சமீபத்திய பதிவுகள்

போலீஸ்காரர் பொண்டாட்டி நடத்திய கூத்து

>> Thursday, August 18, 2011



போலீஸ்காரர் பொண்டாட்டி நடத்திய மினி பார்

சேலம் மாவட்டத்தில், பிராந்திக்கடைகள் இல்லாத கிராமப்புறங்களில் குடிமக்களுக்கு சரக்கு தேவைகளை பூர்த்திசெய்வதற்கு அந்த ஊரில் உள்ள  யாராவது ஒருவர் சரக்கு வாங்கி வந்து விற்பனை செய்வார். இதற்கு "சந்துக்கடை" என்று பெயர்.

இந்த "சந்து" கடைகள் இல்லாவிட்டால் யாராவது கள்ளசாராயம் விற்க ஆரம்பிப்பார்கள் என்பதாலும், மாத மாதம் தங்களுக்கும் கொஞ்சம் சில்லறையும், உள்ளூரில் கள்ளச்சாராயம் விற்பவர்கள் பற்றி தகவலும் கொடுப்பார்கள் என்பதால் மதுவிலக்கு காவல்துறையும் இந்த "சந்து" கடைகளை கண்டுகொள்ள மாட்டார்கள். வீரகனூர் பக்கமுள்ள, கிழக்கு ராஜாபாளைய்த்தில் இருக்கும் சீராளன் என்பவர் தமிழ் நாடு காவல்துறையில் சென்னை மாநகர் ஆயுதப்படையில் காவலராக பணியாற்றுகிறார்.


சென்னையிலிருந்து சில மிலிட்டரி பாட்டில்களையும், பர்மா பஜாரிலிருந்து சில வெளிநாட்டு பாட்டில்களையும், போலீஸ்காரர் என்ற கோதாவில் தள்ளிக்கொண்டு வந்து வீட்டில் "சும்மா" இருக்கும் தன் மனைவி ஜெகதாம்பாள் மூலமாக, கிழக்கு ராஜாபாளையத்தில் கூடுதல் விலைக்கு விற்றுவந்தார்.


உள்ளுரில் சரக்கு யாருக்காவது 'சரக்கு" வேண்டுமென்றால், அங்கிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வீரகனூர் சென்றுதான் வாங்கி வரவேண்டியிருந்தது.
 
தன் ஊரில் உள்ள சொந்தக்காரர்கள், அண்ணன் தம்பிகள் எல்லாம்  தண்ணிக்கு திண்டாடுவதை பார்த்த சீராளனுக்கு அந்த மக்களுக்கு உதவவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தனது காவல்துறை அதிகாரத்தை பயன்படுத்தி தனது வீட்டிலேயே ஒரு மதுபானக்கடை துவக்கிவிட்டார்.


முதலில் பாட்டிலுக்கு இரண்டு ரூபாய் கூடுதலாக வைத்து விற்பனை செய்த சீராளன், பின்னர் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாகவும் சில சமையத்தில் பீர்பாட்டிலுக்கு இருபது ரூபாய் வறை கூடுதலாக வைத்து விற்றுள்ளார்.


நேற்று சரக்கு வாங்கப்போன ஒரு குடிமகன், கூடுதல் விலை கட்டுபடியாகாத காரணத்தால் கடுப்பாகிப்போனவர், சேலம் மாவட்ட எஸ்.பி மயில் வாகனத்துக்கு ஒரு போன் போட்டு, உங்கிட்ட வேலை செய்யிற ஆளுகிட்டேயே இப்படி அநியாய வெலைக்கு சரக்கு விக்கலாமா...? கொஞ்சம் விலையை குறைச்சு பாட்டில் விக்கச் சொல்லுப்பா... என்று போட்டுக்கொடுத்துவிட்டார்.


எஸ்.பி. ஆத்திரமடைந்து, ஆத்தூர் மதுவிலக்கு காவல்துறையை தொடர்பு கொண்ட எஸ்.பி இன்னும் ஒருமணி நேரத்தில் ஜெகதாம்பாள் மீது எப்.ஐ.ஆர் போட்டிருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்.


பறந்து போன ஆத்தூர் போலீசார் ஜெகதாம்பாளையும், அவறது வீட்டில் 47, பெட்டிகளில், அடுக்கி வைக்கப்பட்டிருந்த  440, பாட்டில் பீர், பிராந்தி, விஸ்க்கி என ஒரு மினி டாஸ்மாக் கடையையும் தூக்கிக்கொண்டு வந்துவிட்டனர்.


நல்ல வேலை சீராளன் போலிசாக இருந்ததால் இந்த அளவோடு போனது... கொஞ்சம் பெரிய அதிகாரியாக இருந்திருந்தால் இன்னும் என்னென்ன செய்திருப்பாரோ?


source:nakkheeran

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

பிஜே யுடன் நேரடி விவாதம்-சாக்சி



கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளுக்கு ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.இந்த இடைபட்ட நாற்களில் நடைப்பெற்ற முக்கிய சம்பவங்களை உங்களுக்கு விவரித்துச்சொல்லுவதற்கு ஆவலாக உள்ளேன். முதலில் SAN பற்றி உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.( http://sakshitimes.org/ )இது ஒரு அனைத்து கிறிஸ்தவர்களின் கூட்டமைப்பு.இதில் பலர் இணைந்து ஆண்டவரின் நாமத்தை உலக்குக்கு அறிவித்து வருகிறார்கள்.இதில் இஸ்லாமியர்களுடனான விவாதப் பிரிவு ஜெர்ரி தாமஸ் என்பவர் உடபட அநேகரை கொண்டு செயல்படுகிறது.இது கிறிஸ்தவ சபைகளின் கீழ்(அதாவது ஆதரவுடன்) இயங்கும் சுயாதீன அமைப்பு.


இந்த அமைப்பின் மூலம் செய்யப்பட்டது என்ன?


"டாக்டர் ஜாகிர் நாயக் /எம். எம். அக்பர் விவாதம் புரிய மறுக்கிறார்கள்:" 

 கேரளாவிலும் ,ஆந்திராவிலும் கிறிஸ்தவ சபைகளுக்கு சவாலாக விளங்கிய இஸ்லாமிய தாவா பிரச்சாரகர்களின் வாதஙக்ளுக்கு விளக்கம் அளித்தது(http://www.sakshitimes.org/index.php?option=com_content&task=view&id=545&Itemid=62 ) ,பல இடங்களில் விவாதக்கூட்டங்களை நடத்தி நேரடி விவாதங்களில் கலந்துக்கொள்ளுவது (http://www.sakshitimes.org/index.php?option=com_content&task=view&id=554&Itemid=62 )போன்ற செயல்பாடுகளால் அந்த மாநிலங்களில் உள்ள தாவா பிரச்சங்கிகளின்(இதர மார்க்கத்தார்களை இஸ்லாமுக்கு வரும் படி அழைக்கும் இஸ்லாமியர்கள்) கிறிஸ்தவ எதிர் தாக்குதல்களை முறியடித்தது.மேலும் பல இஸ்லாமிய நண்பர்களால் பெருமையுடன் அறிமுகப்படுத்தப்படும் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களை விவாதத்துக்கு அவர்கள் அலுவலகத்துக்கே சென்று அழைப்புக்கடிதம் கொடுத்து அழைத்தார்கள்.ஆனால் செல்லாத பல காரணங்களை சொல்லி டாக்டர் ஜாகிர் நாயக் தட்டிக்கழித்துவிட்டார்.(http://www.sakshitimes.org/index.php?option=com_content&task=view&id=537&Itemid=42) இது போலவே கேரளாவின் தாவா பிரசங்கி எம் எம் அக்பர் விவாதம் செய்ய ஒப்புக்கொண்டுவிட்டு பின்பு விவாதத்திற்கு வரவில்லை(http://www.sakshitimes.org/index.php?option=com_content&task=view&id=308&Itemid=42&limit=1&limitstart=1).இதெல்லாம் பழைய கதைகள்.ஆனால் இது அறியாத பல தமிழ் இஸ்லாமிய நண்பர்கள் நேரடி விவாத்த்திற்கு கிறிஸ்தவர்கள் வரமாட்டார்கள் என்று முடிவு செய்து அதை பிரச்சாரமாக்கிவிட்டார்கள். உமர் அண்ணா போன்ற சில நண்பர்கள் நேரடி விவாத்த்தை தவிர்க்கிறார்கள்.இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம்.அவர்களை நிர்பந்திக்க முடியாது.ஆனால் என்னைப்பொருத்தவரை நேரடி விவாதம் சாத்தியமானதே.இதற்காக பல வருடங்கள் ஜெபித்து வருகிறேன். கடந்த சில நாட்கள் முன்பு சாக்சி அமைப்பின் நிர்வாகிகளிடம் சில இஸ்லாமிய நண்பர்கள் விவாத அறைகூவல் விட்டனர்.இதை சாக்சி ஏற்றுக்கொண்டவுடன் உடனடியாக TNTJ விடம் அறிமுகப்படுத்தப்பட்டனர்.முதல் அறிமுகத்துக்காக TNTJ மாநில அலுவலத்துக்கு சென்றனர் சாக்சி நிர்வாகிகள்.ஆனால் அங்கு வீடியோ சகிதம் TNTJ அமைப்பினர் சகோதரர் பி.ஜெய்னூல் ஆபிதீன் அவர்கள் தலைமையில் ஒரு விவாத ஒப்பந்த நிகழ்ச்சியாக அதை மாற்ற முடிவு செய்தனர்.இதை எதிர்பார்காத சாக்சி கொஞ்சம் சுதாரித்து பின்பு பேச ஆரம்பித்தனர்.பல நிபந்தனைகளோடு TNTJ அமைப்பினர் பேச ஆரம்பித்தனர்.ஆனால் அவைகளை ஏற்றுக்க்கொள்ளும் அதிகாரம் அந்த குழுவுக்கு முழுமையாக இல்லை.காரணம் TNTJ எதை சொல்ல வருகிறது என்பதை தெரிந்துகொள்ளவே வந்திருந்ததால் அவர்கள் விவாத ஒப்பந்த அதிகாரம் பெற்றிருக்கவில்லை.இரண்டாவது மொழிப்பிரச்சனை.சாக்சி அமைப்பில் தலைமை ஏற்று வந்திருந்த அஜய் அவர்களுக்கு தமிழ் முழுமையாக புரியாது.அவர் ஆங்கிலத்திலேயே அதிகம் பேசக்கூடியவர்.TNTJ ல் பி.ஜே அவரகள் தமிழில் பேச அதை அஜய் அவரக்ளுடன் வந்தவர்கள் மற்றும் சகோதரர் கலீல் ரசூல் அவர்கள் ஆகியோர் ஆங்கிலத்தில் சொல்லிவந்தனர்.ஆனாலும் அந்த பேச்சு முழுமை அடையவில்லை.மீண்டும் மெயில் மூலம் பேசி ஒப்பந்த தேதி அறிவிக்கலாம் என்ற நிபந்தனைகளோடு சாக்சி குழுவின் சந்திப்பு அன்று முடிவடைந்தது". இந்த வீடியோ தொடுப்பு : http://www.youtube.com/watch?v=69eOnVeh3Q8 இதன் பின் சில மெயில் பரிமாற்றங்கள் நடைபெற்றன.அதில் TNTJ வின் நிபந்தனைகள் சரியானது அல்ல என்று சாக்சியால் சொல்லப்பட்டது.ஆனால் TNTJ அது தங்களின் நிலைபாடு என்றது.இதன் பின் TNTJ அனுப்பிய ஒரு மெயில் சாக்சியால் தவறவிடப்பட்டது.அதில் TNTJ குறிப்பிட்ட தேதியை அறிவித்து அந்த தேதிக்குள் சில நிபந்தனைகள் வைத்து இல்லையென்றால் சாக்சி விவாதத்தில் இருந்து ஓடிவிட்டது என்று வெளியிடுவோம் என்று அறிவித்திருந்தது.ஆனால் இணையத்தில் இந்த செய்தி வெளியானவுடன் சாக்சி தனது தரப்பு நிலையை விளக்கியது.ஓட்டம்பிடித்தார் என்று போடவேண்டிய அவசியம் என்ன?எங்களின் மற்ற உறுப்பினர்களின் மெயில் ஐடி மற்றும் போன் நம்பர் இருந்தும் இந்த விசயத்தில் இவ்வளவு அவசரம் காட்ட வேண்டியதில்லை என்ற கேள்வியுடம்(இடையில் சில வாக்குவாதங்கள் மெயிலில் நடந்தது அவைகளை உஙக்ளுக்கு தொடுப்புக்கொடுக்கிறேன்.அதில் படித்துக்கொள்ளவும். http://www.sakshitimes.org/index.php?option=com_content&task=view&id=555&Itemid=42 )ஒப்பந்த அமர்வுக்கு தேதி கேட்டு மெயில் அனுப்பியது.TNTJ தரப்பில் ஜூன் மாதம் 3 ந்தேதி அளிக்கப்பட்டது.

  "TNTJ மற்றும் SAN(சாக்சி) விவாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது:"

 இதற்கிடையில் நேரடி விவாத ஆர்வத்தில் இருந்த எனக்கு சாக்சியில் தொடர்பு கிடைத்தது.அதினால் விவாத ஒப்பந்தம் செய்ய பொறுப்பெடுத்துக்கொண்டு சகோதரர் அஜய் அவர்கள் தலைமையில் TNTJ அலுவலகத்துக்கு சென்றோம்.மாலை 3 மணிக்கு சென்ற நாஙகள் சகோதர் பி.ஜெய்னூல் ஆபிதீன் அவர்கள் தலைமையில் இருந்த TNTJ அணியினருடன் இரவு 12.30 மணிவரை விவாதத்திற்கான இறுதி ஒப்பந்த வடிவத்தை கொண்டு வந்தோம்.கடைசியில் எல்லாம் முடிந்து விட்டது என்ற நிலையில் பி.ஜே அவர்கள் எங்களிடம் விடைபெற்றார்கள்.நாங்கள் அமர்ந்து ஒப்பந்தத்தை தமிழில் டைப் செய்துவந்த TNTJ சகோதரர்களுடன் பேசிய படியே வாரகடைசி நாட்களான சனி ஞாயிறு ஆகிய கிழமைகளின் நேரத்தை குறிக்கும் பொழுது ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்து எங்களால் முடியாது வேண்டுமானால் வெள்ளி,சனி கிழமை வைக்கலாம் என்று எங்கள் தரப்பில் கேட்கப்பட்டதற்கு TNTJ தரப்பு மறுத்துவிட்டது.உடனே பி.ஜே அவர்களுக்கு போன் செய்து இது தொடர்பாக பேசப்பட்ட பொழுது அவர் ஞாயிறு மதியம் 2 மணியில் இருந்து இரவு 11 மணிவரை விவாதிக்கலாம் என்ற செய்தியை சொன்னார்.ஆனாலும் நேரத்தை தவிர அனைத்து விவரங்களும் முடிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில் இது எங்கள் சபைத்தலைவர்களிடம் கலந்துரையாடிவிட்டு அதை உறுதி செய்கிறோம் அதற்குள் விவாத ஒப்பந்த வரைவை மெயில் செய்ய கேட்டுக்கொண்டு விடைபெற்று அங்கிருந்து கிளம்பினோம்.(இவை அனைத்தும் இரண்டு தரப்பாரும் வீடியோவில் பதிவு செய்துள்ளோம்.கர்த்தருக்கு சித்தமானால் சீக்கிரம் வெளியிடப்படும்).இது நடைபெற்றது ஜூன் 3 தேதி. இதன் பின் பல மெயில் பரிமாற்றத்திற்கு(அவைகள் அனைத்தும் இந்த இணைப்பில் உள்ளதுhttp://www.sakshitimes.org/index.php?option=com_content&task=view&id=555&Itemid=42 ) பிறகு மீண்டும் ஜூன் 3 தேதி உறுதி செய்யப்பட்ட விவாத நிபந்தனைகளை ஒப்பந்தமாக்கி கையெழுத்து இட ஜூலை 29 தேதி TNTJநேரம் ஒதுக்கியது.அன்று மாலை 5 மணிக்கு சென்ற நாங்கள் அடுத்த நாள் அதிகாலை ஏறக்குறைய 4 மணிவரை உட்கார்ந்து விவாத ஒப்பந்தத்தை கையெழுத்திட்டோம்..(இதில் முக்கியமானவை இரண்டு தரப்பாரும் வீடியோவில் பதிவு செய்துள்ளோம்.கர்த்தருக்கு சித்தமானால் சீக்கிரம் வெளியிடப்படும்).அதை பதிவிறக்க இந்த தொடுப்பில் செல்லவும்.படிக்க மட்டும் இந்த தொடுப்பில் செல்லவும்.ஜூன் 3 தேதியில் இருந்து ஜூலை 29 வரை இந்த செய்தி TNTJ வால் தங்கள் இணைய தளத்தில் வெளியிடப்படவில்லை.அதற்கு பல வேலை பளுவால் இதை செய்ய முடியவில்லை என்ற விளக்கம் TNTJவால் தரப்பட்டது. தொடர்ந்து நேரடி விவாதத்தில் ஆர்வமுள்ள கிறிஸ்தவர்கள் எங்களோடு இணைய உங்களை அழைக்கிறோம்.இமெயில் ஐடி:mycoimbatore@gmail.com எல்லோரும் விவாதம் செய்ய வேண்டும் என்பதில்லை.நாம் இணைந்து கர்த்தரின் இராஜ்ஜியத்தைக்கட்டுவோம் வாருங்கள்.ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகிறேன்.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பராக.தொடர்ந்து ஜெபியுங்கள்.கர்த்தருடைய விலையேறப்பெற்ற நாமம் மகிமைப்படுவதாக.ஆமேன். source:www.tamilchristians.com

StumbleUpon.com Read more...

சொன்னதைச் செய்தார் செல்வி ஜெயலலிதா !


ஈழத் தமிழர்களுக்கு சொன்னதைச் செய்தார் செல்வி ஜெயலலிதா !

தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் அனைத்தும் தமிழக முகாம்களில் வாழும் இலங்கை தமிழ் மக்களுக்கும் விரிவுபடுத்தப்படும் எனத் தமிழக முதல்வர் முன்னர் கூறியிருந்தார். அதன் முதல் கட்டமாக பல ஈழத் தமிழ் குடும்பங்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை அவர் வழங்கியுள்ளார். ஈழத் தமிழ் குடும்பங்களை நேரில் சந்தித்து அவர் இத் திட்டங்களைக் கையளித்துள்ளார். இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்; தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா இலங்கைத் தமிழர்கள் நலனில் எப்போதும் மிகுந்த அக்கறையும், ஆதரவும் கொண்டு அவர்கள் நல்லமுறையில் வாழ தமிழக மக்களுக்குக் கிடைக்கப் பெறும் அனைத்து நலத் திட்டங்களும் அவர்களுக்கும் கிடைத்திட நடவடிக்கை எடுத்து வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா நேற்று(16.08.2011) தலைமைச் செயலகத்தில் வைத்து திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி முகாம் வாழ் இலங்கை தமிழர்கள் லட்சுமி வேலு, வேலு, லட்சுமி துரைசாமி ஆகியோருக்கு ஆதரவற்ற முதியோர் ஓய்வூதியத் திட்டத்திற்கான ஆணையையும், புவனேஸ்வரி, நாககன்னி, சுந்தரியம்மாள் ஆகியோருக்கு ஆதரவற்ற பெண்கள் ஓய்வூதியத் திட்டத்திற்கான ஆணையையும், இன்பரதி, சிவபாக்கியம், கமலாதேவி ஆகியோருக்கு ஆதரவற்ற விதவையர் ஓய்வூதியத் திட்டத்திற்கான ஆணையையும்,

சுகநந்தினி, வத்சலா, பத்மவேணி ஆகியோருக்கு திருமண உதவி திட்டத்தின் கீழ் திருமாங்கல்யம் செய்ய தலா 4 கிராம் தங்கம் மற்றும் 25,000 ரூபாய் நிதியுதவியும், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி முகாமில் இயங்கி வரும் அன்னை தெரசா மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த அமிர்தசெல்வநாயகி, ஜூலியட் கொன்சி, தென்றல் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த நாகம்மாள், ஞானசீலி, புதிய உதயம் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த விஜயா, பத்மஜோதி ஆகிய மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு சுழல் நிதியினையும், வாசுகி, பாக்கியலட்சுமி ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்களையும் வழங்கினார் என அதிர்வு இணையம் அறிகிறது. (புகைப்படங்கள் சில இணைக்கப்பட்டுள்ளது)








source:athirvu


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP