சமீபத்திய பதிவுகள்

பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடும் இஸ்லாம் இணைய பேரவை

>> Monday, February 4, 2008

உமர்,உண்மை அடியான் என்பவர்களின் எழுத்துவடிவ விவாதத்தின் அழைப்பிதழை பார்த்தவுடன் "இஸ்லாம் இணையப் பேரவை "  தலை தெரிக்க ஓடுதுங்கோ
 
========================================================================
 
 
 
 
உமருக்கு சூடு சொரனை உள்ளதா?

நேரடி மேடை விவாதத்திற்கு வரமுடியாது, எழுத்துவிவாதத்திற்கு தயார் என்று நாம் சொன்னபோது, அதற்கு பதில் அளிக்கமுடியாமல், உண்மை இஸ்லாமியர்கள் எப்படி நடந்துக்கொள்வார்களோ அதை அப்படியே வெளிக்காட்டியுள்ளார்கள், இஸ்லமைய இணைய பேரவை அன்பர்கள்.

அவர்கள் என்ன என்ன அவதூறு வார்த்தைகள் பேசியுள்ளார்கள் என்பதை இதை படிப்பவர்கள் புரிந்துக்கொள்ளட்டும். இருந்தாலும், இயேசுவை பின்பற்றுகிறவர்களாகிய நாம் அவர்களைப்போல வார்த்தைகளை பயன்படுத்தப்போவதில்லை, அதற்கு பதிலாக அவர்களை ஆசீர்வதிக்கிறோம். அவர்களுக்காக ஜெபிக்கிறோம்.

நல்ல மரம் நல்ல கனியை கொடுக்கும் என்றும், ஒரு மரத்தின் கனியினால் அந்த மரம் அடையாளம் காட்டப்படும் என்றும் இயேசு சொன்னது எவ்வளவு உண்மையாக இருக்கிறது பாருங்கள். இஸ்லாம் என்னும் மரத்தின் அடையாளம், இஸ்லாமியர்களின் கனிகளால் அறியப்படும்.

இனி அவர்களின் வரிகளுக்கு என் பதிலை காணலாம்.



 
Quote:
தோல்வி பயத்தால் உண்மையடியான் தலைமறைவானார்.

அன்புள்ள இணைய வாசகர்களுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

வலைபின்னல் (இன்டர்நெட்) என்ற இந்நூற்றாண்டின் அற்புதக் கண்டுபிடிப்பை பயனுள்ள முறையில் பயன்படுத்த முனைந்துள்ள நல் தமிழ் கூறும் நல்லலுள்ளங்களுக்கு மத்தியில், கள்ளிச் செடியாய் முளைத்துள்ள சில விஷவித்துக்கள், கண்ணியம் பண்பாடு போன்றவற்றை தூக்கிஎறிந்துவிட்டு, தமிழ் இணையத்தை நாசப்படுத்திக் கொண்டிருப்பதை நீங்கள் நன்றாகவே அறிவீர்கள்.


நாங்கள்: கள்ளிச்செடி, விஷவித்துக்கள்
நீங்கள்: கண்ணியம் பண்பாடுகளை பேணிக்காப்பவர்கள்

தினமும் செய்தித்தாள்களை படிக்கும் பழக்கமில்லையா உங்களுக்கு? படித்துப்பாருங்கள், யார் விஷவித்துக்கள் என்று புரியும்.


Quote:
ஜாதி மத பேதமின்றி மாமன், மச்சான் என்று வாஞ்சையோடு வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழக மண்ணில், ரத்த ஆற்றை ஓட்டியே தீருவது என்று கங்கனம் கட்டிக் கொண்டு இந்த விஷஜந்துக்கள் தங்களது எழுத்துவடிவிலான தீவிரவாதத்தை நம் தமிழக மண்ணில் விதைத்துக் கொண்டிருக்கின்றனர்.


இரத்த ஆறு, தீவிரவாதம் இதற்கு நாங்கள் தான் காரணம் இல்லையா? இரத்த ஆறு ஓடவேண்டும் என்பதால் தானே நேரடி விவாதத்திற்கு அழைக்கிறீர்கள் நீங்கள்? அப்படி நடக்கக்கூடாது என்று தானே நாங்கள் எழுத்துவிவாததிற்கு அழைக்கிறோம். உங்களுக்கு நல்ல நகைச்சுவை சுபாவம் அதிகம் என்று நினைக்கிறேன்.


Quote:

இது ஒருபக்கம் என்றால், மறுபக்கம் உலகம் போற்றும் உத்தம இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நாக்கூசும் அளவில் நரகல் நடையில் விமர்சித்தும், இஸ்லாத்தையும் இறைமறை குர்ஆனையும் இகழ்ந்துபேசிக்கொண்டு பொய்களையும் புரட்டுகளையும் இணையத்தில் தொடந்து அள்ளி வீசுகிறது.


மன்னிக்கவும், "உலகம் போற்றும் உத்தமர் இறைத்தூதர் நபிகள் நாயகம்" என்று சொல்லி நல்லவர்களின் பெயருக்கு களங்கம் விளைவிக்காதீர்கள். உலகம் அவரை அப்படி சொல்லவில்லை, இஸ்லாம் உலகம் என்று சொல்லிக்கொள்ளுங்கள் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

முகமதுவையும், இஸ்லாமையும் ஒருவர் புகழ்ந்தால், அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கும்:

1. அப்படி புகழுபவர் இஸ்லாமியராக இருக்கவேண்டும்.
2. அல்லது அவர் இஸ்லாம் பற்றியும், முகமது பற்றியும் அடிப்படையும் தெரியாதவராக இருக்கவேண்டும்.

உலகம் போற்றும் உத்தமர் என்றுச் சொல்லி, நல்லவர்களின் பெயருக்கு களங்கம் விளைவிக்காதீர்கள்.



Quote:
அவைகளுக்கு முற்றுப் புள்ளிவைக்கும் முகமாக, நல்லுள்ளங்கொண்ட பலர் இஸ்லாத்திற்கு எதிரான அந்த தவறான குற்றச்சாட்டுகளுக்கு தக்கபதிலளித்து வருகின்றனர்.


பதில் அளித்துக்கொண்டு இருக்கிறார்களா? யார் அய்யா அது, இது வரையில் "ஈஸா குர்‍ ஆன்" தளத்திற்கு பதில் என்றுச் சொல்லி நான் ஒரு கட்டுரையையும் படிக்கவில்லையே.

தமிழ் முஸ்லீம் தளமும் ஓரிரு பதில்களை கொடுத்துவிட்டும், ஒதுங்கி விட்ட செய்தி உமக்கு தெரியாதோ?


நேசமுடம் தளம் பொய்யும் புரட்டையும் சொல்லி, மாட்டிக்கொண்டு, ஒன்றுமே தெரியாத மாதிரி மூச்சு விடாமல் இருப்பதை உமக்கு தெரியாதோ?

பாவம் நீங்கள், உங்களுக்கு ஒன்றுமே தெரியமாட்டேங்கிறது.

சரி, போகட்டும், ஈஸா குர்‍ஆன் தளத்திற்கோ, உமருக்கோ யார் யார் பதில் அளித்தார்கள் என்று ஒரு பட்டியலை கொடுங்கள் பார்க்கலாம்? சரி வேண்டாம், நீங்கள் தான் பதில் அளித்து பாருங்களேன்?


Quote:
தன்முகத்தை மறைத்த, தன் பெற்றோர் தனக்கிட்ட உண்மையான பெயரைக்கூட வெளியே தெரிவிக்க வக்கில்லாத, வக்கிரபுத்தி கொண்ட சிலர் என்னமோபோ என்ற பெயரில் திருட்டு வலைப்பூவை நடத்துகின்றனர்.


என்ன செய்வது, இஸ்லாமிய நண்பர்களே, எங்கள் பெற்றோர் வைத்த பெயரையும் பயன்படுத்தாத அளவிற்கு "முஸ்லீம்களுக்கு கண்ணியத்தோடும், பண்பாடோடும்" இருப்பதால், நாங்கள் இணையத்தில் ஒளிந்துக்கொண்டு எழுதுகிறோம்.

இஸ்லாம் அல்லாத மற்ற இன மக்கள் நல்லவர்களாக இருப்பதால், நீங்கள் உங்கள் பெற்றோர் வைத்த பெயரை வைத்துக்கொண்டு எழுதுகிறீர்கள்? ஆனால், எங்களுக்கு அப்படி இல்லையே?

சாலையில் போகும் போது, பன்றிக்கூட்டம் எதிரே வரும் போது, நாம் தான் ஒதுங்கவேண்டும், இல்லையானால், அதன் செறு சகதி எல்லாம் நம்மீது படுமே.

நான் திருட்டு வலைப்பூவை நடத்துகிறேன் என்றுச் சொல்கிறீர்களே, யூதர்களை கொல்லையிட்டது யார்? உங்கள் முகமது அல்லவோ? பைபிளின் விவரங்களை கொல்லையிட்டது யார்? உங்கள் அல்லா இல்லையோ?

என்னவோ, யாஹூ தளமும், கூகுள் தளமும் உங்கள் அப்பாவிற்கு சொந்தமானதாகவும், அதை நான் திருடிவிட்டு பயன்படுத்திக்கொள்வதாகவும் எழுதுகிறீர்கள்?

என்ன இஸ்லாமிய நண்பர்களே, எங்கள் சொந்த பெயரை சொன்னால், பதில் அளித்துவிடுவீர்களோ?

நீங்கள் தான் எங்களுக்கு பெயரை வைத்துவிட்டீர்களே, கள்ளிச்செடி, விஷ ஜந்துக்கள், திருட்டு தளங்களை நடத்துபவர்கள், சூடு சொரனை இல்லாதவர்கள் என்று வைத்துவிட்டீர்கள் அல்லவா. அதுவே எங்களுக்கு போதும்.


Quote:

மேற்படி திருட்டு இணையத்தின் புரட்டுகளை களைவதற்காக இஸ்லாமிய இணையப் பேரவை வெளியிட்ட விளக்கத்திற்கு சம்மந்தமில்லாமல் உண்மையடியான் என்பவர் உள்ளே புகுந்தார். தனக்கும் மேற்படி திருட்டு இணையத்திற்கும் உள்ள கள்ள உறவை வெளிப்படுத்திக் கொண்டார்.


இணையத்தில் திருட்டு தளம் எப்படி இருக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்.
இஸ்லாம் இணைய பேரவை போல இருக்குமா? தெளிவாகச் சொல்லுங்களேன்.

திருடனுக்கு தேள் கொட்டியது போல, ஆரம்பத்தில் கிறிஸ்தவர்கள் பதில் அளிக்கமாட்டார்கள் என்ற தவறான எண்ணத்தில் ஒரு சில கிறிஸ்தவ கட்டுரைகளை எழுதிவிட்டு, நாங்கள் பதில் அளித்தவுடம், இந்த பூனையும் பால் குடிக்குமா என்ற கோணத்தில் காணாமல் போன இஸ்லாமிய ஆசிரியர்கள், அறிஞர்கள் கட்டுரைகள் எழுதும் தளங்களைப் போல இருக்குமா? சிறிது விளக்குங்களேன்.



Quote:

கிருத்துவ லேபிளில் உலாவரும் ஆசாமியான இந்த உண்மையடியானையும் அவரது கூட்டாளிகளையும் கடந்த 20-01-2008 அன்று நாம் பகிரங்க விவாதத்திற்கு அழைத்திருந்தோம். இஸ்லாம் பொய்யான மார்க்கம் என்பதற்கு இவர்களிடம் தகுந்த ஆதாரங்கள் உண்மையிலேயே இருந்திருந்தால் அதை நம்முன்னால் நிரூபிப்பதற்கு வந்திருக்கவேண்டும். நம் விவாத அழைப்பை கண்டு பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடிஒளிந்த ஆசாமிகள், மக்களை திசைதிருப்புவதற்காக எங்களுடன் எழுத்துவிவாதத்திற்கு தயாரா என்று நம்மிடம் கேட்டுள்ளனர். இப்படி அழைப்பதற்கு இவர்களுக்கு தகுதியிருக்கிறதா என்பது ஒருபக்கம் இருக்க, இவர்களைப் பார்த்து நாம் விடுத்த பகிரங்க அறைகூவல் இன்றுவரை கிணற்றில்போட்ட கல்லாக கிடக்கிறது. இதுதான் இஸ்லாத்தை எதிர்ப்பவர்களின் எதார்த்த நிலை என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.


அய்யா! ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், உங்களை நம்பி ஒரு சுய நினைவு உள்ள எந்த‌ மனிதனாவது மேடை ஏறுவானா?

வெறும் கட்டுரை எழுதியதற்கே:
1) பேடிகள்
2) தொடை நடுங்கிகள்
3) கள்ளிச்செடிகள்,
4) விஷ ஜந்துக்கள்
5) சூடு சொரனை இல்லாதவர்கள்

என்று அவதூறு சொல்லும் நீங்கள்.

உங்களுக்கு முன்பாக மேடையில் ஏறி பேசினால் என்னவாகும் என்று எங்களுக்கு தெரியாது என்று நினைத்தீர்களா?
அதாவது ஒரு பைபிள் வசனம் ஞாபத்திற்கு வருகிறது.

தன் மதிகேட்டில் திரியும் மதியீனனுக்கு எதிர்ப்படுவதைப்பார்க்கிலும், குட்டிகளைப் பறிகொடுத்த கரடிக்கு எதிர்ப்படுவது வாசி(நீதிமொழிகள் 17:12 ).


Quote:
இஸ்லாம் உண்மையான மார்க்கமல்ல என்றும், நபிகளாரைத் திட்டியும், குர்ஆனை அவமதித்தும் எழுதிக்கொண்டே இருக்கும் இவர்களிடம் எழுத்துவிவாதம் என்பது பயனளிக்காது என்பதனாலேயே ஒரேமேடையில் அவர்கள் எழுதிய விஷயங்கள் பொய் என்றும், இஸ்லாம்தான் உண்மையான மார்க்கம் என்றும் திட்டவட்டமாக நிரூபிப்பதற்கு பகிரங்க விவாத்திற்கு நாம் அழைப்பு விடுத்தோம்.


ஓகோ, எழுத்து விவாதத்திற்கு எங்களோடு வந்தால், தோல்வி அடைந்துவிடுவீர்கள் என்று முடிவே கட்டிவிட்டீர்களா?

ஏனைய்யா? எழுத்துவிவாதம் பலனளிக்காது? "பலன் அளிக்காது" என்றால், இஸ்லாம் தோல்வி அடைந்துவிடும் என்று நாங்கள் எடுத்துக்கொள்ளட்டுமா?

ஏன் மேடையில் பேசப்போகும் அதே வாய், எழுதும் போது பேசாதா?
மேடையில் பேச துடிக்கும் மூளை எழுதும் போது செயல் இழந்துவிடுமா?
மேடையில் பேசும் போது, அசைக்கப்படும் கை, எழுதும் போது எழுத மறுக்குமா?

என்ன நண்பர்களே பூச்சாண்டி காட்டுகிறீர்கள்?

சராசரி இஸ்லாமியர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன், எழுத்துவிவாதத்திற்கு வராமல் இப்படி ஏதோதோ எழுதிக்கொண்டு இருப்பதிலிருந்து, உங்கள் தோல்வியை நீங்களே ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.



Quote:
ஆனால் ஓடிவிட்டார்களே! எனவே நாம் விவாதிக்காமலேயே இவர்கள் இஸ்லாத்தை வெற்றிபெறச் செய்துவிட்டார்கள். விவாதம் செய்யமுன்வராமல் நழுவியதின் மூலம் தங்கள் தோல்லியை ஒப்புக்கொண்டு விட்டார்கள் - எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!


என்ன இஸ்லாமிய இணையமே உங்களுக்கெல்லாம் இதயம் என்று ஒன்று இருக்கவே இருக்காதா?

50க்கும் அதிகமாக கட்டுரைகளை நான் எழுதி பதித்து இருந்தால், ஒரு கட்டுரைக்கும் பதில் அளிக்காமல், நாங்கள் வெற்றிப் பெற்றோம், நாங்கள் வெற்றிப் பெற்றோம் என்று சொல்லிக்கொள்கிறீர்களே, உங்களுக்கு வெட்கமாக இல்லை? இப்படி நீங்கள் எழுதும் போது, உங்கள் மனசாட்சி உங்களை உறுத்தவில்லை? உங்களை எப்படி புரிந்துக்கொள்வது?


Quote:
சரி எழுத்து விவாதத்திற்கு அழைப்புவிடுக்கிறார்களே, நாம் அவர்களுடன் விவாதிப்பதாக இருந்தால் அல்லது நம் பிரதிவாதத்தை அவர்களுக்காக பதிவுசெய்கிறோம் என்பதாக இருந்தால் முதலில் அவர்கள் விவாதத்தை வைக்கவேண்டும். விவாதம் இல்லாமல் பிரதிவாதம் செய்யஇயலுமா?.

இதை ஏன் நாங்கள் குறிப்பிடுகிறோம் என்றால் இவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக விவாதிப்பதாக நினைத்துக்கொண்டு வெளியிடும் விஷயங்கள் அனைத்தும் பொய்களாகவும், இவர்களின் கற்பனையில் உதித்த அவதூறுகளாகவுமே உள்ளன. இஸ்லாத்தை எதிர்க்கிறோம் என்று தங்கள் மடமைத்தனத்தை உலகிற்கு வெளிப்படுத்துகிறார்களே தவிர இவர்கள் இஸ்லாத்திற்கெதிராக உருப்படியான எந்த விவாதத்தையும் செய்வதாகத் தெரியவில்லை.



ஈஸா குர்‍ ஆன் தளத்திற்கு உங்கள் கேள்விகளை எழுப்புங்கள்.

நான் தான் ஏற்கனவே, என் தளத்தில் பல விவாத தலைப்புக்களில் பதில் அளித்துள்ளேன்.
குர்‍ ஆன் சொல்லும் விவரங்கள் பொய் என்று எழுதியுள்ளேன்.
முகமது நபி இல்லை என்று சொல்லியுள்ளேன். பதில் அளித்துள்ளேன்.
பைபிளின் தேவன் அல்லா இல்லை என்று சொல்லியுள்ளேன்.

பல கட்டுரைகளை மொழி பெயர்த்துள்ளேன். பல இஸ்லாமிய தளங்களுக்கு பதில் அளித்துள்ளேன்.
எங்கே, உங்கள் இஸ்லாம் தளங்களில் "எங்கள் தள பெயர் எழுதி, இதற்கு மறுப்பு" என்று கட்டுரைகளை எழுதியிருக்கிறீர்களா?

இதோ இந்த பதிலிலேயே, என் பெயரை குறிப்பிடாமல், தளத்தின் பெயரை குறிப்பிடாமல் நீங்கள் எழுதும் போதே புரிகிறது, நீங்கள் எவ்வளவு பயந்து போய் இருக்கிறீர்கள் என்று.



Quote:

முதலில் இன்டர்நெட்டில் இப்படி எழுத்துவிவாத அழைப்பிதல் என்று வெளியிடுவது அவசியமா? அறிவுடமையா? சிந்தியுங்கள் நண்பர்களே. இணையத்தில் இவர்கள் விவாதிப்பதாக இருந்தால், இவர்கள் யாரை எதிர்த்து விவாதம் செய்கிறார்களோ அவர்கள் தங்கள் பிரதிவாதத்தை தாங்களாகவே பதிவுசெய்வார்கள். இதற்கு அழைப்பு என்று மதிமயக்கும் மாயாஜாலம் அவசியமில்லையே. இவர்களின் அழைப்பிதழைப் பெறாமலேயே நம் இணையதளம் உட்பட பல இஸ்லாமிய இணையதளங்கள் இஸ்லாத்திற்கு எதிரான கட்டுக் கதைகளுக்கு தகுந்த மறுப்பை வெளியிட்டுக் கொண்டுதானே இருக்கின்றன.


மறுபடியும் பொய் சொல்கிறீர்கள். யார் என் தளத்திற்கு பதில் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள் சொல்லுங்கள்? அந்த தளத்தின் பெயர் என்ன சொல்லுங்கள்?


Quote:
இஸ்லாத்தைப் பற்றி உறுப்படியான தகவல்களுடன் அறிவுப்பூர்வமாக விமர்ச்சனம் செய்பவர்களுக்கு முஸ்லீம்கள் சிறந்த முறையில் பதிலளித்துக் கொண்டுதானே இருக்கின்றனர்.


உங்களுக்கு விவாத அழைப்பு அனுப்பவேண்டுமானால், மேள தாளத்தோடு, ஊரையெல்லாம் கூட்டி, முதல் மரியாதை செய்து, வெற்றிலை பாக்கு வைத்து கூப்பிடவேண்டுமா?

இப்படி எங்களுக்கு முதல் மரியாதை செய்தா நீங்கள் கட்டுரைகளை எழுதுகிறீர்கள்? எங்கு கிறிஸ்தவத்தைப் பற்றி இஸ்லாம் பொய் சொன்னாலும், ஒவ்வொரு வரிக்கும் நாங்கள் வலிய வந்து பதில் சொல்கிறோம். ஆனால், நீங்கள், எவ்வளவு சொன்னாலும், பதில் சொல்லாமல், உதரி தள்ளிவிட்டு, ஒளிந்துக்கொள்கிறீர்கள்.


Quote:
உதாரணமாக இவர்கள் பொய்யாக புனைந்த நூற்றுக்கணக்கான கழிசடை அவதூறுகளை நாமும் பார்வையிட்டுள்ளோம். அவற்றில் ஒருசிலவற்றிற்கு பதில் அளித்துள்ளோம் மற்றவற்றை பதில்லளிக்காமல் விட்டுவிட்டோம்.


அப்படியா? ஆச்சரியமாக உள்ளதே, எங்கே நீங்கள் கிறிஸ்தவ கேள்விகளுக்கு பதில் அளித்த தொடுப்புக்களை தாருங்கள் பார்க்கலாம்.

Quote:

காரணம் எவரும் பதில் சொல்லாமேலேயே இவர்கள் வெளியிட்ட அபத்தங்களை, பொய்தான், பிராடுதான், புரட்டுதான், இஸ்லாத்திற்கு எதிரான இவர்களின் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடுதான் என்பதை மக்கள் அதை படித்தவுடனேயே பளிச்சென்று விளங்கிக்கொள்வார்கள். மேற்கொண்டு நாம் விளக்கம்வேறு அதற்காக எழுதுவதற்கு அவசியமில்லை. எனவேதான் இவர்கள் பதிவுசெய்பவைகளை பொரும்பாலானவற்றை கண்டுகொள்ளமல் விட்டுவிடுகிறோம்.


ஆமாம், யார் பிராடு, யார் செய்தது பித்தலாட்டம், யார் சொல்வது பொய் என்பதை ஒவ்வொரு நாளின் செய்தித்தாள் சொல்கிறது, அதை படிப்பதில்லையா நீங்கள்?

1. நிஜாமுத்தீன் அவர்கள் ஜீமெயிலில் ஒரு தில்லுமுல்லு செய்து, இன்றுவரை மூச்சு விடவில்லை.

2. நேசமுடன் தளம் இஸ்லாமுக்கு பல இலட்சம் பேர் மாறினார் என்று ஒரு மிகப்பெரிய பொய்யை சொன்னார், கேள்வி கேட்டால், பதிலைக்காணோம்.

3. தமிழ் முஸ்லீம் தளம் என்னடா என்றால் "அல்லேலூயா" என்ற வார்த்தைக்கு மிகவும் புத்திசாலி தனமாக பதில் சொல்வதாக கட்டுரை எழுதி, கேள்வி கேட்டதால், அல்லோலப்பட்டுள்ளது.

4. இன்னும் பிஜே அவர்களை எடுத்துக்கொண்டால், அவருக்கு சொந்த வீட்டு பிரச்சனை(இஸ்லாம் குழுக்கள்) தீர்த்துக்கொள்ளவே நேரமில்லை, நான் எழுதும் கட்டுரைகளுக்கு பதில் எழுத அவருக்கு ஏது சமயம்?

கிறிஸ்தவத்தைப் பற்றி எழுத ஒரு தகுதி வேண்டும்.



Quote:

நாம் பதில்சொல்லியிருக்கக் கூடிய ஒருசில விஷயங்கள் கூட, இந்த அளவிற்கா இவர்கள் சிந்தனையில்லாமல் இருக்கிறார்கள்? என்று இவர்களின் மீது நமக்கு ஏற்பட்ட அணுதாபம்தாம் காரணமேயல்லாமல் அந்த ஆக்கங்களில் கூட இவர்கள் அறிவுப்பூர்வமாக எதையும் விவாதிக்கவில்லை.


அய்யய்யோ அறிவு பற்றியெல்லாம் நீங்கள் பேசுகிறீர்களே... இறைவா எங்கு சென்று நான் முறையிட

Quote:

இதுதான் உண்மை! எனவே நாம் எதற்கெல்லாம் பதில்சொல்லாமல் விட்டுவிட்டோமோ அவைகளெல்லம் சுத்த ஹம்பக் என்று இவர்களாகவே உணர்ந்து அழித்துவிடுவதுதான் அவர்களுக்கு நல்லது, அழிக்காவிட்டால் எங்களுக்கொண்டும் நஷ்டமில்லை. காரணம் இவர்கள் என்னதான் பாடுபட்டாலும், அல்லாஹ்வுடைய மார்க்கமாம் இஸ்லாத்தை, இந்த சத்திய ஜோதியை இவர்கள் வாயால் ஊதி அனைத்துவிடமுடியாது. இந்த இஸ்லாமிய மார்க்கத்தை நிலைபெற செய்யும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றிருக்கிறான்.


அய்யா! அந்த அல்லாவிற்கு தான் நாங்கள் கேள்விகள் கேட்டுக்கொண்டு இருக்கிறோம். குறைந்த பட்சம் உங்கள் மூலமாவது அவர் பதில் சொல்வார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அதற்கும் எங்களுக்கு கொடுப்பனை இல்லை.

நீங்கள் பதில் சொல்வீர்களோ இல்லையோ, ஆனால், ஒரு சாதாரண முஸ்லீம் எ(ன்)ங்கள் கட்டுரைகளை படித்தால், நிச்சயமாக அவர் ஒரு முஸ்லீமாக இருக்கமாட்டான் நாளடைவில், இது உங்களுக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்.


Quote:

இவர்கள் இதற்குமேலும் என்னதான் எழுதினாலும் மக்கள் அவைகளையெல்லாம் பொருட்படுத்தாமல் இவர்களிடம் உண்மையிருக்குமானால் இஸ்லாமிய இணையப் பேரவையுடன் ஏன் விவாதத்திற்கு செல்லவில்லை? என்றே சிந்திப்பார்கள்.


அதே மக்கள், இந்த உமர், இத்தனை கட்டுரைகள் எழுதினாலும் ஏன் ஒரு இஸ்லாம் தளமும், ஒரே ஒரு இஸ்லாம் தளமும் பதில் அளிக்க முன்வரவில்லை என்று சிந்திப்பார்கள்.


Quote:

இவர்களுக்கு வெட்கம் மானம் சூடு சொரணை உண்மையிலேயே இருந்திருந்தால் மேலம் இவர்கள் தங்கள் மதத்தின் வசுவாசமுள்ள உண்மை கிருத்துவர்களாக இருப்பின், நம் விவாத அழைப்பை ஏற்று நம்மோடு பகிரங்க விவாதத்திற்கு வந்திருப்பார்கள். நம்விவாத அழைப்பைக் கண்டு தோல்விபயத்தில் உறைந்தது மட்டுமல்லாது எழுத்துவிவாதம் என்று எழுதி அதிலும் கடும் தோல்வியைத்தான் இவர்கள் சந்தித்துள்ளார்கள்.


அய்யா! முதலில் எங்களோடு எழுத்து விவாதத்திற்கு வாருங்கள். நீங்களாகவே வெற்றி பெற்றதாக கற்பனை செய்துக்கொள்ளவேண்டாம்.

எனக்கு சூடு சொரனை இருப்பதால் தான்:

1) கிறிஸ்தவத்திற்கு எதிராக பொய்யை சொல்லும் இஸ்லாமிய தளங்களை தேடி கண்டுபிடித்து பதில் அளித்துக்கொண்டு இருக்கிறேன்.
2) பிஜே அவர்களின் "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்திற்கு பதில் அளித்துக்கொண்டு இருக்கிறேன்.
3) ஜாகிர் நாயக் அவர்களுக்கு, இஸ்லாம் கல்வி தளத்திற்கு, இன்னும் உள்ள தளங்களுக்கும் பதில் அளித்துக்கொண்டு இருக்கிறேன்.

எனக்கு சூடு, சொரனை எல்லாம் இருக்கிறது என்று நிருபித்துக்கொண்டு இருக்கிறேன். உங்களுக்கு இவைகள் இருப்பதாக உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், என் கட்டுரைகளுக்கு பதில் தாருங்கள்.

"அவன் எழுதுவது தவறு, கழிசடை" என்று சப்பை கட்டு கட்டி ஓடி ஒளிந்துக்கொள்ள முயற்சி செய்யாதீர்கள். இது மிகப்பெரிய உலகம், எல்லாரும் கட்டுரைகளை படிக்கிறார்கள். மறுப்பு இருந்தால் மட்டுமே அவர்களுக்கு இஸ்லாமின் மீது உள்ள நம்பிக்கை இருக்கும், நீங்கள் இப்படி ஒதுங்கி விட்டால், நாளடைவில் இஸ்லாமை காணமுடியாது.



Quote:

இன்னும் நாம் இவர்களுக்கு வைத்த நேரடி விவாத அழைப்பு இங்குள்ளது. இவர்கள் எப்போது வேண்டுமானாலும் எம்மோடு நேரடி விவாதத்திற்கு வரலாம்.இவர்களின் வாதங்களை பொய் என நிறுபிப்பதற்கும் இஸ்லாம்தான் ஊண்மையான சத்திய மார்க்கம் என்று நிறுபிப்பதற்கும் நாம் தயாராகவே உள்ளோம்.எனவே இன்று நாம் பெற்றிருக்கக்கூடிய வெற்றி இறைமார்க்கமாம் இஸ்லாத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. இந்த மாபெரும் வெற்றியை சக இஸ்லாமிய வலைப்பதிவாளர்களிடமும், தமிழ் இஸ்லாமிய இணையங்களை நடத்தும் அத்தனை உள்ளங்களுக்கும்;, உலக முஸ்லீம்களிடமும் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். இவர்கள் எழுத்துவிவாத அழைப்பிதல் என்று பதிந்தவற்றிற்கு இஸ்லாமிய இணையப் பேரவையின் பதிலை கீழே பார்வையிடுங்கள். அவற்றை பதிவிறக்கம் செய்யஇங்கே கிளிக் செய்யவும்.

http://www.iiponline.org/


ஏன் உங்கள் சத்திய மார்க்கம் உண்மை என்று "எழுத்து விவாதம்" மூலமாக நிருபித்தால், ஏற்றுக்கொள்ளாதா? அல்லது உங்களால் முடியாதா?

இனி நான் நிருபிக்கிறேன், கிறிஸ்தவர்களுக்கு எவ்வளவு சூடு உள்ளது, சொரனை உள்ளது என்று உங்களுக்கே புரியும், இப்போதே புரிந்து இருக்கும்.

கடைசியாக, எழுத்து விவாதத்திற்கு வர உங்களுக்கு தைரியம், உண்மை நேர்மை இருந்தால், எனக்கு தெரிவிக்கவும். இனி, என் தளத்தில் "இஸ்லாம் இணைய பேரவையோடு விவாதம்" என்ற தலைப்பில் பல விவாத தலைப்புக்கள் கட்டுரைகள் வெளிவரும்". என் முதல் விவாத தலைப்பாக "முகமது ஒரு நபியா?" என்ற தலைப்பில் நான் கட்டுரைகளை, கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன். உங்களால் முடிந்தால், பதில் தாருங்கள்.

முகமதுவின் தனிப்பட்ட வாழ்க்கை, நடத்தை, திருமண உறவு போன்ற தலைப்புக்களில் கட்டுரைகள் வெளிவரும்.

இது, "இஸ்லாம் இணைய பேரவைக்கு ஈஸா குர்‍ஆனின் எழுத்து வடிவ விவாத அழைப்பு" . மேள தாளம் வைத்து வெற்றிலை பாக்கு வைத்து அழைத்ததாக நினைத்துக்கொண்டு, சூடு உள்ளவர்கள், சொரனை உள்ளவர்கள் பதில் அளிக்கலாம்.
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP