சமீபத்திய பதிவுகள்

குர்ஆன், கிருஸ்தவர்களால் திருத்தம் செய்யப்பட்டதே....!

>> Tuesday, October 4, 2011

இந்த கட்டுரையில் ஈசா அவர்களை பற்றிய சொர்கத்தின் கற்பனை தவிர மற்ற அனைத்து விசயங்களும் மிகவும் அழகாக இதன் ஆசிரியரால் விளக்கப்பட்டுள்ளது.வாசகர்களுக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கும் என்கின்ற படியால் வெளியிடுகிறோம்



அல்லாஹ்வின் வார்த்தைகளை ஒருவராலும் திருத்தம் செய்ய முடியாது! இது குர்ஆனின் வாக்குமூலம்.  குர்ஆன் சுய பாராட்டல்களை செய்து கொண்டாலும், இத்தனை தூதர்ளும் வேதங்களும் ஏன்? என்ற கேள்வியைத் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. சரி…!  முஹம்மது நபி மற்றும் குர்ஆனின் தேவை எதன் காரணமாக ஏற்பட்டது?  இதற்கான பதிலை குர்ஆனே கூறுகிறது.
...ஒருசாரார் அல்லாஹ்வின் வாக்கியத்தைச் செவியேற்று, பிறகு அதனை நன்கு விளங்கிய பின்னரும் அவர் அறிந்தவர்களாயிருக்கும் நிலையிலும் (தெரிந்து கொண்டே) அதை மாற்றி விட்டனர்.
(குர்ஆன் 2:75)
தனது தூதர்களின் வாயிலாக வெளிட்ட செய்திகளை மனிதர்கள்  மாற்றிவிட்டனர் என்ற காரணத்தினால் புதிய தூதர்களையும், வேதங்களும் உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதை அல்லாஹ் வெளிப்படையாகவே ஒப்புக்கொள்கிறான். மேலும், முன்னர் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிகளை, சரி கண்டதை மனிதர்கள் நம்ப வேண்டும் என்பதற்காக, உறுதிமொழிகளையும்  வாரி வழங்குகிறான். இது ஒரு முரண்பாடாகும்.
நிச்சயமாக நாம்தாம் இந்த திக்ரை (நினைவூட்டல்) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதனை உறுதியாக பாதுகாப்பவராகவும் இருக்கிறோம்.
(குர்ஆன் 15: 9)
இதை ஏற்பதற்கில்லை, ஏனெனில் வழக்கம்போல குர்ஆனும் மனிதர்களால் மாற்றப்பட்டிருக்க வேண்டும். இம்முறை கிருஸ்துவர்கள்  த்திருப்பணியைச் செய்திருக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
எப்படி என்கிறீர்களா?
        குர்ஆன் கூறும் தூதர்களின் வாழ்க்கையை ஆராய்ந்தால் ஈஸா நபியின் (இயேசு) செயல்பாடுகள் அன்பு நிறைந்ததாகவும், தெய்வீகத் தன்மை கொண்டதாகவும், முஹம்மது நபியின் செயல்பாடுகள் விநோதமாகவும் குரூரமாகவும் காட்சி செய்யப்பட்டிருப்பதைக் காணலாம். இது ஏன் என்று நீங்கள் சிந்தித்ததுண்டா? இதை குர்ஆன், ஹதீஸ்களின் அடிப்படையில் ஆராயலாம்.
ஆதாரம் 1
ஈஸா நபியை, அல்லாஹ் தனது உயிரிலிருந்து ஊதி, புனிதத் தன்மையுடையவராகப் பிறக்கச் செய்தான்.
(அதற்கு) நிச்சயமாக நானோ - பரிசுத்தமான ஓர் ஆண்குழந்தையை உமக்கு நான் கொடையாக அளிப்பதற்காக (வந்துள்ள) - உம் ரப்பின் தூதர் என்று அவர் கூறினார்..
(குர்ஆன் 19:19)
        முஹம்மதுவோ காதல், காமம், இச்சை என்ற அற்ப உணர்வுகள்  காரணமாகப் பிறந்தவர். அதாவது ஈசாவின் பிறப்பு புனிதமானது என்றால் மனித உடலுறவுகளால் பிறப்பது புனிதமற்றதாக ஆகிவிடுகிறது. இதற்கும் நிறைய குர்ஆன் வசனங்கள் உள்ளன, மேலும் முஹம்மது நபி சிறுவராக இருக்கும் பொழுதே இதயத்தில் கருப்பு தசைக்கட்டியாக உருவாகுமளவிற்கு  பாவங்களைச் செய்திருக்கிறார். பாவத்தை நீக்கி தூய்மைப்டுத்த அவருக்கு சிறப்பு இரண சிகிச்சை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. குழந்தைகளுக்கு செய்யப்பட்ட முதல் OPEN HEART SURGERY இதுதான். முஹம்மது விண்வெளிக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்னும் இதே இரணசிகிச்சை தேவைப்படுமளவிற்கு பாவங்களைச் செய்திருந்தார்.  (இஸ்லாம் அறிவியல்பூர்வமான மார்க்கமில்லை என்று எந்த முட்டாள் சொன்னது? பாவத்தை இரணசிக்சையின் முலம் நீக்கும் முறையை உலகிற்கு அறிமுகம் செய்ததது இஸ்லாம்தான்)
ஆதாரம் 2
ஒரு திரைப்பட நகைச்சுவை காட்சியில், கற்பில் சிறந்தவர் யார் என்று கூடியிருப்பர்களைப் பார்த்து ஒருவர் கேட்பார். உடனே ஒவ்வொருவரும், போட்டி போட்டுக்கொண்டு கண்ணகி, மாதவி, சீதை என்று புரணகாலத்து கதாபாத்திரங்களைக் கூறுவர். அப்பொழுது கேள்வியைக் கேட்டவர்,  உங்களது தாய், மனைவி, சகோதரிகள் உறவினர்கள் என்று ஒருவரும் கற்பில் சிறந்தவர்களாகத் தெரியவில்லையா? என்பார்.
        இந்த காட்சியை குர்ஆனிலும் காணலாம். ஈஸா நபியின் தாயார் மரியம் அவர்களது கற்பிற்கு குர்ஆனின் பல வசனங்கள் சான்றிதழ்களை வழங்குகிறது. அம்மையாரது பெயரில் ஒரு அத்தியாயமே இருக்கிறது.  ஆனால் முஹம்மது நபியின் தாயார் ஆமீனாவின் பெயர் ஒருமுறைகூட குறிப்பிடப்படவில்லை. மேலும் முஹம்மது நபியின் மனைவியர்கள் தங்களது கற்பை பேணிப்பாதுகாக்க வேண்டுமென்ற எச்சரிக்கைகளும் (குர்ஆன் 33:28-33)  அறிவுறுத்தல்களுமே காணப்படுகிறது. ஹதீஸ்களோ முஹம்மது நபியின் மனைவியரின் கற்பு விமர்சனத்திற்குள்ளான உண்மைகளைக் கூறுகிறது
ஆதாரம் 3
ஈஸா நபி, கைக்குழந்தையாக இருந்த பொழுதே தனது பணியைப் பற்றித் தெளிவாக பேசியதாகக் குர்ஆன் கூறுகிறது.
(ஜிப்ரீல் என்னும்) பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு நான் உம்மை உறுதிப்படுத்திய பொழுது, தொட்டிலி(ல் குழந்தையாக நீர் இருந்த நேரத்தி)லும், வாலிபத்திலும் நீர் பேசியதையும்...
(குர்ஆன் 5:110, 19:29-33)
முஹம்மது நபி ஒரு தற்குறி வாழ்நாள் முழுவதுமே எழுதவும், படிக்கவும் பிறர் உதவியை எதிர்பார்த்திருந்தவர். அல்லாஹ் முஹம்மது நபியை மக்கள் தனது தூதரென்று நம்பவேண்டும் என்பதற்காக கல்லைப் பேச வைத்தான், சந்திரனைப் பிளந்து ஒட்டினான், விண்வெளிக்கு அழைத்துச் சென்றான், இப்படி எதை எதையோ செய்தான். ஆனால் அவரது நபித்துவ தொழிலுக்கு உதவுமாறு எழுத்தறிவை வழங்கியிருக்கலாமே…!
ஆதாரம் 4
ஈஸா நபி களி மண் பறவையைச் செய்து அதற்கு உயிரூட்டி பறக்கவிட்டவர். இதன் மூலம் அவரது உணவிற்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்து கொள்ளும் திறமை இருந்ததை நம்மால் அறியமுடிகிறது.
என்னுடைய உத்திரவைக் கொண்டு களிமண்ணால் பறவையின் வடிவத்தைப்போன்று நீர் உண்டாக்கி அதில் நீர் ஊதியதும் என் உத்திரவைக்கொண்டு (உயிருள்ள) பறவையாக அது ஆனதையும்;
(குர்ஆன் 5.110)
ஆனால் முஹம்மது நபி, தனது வயிற்றுப் பிழைப்பிற்காக மனைவியின் தயவை எதிர்பார்த்திருந்தார், வசதியான வாழ்க்கைக்காக, தன்னைவிட பதினைந்து வருடங்கள் மிகைத்த ஒரு மூதாட்டியை திருமணம் செய்ததை, புரட்சிகரமான விதவைத் திருமணம் என்றெல்லாம்  புனைய வேண்டியிருந்தது. அல்லாஹ்விற்கோ, முஹம்மது நபியின் வழிப்பறிக் கொள்ளை, சூறையாடல்களை ஹலால் என அறிவிக்க வேண்டியிருந்தது.
அன்ஃபால் அல்லாஹ்வுக்கும்  அவன் ரஸூலுக்கும் உரியவை;
(குர்ஆன் 8.1)
செல்வச் செழிப்பான மூதாட்டியின் மரணத்திற்குப் பிறகு அவரது பொருளாதாரம் படுபாதாளத்திற்குச் சென்றது. (சிங்கிள் "டீ"க்குகூட வழியின்றி தவித்தார்) இவ்வாறாக முஹம்மது தனக்கு தேவையான உணவிற்குக்கூட உழைக்கும் திறமையற்றவராக இருந்துள்ளார்.
ஆதாரம் 5
ஈஸா நபி இறந்த மனிதர்களையும் உயிரூட்டினார்.
ன் உத்திரவைக் கொண்டு இறந்தவர்களை (மண்ணறையிலிருந்து) உயிருள்ளவர்களாக  நீர் வெளியாக்கியதையும்;
(குர்ஆன் 5.110)
தன்னை சித்திரவதை செய்து சிலுவையில் அறைந்து கொல்ல முயன்ற பொழுதும் பொறுமையுடன் இருந்தார். எவரையும் தாக்க முயற்சிக்கவில்லை. ஆனால் முஹம்மது நபி தனக்கெதிரா சூழ்ச்சி செய்வதாகக் கூறிக்கொண்டு தன்னை மறுத்தவர்களைக் கொன்று குவித்தார். பனூ குறைழாவில்,  ஒரே நாளில் 900 பேர்களது தலைகளை வெட்டி எறிந்து உலக சாதனை  படைத்தார்.
ஆதாரம் 6
ஈஸா நபி, பிறவிக் குருடருக்கும்  பார்வையை வரவழைத்தார்.
இன்னும் என் உத்திரவைக் கொண்டு பிறவிக் குருடனையும் வெண்குஷ்டனையும் நீர் சுகப்படுத்தியதையும்;
(குர்ஆன் 5.110)
அல்லாஹ், 'ஹலால்' என்று அனுமதித்த கண்ணியமிக்க தொழிலான கொள்ளையடித்தல் மூலம்  முஹம்மது நபி சேமித்து வைத்திருந்த ஒட்டகங்களை உக்ல் குலத்தைச் சேர்ந்த  சிலர் 'ஹராமான' முறையில் திருடிச் சென்றனர் அவர்களை விரட்டிச் சென்று, மாறுகால் மாறுகை வெட்டி, அவர்களது   கண்களையும் பழுக்கக் காய்ச்சிய ஆணிகளால்  குத்தி குருடாக்கினார் (புஹாரி ஹதீஸ் :6802).
ஆதாரம் 7
ஈஸா நபி பெண்களின் மீது இச்சையின்றி துறவு வாழ்கையை வாழ்ந்தவர். முஹம்மது நபி பல மனைவிகளுடனும், போர்களில் ஆண்களைக் கொன்று அவர்களது மனைவியர்களையும், பெண் குழந்தைகளையும் பாலியல் அடிமைகளாகக் கைப்பற்றினார். மேலும் மருமகள் (வளர்ப்புமகனின் மனைவி) மீதும் இச்சை கொண்டு அவரைத் தனது மனைவியாக்கிக்  கொண்டார்.(குர்ஆன் 33.37) அல்லாஹ்வே(?) வெறுப்படைந்து இனி திருமணம் செய்யக்கூடாது (குர்ஆன் 33.52) என்று தடைவிதிக்குமளவிற்கு முஹம்மது நபியின் செயல்பாடுகள் இருந்தது.
ஆதாரம் 8
அல்லாஹ்,  ஈஸா நபியை அன்பானவராகவும் மன்னிக்கும் குணமுடையவராகவும் ஆக்கினான். அவர் அடிமைமுறையை வெறுத்தார். அல்லாஹ்,  முஹம்மது நபியை போர்களின் மூலம் அப்பாவி பொதுமக்களை அடிமைகளாகக் கைப்பற்றுபவராக ஆக்கினான்.
ஆதாரம் 9
தீராவியாதிகளான வெண்குஷ்ட நோயாளிகளையும்,  தொழு நோயாளிகளையும்  ஈஸா நபி குணப்படுத்தியதாக குர்ஆன் கூறுகிறது. 
இன்னும் என் உத்திரவைக் கொண்டு பிறவிக் குருடனையும் வெண்குஷ்டனையும் நீர் சுகப்படுத்தியதையும்;
(குர்ஆன் 5.110)
முஹம்மதிற்கு அப்படி எந்த ஒரு ஆற்றலும் இருக்கவில்லை.  அவரிடம் அற்புதங்களை செய்து கண்பிக்குமாறு வற்புறுத்திய பொழுது,
"தம் இறைவனிடமிருந்து ஏதேனும் ஓர் அத்தாட்சியை அவர் நம்மிடம் கெண்டு வர வேண்டாமா? என்று அவர்கள் கூறுகின்றனர் முந்தைய வேதநூல்களிலுள்ள  தெளிவு-விளக்கம் அவர்களிடம் வர வில்லையா?"
(குர்ஆன் 20:133)
என்று கூறி நிலைமையை சாமாளித்தார். அடிமைப்பெண் மரியத்துல் கிப்தியாவிற்குப் பிறந்த தனது மகன் இப்ராஹிமின் நோயை குணப்படுத்த, அல்லாஹ்விடம் முஹம்மது நபி பல இரவுகள் அழுதுபுலம்பி பிரார்த்தனை செய்தும் கூட, ஏனோ அல்லாஹ் செவிசாய்க்கவில்லை.
ஆதாரம் 10
ஈஸா நபி இறக்கவில்லை என்கிறது குர்ஆன், அவரைக் கொலை செய்ய முயன்றவர்களின் நிழல் கூட ஈஸா நபியின் மீது விழாமல் அல்லாஹ், அவரைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டதாகவும் கூறுகிறது. இன்றுவரை மரணமடையால் இரண்டாம் வானில் வசித்து வருவதாக கூறுகின்றனர். முஹம்மது நபி தனது விண்வெளிப் பயணத்தின் பொழுது இத்தகவலை உறுதிசெய்துள்ளார் (அங்கு ஹூருலீன்களுடன் (சொர்கத்து கன்னிப் பெண்கள் உல்லாசமா இருக்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை.)
ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
(குர்ஆன் 4:158)
இத்தகைய நல்லெண்ண நடவடிக்கைகளை முஹம்மது நபியின் விஷயத்தில் அல்லாஹ் மேற்கொள்ளவில்லை. முஹம்மது நபியை எதிரிகளின் விஷத்தால் கொடுமையான வேதனைகளை அனுபவித்து மரணமடையச் செய்து, (புஹாரி ஹதீஸ் -2617) அவரது உடலை மண்ணில் புதைத்து அழுகச் செய்தான்
மேற்கண்ட ஆதாரங்கள் கூறும் உண்மைகளைக் காணும் பொழுது இவை இஸ்லாமின் புனித புத்தகத்தின் மூலத்தில் இருப்பவைகளா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
எவர் (அல்லாஹ்வின்) ரஸூலுக்கு வழிப்படுகிறாரோ அவர் திட்டமாக அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு விட்டார்.
(குர்ஆன் 4:80)
இப்படி, அல்லாஹ்விற்கே இணையான முஹம்மது நபியை ஒரு மூன்றாம்தர குற்றவாளியைவிட கீழ்தரமாக சித்தரிப்பதிலிருந்தே குர்ஆன் கிருஸ்துவர்களால் மாற்றப்பட்டுள்ளதை அறியலாம். ஆனால் இதை முஸ்லீம்கள் ஏற்றுக் கொள்ள  மறுக்கின்றனர்.
குர்ஆனுக்கான மூல படிவங்கள், முதல் திரட்டு ஆகியவைகளை உதுமான் கலிபாவாக இருக்கும்போது அழித்துவிட்டார் என்பதையும் இங்கு கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.

தஜ்ஜால்


--
http://thamilislam.tk

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP