போது அவரது தாயார் டீனா தளதளக்கும் அழுகுரலில் பிணத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கேட்ட கேள்வி இதுதான்:
"லுடிர கடிரபாவ கடிச டிவாநசள சiபாவள'. சூடிற றாடி றடைட கiபாவ கடிச லடிர?" (அனைவரின் உரிமைகளுக்காகவும் நீ போராடினாய்? உனக்காக இப்போது யார் போராடுவார்கள்?)
இந்தச் சமூகத்தின் மனச்சாட்சி இவ்வுலகை விட்டே அனுப்பப்பட்டுள்ளது. 
இவரை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கும், வருத்தத்தில் வாடும் பத்திரிகையாளர்களுக்கும் இந்தச் சமூகம் என்ன பதில் சொல்லும்?

source:namvalvu

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

இளம் பெண்களே... "லவ்' பண்ணாதீங்க...

பட்டாம்பூச்சிகளின் கதை! (6)ஹாய்... ஹாய் ரீடர்ஸ்...
"பட்டாம்பூச்சிகளின் கதை படித்ததும், இதயமே கனத்துப் போகிறது. ஒரு வேதனையுடன், "வாரமலர்' இதழை கீழே வைக்க வேண்டியிருக்கிறது. எங்களது, "செல்ல' மகள்களின் வாழ்க்கை நன்றாக அமையணுமே என்ற பயம் ஒரு பக்கம் வாட்டுகிறது...' என, அநேக தாய்மார்கள் எழுதியிருந்தீர்கள்.
என்னால் தாங்க முடியாமல் தான், இந்த விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இனியும் இப்படிப்பட்ட அவலங்கள் நடக்கக் கூடாது என்பதே என் ஆசை!
இந்த வாரம், சஞ்சனா பற்றிய கதையை சொல்லப் போறேன்...
சஞ்சனாவின் பெற்றோர் மட்டும் சற்று கண்டிப்பு காட்டியிருந்தால், இவளும், இப்படி ஒரு காரியத்தை செய்திருக்க மாட்டாள். ம்ஹும்... என்ன செய்வது...
சஞ்சனாவின் பெற்றோர், காதல் திருமணம் செய்தவர்கள். இவள், குட்டி பாப்பாவாக இருக்கும் போதே நல்ல அழகு, அறிவு. ஸ்மார்ட்டாக இருந்ததால், குடும்பமே அவளை தலை மீது வைத்துக் கொண்டாடியது.
செல்லம்... செல்லம்... அப்படி ஒரு செல்லம். டீன் - ஏஜ் பருவத்தில், அல்ட்ரா மாடர்னாக உடை உடுத்தி, ஸ்டைலாக செல்லும் மகளைக் கண்டு, ஏக பெருமை பெற்றோருக்கு. மகள் மீது, கண் மூடித்தனமாக நம்பிக்கை வைத்திருந்தனர்.
பத்தாம் வகுப்பு படிக்கும் சஞ்சனா, "மம்மி... 8:00 மணிக்கு மேத்ஸ் டியூஷன்...' என்று சொன்னால், "இந்த இரவு நேரத்திலா...' என யோசிக்காமலேயே, அனுப்பி வைப்பாள் அம்மா. மகள் பேச்சுக்கு மறு பேச்சு இல்லை; அதற்கு மேல் டாடி.
பத்தாததற்கு, "மகளே... நீ யாரை வேண்டுமானாலும், "லவ்' பண்ணு; பிரச்னையே இல்லை; அப்பா உன், "லவ்'க்கு குறுக்கே நிற்க மாட்டேன்!' என்று சொல்வது.
அதாவது, இவர்களும், "லவ்' மேரேஜ் தானே... வேறு என்ன சொல்ல முடியும். அத்துடன் இப்படிப் பேசுவது, "பேஷன்' என்று நினைத்தனர். இதனால், சஞ்சனாவுக்கு, "லவ்' பண்ணுவதைப் பற்றிய பயமே இல்லை.
அந்த சமயத்தில், மிகவும் ஸ்டைலாக டிரஸ் பண்ணி, பைக்கில் ஸ்பீடாக வந்து, அசத்தலாக தன்னைச் சுற்றி வந்த, ஜான் என்பவன் மீது ஆசை வந்ததில் தப்பில்லை. மாடர்னா டிரஸ் அணிந்து, வளர்ந்த சஞ்சனா, ஜானின், "லவ்'வில் விழுந்தாள்.
ஜானின் பெற்றோருக்கு, மகன் மீது அத்தனை பாசம்; கண்டிப்பு என்பதே இல்லை. 
வீட்டிலேயே அப்பா தண்ணி அடிப்பார். அப்புறம் மகன் எப்படி இருப்பான்? பிளஸ் ஒன் படிக்கும் போதே, தண்ணி, சிகரெட் என, எல்லா பழக்கங்களும் ஜானுக்கும் உண்டு. இதை எல்லாம் புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லை 
சஞ்சனா. பத்தாம் வகுப்பு படிக்கும் போது, என்ன மெச்சூரிட்டி இருக்கும்?
சஞ்சனாவிடம், உயிரையே விடுவது போல் பேசியிருக்கிறான், வழிந்திருக்கிறான் ஜான். அவள் பேச்சுக்கு மறு பேச்சே இல்லை. கனவுலகில் மிதந்தாள் சஞ்சனா.
"சே... என் லவ்வரை போல் ஒருத்தன், இந்த உலகத்திலேயே கிடையாது...' என, மயங்கி கிடந்திருக்கிறாள்.
எட்டு வருடங்கள் காதல் வானில் சிறகடித்துப் பறந்தனர். விஷயம் தெரிந்ததும், வழக்கம் போல், சஞ்சனா வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு. காரணம், அவன் வேறு மதத்தைச் சேர்ந்தவன் என்பதே!
தான் நினைத்ததை சாதித்தே பழக்கப்பட்ட சஞ்சனா, "அப்படின்னா, எனக்கு கல்யாணமே வேண்டாம்...' என ரகளை செய்யவும், வேறு வழியின்றி, இருவருக்கும் சிம்பிளான முறையில் திருமணம் நடந்தது.
சஞ்சனாவிற்கு, திருமண வாழ்க்கை, பத்து நாட்கள் நன்றாக இனித்தது. அதன் பிறகுதான், ஜானின் சுயரூபம் தெரிய ஆரம்பித்தது.
வேலை முடிந்து வந்தவுடனே வீட்டில் உட்கார்ந்து தண்ணியடிக்க ஆரம்பிப்பது, பெற்றோரை மிகவும் கேவலமாக, கெட்ட வார்த்தைகளால் திட்டுவது, இரவு 1:00 மணி வரை, "டிவி' பார்ப்பது... அதுவரையில், சஞ்சனாவும் அவன் அருகிலேயே அமர்ந்திருக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பது, பிறகு தினமும் அவனுடன், "ஒத்துழைக்க' வேண்டும்.
காலை, 8:00 - 9:00 மணியளவில் இவன் தூங்கி எழுந்ததும், சாப்பாடு சரியில்லை... அது சரியில்லை...' என, தட்டைத் தூக்கி அடித்தாலும், அவனது தாயார் ஒரு வார்த்தை கூட பேசாமல், "நீ தான் என் பிள்ளையை திருத்த வேண்டும்...' என, கரித்துக் கொட்டுவாள்.
இனிய காதல் மொழி பேசிய காதலனின் மறுமுகத்தைக் கண்டு, அதிர்ச்சியில் உறைந்தாள் சஞ்சனா.
ஜானை கண்டித்தால் அடி, உதைதான். "குடிப்பது என்னோட சந்தோஷம்... அதில் நீ தலையிடாதே...' என்பான்.
"இந்த நாத்தம் எனக்கு குடலை புரட்டுது... என் கிட்ட வரும் போது குடிச்சிட்டு வராதே...' என்றாள் சஞ்சனா.
"நான் குடிப்பேன் என்பது தெரிஞ்சிதானேடி என்ன கட்டின... இப்ப என்னடி வேஷம் போடுற?' என்பான்.
இதற்கிடையில், சஞ்சனா கருவுற்று, குழந்தையும் பிறந்தது. குழந்தை அழுதால் போதும்... "இந்த சனியனை எங்காவது தூக்கிட்டு போ!' என்பான்.
ஆசையாக ஓடிவரும் குழந்தையை தூக்கி கொஞ்சுவது இல்லை; அதற்கு ஒரு சின்ன உதவி கூட செய்வதில்லை. "சீக்கிரம் அந்த சனியனை தூங்க வச்சிட்டு வா!' என்பான்.
"குழந்தைக்கு உடம்பு சரியில்லைங்க...' என்றால், "மாசத்துல பாதி நாள் உன் குழந்தைக்கு உடம்பு சரியா இருக்காது; மீதி நாள் உனக்கு சரியா இருக்காது. இந்த வீட்ல, எனக்கு என்னதான் சுகம் இருக்கு!' என்று திட்டுவான்.
உடைந்து போனாள் சஞ்சனா. இப்படி ஒரு நரக வாழ்க்கையை அவள் எதிர்பார்க்கவே இல்லை. கணவருடன் வெளியே சென்றால், நன்கு குடித்துவிட்டு கலாட்டா செய்வது, நண்பர்களுடன் பார்ட்டிக்கு அழைத்துச் சென்று, சஞ்சனாவை விட்டுவிட்டு நல்லா தண்ணி அடித்து, வாந்தி எடுத்து, அந்த ஓட்டலையே நாற வைப்பது... குடிபோதையில் காரை ஓட்ட முயற்சிப்பது...
அழுது கொண்டு நிற்கும் குழந்தையையும், சஞ்சனாவையும் பார்த்து பரிதாபப்படும் நண்பர்கள், இவர்களை காரில், வீட்டில் கொண்டு வந்து விட்டால், விடிந்ததும் நண்பர்களோடு, சஞ்சனாவை சம்பந்தப்படுத்தி, பயங்கரமாக இம்சைப்படுத்தி வேடிக்கை பார்ப்பது தான் ஜானின் வேலை.
இந்த சங்கதிகளை தன் பெற்றோரிடம் மறைத்து விட்டாள் சஞ்சனா. தானே தேடிக் கொண்ட வாழ்க்கை, அத்துடன் தன் பெற்றோருக்கு, தங்கள் செல்ல மகளின் வாழ்க்கை இப்படி அழிந்து விட்டது தெரிந்தால், அவர்களால் தாங்கவே முடியாமல், உயிரையே விட்டு விடுவர் என்பதால், துக்கங்களை தோழிகளிடம் மட்டுமே பகிர்ந்து கொள்வாள்.
ஆனாலும், தங்களது மகள் இளைத்து, பொலிவிழந்து இருப்பதைக் கண்டு, பெற்றோருக்கு சந்தேகம் தான். இருந்தாலும் அழுத்தக்கார சஞ்சனா வாயை திறப்பதில்லை.
அதுமட்டுமல்ல... இரவில் நெட்டில் ஆபாச படங்கள் பார்ப்பது, ஆபாச சாட்டிங் பண்ணுவது என, அத்தனை அருவருப்புக்களையும் செய்யும் ஜானைப் பற்றி, மாமியாரிடம் கதறுவாள் சஞ்சனா.
மகனை விட்டுக் கொடுக்காத மாமியார், "நீ தான் அவனை திருத்தணும்... அவனுடன், 'அட்ஜஸ் செய்துபோ...' என்பாள்.
பிளஸ் ஒன் படிக்கும் போதே கெட்டுப் போக ஆரம்பித்த செல்ல மகனை கண்டிக்காமல் வளர்த்த பெற்றோர், இன்று சம்பாதிக்கும் மகனை கண்டிக்கவே பயப்படுகின்றனர். இத்தனைக்கும், மகனின் வருமானத்தை நம்பி இவர்கள் இல்லை. சஞ்சனாதான் திருத்தணும் என்றால், எப்படி திருத்துவாள்.
"தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும். மகனை செல்லம் கொடுத்து வளர்த்து, கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிப்பு காட்டாமல், மனைவி வந்ததும் திருத்துவாள் என்று எப்படி எதிர்பார்க்கின்றனர்...' என்று புலம்புகிறாள் சஞ்சனா.
"இளம் பெண்களே... "லவ்' பண்ணாதீங்க... "லவ்' பண்ணும் போது கெஞ்சி, கொஞ்சி காலில் விழும் இந்த தடியன்கள், திருமணம் ஆகி, காரியம் முடிந்ததும், தங்களது வேலையை காட்ட ஆரம்பித்து விடுவர். பெற்றோர் பார்த்து திருமணம் செய்தால், அவர்கள் வந்து, இவனை கண்டிப்பர். இது, நானே பார்த்தது என்பதால், என் உறவினர்களிடம் சொல்லவும் முடியாமல், எனக்கு ஒரு குழந்தை இருப்பதால், இவனை விட்டு ஓடவும் முடியாமல் தவிக்கிறேன்... ஸ்டேட் பர்ஸ்ட் மார்க் வாங்கின நான், வேலைக்குப் போகக் கூடாது என்று சொல்லி, "தடா' போட்டுள்ளான்... எவ்வளவு டேலன்ட் இருந்தும் என்ன பயன்? என்னோட வாழ்க்கையை பாழாய் போன இந்த, "லவ்' என்ற பெயரால் அழித்துக் கொண்டேன்...' என்று புலம்புகிறாள் சஞ்சனா.
இளம் பெண்களே... "லவ்' பண்ணாதீங்க... பெற்றோரே... உங்கள் பிள்ளைகளுக்கு ஓவர் சுதந்திரம் கொடுத்து, "நீ யாரை, "லவ்' பண்ணினாலும் ஒண்ணும் சொல்ல மாட்டேன்!' என்று, அவர்கள் வாழ்க்கையை அழித்து விடாதீர்; கொஞ்சமாவது கண்டிப்பு காட்டுங்க.
ஆண் பிள்ளைகளை பெற்ற தாய்மார்களே... அவர்களையும் கண்டித்து வளங்க. "எம்புள்ள ஆண் சிங்கம்...' என்று நினைத்து, மார்தட்டி வளர்த்தால், பின்னாளில் நீங்கள் தலைக்குனிந்து நிற்கும்படி உங்கள் மண்டையில் தட்டுவர்... ஜாக்கிரதை!
— தொடரும்.

- ஜெபராணி ஐசக்!
 

source:dinamalar






StumbleUpon.com Read more...

CIA காண்பித்த 10 நிமிட வீடியோ: வாயடைத்த பாக்கிஸ்தான் !

>> Wednesday, July 27, 2011


  


சி.ஐ.ஏ.யின் தலைவர் லியோன் பனெடா, பாகிஸ்தானிய ராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையிலான தொடர்புகள் பற்றிய பகீர் ஆதாரங்களை காண்பித்திருக்கின்றார். பாகிஸ்தானில் வைத்தே, பாகிஸ்தானிய ராணுவத் தளபதி, மற்றும் உளவு அமைப்பின் தலைவர் ஆகியோருக்கு இந்த ஆதாரங்கள் காண்பிக்கப்பட்டுள்ளன. �சி.ஐ.ஏ. பாகிஸ்தானில் செய்துவரும் பல ஆபரேஷன்கள் பற்றிய விபரங்கள், தீவிரவாத அமைப்புகளுக்கு முன்கூட்டியே தெரியவந்து விடுகின்றன. இதனால் அவர்கள் உஷாராகி, தப்பி விடுகின்றனர். தீவிரவாதிகளுக்கு தகவல் போவது எப்படி? அதற்கு பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைப்புகளுக்குள் தீவிரவாதிகளுக்கு ஆட்கள் இருக்க வேண்டும்� இவ்வாறு சி.ஐ.ஏ. சமீபகாலமாக வெளிப்படையாகக் கூறிவருகின்றது. அதை பாகிஸ்தானியத் தலைமை மறுத்தும் வந்துள்ளது.
நிலைமை மோசமாகி வரவே சி.ஐ.ஏ.யின் தலைவர் லியோன் பனெடா, இரு தினங்களுக்குமுன் பாகிஸ்தானுக்கு நேரில் சென்றிருந்தார். பாகிஸ்தானிய ராணுவத் தளபதி ஜெனரல் ஆஷ்பக் கயானி, உளவுத்துறை ஐ.எஸ்.ஐ.யின் தலைவர் லெப். ஜெனரல் அஹ்மட் பாஷா ஆகியோரை அவரச கூட்டம் ஒன்றுக்கு அழைத்தார்.

அப்போதும் பாகிஸ்தான் தரப்பு, �எமது பாதுகாப்புப் பிரிவுகளில் இருந்து ரகசியங்கள் ஏதும் தீவிரவாத அமைப்புகளுக்கு லீக் செய்யப்படுவதில்லை. நீங்கள் (சி.ஐ.ஏ.) கூறுவது கற்பனையான குற்றச்சாட்டு� என்பதையே மீண்டும் வலியுறுத்தினர். இதையடுத்து சி.ஐ.ஏ.யின் தலைவர், �எமக்குக் கிடைத்த தகவல்களில் இருந்து, உங்களது ராணுவத்துக்கு உள்ளேயே தீவிரவாத அமைப்புகளுக்கு ஆட்கள் இருக்கின்றனர்� என்று கூறினார். இதை கோபமாக மறுத்த பாகிஸ்தானிய ராணுவத் தளபதி, �ஆதாரம் ஏதுமில்லாமல் எமது ராணுவத்தினர்மீது குற்றம்சாட்டக் கூடாது� என்றார். அதன் பின்னரே லியோன் பனெடா, தம்மிடமுள்ள ஆதாரங்கள் சிலவற்றை மேஜையில் தூக்கிப் போட்டார். சி.ஐ.ஏ. தலைவர் காண்பித்த ஆதாரங்களில், பல டாக்குமென்ட்களுடன், 10 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோவும் இருந்தது. பாகிஸ்தானிய உளவுத்துறைக்குத் தெரியாமலேயே, பாகிஸ்தானுக்கு உள்ளே படம்பிடிக்கப்பட்ட வீடியோ அது!

பாகிஸ்தானின் இரு பகுதிகளில் தீவிரவாத அமைப்புகள் வெடிகுண்டு தயாரிப்பு தொழிற்சாலைகளை நடாத்திவருவது பற்றிய உளவுத் தகவல்கள் சி.ஐ.ஏ.க்குக் கிட்டியிருந்தது. இதில் ஒரு வெடிகுண்டுத் தொழிற்சாலை வடக்கு வாசிரிஸ்தானிலும், மற்றையது தெற்கு வாசிரிஸ்தானிலும் அமைந்திருந்தன. குறிப்பிட்ட தொழிற்சாலைகள் பற்றிய முழு விபரங்களையும் சேகரித்திருந்த சி.ஐ.ஏ., தம்மிடமிருந்த தகவல்களை பாகிஸ்தானிய ராணுவத்துடன் பகிர்ந்து கொண்டது. பாகிஸ்தானிய ராணுவத்தை வைத்தே, அந்த வெடிகுண்டுத் தொழிற்சாலைகள் இரண்டையும் ரெயிட் செய்யும் ஆபரேஷனை மேற்கொண்டது. ஆனால், ரெயிட் நடைபெற்ற நேரத்தில், இரு இடங்களிலும் ஏதுமில்லை. எல்லாமே மாயமாகி விட்டிருந்தன.

�சி.ஐ.ஏ.க்கு கிடைத்த தவறான தகவலின் பேரில் நடைபெற்ற ரெயிட்� என்று கூறி, இரு ஆபரேஷன்களையும் முடித்துக் கொண்டது பாகிஸ்தானிய ராணுவம். இப்போது, சி.ஐ.ஏ. தலைவரினால் இஸ்லாமபாத்தில் வைத்துக் காண்பிக்கப்பட்ட 10 நிமிட வீடியோவில், மேலே குறிப்பிட்ட சம்பவத்தின் பின்னணி படமாக்கப்பட்டிருந்தது. எடிட் செய்யப்பட்ட அந்த வீடியோ, தீவிரவாத அமைப்பினரில் இரு வெடிகுண்டுத் தொழிற்சாலைகளிலும் ரகசியமாக எடுக்கப்பட்டவை! தொழிற்சாலைகளை ராணுவம் சுற்றி வளைக்கப்போகும் தகவல், தீவிரவாத அமைப்பினருக்கு வந்து சேருவதும், உடனே அவர்கள் துரிதமாகச் செயற்பட்டு, தமது தொழிற்சாலையை அங்கிருந்து அப்புறப்படுத்துவதும் சி.ஐ.ஏ.யால் ரகசியமாகப் படமாக்கப்பட்டிருந்தன. �எமக்குக் கிடைக்கும் உளவுத் தகவல்களின் அடிப்படையில் நாம் நேரடியாக ஆபரேஷன்களை பாகிஸ்தானுக்குள் செய்தால், அதையும் எதிர்க்கிறீர்கள். உளவுத் தகவல்களை உங்களிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்குமாறு கூறினால், உங்கள் ஆட்களாலேயே தகவல்கள் தீவிரவாதிகளுக்குப் போய்ச் சேருகின்றன� என்று சி.ஐ.ஏ.யின் தலைவர் கூறியதற்கு, பாகிஸ்தானின் தரப்பிலிருந்து கூறப்பட்ட பதில் என்ன ?

�நாங்கள் இதுபற்றி விசாரிக்கிறோம்� அவ்வளவுதான்!

source:athirvu

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

அதிர்சி தகவல்: 91 பேரைக் கொன்ற இடத்தில் இருந்து நீந்தித் தப்பிய ஈழத் தமிழ் பெண் !

>> Tuesday, July 26, 2011

    91 பேரைக் கொன்ற இடத்தில் இருந்து நீந்தித் தப்பிய ஈழத் தமிழ் பெண் !



கடந்த 22ம் தேதி நோர்வே தலைநகர் ஒஸ்லோவிலிருந்து 50 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள உட்டோயா தீவில் ஆளும் கட்சியின் இளம் உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் போலிசார் போல வேடமிட்டு துப்பாக்கி ஏந்திவந்த ஆயுததாரி இளையோர்களை நோக்கிச் சரமாரியாகச் சுட்டார். இதில் சுமார் 91 பேர் உயிரிழந்தனர் என்பது யாவரும் அறிந்த விடையம். ஆனால் அக் கூட்டத்தில் ஈழத் தமிழ் பெண் ஒருவரும் இருந்திருக்கிறார். அவர் தன்னை எவ்வாறு பாதுகாத்தால், ஆயுததாரி சுட்டபோது என்ன செய்தார் என்பதைக் கேட்கும்போது நாம் அதிர்சியில் உறைந்துபோனோம். அதிர்வு இணையம் சார்பாக அவரை நாம் தொடர்புகொண்டு மேலதிகத் தகவல்களைப் பெற்றுள்ளோம். குறிப்பிட்ட தீவில் பல நூற்றுக்கணக்கான இளையோர்கள் நின்றிருந்தவேளை ஆயுததாரி அவர்களை நோக்கிச் சுட்டு சுமார் 50 பேர் இறந்த பிற்பாடு ஆயுதத்தை ஒளித்துவைத்துவிட்டு உதவிசெய்யும் ஒரு பொலிசார் போல வந்து அனைவரையும் கட்டிடத்துக்குள் பாதுகாப்பாகச் செல்லுமாறு கூறியுள்ளார்.



இந் நபரின் கூற்றைப் பல இளையோர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் தலைதெறிக்க ஓடி மறைவிடங்களைத் தேடியுள்ளனர். அங்கே நின்றிருந்த நூற்றுக்கணக்கான இளையோர்களை இவர் கட்டிடத்துக்குள் போகச்சொன்னதன் அர்த்தம் என்ன என்று புரிகிறதா ? எல்லோரும் கட்டிடத்துக்குள் சென்றிருந்தால், தான் மறைத்து வைத்த ஆயுதத்தை எடுத்துவந்து கட்டிடத்துக்குள் புகுந்து அவர் தாக்கியிருப்பார். அப்படி என்றால் இன்னும் பலர் உயிரிழந்திருப்பார்கள். ஆனால் அதிஷ்டவசமாக அவர் கூற்றைப் பல இளையோர்கள் ஏற்கவில்லை. அது புத்திசாலித் தனம் இல்லை என பலர் எண்ணியுள்ளனர். ஆயுததாரி பொலீஸார் போல வேடமிட்டு அனைவரையும் கட்டிடத்துக்குள் செல்லுமாறு உத்தரவிட்டவேளை, குறித்த தமிழ் பெண் அவருடன் பேசியிருக்கிறார். யார் சுடுகிறார்கள் எதற்காகச் சுடுகிறார்கள் என இப் பெண் அவரையே கேள்விகேட்டும் உள்ளார். அவரோ எனக்குத் தெரியாது ஆனால் யாரோ சுடுகிறார்கள் என்று பதிலளித்துள்ளார்.

சொன்ன பேச்சை இளையோர்கள் கேட்காத பட்சத்தில் திரும்பவும் மறைவிடத்துக்குச் சென்று தனது துப்பாக்கியை எடுத்து அவர் இளையோர்களை நோக்கிச் சுட ஆரம்பித்துள்ளார். அது ஒரு தீவு என்பதால் நீந்தத்தெரிந்த பல இளையோர்கள் தண்ணீரில் குதித்து நீந்தித் தப்பித்துள்ளனர். இதனிடையே குறிப்பிட்ட ஈழத் தமிழ் பெண்ணும் இவரது துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிக்க ஏரிக்கரை நோக்கி ஓடியுள்ளார். இப் பெண்ணையும் ஆயுததாரி குறிவைத்துச் சுட்டுள்ளார். ஆனால் அவற்றில் இருந்து தெய்வாதீனமாகத் தப்பிய அவர் நீரில் குதித்துள்ளார். சாதாரணமாகவே ஐரோப்பாவில் காணப்படும் அனைத்துக் கடல், மற்றும் கடல் ஏரிகளின் வெப்ப நிலை என்ன என்று உங்களுக்குத் தெரியும். அதிலும் நோர்வே போன்ற குளிர் நாடுகளில் கடல் உறையும் நிலையில் குளிர் இருக்கும். நோர்வே நாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள் அதிகமாக இக் கடலில் குளித்துப் பழக்கப்பட்டதால், உறையும் குளிராக இருந்தாலும் அவர்கள் கடலில் நீந்த வல்லவர்களாக உள்ளனர். வெப்ப நாடுகளில் இருந்து வருவோர் இக் கடலில் குதித்தால் சில நொடிகளில் குளிர் தாக்கி இறக்கக்கூடும்.

தண்ணீரை உறையவைக்கும் குளிரில் அவர் சுமார் 1 கி.மீட்டர் தூரம் நீந்தியுள்ளார். மரணப் பயம் ஒரு புறம், தனது நண்பி மற்றும் நண்பர்கள் இறந்து கிடந்ததைப் பார்த்த அதிர்ச்சி ஒருபுறம் இருக்க அவர் கடலில் நீந்திய வண்ணம் இருந்திருக்கிறார். கரை எவ்வளவு தூரத்தில் இருக்கிறது , இல்லை எவ்வளவு நேரம் நீந்தவேண்டும் என்று கூடத் தெரியாத அத் தமிழ் பெண் தனது நம்பிக்கையை மட்டும் விட்டுவிடவில்லை. இதற்கும் மேலும் ஒரு கொடுமையும் அரங்கேறியுள்ளது. கடல் ஏரியில் நீந்தும் வேளை அவ்வளியே ஒரு படகு அவரை நோக்கி வந்துள்ளது. தன்னை நோக்கிச் சுட்ட ஆயுததாரி தனக்கு சூடு விளவில்லை என்பதனால் தன்னைத் திரத்திக்கொண்டு படகில் வருவதை அவர் கண்டுள்ளார். அதாவது கடலில் குதித்து தப்பிக்கும் இளையோர்களையும் கடலில் வைத்து சுட்டுக்கொல்ல ஆயுததாரி படகில் வருவதாக நினைத்த அவர் நீருக்குள் இன்னும் மூழ்கி ஆழத்துக்குச் சென்றுள்ளார். சில வினாடிகள் கழித்து வெளியே வரும்போது, அவர் வேறு ஒருவர் படகில் செல்வதைப் பார்த்துள்ளார்.

இவர் தண்ணீரில் மூழ்கி ஆழத்துக்குச் சென்ற காரணத்தால் படகில் சென்றவர் இவரைக் காணவில்லை. கண்டிருந்தால் காப்பாற்றி இருந்திருப்பார். இப்படியும் ஒரு நிகழ்வா என அனைவரையும் உறையவைக்கும் நிலை அங்கே இருந்திருக்கிறது. இவை அனைத்தையும் தாங்கிக் கொண்டு தளராத உறுதியோடு அவர் இளைப்பாறி இளைப்பாறி நீந்த ஆரம்பித்துள்ளார். இறுதியில் சுமார் 1 கி.லோமீட்டர் நீந்தி ஒரு கரையை அடைந்துள்ளார். அங்கே நின்ற நோர்வே மக்கள் சிலர் அவரின் கரங்களைப் பற்றி வெளியே இழுத்து உதவிசெய்துள்ளனர். இப் பெண் துணிச்சலாகவும் விடா முயற்சியோடும் தன்னைக் காப்பாற்றியிருந்தாலும், தனது நண்பர்கள் இறந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. அத்தோடு தொலைக்காட்சியில் பார்த்தபோது போலீஸ் சீருடையில் தன்னோடு வந்து பேசிய ஆள் தான் அந்த ஆயுததாரி என்று அவர் தற்போது உறுதியாகக் கண்டறிந்துள்ளார். அவர் அடைந்துள்ள சோகங்களில் இருந்தும் அதிர்சியில் இருந்தும் அவர் விரைவில் மீண்டுவர உதவேண்டும்



source:athirvu

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

மாங்கொட்டையில் மாங்காய் பரிக்கும் மாயாஜாலம்(வீடியோ இணைப்பு)

>> Sunday, July 24, 2011

எத்தனையோ விதமான சாதனைகளையும் மாயாஜாலத்தையும் நாம் கண்டிருப்போம். ஆனால் இது சற்று வித்தியாசமானது, உலகத்தில் எந்தவொரு வித்தைக்காரர்களும் இதுவரை செய்யாத ஒரு வித்தையை இங்கு ஒருவர் செய்து காட்டுகின்றார்.
இந்தியாவை சேர்ந்த ஒருவரால் நிகழ்த்தப்பட்டுள்ளது. கண் இமைப்பொழுதில் மாங்கொட்டையில் இருந்து மாமரம் வரவழைத்து அதனை காய்க்கவும் வைத்துள்ளார் இவர்.




source:athirchi

StumbleUpon.com Read more...

வடக்கில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெற்றி

இலங்கை: வடக்கில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெற்றி 


கொழும்பு, ஜூலை.24: இலங்கை தமிழர்கள் பெருமளவில் வசிக்கும் வடக்குப் பகுதியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது.

வடக்கில் உள்ள 20 பிரதேச சபைகளில் 18 சபைகளையும் கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் நடந்த இரு சபைகளையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றி உள்ளது.

யாழ். மாவட்டத்தில் 3 நகரசபைகளுக்கும் 13 பிரதேச சபைகளுக்கும் கிளிநொச்சியில் 3 பிரதேச சபைகளுக்கும் முல்லைத்தீவில் ஒரு பிரதேச சபைக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் 2 பிரதேச சபைகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. திருகோணமலை மாவட்டத்தில் 3 பிரதேச சபைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.

யாழ். மாவட்டத்தில் 48 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரி இமெல்டா சுகுமார் அறிவித்தார். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 65 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன என்று அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். கிழக்கிலும் 60 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குப் பதிவு இடம்பெற்றது.

வன்னியில் சுமார் 30 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. படையினரின் கெடுபிடிகள், அச்சுறுத்தல்கள் மற்றும் லஞ்சம் கொடுத்தல் ஆகிய பல முறைப்பாடுகள் பதிவாகி இருந்த நிலையிலும் வாக்காளர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே தமது பெரும் ஆதரவையும் வழங்கி உள்ளனர்.

அரச தரப்பினரின் சட்டவிரோத செயல்பாடுகள், கடும் அச்சுறுத்தல்கள், அராஜகங்களின் மத்தியில் வடக்கில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்ட நிலையிலும் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்திருப்பது அவர்களின் தேசிய உணர்வைக் காட்டுகிறது என்று கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்தார்.

வாக்கு எண்ணும் நிலையங்களில் இருந்து இன்று கிடைத்த தகவலின் படி வடக்கில் 18 சபைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வென்றது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி நெடுந்தீவு பிரதேச சபை தவிர்த்த ஏனையவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமாகின.

source:dinamani
--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

நித்தியானந்தாவின் புதுக் காம லீலை !




நித்தியானந்தா , தானும் ரஞ்சிதாவும் படுக்கை அறையில் ஒன்றாக இருந்த காட்சிகள் அனைத்தும் பொய் என்கிறார். அவ்வளவும் கிராபிக்ஸாம். தான் இருந்தது படுத்தது நடந்தது எல்லாத்தையும் வெவ்வேறா ரக்கோட் செய்து பின்னர் ரஞ்சிதாவின் காட்சிகளோடு பொருத்தியுள்ளனராம் என்று சொல்கிறார். இலங்கை அரசு சனல் 4 வீடியோ பொய் என்று சொன்னது போல இவரும் இது ஒரு கிராபிக்ஸ் என்கிறார். அதற்கு அவர் சொல்லும் வார்த்தைகளும், அதுக்கு கவுண்டர் செந்தில், சந்தானம், விவேக் இருந்தா எப்படி பதில் சொல்லி இருப்பாங்க எண்டு ஒரு நகைச்சுவைக் காட்சி இங்க வீடியோவா இருக்கு. நிச்சயம் பார்க்கவேனும் சார் ! பாருங்க !




source:athirvu

StumbleUpon.com Read more...

நித்தி - ரஞ்சி! வீடியோ சேலஞ்ச்

>> Thursday, July 21, 2011




StumbleUpon.com Read more...

மாறிய மக்கள்! மாறாத அம்மா?

>> Wednesday, July 20, 2011

 
 
சில வழக்கு மொழிகள் பழமொழிகளாக, பொன்மொழிகளாக உருபெறுதல் காலம் தரும் பதிவாகும். 
'அம்மா திருந்த மாட்டார்' எனக் கூறிய பொழுதெல்லாம் நம்மை விரோதியாய் நோக்கியவர்கள் சொல்கிறார்கள்: 'அம்மா, எந்தக் காலத்திலும் திருந்தவே மாட்டார்' என்று.
அம்மா பதவியேற்பு விழா யாருக்கு மகிழ்ச்சி என விழாவை தொலைக்காட்சியில் உற்றுநோக்கியவர்கள் அறிவார்கள். ஆர்.எஸ்.எஸ்.சின் தமிழக இந்துத்துவா தீவிர ஆதரவாளர் 'துக்ளக்' சோவிற்கு மகிழ்ச்சி. அவரது தோழர் அரசு தீவிரவாதத்தை குஜராத்தில் அரங்கேற்றிய நரேந்திர மோடிக்கு மகிழ்ச்சி! 
நாம் ஒரு பிரபல நாளிதழில் கட்டுரையாளராக எழுதும்போது அடிக்கடி குறிப்பிடுவதுண்டு:
'அவாள் மடி பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது'.
ஆம்! அம்மாவின் மனுதர்ம, பார்ப்பன சித்தாந்தம் ஐந்தாண்டுகளுக்கு இனி மறைமுகமாக அமல்படுத்தப் படும். முதலடியே முதல் கோணலானது நம்பி வாக்களித்த மக்களுக்கு அம்மா செய்த துரோகமாகும். சமச்சீர் கல்வி மறு பரிசீலனை செய்யப்படும் என்பதை ராஜாஜியின் குலக் கல்வி திணிப்பு போன்ற பார்ப்பன இனச் சதியின் நூற்றாண்டு கால போராட்ட தொடர்ச்சியாக இனம் காணலாம்.
பொதுவாகவே பத்திரிகையாளர்கள், கட்டுரையாளர்கள் பொதுமக்களிடம் நெருங்கிப் பழகி, செய்திகளை, நாட்டு நடப்புகளை விசாரிப்பதுண்டு.
நாம் விசாரித்த வகையில் டோக்கன் பெற்று, தேர்தல் நடைமுறை அமல்படுத்தப்பட்ட காரணத்தால், வழங்கப் படாத இலவச தொலைக்காட்சி பெட்டிகள் குறித்த ஆதங்கங்கள், கோபங்கள் நியாயமானதே. மக்கள் சாலை மறியலுக்குத் தயாராவதாக தகவல்கள்!
சூன் 15 இல் பள்ளி திறக்கப்பட்ட நிலையில் பள்ளி அறைகளில் அடைப்பட்டுள்ள தொலைக்காட்சி பெட்டிகளுக்கு விடுதலை இல்லை என்பதே சறுக்கலின் ஆரம்பமாகும். 
அம்மா எப்பொழுதுமே கடந்த கால ஆட்சியின் திட்டங்களை தொடர மாட்டார் என்பதே 'திருந்த மாட்டார்' என்ற வாதத்தின் நிலைத்த தன்மையாகும். 'போட்டாயே ஓட்டு, பாடுபடு' என்பதே தமிழகத்தில் அடிக்கடி ஒலிக்கப்படுகிற சொற்களாகும்.
ஆளும் அம்மாவுக்கு ஜோதிடம், வாஸ்து, எண் ஜோதிடம் ஆகியவற்றில் தனிப்பட்ட முறையில் நம்பிக்கை இருக்கலாம். அதற்காக 1200 கோடி செலவில் கட்டப்பட்ட தலைமை செயலகத்தைப் பயன் படுத்தாமல் விடுவது மக்களின் வரிப் பண விரயம் என்பதை தவிர வேறென்ன?
இறையாண்மை உள்ள குடியரசில் அரசு நிலைத்த தன்மை மிக்கது. மக்கள் பிரதிநிதிகளான அரசியல்வாதிகள் எனும் புதுப்புது கொள்ளைக்காரர்கள் வருவார்கள், போவார்கள். அரசு அதிகாரிகள் ஆளும் கட்சிகளுக்கு விசுவாசமாக இருந்து, தமிழகத்தில் மட்டுமே இரண்டு அணிகளாகப் பிரிந்து இருப்பது சாபக்கேடு. அது தமிழரின் தலை எழுத்து!
தமிழக சட்ட சபையில் அமைக்கப்பட்ட நூலகப் புத்தகங்கள் குப்பைபோல லாரிகளில் ஏற்றப்பட்டு, அள்ளி செல்லப்பட்டு எங்கோ குவிக்கப்பட்டதே! இருக்கைகள் ராசிப்படி சட்டசபையில் மாற்றி அமைக்கப்பட்டதே! ஏன் எனில் ஜோதிட ஆலோ சனை. மக்களின் வரிப் பணம். வீண்... வீண்...!
சென்னை நகர மக்களுக்கு பெரிய தலைவலி போக்குவரத்து நெரிசல். துணை நகர திட்டமும் பா.ம.க.வால் முடக்கப்பட்ட நிலையில் மெட்ரோ இரயில் பெரும் ஆறுதலாக அடையாளப்படுத்தப் பட்டது. அம்மா அதற்கும் 'ஆப்பு' வைத்து விட்டார். அதிகாரிகள், உலக வங்கி என எல்லா ஆய்வுகளும் குப்பைக்கு பறந்து விட்டது. அம்மாவைப் போல மக்களும் ஹெலிகாப்டரில் பறந்து பழகுவது மிக நல்லதே.
அதிகாரிகள் சட்ட வரம்புக்கு உட்பட்டு, செயல் பட்டு, ஆளும் கட்சிக்குப் பணியாமல், ஜால்ரா போடா மல் திட்டங்களுக்கு 'கலைஞர்', 'ஜெயலலிதா' என்ற பெயர்களை சிபாரிசு செய்யாமல் 'அரசின் திட்டங் கள்' என்ற வகையில் செயல்பட வேண்டும்.
ஓர் அரசின் மூளையாகச் செயல்பட்ட தலைமை செயலாளர் டேட்டா சென்ட்ருக்கும், உளவுத்துறை டி.ஜி.பி. அகதிகள் முகாமிற்கும் தூக்கியடிக்கப்படுவது தமிழகத்தில் மட்டுமே நடக்கும் தி.மு.க., அ.தி.மு.க. அரசியல் என்பதை கல்வெட்டில் பதித்தேயாக வேண்டும்.
பார்ப்பன பத்திரிகைகள் சட்டம் - ஒழுங்கு என்ற பல்லவியை தூக்கி அம்மாவை அரியாசனமேற்றினர். சட்டம் - ஒழுங்கு என்பது சமூக ஒழுக்கங்களின் அடிப்படையிலானவை. அவை காலத்திற்கேற்ப பொருளாதார சமன்பாட்டு நிலை இல்லா காரணங் களால் தனி மனிதர் களால் ஏற்படுத்தப்படுகிற குற்றமாகும். விலைவாசி, சட்டம் - ஒழுங்கு என் பதில் எந்த ஆட்சியும் மாயங்களை, ஓரிரவு மாற்றங்களை கொண்டுவர முடியாது என்பது எதார்த்தம். அம்மா, அய்யா என யாரும் விதி விலக்கில்லை.
ஒரு புதிய ஆட்சியை மூன்று மாதங்களுக்கு விமர்சிக்க கூடாது என்பது தார்மீக கோட்பாடாகும். ஆனால் தமிழக புலனாய்வு வார இதழ்கள் புதிய அரசின் இரண்டாவது வாரத்தில் ஒரு கட்டுரைக்கு இப்படித்தான் தலைப்பிட்டிருந்தன ('நக்கீரன்', 'ஜூனியர் விகடன்'): 'கஞ்சா படலத்தின் முதல் தொடக்கம் ஆரம்பம்' 'ஐயோ, நாடு எங்கே போகப் போகிறது?'
அம்மா பாண்டிச்சேரி ரங்கசாமியிடம் கூட்டணி வைத்து, ஆட்சியில் பங்கு தராத காரணத்தால் கண்டனம், கோப அறிக்கைகள். கேரள முதல்வர் முல்லைப் பெரியாறில் புதிய அணை என அறிவித்து விட்டார். பக்கத்து மாநிலங்களிடம் அம்மா சுமூக உறவு பேண மாட்டார் என்ற சொற்றொடரும் உண்மையாகப் போகிறதா? காவேரி பிரச்சனையை எப்படி கையாளப் போகிறார்? அம்மா ஆட்சியின் திட்டங்கள் குறித்து ஆளுநர் உரைக்கு பின் அலசு வதே பொருத்தமாக இருக்கும். 'அம்மா திருந்த மாட்டார்' என்ற வார்த்தையை இனியாவது மாற்று வாரா? காலமே, அவரது நடவடிக்கைகள், செயல்பாடு கள், திட்டங்களுக்கு உரிய பதில் கூறும்.

source:namvalvu

StumbleUpon.com Read more...

தமிழ் மண்ணிற்கும் தமிழ்த்தாய்கும் என்றும் துரோகம் இழைக்கமாட்டோம்.

 

கிளிநொச்சியில் நடைபெற இருந்த மகிந்தவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஒரே மேடையில் இசை நிகழ்ச்சி நடாத்துவதற்கு தமிழகத்தில் இருந்து சென்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள தமிழ் உணர்வாளர்களது வேண்டுகோள்களை ஏற்று கொழும்பில் இருந்து திரும்ப உள்ளதாக மனோ தெரிவித்துள்ளார். தமிழ்த்திரையுலக பின்னணிப் பாடகர்களான மனோ சுசித்திரா கிறிஸ் ஆகியோர் கொலைவெறியன் மகிந்தராசபக்சவுடன் ஒரே மேடையில் ஏறி இசைநிகழ்ச்சியில் கலந்து கொள்ள கிளிநொச்சி சென்றுள்ளதாக பரபரப்பாக தகவல்கள் வெளிவந்திருந்தது. இதனையடுத்து அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த தமிழ் உணர்வாளர்கள் துரிதமாக களத்தில் இறங்கி சிங்களனின் சதி முயற்சியை தடுத்துநிறுத்தியுள்ளனர்.

இலங்கை சென்றிருந்த தமிழக பாடகர்களை தனது வலையில் சிக்கவைக்க மகிந்தர் போட்ட நாடகத்தை நேற்றைய தினம் அதிர்வு இணையம் வெளியிட்டது. இதனை அடுத்து தாய் தமிழகத்தில் உள்ள பல உணர்வாளர்கள் பாடகர்களைத் தொடர்புகொண்டு நிலையை எடுத்துரைத்துள்ளனர். இதன் காரணமாக தாம் உடனே தமிழகம் திரும்ப இருப்பதாக மனே சற்று முன்னர் தெரிவித்துள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. மதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ நாம்தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் உள்ளிட்ட தமிழ்த்தேசிய உணர்வு சக்திகள் இவர்களை தொடர்பு கொண்டு தமது எதிர்ப்பினை நேரடியாகத் தெரிவித்துள்ளதுடன் இந்த நிகழ்வின் பின்னணியில் தீட்டப்பட்டிருக்கும் சதியைப்பற்றியும் எடுத்துக் கூறியுள்ளனர். 

இதனை ஏற்றுக் கொண்ட இவர்கள் கொழும்பில் இருந்து உடனடியாக நாடு திரும்ப உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கொழும்பில் இருந்து ஊடகங்களிற்கு தகவல் தெரிவித்த பின்னணிப்பாடகர் மனோ அவர்கள் தமிழ் மண்ணிற்கும் தமிழ்த்தாய்கும் எப்போதும் துரோகம் செய்யமாட்டோம் என தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வு தொடர்பாக தமக்கு முழுமையான விபரங்கள் தெரியப்படுத்தப்படவில்லை எனவும் முத்தவர்களது(தமிழ் உணர்வாளர்கள்) வேண்டுகோளை ஏற்று கிளிநொச்சி செல்லாது தமிழகம் திரும்ப உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கலையரங்கம் திறப்பு விழா நிகழ்ச்சியொன்றில் பாடவேண்டும் என்று சொல்லித்தான் எங்களை அழைத்து வந்தனர். இங்கு வந்த பிறகுதான் பிரச்சினை எங்களுக்கு தெரிய வந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என்று நடிகர் சங்கத்தினர் தொடர்பு கொண்டு பேசினார்கள்.

இதையடுத்து அந்த நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டோம். விமான நிலையத்துக்கு திரும்பிக்கொண்டு இருக்கிறோம். இன்று இரவு அல்லது நாளை காலை விமானத்தில் சென்னை வந்து விடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

யாழிலும் கிளிநொச்சியிலும் தமிழக பாடகர்கள் வருவதாக இராணுவம் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தது மண்கவ்வியுள்ளது.


source:athirvu


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

ரஞ்சிதா தான் படுக்கை அறை காட்சியை எடுத்தது

>> Tuesday, July 19, 2011

படுக்கை அறை காட்சியை எடுத்தது ரஞ்சிதா தான்: நித்தியின் வழக்கறிஞர் ஸ்ரீதர்

2010 மார்ச் முதல் வாரத்தில் வெளியான நித்யானந்தா - நடிகை ரஞ்சிதா சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகள் பெரும் அதிர்வை உண்டாக்கின. இதையடுத்து நித்யானந்தா தலைமறைவானார். பின்னர் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளியே உள்ள நித்யானந்தா கடந்த 13.07.2011 அன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். 


அப்போது பேசிய நித்யானந்தா நக்கீரன் உள்ளிட்ட சில ஊடகங்கள் வழக்கறிஞர் ஸ்ரீதர் மூலம் பணம் கேட்டு மிரட்டியதாக பொய் குற்றச்சாட்டை கூறினார்.


இதையடுத்து, 'நக்கீரன் வெளியிட்டது உண்மையான வீடியோ காட்சிகள்தான் என்பதில் உறுதியாக இருக்கிறோம். சட்டப்பூர்வமாகவும் இதனை நிரூபிப்போம். வீடியோ காட்சிகள் போலியானவை என்று சொல்லும் நித்யானந்தாவும் ரஞ்சிதாவும்  நீதிமான்கள், சட்ட வல்லுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தடயவியல் நிபுணர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 100 பேர்  முன்பாக  இந்த வீடியோ காட்சிகள் போலியானவை என்பதை நிரூபிக்கத் தயாரா என்று நக்கீரன் பகிரங்கமாக சவால் விடுகிறது. 


இந்த சவாலை எதிர்கொண்டு, தங்களின் பரிசுத்தத் தன்மையை நிரூபிக்க நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் தயாரா?' என்று நக்கீரன் கூறியிருந்தது.


இந்நிலையில் சென்னையில் 18.07.2011 அன்று செய்தியாளர்களை சந்தித்த நித்யானந்தாவின் வழக்கறிஞராக இருந்த ஸ்ரீதர், 


எனக்கும் நக்கீரனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நித்யானந்தா தொடர்பான வழக்கை நான்தான் நக்கீரன் மீது தொடர்ந்தேன். நான் எந்தக் கட்சியையும் சாராதவன். நித்யானந்தா எனக்கு வந்து ஒரு கிளைண்ட். 


நித்தியானந்தாவுக்கு யாரோ தவறான ஒரு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்கள். தேவையில்லாமல் அவர் நக்கீரன் மற்றும் சில ஊடங்களை மட்டும் குற்றம் சாட்டியிருக்கிறார். அன்றைக்கு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உள்பட அனைத்து ஊடங்களும் நித்யானந்தா பற்றிய செய்திகளை வெளியிட்டது. யாரும் நித்யானந்தாவை மிரட்டவில்லை. 


இந்த சிடி விஷயம் பற்றி தெரிந்தது 5 பேர்தான். நித்யானந்தா, ரஞ்சிதா, லெனின் தர்மானந்தா, ஆர்த்திராவ். நித்யானந்தா என்னிடம் சொல்லும்போது, சிடி உண்மையானது என்றார். அப்போது அட்வைஸ் பண்ணினோம். உண்மையான சிடியாக இருந்தால் தாமதப்படுத்த வேண்டாம். கன்சல்டிங் பாட்னர் என்று சொல்லிவிட்டு கேஸில் இருந்து தப்பிக்க பாருங்க. அதைவிட்டுட்டு ரொம்ப டீப்பா போனீங்கன்னா டிரபுள் வரும். அதற்கேற்ற மாதிரி அவர் ஒத்துக்கிட்டார். 


இதையடுத்து ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் சிடியில் இருந்தது நான்தான் என்று ஒப்புக்கொண்டார். அப்போது யோக நிலையில் இருந்ததாக கூறியிருந்தார். அதைப்போல ரஞ்சிதாவும், ஆமாம் நான் சாமிக்கு சேவை செய்வேன் என்று பேட்டி கொடுத்தார். 

தற்போது சிடி பொய் என்று கூறுகின்றனர். இது வழக்கை திசை திருப்பும் செயல். அந்த சிடியை பார்த்தால் நித்யானந்தா எழுந்து கையை நீட்டி அங்கபாரு என்று சொல்லும்போது, ரஞ்சிதா அதுவெல்லாம் ஒன்றும் இல்லை படு என்று சொல்லுகிற மாதிரி இருக்கும். அதை உன்னிப்பா கவனித்தால் தெரியும். கண்டிப்பா ரஞ்சிதா படுக்கை அறை காட்சியை, போக்கஸ் லைட் நடுவில் எடுத்திருக்காங்க அப்படியின்னா வேர்க்க விறுவிறுத்துதான் எடுத்திருப்பாங்க. 

 

 

அப்போது நான் வழக்கறிஞராக சொல்லிவிட்டேன். ரஞ்சிதாதான் எடுத்திருக்காங்க. ரஞ்சிதாவிடம் சரண் அடைவதுதான் பெஸ்ட். ரஞ்சிதாவுக்கு பணத்தை செட்டில் செய்து நித்யானந்தா அந்த அட்வைஸை மட்டும் கரெக்டா செய்துவிட்டார் என்று கூறினார்


source:nakkheeran


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

தொப்புள் தெரிய தங்கள் அங்கங்கள் குதித்தாட நடப்பதில் அவர்களுக்கு அப்படி ஒரு பெருமை.

>> Sunday, July 17, 2011


பட்டாம்பூச்சிகளின் கதை! (5)

"ஹலோ... உங்களது கடிதங்கள், விழிப்பூட்டுவதாய் உள்ளன...' என, பெற்றோரும், "இதெல்லாம் தெரியும்... வேற எப்படில்லாம் ஏமாத்துவாங்க; அதையும் எழுதுங்க...' என்றும், "எங்க கதையை எழுதுங்க...' எனவும், ஏகப்பட்ட கடிதங்கள்...
"ஏகப்பட்ட பிரச்னைகள்; அப்பப்பா... பெண் குழந்தைகள் பிறந்தாலே பயமா இருக்கு. இவர்களை வளர்த்து ஆளாக்கி, நல்ல முறையில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பதை உங்களின் அனுபவ முத்திரைகளைப் படித்தபின், பயம் அடிவயிற்றை கிள்ளுகிறது...' என, கடிதம் எழுதியுள்ள தாய்மார்கள் அதிகம்.
உங்களிடம் விழிப்புணர்வு ஏற்படுவது குறித்து, என் மன பாரம், சற்று இறங்கியுள்ளது.
இந்த வாரம், என், "பியூட்டி பார்லர்' தோழி சொன்ன சேதியைச் சொல்லப் போகிறேன். இந்த விபரீத கலாசாரம் எல்லாம், மேலை நாட்டில் இருந்து, இங்கு பரவியுள்ளது. நீங்கள் எல்லாம் உஷாராக இருக்க வேண்டும் என்பதற்காக இதை எழுதுகிறேன்...
தங்கள் செல்ல மகள்களுடன், பியூட்டி பார்லருக்கு வரும் அம்மாக்களில் பலர், "என் மகளுக்கு மார்பில் சரியான வளர்ச்சி இல்லை... என்ன செய்வது?' என்று கேட்கின்றனராம்.
தோழி சொல்கிறாள்...
இதற்காக இவர்கள் வந்து ஆலோசனை கேட்க வேண்டிய அவசியமே இல்லை. காரணம், அவர்கள் செல்ல மகள்களே, தங்கள் தோழிகளிடம், "டிஸ்கஸ்' செய்து, அதற்கான வழிகளை செய்து கொள்கின்றனர். இப்போதெல்லாம் கல்லூரி மாணவியர், யாருக்காவது, "பிளே கிரவுண்ட்' போல் இருப்பதை பார்த்திருக்கிறீர்களா? அதெல்லாம் அந்தக் காலம்.
இந்தக் காலத்து இளசுகள், பார்ப்பதற்கு ஒடிந்து விழுவது போல இருப்பர்; ஆனால், முன்புறமும், பின்புறமும், "அபரிமிதமாக' இருக்கும். "இவர்களுக்கு மட்டும் அந்த இடத்தில் எப்படி இவ்வளவு வளர்ச்சி...' என்று யோசிப்பீர்கள் அல்லவா? அதுக்கு இதுதான் காரணம்...
முன்பெல்லாம், நடிகைகள் மட்டுமே போட்டுக் கொண்ட ஹார்மோன் இன்ஜெக்ஷன்களை, இன்று, கல்லூரி மாணவியர் சர்வ சாதாரணமாக, "யூஸ்' பண்ண ஆரம்பித்து விட்டனர். பணக்கார பொண்ணுகளைப் பற்றி கேட்கவே வேண்டாம்... ஹாஸ்பிடல் சென்று, பணத்தை கொடுத்து, இந்த ஊசியை போட்டுக் கொள்கின்றனர். பிறகென்ன... பாதி வயிறு தெரியும்படி டைட் பனியன் போட்டு, தொப்புள் தெரிய தங்கள் அங்கங்கள் குதித்தாட நடப்பதில் அவர்களுக்கு அப்படி ஒரு பெருமை.
அந்தக் காலத்துப் பெண்கள், தங்கள் உடலழகை மூடி மறைத்தனர்; ஆனால், இன்றோ, "அதை' வெளிச்சம் போட்டு காட்டுவதில் அத்தனை பெருமை அடைகின்றனர். அத்துடன், கல்லூரி மாணவியரிடம், "கொஞ்சம் அடக்கமா டிரெஸ் பண்ணுங்கப்பா!' என்று சொல்லிப் பாருங்களேன். "ஏன்... எங்களோட சொத்து அது... எங்களுக்கு இருக்கு, நாங்க காட்றோம்; இதுல என்ன தப்பு... அழகை ரசிச்சிட்டு போங்கப்பா!' என்று, கூலாக சொல்வதாகச் சொன்னாள் தோழி.
எனக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது.
விளைவு?
இளைஞர்களும், இவர்களை அனுபவித்து, ரசிச்சிட்டு போய் விடுகின்றனர். இதனால், இயற்கையிலேயே சாதாரண வளர்ச்சி உள்ள பெண்கள் கூட, தங்களுக்கு ஓன்றும் இல்லாததை கேவலமாக நினைத்து, இப்படி, "ஹார்மோன் இன்ஜெக்ஷன்' போட்டுக் கொள்ள போக, ஒரு பெண்ணின் வாழ்க்கையே பாதித்து விட்டது. அவளது உடம்பில் அந்த, "ஹார்மோன் இன்ஜெக்ஷன்' ஏடா கூட விளைவுகளை ஏற்படுத்த, இன்று பூதாகரமான பெண்ணாக, ஆங்காங்கே சதை போட்டு, அவளது வாழ்க்கையே வீணாகி விட்டது.
எல்லா பெண்களுக்கும், "ஹார்மோன் இன்ஜெக்ஷன்' ஒத்துப் போகும் என்று சொல்ல முடியாது; ஆனால், "கிட்னி'யையே திருடி விற்கும் மனசாட்சி அற்றுப் போன டாக்டர்கள் பலர், இதனால் ஏற்படும் ஒவ்வாமையை சொல்லாமல், ஊசி போட்டு, காசு பார்ப் பதிலேயே குறியாக இருக் கின்றனர்.
நடிகை களில் ஒருவர், பேபி ஆர்ட்டிஸ்ட்டாக இருந்து, டீன் - ஏஜ் பருவம் அடைந்ததும், பேராசை பட்டு, இந்த, "ஹார்மோன் இன்ஜெக்ஷன்' போடப் போக, அது, அவரை, குண்டு பூசணிக்காய் நடிகை ஆக்கி விட்டது நாம் எல்லாரும் அறிந்ததே. பாவம் அந்த நடிகை... கிழ வயது நடிகை எல்லாம், மேக் - அப் போட்டு, இள வயது நடிகையாக வேஷம் கட்டும் இந்த காலக் கட்டத்தில், இவர் இள வயதிலேயே, அம்மா, அண்ணி வேஷம் போட்டு, பெரிய திரையில் வலம் வந்தார். அதுவும் சரி வராமல், இப்போது சின்னத் திரையில், அம்மா, அண்ணி வேஷத்தில் வலம் வருகிறார்.
எதற்கு இந்த விபரீதங்கள்... எத்தனை நாட்களுக்கு இந்த அழகு... நெஞ்சை நிமிர்த்தி திரிந்தவர்கள் எல்லாம், ஒரு குழந்தை பிறந்ததும் தொங்கிப் போய், சின்ன வயது கிழவிகள் போல், இளம் தாய்மார்கள் திரிவது மிகவும் வேதனையான விஷயம்.
"ஒரு காலத்தில், நான் இப்படிப்பட்ட அழகி... அப்படிப்பட்ட அழகியாக இருந்தேன்...' என்று, சொல்லிக் கொண்டு திரியும் பல தாய்மார்கள், இன்று, எல்.கே.ஜி., குழந்தையை கையில் பிடித்து, தொங்கிப் போன உடலுடன், தொப்பையும், இடுப்பு முழுவதும், "டயர்' போன்ற சதையுடன் வருவதைப் பார்க்க பரிதாபமாக உள்ளது.
அப்புறம், இவர்களது கணவருக்கே இவர்கள் மீது, "இன்ட்ரஸ்ட்' இல்லாமல் போய் விடுகிறது. அவர்கள் வழக்கம் போல், கொடியிடை பெண்களை கண்டதும், சபலப்பட ஆரம்பித்து விடுகின்றனர்.
இயற்கை கொடுத்த உடலை ஒழுங்கா பராமரித்தாலே, என்றுமே அழகாக இருக்கலாம். வத்தலும், தொத்தலுமாக இருந்தவர்கள் எல்லாம், திருமணத்திற்கு பிறகு, அழகாக, பூசி மெழுகினாற் போல் ஆகி விடுவதை நாமே பார்க்கிறோம்.
குறுகிய காலத்து இளமை பருவத்தில், தேவை இல்லாத காரியங்களில் ஈடுபட்டு, ஒரு குழந்தைக்கு பிறகு, எந்த அங்கங்கள் கவர்ச்சியாக இருந்ததோ, அந்த அங்கங்கள் பொலிவிழந்து, ஆலிலை வயிறு, அழகிய தொப்புள் என திரிந்த காலம் போக, இடுப்பைச் சுற்றி ஒரு கிலோ, "டயர்' மற்றும் தொப்பை வயிற்றுடன், முகம் மட்டும் அழகாக, ஆனால், இளம் கிழவிகளா இருப்பது தேவையா? யோசியுங்கள் பட்டாம்பூச்சிகளே! 
— தொடரும்.

- ஜெபராணி ஐசக்
 

source:dinamalar

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP