சமீபத்திய பதிவுகள்

கன்னித்தன்மை பரிசோதனை

>> Wednesday, March 14, 2012

சமீரா இப்ராஹிம் 

எகிப்தில் சென்ற ஆண்டு முபாரக் ஆட்சிக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டங்களின்போது கைதுசெய்யப்பட்ட பெண்களை கட்டாயப்படுத்தி அவர்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்தார் என்று குற்றம்சாட்டப்பட்ட இராணுவ மருத்துவர் ஒருவரை குற்றமற்றவர் என்று அந்நாட்டின் இராணுவ நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்து விடுதலை செய்துள்ளது.

பாதிக்கப்பட்டதாகக் கூறும் பெண்களில் ஒருவரான சமீரா இப்ராஹிம், இந்த மருத்துவருக்கு எதிராக குற்றச்சாட்டு தெரிவித்து வழக்கைத் தொடுத்திருந்தார்.

கடந்த மார்ச் மாதம் தான் தஹ்ரீர் சதுக்கத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டதன் பின்னர் தனது கன்னித்தன்மையை பரிசோதிக்கும் ஒரு சோதனைக்கு தன்னை வற்புறுத்தி உட்படவைத்தார்கள் என்று அவர் தெரிவித்தார்.

தனக்கு நேர்ந்தது தொடர்பில் சாட்சியளிக்க முன்வருவார்கள் என்று தான் நம்பிக்கொண்டிருந்தவர்கள் இராணுவ நீதிமன்றத்தில் கதையை மாற்றிச் சொல்லிவிட்டார்கள் என்று அப்பெண் கூறுகிறார்.

பெண்களுக்கு கட்டாயப்படுத்தி கன்னித்தன்மை பரிசோதனை செய்வதென்பதை எகிப்திய இராணுவம் ஒரு தண்டனை உத்தியாக பரவலாக பயன்படுத்தி வருகிறது என மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.


source:BBC

--
http://thamilislam.tk

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP