சமீபத்திய பதிவுகள்

தாய்ப்பால்: உணர்ச்சிகரமான ஓர் உண்மைக் கதை

>> Tuesday, August 30, 2011


குளுக்கோஸ், ரத்தம் எல்லாம் ஏத்தினோம்... ஏகப்பட்ட மருந்துகளையும் கொடுத்தோம். பொதுவா அரசு மருத்துவமனையில வெளியில இருந்து மருந்துகளை வாங்கிக் கொடுக்கக் கூடாது. இந்தக் குழந்தைக்காக மேலிடத்துல ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கி, அரசு செலவுலேயே வெளியில இருந்து மருந்துகள வாங்கிக் கொடுத்தோம். ஆனாலும், குழந்தையோட உடம்புல முன்னேற்றம் இல்லை. இறுதியா, அந்த சிசுவை எப்படியும் காப்பாத்தியே ஆகணும்ங்கற பொறுப்போட ஜூனியர் டாக்டர்ஸ், ஸ்டாஃப் நர்ஸ்கள், டிரெய்னிங் நர்ஸ்கள்னு எங்க டீம் போட்ட மீட்டிங்லதன்... 'தாய்ப்பாலை இரவல் வாங்கிக் கொடுக்கலாம்'ங்கற முடிவுக்கு வந்தோம்.



'தாய்ப் பாலுக்கு ஈடு இணையில்லை' என்பது உலகறிந்த விஷயமே! அதற்கு மகுடம் சூட்டுவதுபோல... பல தாய்களிடம் இருந்து பெறப்பட்ட பால் மூலமாக... ஒரு குழந்தையை மறுபிறவி எடுக்க வைத்து, தாய்ப்பாலின் பெருமையை மேலும் ஒரு படி உயர்த்திப் பிடித்திருக்கின்றனர் திண்டுக்கல், அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவக் குழுவினர்!


திண்டுக்கல் மாவட்டம், தவசிமேடை கிராமத்தைச் சேர்ந்தவர் நீதிமேரி. கூலி வேலை செய்துவரும் இவருக்கு, கொசவபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. ஆஷா என்று பெயரிடப்பட்ட அந்தக் குழந்தை, தாய்ப்பால் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகளால் பிறந்ததிலிருந்தே நோய்களால் தாக்கப்பட்டு, சாவின் விளிம்புக்கே சென்றுவிட... கடைசிக் கட்டத்தில் ஆஷாவைக் காப்பாற்றியிருக்கிறது, தாய்(களின்) பால்!
ஏழு மாதக் குழந்தை ஆஷாவை கைகளுக்குள் அடைக்கலப்படுத்தியபடி  அமர்ந்திருந்த நீதிமேரி, ''தாய்ப்பால் போதாதால, ஆறாவது நாள்ல இருந்தே புட்டிப்பால் கொடுக்க ஆரம்பிச்சுட்டோம். நாப்பத்தி ரெண்டாவது நாள்ல வயித்துப் போக்கு ஆரம்பிக்க, திண்டுக்கல், கெவருமென்ட் ஆஸ்பத்திரியில சேர்த்தோம். ரத்தம், குளுகோஸ்னு ஏத்தியும் ஒண்ணும் சரியாகல. என்ன ஆகப்போகுதோனு தவியா தவிச்சுக்கிடந்தேன்.
என் நிலையைப் பார்த்து ரொம்பவும் பரிதாபப்பட்ட டாக்டர் ஜெயின்லால் பிரகாஷ், 'பக்கத்து பெட்கள்ல குழந்தை பெத்திருந்தவங்ககிட்ட இருந்து தாய்ப்பாலை வாங்கிக் கொடுக்கலாம்'னு சொன்னார். இப்போ குழந்தை உயிர் பிழைச்சுக் கிடக்கறதுக்கு அவர்தான் முக்கிய காரணம்! வெவரமெல்லாம் அவர்கிட்டயே கேட்டுக்கோங்க'' என்றார் கண்கள் கலங்கியபடி.
அரசு மருத்துவமனையின் குழந்தைகள் நல தலைமை மருத்துவர் ஜெயின்லால் பிரகாஷிடம் பேசினோம். ''நீதிமேரி, ரொம்ப கஷ்டப்படற குடும்பம். ஊட்டம் பத்தாததால அவங்களுக்கு போதுமான அளவு தாய்ப்பால் சுரக்கல. குழந்தைக்கு அடிக்கடி வயித்துப் போக்கும் ஏற்பட, குழந்தை பத்தின கவலையால தாய்ப்பால் ரொம்பவும் சுண்டிப் போச்சு. தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஆகவே... நோய்க்கிருமிகளோட தாக்கம் அதிகமாகி, ரத்தத்துல கலந்து 'செப்டிமீசியா ஸ்டேஜு'க்கு வந்துடுச்சு குழந்தை. இறுதியா, 'மராஸ்மிக் ஸ்டேஜ்'ல, உடம்புல உயிர் ஒட்டிக்கிட்டு இருந்ததுனுதான் சொல்லணும்.
வார்டுல குழந்தை பெற்றிருந்த எல்லா தாய்மார்கள்கிட்டயும் குழந்தை ஆஷாவோட நிலையையும், தாய்ப்பாலோட மகத்துவத்தையும் எடுத்துச் சொல்லி புரிய வெச்சோம். சிசேரியன் பண்ணினவங்க, குழந்தை சரியா பால் குடிக்காம இருக்கிற தாய்மார்கள், போதுமான அளவைவிட அதிகமா பால் சுரக்கிற தாய்மார்கள்னு எல்லாரும் சந்தோஷமா பாலை எடுத்துத் தர ஆரம்பிச்சாங்க. ரெண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை தாய்ப்பாலை கொடுக்க ஆரம்பிச்சோம். நாலஞ்சு நாள்லயே குழந்தை தேறிடுச்சு! பல தாய்களோட பால் மூலமா... வைட்டமின், புரோட்டீன்னு எல்லாச் சத்தும் கிடைச்சதுல... இப்ப முழுசா குணமாகி நல்ல ஆரோக்கியமா இருக்கு குழந்தை'' என்று நிம்மதி பெருமூச்சு விட்டபடி சொன்ன டாக்டர் ஜெயின்லால் பிரகாஷ், நிறைவாகச் சொன்னது... ஒவ்வொரு பெண்ணும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம். அது...
''இந்தக் குழந்தை பிழைச்ச விஷயத்தை 'மிராக்கிள் ஆஃப் பிரெஸ்ட் மில்க்'னுதான் சொல்லணும். 'தாய்ப்பால், இத்தனை சக்தி வாய்ந்ததா!'னு மத்த தாய்மார்கள் எல்லாம் அதோட அற்புதத்தை நேரடியா பார்த்து முழுமையா உணர்ந்தாங்க. இப்போ இருக்கிற இளம் தாய்மார்களும், அமிர்தமா இருக்கற தாய்ப்பாலோட மகிமையைப் புரிஞ்சு, உயிர் காக்கும் அந்த விலையில்லாத மருந்தை வீணாக்காம கொடுத்து, குழந்தைகள நோயில்லாமலும், புத்திசாலியாவும் வளர்க்கணும்!''

source:vikatan


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

இலங்கை அதிர்ச்சி !தென்னாபிரிக்க அதிபருடன் புலிகளின் நெருக்கம்(புகைப்படம் இணைப்பு)

>> Monday, August 29, 2011


 

விடுதலைப் புலிகள் தென்னாபிரிக்க அரசுடனும் அங்கே இருக்கும் பல நாடுகளோடும் கொண்டுள்ள நெருக்கமான தொடர்புகள் தொடர்பாக இலங்கை பெரும் அதிர்சியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புலிகள் சமாதான காலத்தில் அதன் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்செல்வனூடாகவும் மற்றும் இதர சிரேஷ்ட உறுப்பினர்களூடாகவும் ஆபிரிக்காவில் உள்ள பல நாடுகளிடம் நட்புறவை வளர்த்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எரித்திரியா நைஜீரியா மற்றும் சூடான் போன்ற நாடுகளில் அவர்கள் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் இலங்கை அரசு கவலை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் வெளியான புகைப்படம் தொடர்பாகவும் இலங்கை அரசு பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜக்கொப் ஸுமா சு.ப.தமிழ்ச்செல்வனுடன் தனது வீட்டில் வைத்து உரையாடும் இப் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. பல நாடுகளை உள்ளடக்கிய ஒன்றுபட்ட தென்னாபிரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜக்கொப் ஸுமா அவர்கள் உலகில் உள்ள பலம்பெருந்திய தலைவர்களில் ஒருவர் ஆவார். விடுதலைப் புலிகள் தென்னாபிரிக்க அதிபருடன் கொண்டுள்ள உறவுகள் குறித்து இலங்கை அரசு தற்போது தனது கவனத்தை திருப்பியுள்ளது. புலம்பெயர் மக்களின் போராட்டம் ஒரு புறம் இருக்க, மேற்குலகின் போர் குற்ற அழுத்தங்கள் மறு முனையில் இருக்க ஏக காலத்தில் புலிகளின் மறை முகப் பலம் தொடர்பாக இலங்கை அரசு தற்போது தனது கவனத்தை திருப்பியுள்ளது எனக் கொழும்பில் இருந்து கசியும் செய்திகள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளிடன் மொத்தமாக 3 விமானங்கள் இருந்ததாகவும், அவற்றில் 2 விமானங்கள் கொழும்பு நோக்கிப் புறப்பட்டு தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 3 விமானம் எங்கே சென்றது என்பது தொடர்பாக இலங்கைப் புலனாய்வு இன்னும் ஆராய்ந்து வருகிறது. அதுமட்டுமல்லாது புலிகளிடம் கிளைடர் எனப்படும் சிறிய ரக விமானம் ஒன்றும் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இவ்விமானமும் மாயமாக மறைந்துள்ளது. இலங்கை அரசானது தனது தரைப்படையின் கட்டமைப்பை மாற்றாது, வான்படை மற்றும் கடற்படைகள் கட்டமைப்பை பலப்படுத்தி வருவதன் பின்னணி தான் என்ன எனப் பலர் கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், இலங்கை அரசானது எதற்கு இவ்விரு கட்டமைப்புகளையும் பலப்படுத்தி வருகின்றது என்பதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது எனலாம்.






source:athirvu
--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

மன்மோகன் சிங் என்னும் கல்லுளி மங்கனின் திருட்டுத்தனம் அம்பலம் !

>> Saturday, August 27, 2011

ஊமை ஊரைக் கெடுக்கும்​, பெருச்சாளி பேரைக் கெடுக்கும்
ஊமை ஊரைக் கெடுக்கும், பெருச்சாளி பேரைக் கெடுக்கும் என்று தமிழ்நாட்டில் ஒரு சொலவடை உண்டு. இந்த சொலவடைக்கு பொருத்தமான நபர் யார் என்று கேட்டால் நமது பிரதமர் மன்மோகன் சிங் தான். இந்த மன்மோகன் சிங் சாதாரணமான நபர் அல்ல. இன்று இந்தியாவை உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கும் அத்தனை ஊழல்களுக்கும் மன்மோகனே காரணம் என்றால் அது மிகையாகாது. மிஸ்டர்.க்ளீன் என்ற ஒரு இமேஜை வேறு வைத்துக் கொண்டு ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஒரு நபர் என்றால் அது மன்மோகன் சிங் தான். இந்த மிஸ்டர்.க்ளீன் நினைத்திருந்தால் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடைபெற்ற ஊழலை நிச்சயமாக தடுத்திருக்க முடியும். 25.10.2007 அன்று, அப்போதைய தொலைத் தொடர்புத் துறைச் செயலர் டி.எஸ்.மாத்தூர், குறைந்த பட்சம், ட்ராயின் கருத்தைக் கேட்டாவது முடிவெடுக்கலாம் என்றும், ராசாவின் பார்வைக்கு, ஒவ்வொரு மாநிலத்திலும், ஸ்பெக்ட்ரம் எவ்வளவு உள்ளது என்பதையும், பல மாநிலங்களில் கையிருப்பு மிகக் குறைவாக உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டி அலுவலகக் குறிப்பு ஒன்றை வைக்கிறார். பின்னாளில் அளித்த ஒரு பேட்டியில், அப்போதைய தொலைத் தொடர்புத் துறைச் செயலாளர் டி.எஸ்.மாத்தூர் தெரிவித்தது என்ன தெரியுமா ? �மே 2007ல் மந்திரியாக ஆனதும், ராசா என்னை அழைத்தார். �சார் குறைஞ்சது 500 லைசென்ஸாவது குடுக்கனும். என்ன பண்ணலாம்னு சொல்லுங்க� என்று கூறினார். அதற்கு மாத்தூர், ஸ்பெக்ட்ரம் அந்த அளவுக்கு இல்லை. கொடுக்க இயலாது என்று தெரிவிக்கிறார். உடனே ராசா �லாஸ்ட் டேட்ட மாத்திட்டா குடுக்கலாம்ல ?� என்று எதிர்க் கேள்வி போடுகிறார். அதற்கு மாத்தூர், இது இயற்கை நீதிக்கு எதிரானது. 1 அக்டோபர் 2007 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்து விட்டு, சொல்லாமல் கொள்ளாமல் கடைசித் தேதியை மாற்றுவது என்பது தவறானது அதனால் அவ்வாறு செய்ய இயலாது� என்று கூறுகிறார். மாத்தூர் இவ்வாறு மறுத்ததும், அவர் லீவ் போட்ட அன்று, தொலைத் தொடர்புத் துறை கமிஷனின், தொழில்நுட்ப உறுப்பினராக இருந்த ஸ்ரீதரன் என்பரிடம் கையெழுத்து வாங்கி விடுகிறார் ராசா�. இது போல ராசாவுக்கு, பல்வேறு எச்சரிக்கைகள் விடப்பட்டன. ராசா எச்சரிக்கையை சட்டை செய்பவரா என்ன ? பெயருக்கேற்றார் போல எதேச்சதிகாரமாக செயல்பட்டார். தகத்தகாய கதிரவனல்லவா ? 02.11.2007 அன்று, 25.09.2007 அன்று வரை பெறப்பட்ட விண்ணப்பங்களை மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப் படும். அதுதான் கடைசித் தேதி என்று முடிவெடுக்கிறார். இந்த முடிவின் முக்கியப் பின்னணி, 25.09.2007 அன்று கடைசி தேதி என்று முடிவெடுத்தால், டெல்லியில் உள்ள ஒரே ஒரு நிறுவனத்துக்கான ஸ்பெக்ட்ரம், ராஜாதி ராசாவுக்கு நெருக்கமான ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு கொடுக்க இயலும். சரி. நான் எடுத்ததுதான் முடிவு என்று தொலைத் தொடர்புத் துறையில் சொல்லியாகி விட்டது. ட்ராய் அமைப்புக்கு கூட தகவல் தெரிவிக்க மாட்டேன், என்றும் சொல்லியாகி விட்டது. இத்தோடு விவகாரம் முடிந்து விடுமா என்ன ? ராசாவுக்கு மேல் சக்கரவர்த்தி என்று ஒருவர் இருக்கிறாரே�. மன்மோகன் என்று. அவருக்கு சொல்ல வேண்டாமா ? 02.11.2007 அன்று, ராசா பிரதமர் மன்மோகனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். 25.09.2007தான் விண்ணப்பம் அளிக்க கடைசி தேதி என்ற விபரம் பத்திரிக்கைகளில் அறிவிப்பாக வந்ததாக கூசாமல் ஒரு பொய்யை எழுதுகிறார். அதோடு நில்லாமல், சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகம், ஸ்பெக்ட்ரம் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி நாளை நிர்மாணிப்பது தொடர்பான விவகாரத்தை அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறிய கருத்து, தவறானது என்றும் குறிப்பிடுகிறார். எப்படி இருக்கிறது ? சட்டத்துறை அமைச்சகம் தவறாக கூறியதாம், சரியாகச் சொன்னாராம். இது மட்டுமல்லாமல், ஸ்பெக்ட்ரம் வழங்குவது தொடர்பான விவகாரத்தில், தொலைத் தொடர்பு அமைச்சகம், சட்டத்திற்கு உட்பட்டு, நூல் பிசகாமல் நடந்து கொள்வதாகவும் ராசா தெரிவித்திருந்தார். 99ம் ஆண்டின் தேசிய தொலைத் தொடர்புக் கொள்கை பத்தி 3.1.1ல் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டதை ராசா வசதியாக குறிப்பிட மறந்தார். இந்தக் கடிதத்தை ராசா அனுப்பிய 02.11.2007 அன்றே, பிரதமர் ராசாவுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தில், �அன்பான ராசா, ஸ்பெக்ட்ரம் கொஞ்சூன்டு தான் இருக்கு. நெறய்யயய பேரு அப்பிளிகேசன் போட்ருக்காங்க.. நெறய்ய பேரு கேட்ருக்கதால, இன்னும் பல வருசத்துக்கு ஸ்பெக்ட்ரம் இருக்காதுன்றதால, அப்ளை பண்ண நெறய்ய பேருக்கு ஸ்பெக்ட்ரம் கெடைக்காம பூடும். அத்தோட இல்லாம, டெலிகாம் பாலிசின்னு ஒன்னு வச்சுருக்காங்க. அது படி பாத்தா, இருக்கற ஸ்பெக்ட்ரம்ம, எல்லாருக்கும் நயந்து குடுக்குனும்னு அதுல சொல்லிக்கீது. அதனால, எவ்ளோ ஸ்பெக்ட்ரம் கீதுன்னு, பாத்துப்புட்டு, அப்பாலிக்கா லைசென்ஸ் குடுங்க. ஸ்பெக்ட்ரமே இல்லாம வெறும் லைசென்ஸ் மட்டும் குடுத்தீங்கன்னாக்கா, அந்த கம்பேனிக்காரன் லைசென்ச வச்சுக்கிட்டு இன்னா பண்ணுவான் ?� என்று எழுதுகிறார். அவ்வளவுதான், ராசாவுக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. என்னடா இது, நம்பளுக்கு தெரியாதது எதுவுமே இல்லை. நம்பகிட்டயே இவரு கேள்வி கேக்கறாரே என்று அதிசயித்த ராசா, இரவோடு இரவாக, அவருக்கு பதில் அனுப்ப முடிவு செய்கிறார். அது மட்டும் அல்லாமல், ராசா, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், எல்லாவற்றையும் கரீட்டாக செய்திருக்கிறேன் என்று அனுப்பிய கடிதம், பிரதமர் அலுவலகத்தை அடையும் முன்பே, பிரதமரின் கடிதம் வந்து சேர்ந்ததால் ராசாவின் அதிர்ச்சி மேலும் கூடியது. அன்று இரவே பதில் கடிதம் தயாரிக்கலாம் என்ற முடிவெடுத்து, தனது செயலாளர் சந்தோலியாவை வரவழைக்கிறார். அவர் வந்தால் போதுமா� கடிதத்தை டைப் அடிக்க நம்பகமான ஆள் வேண்டுமில்லையா�.. அதனால், 2004ம் ஆண்டு முதல், ராசாவின் காரியதரிசியாக இருந்த, ஆச்சார்யா ஆசீர்வாதம் என்பவரை, இரவு 8 மணிக்கு உடனே வீட்டுக்கு வாருங்கள் என்று கூறுகிறார். அனைவரும், ராசாவின் வீட்டில் கூடுகிறார்கள். ஆசீர்வாதம் வீட்டுக்கு வந்ததும், ராசாவே அவரோடு அமர்ந்து கடிதத்தை டிக்டேட் செய்கிறார். �கண்மணி, அன்போட�.� என்று அல்ல. �டியர் மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்� என்று தொடங்கும் அந்தக் கடிதத்தில், ராசா, �எல்லாம் கரீட்டா நடந்துகினு கீது. ஒரு தப்பும் பண்ணல. இந்த மேரி வெளிப்படையா யாருமே நட்ந்து கிட்டது இல்ல. இப்போ மட்டும் இல்ல.. ப்யூச்சர்ல கூட, இதே மேரி நூல் புட்சா மாதிரி எல்லாம் நடக்கும். நீ ஒன்யும் கவலைப் படாதே வாத்யாரே� என்று பதில் எழுதுகிறார். ராசா, சந்தோலியா, தொலைத் தொடர்புக் கமிஷன் உறுப்பினர் ஸ்ரீதர், ஆகியோர் சேர்ந்து இந்த கடிதத்தை தயார் செய்கிறார்கள். இரவு 11 மணிக்கு வேலை முடிகிறது. இரவோடு இரவாக, சிறப்புத் தூதுவர் மூலம், அந்தக் கடிதம் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப் படுகிறது. என்ன ஆயிற்றோ தெரியவில்லை. 26.12.2007 அன்று சந்தோலியா, அந்தக் கடிதத்தை தயாரித்த ஆசீர்வாதத்தை அழைத்து, நீங்கள் அடித்த கடிதம் எங்கே என்று கேட்கிறார். அவர் இந்தக் கம்ப்யூட்டரில் தான் இருக்கிறது என்று கூறியதும், அதை பென் டிரைவில் காப்பி செய்து, மீண்டும் ப்ரின்ட் எடுத்து, பிரதமருக்கு அனுப்பப் படுகிறது. இந்த ஆசீர்வாதம், சிபிஐ ன் முக்கிய சாட்சியாக சேர்க்கப் பட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தகுந்தது. இவரின் முக்கியத்துவம் கருதி, இவர் இருக்கும் இடம் ரகசியமாக வைக்கப் பட்டு, இவருக்கு பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்த லைசென்ஸ் வழங்குவது குறித்த கோப்புகள், பல்வேறு அதிகாரிகளிடம் சென்று வந்த போது, நேர்மையான அதிகாரிகள் பலர், ராசாவின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தே வந்துள்ளனர். அப்போது, தொலைத் தொடர்பு கமிஷனின் நிதிக்கான உறுப்பினராக இருந்த மஞ்சு மாதவன் என்பவர், இது வரை லைசென்ஸ் கொடுத்து வந்தது 2001ல் உள்ள விலை. இப்போது ஸ்பெக்ட்ரத்துக்கான தேவை (Demand) மிக அதிகமாக உள்ளது. அதனால், ஏலம் விட்டால், அதிகத் தொகையை ஏலத்தில் கேட்பவர்கள், ஸ்பெக்ட்ரம் பெற இயலும், மேலும், அரசுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று, சம்பந்தப் பட்ட கோப்பிலேயே எழுதுகிறார். ஆனால், தகத்தகாய கதிரவன், அவ்வாறு எழுதப்பட்டதன் மீது, எந்த முடிவும் எடுக்காமல், டபாய்து விடுகிறார். அப்போதைய தொலைத் தொடர்புத் துறைச் செயலர் மாத்தூர், இது தொடர்பாக நடைபெற்ற கூட்டங்களில் விவாதிக்கும் போதெல்லாம், ஏலமெல்லாம் விட முடியாது என்பதை தீர்மானமாக தெரிவித்தார். மேலும், 2001ல் உள்ள விலைக்குத் தான் கொடுக்க முடியும் என்றும் தெரிவித்தார் என்கிறார் மாத்தூர். ராசா 2001ல் வாங்கிய வீட்டை, இன்று அதே விலைக்கு கொடுப்பாரா ? 26 டிசம்பர் அன்று எழுதிய கடிதத்தில் ராசா, நான் உங்களோடு தொலைத் தொடர்புத் துறை குறித்து விவாதித்தது போல என்று குறிப்பிட்டிருப்பதை கவனிக்க வேண்டும். மன்மோகனோடு விவாதித்த பிறகு ராசா முடிவெடுத்தார் என்றால், சிபிஐ மன்மோகனை ஒரு சாட்சியாகவாவது விசாரித்திருக்க வேண்டுமா வேண்டாமா ? ஆனால் மன்மோகன் கீழ் பணியாற்றும் சிபிஐக்கு, மன்மோகனை விசாரிக்க எப்படி தைரியம் வரும் ? இவ்வாறு ராசா பிரதமருக்கு கடிதம் அனுப்பியவுடன் பிரதமர் என்ன செய்திருக்க வேண்டும் ? சட்ட அமைச்சகம் அமைச்சரவை குழுவுக்கு அனுப்பவும் என்று தெரிவித்த கருத்தை மீறி, நீங்கள் தன்னிச்சையாக முடிவெடுத்திருக்கக் கூடாது, அதனால் நான் அந்தக் கோப்பை அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்புகிறேன் என்றல்லவா உத்தரவிட்டிருக்க வேண்டும். பிரதமரும் பதில் கடிதம் அனுப்பினார். ஆனால் அந்தக் கடிதத்தில், உங்களின் 26.12.2007 நாளிட்ட கடிதத்தை வரப்பெற்றேன் என்று பதில் எழுதுகிறார். அப்போது ராசா மன்மோகனோடு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக விவாதித்ததை மறுக்கவில்லை என்றுதானே பொருள்.... ஏன் மவுனமானார் இந்த ஊமைச் சாமியார் ?  ஏன் இவ்வாறு எழுதுகிறார் என்று கேட்கிறீர்களா ? ராசா திமுகவின் அமைச்சராயிற்றே�.. மன்மோகன் பிரதமாராக இருக்க வேண்டாமா ? மன்மோகன் பிரதமர் பதவியில் நீடித்ததற்காகத் தான் இந்தியா ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடியை இழந்தது. அன்று மன்மோகன், அந்தக் கோப்பை ராசாவிடமிருந்து பறித்து, அமைச்சரவை குழுவுக்கோ, அல்லது தன்னிடமோ மாற்றியிருந்தால், இந்த நஷ்டம், ஊழல் விசாரணை இதெல்லாம் தேவையா ? கடந்த வாரம் பத்திரிக்கை ஆசிரியர்களோடு நடந்த சந்திப்பின் போது, மன்மோகனிடம், 2ஜி விவகாரம் தொடர்பாக கேள்விகள் கேட்கப் பட்டன. நீங்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளை இன்னும் கடினமாக கையாண்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு, �எது சரியான வழி என்று எனக்குத் தெரியவில்லை. சில விஷயங்களை (ஸ்பெக்ட்ரம்) தவிர்த்திருக்க முடியுமா என்பதும் தெரியவில்லை. 2ஜி விவகாரத்தை எடுத்துக் கொண்டால், நான் ராசாவிடம் ஏலம் விடலாம் என்று எழுதினேன். அவர் ட்ராய் ஏலம் விட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. ட்ராய் அரசுக்கு ஆலோசனை வழங்கத் தானே இருக்கிறது என்பதால் அத்தோடு அதை விட்டு விட்டேன். நேர்மையாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப் படும் என்று ராசா கூறியதை நம்பினேன். என்னுடன் பணியாற்றும் ஒரு நபர் இது போல சொல்லும் போது அதை நம்பாமல் நான் எப்படி இருப்பது ? அதற்குப் பிறகு சிவிசியிடம் புகார் அளிக்கப் பட்டது. சிபிஐ விசாரணையை தொடங்கியது. தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் சோதனையிடப் பட்டது� என்றார். இந்த விவகாரம் செய்தித் தாள்களில் தினந்தோறும் வெளி வந்ததே என்ற கேள்விக்கு, �செய்தித் தாள்களை வைத்து முடிவெடுப்பதாக இருந்தால், நான் அத்தனை விவகாரங்களையும் சிபிஐயிடம் தினந்தோறும் அனுப்பிக் கொண்டிருக்க வேண்டும்� என்று இறுமாப்பாக பதிலளித்துள்ளார். ராசாவை நான் நம்பினேன் என்று மன்மோகன் சிங் சொல்வதை ஏற்றுக் கொள்வதற்கில்லை. இன்டெலிஜென்ஸ் ப்யூரோ என்னும், மத்திய உளவுத்துறை ஏறக்குறைய அனைத்து அமைச்சர்களின் நடவடிக்கைகளையும் கண்காணிக்கும். அவ்வாறு கண்காணித்து தினந்தோறும் பிரதமருக்கு அறிக்கை அளிக்கும். ராசாவை யார் சந்திக்கிறார்கள், என்ன செய்து கொண்டிருக்கிறார், யாரோடு பேசுகிறார், என்பதையெல்லாம் தினமும் கண்காணிக்கும். அவ்வாறு கண்காணித்தன் விளைவே, ராசா 2.11.2007 அன்று தனக்கு கடிதம் எழுதிய விபரம் அறிந்த மன்மோகன், அந்தக் கடிதம் கிடைக்கும் முன்பே முந்திக் கொண்டு ராசாவுக்கு கடிதம் எழுதியது. அதனால் ராசாவை நான் நம்பினேன் என்பதை ஏற்பதற்கில்லை. பத்திரிக்கைகளை நான் நம்ப முடியாது என்ற மன்மோகனின் பேச்சு திமிர்த்தனமானது. ஸ்பெக்ட்ரம் விவகாரம், வெளி வந்ததும், இன்று ராசா, கனிமொழி உள்ளிட்டோர் சிறையில் இருப்பதற்கும், 80 சதவிகித காரணம் பத்திரிக்கைகளே�. பயனீர் நாளேடு, டிசம்பர் 2008ல் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த முதல் செய்தியை வெளியிடாமல் போயிருந்தால் இன்று ராசாவும் கனிமொழியும் சிறையில் இருந்திருப்பார்களா ? பத்திரிக்கைகள் என்ன பொறுப்பில்லாமல் எழுதுகிறார்களா என்ன ? அவ்வாறு எழுதினால் மன்மோகன் சிங் அரசு விட்டு விடுமா என்ன ? மன்மோகன் சிங்கின் அடுத்த அயோக்கியத்தனம் இன்னும் மோசமானது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி 1ல் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர், தமிழகத்தைச் சேர்ந்த மணி சங்கர் அய்யர். இவர் 9 மார்ச் 2006ல், இவர் மன்மோகனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அக்கடிதத்தில் �காமன் வெல்த் விளையாட்டுக் போட்டிகளுக்காக 150 கோடிக்கு உட்கட்டமைப்பு வசதிகள் செய்ய வேண்டும் என்று செய்யப் பட்ட மதிப்பீடு 500 கோடியாக உயர்ந்துள்ளது. 250 கோடி என்று நிர்ணயிக்கப் பட்ட விளையாட்டுக்களை நடத்துவதற்காக செலவுகள், 900 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த மதிப்பீடு நம்ப முடியாத வண்ணம் உள்ளது. உடனடியாக என்னைச் சந்திக்க நேரம் ஒதுக்குவீர்களேயானால், விரிவாக எடுத்துரைக்கிறேன்� என்று எழுதுகிறார். மன்மோகன் என்ற ஊமைச் சாமியார் எதுவும் பேசவில்லை. 25 அக்டோபர் 2007ல் அடுத்த கடிதம் எழுதுகிறார் அய்யர். இந்தக் கடிதத்தில், �காமன் வெல்த் விளையாட்டுக்களில் பங்கேற்பது போன்ற முக்கால் அளவுக்கு விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற ராணுவ விளையாட்டுக்கள் 200 கோடி செலவில் நடந்து முடிந்தன. ஆனால், காமன் வெல்த் போட்டியை நடத்த 20 ஆயிரம் கோடிக்கும் மேல் செலவாகும் என்று நிர்ணயித்திருப்பது, மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. சுரேஷ் கல்மாடியின் நடத்தை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது� என்று எழுதினார். இதற்கும் இந்த ஊமைச் சாமியார் வாயைத் திறக்கவில்லை. சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்த ஊமைச் சாமியாரிடம், மணி சங்கரின் கடிதம் குறித்து கேட்கப் பட்டது. அதற்கு மன்மோகன் சிங் �மணி சங்கர் அய்யரின் கடிதம் தத்துவார்த்த ரீதியானது. சுரேஷ் கல்மாடி காமன் வெல்த் விளையாட்டுக்களை நடத்தக் கூடாது என்பது தொடர்பானது. மணி சங்கர் அய்யர் பல கடிதங்களை எழுதியிருக்கிறார். காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்பதற்கான ஒப்பந்தம் 2003ல் முந்தைய அரசாங்கத்தால் கையொப்பம் இடப்பட்டது.� எப்பேர்பட்ட அயோக்கியத்தனம் பாருங்கள். முந்தைய அரசாங்கம் இதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டால் என்ன ? அவர்களா 20 ஆயிரம் கோடியை கொள்ளையடித்தார்கள் ? சுரேஷ் கல்மாடி கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார் என்பது நன்றாக தெரிந்தும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து விட்டு, இப்போது ஒன்றுமே தெரியாதது போல பசப்புவது இந்த ஊமையின் உச்சபட்ச குசும்பு. இந்த குசும்புகளைத் தவிர்த்து, மன்மோகனின் மற்றொரு சிறப்பு, அமெரிக்காவின் அடிமையாக இருப்பது. அமேரிக்காவின் காலை நக்குவது என்றால், மன்மோகனுக்கு அவ்வளவு பிடிக்கும். அணு ஆயுத ஒப்பந்தத்தைச் செய்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருந்த மன்மோகன், இடது சாரிகள் இதன் காரணமாக ஆதரவை வாபஸ் பெற்ற போது, பல ஆயிரம் கோடிகளை எம்.பி.க்களுக்கு லஞ்சமாக கொடுத்து, அரசைக் காப்பாற்றி, அணு ஆயுத ஒப்பந்தத்தை செயல்படுத்தியவர் தானே இந்த மன்மோகன் ? இவர் என்ன மிஸ்டர் க்ளீன்�. ? 2004ல் நவம்பர் மாதத்தில், ப்ரான்ஸ் நாட்டில், பள்ளிக்குச் செல்லும், சீக்கிய மாணவர்கள் டர்பன் அணியக் கூடாது என்று உத்தரவு போட்ட போது, ப்ரான்ஸ் பிரதமரிடம் பேசி, உடனடியாக அந்தப் பிரச்சினையில் தலையிட்டவர் மன்மோகன் சிங். சீக்கியனின் மயிருக்காக துடித்த மன்மோகன், தமிழனின் உயிர் போன போது என்ன செய்தார் ? தமிழினத்தை அழித்தவனோடு கூட்டு சேர்ந்து அவனுக்கு ஆயுதம் வழங்கினார். இந்திய மீனவனை கொன்று குவிப்பவனோடு, கொஞ்சிக் குலவினார். கடைசியாக இந்த ஊமை செய்த குசும்பு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து சிபிஐக்கு விலக்கு அளித்து போடப்பட்ட உத்தரவு. அப்படி விலக்கு அளிக்க வேண்டிய காரணம் என்ன ? ஏனென்றால், சோனியாவின் குடும்ப நண்பர் ஒட்டாவியோ கொட்டராச்சியின் மீது இருந்த ரெட் கார்னர் நோட்டிசை விலக்கிக் கொள்ளச் சொல்லியும், முடக்கப் பட்டிருந்த கொட்டரோச்சியின் வங்கிக் கணக்கை விடுவிக்கவும் இந்த ஊமை சிபிஐக்கு போட்ட உத்தரவுகளும், 2ஜி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடும் வரை அமைதி காத்த விவகாரமும் சந்திக்கு வந்து விடும் அல்லவா ? அதற்காகத் தான். கடைசியாக இந்த ஊமை செய்த குசும்பு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து சிபிஐக்கு விலக்கு அளித்து போடப்பட்ட உத்தரவு. அப்படி விலக்கு அளிக்க வேண்டிய காரணம் என்ன ? ஏனென்றால், சோனியாவின் குடும்ப நண்பர் ஒட்டாவியோ கொட்டராச்சியின் மீது இருந்த ரெட் கார்னர் நோட்டிசை விலக்கிக் கொள்ளச் சொல்லியும், முடக்கப் பட்டிருந்த கொட்டரோச்சியின் வங்கிக் கணக்கை விடுவிக்கவும் இந்த ஊமை சிபிஐக்கு போட்ட உத்தரவுகளும், 2ஜி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடும் வரை அமைதி காத்த விவகாரமும் சந்திக்கு வந்து விடும் அல்லவா ? அதற்காகத் தான்.
source:athirvu
-- http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

"வேட்டியே வேணாம்னு சொல்லிட்டேன்; பேட்டி எதற்கு?

>> Thursday, August 25, 2011


திருச்சி: ""வேட்டியே வேணாம்னு சொல்லிட்டேன்; பேட்டி எதற்கு?'' என, திருச்சி மத்திய சிறையில், மத்திய அமைச்சர் அழகிரி, விரக்தியில் கூறினார். திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள, எஸ்.ஆர்.கோபி, தி.மு.க., எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன், "அட்டாக்' பாண்டி ஆகியோரை பார்க்க, நேற்று மதியம் 1.15 மணிக்கு, திருச்சி மத்திய சிறைக்கு, மத்திய ரசாயனத்துறை அமைச்சர் அழகிரி வந்தார். சிறைக்கு சென்று கைதிகளை பார்க்க, மூன்று பேருக்கு மட்டுமே அனுமதி என்பதால், மத்திய அமைச்சர் அழகிரியுடன், மத்திய இணையமைச்சர் நெப்போலியன், முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி ஆகியோர் மட்டுமே, உள்ளே சென்றனர். அட்டாக் பாண்டி, குண்டர் சட்டத்தில் கைதாகியுள்ளதால், அவரை பார்க்க அனுமதி வழங்காமல், எஸ்.ஆர்.கோபி மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரை பார்க்க மட்டுமே, சிறைத்துறை நிர்வாகம் அனுமதி அளித்தது. சிறைக்குள் சென்ற மூர்த்தி, சிறிது நேரத்தில் வெளியே வர, அதுவரை வெளியே நின்றிருந்த முன்னாள் அமைச்சர் நேரு, சிறை உள்ளே சென்று அழகிரியுடன் சேர்ந்து கொண்டார். அரை மணி நேர சந்திப்புக்கு பின், 1.45 மணிக்கு அழகிரியும், மற்றவர்களும் சிறையிலிருந்து வெளியே வந்தனர்.
வெளியே வந்த மத்திய அமைச்சர் அழகிரியிடம், நிருபர்கள் பேட்டி கேட்க, ""வேட்டியே வேணாம்னுட்டேன்; பேட்டி எதற்கு?'' எனக் கூறி, மதுரைக்கு புறப்பட்டுச் சென்றார்.

தி.மு.க.,வினர் குழப்பம் : சிறையிலிருந்து வெளியே வந்த மத்திய அமைச்சர் அழகிரிக்கு, சில முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், சால்வை, தி.மு.க, கட்சிக்கரை போட்ட, துண்டு, வேஷ்டி ஆகியவை கொடுக்க முயன்றனர். அவற்றை வாங்க அழகிரி மறுத்து விட்டார். அதன்பின்னரே, இந்த வார்த்தையை அவர் கூறினார்.
ஆகையால், மேற்கண்ட காரணத்தின் அடிப்படையில் இந்த கருத்தை மத்திய அமைச்சர் அழகிரி கூறினாரா அல்லது வேறு எதையும் மனதில் வைத்துக் கொண்டு, "பொடி' வைத்து பேசினாரா என, தி.மு.க.,வினர் குழம்பிப் போயினர்.

அழகிரிக்கு தைரியம் ஊட்டிய தி.மு.க.,வினர் : மதுரை மத்திய சிறையில் தி.மு.க.,வினரை நேற்று சந்தித்த மத்திய அமைச்சர் அழகிரி, வழக்கு போட்டவர்கள் மீது வழக்கு தொடரப் போவதாக ஆறுதல் தெரிவித்தார்.
நேற்று மாலை 3.35 மணிக்கு கட்சிக் கொடி கட்டிய காரில் அழகிரியும், மத்திய அமைச்சர் நெப்போலியனும் சிறைக்கு வந்தனர். இவர்களுடன் முன்னாள் எம்.எல்.ஏ., வேலுச்சாமி மற்றும் வழக்கறிஞர்கள் மோகன்குமார், லிங்கத்துரை சென்றனர். ஜெயிலர் அறையில் அவைத் தலைவர் இசக்கிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் மின்னல்கொடி, குடும்ப டாக்டர் நவநீதகிருஷ்ணன், மாநகராட்சி கவுன்சிலர் மலைச்சாமி, எஸ்ஸார் கோபியின் சகோதரர் ஈஸ்வரன், திண்டுக்கல் வேட்பாளராக போட்டியிட்ட விஜயன் ஆகியோரை சந்தித்தார்.

அப்போது அழகிரி, ""சிறைகளில் கட்சிக்காரங்களை தீவிரவாதிகளாக நடத்துறாங்க. உள்ளே வைத்த போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடரப் போகிறேன். அவர்களும் "உள்ளே' வருவாங்க. இந்தம்மா(ஜெயலலிதா) மீது கேஸ் நடந்துட்டு இருக்கு; கூடிய சீக்கிரம் முதல்வர் பதவியில் இருக்க மாட்டார்,'' என்ற அவரிடம், "அண்ணே, கட்சி வேட்டி கட்டக்கூடாதுனு சொல்றாங்கண்ணே' என்று ஈஸ்வரன் கூற, அங்கிருந்த ஜெயிலர் தமிழ்ச்செல்வன் மறுத்தார்.
பின், 3.55 மணிக்கு வெளியே வந்த அழகிரி, நிருபர்களிடம், ""உள்ளே இருந்தவர்களை சந்தித்தபோது, "எங்கள் மீது போடப்பட்ட வழக்குகள் பொய்யானது; அதை தைரியமாக சந்திப்போம்' என்று எனக்கு தைரியம் ஊட்டினர். வழக்கு போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்,'' என்றார்.

அழகிரி "டென்ஷன்' : கொடைக்கானல் நகராட்சித் தலைவர் முகமது இப்ராகிமை சந்திக்க கடந்த மாதம் மதுரை சிறைக்கு அழகிரி வந்தபோது, அவரது கார் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டது. ஆனால் நேற்று, "மத்திய அமைச்சராக அவர் வராததால், "ப்ரோட்டோகால்' படி அனுமதிக்க முடியாது' என்று அதிகாரிகள் கூறினர்.
இதனால், கேட்டிற்கு வெளியே காரில் 5 நிமிடம் காத்திருந்த அழகிரியும், நெப்போலியனும் நடந்தே உள்ளே சென்றனர். அப்போது தி.மு.க.,வினர், காவலர்களுக்கு எதிராக கோஷமிட, "இவ்வளவு பேரு வந்தா எப்படி உள்ளே விடுவாங்க?' என அழகிரி, "டென்ஷன்' ஆனார்.


source:dinamalar
--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

இங்கே ஓர் இளந்தமிழச்சி !

>> Wednesday, August 24, 2011


நீத்தி... மதுரை, CSI பல் மருத்துவக் கல்லூரியின் இரண்டாமாண்டு இளநிலை பல் மருத்துவ மாணவி. கூடவே... பட்டிமன்ற பேச்சாளர், எழுத்தாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், உலக தமிழ் எழுத்தாளர் சங்க உறுப்பினர்... என வளர்ந்து கொண்டிருக்கும் இளந்தமிழச்சி!

''எங்கம்மா... பள்ளிக்கூட ஆசிரியை. அவங்களுக்கு பேச்சு, எழுத்து, இலக்கியத்துல எல்லாம் ஆர்வம். நான் நூலைப் போல சேலை. பள்ளியில நடக்கற பேச்சு, எழுத்துப் போட்டிகள்ல முதல் பரிசு எனக்குத்தான். ஐந்தாவது படிச்சப்போ, 'பொதிகை' தொலைக்காட்சியில, திரைப்பட இயக்குநர் மணிவண்ணன் நடத்தின பட்டிமன்றத்துல, எங்க அம்மாவுக்கு எதிரணியில உட்கார்ந்து பேசினேன். என் பேச்சை அவ்வளவு ரசிச்சு பாராட்டினார் மணிவண்ணன். 'பொதிகை' தொலைக்காட்சியோ... என் பேச்சுத் திறமைக்கு பரிசா, அம்மாவும் பெண்ணும் வழக்காடற மாதிரி ஒரு நிகழ்ச்சியை எங்கள வெச்சே பதிவு செய்து ஒளிபரப்பினாங்க!''
- பரவசம் விரிகிறது நீத்தியின் வார்த்தைகளில்.
''அடுத்து... சன், ஜெயா, ராஜ்னு எல்லா தொலைக்காட்சிகளோட பட்டிமன்ற நிகழ்ச்சிகள்லயும் பேசினேன். இலக்கிய பட்டிமன்றம் ஒண்ணுல நான் பேசினப்போ நடுவரா இருந்த முனைவர். பாலசுப்பிரமணி, 'நான் எத்தனையோ பேச்சைக் கேட்டிருக்கேன். ஆனா, சரியான லகரம், ளகரத்தோட பேசின சில பேர்ல நீயும் ஒரு ஆள்!'னு பாராட்டினதோட, தான் எழுதப்போற 'தூறல்கள்'ங்கற புத்தகத்துக்கு முன்னுரை எழுதச் சொல்லி என்னை பணித்தார். இப்ப நினைச்சாலும் என்னால நம்ப முடியாத இனிமையான நிகழ்வு அது. என்னோட தமிழ் ஆர்வம், உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கத்துல நிரந்தர உறுப்பினராகற வாய்ப்பை எனக்கு வாங்கித் தந்தது'' என மகிழும் நீத்தியின் தாய்மொழி... தெலுங்கு என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்!
''இசையமைப்பாளர் தேவா, மதுரையில நடத்தின ஒரு மாபெரும் இன்னிசை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கற வாய்ப்பும் கிடைச்சது. தொடர்ந்து நிறைய நிகழ்ச்சிகளையும், உள்ளூர் தொலைக்காட்சிகள்ல நிகழ்ச்சி தொகுப்பும் பண்ணினேன். நான் பலகுரல் (மிமிக்ரி) செய்வேன். அந்தத் திறமைதான் சன் தொலைக்காட்சியில ஒளிபரப்பான 'அசத்த போவது யாரு' நிகழ்ச்சியில எனக்கு பேர் வாங்கிக் கொடுத்தது'' என்று பட்டியல் வாசிக்கும் நீத்தி, ஒரு நர்த்தகியும்கூட, ''பத்து வருஷமா கத்துக்கிட்ட பரதத்துல நிறைய பரிசுகள் வாங்கியிருக்கேன். பரதத்துக்கு துணையா பாட்டுப் பாடற திறமையையும் வளர்த்துக்கிட்டேன். கலைஞர் தொலைக்காட்சியோட 'பாடவா டூயட் பாடலை' நிகழ்ச்சியில கலந்துகிட்டு, 'என்னால பாடவும் முடியும்'னு நிரூபிச்சேன்!''
- வியக்க வைத்தன நீத்தியின் திறமைகளும் முயற்சிகளும்.
''நான் பல் மருத்துவரானதும்... ஒரு சேவை மையம் ஆரம்பிச்சு, கைவிடப்பட்ட குழந்தைகள்ல இருந்து முதியோர் வரைக்கும் எல்லாரையும் அரவணைக்கணும்ங்கறதுதான் என்னோட நோக்கம். பரிசுகள் தர்ற சந்தோஷத்தைவிட, அந்த சந்தோஷம் எவ்ளோ பெரிசு!'' - புன்னகையுடன் முடித்தார் நீத்தி!
- பூ.ஜெயராமன் படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
source:vikatan

-- http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

ஒரு பெண் நான்கு ஆண்களிடம் ஒரே நேரத்தில் உறவுகொள்ள சக்திபெற மாட்டாள்

>> Monday, August 22, 2011

4 மனைவிகள்- சரியத் சட்டமும் பெண்ணுரிமைகளும்

ஒரு ஆண் 4 பெண்களை ஒரே நேரத்தில். திருமணம் செய்துகொள்ளலாம் என்று இசுலாமியச் சட்டம் உள்ளது. எந்த ஒரு பெண்ணும் தன் கணவன் இரண்டாவதாக ஒரு திருமணம் செய்துகொள்வதை இன்று ஒருபோதும் விரும்புவது இல்லை. பெண்ணின் விருப்பம் ஒரு பக்கமிருக்க ஒரு தந்தையாக, சகோதரனாக. மகனாக உள்ள ஆண்கூட தன் மகளுடைய, சகோதரிவுடைய கணவனுக்கு இன்னொரு மனைவி இருப்பதை இன்று நிச்சயமாக விரும்புவதில்லை. தன் தந்தை இன்னொரு திருமணம் செய்துகொள்வதை தன் தாய்க்கு இழைக்கப்படும் அநீதி என்று உணர்கிறான். நடைமுறையில் சமூக இழுக்காகமாறி வழக்கொழிந்து வரும் இச்சட்டத்திற்கு முட்டுக்கொடுக்க நினைப்பவர்களும் இருக்கிறார்கள். அது இன்றைய சமூகக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு பக்கபலமிருந்து காப்பாற்றுகிறது. அதனால் இச்சட்டத்தில் மாறுதல் தேவை என்பது மறுக்க முடியாததாக உள்ளது.

பின்வரும் நபிமோழியைப்படியுங்கள். (புகாரி 5230)

மிஸ்வர் பின் மக்ரமா(ரலி) அவர்கள் கூறியதாவது.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி, "ஷிஹாம் பின் முஃகிரா கோத்திரத்தார் தங்கள் (உறவினரான அபூஜஹலுடைய) மகளை அலீ பின் அபீதாலிப் அவர்களுக்கு மணமுடித்து வைக்க (என்னிடம்) அனுமதி கோரினர். அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன். மீண்டும் நான் அனுமதிக்க மாட்டேன். மீண்டும் நான் அனுமதிக்க மாட்டேன். அலீ பின் அபீதாலிப் அவர்கள் என் மகளை (ஃபாத்திமாவை) விவாகவிலக்கு செய்துவிட்டு, அவர்களுடைய மகளை மணமுடித்துக்கொள்ள விரும்பினாலே தவிர (அவர்களுக்கு நான் அனுமதி வழங்க மாட்டேன்). ஃபாத்திமா என்னில் ஓரு பாதியாவார். ஃபாத்திமாவை வெறுப்படையச் செய்வது என்னை வெறுப்படையச் செய்வதாகும்" என்று சொன்னாரக்ள்.

இந் நபிமொழியை புகாரி அவர்கள் எந்த தலைப்பின் கீழ் பதித்துள்ளார்கள் தெரியுமா? "ஒருவர் தம் புதல்வியின் தன்மான உணர்வைக் காக்கவும் நீதிகோரி வாதிடுவதும்." என்ற தலைப்பில் கூறுகிறார்.

இந்த நபிமொழியிலிருந்து நாம் என்ன புரிந்துகொள்வது? முகம்மதுநபி தனக்கொரு நியாயம், பிறருக்கொரு நியாம் என்று கூறுகிறார்களா? அல்லது நான்கு மனைவிகள் சட்டத்தை மறந்துவிட்டார்களா? முகம்மதுநபி காலத்திலும்கூட தன் கணவன் இன்னொரு திருமணம் செய்துகொள்ள விரும்பியதில்லை என்பதும் தெரிகிறது.

இச் சட்டத்திற்கான நலம் விரும்பிகளின் வாதங்களும் சில விளக்கங்களும்:

1. விடியல் வெள்ளி என்ற இஸ்லாமிய மாத இதழின் ஜனவரி 2002ல் வந்துள்ள தலையங்கத்தின் தலைப்பு ˜சரவணபவனுக்கு சரியான பாதை அது கூறும் செய்தி பின்வருமாறு.

 'விதிவிலக்காக ஒரு சிலருக்கு ஒரு மனைவியைக் கொண்டு தங்கள் உடல் இச்சையைத் தணித்துக்கொள்ள முடியவில்லை. இது ஓரு சராசரியான உலக நிகழ்வு'என்றும்

'நான்கு மனைவி என்பது சட்டமல்ல ஒரு விதிவிலக்கு பொருளாதார வசதிக்கேற்பவே செய்து கொள்ள வேண்டும் என்பதே குர்இன் காட்டும் பாதை' என்று ஹோட்டல் தொழிலாளிகளின் மனைவிகளை அனுபவித்துக் கொலையும் செய்த இராஜகோபாலன் என்ற முதலாளியின் செயலை  கூறுகிறது

அதாவது நான்கு மனைவி என்பது பணக்காரனாகவும்  காம இச்சைக் கூடுதலாகவும் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை என்பது இதன் பொருள்.

காம இச்சை கூடுதலாக உள்ளதற்கும் பொருளாதாரத்திற்கும் தொடர்பில்லை. ஒரு மூடை சுமக்கும் தொழிலாளிக்குள்ள உடல் வலிமையைவிட உட்கார்ந்து தின்பவனுக்கு இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.  அதனால் ஏழையாக உள்ளவனுக்கு காம இச்சை கூடிவிட்டால் என்ன செய்வது? பெண்ணுக்கு காம இச்சை கூடிவிட்டாள் என்ன செய்வது? என்றெல்லாம் கேள்வியை நாம் கேட்கக் கூடாது என்று அவர்கள் சொல்கிறார்கள்.

2. ஆணின் காம உணர்வு பெண்களைவிட அதிகம் என்றும், ஒரு பெண் நான்கு ஆண்களிடம் ஒரே நேரத்தில் உறவுகொள்ள சக்திபெற மாட்டாள் என்றும், பெண்ணின் மாதவிடாய் காலங்களில் ஆணுடையக் காமத்தேவை நிறைவேற்ற பிற மனைவிகள் வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

ஒழுக்கத்தில் சிறந்தவர் ஆணா பெண்ணா எனும்போது பெண்கள்தான் கண்டதையும் பார்த்து காமவெறிபிடித்து சீரழிந்து போகிறார்கள் என்று கூறுகிறார்கள். விபச்சார விடுதிகள் நிரம்பி வழிவதையும், சினிமாத் துறையில் சீரழிவதையும் எடுத்துக்காட்டாக கூறுகின்றனர். பெண்கள்தான் சைத்தான்கள். ஆண்களை மயக்கி இச்சையைத் தூண்டி கெடுக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர்.

அதே நேரத்தில் 4 பொட்டாட்டி சரீயத் சட்டம் பேசும்போது பல்டி அடித்து ஆணுக்குத்தான் காம சக்கி கூடுதல் என்கின்றனர். அப்படிச் சொல்லும் போதும்  சொற்களிலும் கூட நயவஞ்சகத்தனம். ஆணுக்குத்தான் காம "சக்தி" கூடுதலாம், பெண் "காமவெறி" பிடித்து அலைகிறாளாம். எது உண்மை? 50, 60 வயதானாலும் பிற பெண்களைக்கண்டு பல்லிளிப்பதும், விபச்சார விடுதிகளுக்கு ஓடுவதும் ஆண்களா, பெண்களா?

டில்லி சத்தர்பஜார், மும்பை கிராண்ட் பஜார், கொல்கத்தா சோனாகாஞ்ச்.  இந்தியாவின் பிரபலமான விபச்சார பகுதிகள், இங்குள்ள ஒரு பெண் தினந்தோறும் குறைந்தது 6,7 பேர்கள் தம்மை புணர்வதால் கிடைக்கும் வருமானத்தில் வாழ்பவர்கள். (ஒரு சில மணிநேரங்களில் கூட 6,7 பேர்கள் இவர்களுடன் உறவுகொள்கின்றனர்) இப்படி ஒரு ஆண் ஒரு சில மணிநேரங்களில் 2, 3 பெண்களிடம்கூட உறவுகொள்ள முடியாது.

உடல் வலிமை என்பது உண்மையில் பெண்ணுக்குத்தான் அதிகம். ஆணாதிக்கம் தன்னிடமுள்ள இயலாமையை அல்லது காமவெறியை மறைக்க பெண்களால் முடியாது என்று பெண்கள்மீது பழியைப் போடுகிறது. சிட்டுக்குருவி லேகிய மருத்துவர்களிடம் போய் பாருங்கள். இரண்டு பெட்டாட்டிகாரர்கள்தான் நிறையபேர் நிற்பர். பெண்களைப் பொறுத்தவரை இந்தப் பிரச்சனையில் உடலுறவு கொள்ளும்போது உறுப்பில் ஏற்படும் வலி என்பதைத் தவிர சிட்டுக்குருவி லேகியம் என்ற பிரச்சினையே இல்லை இதனை எளிதில் மருத்துவம் செய்துகொண்டு தீர்துதுவிடலாம். எங்கேயாவது சிட்டுக்குருவி லேகிய மருத்துவர்களிடம் பெண்கள் மருத்தவம் செய்து கொள்வதை பார்த்துள்ளீர்களா? அல்லது சிட்டுக்குருவி லேகிய பெண் மருத்துவரைத்தான் பார்த்துள்ளீர்களா? ஆண்மைக் குறைவுக்கான விளம்பரத்தை பார்க்கும் நீங்கள் பெண்மைக்குறைவுக்கான விளம்பரத்தைப் பார்த்ததுண்டா?

திருமணமான புது இளம் ஜோடிகளிடம் வேண்டுமானால் ஒருசில மாதங்கள் வரை நாளொன்றுக்கு சிலதடவைகள் உடலுறவு கொள்ளும் ஆர்வமும் சக்தியும் இருக்கலாம். இயல்பான குடும்ப வாழ்க்கையில் 30 வயதுக்குமேல் உள்ளவர்கள் தினசரி உடலுறவு கொள்வது என்பதே முடியாத ஒன்றே. காம உணர்வு என்பது அவரவர் உடல் திறன் (ஊட்டச் சத்து) மற்றும் பருவம் சார்ந்தது. இதற்கு ஆண் பெண் என்ற வேறுபாடு கிடையாது.

அது சரி. மாதவிலக்கு காலங்களில்கூட தனது மணைவிக்காக உடலுறவுகொள்வதை தவிர்க்க முடியாத விலங்கினமா மனிதன்? 4 மனைவி வைத்துக்கொள்ள பொருளாதார வசதியில்லாதவர்கள் தனது மனைவியின் மாதவிலக்கு காலங்களில் விபச்சார விடுதிக்கு போகலாம் என்று சட்டம் போட்டுடலாமா?

3. மக்கள்தொகையில் ஆண்களைவிட பெண்களே அதிகம். அதனால் மணமகன் கிடைக்காத பிரச்சனையை தீர்க்க 4 மனைவிகள் சட்டமே தீர்த்துவைக்கும் என்று கூறுகின்றனர்.

இது உண்மையாக வேண்டுமானால் திருமணமாகாத 18 வயதுக்கு மேல் உள்ள பெண்ணும், 24 வயதுக்கு மேல் உள்ள ஆணும் ஒரே நேரத்தில் நேருக்கு நேர் நின்று திருமணம் செய்ய முயற்சித்தால் இந்த எண்ணிக்கைப் பிரச்சனையாகலாம். இப்படிப்பட்ட நிலை எங்காவது உள்ளதா? உங்கள் ஊரில் உங்களுக்கு அக்கம் பக்கத்தில் பொண்ணு கிடைக்கவில்லை என்றும், மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்றும் மணமக்களைத் தேடும் பெற்றோர்களைப் பார்க்கலாம். கிடைக்கவில்லை என்று அவர்கள் கூறுவதற்கு காரணம் என்ன? தாம் விரும்பும் தகுதியில் கிடைக்கவில்லை என்பதுதான் பிரச்சனை. வரதட்சினையும் ஒரு பிரச்சனையாக உள்ளது.

மக்கள்தொகைப் புள்ளிவிபரம் மணமக்களைப் பிரித்து திருமணத்திற்காக போட்டி போட்டுக் கொண்டிருப்பதாக கூறுகிறதா? இதனடிப்படையில் ஆண்களுக்கு திருமணம் செய்ய பெண்கள் பற்றாக்குறை ஏற்படும் என்று கூறுவது எதையாவதுச் சொல்லி ஏமாற்றுவதாகும். அப்படி அது உண்மையானால்  ஆண்கள் அதிகம் என்றும், பெண்கள் குறைவு என்றும் புள்ளுவிபரம் கூறும் நாடுகளில்,  ஒரு பெண் 4 ஆண்களைத் திருமணம் செய்துக்கொள்ளலாம் என்று சரீயத் சட்டத்தை மாற்றிடலாமா?

4. இதைப்போல சம உரிமை என்று பெண்கள் நான்கு ஆண்களை திருமணம் செய்துகொள்ள முடியாது என்று இசுலாமியர்கள் கூறும் சப்பைக்கட்டுகள்.

"பிறக்கும் குழந்தையின் தந்தை யார் என்று அடையாளம் காண முடியாது.'

மரபணு தொழில் நுட்பம் இன்று எளிமையாகிவிட்டதால் இதுவரை ~தகப்பன் யார்~ என்று எப்படிக் கூறுவது என்று அலறிக் கொண்டிருந்தவர்களின் குரல் சுருதி குறைந்து டொய்ங்…. என்று இழுக்க ஆரம்பித்துள்ளது டிஎன்ஏ சோதனை மூலம் அறிந்து கொள்ளவேண்டுமானால் பொருளாதார வசதி வேண்டும். அது எல்லோராலும் முடியாது. முடிவுகள் தவறாக இருந்துவிட்டால் என்ன  செய்வது என்றெல்லாம் புலம்புகின்றனர். பொருளாதாரப் பிரச்சனைதான் இனி காரணம் என்றால் பொருளாதார வசதியுள்ளப் பெண் 4 ஆண்களை திருமணம் செய்துகொள்ளலாம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். முடிவு தவறாகிவிட்டால்…. கற்பழிப்பு வழக்குகளில் எல்லாம் டிஎன்ஏ சோதனையை ஏற்றுக்கொள்வார்களாம். இதற்கு மட்டும் முடியாதாம்

ஒரு குழந்தைக்கு தந்தை யார் என்று பெரியவேண்டிய அவசியம் என்ன? 1300 ஆண்டுகளுக்கு முன்பு மனித உழைப்பு முதன்மையான உற்பத்தி சக்கதியாக இருந்தது. அதனால் தனக்கு குழந்தை பெற்றுத் தருகிறேன் என்று ஒப்பந்தம் செய்துகொண்டு தன்னிடம் பரிசுகளையும், உணவு மற்றும் தேவைகளையும் பெற்றுக்கொண்ட பெண் தமக்கு பெற்றுத்தராமல் ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காக "தந்தை" என்ற அடையாளம் அவசியமாக இருந்தது. ஒருவன் இறந்துவிட்டால் அவனது பிள்ளைகளை அவனது சகோதரர்கள் கைப்பற்றிக் கொண்டனர். இன்றைய நிலை என்ன? ஒருவன் இறந்துவிட்டாலும் அல்லது மனைவியை தலாக் சொல்லிவிட்டாலும் குழந்தைகளின் நிலைமை என்ன? பெண்ணின் தலையிலேயே பெரும்பாலும் பொறுப்பாக்கப்டுகிறது. உறவினர்களோ முகத்தைக்கூட திருப்புவதில்லை.

அனாதை ஆசிரமத்திற்கு செல்வோம். தாய், தகப்பன் யார் என்று கூடத் தெரியாத இலட்சக்கணக்கான பிள்ளைகள். இவர்கள் வளரவில்லையா, படிக்கவில்லையா, சமூகத்தில் வாழவில்லையா? தகப்பன் பெயர் இவர்களுக்கு எதற்கு?

குழந்தைகளற்ற பெற்றோர்கள் பிற குழந்தைகளை தத்தெடுத்துக் கொண்டுள்ளனர். அவர்கள் அக்குழந்தையை கண்ணும் கருத்துமாக வளர்க்கின்றனர். அப்படியிருக்க தன் குழந்தை என்று அடையாளம் தெரியாத குழந்தையின் நலத்தையும் பேண மனப்பக்குவமே தேவை. தந்தையின் பெய்ர் தேவையில்லை. இந்த மனப்பக்குவத்தை வளர்த்தால் குழந்தைகளுடன் மறுமணம் செய்துகொள்ளும் இளம் விதவைகளின் வாழ்வு இனிமையாக இருக்கும்.

இதன்பொருள் பெண்கள் ஒரே நேரத்தில் நான்கு ஆண்களை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என நான் வாதிட வரவில்லை. பலதாரமணம் என்ற நாகரீக காலத்திலிருந்து ஒருதார மணம் என்ற புரட்சிகர காலத்திற்குள் அடி எடுத்துவைத்துள்ள நாம் பழையதை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கக் கூடாது. அதற்கான சப்பைகட்டுகளை கட்டிக்கொண்டிருக்கக் கூடாது.

கொள்ளகை அளவில் இந்த சட்டத்தை ஏற்றுக்கொள்ளும் இசுலாமியர்களில் எந்தப் பெண்ணும் தன்னுடைய கணவன் 4 பெண்களைத் திருமணம் செய்துகொள்ளவதை ஏற்றுக்கொள்வதில்லை. பெண்ணைப்பெற்ற பெற்றோரும் ஏற்றுக்கொள்வதில்லை. விவாதத்திற்காக வரட்டுத்தனமாக ஆதரிக்கும் பல ஆண்கள்கூட உண்மையில் 4 திருமணைம் செய்துகொள்ள விரும்புவதில்லை. இன்றைய மனமொன்றிய காதல் வாழ்க்கை தன் மனைவியை வெறும் உடலுறவுக்கான தேவை என்று பார்பதில்லை. சவூதிபோன்ற சில நாடுகளைத் தவிர வேறு எங்கும் இனிமேல் இதனை நடைமுறைப்படுத்த முடியாது என்பதே உண்மை.

அதனல் இசுலாமியப் பெண்களே! உங்கள் கணவர் பிற ஒரு திருமணம் செய்துகொள்ள அனுமதிக்காதீர்கள். அதற்கு நபிவழி நிகழ்சியே உங்களுக்கு பக்கபலமாக இருக்கிறது. பலதாரமணச் சட்டத்தை எதிர்ப்பீர். புகாரி அவர்கள் சொல்வதுபோல தன்மானத்துடன் வாழ்வீர்!

–சாகித்

source:paraiyoasai.wordpress

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

அன்ன ஹசாரேவுக்கு ஆதரவாக தமிழ் சினிமாவும் களமிறங்குகிறது!

>> Sunday, August 21, 2011

 
Tamil cinema also to support anna hazare
ஊழலை ஒழிக்க இன்னொரு சுதந்திர போராட்டத்தை தொடங்கியிருக்கும், சமூக சேவகர் காந்தியவாதி அன்ன ஹசாரேவுக்கு ஆதரவாக நாடெங்கும் துவங்கியிருக்கும் எழுச்சி அலைக்கு ஆதரவாக, தமிழ் திரையுலகமும் களமிறங்குகிறது. நாட்டில் ஊழலை ஒழிக்க, வலுவான ஜன் லோக்பால் மசோதாவை அமல்படுத்த கோரி, டில்லி ராம்லீலா மைதானத்தில் 7வது நாளாக காந்தியவாதி சமூக சேவகர் அன்ன ஹசாரே உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இவருக்கு ஆதரவாக ஏராளமானபேரும் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அன்னாவுக்கு ஆதரவாக நாடெங்கும் புரட்சி தீ வெடித்துள்ளது. இந்தியா தவிர வெளிநாடுகளிலும் அன்ன ஹசாரேவுக்கு ஆதரவு குவிந்து வருகிறது.

இந்நிலையில் தமிழ் திரையுலகமும் அன்னாவுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதிக்கிறது. சென்னை பிலிம் சேம்பரில் நாளை காலை 9மணி முதல் மாலை 5மணி வரை உண்ணாவிரதம் நடைபெற இருக்கிறது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ் திரையுலகை சேர்ந்த அனைத்து சங்கங்களும் ஈடுபட இருக்கின்றனர். அபிராமி ராமநாதன், அமீர், ஜனநாதன், சித்ரா ‌லட்சுமணன் உள்ளிட்டவர்களும் பல்வேறு திரை நட்சத்திரங்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.


source:dinamalar
--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

ஈழப்பெண்களின் மார்புகளை அறுத்து ராஜபக்சே

>> Saturday, August 20, 2011

ஈழப்பெண்களின் மார்புகளை அறுத்து ராஜபக்சே: சீமான் ஆவேசம் !

 

இலங்கையில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள பாலியல் வன்முறைகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அறிக்கை விடுத்துள்ளார். அவ்வறிக்கையில், ��இலங்கையின் கிழக்கு மாவட்டங்களில் சிறிலங்க இராணுவத்தினரும், காவல் துறையினரும் தமிழ்ப் பெண்களை முகாம்களுக்குக் கடத்திச் சென்று அவர்களின் மார்பகங்களை அறுத்துவிட்டு, பிறகு கொன்றுவிடுவதாக அங்குள்ள தமிழர்கள் என்னைத் தொடர்பு கொண்டு அச்சத்துடன் கூறுகின்றனர். இலங்கையின் கிழக்கு மாவட்டமான மட்டக்களப்பில் உள்ள கல்லடி, காந்திபுரம், ஊரணி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து இப்படி பெண்கள் இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்படுகின்றனர் என்றும், இரவு நேரங்களில் வீட்டிற்குள் புகுந்து இவ்வாறு பிடித்துச் செல்வது கடந்த ஒரு மாத காலமாக நடந்து வருகிறது என்றும் கூறும் தமிழர்கள், அவ்வாறு பிடித்துச் செல்லப்படும் தமிழ்ப் பெண்களின் மார்பகங்கள் அறுக்கப்பட்டுக் கொல்லப்பட்ட சில சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். 

இதுவரை 20க்கும் மேற்பட்ட பெண்கள் இவ்வாறு பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் ஒருவரும் வீடு திரும்பவில்லையென்றும் கூறுகின்றனர். பிடித்துச் செல்லப்படும் பெண்களின் மார்பகங்கள் அறுக்கப்பட்டு, அவைகள் ஒரு யாகசாலைக்கு அனுப்பப்பட்டு, அங்கு யாக குண்டத்தில் வீசப்படுகிறது என்றும், இந்த யாகம் இலங்கை அதிபர் ராஜபக்சே நீண்ட காலம் வாழ மேற்கொள்ளப்படுவதாகவும் தங்களுக்கு தெரியவந்துள்ளதென அம்மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து காவல் நிலையங்களுக்குச் சென்று புகார் கூறினால் அதனை அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர். இலங்கையின் கிழக்கு மாவட்டங்களான திருகோணமலை, மட்டக்களப்பு ஆகியவற்றில், பல இடங்களில் கிரீஸ் தடவிய மனிதர்களை ஏவிவிட்டு பெண்களை மீது பாலியல் வன்முறை தொடுக்கப்பட்ட சம்பவங்களினால் அங்கு காவல் துறையினருக்கு எதிராக தமிழர்கள் போராடி வருகின்றனர். 

அவர்களின் போராட்டத்திறகு இதுவும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. கிரீஸ் மனிதன் அச்சுறுத்தலினால், இரவில் பெண்கள் எவரும் தங்கள் இல்லங்களில் தூங்காமல், ஒரு இடத்தில் எல்லோரும் கூடி ஒன்றாகவே துயில் கொண்டு வருகின்றனர். இச்செய்தியை அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே என்னிடம் பேசி உறுதி செய்துள்ளார். தமிழர்கள் மீது நேரடியாக போர் தொடுத்து பல இலட்சக்கணக்கானவர்களை அழித்தொழித்த சிறிலங்க அரசு, இப்போது தமிழினத்தை அழிக்க இப்படிப்பட்ட பாலியல் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளது என்று ஈழத் தமிழர்கள் கூறுகின்றனர். அவர்கள் கூறும் நிகழ்வுகளை கேட்டால் நெஞ்சம் பதறுகிறது. தமிழர்கள் பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்பட்டு, வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பதாக அவர்கள் கூறுகின்றனர். 

இது பாரிய மனித உரிமைப் பிரச்சனையாகும். இலங்கையில் அரச படைகளே இப்படிப்பட்ட வன்முறையின் பின்னணியில் இருந்து செயல்படுகின்றன. எவ்வித பாதுகாப்பும் இன்று தமிழர்கள் வாழ்வு ஒவ்வொரு நாளும் அச்சுறுத்தலிற்குள்ளாகியுள்ளது. �இலங்கையிலுள்ள தமிழர்கள் எங்கள் நாட்டு மக்கள், அவர்கள் பற்றி தமிழ்நாட்டின் முதல்வர் பேசத் தேவையில்லை� என்று கூறும் கோத்தபய ராஜபக்சே கும்பல் நடத்தும் ஆட்சியின் யோக்கியதைக்கு இது ஒரு அத்தாட்சியாகும். கோத்தபய ராஜபக்சதான் சிறிலங்க அரசின் பாதுகாப்புச் செயலர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது கட்டுப்பாட்டிலுள்ள இராணுவம்தான் தமிழர்களுக்கு எதிரான இப்படிப்பட்ட மறைமுக வன்முறைகளை ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கிறது. ஈழத் தமிழர்கள் மீது ஈடிணையற்ற அன்பும், அக்கறையும் காட்டிவரும் மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள், இப்பிரச்சனையிலும் கவனம் செலுத்தி, ஐ.நா.விற்கும், பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கூறி தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 

இந்திய மத்திய அரசு, இலங்கை அரசுக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, இப்பிரச்சனையை மனித உரிமை அமைப்புக்களிடம் தமிழக முதல்வர் நேரிடையாகவே கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்�� என்று தெரிவித்துள்ளார்.


source:athirvu


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

போலீஸ்காரர் பொண்டாட்டி நடத்திய கூத்து

>> Thursday, August 18, 2011



போலீஸ்காரர் பொண்டாட்டி நடத்திய மினி பார்

சேலம் மாவட்டத்தில், பிராந்திக்கடைகள் இல்லாத கிராமப்புறங்களில் குடிமக்களுக்கு சரக்கு தேவைகளை பூர்த்திசெய்வதற்கு அந்த ஊரில் உள்ள  யாராவது ஒருவர் சரக்கு வாங்கி வந்து விற்பனை செய்வார். இதற்கு "சந்துக்கடை" என்று பெயர்.

இந்த "சந்து" கடைகள் இல்லாவிட்டால் யாராவது கள்ளசாராயம் விற்க ஆரம்பிப்பார்கள் என்பதாலும், மாத மாதம் தங்களுக்கும் கொஞ்சம் சில்லறையும், உள்ளூரில் கள்ளச்சாராயம் விற்பவர்கள் பற்றி தகவலும் கொடுப்பார்கள் என்பதால் மதுவிலக்கு காவல்துறையும் இந்த "சந்து" கடைகளை கண்டுகொள்ள மாட்டார்கள். வீரகனூர் பக்கமுள்ள, கிழக்கு ராஜாபாளைய்த்தில் இருக்கும் சீராளன் என்பவர் தமிழ் நாடு காவல்துறையில் சென்னை மாநகர் ஆயுதப்படையில் காவலராக பணியாற்றுகிறார்.


சென்னையிலிருந்து சில மிலிட்டரி பாட்டில்களையும், பர்மா பஜாரிலிருந்து சில வெளிநாட்டு பாட்டில்களையும், போலீஸ்காரர் என்ற கோதாவில் தள்ளிக்கொண்டு வந்து வீட்டில் "சும்மா" இருக்கும் தன் மனைவி ஜெகதாம்பாள் மூலமாக, கிழக்கு ராஜாபாளையத்தில் கூடுதல் விலைக்கு விற்றுவந்தார்.


உள்ளுரில் சரக்கு யாருக்காவது 'சரக்கு" வேண்டுமென்றால், அங்கிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வீரகனூர் சென்றுதான் வாங்கி வரவேண்டியிருந்தது.
 
தன் ஊரில் உள்ள சொந்தக்காரர்கள், அண்ணன் தம்பிகள் எல்லாம்  தண்ணிக்கு திண்டாடுவதை பார்த்த சீராளனுக்கு அந்த மக்களுக்கு உதவவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தனது காவல்துறை அதிகாரத்தை பயன்படுத்தி தனது வீட்டிலேயே ஒரு மதுபானக்கடை துவக்கிவிட்டார்.


முதலில் பாட்டிலுக்கு இரண்டு ரூபாய் கூடுதலாக வைத்து விற்பனை செய்த சீராளன், பின்னர் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாகவும் சில சமையத்தில் பீர்பாட்டிலுக்கு இருபது ரூபாய் வறை கூடுதலாக வைத்து விற்றுள்ளார்.


நேற்று சரக்கு வாங்கப்போன ஒரு குடிமகன், கூடுதல் விலை கட்டுபடியாகாத காரணத்தால் கடுப்பாகிப்போனவர், சேலம் மாவட்ட எஸ்.பி மயில் வாகனத்துக்கு ஒரு போன் போட்டு, உங்கிட்ட வேலை செய்யிற ஆளுகிட்டேயே இப்படி அநியாய வெலைக்கு சரக்கு விக்கலாமா...? கொஞ்சம் விலையை குறைச்சு பாட்டில் விக்கச் சொல்லுப்பா... என்று போட்டுக்கொடுத்துவிட்டார்.


எஸ்.பி. ஆத்திரமடைந்து, ஆத்தூர் மதுவிலக்கு காவல்துறையை தொடர்பு கொண்ட எஸ்.பி இன்னும் ஒருமணி நேரத்தில் ஜெகதாம்பாள் மீது எப்.ஐ.ஆர் போட்டிருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்.


பறந்து போன ஆத்தூர் போலீசார் ஜெகதாம்பாளையும், அவறது வீட்டில் 47, பெட்டிகளில், அடுக்கி வைக்கப்பட்டிருந்த  440, பாட்டில் பீர், பிராந்தி, விஸ்க்கி என ஒரு மினி டாஸ்மாக் கடையையும் தூக்கிக்கொண்டு வந்துவிட்டனர்.


நல்ல வேலை சீராளன் போலிசாக இருந்ததால் இந்த அளவோடு போனது... கொஞ்சம் பெரிய அதிகாரியாக இருந்திருந்தால் இன்னும் என்னென்ன செய்திருப்பாரோ?


source:nakkheeran

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

பிஜே யுடன் நேரடி விவாதம்-சாக்சி



கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளுக்கு ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.இந்த இடைபட்ட நாற்களில் நடைப்பெற்ற முக்கிய சம்பவங்களை உங்களுக்கு விவரித்துச்சொல்லுவதற்கு ஆவலாக உள்ளேன். முதலில் SAN பற்றி உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.( http://sakshitimes.org/ )இது ஒரு அனைத்து கிறிஸ்தவர்களின் கூட்டமைப்பு.இதில் பலர் இணைந்து ஆண்டவரின் நாமத்தை உலக்குக்கு அறிவித்து வருகிறார்கள்.இதில் இஸ்லாமியர்களுடனான விவாதப் பிரிவு ஜெர்ரி தாமஸ் என்பவர் உடபட அநேகரை கொண்டு செயல்படுகிறது.இது கிறிஸ்தவ சபைகளின் கீழ்(அதாவது ஆதரவுடன்) இயங்கும் சுயாதீன அமைப்பு.


இந்த அமைப்பின் மூலம் செய்யப்பட்டது என்ன?


"டாக்டர் ஜாகிர் நாயக் /எம். எம். அக்பர் விவாதம் புரிய மறுக்கிறார்கள்:" 

 கேரளாவிலும் ,ஆந்திராவிலும் கிறிஸ்தவ சபைகளுக்கு சவாலாக விளங்கிய இஸ்லாமிய தாவா பிரச்சாரகர்களின் வாதஙக்ளுக்கு விளக்கம் அளித்தது(http://www.sakshitimes.org/index.php?option=com_content&task=view&id=545&Itemid=62 ) ,பல இடங்களில் விவாதக்கூட்டங்களை நடத்தி நேரடி விவாதங்களில் கலந்துக்கொள்ளுவது (http://www.sakshitimes.org/index.php?option=com_content&task=view&id=554&Itemid=62 )போன்ற செயல்பாடுகளால் அந்த மாநிலங்களில் உள்ள தாவா பிரச்சங்கிகளின்(இதர மார்க்கத்தார்களை இஸ்லாமுக்கு வரும் படி அழைக்கும் இஸ்லாமியர்கள்) கிறிஸ்தவ எதிர் தாக்குதல்களை முறியடித்தது.மேலும் பல இஸ்லாமிய நண்பர்களால் பெருமையுடன் அறிமுகப்படுத்தப்படும் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களை விவாதத்துக்கு அவர்கள் அலுவலகத்துக்கே சென்று அழைப்புக்கடிதம் கொடுத்து அழைத்தார்கள்.ஆனால் செல்லாத பல காரணங்களை சொல்லி டாக்டர் ஜாகிர் நாயக் தட்டிக்கழித்துவிட்டார்.(http://www.sakshitimes.org/index.php?option=com_content&task=view&id=537&Itemid=42) இது போலவே கேரளாவின் தாவா பிரசங்கி எம் எம் அக்பர் விவாதம் செய்ய ஒப்புக்கொண்டுவிட்டு பின்பு விவாதத்திற்கு வரவில்லை(http://www.sakshitimes.org/index.php?option=com_content&task=view&id=308&Itemid=42&limit=1&limitstart=1).இதெல்லாம் பழைய கதைகள்.ஆனால் இது அறியாத பல தமிழ் இஸ்லாமிய நண்பர்கள் நேரடி விவாத்த்திற்கு கிறிஸ்தவர்கள் வரமாட்டார்கள் என்று முடிவு செய்து அதை பிரச்சாரமாக்கிவிட்டார்கள். உமர் அண்ணா போன்ற சில நண்பர்கள் நேரடி விவாத்த்தை தவிர்க்கிறார்கள்.இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம்.அவர்களை நிர்பந்திக்க முடியாது.ஆனால் என்னைப்பொருத்தவரை நேரடி விவாதம் சாத்தியமானதே.இதற்காக பல வருடங்கள் ஜெபித்து வருகிறேன். கடந்த சில நாட்கள் முன்பு சாக்சி அமைப்பின் நிர்வாகிகளிடம் சில இஸ்லாமிய நண்பர்கள் விவாத அறைகூவல் விட்டனர்.இதை சாக்சி ஏற்றுக்கொண்டவுடன் உடனடியாக TNTJ விடம் அறிமுகப்படுத்தப்பட்டனர்.முதல் அறிமுகத்துக்காக TNTJ மாநில அலுவலத்துக்கு சென்றனர் சாக்சி நிர்வாகிகள்.ஆனால் அங்கு வீடியோ சகிதம் TNTJ அமைப்பினர் சகோதரர் பி.ஜெய்னூல் ஆபிதீன் அவர்கள் தலைமையில் ஒரு விவாத ஒப்பந்த நிகழ்ச்சியாக அதை மாற்ற முடிவு செய்தனர்.இதை எதிர்பார்காத சாக்சி கொஞ்சம் சுதாரித்து பின்பு பேச ஆரம்பித்தனர்.பல நிபந்தனைகளோடு TNTJ அமைப்பினர் பேச ஆரம்பித்தனர்.ஆனால் அவைகளை ஏற்றுக்க்கொள்ளும் அதிகாரம் அந்த குழுவுக்கு முழுமையாக இல்லை.காரணம் TNTJ எதை சொல்ல வருகிறது என்பதை தெரிந்துகொள்ளவே வந்திருந்ததால் அவர்கள் விவாத ஒப்பந்த அதிகாரம் பெற்றிருக்கவில்லை.இரண்டாவது மொழிப்பிரச்சனை.சாக்சி அமைப்பில் தலைமை ஏற்று வந்திருந்த அஜய் அவர்களுக்கு தமிழ் முழுமையாக புரியாது.அவர் ஆங்கிலத்திலேயே அதிகம் பேசக்கூடியவர்.TNTJ ல் பி.ஜே அவரகள் தமிழில் பேச அதை அஜய் அவரக்ளுடன் வந்தவர்கள் மற்றும் சகோதரர் கலீல் ரசூல் அவர்கள் ஆகியோர் ஆங்கிலத்தில் சொல்லிவந்தனர்.ஆனாலும் அந்த பேச்சு முழுமை அடையவில்லை.மீண்டும் மெயில் மூலம் பேசி ஒப்பந்த தேதி அறிவிக்கலாம் என்ற நிபந்தனைகளோடு சாக்சி குழுவின் சந்திப்பு அன்று முடிவடைந்தது". இந்த வீடியோ தொடுப்பு : http://www.youtube.com/watch?v=69eOnVeh3Q8 இதன் பின் சில மெயில் பரிமாற்றங்கள் நடைபெற்றன.அதில் TNTJ வின் நிபந்தனைகள் சரியானது அல்ல என்று சாக்சியால் சொல்லப்பட்டது.ஆனால் TNTJ அது தங்களின் நிலைபாடு என்றது.இதன் பின் TNTJ அனுப்பிய ஒரு மெயில் சாக்சியால் தவறவிடப்பட்டது.அதில் TNTJ குறிப்பிட்ட தேதியை அறிவித்து அந்த தேதிக்குள் சில நிபந்தனைகள் வைத்து இல்லையென்றால் சாக்சி விவாதத்தில் இருந்து ஓடிவிட்டது என்று வெளியிடுவோம் என்று அறிவித்திருந்தது.ஆனால் இணையத்தில் இந்த செய்தி வெளியானவுடன் சாக்சி தனது தரப்பு நிலையை விளக்கியது.ஓட்டம்பிடித்தார் என்று போடவேண்டிய அவசியம் என்ன?எங்களின் மற்ற உறுப்பினர்களின் மெயில் ஐடி மற்றும் போன் நம்பர் இருந்தும் இந்த விசயத்தில் இவ்வளவு அவசரம் காட்ட வேண்டியதில்லை என்ற கேள்வியுடம்(இடையில் சில வாக்குவாதங்கள் மெயிலில் நடந்தது அவைகளை உஙக்ளுக்கு தொடுப்புக்கொடுக்கிறேன்.அதில் படித்துக்கொள்ளவும். http://www.sakshitimes.org/index.php?option=com_content&task=view&id=555&Itemid=42 )ஒப்பந்த அமர்வுக்கு தேதி கேட்டு மெயில் அனுப்பியது.TNTJ தரப்பில் ஜூன் மாதம் 3 ந்தேதி அளிக்கப்பட்டது.

  "TNTJ மற்றும் SAN(சாக்சி) விவாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது:"

 இதற்கிடையில் நேரடி விவாத ஆர்வத்தில் இருந்த எனக்கு சாக்சியில் தொடர்பு கிடைத்தது.அதினால் விவாத ஒப்பந்தம் செய்ய பொறுப்பெடுத்துக்கொண்டு சகோதரர் அஜய் அவர்கள் தலைமையில் TNTJ அலுவலகத்துக்கு சென்றோம்.மாலை 3 மணிக்கு சென்ற நாஙகள் சகோதர் பி.ஜெய்னூல் ஆபிதீன் அவர்கள் தலைமையில் இருந்த TNTJ அணியினருடன் இரவு 12.30 மணிவரை விவாதத்திற்கான இறுதி ஒப்பந்த வடிவத்தை கொண்டு வந்தோம்.கடைசியில் எல்லாம் முடிந்து விட்டது என்ற நிலையில் பி.ஜே அவர்கள் எங்களிடம் விடைபெற்றார்கள்.நாங்கள் அமர்ந்து ஒப்பந்தத்தை தமிழில் டைப் செய்துவந்த TNTJ சகோதரர்களுடன் பேசிய படியே வாரகடைசி நாட்களான சனி ஞாயிறு ஆகிய கிழமைகளின் நேரத்தை குறிக்கும் பொழுது ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்து எங்களால் முடியாது வேண்டுமானால் வெள்ளி,சனி கிழமை வைக்கலாம் என்று எங்கள் தரப்பில் கேட்கப்பட்டதற்கு TNTJ தரப்பு மறுத்துவிட்டது.உடனே பி.ஜே அவர்களுக்கு போன் செய்து இது தொடர்பாக பேசப்பட்ட பொழுது அவர் ஞாயிறு மதியம் 2 மணியில் இருந்து இரவு 11 மணிவரை விவாதிக்கலாம் என்ற செய்தியை சொன்னார்.ஆனாலும் நேரத்தை தவிர அனைத்து விவரங்களும் முடிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில் இது எங்கள் சபைத்தலைவர்களிடம் கலந்துரையாடிவிட்டு அதை உறுதி செய்கிறோம் அதற்குள் விவாத ஒப்பந்த வரைவை மெயில் செய்ய கேட்டுக்கொண்டு விடைபெற்று அங்கிருந்து கிளம்பினோம்.(இவை அனைத்தும் இரண்டு தரப்பாரும் வீடியோவில் பதிவு செய்துள்ளோம்.கர்த்தருக்கு சித்தமானால் சீக்கிரம் வெளியிடப்படும்).இது நடைபெற்றது ஜூன் 3 தேதி. இதன் பின் பல மெயில் பரிமாற்றத்திற்கு(அவைகள் அனைத்தும் இந்த இணைப்பில் உள்ளதுhttp://www.sakshitimes.org/index.php?option=com_content&task=view&id=555&Itemid=42 ) பிறகு மீண்டும் ஜூன் 3 தேதி உறுதி செய்யப்பட்ட விவாத நிபந்தனைகளை ஒப்பந்தமாக்கி கையெழுத்து இட ஜூலை 29 தேதி TNTJநேரம் ஒதுக்கியது.அன்று மாலை 5 மணிக்கு சென்ற நாங்கள் அடுத்த நாள் அதிகாலை ஏறக்குறைய 4 மணிவரை உட்கார்ந்து விவாத ஒப்பந்தத்தை கையெழுத்திட்டோம்..(இதில் முக்கியமானவை இரண்டு தரப்பாரும் வீடியோவில் பதிவு செய்துள்ளோம்.கர்த்தருக்கு சித்தமானால் சீக்கிரம் வெளியிடப்படும்).அதை பதிவிறக்க இந்த தொடுப்பில் செல்லவும்.படிக்க மட்டும் இந்த தொடுப்பில் செல்லவும்.ஜூன் 3 தேதியில் இருந்து ஜூலை 29 வரை இந்த செய்தி TNTJ வால் தங்கள் இணைய தளத்தில் வெளியிடப்படவில்லை.அதற்கு பல வேலை பளுவால் இதை செய்ய முடியவில்லை என்ற விளக்கம் TNTJவால் தரப்பட்டது. தொடர்ந்து நேரடி விவாதத்தில் ஆர்வமுள்ள கிறிஸ்தவர்கள் எங்களோடு இணைய உங்களை அழைக்கிறோம்.இமெயில் ஐடி:mycoimbatore@gmail.com எல்லோரும் விவாதம் செய்ய வேண்டும் என்பதில்லை.நாம் இணைந்து கர்த்தரின் இராஜ்ஜியத்தைக்கட்டுவோம் வாருங்கள்.ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகிறேன்.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பராக.தொடர்ந்து ஜெபியுங்கள்.கர்த்தருடைய விலையேறப்பெற்ற நாமம் மகிமைப்படுவதாக.ஆமேன். source:www.tamilchristians.com

StumbleUpon.com Read more...

சொன்னதைச் செய்தார் செல்வி ஜெயலலிதா !


ஈழத் தமிழர்களுக்கு சொன்னதைச் செய்தார் செல்வி ஜெயலலிதா !

தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் அனைத்தும் தமிழக முகாம்களில் வாழும் இலங்கை தமிழ் மக்களுக்கும் விரிவுபடுத்தப்படும் எனத் தமிழக முதல்வர் முன்னர் கூறியிருந்தார். அதன் முதல் கட்டமாக பல ஈழத் தமிழ் குடும்பங்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை அவர் வழங்கியுள்ளார். ஈழத் தமிழ் குடும்பங்களை நேரில் சந்தித்து அவர் இத் திட்டங்களைக் கையளித்துள்ளார். இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்; தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா இலங்கைத் தமிழர்கள் நலனில் எப்போதும் மிகுந்த அக்கறையும், ஆதரவும் கொண்டு அவர்கள் நல்லமுறையில் வாழ தமிழக மக்களுக்குக் கிடைக்கப் பெறும் அனைத்து நலத் திட்டங்களும் அவர்களுக்கும் கிடைத்திட நடவடிக்கை எடுத்து வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா நேற்று(16.08.2011) தலைமைச் செயலகத்தில் வைத்து திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி முகாம் வாழ் இலங்கை தமிழர்கள் லட்சுமி வேலு, வேலு, லட்சுமி துரைசாமி ஆகியோருக்கு ஆதரவற்ற முதியோர் ஓய்வூதியத் திட்டத்திற்கான ஆணையையும், புவனேஸ்வரி, நாககன்னி, சுந்தரியம்மாள் ஆகியோருக்கு ஆதரவற்ற பெண்கள் ஓய்வூதியத் திட்டத்திற்கான ஆணையையும், இன்பரதி, சிவபாக்கியம், கமலாதேவி ஆகியோருக்கு ஆதரவற்ற விதவையர் ஓய்வூதியத் திட்டத்திற்கான ஆணையையும்,

சுகநந்தினி, வத்சலா, பத்மவேணி ஆகியோருக்கு திருமண உதவி திட்டத்தின் கீழ் திருமாங்கல்யம் செய்ய தலா 4 கிராம் தங்கம் மற்றும் 25,000 ரூபாய் நிதியுதவியும், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி முகாமில் இயங்கி வரும் அன்னை தெரசா மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த அமிர்தசெல்வநாயகி, ஜூலியட் கொன்சி, தென்றல் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த நாகம்மாள், ஞானசீலி, புதிய உதயம் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த விஜயா, பத்மஜோதி ஆகிய மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு சுழல் நிதியினையும், வாசுகி, பாக்கியலட்சுமி ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்களையும் வழங்கினார் என அதிர்வு இணையம் அறிகிறது. (புகைப்படங்கள் சில இணைக்கப்பட்டுள்ளது)








source:athirvu


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

அடிமைச்சந்தையால் விளைந்த ஆப்ரகாம் லிங்கன்

>> Tuesday, August 16, 2011

StumbleUpon.com Read more...

ஆபாசப்படம் எடுத்த சிப்பாய் மாட்டினார் !


தரம் 10 மாணவனை ஆபாசப்படம் எடுத்த சிப்பாய் மாட்டினார் !

 

பாடசாலை மாணவன் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமையுடன் ஆபாச வீடியோ எடுத்துக் கொண்டமைக்காக முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கேகாலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். 3 பிள்ளைகளின் தந்தையான ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாயான இவர் ஆட்டோ ஓட்டி பிழைத்துவருகிறார். போயா தினங்களை அனுஷ்டித்து அதனூடாகக் கிடைக்கும் தின் பண்டங்களை இவர் அம்மாணவனுக்குக் கொடுத்து நட்பை வளர்த்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மாணவன் அப் பிரதேசத்தில் முன்னணிப் பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் பயில்பவர் என்று கூறப்படுகிறது. சம்பவ தினமன்று குறித்த மாணவன் நேரத்துக்கு வீடு திரும்பாததால் பதற்றமுற்ற தாயார் அவனைத் தேடிச் சென்றுள்ளார். 

அவர்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ள மறைவிடம் ஒன்றில் குறித்த சிப்பாயின் ஆட்டோ நிற்பதைப் பார்த்த தாயார் அங்கே சென்றபோது, சிப்பாய் மாணவனை வீடியோ எடுத்துக்கொண்டு இருந்ததாகவும் அவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் தாயார் பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இதனை அடுத்து கேகாலைப் பொலிசார் குறித்த சிப்பாயைக் கைதுசெய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி அச்சிப்பாய் தீவிர சமய நம்பிக்கை உள்ளவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவர் கொடுக்கும் தின்பண்டங்களில் ஏதாவது கலக்கப்பட்டிருக்கிறதா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை நடத்திவருவதாக மேலும் அறியப்படுகிறது.



source:athirvu
--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

தங்கையுடன் தவறான உறவுக்கு தூண்டிய சாட்டிங்(வீடியோ இணைப்பு)

>> Monday, August 15, 2011


இணையதள அரட்டை – குறும் படம் – வீடியோ இணைப்பு

இணையத்தில் அரட்டை அடித்தல் இளையோர்களுக்கு மிகவும் பிடித்தமான விடயம். இந்த அரட்டை காரணமாக இளையோர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகி இருக்கின்ற மந்திர வார்த்தை asl plz என்பதாகும். இதில் a என்பது age ஐயும், s என்பது sex ஐயும், l என்பது location ஐயும் குறிக்கின்றன. இளையோர்களின் இணைய அரட்டையை மையப்படுத்தி இந்தியாவில் குறும்படம் ஒன்று எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு asl plz என்றுதான் பெயர் வைத்து உள்ளனர். இணைய உலகில் இக்குறும்படம் பிரபலம் அடைந்து வருகின்றது. இளைஞன் ஒருவர் ஒன் லைனில் யுவதி ஒருவரை கண்டு பிடிக்கின்றார். பரஸ்பரம் இணையத்தில் கண்டு கொள்ளாமலேயே இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து விடுகின்றது.

இருவரும் இன்ரநெட் கபே ஒன்றில் சந்திக்கின்றமைக்கு தீர்மானிக்கின்றனர். மிகுந்த ஆவலுடன் கபேயில் காத்து இருக்கின்றார் யுவதி. பல எதிர்பார்ப்புகளுடன் வந்து சேர்கின்றார் இளைஞன். ஒருவரை ஒருவர் சந்திக்கின்றமைக்கு முன்பாக இருவர் மனதிலும் எத்தனையோ எண்ணங்கள் அலை மோதுகின்றன. ஒருவரை ஒருவர் கண்டு கொள்கின்றார்கள். ஆனால் இருவரது இதயமும் சுக்கு நூறாக வெடித்து விடுகின்றது. ஏன் என்று குறும்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.


--

source:tamilspy
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

குளிக்கும்போது படையினர் மொபைல் போனில் படம் எடுத்தனர்: அதிர்ச்சி சாட்சியம் !

>> Saturday, August 13, 2011


 

போரின் இறுதிக்கட்டத்தின்போது தமிழ்ப் பொதுமக்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பெண்போராளிகள் மீது படைகள் பாலியல் தாக்குதல்களை மேற்கொள்ளவில்லை என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்திருந்தார். அத்துடன் எந்தவொரு பாலியல் தாக்குதலும் அங்கு நடக்கவில்லை என்றும் இந்தியாவின் ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில் கூறியுள்ளார். இராணுவத்தின் போர்க்குற்றங்களின் பட்டியலில் முகாம்களில் இருந்த பெண்கள் மீதான துன்புறுத்தலும் அடங்கியுள்ளது. இதனை ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சி பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களுடன் தற்போது வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட ஒருவர் தான் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக தம்மிடம் தெரிவித்ததாக ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சி கூறியுள்ளது. முகாமில் ஒவ்வொரு முறையும் நாங்கள் காலையில் எழுகின்றபோது, நான்கு - ஐந்து பெண்கள் காணாமல் போயிருப்பர். அவர்களுக்கு என்ன நடந்தது என்று நாம் அறியவில்லை� என்று பாதிக்கப்பட்ட மற்றொருவர் ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சியிடம் கூறியுள்ளார். உணவுக்காகவும், (மாதவிடாய்) சுகாதாரத் துண்டுகளுக்காகவும், உடைகளுக்காகவும் தான் ஒவ்வொரு முறையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக வேறொரு பெண்ணும் சாட்சியம் அளித்துள்ளார். 

குளிக்கும்போது ஆண் படையினர் தம்மை கையடக்கத் தொலைபேசிகளில் படம் எடுத்ததாகவும், அதற்காகவே தம்மை திறந்தவெளியில் குளிக்க நிர்ப்பந்தித்ததாகவும் ஹெட்லைன்ஸ் ருடேயிடம் மற்றொரு பெண் கூறியுள்ளார். அரசாங்கத்தினால் உலகிற்கு வெளிப்படுத்தப்பட்டாத இரகசிய முகாம் ஒன்றில் ஒரு பெண் ஒரு ஆண்டைக் கழித்துள்ளார். �அது ஒரு சித்திரவதை முகாம். அடிப்படை வசதிகள் எமக்கு கிடைக்கவில்லை. அரசசார்பற்ற நிறுவனங்களும் அனுமதிக்கப்படவில்லை.� என்கிறார் சுந்தரி என்னும் ஒரு பெண். அது ஒரு இராணுவ முகாம். என்ன பிரச்சினையென்றாலும் இராணுவத்தினரையே அணுக வேண்டும். அவர்கள் சில பெண்களிடம் தவறாக நடந்து கொண்டனர்.� என்று தெரிவித்துள்ளார் சுந்தரி.

அங்கே பாலியல் வன்புணர்வுகள் நடந்தன. இளம்பெண்கள் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டனர். ஆனால் எப்படி அதை வெளியே சொல்ல முடியும்? அவர்கள் சங்கடப்படுவார்கள், பெண்கள் ஆடைகளின்றி அறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். நாங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்ததால், அவர்கள் எம்மை துன்புறுத்தினர். எம்மைத் தடுத்து வைத்துத் துன்புறுத்தினர் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


source:athirvu


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

கலைஞர் "டிவி':எனக்கு தெரியாது -கனிமொழிவிடும் கரடி

>> Friday, August 12, 2011


கலைஞர் "டிவி' எப்படி செயல்படுகிறது என்பதே எனக்கு தெரியாதுபுதுடில்லி: "கலைஞர் "டிவி' எப்படி செயல்படுகிறது என்று எனக்குத் தெரியாது. அதன் செயல்பாட்டிற்கும், எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை' என, ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, ராஜ்யசபா எம்.பி., கனிமொழி, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நேற்று தெரிவித்தார்.
"2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக, குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதன் மீதான விவாதம், இரண்டு வாரங்களாக, டில்லி, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. டில்லி வழக்கறிஞர்கள், நேற்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டதை அடுத்து, இந்த வழக்கு விசாரணை தடைபட்டது. வழக்கறிஞர்கள் யாரும் நேற்று, வாதாட மறுத்து விட்டனர். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள், தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு, நீதிபதி ஓ.பி.சைனி, அனுமதியளித்தார். இதையடுத்து, ஒவ்வொருவராக, தங்கள் கருத்துக்களை, சுருக்கமாக, அதிகாரபூர்வமற்ற வகையில், எடுத்து வைத்தனர்.
தொலைத் தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ராஜா கூறியதாவது: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த விஷயத்தில், நான் தனிப்பட்ட முறையில் முடிவு எடுத்ததாக, சி.பி.ஐ., கூறுகிறது. ஆனால், 2008 ஜனவரி 6ல், பிரதமர் அலுவலகம், குறிப்பு ஒன்றை அனுப்பியது. அதில், தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு, முந்தையக் கட்டணத்திலேயே, துவக்க நிலையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு அளிக்கலாம் என, கூறப்பட்டிருந்தது. ஆனாலும், பிரதமர் அலுவலகம் மீது, இந்த விஷயத்தில் சி.பி.ஐ., சந்தேகம் தெரிவிக்கிறது. பிரதமர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டியது என் கடமை. மத்திய அரசில், 12 ஆண்டுகள் அமைச்சராக இருந்துள்ளேன். அமைச்சராக பதவிப் பிரமாணம் எடுக்கும்போது, அரசியல் அமைப்பு சட்டத்துக்கு கட்டுப்படுகிறேன் என, கூறினேன். இவ்வாறு ராஜா கூறினார்.
தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி கூறுகையில்,"கலைஞர் "டிவி' செயல்பாட்டிற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்கள், எப்படி செயல்படுகின்றனர் என்பதும், அங்கு என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்பதும் எனக்குத் தெரியாது'என்றார். கலைஞர் "டிவி' மேலாண் இயக்குனர் சரத் குமார் கூறுகையில், "கடந்த சில மாதங்களாக, சிறையில் நாங்கள் அவதிப்படுகிறோம். குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்கள் மீது, இன்னும் குற்றப்பத்திரிகை கூட, தாக்கல் செய்யவில்லை'என்றார். தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெகுரா மற்றும் ஷாகித் பல்வா உள்ளிட்டோரும், தங்கள் கருத்துக்களை, நீதிபதியிடம் தெரிவித்தனர்.

source:dinamalar

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

கொலைகளத்தின் கண் கண்டசாட்சி: புதுக்காணொளி வெளியிடப்பட்டது !

>> Wednesday, August 10, 2011

 

 

புதுடில்லியைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஹெட்லைன் ருடே என்ற தொலைக்காட்சி இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பிலான இரண்டு மணி நேர புதிய ஆவணப்படம் ஒன்றை நேற்று செவ்வாய்கிழமை இரவு 7.30 தெராடக்கம் 9.30 வரை ஒளிபரப்பியது. பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட �இலங்கையின் கொலைக்களங்கள்� என்ற ஆவணப் படத்தை 3 நாட்கள் தொடர்ச்சியாக ஒளிபரப்பி இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதும் இந்த ஹெட்லைன் ருடே தொலைக்காட்சியே ஆகும். 

இந்த நிலையில் இன்றிரவு இனப்படுகொலையின் கண்கண்ட சாட்சி- இலங்கையில் நடந்த கொலைக்களங்கள் (I witnessed Genocide: Inside Lanka�s Killing Fields) என்ற ஆவணப்படத்தை இத்தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இத் தொலைக்காட்சியின் நிருபர் ஒருவர் நேரடியாக கிளிநொச்சி சென்று பொதுமக்களைச் சந்தித்துள்ளார். மிகவும் இரகசியமாக எடுக்கப்பட்டுள்ள சில காணொளி ஆதாரங்கள் இப் பதிவில் இடம்பெற்றுள்ளன. கீழ் காணும் தொடர்பை அழுத்தி காணொளியை பார்வையிடவும்.


source:athirvu

StumbleUpon.com Read more...

இன்டர்நெட் மூலம் ஆண்களிடம் பழகி ரூ. 40 லட்சம் சுருட்டிய பெண்.

>> Tuesday, August 9, 2011


இன்டர்நெட் மூலம் ஆண்களிடம் பழகி ரூ. 40 லட்சம் சுருட்டிய பெண்.
 

இன்டர்நெட் மூலம் ஆண்களிடம் பழகி ரூ. 40 லட்சம் வரை சுருட்டிய மோசடி ராணி சென்னையில் கைது செய்யப்பட்டார். சென்னை, ஒட்டேரி ஜமாலியா பெரம்பூர் நெடுஞ்சாலையை சேர்ந்தவர் பிரியதர்ஷினி (வயது 25), பி. எஸ். சி. பட்டதாரியான இவர் மீது பல மோசடி புகார்கள் கூறப்பட்டன. தந்தையை இழந்த இவர் தாயார் மற்றும் அண்ணனோடு வசித்து வந்தார். இன்டர்நெட்டில் பல தரப்பட்ட வசதி படைத்த இளைஞர்களோடு இவர் தொடர்பு வைத்து ரூ. 40 இலட்சம் வரை சுருட்டியதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

இவரிடம் சென்னை கே. கே. நகரைச் சேர்ந்த மகேஷ் (வயது 28) என்ற வாலிபர் ரூ. 12 லட்சம் வரை பறிகொடுத்துள்ளார். சினிமாவில் நடிப்பதற்கு தயாராகி வரும் இருவருக்கு கோடீஸ்வரர் டாடா குடும்பத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக ஆசை வார்த்தை காட்டி உள்ளார். இதை நம்பி இவரும் பணத்தை வாரி இறைத்துள்ளார். கடைசியில் மோசம் போனது தெரிந்தவுடன் ஓட்டேரி பொலிஸில் புகார் கொடுத்தார். இதேபோல் யாசர் அராபத் என்ற வாலிபர் ரூ. 90 ஆயிரமும், சாய்நவீன் என்பவர் ரூ. 1 லட்சத்தையும், ஒரு லேப்டாப்பையும் பறிகொடுத்ததாக புகார் கொடுத்து உள்ளனர். புகார்கள் மேலும் குவித்த வண்ணம் உள்ளன.

கமிஷனர் திரிபாதி உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன், இணை கமிஷனர் செந்தாமரைக்கண்ணன், துணை கமிஷனர் அஸ்வின் கோட்னிஸ், உதவி கமிஷனர் லோகநாதன் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் அரிக்குமார், ரவீந்திரன், ரேவதி ஆகியோர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இன்று மாலையில் பிரியதர்ஷினி கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் பொலிஸார் சோதனை போட்டார்கள். 28 சவரன் தங்க நகைகள், 1 லேப்டாப், 11 செல்போன்கள், இரண்டு ஏ.சி. மெஷின்கள், வாஷிங்மெஷின், பிரிட்ஜ், கம்யூட்டர் மற்றும் ஏராளமான பொருட்களையும், ரொக்கப் பணத்தையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ. 6 லட்சம் ஆகும். இந்த பொருட்கள் எல்லாம் மோசடி செய்த பணத்தில் வாங்கியதாக கண்டறியப்பட்டுள் ளது. அவரை நேற்று இரவு மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் ஓட்டேரி பகுதியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரியதர்ஷினி பல குரலில் பேசுவதில் வல்லமை பெற்றவர். ஆண் குரலிலும், இனிய பெண் குரலிலும், குழந்தைகள் குரலிலும் கூட இவர் பேசுவார். பல குரல்களில் பேசுவது போல, இவருக்கு சரளா, மஞ்சு, பிரியா போன்ற பல பெயர்களும் உள்ளன. தனது வலையில் விழும் ஒவ்வொரு ஆணிடமும், ஒவ்வொரு பெயரில் பேசுவார்.

இவரை �பேச்சில் மயக்கும் மோகினி� என்று இவரிடம் ஏமாந்த வாலிபர்கள் பொலிஸாரிடம் வர்ணித்துள்ளனர். சிலரிடம் காதலிப்பது போல் நடித்து பணம் கறந்துள்ளார். சில வாலிபர்களிடம் அழகான பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக சொல்லி தனது மாய வலையில் சிக்க வைத்து உள்ளார். மோசடி ராணி பிரியதர்ஷனியை தனியார் துப்பறியும் நிறுவனம் ஒன்றுதான் முதலில் கண்காணித்து பிடித்து உள்ளது. ஆனால் அந்த துப்பறியும் நிறுவன அதிகாரிகளை பிரியதர்ஷனி மிரட்டி விட்டார். அதன் பிறகுதான்.

பொலிஸ் உதவியை நாடி உள்ளனர். பணம் கொடுத்த வாலிபர்களை பிரியதர்ஷினியோடு பேசவைத்து கையும், களவுமாக பொலிஸார் பிடித்துள்ளனர். அதன் பிறகுதான், தனது ஏமாற்று வித்தைகளை ஒப்புக் கொண்டார். நேற்று வீட்டிற்கு கொண்டு போகும்போது பொலிஸாரையே பிரியதர்ஷினி மிரட்டினார். கைதான பிரியதர்ஷினி திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் பல ஆண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி உள்ளார். இவரது தந்தை சிவில் சப்ளை கார்ப்பரேஷனில் வேலை பார்த்துள்ளார். அவர் திடீரென்று இறந்து போகவே குடும்பம் வறுமையில் தள்ளாடியதாகவும் வசதி வாய்ப்புகளை பெருக்கி கொள்வதற்காகவே இன்டர்நெட்டில் வாலிபர்களை வளைத்து நூதனமான முறையில் மோசடி மூலம் பணம் சம்பாதித்ததாகவும் பிரியதர்ஷினி பொலிஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

source:athirvu

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

வேளாங்கன்னியில் சிங்களவர்கள் விரட்டியடிப்பு !

>> Monday, August 8, 2011

 

 

தமிழ் நாட்டில் உள்ள வேளாங்கன்னி கோவிலுக்கு அருகாமையில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்த சிங்களவர்களை வெளியேறக்கோரி தமிழ் உணர்வாளர்கள் போராட்டம் நடித்தியுள்ளனர். பணத்தைப் பார்க்காமல் மனச்சாட்சியைப் பாருங்கள் ! இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்களை ஒரு கணம் யோசியுங்கள் ! என்ற கோகஷங்களால் லாட்ஜ் உரிமையாளர்கள் மனம்மாறி சிங்களவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு பணித்துள்ளனர். இதனை அடுத்து பெட்டி படுக்கைகளோடு சிங்களவர்கள் வேறு லாட்ஜ் ஒன்றைத் தேடி அங்கிருந்து அகன்றனர்.

அவர்கள் எங்கு தங்கினாலும் தாம் அங்கெல்லாம் சென்று போராட்டம் நடத்துவோம் என தமிழ் உணர்வாளர்கள் கூறியுள்ளனர். இனப்படுகொலை புரிந்த சிங்களவர்களுக்கு தமிழ் நாட்டு மண்ணை மிதிக்கும் தகுதி இல்லை என உணர்வாளர்கள் அதிர்வு இணைய நிருபரிடம் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே சென்னையில் சிங்களவர்கள் தாக்கப்பட்டு அவர்கள் இலங்கை திரும்பியுள்ள நிலையில் , தமிழ் நாட்டில் தற்சமயம் தங்கியுள்ள நூற்றுக்கணக்கான சிங்களவர்கள் பெரும் அச்சத்தில் இருப்பதாகவும் அடுத்த விமானத்தைப் பிடித்து இலங்கைக்குச் செல்லவேண்டும் என்ற நிலையில் இருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.



--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

ஆ. ராசா, கனிமொழி வரிசையில் தயாநிதி மாறன்!

>> Sunday, August 7, 2011


 
 
2011 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. படுதோல்வியடைந்தது. ஏற்கெனவே ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கி ஆ. ராசாவும், கனிமொழியும் சிறை யிலுள்ளனர். சூன் மாத இறுதியில் வெளிவரவுள்ள குற்றப் பத்திரிகையைத் தொடர்ந்து மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் அமைச்சர் பதவியை இழந்து கைதாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏன், 'சூலை 7 இல் மாறன் கைது' என்று பத்திரிகைகள் செய்தி வெளியிடவும் தொடங்கியுள்ளன. 'நம் வாழ்வு' வாசகர்களுக்கு இந்த ஊழல் தொடர் கைது பற்றிய சிறிய தெளிவை அளிப்பது நல்லது.

முரசொலி மாறனின் வாரிசாக தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியால் முதல் முறையாக எம்.பி.யாக்கப்பட்டு எடுத்த எடுப்பிலேயே கேபினட் அமைச்சருமாகி, தி.மு.க. விலும், காங்கிரசிலும் மிகுந்த செல்வாக்கு பெற்றார் தயாநிதி மாறன். மாறன் தன் சகோதரர் கலாநிதியுடன் இணைந்து அரசியலில் - தி.மு.க.வில் வலுவாகக்காலூன்றி 'சன்' குழும சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்ப பல திட்டங்களைத் தீட்டினர். இத்திட்டத்தின் முதல் செயல்பாடாக 'தினகரன்' நாளிதழ் வாங்கப்பட்டு ஒரு பிரதி ரூ. 1க்கு விற்று எழுத்து வழி ஊடகத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். 'மத்தியில் சிறந்த அமைச்சர் யார்?' என்ற சர்வே தினகரனில் வெளிவந்தது. அதன்பின் 'கருணாநிதியின் அரசியல் வாரிசு யார்?' என்ற சர்வேயும் வெளிவந்தது. இவைகளில் மத்தியில் சிறந்த அமைச்சர் தயாநிதி மாறன் என்றும், மு.க.ஸ்டாலினைத் தொடர்ந்து அடுத்தபடியாக தி.மு.க.வில் செல்வாக்குள்ள வாரிசாகவும் மறைமுகமாகக் காட்டப்பட்டார் தயாநிதி. இப்படி மு.க.ஸ்டாலினை முன்னிறுத்தி கலைஞருக்குப் பின் அழகிரியையும், கனிமொழியையும் அப்புறப்படுத்த மாறன் சகோதரர்கள் முயன்ற கதை நாம் அறிந்ததே.

தயாநிதி மாறன் தன் தந்தையின் மறைவுக்குப் பின் 2006 இல் அரசியலுக்குள் நுழைந்த காலத்திலிருந்தே தன்னையும், தன் சகோதரரின் வர்த்தக நலன்களையும் வளர்த்தெடுக்கவே முயற்சித்து வந்துள்ளார் என்று அவரது கட்சியினரே பேசுவதாக 'இந்தியா டுடே'யில் செய்தி வெளியானது.

முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறனின் ஊழல் கைவரிசை பற்றிய செய்திகள் வெளிவராத நாளும் இல்லை, வெளியிடா பத்திரிகையும் இல்லை. ஏர்செல்லின் உரிமையாளர் (முன்னாள்) சிவ சங்கரன், நீதிபதி சிவராஜ் பாட்டீல் ஒரு நபர் கமிட்டியின் முன்பு தயாநிதிக்கெதிரான வாக்குமூலம் அளித்துள்ளார். 

அவ்வாக்குமூலத்தின்படி 2005 இல் ஏர்செல் டிஷ்நெட் நிறுவனத்துக்கு உரிமம் வழங்குவதில் தொலைத் தொடர்புத் துறை தேவையில்லாக் காலதாமதம் செய்ததால் ஏர்செல் கம்பெனிக்கு ஸ்பெக்ட்ரம் வீணாகி யது. இதனால் சிவசங்கரன் ஏர்செல் பங்குகளை மாக் ஸிஸீக்கு விற்றார். இந்தச் சூழ்நிலையில் மாக்ஸிஸ் வச மிருந்த ஏர்செல்லுக்கு 2001 ஆம் ஆண்டின் விலைப்படி மாறன் உரிமத்தை விற்றார். இதனால் அரசுக்குப் பெருத்த இழப்பு ஏற்பட்டது. அதாவது 'முதலில் வருபவருக்கு முன்னுரிமை' என்ற விதியை மீறி கொல்கொத்தாவில் ஏர்செல்லுக்கு 4.4. மெ.ஹெர்ட்ஸ் + 4.4. மெ.ஹெர்ட்ஸ் தொடக்க நிலை அலைவரிசை ஒதுக்கப்பட்டது. தயாநிதி மாறனின் தலையீடு இன்றி இம்முறைகேடு நடந்திருக்க வாய்ப்பில்லை என்கிறது அறிக்கை.
இவ்வாறு முறைகேடாக உரிமங்களையும், அலைவரிசையையும் பெற்றதற்கு நன்றிக்கடனாக மாறன் குடும்பத்தவரின் 'சன்' டைரக்ட் பிரைவேட் லிமிடெட்டில் மாக்ஸீஸ் குழுமம் ரூ. 625 கோடி முதலீடு செய்தது. மேலும் மாறன் குடும்பத்துக்குச் சொந்தமான சவுத் ஏஷியா எஃப்.எம். லிமிடெட் நிறுவனத்திலும் மாக்ஸிஸ் ரூ. 100 கோடி முதலீடு செய்தார்.

ஐ.மு.கூ. அரசின் 'முதலில் வருவோருக்கு முன்னுரிமை' என்ற கொள்கையை மாறன் மீறியுள்ளது வெளிப் படையான உண்மை. காரணம், 2004 டிசம்பர் 14 இல் ஆறு சர்க்கிள்களுக்கு உரிமம் கோரி வோடஃபோன் விண்ணப்பித்தது. அதற்கு மாறாக 2006 ஜனவரியில் நான்கு சர்க்கிள்களுக்கும், மார்ச் 3 இல் மூன்று சர்க்கிள்களுக்கும் மாக்ஸீஸ் விண்ணப்பித்து, அதே ஆண்டு டிசம்பர் 5 இல் உரிமத்தையும் பெற்றது. வோடஃபோன் மூன்று ஆண்டுகள் காத்திருக்க, ஏர்செல் மாக்ஸிஸ் உடனே பெற்றது எப்படி? ஏர்செல் என்பது ஓர் உண்மை நிறுவனமா இல்லை முகமூடி (சன் குழுமம்) நிறுவனமா என்று சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. சிவசங்கரனின் வாக்கு மூலம் 'சூரியக் குடும்பத்தின்' அசூர வளர்ச்சியைத் தடுத்து அவர்களை தகிப்பிற்குள்ளாக்கியுள்ளது. மாறன் - மாக்ஸிஸ் - ஏர்செல் கூட்டணி குறித்த புலனாய்வு மேற்கொள்ளும் துழாய்வில் ராசா, கனிமொழி வரிசையில் தயாநிதி என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

மற்றொரு ஊழல், 323 பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை தன் மூலமாக சன் டிவி இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள செய்து அரசுக்கு ரூ. 440 கோடி இழப்பு ஏற்படச் செய்தார் மாறன் என்று சி.பி.ஐ அறிக்கை கூறுகிறது. இந்த 323 தொலைபேசி இணைப்புகளும் பி.எஸ்.என்.எல். போட்கிளப் பகுதியிலுள்ள தயாநிதி மாறனின் இல்லத்தில் நிறுவப்பட்டு திருட்டுத்தனமாக 3.4 கி.மீ. தொலைவுக்கு தரையடி வழியாக சன் டிவி அலுவலகம் அமைந்துள்ள அண்ணா அறிவாலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இவ்விணைப்புகளில் பெரும்பாலானவை சென்னை பி.எஸ்.என்.எல்.லின் தலைமை பொது மேலாளரின் பெயரில் பதிவாகியுள்ளது. இவ்விணைப்புகள் அனைத்தும் அதிவேக தகவல்கள் பரிமாற்ற வசதியுள்ள ஐ.எஸ்.டி. என் தொழில்நுட்பத் தன்மையுடையவை. பி.ஆர்.ஏ. வசதி கொண்ட (குரல் தரவுகளை தடையின்றி எடுத்துச் செல்லக்கூடிய தொழில் நுட்பம்) வீடியோ கான்ஃபரன்சிங் போன்றவற்றிற்கு பயன்படக்கூடிய இணைப்புகள். மார்ச் 2007 ஒரு மாதத்தில் மட்டும் 24371515 என்ற ஒரு தொலைபேசி இணைப்பிலிருந்து மட்டுமே 48,72,027 அழைப்பு அலகுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இப்படி ஸ்பெக்ட்ரம் ஊழல், மாறன் - மாக்ஸிஸ் - ஏர்செல் கூட்டணி ஊழல், பி.எஸ்.என்.எல். ஊழல் என்று பல ஊழல்களில் சிக்கித் தவிக்கும் மாறன் சகோதரர்கள் தி.மு.க.வாலும், காங்கிரசாலும் கைவிடப்பட்ட நிலையில் நீதி தேவதையின் நியாயத் தீர்ப்பை பெறுவார்கள் என்று நம்புவோம். ஊழல் இல்லா இந்தியா உருவாக இது ஓர் உருப்படியான முன்னுதாரணமாகட்டும்.

source:namvalvu

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP