சமீபத்திய பதிவுகள்

இலங்கையில் இறங்கிய அமெரிக்க உளவுத்துறையின் மர்ம விமானம்: அம்பலம் !

>> Thursday, September 1, 2011

 

இதற்கு கணக்கு காட்டவேண்டி இருப்பதால் தற்போது தாம் எந்த எந்த நாடுகளுக்கு பயணம் செய்தோம், எங்கிருந்து கைதிகளை எந்த நாட்டிற்கு கொண்டுசென்றோம் என்று எல்லாம் அமெரிக்க உளவுநிறுவனம் சொல்லவேண்டி வந்துவிட்டது. இதனால் அவர்கள் அப்பட்டியலை வெளியிட்டுள்ளார்கள். அதில் 2003ம் ஆண்டு மட்டும் 2 தடவைகள் அவர்கள் இலங்கை விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளார்கள். இங்கே நாம் குறிப்பாக ஒன்றைக் கவனிக்கவேண்டும் அவர்கள் எரிபொருள் நிரப்ப அங்கே சென்றதாக எந்த ஒரு இடத்திலும் சொல்லவில்லை. பொதுவாக இந்தோனேசியாவில் இருந்து இலங்கை சென்றதாகவும், இலங்கையில் இருந்து பின்னர் பாகிஸ்தான் மற்றும் மலேசியா சென்றதாகவும் அவர்கள் பட்டியலிட்டுள்ளார்கள்.

அமெரிக்க உளவுநிறுவனம் பாவித்த தனியார் ஜெட் சேவையின் காசுக்கணக்கே தற்போது இப் பிரச்சனையைக் கிளப்பியுள்ளது. அப்படியாயின் தனியார் ஜெட் விமானத்தில் 2003 மற்றும் 2005 ம் ஆண்டுகளில் இவர்கள் யாரை ஏற்றிக்கொண்டு இலங்கை சென்றார்கள் இல்லை இலங்கையில் இருந்து யாரையாவாது ஏற்றிச் சென்றார்களா என்ற கேள்விகள் எழுகின்றன. பயங்கரவாதிகளை நாடுவிட்டு நாடு கொண்டுசெல்லவே தாம் தனியார் ஜெட் விமானங்களைப் பயன்படுத்தியதாகவும், தாம் தேசிய பாதுகாப்புக்காகவே இதனைச் செய்ததாகவும் சி.ஐ.ஏ யினர் சொல்லி இப் பிரச்சனையில் இருந்து தப்பிக்க முயல்கின்றனர். ஆனால் இலங்கை குறித்த கேள்விகளுக்கு இன்னும் விடை காணப்படவில்லை. இது தொடர்ந்தும் மர்மமாகவே உள்ளது. 2003ம் ஆண்டில் இந்தோனேஷியாவில் இருந்து கொழும்பு வந்துசென்றது 2 எழுத்து துரோகியாவும் இருக்கலாமோ தெரியவில்லை ! ஆனால் மர்மங்கள் தொடர்கின்றது.

sources: AFP & washingtonpost

tamil source:athirvu
--
http://thamilislam.tk

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP