சமீபத்திய பதிவுகள்

இந்தியாவில் காதல் சின்னமாக திகழும் தாஜ்மஹால்,-ஏலம்?

>> Monday, March 31, 2008

முகலாய மன்னர் ஷாஜகானின்
இந்தியாவில் காதல் சின்னமாக திகழும் தாஜ்மஹால்,கட்டியவர் வாள் ஏலம்

ரூ.4 கோடி எதிர்பார்ப்பு தங்க கைப்பிடி வாள் லண்டனில் இன்று ஏலம்




லண்டன், மார்ச் 31-
முகலாய மன்னர்களில் பிரபலமானவரான ஷாஜகான் பயன்படுத்திய தங்கக் கைப்பிடி கொண்ட வாள், லண்டனில் இன்று ஏலம் விடப்படுகிறது. அது ரூ.2.4 கோடி முதல் ரூ.4 கோடி வரை விலை போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காதல் மனைவி மும்தாஜுக்காக தாஜ் மகாலைக் கட்டிச் சரித்திரத்தில் என்றும் இடம் பிடித்தவர் மன்னர் ஷாஜகான். கி.பி. 1629க்கு முன் அவர் எப்போதும் வைத்திருந்த வாளின் கைப்பிடி சுத்தத் தங்கத்தால் செய்யப்பட்டது.
அதில் தங்க அலங்காரங்களும், சின்னங்களும் பொறிக்கப்பட்டிருக்கும். அதன் கூரிய வாளில் ஷாஜகானின் அதிகாரப்பூர்வ மற்ற பெயர்கள், பிறந்த இடம், தேதி ஆகியவை பொறிக்கப்பட்டிருக்கும். அதை தனது தனிப்பட்ட வாளாக மன்னர் எப்போதும் வைத்திருந்தார்.
பழங்கால ஆயுதங்கள் மற்றும் மண் பொருட்களைச் சேகரித்து பாதுகாப்பதுடன், ஆராய்ச்சியில் ஈடுபடும் ஜாக்கஸ் டெசன்பேன்ஸ் என்பவர் அந்த வாளை பாதுகாத்து வந்தார்.
அந்த வாள் லண்டனின் போன்ஹாம்ஸ் பகுதியில் இன்று ஏலம் விடப்படுகிறது. அது ரூ.2.4 கோடி முதல் ரூ.4 கோடி வரை ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஏல நிறுவனம் தெரிவித்தது.




http://tm.dinakaran.co.in/firstpage.aspx#

StumbleUpon.com Read more...

மாட்டுச் சாமி பாத்தீங்களா?படம் போட்டுருக்கேன் பாருங்க.





சென்னை பட்டினப்பாக்கம் பகுதியை சேர்ந்த இந்த காளை மாடு பிறக்கும்போதே 5 கால்களுடன் இருந்தது. மஞ்சள், குங்குமம் வைத்து காளையை வழிபடுபவர்கள், தெய்வ அம்சமாக கருதி கூடுதல் காலுக்கும் பொட்டு வைத்து வழிபடுகின்றனர்.

http://tm.dinakaran.co.in/firstpage.aspx#

StumbleUpon.com Read more...

சமூக நீதிகளுக்காகப் போராடாத கிறீத்துவத்தில் கோடி உறுப்பினர்கள் இருப்பதைவிட அப்படி ஒன்று இல்லாமல் இருப்பதே மேல்.

கிறீத்துவம் பரவலாகத் தீண்டாமைக் கொடுமையிலிருந்து பல சாதிகளை மீட்டெடுத்து அவர்களுக்கு ஒன்றுமில்லையென்றாலும் கல்வியை மட்டுமேனும் வழங்கியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆயினும் சாதி அடையாளங்களை கிறீத்துவர்கள் முற்றிலும் துறக்கவில்லை என்பது கிறீத்துவத்தின் அடிப்படைகளை மீறிய செயலே. கிறீத்துவம் பரவிய நாட்க்களிலேயே சாதி அடையாளத்துடன் கிறீத்துவர்கள் செயல்படக்கூடாது என்கிற தீர்க்கமான முடிவு இருந்திருக்குமானால் இன்று எறையூர் போன்ற பிரச்சனைகள் இருந்திருக்காது. அதே நேரம் அப்படி ஒரு நேர்மையான முயற்சி இருந்திருக்குமானால் கிறீத்துவம் இந்தியாவில் இத்தனை தூரம் பரவியிருந்திருக்காது. மதம் பரப்ப செய்த சமரசம் இது.

உயர்சாதி இந்துக்களிடமிருந்து கிறீத்துவர்களுக்கு விடுதலை கிடைத்ததே தவிர உள்ளுக்குள் அவர்களிடம் சாதி அடையாளங்கள் தொடர்ந்து பின்பற்றப்பட்டுவருகிறது. இதனால் இன்று சாதியின் பேரில் சமூகத்தில் நடக்கும் அனைத்து அரசியல்களும் கத்தோலிக்கர்களுக்குள்ளும் நடக்கிறது.

நெல்லை மாவட்டம் இராதாபுரத்தில் நாடார் அதிகம் வசிக்கும் பகுதியில் அங்கிருக்கும் பரதவர்களிடம் வரி வசூலிக்காமல், அவர்களை கோவிலில் வகை வைக்காமல் இருக்கும் நிலை உள்ளது. இதற்கு அந்தப் பங்கின் சாமியாரே துணை போவதாக செய்தியுள்ளது.

நகர்ப்புறம் தவிர்த்து எங்கெல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட சாதியினர் ஒரே பங்கில் செயல்படுகிறார்களோ அங்கே இந்தப் பிரிவினை அழுத்தமாகத் தெரிகிறது. நகர்ப்புறக் கோவில்களிலும் தென் தமிழர்கள் அதிகமிருக்கும் பகுதிகளில் நாடார், மீனவர் குழுக்கள் உருவாகிவருகின்றன.

சாதி அடிப்படையிலான அரசியல் எழுச்சி இதற்கு ஒரு காரணி. சாதீய எதிர்ப்பு அதிகம் இருந்த காலகட்டங்களை விட இன்று சாதீய உணர்வு அதிகரித்திருப்பதை உணரமுடிகிறது. சாதி அடிப்படையில் சலுகைகளைப் பெற, தங்கள் ஓட்டு வங்கியை ஒருங்கிணைத்து பலம் காட்டச் செய்யும் முயற்சிகளால் இன்று மீண்டும் சாதி தன் அகோர முகத்தை அலங்கரித்துக் காட்டிக்கொள்ளத் துவங்கியுள்ளது.

கத்தோலிக்க கிறீத்துவம் இந்த அரசியலில் சிக்கிக் கொண்டுள்ளது மேலே சொன்னது போல ஒன்றுக்கும் மேற்பட்ட சாதியினர் வாழும் பல கத்தோலிக்க பங்குகளிலும் வெளிச்சம். இதில் சாதி அரசியல் செய்யும் கத்தோலிக்க பாதிரியார்களின் பங்களிப்பு மிக அதிகம். வெளியே மக்களிடையே மட்டுமன்றி திருச்சபைக்கு உள்ளேயும், சாமியார்கள் நடுவே சாதி அரசியல் மிகக் கேவலமான முறையில் பின்பற்றப்படுகிறது.

மறைமாவட்ட முக்கிய பதவிகள் அங்கு எந்த சாதி சாமியார்கள் அதிகமோ அந்த சாமியார்களுக்கு வழங்கப்படுவது, கூட்டங்களில் தலித் பாதிரியார்களின் கருத்துக்களை நிராகரிப்பது போன்ற கேவலங்கள் பலவற்றையும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

எறையூர் கிறீத்துவர்கள் நேரடியாகத் தீண்டாமையை பின்பற்றுவது இன்றைக்கு வெளியில் தெரிந்திருந்தாலும் இத்தனை காலம் அது கிறீத்துவத்தின் மேலாண்மையின் கீழ் அனுமதிக்கப்பட்டிருப்பதை ஜீரணிக்க இயலவில்லை. மிக மேலோட்டமான தாக்குதலையே கிறீத்துவம் தன் மக்களிடம் நிகழ்த்தியுள்ளதை புரிந்துகொள்ள முடிகிறது.

தென் தமிழக கிறீத்துவ மீனவ கிராமங்கள் பலவும் வன்முறைக் களங்களாக இன்றும் திகழ்கின்றன. குறைந்த பட்சம் 400 ஆண்டுகள் கிறீத்துவப் பின்னணியில் வன்முறை குறித்த மாற்றத்தை கிறீத்துவம் தன் மக்களிடம் ஏற்படுத்தாமல் விட்டதன் பின்னணியில் பாதிரியார்களின் சுயநலப் போக்கும், பூசைகள் செய்வதில், நிறுவனங்களை மேலாள்வதில் மட்டுமான அவர்களின் கவனமும், பலநேரங்களில் இவர்களே இந்த அவலங்களை உருவாக்கித் துணை போவதுமே காரணம்.

ஒரு பங்கிற்கு சாமியார் ஒருவரை அனுப்ப வேண்டுமென்றால் முதலில் கணக்கில் கொள்ளப்படுவது அவரின் சாதி என்றால் கிறீத்துவத்தின் நிலமை கவலைக்கிடத்திலுள்ளதை உணர முடியும்.

தான் சார்ந்த மதத்தினை களையறுக்க உயிரைத் தியாகம் செய்தவர் இயேசு. ஒரு புரட்சியாளனாக, ஒதுக்கப்பட்ட இனத்தினரோடு பழகியவர், பெண்கள் கீழானவர்களாய் நடத்தப்பட்ட காலத்தில் அவர்களைத் தன் சீடர்களாக்கிக்கொண்டவர், பாவிகளோடும் தன் மதம் தடை செய்திருந்த தொழுநோயாளிகளிடமும் பழகியவர், மதத்தின் சட்டங்களை மனிதத்தின் பொருட்டு தூக்கி எறியத் தயங்காதவர், 'நீ சொன்னவற்றை மறுத்துவிடு உன்னை விடுதலை செய்கிறேன்' எனும் வாக்கின் முன்பும் சமரசம் செய்துகொள்ளாதவர் இயேசு. அவரை பலி பீடத்தில் தொழுகைப்பொருளாக்கிவைத்துவிட்டதில் அவரின் புரட்சிப் பின்னணி சாகடிக்கப்பட்டு அவரின் வழி வந்தவர்கள் வெறும் பூசாரிகளாக மாறிவிட்டது கத்தோலிக்க மதம் இயேசுவின் வழிகளிலிருந்து தடம்புரண்டுவிட்ட நிலையையே காண்பிக்கிறது.

மக்களின் வாழ்வைத் தொடாத மதம் வெறும் நிறுவனம். அங்கே பல செயல்களும் நிகழலாம், எல்லோரும் பல அலுவல்களைச் செய்யலாம் ஆனால் கடவுளைக் காண இயலாது, அங்கே ஆன்மீகம் வெறும் வார்த்தை. வெளிவேடம். அதைவிட ஏமாற்று வேலை ஒன்றுமே இல்லை.

சமூக அவலங்களை இயேசுவின் தீவிரத்தோடு எதிர்த்தால் இயேசுவுக்கு நேர்ந்த சிலுவை மரணம்தான் மிஞ்சும். இதுதான் இயேசுவின் வழி. அதன் முடிவாக ஒருவர் பெறுவது இழி பெயரும், அவமானமும் சிலுவை மரணமும்தான். ஆயினும் அதுவே உன்னத வழி என மக்களை நம்பச் செய்யும் வேகத்தில் தாங்களும் அந்த நம்பிக்கையில் சிறிதளவேனும் வெளிக்காட்ட வேண்டியதை சாமியார்கள் உணர்ந்து செயல்படவேண்டும்.

இயேசு தன் கடைசி இராவுணவின்போது சீடர்களின் பாதங்களைக் கழுவி தலைவன் என்பவன் தொண்டனாக இருப்பது எப்படி என்பதைக் காண்பித்தார். இன்றைய பாதிரியார்கள் வயதான மக்களையே உட்காரவைத்துப் பேசுவதில்லை. இயேசு எதிர்த்த மதபோதக அதிகார அமைப்பு மீண்டும் அவர் பெயரிலேயே கட்டி எழுப்பப்பட்டுள்ளது என்பதையே இதுபோன்ற செயல்கள் காட்டுகின்றன.

தீண்டாமையை, சாதிப் பாகுபாட்டை கத்தோலிக்கம் அங்கீகரிக்கவில்லை என்பதை வெறும் அறிவிப்போடு நிறுத்திவிடாமல் செயலில் காட்டவேண்டும். சாதிபார்த்து சாமியார்களை பங்குக்கு அனுப்பும் நிலமை மாற வேண்டும். இன்றைக்குத் தேவை சமாதானப் பேச்சு அல்ல சாட்டையடி. இந்தக் கொடுமையை இதுவரை அனுமதித்ததற்காக பாதிரியார்கள் தங்கள் முதுகில் இரண்டு போட்டுக்கொள்ளவும் வேண்டும். தமிழக கத்தோலிக்க திருச்சபை எறையூரில் தீண்டாமையை முன்னிறுத்தக் கேட்கும் கிறீத்துவர்களை உடனடியாக மதத்திலிருந்து விலக்கிவைக்க வேண்டும்.

இந்து மதம் இவர்களுக்கு பாதுகாப்பளிக்காது எனச் சொன்ன தலைவரை மனமார பாராட்டுகிறேன். இவரிடமே உண்மையான இயேசு தெரிகிறார். தன் சுயநலத்திற்காக அவர் சமரசம் செய்துகொள்ளவில்லை. கொள்கைகளை காசுக்கு விற்க விரும்பவில்லை. எண்ணிக்கைக்காக எதையும் செய்வேன் எனும் மனப்போக்கு இல்லை.

உயிரற்ற கிறீத்துவத்தில், இயேசுவின் வழியில் செல்லாத கிறீத்துவத்தில், மக்களின் மனதைத் தொடாத கிறீத்துவத்தில், சமூக நீதிகளுக்காகப் போராடாத கிறீத்துவத்தில் கோடி உறுப்பினர்கள் இருப்பதைவிட அப்படி ஒன்று இல்லாமல் இருப்பதே மேல்.

Extreme situations require extreme actions.

 

StumbleUpon.com Read more...

காமப்பொருளா பெண்? இந்தியாவில் அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள்!

காமப்பொருளா பெண்? இந்தியாவில் அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள்!
இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இரண்டு பெண்கள் கற்பழிக்கப்படுவதாகவும், இரண்டு பேர் கடத்தப்படுவதாகவும், நான்கு பேர் பாலியல் கொடுமைக்கு ஆளாவதாகவும், ஏழு பேர் கணவன்மார்களால் கொடுமைக்கு ஆளாவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில், தேசிய குற்றப்பதிவு ஆணையம் மேற்கொண்ட இந்த ஆய்வில் குற்ற எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது. கடந்த 2006ம் ஆண்டுல் பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்களில் மிக அதிக அளவாக ஆந்திர மாநிலத்தில் 21,484 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது நாட்டின் ஒட்டுமொத்த குற்றச் சம்பவங்களில் 13 சதவீதமாகும். அதற்கு அடுத்தபடியாக உத்திர பிரதேசத்தில் 9.9 சதவீதம் குற்றங்கள் பதிவாகியுள்ளன.

தேசிய குற்றப் பதிவு ஆணைய தகவலின்படி, 2003ம் ஆண்டிலிருந்து அடுத்த ஆண்டிற்குள் 15 சதவீதம் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இது 2005ல் 0.7 சதவீதமாகவும், 2006ல் 5.4 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட 35 நகரங்களில் பெண்களுக்கு எதிராக டெல்லியில் 4 ஆயிரத்து 134 குற்றங்களும், ஹைதராபாத்தில் 1,755 குற்றங்களும் பதிவாகியுள்ளன.

டெல்லியில் 31.2 சதவீதம் கற்பழிப்பு வழக்குகளும், 34.7 சதவீதம் கடத்தல் வழக்குகளும், 18.7 சதவீதம் வரதட்சணை கொடுமை வழக்குகளும், 17.1 சதவீதம் கணவன் மற்றும் அவர்களது குடும்பத்தினரால் துன்புறத்தப்பட்ட வழக்குகளும், 20.1 சதவீதம் பாலியல் தொந்தரவு வழக்குகளும் பதிவாகியுள்ளன.

இந்தியாவில் கடந்த 2005ம் ஆண்டு 15 ஆயிரத்து 847 கற்பழிப்பு வழக்குகள் பதிவான நிலையில், 2006ம் ஆண்டில் 19 ஆயிரத்து 348 கற்பழிப்பு வழக்குகளாக உயர்ந்துள்ளது. அதில் ஆயிரத்து 593 வழக்குகள் (8.2 சதவீதம்) 15 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கும், 3,364 வழக்குகள் (17.4 சதவீதம்) இளம் பெண்களுக்கும், 11,312 வழக்குகள் 18 முதல் 30 வயதிற்குட்பட்ட பெண்களுக்கும் நடந்துள்ளன. மத்திய பிரதேசத்தில் மட்டும் 2,900 கற்பழிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நண்பர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் என பெண்களுக்கு ஏற்கனவே பழக்கப்பட்டவர்களால் மட்டும் 75.1 சதவீத (14 ஆயிரத்து 536 வழக்குகள்) கொடுமைகள் நிகழ்ந்துள்ளதை இந்த தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன். 431 கொடுமைகள் (3 சதவீதம்) பெற்றோர் அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களாலும், 36.8 சதவீதம் (5,351 வழக்குகள்) அக்கம்பக்கத்தினராலும் நிகழ்ந்துள்ளன.

பாலியல் பலாத்காரங்களை பொருத்தவரை, 34,175 வழக்குகள் 2005ல் பதிவான நிலையில், 2006ல் 36,617 வழக்குகளாக (7 சதவீதம்) அதிகரித்துள்ளது. 6,243 வழக்குகளை கொண்டு, 17 சதவீதத்துடன் மத்திய பிரதேசம் தான் இதிலும் முதலிடத்தில் உள்ளது.
7,618 வழக்குகளுடன் வரதட்சணை கொடுமையும் 12.2 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக உத்திர பிரதேசத்தில் 1,798 வழக்குகளும் அதற்கு அடுத்தபடியாக பிகாரில் 1,188 வழக்குகளும் பதிவாகியுள்ளன. கடத்தல் சம்பவங்களிலும் 2,551 வழக்குகளுடன் உத்திரபிரதேசம் முதலிடம் பெறுகிறது.

பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு தீர்வுதான் என்ன?

2008ம் புத்தாண்டு பிறந்த இரண்டாவது மணிநேரத்தில், மும்பையில் அயல்நாடு வாழ் இந்திய பெண்களுக்கு நடந்த குழு பாலியல் பலாத்காரங்கள் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் பத்திரிக்கைகளில் வெளியானதால், தேசிய அளவில் பெரும் அதிர்ச்சி கிளம்பியது.

அதேபோல், உதய்ப்பூர் நகரில் பிரிட்டன் பெண் பத்திரிக்கையாளர் கற்பழிக்கப்பட்ட சம்பவமும் கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் பெயர்போன இதே இந்திய மண்ணில் பெண்களுக்கான பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருக்கும் அவலத்தை மீண்டும், மீண்டும் எடுத்துக்காட்டுகிறது.

இந்த தகவல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்ட மற்றும் கணக்கில் வந்த குற்றங்கள். இவற்றை விட பலமடங்கு குற்றசம்பவங்கள் வெளிப்படையாக கூறப்படாமல், பெண்கள் தங்களுக்குள்ளாகவே புதைத்து வைத்திருப்பதும் மறுக்கமுடியாத உண்மை. ரயில், பேருந்து, கடை, அலுவலம், கோயில், சுற்றுலா தளங்களஎன எத்தனையோ இடங்களில் ஏன்? வீட்டிலேயே கூட நடந்த, நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஏராளம், ஏராளம்...

ஒவ்வொரு பெண்ணுக்கும் இப்படி ஏதாவது தொந்தரவுகள் நிகழக்கூடும் என்பதால், இதற்கு எதுதான் தீர்வாக அமைய முடியும் என்பது அனைவரது கேள்வியும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க காவல்துறை, சட்டங்களால் மட்டும் முடியாது. அதற்கு ஒவ்வொரு பெண்ணும் தன்னை தானே பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று சமுதாய அக்கறை கொண்டவர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.

ஆனால், இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது அந்தந்த பெண்களைப் பொருத்தது என்றே எண்ண தோன்றுகிறது
 

StumbleUpon.com Read more...

இந்து மத கோவில்களில் மாற்று மதத்தவர்கள் நுழையக்கூடாது

ஜேசுதாஸூக்கு மறுப்பு : பூசாரிகள் வைத்ததுதான் சட்டம்!
கேரமாநிலத்திலுள்கடம்புழஅம்மனகோயிலிற்குளசென்றவழிபபிரபபாடகரஜேசுதாஸிற்கஅக்கோயிலநிர்வாகமஅனுமதி மறுத்திருப்பதவெட்கத்தையும், வேதனையையுமஅளித்துள்ளது.

webdunia photo FILE
கிறித்தவராகபபிறந்ஜேசுதாஸவேறுபாடபாராமலஏராளமாபக்தி பாடல்களைபபாடியுள்ளாரஎன்பதமட்டுமின்றி, கோயில்களுக்குமசென்றபக்தியுடனவழிபடுபவர். சுவாமி அய்யப்பனமீதஅவரபாடிபாடலஒன்றஒவ்வொரஇரவுமஒலித்பின்னரசபரிமலஅய்யப்பனகோயிலநடசாத்தப்படுவதவழமையாஇருந்தவருகிறது.

கர்நாடஇசைககச்சேரிகளசெய்தகோயில்களுக்கநிதி சேகரித்தஅளித்தஇறைப்பணி ஆற்றியவரபாடகரஜேசுதாஸஅவர்கள். அப்படிபட்இறைபபக்தரை, தூநெறியாளரை, சிறந்இசைககலைஞரகோயிலிற்குளஅனுமதிக்மறுத்திருப்பதஅடாசெயலமட்டுமின்றி, இந்தமதத்தினஆன்மீநோக்கத்திற்கமுற்றிலுமஎதிரானதஆகும்.

"கடவுளஅருகஎலிகளும், பூனைகளுமசெல்கின்றன. ஏனஜேசுதாஸூக்கமட்டுமதடவிதிக்கப்படுகிறது?" என்றவருத்தத்துடனகேள்வி எழுப்பியுள்ஜேசுதாஸ், மற்றொரவிவரத்தையுமகூறியுள்ளார். அதுவமுக்கியமானது:

"கர்நாடமாநிலமகொல்லூரிலஉள்புகழ்பெற்மூகாம்பிககோயிலிற்குசசென்றுள்ளேன். சபரிமலஅய்யப்பனகோயிலிற்குசசென்றதரிசித்தஇருக்கிறேன். அங்கெல்லாமஇதபோன்கசப்பாஅனுபவங்களஏற்பட்டதகிடையாது" என்றசுவாதிததிருநாளஇசைக்கல்லூரியிலநடந்விழாவிலவருதத்துடனஅவரபேசியுள்ளார்.

மற்மதத்தினரகோயிலிற்குளநுழைக்கூடாதஎன்பதஇந்துககோயில்களிலகடைபிடிக்கப்படுமபொதவிதியாஇருக்குமென்றால், ஜேசுதாஸசபரிமலஅய்யப்பனகோயிலிற்குளஅனுமதிப்பதும், குருவாயூரகிருஷ்ணனகோயிலஉள்ளிட்சிகோயில்களிலஅனுமதி மறுத்தஅவரஅவமானப்ப்படுத்துவதுமஏன்? இதஎல்லபக்தர்களினஉள்ளத்திலுமஎழுமகேள்வியாகும்.

"மற்மத்த்தினருக்கஅனுமதியில்லை" என்றஎழுதி வைத்திருப்பதஇந்தமதத்தினஆன்மீநெறிகளுக்கமுற்றிலுமமுரண்பட்டதாகும். நமதவேதங்களிலஅல்லதகீதை, உபநிஷத்துக்களஉள்ளிட்ஆன்மீவழிகாட்டநூல்களிலபறைசாற்றப்பட்உண்மைகளுக்கஎதிரானதாகும்.
http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/0801/21/1080121062_1.htm

StumbleUpon.com Read more...

தஸ்லிமா வெளியேற்றம் வெட்கக்கேடு!

தஸ்லிமா வெளியேற்றம் வெட்கக்கேடு!
மத ரீதியான சம்பிரதாயங்களால் அழுத்தப்பட்டு, பாதிற்பிற்குள்ளான பெண்களின் துயரத்தை தனது எழுத்துக்களால் எடுத்தியம்பிய காரணத்திற்காக மத அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தலுக்கும், தாக்குதலுக்கும் உள்ளாகியும் மனம் தளராமல் போராடிய ஒரு பெண்ணை, தனது அரசியல் லாபத்திற்காக கட்டாயப்படுத்தி வெளியேற்றி தீராத அவமானத்தை இந்தியாவிற்கு பெற்றுதந்துவிட்டது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு.

taslima
webdunia photo WD
கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள் ஆகியவற்றின் அடையாளமாக சித்தரிக்கப்பட்ட இந்திய நாடு, தன்னிடம் அடைக்கலமான தஸ்லிமா எனும் மானுட போராளியை நெருக்குதல் அளித்து துரத்தியதன் மூலம் தனது உண்மையான முகத்தை தெளிவாக உலகிற்கு காட்டியுள்ளது. இதுவரை மூடி, மறைத்து மாற்றிக் காட்டப்பட்ட அந்த முகத்தின் உண்மை சொரூபம் இன்று அப்பட்டமாகத் தெரிந்துவிட்டது.

வங்கதேச அடிப்படைவாதிகளால் துரத்தப்பட்டதனால் கொல்கட்டா வந்த தஸ்லிமா, அங்குள்ள அடிப்படைவாதிகளின் மிரட்டல், துரத்தல், ஆர்ப்பாட்டம் காரணமாக மத்திய அரசின் பாதுகாப்பில் தலைநகர் டெல்லியில் தங்கவைக்கப்பட்டார். இதற்கிடையே ஆந்திரத் தலைநகர் ஹைதராபாத்தில் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிக்கொண்டிருந்தபோது முஸ்லீம் மதவாதிகளால் தாக்கப்பட்டார்.

இந்தியாவில் இருந்து தஸ்லிமாவை வெளியேற்ற மத்திய அரசு முயற்சித்து வருவதாக செய்திகள் வந்தபோது அதனை அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி வன்மையாக மறுத்தார். ஆனால் டெல்லியிலோ அல்லது மற்ற இடங்களிலோ எந்த ஒரு நிகழ்ச்சியிலும் தஸ்லிமா தென்படவில்லை.

இந்த நிலையில், நமது நாட்டை விட்டு வெளியேறி லண்டன் சென்ற தஸ்லிமா, தன்னை இந்தியாவை விட்டு வெளியேற்ற மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் இந்திய அரசு அழுத்தம் கொடுத்ததாகக் கூறியுள்ளார்.

"இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு மன ரீதியாக தொடர்ந்து அழுத்தம் கொடுத்தது இந்திய அரசு, நான் அதற்கு உடன்படவில்லை. இந்தியாவை விட்டு வெளியேறுவதில்லை என்று உறுதியாக இருந்தேன். என்னை மன ரீதியாக வீழ்த்த முடியாது என்று அறிந்துகொண்டவர்கள், உடல் ரீதியான தொல்லைகளைத் தரத் துவங்கினார்கள். அதில் வெற்றியும் பெற்றார்கள். எனவே வேறு வழியின்றி நாட்டை விட்டு வெளியேறினேன்" என்று தஸ்லிமா கூறியுள்ளார்.

"புது டெல்லியில் நான் தங்க வைக்கப்பட்ட இடம் பாதுகாப்பானது என்று கூறினார்கள். அதனை நான் சித்தரவதைக் கூடம் என்றே கூறுவேன். அது என்னை கொல்லும் கூடம் என்பதையும் நான் அறிந்துகொண்டேன்" என்று தஸ்லிமா கூறியுள்ளது மேலும் அதிர்ச்சியளிக்கிறது.

தஸ்லிமா இவ்வாறு கூறி 24 மணி நேரம் ஆகிவிட்டது, ஆனால் இதுவரை மத்திய அரசிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
இதுதான் நமது நாடா? இதனைத்தான் முழுச் சுதந்திரம் உடைய நாடாக நாம் பேசிக் கொள்கிறோம், காட்டிக்கொள்கிறோமா?

taslima
webdunia photo WD
சிந்திப்பதற்கும், பேசுவதற்கும், நம்பிக்கைக்கும், வழிபாட்டிற்கும் முழுச் சுதந்திரத்தை தனது முகவுரையிலேயே உறுதியளிக்கும் அரசமைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்திவரும் ஒரு நாட்டில், பட்டதைக் கூறிடும் உரிமை படைத்த ஒரு பெண் எழுத்தாளரைக் கூட பாதுகாப்பாக வைத்திருக்கும் தகுதியில்லையா? அல்லது விரும்பவில்லையா? என்ன காரணம்? மத்திய அரசு விளக்கிட வேண்டும்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனது அரசியல் லாபத்திற்காக இந்த நாட்டினுடைய மதச் சார்ப்பற்ற கொள்கையை காற்றில் பறக்கவிடுகிறதா?

மக்கள் கேள்வி கேட்பதில்லை. ஆனால் பதிலளிப்பார்கள். அவர்களின் வாக்குகள் பேசும். அது இந்த நாட்டு அரசின் கடைந்தெடுத்த அயோக்கியத்தனத்தை தோலுறுத்திக் காட்டும்
http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/0803/20/1080320060_1.htm

StumbleUpon.com Read more...

கை இல்லாட்டி என்ன காலில் எழுதுவேன்.வித்தியாசமாக தேர்வு எழுதின மாணவர்






மாநிலம் முழுவதும் பத்தாம் வகுப்பு தேர்வு நடந்து வருகிறது. குமரி மாவட்டம் திருவட்டார் புத்தன்கடை அருணாசலம் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் இரண்டு கைகளையும் இழந்த மாணவன் சிஜின்ஜோஸ் கால்களால் தேர்வு எழுதுகிறார்.


http://dkn.dinakaran.co.in/firstpage.aspx#

StumbleUpon.com Read more...

கண்ணு எழில் மொதல்ல இதுக்கு நீ பதில் சொல்லு.நண்பர்கள் மற்றதுக்கு பதில் சொல்லுவாங்க

என்னப்பா எழில் கொஞ்சம் திருதலாம்ன்ன உடமாட்டிங்கரியே.சரி இந்த இந்திரன் சாமி என்ன இப்படி பண்ணிபுடுச்சு,ஏன்னு கொஞ்சம் சொல்லறியா


உடம்பெல்லாம் பெண் குறியாக இந்திரன் என்ன செய்தான்? அவன் எப்படிப்பட்ட அயோக்கியன் என்பதைப் புராணம் கூறுவதைப் படியுங்கள்.

தேவர்களின் தலைவன் தேவேந்திரன். இந்தப் பதவி பரம்பரைப் பதவியல்ல. தேர்தலில் நின்று வென்று அடைய வேண்டிய பதவி. ஆனால் தேவேந்திரனின் மனைவியான இந்திராணியோ நிரந்தரமானவள். யார் தேவேந்திர பதவிக்கு வந்தாலும் அவர்களுக்கு மனைவி இந்திராணிதான். இது என்ன அசிங்கம் பிடித்த ஒழுக்கக் கேடு என்கிறீர்களா? இதுதான் அவாளின் ஒழுக்கம். அதைத்தான் புராணங்கள் பிரதிபலிக்கின்றன.தேவேந்திரன் பதவி நிலையானதல்ல. அடிக்கடி அதற்குப் போட்டி வருவதுண்டு.அப்பாவியான அகலியை எனும் பெண்ணைக் கெடுத்ததோடு கல்லாக்கிய கல்மனங்கொண்ட காமாந்தகாரன் தேவர்கள் எப்பேர்ப்பட்ட ஒழுக்கங் கெட்டவர்கள் என்பதற்கு இந்தப் புராணமே போதும்.

கௌதம முனிவர் மனைவி அகலிகை. சிறந்த அழகி. கற்புக்கரசி.தேவலோகம் சென்ற நாரதர் இந்திரனிடம் அகலிகை என்னும் அழகியைப் பற்றி வருணித்தார். இதனால் மதி மயங்கிய இந்திரன் அவளை அடைய ஒரு சூழ்ச்சி செய்தான்.முனிவர்கள் விடியற்காலையில் ஆற்றுக்குச் சென்று நீராடி ஜபதபங்கள் செய்வது வழக்கம். இதை அறிந்திருந்த இந்திரன் அந்த நேரத்தில் அகலிகையை அடைய எண்ணினான்.கவுதமர் ஆசிரமத்தை அடைந்த இந்திரன் நடு ஜாமத்தில் சேவலைப் போலக் கூவி கவுதமரை ஏமாறச் செய்தான். அது அதிகாலை என்று எண்ணிய கவுதமர் ஜபதபங்களை முடிப்பதற்கான ஏற்பாடுகளுடன் ஆற்றுக்கு நீராடச் சென்றார்.அவ்வமயம் இந்திரன், கவுதமர் வடிவில் ஆசிரமத்தில் நுழைந்தான். தன் வேலைகளைச் செய்து கொண்டிருந்த அகலிகை கவுதமர் திரும்பி வந்து விட்டதாக எண்ணினாள். அப்போது கவுதமர் வடிவில் இருந்த இந்திரன், ``இன்னும் விடியவில்லை. ஏதோ பறவையின் ஒலியைச் சேவல் கூவியதாக எண்ணினேன்' என்று கூறி அவளை அருகில் வருமாறு அழைத்தான்.அருகில் கட்டிலில் அமர்ந்த அகலிகையுடன் சேர்ந்து இன்பம் துய்த்தான்.இந்நிலையில் ஆற்றங்கரை சென்ற கவுதமர் ஏதோ தவறு நேர்ந்து விட்டிருப்பதாகக் குழப்பத்துடன் ஆசிரமத்துக்குத் திரும்பி வந்து கதவைத் தட்டினார். அக்குரலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அகலிகை திகைப்படைந்து நடுக்குற்றாள். ஏதோ விபரீதம் நடந்திருப்பதை உணர்ந்தாள். இந்திரன் சுயஉருவில் தோன்றி அவள் காலில் விழுந்து கும்பிட்டான். தன்னை மன்னித்து விடுமாறு வேண்டினான்.கதவைத் திறந்த அகலிகை தலைவிரிகோலமாக முனிவர் காலில் விழுந்துவணங்கி தன் புனிதத் தன்மையை இந்திரனால் இழந்ததாகக் கூறித் தன்னை மன்னிக்குமாறு பிரார்த்தித்தாள்.ஞானதிருஷ்டியால் நிகழ்ந்தது

அனைத்தையும் அறிந்த கவுதமர், பூனை உருவில் தப்பிக்க முயன்ற இந்திரனைக் கோபமாக அழைத்தார். அவர் கோபத்துக்கு அஞ்சிய இந்திரன் சுயஉருவில் தலை குனிந்து நின்றான்.எனினும் கோபம் அடங்காத முனிவர் அவன் உடம்பெல்லாம் பெண் குறியாகட்டும்' என்றும் `வெளியில் தலைகாட்ட முடியாமல் அவதிப்படு' என்றும் சபித்தார்.அகலிகையை நோக்கிக் கணவனுக்கும், அயலானுக்கும் வேறுபாடு அறியாத அவள் உடம்பு கல்லாகுமாறு சபித்தார் முனிவர். அகலிகை தெரியாமல் செய்த பாவத்துக்கு விமோசனம் அளிக்குமாறு வேண்டினாள். அப்போது முனிவர் `சிறீமந் நாராயணன் ராமனாக அவதரித்து விசுவாமித்திரருடைய யாகத்தை நிறைவேற்ற கானகத்துக்கு வருவார். அந்த ராமர் பாதம் பட்டு சாபம் நீங்கி சுய உருவைப் பெறுவாய்'' என்று கூறிவிட்டு வெளியேறினார் முனிவர்.சாபத்தின் காரணமாக இந்திரன் மறைந்து வாழ வேண்டிய அவல நிலை உண்டாயிற்று. இந்திரனுக்காகத் தேவர்கள் கவுதம முனிவரிடம் சென்று மன்னிப்புக் கோரினர். முனிவர் `இந்திரன் பிரகஸ்பதியிடம் சென்று விநாயகப் பெருமானுடைய ஷடாட்சர மந்திரத்தை உபதேசம் பெற்று ஜபிக்கட்டும்'' என்று கூறினார்.

இந்திரன் பிரகஸ்பதியிடம் சென்று விநாயகப் பெருமானின் ஷடாட்சர மந்திர உபதேசம் பெற்று ஜபித்து அவர் அருளால் அவன் உடலில் இருந்து பெண்குறிகள் கண்களாக மாறிக் காட்சி அளித்தன.எனவே அவனுக்கு ஆயிரம் கண்ணுடையான் என்ற பெயர் ஏற்பட்டது. (விடுதலை 19.05.2007)

 

http://idhuthanunmai.blogspot.com/2007/05/blog-post_9734.html

StumbleUpon.com Read more...

இன்னும் மூன்று மாதத்தில் பிள்ளை பெறப்போகும் ஆண்

ஒரு ஆண் தாயாகிறார்

hshe.jpg

அதிசயம் ஆனால் உண்மை !! என்று சத்தியம் செய்து சொல்கின்றன பிரபல பத்திரிகைகளான ABC News Advocate மற்றும் பல பிரபல பத்திரிகைகள்.

ஒரு ஆண் கர்ப்பமடைந்திருக்கிறாராம். இருபத்து இரண்டு வார கர்ப்பமாம். ஜூலை மாதத்தில் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்கப் போகிறார்களாம்.

பிறக்கப் போகும் பெண்குழந்தை "என்னோட மம்மி ஒரு ஆண்" என்று சொல்லப்போகும் நாளை தாயுமானவர் பார்த்து ரசிக்கக் காத்திருக்கிறாராம்.

பெண்ணாய் இருந்து ஆணாய் மாறிய தாமஸ் பெட்டி தான் இந்த பரபரப்புச் செய்தியில் வரும் கர்ப்பவதி (கர்ப்பவதன் ? ) இவர் செயற்கைக் கருத்தரிப்பு மூலம் கருவுற்றிருக்கும் இவர் ஒரு பெண் குழந்தையை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்து இதோ நானே உலகின் முதல் தாயான தந்தை என பிரகடனம் செய்யப் போகிறாராம்.

பல ஆண்டுகளுக்கு முன்பு இதே போல ஒரு பரபரப்புச் செய்தியை MalePregnancy.com
எனும் வலைத்தளம் வெளியிட்டிருந்தது. அதில் லீ என்பவர் குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறார் என கிராபிக்ஸ் சித்து விளையாட்டுகள் விளையாடி இருந்தனர்.

அந்த லீ பல ஆண்டுகள் கடந்த பின்னும் இன்னும் கர்ப்பமாக அந்த வலைத்தளத்தில் உலவி வருகிறார். டாக்குமெண்டரி, மெடிக்கல் ரிப்போர்ட் அது இது என பல அலட்டல் வேலைகளைக் காண்பித்த அந்த வலைத்தளம் போலியானது என்றும் அதை நிறுவியவர்
விர்ஜில் வாங் என்பதும் தெரியவந்தது.

அதே போல இந்த தகவலும் போலியாய் இருக்கவே வாய்ப்புகள் மிக மிக அதிகம். ஏனென்றால் நாளைய தினம் தாமஸ் பெட்டி ஒரு கான்ஃபரன்ஸ் ஏற்பாடு செய்திருக்கிறாராம்.

நாளை ஏப்பிரல் 1 – என்பது நமக்குத் தெரியாதா என்ன ?

 

http://sirippu.wordpress.com/2008/03/31/he_mother/

StumbleUpon.com Read more...

பெண்களுக்கான புதிய இணையதளம் துவங்கியது யாகூ

 பெண்களுக்கான புதிய இணையதளம் துவங்கியது யாகூ
31 மார்ச்,2008 ::11:38

நியூயார்க்: மார்ச் 31ல் 25 முதல் 54 வயது வரையில் உள்ள பெண்களுக்கான புதிய இணையதளத்தை யாகூ தொடங்கியுள்ளது.பெண்களை இலக்காக வைத்துத் தொடங்கப்பட்டது இந்த இணையதளம். இவ்விணைய தளத்தை தொடங்குவதற்கு முன்னரே யாகூ நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. ஆய்வு முடிவில் பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருப்பது கண்டறியப்பட்டது. தாய்மை,குடும்பபொறுப்பு, அழகு போன்ற பல கோணங்களில் சிந்தித்து செயல்படும் பெண்களுக்காகவே பிரத்யோகமாக வடிவமைக்கப் பட்டுள்ளதாக யாகூவின் நிறுவன துணை அதிபர் யாமி லோரியோ கூறினார்
 
 

StumbleUpon.com Read more...

இணையதளத்தில் வெளியிடப்பட்ட படத்தால் கொந்தளிப்பு மிரட்டல்(வீடியோ இணைப்பு)






 

 இணையதளத்தில் வெளியிடப்பட்ட படத்தால்  கொந்தளிப்பு  மிரட்டல்(வீடியோ இணைப்பு)

இணையதளத்தில் வெளியிடப்பட்ட குரானுக்கு எதிரான படத்தால் பாகிஸ்தானில் கொந்தளிப்பு தீவிரவாதி மிரட்டல்(வீடியோ இணைப்பு)

முஸ்லிம்களின்

புனித நூலான குரானை விமர்சிக்கும் 15 நிமிட திரைப்படம், இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நெதர்லாந்து நாட்டு எம்.பி. கீர்ட் வில்டர்ஸ் இப்படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தால் பாகிஸ்தானில் கொந்தளிப்பு நிலவுகிறது. படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர்.

மேலும், `இது தரக்குறைவான படம், உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தும் படம்' என்று பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கான நெதர்லாந்து தூதரை நேரில் வரவழைத்து கண்டனம் தெரிவித்தது. இதற்கிடையே, இந்த படத்துக்கு பதிலடியாக வெளிநாட்டினர் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அல்-கொய்தா தலைவர் ஜவாகிரிக்கு நெருக்கமான முகமது ïசுப் என்ற தீவிரவாதி மிரட்டல் விடுத்துள்ளான்.

http://www.thiratti.com/view.php?id=20761

StumbleUpon.com Read more...

தமிழச்சியும்,தற்கொலை படையும்

தமிழச்சி ஒருவர் தன்னையே அளித்து தன் கூட்டத்துக்கு வெற்றி கிடைக்குமா என்று போராடியுள்ளார்.இலங்கையில் தமிழ் விடுதலை பெண் புலி ஒருவர் தன் உடலில் குண்டை கட்டிக்கொண்டு போய் வெடிக்க செய்த காட்சி

StumbleUpon.com Read more...

ராமதாஸ் அவர்களும்,அன்பு மணி ராமதாஸ் அவர்களும் கண்டிப்பாக படிக்க கூடாத செய்தி

ராமதாஸ் அவர்களும்,அன்பு மணி ராமதாஸ் அவர்களும் கண்டிப்பாக இந்த விலங்குடைய செய்தியை படிக்க வேண்டாம்


"தம்" அடிக்கும் ஆமை



ஜிலின்: சீனாவின் வடகிழக்குப் பகுதி நகரம் ஜிலின். அங்கு வசிக்கும் யுன் என்பவர் வளர்க்கும் ஆமைதான் இங்கே ஜோராக Ôதம்Õ அடிக்கிறது. புகை பிடிக்கும் பழக்கம் கொண்ட யுன், ஒருமுறை தனது செல்லப் பிராணி ஆமையின் வாயில் சிகரெட்டை விளையாட்டாக வைத்தாராம்.

அது பிடித்துப் போன ஆமை, எஜமானர் தம் பற்ற வைக்கும்போதெல்லாம் தனக்கும் வேண்டும் என்று அடம்பிடித்து காலைப் பிறாண்டுமாம். அப்போது முதல் Ôதம்Õமுக்கு அடிமையாகி விட்டது ஆமை. சிகரெட்டை லாவகமாக கவ்வி, உள்ளிழுத்து புகையை வெளிவிடுகிறது ஆமை.
http://www.dinakaran.com/

StumbleUpon.com Read more...

மதம் மாறும் எறையூர் வன்னியர்களுக்கு வழியனுப்பு விழா கோலாகலம்

>> Sunday, March 30, 2008

இந்து மதத்தில் சாதிப்பாகுபாடு இருக்கிறது .சரி! .கத்தோலிக்க கிறிஸ்தவராக மதம் மாறிய பிறகு மட்டும் என்ன வாழுதாம் ? அங்கேயும் தானே சாதி பாகுபாடு இருக்கிறது .அங்கேயும் சில இடங்களில் தலித் கிறிஸ்தவர்கள் ஆதிக்க சாதியினரால் ஒதுக்கி வைக்கப்படுகின்றரே என்ற கேள்வி எழுப்பப்படுகிறது .இதற்கு பதில் சொல்லும் சில கத்தோல்லிக்கர்கள் ,இது கத்தோலிக்க மதத்தால் கொள்கை அடிப்படையில் ,கோட்பாடு படி அங்கீகரிக்கப்படவில்லை .திருச்சபை இதை ஒரு போதும் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்க முடியாது .ஆனால் பன்னெடுங்காலமாக சாதி அமைப்பில் ஊறியவர்கள் கத்தோலிக்கரான பின்னரும் சாதி வேறுபாட்டை நடைமுறையில் கடைபிடிக்கின்றனர் .இது கத்தோலிக்க மதத்தால் அங்கீகரிக்கப்பட்டதல்ல .ஆனால் அதை பின்பற்றுபவர்களின் கோளாறு என்று வாதிடுகிறார்கள்.

என்னைப்பொறுத்தவரை கத்தோலிக்க மதம் வழிபாடுகளில் ,பங்கு நடைமுறைகளில் சாதிப்பாகுபாட்டை அதிகாரபூர்வமாக அங்கீகரிக்க மறுப்பது மட்டுமல்ல ,அந்த விதிமுறை நடைமுறையில் மீறபடும் போது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பும் திருச்சபைக்கு உள்ளது .எங்கள் சட்டதிட்டங்களில் சாதி பாகுபாடு கிடையாது ,அந்தந்த பகுதியிலுள்ள மக்களின் சில தவறான நடைமுறைகளும் பின்பற்றுதலுமே இதற்கு காரணம் என்று சொல்லி திருச்சபை தப்பித்துக் கொள்ள முடியாது. அது மிகவும் கண்டிக்கத்தக்கது.

விழுப்புரம் மாவட்டம் இறையூர் கிராமத்தில் ஒரே பங்கில் உறுப்பினர்களாக இருக்கும் வன்னிய கிறிஸ்தவர்களுக்கும் ,தலித் கிறிஸ்தவர்களுக்கும் வழிபாடு மற்றும் சில நடைமுறைகளில் பாகுபாடு பல காலமாக இருந்து வந்திருக்கிறது . தலித் கிறிஸ்தவர்கள் இறந்தால் அவர்கள் சவ ஊர்வலம் பொதுப்பாதையில் கொண்டு செல்ல முடியாது .சடலத்தை சுமந்து வரும் வண்டி சமமாக உபயோகப்படுத்தப்படவில்லை .இத்தகைய சாதி வேறுபாடுகள் கடைபிடிக்கப்படுவது இத்தகைய சூழலில் வளராத என்போன்றவர்க்கு அதிர்ச்சியான செய்தியாக இருக்கிறது . கிறிஸ்தவர்களிடையே சாதிப்பாகுபாடு இல்லை என்று நான் சொல்ல வரவில்லை .நான் வளர்ந்த சூழலில் திருமணம் போன்றவற்றில் சாதி இன்னும் இருக்கிறது , சாதி சார்ந்த உள்ளடி வேலைகள், அரசியல் இருகிறது என்றாலும் ,அதை இவ்வளவு வெளிப்படையாக வழிபாட்டு முறைகளிலும் ,நடமுறையிலும் கடைபிடிப்பதை பார்த்ததில்லை . ஆனால் சில இடங்களில் தலித்களுக்கு தனிக்கல்லறைகள் இருப்பதாகவும் ,வெளிப்படையாகவே கோவில்களில் சமத்துவமின்மை கடைபிடிக்கப்படுவதாகவும் வரும் செய்திகள் மிகவும் அவமானத்துக்குரியவை ..கத்தோலிக்க மதம் எந்த காரணத்தைக்கொண்டும் இத்தகைய நடைமுறைகளை தொடர்வதற்கு அங்கீகரிப்பதோ ,அல்லது கண்டுகொள்ளாதிருப்பதோ மிகவும் கண்டிக்கத்தக்கது .

எறையூரைப் பொறுத்தவரை பெரும்பான்மை வன்னியர்கள் தங்கள் பங்கிலுள்ள தலித்துக்களை ஆலய விஷயங்களிலும் சமமாக நடத்த விருப்பவில்லை என்பது கண்கூடு .தாங்கள் சாதி ரீதியாக புறக்கணிக்கப்படுவதாக உணர்ந்த தலித்துக்கள் தனியாக ஒரு கோவிலை கட்டி எழுப்பி அதற்கு மறைமாவட்ட அங்கீகாரத்தை கோரியிருக்கிறார்கள் .தங்களுக்கு தனியாக ஒரு பங்குத்தளத்தை உருவாக்கி தருமாறு கோரியிருக்கிறார்கள் .மறை மாவட்டம் இது வரை அதனை அங்கீகரிக்கவில்லை ..அங்குள்ள வன்னிய கிறிஸ்தவர்களும் அதை எதிர்த்திருக்கிறார்கள். அது இப்போது பூதாகரமான பிரச்சனையாக வெடித்து ,கலவரம் துப்பாக்கிச்சூட்டில் போய் முடிந்திருக்கிறது.

இப்போது மறைமாவட்ட ஆயர் இது குறித்து விடுத்த அறிவிப்பில் தனிப்பங்கு அவசியமில்லை எனவும் ,தொடர்ந்து ஒரே பங்காக செயல்பட வேண்டுமெனவும் ,வழிபாடுகளில் ,கோவில் நடைமுறைகளில் எவ்வித பாகுபாடும் காட்டக்கூடாது எனவும் ,தலித்துகளுக்கு சம உரிமை உண்டு எனவும் அறிவித்திருக்கிறார்.

அதன் பின்னர் தலித் ஒருவர் இறந்து போக அவர் ஆயரின் அறிவிப்பின் அடிப்படையில் வன்னியர்கள் பயன்படுத்தும் சவ வண்டியில் உடலை வைத்து பொது வழியில் கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது . அதையும் வன்னியர்கள் சிலர் எதிர்த்திருக்கிறார்கள் .எனவே காவல் துறையின் துணையுடன் இது நடந்திருக்கிறது .இதன் பின்னர் வன்னியர் ஒருவர் இறந்து போக ,தலித்துக்கள் பயன் படுத்தியது என்ற காரணத்திற்காக அந்த சவ வண்டியை உபயோகிக்காமல் தாங்களே தூக்கிச் சென்று அடக்கம் செய்திருக்கிறார்கள் .

இப்போது இதை எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது ? வன்னியர்கள் தங்கள் சாதி ஆதிக்கத்தை நிலை நிறுத்த விரும்புகிறார்கள் .இதற்கு திருச்சபையும் அங்கீகரிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் .இதைவிட கேவலம் வேறு எதுவும் இருக்க முடியாது . சரி! சம உரிமை கிடைக்காத தலித்துக்கள் தங்களுக்கென்று ஒரு ஆலயத்தை அமைத்து எங்களை பிரித்து விட்டு விடுங்கள் என கோருகிறார்கள் ..அதையும் வன்னியர்கள் விரும்பவில்லை . தங்கள் சாதி ஆதிக்கத்தை தொடர முடியாது என்பது காரணமாக இருக்கலாம் ..ஆனால் தலித்துக்களின் அந்த கோரிக்கையை மறைமாவட்டம் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை ? அங்கீகாரம் வழங்கியிருக்க வேண்டியது தானே ? என்ற கேள்வி எழலாம் .என்னைப் பொறுத்தவரை ஒரு பங்கின் மக்கள் தொகை அதிகரிப்பால் நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்கலாமே தவிர ,சாதி அடிப்படையில் ,அதுவும் ஆதிக்க சாதித் திமிருக்கு பயந்து ஒடுக்கப்பட்ட மக்கள் பயந்து தனியாக செல்ல வேண்டும் என்று திருச்சபை தீர்ப்பு வழங்க கூடாது .மாறாக எந்த காரணத்தைக்கொண்டும் சாதிப்பாகுபாட்டை அங்கீரரிக்கக்கூடாது என்பது மட்டுமல்ல , கோவிலில் ,வழிபாட்டு முறைகளில் சாதிப் பாகுப்பாகுபாடில்லாத சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டியது மறைமாவட்டத்தின் கடமை .கொள்கை அடிப்படையில் மறைமாவட்டம் அதைத் தான் செய்திருக்கிறது என்பது மகிழ்ச்சியான விடயம் . ஆனால் நடைமுறையில் அதனை அமல் படுத்த மறைமாவட்ட நிர்வாகம் எந்த அளவுக்கு உறுதியாக இருக்கப் போகிறது என்பதில் தான் அதன் யோக்கியதை தெரிய வரும் .

தொடக்கத்தில் தலித்துக்கள் தாங்கள் புறக்கணிக்கப்படுவதை மறைமாவட்டம் கண்டுகொள்ளவில்லை என்று அதிருப்தி காட்டினார்கள் .ஆனால் மறைமாவட்டத்தின் இந்த அறிவிப்புக்கு பின்னர் வன்னியர்கள் கோபமடைந்து தாங்கள் மதம் மாறப்போவதாக அறிவித்திருக்கிறார்கள் . சன் தொலைக்காட்சியில் இது குறித்து பேசிய ஒரு வன்னியர் சமத்துவம் என்ற பெயரில் காலம் காலமாக தாங்கள் கடைபிடித்து வரும் நடைமுறைகளை எங்களை மாற்ற சொல்லுவது சரியல்ல .. நாங்கள் இந்து மதத்திலிருந்து வந்தவர்கள் தான் .எனவே நாங்கள் அந்த மதத்துக்கே போகிறோம் என்று குறிப்பிட்டார் .

காலம் காலமாக கடைபிடித்து வருவதை மாற்ற விருப்பாவிட்டால் இந்த ஆள் இந்து மதத்திலிருந்து ஏன் கிறிஸ்தவ மதத்துக்கு வர வேண்டும் ? அங்கேயே இருந்திருக்க வேண்டியது தானே ? சரி! இப்போது காலம் காலமாக தாங்கள் கடைபிடித்து வந்த ஏற்றத் தாழ்வையும் , சாதி ஆதிக்கத்தையும் இப்போது கட்டிக்காக்க கிறிஸ்தவ மதம் அனுமதிக்கவில்லையாம் .அதனால் அத்தகைய சுதந்திரத்தை வழங்கக்கூடிய இடத்துக்கு அவர்கள் போகிறார்களாம் .. என்ன ஒரு ஒப்புதல் வாக்குமூலம் ! தயவு செய்து போய் தொலையுங்கள் ஐயா ! உன்னை மாதிரி சாதி வெறிபிடித்தவர்கள் ,மதத்தின் பெயரால் சக கிறிஸ்துவனை சமமாக மதிக்க தெரியாதவனெல்லாம் கிறிஸ்தவ மதத்தை விட்டு போவது தான் உண்மையான சமதர்மத்தை விரும்பும் கிறிஸ்தவர்களுக்கு மகிழ்ச்சியான விஷயம் என்பதை உன்னைப் போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் ..உங்கள் ஒப்புதல் வாக்குமூலத்துக்கும் மதமாற்ற முடிவுக்கும் மனமார்ந்த நன்றி!

தெரிந்தோ தெரியாமலோ ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது .. நடைமுறை ஓட்டைகளையும் ,அந்தந்த பகுதியில் உள்ள சாதி ஆதிக்கத்தையும் சாக்காக வைத்து ஆலயங்களில் வெளிப்படையாக சாதிப் பாகுபாடு பார்க்கும் கிறிஸ்தவர்களுக்கெதிராக உறுதியான கொள்கையை அறிவிக்கும் நிர்பந்தத்துக்கு மறைமாவட்டம் தள்ளப்பட்டிருக்கிறது .ஆலய நடைமுறைகளில் சாதிப் பாகுபாடு பார்ப்பவர் பாதிரியராக இருந்தாலும் அவர்கள் கத்தோலிக்க மதத்தில் நீடிக்க தகுதியில்லாதவர்கள் . அத்தகைய உறுதிப்பாட்டை மறைமாவட்ட நிர்வாகங்களும் ஆயர்களும் மறு உறுதிப்படுத்தவும் நடைமுறைப்படுத்தவும் இது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கட்டும் .தவறினால் ஆயராய் இருந்தாலும் சரி ..தன்னை கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொள்ளும் தார்மீகத் தகுதியை அவர்கள் இழக்கிறார்கள் என்பதே உண்மை கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாக இருக்க முடியும் .

"ஒரு உறையில் இரண்டு வாள் இருக்க முடியாது " என்ற பைபிள் வாசகப்படி ,சாதி மேலாண்மையை விரும்புபவர்கள் கத்தோலிக்க மதத்திலிருந்து வெளியேறுவதே கத்தோலிக்க மதத்துக்கு நல்லதாக இருக்கும் .
 

StumbleUpon.com Read more...

விபச்சார விடுதியில் இருந்த தன் மனைவியை விலை கொடுத்து வாங்கிய கணவர்-உருக்கமான சம்பவம்

 
வெளிநாட்டில் வேலை என விபசாரத்துக்கு விற்பனை: மனைவியை விலை கொடுத்து வாங்கி மீட்ட கணவர்
 
 
கொச்சி, மார்ச். 30-

கேரள மாநிலம் மலப்புரத் தைச்சேர்ந்தவர் சலிம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 2 வருடத் துக்கு முன் இவருக்கு திருமணம் நடந்தது. மனைவியுடன் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தார். திடீரென்று சலிமுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட் டது. குடும்பம் நடத்த கஷ்டப் பட்டார். இதனால் அரபு நாட்டில் வேலைக்கு போய் சம்பாதிக்கலாம் என மனைவி யோசனை கூறினார்.

இதையடுத்து கணவன்- மனைவி இருவரும் டிராவல் ஏஜெண்டு ஒருவரை சந்தித்தனர். அவர் சலிமின் மனைவிக்கு ஓமன் நாட்டில் வீட்டு வேலைக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி விசா எடுத்து கொடுத்தார். சலிம் மனைவியை விமான நிலையம் வரை சென்று வழியனுப்பி வைத்தார்.

மனைவி ஓமன் போய்ச் சேர்ந்ததும் சில நாள் கழித்து கணவருடன் போனில் பேசி சொன்ன தகவல் சலிமுக்கு பேரிடியாக இருந்தது. வீட்டு வேலைக்காக அனுப்பி வைக் கப்பட்ட தன்னை விலை பேசி விபசார கும்பலிடம் விற்று விட்டதாகவும் தன்னால் இங்கு கொடுமை அனுபவிக்க முடிய வில்லை. எந்த நேரத்திலும் உயிரை மாய்த்துக் கொள்வேன்'' என்றார்.

இதையடுத்து சலிம், `உன்னை என்ன விலை கொடுத்தாவது மீட்டு விடுகிறேன்'' என்று கூறி மனைவிக்கு தைரியம் சொன்னார்.

அதன் பிறகு மனைவியை வெளிநாடு அனுப்பி வைத்த அதே ஏஜெண்டு மூலம் சலிமும் விசா எடுத்து ஓமன் நாடு சென்றார். அங்கு பல்வேறு விபசார புரோக்கர்களை மூலம் அணுகி தனது மனைவியின் இருப்பிடத்தை கண்டுபிடித் தார். மனைவி என்பது விபசார கும்பலுக்கு தெரிந்து விட்டால் நிலைமை மோசமாகி விடும் என்பதால் வாடிக்கையாளர் போல் சென்று மீட்க திட்ட மிட்டார்.

அதன்படி சலிம் சென்ற போது அவரது மனைவியை ஒரு சிறிய இடத்தில் அடைத்து வைத்து இருந்தனர். சலிமை கண்டதும் அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

பின்னர் சலிம் இந்திய தூதரகம் மூலம் ஓமன் போலீசில் புகார் செய்து தனது மனைவியை மீட்டார்.

முதலில் சலிமின்மனைவி ரூ.70 ஆயிரத்துக்கு விற்கப் பட்டு இருக்கிறார். பின்னர் கேரளா வைச்சேர்ந்த பெண் புரோக்கர் ஒருவர் அவரை ரூ.20 ஆயிரத்துக்கு வாங்கி இருந்தார். தினமும் 30 பேர் வரை உல்லாசம் அனுபவித் துள்ளனர். அதற்கு மறுத்த தால் அடித்து உதைத்து சித்ர வதை செய்வார்கள்.

இதுபற்றி சலிம் கூறுகை யில், "எனது மனைவி எனக்கு உயிருடன் கிடைப்பாளாப என்பதே சந்தேகமாக இருந் தது. அவளை நானே விலை கொடுத்து மீட்டு இருக்கிறேன். அவள் எனக்கு உயிருடன் கிடைத்ததே போதும்'' என்றார்.
 

StumbleUpon.com Read more...

ஒடும் ரெயிலில் இளம்பெண்ணை செல்போனில் படம் பிடித்த வீரர் கைது

ஒடும் ரெயிலில் அத்துமீறல்: இளம்பெண்ணை செல்போனில் படம் பிடித்த கடற்படை வீரர்; தட்டிக்கேட்ட டிக்கெட் பரிசோதகரை தாக்கினார்

திருவனந்தபுரம், மார்ச்.30-

கொச்சி கடற்படையில் பணி யாற்றுபவர் அஜித்சிங் (வயது 22). ராஜஸ்தானை சேர்ந்தவர். இவர் சென்னையில் இருந்து ஆலப்புழை வரும் ரெயிலில் ஆலப்புழை நோக்கி வந்து கொண்டு இருந்தார். அவரது இருக்கைக்கு எதிர் வரிசையில் ஒரு குடும்பத்தினர் பயணம் செய்தனர்.

அந்த குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை, அஜித்சிங் தனது செல்போன் காமிராவில் படம் பிடித்தார். இதை அந்த குடும்பத்தினர் தட்டிக்கேட்டனர். ஆனால் அஜித்குமார் அதை பொருட் படுத்தவில்லை.

இதையடுத்து டிக்கெட் பரிசோதகர் மனோஜ்லாலிடம் இளம்பெண்ணின் குடும்பத் தினர் புகார் செய்தனர். மனோஜ்லால், அஜித்சிங்கை கண்டித்தார். அப்போது அவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அஜித்சிங், மனோஜ்லாலை பயங்கரமாக தாக்கினார். இதில் மனோஜ்லாலின் பல் உடைந்தது. மேலும் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதுபற்றி மனோஜ்லால் ஆலப்புழை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் ஆலப்புழை ரெயில்நிலையம் வந்ததும் அஜித்சிங்கை கைது செய்தனர்.

StumbleUpon.com Read more...

தமிழ்மணத்தில் மீண்டும் ஆபாச தலைப்பில் பதிவுகள்

StumbleUpon.com Read more...

ஒரு வாரத்தில் 70 ஆயிரம் புள்ளிகள் வீழ்ச்சி

கடந்த ஒரு வாரத்தில் 70 ஆயிரம் புள்ளிகள் குறைந்து என் ரேட்டிங் உயர்ந்துள்ளது.தேன்கூடும்,திரட்டி இந்த இரண்டு வலைதிரட்டிகள் மட்டுமே என் பிளக்கரின் திரட்டும் நிலையில் என்னுடைய ரேட்டிங் உயர்ந்திருப்பது ஆதிக்க வர்கங்களுக்கு ஒரு பேரிடியே.

இதுவரை எனக்கு ஆதரவளித்து வரும் வாசக பெறுமக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகிறேன்




StumbleUpon.com Read more...

தமிழ்மணத்தில் மீண்டும் ஆபாச தலைப்பில் பதிவுகள்

StumbleUpon.com Read more...

தினகரன் பத்திரிக்கை எந்த செய்தியை போடுகிறார்களோ இல்லையோ?இதை மட்டும் போட்டோவோட பெரிசா போட்டுருவாங்கோ?

தினகரன் பத்திரிக்கை எந்த செய்தியை போடுகிறார்களோ இல்லையோ?இதை மட்டும் பெரிசா போட்டுருவாங்கோ?(சூடான இடுகையில் பங்கு பெற ஏக்கம் இருந்தாலும் வழியில்லாமல் போனதாக கூட இருக்கலாம்)




தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி




தினமலர் வெளியீட்டாளர் லட்சுமிபதி
பொய்ச் செய்தி வெளியிட்டதற்காக


தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்திக்கு 3 மாதம் சிறை


வெளியீட்டாளர் லட்சுமிபதிக்கும் ஜெயில்


சென்னை, மார்ச் 28-
பொய்ச் செய்தி வெளியிட்ட வழக்கில் தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்திக்கும் வெளியீட்டாளர் லட்சுமிபதிக்கும் 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2001ம் ஆண்டு ஊத்துக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் பிட் அடிக்க தலைமை ஆசிரியர் சேதுராமன் உதவி செய்ததாகவும், அதனால் அவர் சஸ்பெண்ட்செய்யப்பட்டதாகவும் அந்த பத்திரிகையில் வெளியான செய்தி பொய்யானது என்று கூறி தலைமை ஆசிரியர் வழக்கு தொடர்ந்திருந்தார். எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட் பாக்கியஜோதி முன்பு தாக்கல் செய்த மனுவில் அவர் கூறியதாவது:
தினமலர் வெளியிட்ட பொய்ச்செய்தி, என்னை பெரிதும் பாதித்துவிட்டது. அது பொய்ச் செய்தி என்பதை சுட்டிக்காட்டி 2001 ஏப்ரலில் பதிவுத் தபால் மூலம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினேன். ஆனால், தினமலர் ஆசிரியர் பதிலே சொல்லவில்லை.
செய்தி முழுவதும் பொய்யானது. என்னை யாரும் தற்காலிக பணிநீக்கம் செய்யவில்லை. பொதுமக்களிடம் எனக்கு இருந்த மரியாதையை குலைக்க உள்நோக்கத்துடன் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக தினமலர் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணை முடிந்து செவ்வாயன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. தினமலர் பத்திரிகையின் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, வெளியீட்டாளர் லட்சுமிபதி ஆகியோர் எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இருவருக்கும் தலா 3 மாதம் சிறைத் தண்டனை விதித்து மாஜிஸ்திரேட் தீர்ப்பளித்தார்.
"தினமலர் பத்திரிகை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, வெளியீட்டாளர் லட்சுமிபதி ஆகியோர் குற்றவாளிகள் என்பது நிரூபிக்கப்பட்டதால், அவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் மேல்முறையீடு செய்ய அவகாசம்அளிக்கப்பட்டுள்ளதால் கிருஷ்ணமூர்த்தியும் லட்சுமிபதியும் இப்போது கைது செய்யப்பட வேண்டியதில்லை'' என்று மனுதாரரின் வக்கீல்கள் சரவணன், ஏகாம்பரம் ஆகியோர் குறிப்பிட்டனர்.

http://tm.dinakaran.co.in/firstpage.aspx?global.eid=Tamil%20Murasu%20E1#

StumbleUpon.com Read more...

தமிழ்மணத்தில் மீண்டும் திரட்டப்படும் தெய்வமகன் பதிவுகள்(போட்டோவுடன்)

"தமிழ்மணத்தில் மீண்டும் திரட்டப்படும் தெய்வமகன் பதிவுகள்" இந்த தலைப்பை பார்த்தவுடன் ஒரு சில நல்ல உள்ளம் படைத்தவர்கள் ஓடி வந்து பார்க்கறது தெரியுது.இவனை மறுபடியும் உள்ள விட்டா நம்ம டவுசற மறுபடியும் கழட்டுவான்னு தெரியுமோ இல்லியோ அப்படின்னு பேசிக்கிறீங்க.ஆனா சமாச்சாராம் அது இல்லப்பா?தமிழ் மணத்தோட கேளீர் பகுதி என்னையும் சேத்து இழுத்துட்டு போய் தமிழ்மணத்தில் இணைக்குதுன்னு சொல்ல வந்தேன்..


ஆனா ஒன்ன சொல்றேன் கேட்டுக்குங்க நாளைக்கு மகனுங்களா உங்களுக்கெல்லாம் வக்கபோறேன் ஆப்பு????காத்துட்டிருங்க 24 மணி நேரம்




StumbleUpon.com Read more...

முஸ்லீம் அல்லாதவர் மதம் மாறினதற்காக முஸ்லீம்கள் கொலை மிரட்டல்

>> Saturday, March 29, 2008

http://epaper.dinamalar.com



இவர் முஸ்லீமே இல்லை என்று ஒரு ஜிஹாதி தளம் செய்தி வெளியிட்டது.ஆனால் அந்த ஆளுக்கே இந்த நிலமை

StumbleUpon.com Read more...

காணாமல் போன பொருளை கண்டு பிடிக்க புதிய கம்ப்யூட்டர் சாப்ட்வேர்

திருடனை கண்டுபிடிக்கலாம்
லேப்டாப் எங்கே? சாப்ட்வேர் காட்டும்

புதுடெல்லி, மார்ச் 30: லேப்டாப் கம்ப்யூட்டர் இனி தொலைந்துவிட்டாலும் கவலை இல்லை. மிக எளிதாக கண்டுபிடித்து விடலாம். காரணம், லேப்டாப் எங்கே இருக்கிறது என காட்டும் சாப்ட்வேர்கள் நிறைய வந்து உள்ளன.
அந்த சாப்ட்வேரை லேப்டாப் கம்ப்யூட்டர்களில் சுலபமாக பொருத்தலாம். யுனிஸ்டால் போன்ற நிறுவனங்கள் இச்சேவையில் இறங்கி உள்ளன.
இந்த சாப்ட்வேர் பொருத்தப்பட்ட லேப்டாப் கம்ப்யூட்டர் தொலைந்துவிட்டால், யுனிஸ்டால் நிறுவனத்தின் சர்வர்களுக்கு ஒருவித சிக்னல் கிடைக்கும். திருடன் கம்ப்யூட்டரை இயக்க ஆரம்பித்ததுமே இந்த சிக்னல்கள் கிடைக்கும். கம்ப்யூட்டரின் ஐ.பி. முகவரி உதவியோடு, அது எங்கே இருக்கிறது என்பதை அறிய முடியும்.
இத்தனையுமே, லேப்டாப் எங்கே என காட்டும் சாப்ட்வேர்களை பொருத்தினால் மட்டும்தான் நடக்கும.¢ இந்த சாப்ட்வேரை உருவாக்க ஒன்றரை ஆண்டுகள் தேவைப்பட்டதாக யுனிஸ்டால் நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதன் விலை ரூ.3,000.
யுனிஸ்டால் சாப்ட்வேர் மட்டுமே அல்லாமல், `லெகேட் பிசி', `ஸ்னாப் பைல்ஸ்' சாப்ட்வேர்களிலும் இந்த வசதி உள்ளது. இதற்கு எந்த கட்டணமும் இல்லை.


http://dkn.dinakaran.co.in/firstpage.aspx#

StumbleUpon.com Read more...

உலகம் அழியப் போகுது : ரஷ்யாவில் பரபரப்பு

மாஸ்கோ : வரும் மே மாதத்தில் உலகம் அழியப் போவதாகவும், அதுவரை தனிமையில் பிரார்த்தனையில் ஈடுபடப் போவதாகவும் ரஷ்யாவில் ஒரு அமைப்பு, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளும், "டூம்ஸ்டே' என்ற வழிபாட்டு அமைப்பு, ரஷ்யாவில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பை சேர்ந்தவர்கள், வரும் மே மாதத்துடன் உலகம் அழியப் போவதாகவும், அதுவரை அவர்கள் தனிமையில் பிரார்த்தனை மேற்கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்காக கடந்த அக்டோபரில் இருந்து ரஷ்யாவின் பென்சா மலைப் பகுதியில், ஒரு குகையில் வழிபாடு நடத்தி வருகின்றனர். அவர்கள், உலகம் அழியும் வரை, இந்த குகையில் இருந்து வெளிவர மாட்டோம் என மறுத்து வருகின்றனர். இவர்களை வெளியே கொண்டு வர, துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரஷ்ய அதிகாரிகள் கூறியிருப்பதாவது: இந்த அமைப்பின் தலைவர் பியோட் குஸ்னெட்ஷோவை வைத்து பேச்சுவார்த்தை நடத்தியதில், குகையில் இருந்து ஏழு பெண்கள் வெளியே வந்துள்ளனர். பியோட்டுக்கு கோர்ட் உத்தரவின் பேரில், மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெளியில் வந்த பெண்கள் அனைவரும், நல்ல உடல் நலத்துடன் இருக்கின்றனர். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை எதுவும் தேவையில்லை. இவர்கள் அனைவரும், அவர்களது விருப்பப்படி பியோட் குஸ்னெட்ஷோவின் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், மே மாதம் உலகம் அழியும் என்பதில் அவர்கள் உறுதியுடன் இருக்கின்றனர். அவர்களது கருத்துக்கு மதிப்பளிக்கப்படும். இவர்களை தவிர மேலும், 28 பேர் இன்னும் அந்த குகையில் உள்ளனர். அவர்களை வெளியேற்றுவது குறித்து தொடர்ந்து பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

http://www.dinamalar.com/

StumbleUpon.com Read more...

ரோட்டில் கிடந்த 70 லட்சம்,மறுத்தார் போலீஸ்

ஏர்போர்ட்டில் தொழிலதிபர் தவறவிட்ட ரூ.70 லட்சம் டி.டி. ஒப்படைப்பு

வெகுமதியை மறுத்தார் போலீஸ்

சென்னை, மார்ச் 28-தொழிலதிபர் ஒருவர் சென்னை ஏர்போர்ட்டில் தவறவிட்ட ரூ.70 லட்சம் மதிப்புள்ள டி.டியை கண்டெடுத்த போலீஸ்காரர் அதை பத்திரமாக அவரிடம் ஒப்படைத்தார்.கோயம்புத்தூரைச் சேர்ந்த தொழில் அதிபர் பாலசுப்ரமணியம். இவர் சென்னையிலிருந்து கோவை செல்வதற்காக நேற்று மீனம்பாக்கம் ஏர்போர்ட் வந்தார். நுழைவாயிலில் நின்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை(சி.ஐ.எஸ்.எப்) போலீசாரிடம் விமான டிக்கெட்டை காட்டிவிட்டு விமான நிலையத்துக்குள் சென்றார். அப்போது, அவர் வைத்திருந்த ரூ.70 லட்சம் மதிப்புள்ள டி.டி கீழே விழுந்திருக்கிறது. இதை அவர் கவனிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சி.ஐ.எஸ்.எப் போலீஸ்காரர் அந்த டி.டி-யைக் கவனித்து விட்டார். இதுபற்றி மேலதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார்.டி.டி தொலைந்த தகவல் பற்றி விமான நிலையத்தில் உள்ள பயணிகளுக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட தொழில் அதிபர் பாலசுப்ரமணியம், தனது டி.டி இருக்கிறதா என தேடினார். காணாததால், விமான நிலைய அதிகாரிகளிடம் சென்று, டி.டி தொலைந்த விஷயத்தை கூறினார். சரியான தகவல் மற்றும் ஆதாரங்களை காட்டி தனது டி.டி என்பதை நிரூபித்தார். இதையடுத்து அவரிடம் அந்த டி.டி ஒப்படைக்கப்பட்டது.மகிழ்ச்சியடைந்த தொழில் அதிபர் டி.டி யை எடுத்து கொடுத்த போலீஸ்காரருக்கு வெகுமதி அளிக்க முன்வந்தார். ஆனால், Ôதவறிய பொருட்களை ஒப்படைப்பது என் கடமைதானே..Õ என கூறிய போலீஸ்காரர் அவர் கொடுத்த வெகுமதியை ஏற்க மறுத்துவிட்டார். அவருக்கு சல்யூட் அடித்துவிட்டு நன்றி கூறி சென்றார் தொழில் அதிபர்.
http://tm.dinakaran.co.in/firstpage.aspx?global.eid=Tamil%20Murasu%20E1#

StumbleUpon.com Read more...

தினகரன் பத்திரிக்கை எந்த செய்தியை போடுகிறார்களோ இல்லையோ?இதை மட்டும் போட்டோவோட பெரிசா போட்டுருவாங்கோ?

தினகரன் பத்திரிக்கை எந்த செய்தியை போடுகிறார்களோ இல்லையோ?இதை மட்டும் பெரிசா போட்டுருவாங்கோ?(சூடான இடுகையில் பங்கு பெற ஏக்கம் இருந்தாலும் வழியில்லாமல் போனதாக கூட இருக்கலாம்)




தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி




தினமலர் வெளியீட்டாளர் லட்சுமிபதி



பொய்ச் செய்தி வெளியிட்டதற்காக


தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்திக்கு 3 மாதம் சிறை


வெளியீட்டாளர் லட்சுமிபதிக்கும் ஜெயில்


சென்னை, மார்ச் 28-
பொய்ச் செய்தி வெளியிட்ட வழக்கில் தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்திக்கும் வெளியீட்டாளர் லட்சுமிபதிக்கும் 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2001ம் ஆண்டு ஊத்துக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் பிட் அடிக்க தலைமை ஆசிரியர் சேதுராமன் உதவி செய்ததாகவும், அதனால் அவர் சஸ்பெண்ட்செய்யப்பட்டதாகவும் அந்த பத்திரிகையில் வெளியான செய்தி பொய்யானது என்று கூறி தலைமை ஆசிரியர் வழக்கு தொடர்ந்திருந்தார். எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட் பாக்கியஜோதி முன்பு தாக்கல் செய்த மனுவில் அவர் கூறியதாவது:
தினமலர் வெளியிட்ட பொய்ச்செய்தி, என்னை பெரிதும் பாதித்துவிட்டது. அது பொய்ச் செய்தி என்பதை சுட்டிக்காட்டி 2001 ஏப்ரலில் பதிவுத் தபால் மூலம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினேன். ஆனால், தினமலர் ஆசிரியர் பதிலே சொல்லவில்லை.
செய்தி முழுவதும் பொய்யானது. என்னை யாரும் தற்காலிக பணிநீக்கம் செய்யவில்லை. பொதுமக்களிடம் எனக்கு இருந்த மரியாதையை குலைக்க உள்நோக்கத்துடன் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக தினமலர் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணை முடிந்து செவ்வாயன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. தினமலர் பத்திரிகையின் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, வெளியீட்டாளர் லட்சுமிபதி ஆகியோர் எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இருவருக்கும் தலா 3 மாதம் சிறைத் தண்டனை விதித்து மாஜிஸ்திரேட் தீர்ப்பளித்தார்.
"தினமலர் பத்திரிகை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, வெளியீட்டாளர் லட்சுமிபதி ஆகியோர் குற்றவாளிகள் என்பது நிரூபிக்கப்பட்டதால், அவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் மேல்முறையீடு செய்ய அவகாசம்அளிக்கப்பட்டுள்ளதால் கிருஷ்ணமூர்த்தியும் லட்சுமிபதியும் இப்போது கைது செய்யப்பட வேண்டியதில்லை'' என்று மனுதாரரின் வக்கீல்கள் சரவணன், ஏகாம்பரம் ஆகியோர் குறிப்பிட்டனர்.

http://tm.dinakaran.co.in/firstpage.aspx?global.eid=Tamil%20Murasu%20E1#

StumbleUpon.com Read more...

சேவாக்கின் கால் அருகே விசில் அடிக்கும் ரசிகைகள்



http://tm.dinakaran.co.in

StumbleUpon.com Read more...

ஆமை போல் இழுக்கும் ராஜாளி நண்டு (போட்டோவுடன்)



வித்தியாசமான விலங்கு போல காணப்படும் இது ராஜாளி நண்டு. அதிராம்பட்டினம் கடல் பகுதியில் நேற்று விஜயன் என்ற மீனவரின் வலையில் சிக்கியுள்ளது. எதிராளி யாரும் வருவதாக தெரிந்தால், ஆமை போல கால்களை பொசுக்கென்று ஓட்டுக்குள் இழுத்துக் கொள்கிறது. இதுதவிர பக்கவாட்டில் இறக்கை போன்ற அமைப்பும் இருக்கிறது. அதையும் லாவகமாக அசைத்து வேகமாக நகர்கிறது. மொத்த எடை அரை கிலோ. Ôஇந்த பகுதியில ஒரு காலத்துல ஏராளமா கெடச்சுது. 50 வருஷம் கழிச்சு இப்பதான் பார்க்கிறேன்Õ என்கிறார் 85 வயதாகும் மீனவர் ஒருவர்.

StumbleUpon.com Read more...

ரோட்டில் கிடந்த 70 லட்சம்,மறுத்தார் போலீஸ்


ஏர்போர்ட்டில் தொழிலதிபர் தவறவிட்ட ரூ.70 லட்சம் டி.டி. ஒப்படைப்பு


வெகுமதியை மறுத்தார் போலீஸ்


சென்னை, மார்ச் 28-
தொழிலதிபர் ஒருவர் சென்னை ஏர்போர்ட்டில் தவறவிட்ட ரூ.70 லட்சம் மதிப்புள்ள டி.டியை கண்டெடுத்த போலீஸ்காரர் அதை பத்திரமாக அவரிடம் ஒப்படைத்தார்.
கோயம்புத்தூரைச் சேர்ந்த தொழில் அதிபர் பாலசுப்ரமணியம். இவர் சென்னையிலிருந்து கோவை செல்வதற்காக நேற்று மீனம்பாக்கம் ஏர்போர்ட் வந்தார். நுழைவாயிலில் நின்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை(சி.ஐ.எஸ்.எப்) போலீசாரிடம் விமான டிக்கெட்டை காட்டிவிட்டு விமான நிலையத்துக்குள் சென்றார். அப்போது, அவர் வைத்திருந்த ரூ.70 லட்சம் மதிப்புள்ள டி.டி கீழே விழுந்திருக்கிறது. இதை அவர் கவனிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சி.ஐ.எஸ்.எப் போலீஸ்காரர் அந்த டி.டி-யைக் கவனித்து விட்டார். இதுபற்றி மேலதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார்.
டி.டி தொலைந்த தகவல் பற்றி விமான நிலையத்தில் உள்ள பயணிகளுக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட தொழில் அதிபர் பாலசுப்ரமணியம், தனது டி.டி இருக்கிறதா என தேடினார். காணாததால், விமான நிலைய அதிகாரிகளிடம் சென்று, டி.டி தொலைந்த விஷயத்தை கூறினார். சரியான தகவல் மற்றும் ஆதாரங்களை காட்டி தனது டி.டி என்பதை நிரூபித்தார். இதையடுத்து அவரிடம் அந்த டி.டி ஒப்படைக்கப்பட்டது.
மகிழ்ச்சியடைந்த தொழில் அதிபர் டி.டி யை எடுத்து கொடுத்த போலீஸ்காரருக்கு வெகுமதி அளிக்க முன்வந்தார். ஆனால், Ôதவறிய பொருட்களை ஒப்படைப்பது என் கடமைதானே..Õ என கூறிய போலீஸ்காரர் அவர் கொடுத்த வெகுமதியை ஏற்க மறுத்துவிட்டார். அவருக்கு சல்யூட் அடித்துவிட்டு நன்றி கூறி சென்றார் தொழில் அதிபர்.

http://tm.dinakaran.co.in/firstpage.aspx?global.eid=Tamil%20Murasu%20E1#

StumbleUpon.com Read more...

அய்யயோ பார்த்துட்டான் ........அய்யயோ தொறந்து பார்த்துட்டான் .....வசந்தம் ரவி இதைத்தான் சொன்னாரா?

http://vasanthamravi.blogspot.com/2008/03/blog-post_29.html

StumbleUpon.com Read more...

புத்தர் பிராமணர்களை கொல்லச் சொன்னாரா?

பாப்பானை கொல்லச் சொன்ன புத்தர்!

சித்தார்த்தர் எனப்படுகிற கெளதமபுத்தர் ஆரம்பத்தில் பிராமண கலாச்சாரத்தைக் கண்டு அதிசயித்த போதிலும், பின்னர் அவற்றை அருவருக்கத்தக்கதாகவே கருதத் தொடங்கினார்.

30 - வயதான சித்தார்த்தர், தன் ஆடம்பரமான அரச வாழ்க்கையை உதறிவிட்டு கோசல நாட்டின் காடுகளில் அலைந்து திரிந்தார். உபனிடதங்களை வழங்கிய முனிவர்களின் கருத்துக்களை விரும்பிக் கேட்டார்.

செல்வ வளம் படைத்த மகத நாட்டு மன்னன் பிம்பிசாரரின் ஆதரவைப் பெற்றார். ஒருநாள் அரசவையில் அரசன் ஆசையோடு வளர்த்த 50- ஆடுகளை பலி கொடுக்குமாறு பிராமணன் ஒருவன் மன்னரை வற்புறுத்தினான். அரசன் பலி கொடுக்கும் எல்லாமே மேலுலகின் கடவுளுக்கு நேரடியாகச் செல்லும் என்றான் அந்த பிராமணன்.

அதைக்கேட்ட புத்தர் குறுக்கிட்டு, அப்பிராமணனின் தந்தை உயிரோடு இருந்தால் அவரை பலி கொடுத்து அதன்மூலம் அவரை சொர்க்கத்திற்கு அனுப்பி வைக்குமாறு கூறினார். இதனைக் கண்ட அந்த பிராமணன் வாயடைத்துப் போனான். செய்வதறியாது திகைத்தான்.

புத்தரின் திறமையான வாதத்தால் அரசன் அன்போடு வளர்த்த ஆடுகள் காப்பாற்றப்பட்டது மட்டுமின்றி, பலிகொடுக்கச் சொன்ன பிராமணன் அரசவையிலிருந்தும் அடித்து வெளியேற்றப்பட்டான்.

இதன் மூலம் புத்தர் பிம்பிசாரரை தனது கொள்கையின் பக்கம் வென்றெடுத்ததாக "பாலி திருமுறை" ஒன்று குறிப்பிடுகிறது.

StumbleUpon.com Read more...

அழகான தமிழ் பெயர்கள்

அண்ணா
அண்ணாத்துரை
அதியமான்
அரங்கண்ணல்
அரசன்
அரசு
அரிசில்கிழான்
அரிசில்கிழார்
அருமை
அருள்
அருள்குமரன்
அருளரசன்
அருளரசு
அருட்குமரன்
அருட்செல்வர்
அருட்செல்வன்
அருண்
அருண்மொழி
அருள்மொழி
அருமை
அருள்
அருளம்பலம்
அழகு
அழகன்
அழகப்பன்
அழகப்பர்
அழகரசன்
அழகரசு
அழகியநம்பி
அறவாணன்
அறவாழி
அறவேந்தன்
அறிவன்
அறிவரசு
அறிவரசன்
அறிவழகன்
அறிவாளி
அறிவு
அறிவுக்கரசன்
அறிவுக்கரசு
அறிவுச்செல்வன்
அறிவுடைநம்பி
அறிவுமதி
அறிவுமணி
அறிவொளி
அன்பழகன்
அன்பரசு
அன்பரசன்
அன்பு
அன்புச்செல்வன்
அன்புமணி
அன்புமொழி
ஆசைத்தம்பி
ஆட்டனத்தி
ஆடலரசன்
ஆடலரசு
ஆய்
ஆரூரன்
ஆவூர்க்கிழார்
ஆற்றலரசு

இசைமணி
இசைவாணன்
இடைக்காடன்
இடைக்காடர்
இமயவரம்பன்
இருங்கோ
இருங்கோவேள்
இலக்கியப்பித்தன்
இரும்பொறை
இலக்கியன்
இலங்கையர்க்கோன்
இலங்கையன்
இழஞ்சேரல்
இளஞ்;சேரலாதன்
இளங்கண்ணர்
இளங்கீரன்
இளங்கீரனார்
இளங்குமரன்
இளங்கோ
இளங்கோவன்
இளங்கோவேள்
இளஞ்செழியன்
இளஞ்சேட்சென்னி
இளஞ்சேரலாதன்
இளந்திருமாறன்
இளந்திரையன்
இளந்தேவனார்
இளநாகனார்
இளம்பரிதி
இளம்பாரதி
இளம்பாரி
இளம்பூதனார்
இளம்பூரணர்
இளம்பூரணன்
இளம்வழுதி
இளமுருகு
இளமைப்பித்தன்
இளம்வழுதி
இளஞ்சித்திரனார்
இளஞ்செழியன்
இளஞ்சேரல்
இளஞ்சேரலாதன்
இளந்திரையன்
இளவழகன்
இளவரசன்
இளவரசு
இறையன்
இறையனார்
இன்பம்
இன்பன்
இனியன்
இனியவன்

ஈழவன்
ஈழவேந்தன்

உதியஞ்சேரல்

எழில்
எழில்வேந்தன்
எழிலன்
எழிலரசன்
எழிலழகன்
எழினி

ஒட்டக்கூத்தன்
ஓரி


கண்ணப்பன்
கண்ணையன்
கண்ணதாசன்
கமலக்கண்ணன்
கதிரவன்
கலைக்கோ
கலைச்செல்வன்
கலைப்புலி
கலைமதி
காரிகிழார்
கிள்ளி
கிள்ளிவளவன்
கீரன்
கீரனார்
குகன்
குட்டுவன்
குயிலன்
குணாளன்
குமணன்
குமார்
குமரன்
குயிலன்
கூத்தபிரான்
கூத்தரசு
கூத்தரசன்
கூத்தன்
கூத்தனார்
கூடலரசன்
கொற்றவன்
கோப்பெருஞ்சேரல்
கோமகன்
கோவலன்
கோவேந்தன்
கோவைக்கிழார்
கோவூர்
கோவூர்கிழார்
சங்கிலி

சாத்தனார்
சிலம்பரசன்
சின்னத்தம்பி
சுடரோன்
செங்கையாழியான்
செங்குட்டுவன்
செந்தமிழ்
செந்தமிழன்
செந்தாமரை
செந்தில்
செந்தில்குமரன்
செந்தூரன்
செந்தில்சேரன்
செந்தில்நாதன்
செந்திலரசன்
செம்பியன்
செம்பியன்செல்வன்
செம்மணன்
செம்மலை
செம்பரிதி
செல்லப்பன்
செல்லையா
செல்வம்
செல்வன்
செல்வமணி
செல்வக்கடுங்கோ
செல்வக்கோன்
செழியன்
சேக்கிழார்
சேந்தன்
சேந்தன்கீரனார்
சேந்தன்பூதனார்
சேரமான்
சேரல்
சேரல்இரும்பொறை
சேரன்
சேரலன்
சேரலாதன்
சேயோன்
சோழன்

தங்கவேல்
தங்கவேலன்
தங்கவேலு
தணிகைவேலன்
தமிழ்
தமிழ்க்குடிமகன்
தமிழ்ச்செல்வன்
தமிழ்ச்செழியன்
தமிழ்ச்சேரல்
தமிழ்ச்சேரன்
தமிழ்நாடன்
தமிழ்ப்பித்தன்
தமிழ்மணி
தமிழ்மாறன்
தமிழ்முடி
தமிழ்வண்ணன்
தமிழ்வாணன்
தமிழ்வேந்தன்
தமிழண்ணல்
தமிழப்பன்
தமிழரசன்
தமிழரசு
தமிழவன்
தமிழவேள்
தமிழன்
தமிழன்பன்
தமிழினியன்
தமிழேந்தல்
தமிழேந்தி
தமிழ்மணி
தமிழ்மாறன்
தமிழ்வளவன்
தமிழன்பன்
தாமரைச்செல்வன்
தாமரைக்கண்ணன்
தாமரைமணாளன்
திரு
திருநாவுக்கரசன்
திருநாவுக்கரசு
திருச்செல்வம்
திருமாவளவன்
திருமாறன்
திருமூலர்
திருமூலன்
திருவரசன்
திருவள்ளுவர்
திருவள்ளுவன்
தில்லை
தில்லைக்கூத்தன்
தில்லைச்செல்வன்
தில்லைவில்லாளன்

தூயவன்
தென்னவன்
தென்னரசு
தேவன்
தொண்டைமான்
தொல்காப்பியர்
தொல்காப்பியன்

நக்கீரர்
நக்கீரன்
நச்சினார்க்கினியர்
நச்சினார்க்கினியன்
நடவரசன்
நந்தன்
நம்பி
நம்பியூரான்
நலங்கிள்ளி
நற்கிள்ளி
நன்னன்
நன்மாறன்
நன்னன்
நன்னி
நாவேந்தன்
நாவரசு
நாவலன்
நாவுக்கரசன்
நாவுக்கரசர்
நாவுக்கரசு
நிலவன்
நிலவரசன்
நிலாவன்
நீலவாணன்
நீலன்
நெடியவன்
நெடியோன்
நெடுஞ்சேரலாதன்
நெடுங்கண்ணன்
நெடுங்கிள்ளி
நெடுங்கோ
நெடுமால்
நெடுமாறன்
நெடுமான்
நெடுமானஞ்சி
நெடுமாலவன்
நெடுஞ்செழியன்
நெடுஞ்சேரலாதன்
பதுமனார்
பச்சையப்பன்
பரணர்
பரணன்
பரிதி
பரிதிவாணன்
பல்லவன்
பனம்பாரனார்
பாண்டியன்
பாணன்
பாரதி
பாரதிதாசன்
பாரதியார்
பாரி
பாவலன்
பாவாணன்
புகழ்
புகழேந்தி
புதுமைப்பித்தன்
பாடினியார்
பூங்குன்றன்
பூங்கவி
பூவண்ணன்
பெருங்கண்ணர்
பெருந்தேவனார்
பெருங்கடுங்கோ
பெருஞ்சேரல்
பெருஞ்சாத்தனார்
பெருஞ்சித்திரனார்
பெருந்தேவனார்
பெருநற்கிள்ளி
பெருவழுதி
பேகன்
பேரரசு
பேராசிரியர்
பேராசிரியன்
பேரறிவாளன்
பொருநன்
பொற்கோ
பொன்மணியார்
பொன்முடி
பொன்முடியார்
பொன்னிவளவன்
பொன்னையன்

மகிழ்நன்
மதி
மதியழகன்
மதிவாணன்
மணவழகன்
மணவாளன்
மணி
மணிமாறன்
மணிமுத்து
மணிமொழியன்
மணியன்
மணிவண்ணன்
மணியரசன்
மலர்மன்னன்
மலரவன்
மருதன்
மருதனார்
மருதபாண்டியன்
மருதமுத்து
மறைமலை
மறைமலையான்
மன்னர்மன்னன்
மன்னன்
மாங்குடிக்கிழார்
மாங்குடிமருதன்
மாசாத்தன்
மாசாத்தனார்
மாந்தரஞ்சேரல்
மாணிக்கம்
மாமணி
மாமல்லன்
மாமூலன்
மாமூலனார்
மாயவன்
மாயோன்
மாரிமுத்து
மாலவன்
மாறன்
மாறனார்
மாறன்வழுதி
முக்கண்ணன்
முகில்வண்ணன்
முகிலன்
முத்தரசன்
முத்து
முத்துக்குமரன்
முத்துவேல்
முத்தமிழ்
முத்தழகன்
முத்துக்குமரன்
முடியரசன்
முடிவேந்தன்
முருகு
மூவேந்தன்
மூலங்கிழார்
மேகநாதன்
மோசிகீரனார்
மோசிகொற்றனார்
மோசியார்
மோசுகீரன்
யாழரசன்
யாழ்பாடி
யாழ்ப்பாணன்
யாழ்வாணன்
வடிவேல்
வடிவேற்கரசன்
வண்ணநிலவன்
வணங்காமுடி
வல்லவன்
வல்லரசு
வழுதி
வள்ளல்
வள்ளிமணாளன்
வள்ளுவர்
வள்ளுவன்
வளவன்
வாணன்
வானமாமலை
வில்லவன்
வில்லவன்கோதை
வெற்றி
வெற்றிக்குமரன்
வெற்றிச்செல்வன்
வெற்றியரசன்
வெற்றியழகன்
வெற்றிவேல்

வேங்கை
வேந்தன்
வேந்தனார்
வேயோன்
வேல்முருகு
வேலவன்
வேலுப்பிள்ளை
வேள்
வேழவேந்தன்
வைகறை
வைரமுத்து

நன்றி ஓவியா
 
 

StumbleUpon.com Read more...

திசை மாற்றி முகம் திருப்பிய மர்மம் என்னவோ?

திசை மாற்றி முகம் திருப்பிய மர்மம் என்னவோ?என்று கேட்கத்தோன்றும் விதமான ஒரு கட்டுரை
 
 
ஏன் முகமது கிப்லாவை எருசலேமிலிருந்து மக்காவிற்கு மாற்றினார்?

கிறிஸ்துவிற்குள் அன்பானவர்களே, இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் கட்டுரைகளை உங்களுக்கு தெரிந்த போதகருக்கு கொடுங்கள், 20 கோடிக்கும் அதிக இஸ்லாமியர்கள் உள்ள இந்தியாவில் ஊழியம் செய்யும் தேவனுடைய பிள்ளைகளுக்கு, சில இஸ்லாமியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தரமுடியாமல் சில நேரங்களில் போகலாம், எனவே இக்கட்டுரைகளை இன்னும் வரவிருக்கும் தகவல்களை அவர்களுக்கு பிரின்ட் எடுத்தாவது கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
source : http://www.geocities.com/isa_koran/tamilpages/Articles/WhyQiblaChanged.html


முன்னுரை:இஸ்லாமின் ஆரம்ப காலத்தில், முகமதுவும் அவரை பின்பற்றியவர்களும் தொழுகை நடத்தும்போது தங்கள் முகத்தை "எருசலேமிற்கு" நேராக (கிப்லா) திருப்பிக்கொண்டு ஒவ்வொரு நாளூம் தொழுதனர் ( நமாஜ் செய்தனர்). இப்படி அவர்கள் பல ஆண்டுகள் தொழுதுவந்தனர். மக்காவிலிருந்து மதினாவிற்கு இடம் பெயர்ந்து அவர்கள் சென்றபிறகு 18 மாதங்கள் இப்படியே தொழுதனர். பிறகு ஒரு நாள் முகமது இந்த கிப்லாவை மாற்றி, இனி எல்லாரும் மக்காவில் உள்ள "காபாவை" நோக்கியே தொழவேண்டும் என்று கட்டளையிட்டார். ஏன் இப்படி செய்தார்?, இதன் பின்னனி என்ன? என்று நாம் இங்கு காணப்போகிறோம்.
-------------------------------------------------------------------------------------
1. இன்றைய இஸ்லாமியர்களின் வாதம்:

"இஸ்லாமின் சாராம்சம் மக்கா தான்"
"ஆதாம் மக்காவில் உள்ள காபாவில் முதன் முதலாக கருப்புக் கல்லை வைத்தார்"
"ஆபிரகாமும் அவர் மகன் இஸ்மாயிலும் இந்த காபாவை புதுப்பித்து கட்டினார்கள்"
"உலகத்தில் மனிதர்களுக்காக வைக்கப்பட்ட வீடு( இறைவனுடைய வீடு) மக்காவில் உள்ள காபா தான்". (குர்-ஆன் 3:96 )


குர்-ஆன் 3:96
(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.


காபா இவ்வளவு முக்கியத்துவம் பெறும்போது ஏன் முகமது ஆரம்பத்திலிருந்து கிப்லா "எருசலேம்" என்றுச் சொல்லி பல ஆண்டுகள் தொழுதுக்கொண்டார்?, பின்னர் ஏன் கிப்லா "மக்காவில் உள்ள காபா" என்றுச் சொன்னார்?

-------------------------------------------------------------------------------------

2. எருசலேமை (கிப்லா) நோக்கியே தினமும் தொழுதுக்கொள்ள வேண்டும்:


முதன் முதலில், முகமது தனக்கு ஒரு குகையில் ஒரு தூதன் காணப்பட்டதாக தன் மனைவி கதிஜாவிடம் சொல்கிறார். இதைக்கேட்ட கதிஜா அவரை தன் உறவினன் "வராகா" விடம் அழைத்துச்செல்கிறார். இந்த வராக அந்த காலத்தில் கிறிஸ்தவத்திற்கு மாறியிருக்கிறார். இவர் கதிஜாவிடமும், முகமதுவிடமும் "இவர் (முகமது) ஒரு தீர்க்கதரிசி மோசேயைப்போல" என்றுச் சொல்கிறார்.

Bukhari: Volume 1, Book 1, Number : 3
'வராக' அறியாமைக் காலத்திலேயே கிறித்தவ சமயத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும் அவர் ஹீப்ரு மொழியில் எழுதத் தெரிந்தவராகவும் இஞ்ஜீல் வேதத்தை, ஹீப்ரு மொழியில் அவர் எழுத வேண்டும் என்று அல்லாஹ் நாடிய அளவுக்கு எழுதுகிறவராகவும் கண் பார்வையற்ற பெரும் வயோதிகராகவும் இருந்தார். அவரிடம் கதீஜா(ரலி), 'என் தந்தையின் சகோதரன் மகனே! உம் சகோதரன் மகன் கூறுவதைக் கேளுங்கள்' என்றார்கள். அப்போது வரகா நபி(ஸல்) அவர்களிடம், 'என் சகோதரர் மகனே! நீர் எதைக் கண்டீர்?' எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தாம் பார்த்த செய்திகளை அவரிடம் கூறினார்கள். (அதைக் கேட்டதும்) வரகா, (நபி(ஸல்) அவர்களிடம்) 'இவர்தாம், மூஸாவிடம் இறைவன் அனுப்பிய 'நாமூஸ்' (ஜிப்ாீல்) ஆவார்' என்று கூறிவிட்டு, 'உம்முடைய சமூகத்தார் உம்மை உம்முடைய நாட்டிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருந்திருக்க வேண்டுமே!' என்றும் அங்கலாய்த்தார்.

அப்போது நபி(ஸல்) அவர்கள், 'மக்கள் என்னை வெளியேற்றவா போகிறார்கள்?' என்று கேட்டார்கள். அதற்கவர்கள் 'ஆம்! நீர் கொண்டு வந்திருப்பது போன்ற சத்தியத்தைக் கொண்டு வந்த எந்த மனிதரும் (மக்களால்) பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. (நீர் வெளியேற்றப்படும்) அந்நாளை நான் அடைந்தால் உமக்குப் பலமான உதவுவேன்' என்று கூறினார். அதன்பின்னர் வரகா நீண்ட நாள் வாழாமல் இறந்துவிட்டார். இந்த முதற் செய்தியுடன் வஹீ (இறைச்செய்தி) சிறிது காலம் நின்று போயிற்று
.


இதற்கு பிறகு தான் ஒரு தீர்க்கதரிசி என்றும், அல்லா காபிரியேல் தூதன் மூலம் "தீர்க்கதரிசன வசனங்களை" கொடுக்கிறார் என்று முகமது சொல்லிவந்தார். அந்த வசனங்களை ஒன்று சேர்த்து அதற்கு "குர்-ஆன்" என்றார்கள் . இது எல்லாருக்கும் தெரிந்த ஒரு விஷயம். தொழுகை இத்தனை முறை செய்யவேண்டும், இப்படி செய்யவேண்டும் என்று பல சட்டங்களை முகமது அல்லா சொல்வதாக கொண்டுவந்தார்.

இந்த நாளிலிருந்தே முகமதுவும், அவரை பின்பற்றினவர்களும் (முஸ்லீம்கள்), தினமும் நமாஜ் செய்யும் போது "எருசலேம்" நோக்கியே (கிப்லா) செய்தார்கள். இப்படி கிட்டத்தட்ட 13 வருடங்கள் "எருசலேமை" நோக்கியே நமாஜ் செய்தார்கள்(மக்காவில் இருந்த எல்லா ஆண்டுகளும் மற்றும் மதினாவில் 18 மாதங்களும்).


முஸ்லீம்களுக்கு சிந்திக்க சில கேள்விகள்:

1. மக்காவும், காபாவும் தான் இஸ்லாமின் சாராம்சம் என்றால், ஆரம்பகால இஸ்லாமியர்கள் முகமதுவோடு செர்த்து ஏன் "எருசலேமை" நோக்கி நமாஜ் செய்தார்கள்?

2. அல்லா ஏன் தன்னை தொழுதுக்கொள்ள "எருசலேமின்" திசையை "கிப்லாவாக" செய்தான்?

3. மக்காவிலுள்ள காபாவில் அல்லா இல்லையோ? எருசலேமில் உள்ள தேவாலயத்தில் இருக்கிறாறோ?

4. ஆதாம், இப்ராஹிம்(ஆபிரகாம்), இஸ்மாயில் கட்டிய காபாவை ஏன் அல்லா 13 ஆண்டுகள் மறந்துவிட்டார்?

5. மக்காவிலுள்ள காபாவில் 360 விக்கிரகங்கள் இருப்பதாலா ?(இதில் ஒரு விக்கிரத்திற்கு(கருப்புக்கல்) பெயர் "அல்லா" என்பது குறிப்பிடத்தக்கது)

6. அல்லது யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் தன் மார்க்கத்தில் செர்ப்பதற்கு அல்லா செய்த ஒரு வழிமுறையா?

7. முகமது சொல்வது போல தான் வாழ்ந்த காலத்தில் (கி.பி. 570-632), எருசலேமில் தேவாலயமே இல்லை, கி.பி.70 அது அழிக்கப்பட்டது. அப்படியானால் ஏன் எருசலேம் பக்கம் பார்த்துக்கொண்டு நமாஜ் செய்யவேண்டும்?


-------------------------------------------------------------------------------------


3. எருசலேமிற்கு முகமதுவை அழைத்துச்செல்கிறார், காபிரியேல்(ஜிப்ராயில்) தூதன்:


ஒரு நாள் இரவு அல்லா முகமதுவை மக்காவிலிருந்து எருசலேம் (மக்ஜிதுல் அக்ஸா) தேவாலயத்திற்கு கொண்டுசென்றதாகவும், அங்கு அவர் மோசே(மூஸா), ஆபிரகாம், இயேசுவோடும் பேசியதாகவும், பிறகு அவர் திரும்பி வந்ததாகவும் குர்-ஆன் 17:1 மற்றும் ஹதீஸ்கள் சொல்கின்றன.

குர்-ஆன் 17:1
17:1 (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹரமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்.

Narrated Ibn 'Abbas: (regarding the Verse) "And We granted the vision (Ascension to the heavens "Miraj") which We showed you (O Muhammad as an actual eye witness) but as a trial for mankind.' (17.60): Allah's Apostle actually saw with his own eyes the vision (all the things which were shown to him) on the night of his Night Journey to Jerusalem (and then to the heavens). The cursed tree which is mentioned in the Qur'an is the tree of Az-Zaqqum. (Bhukari Volume 8, Book 77, Number 610Smile

Narrated Abu Huraira: Allah's Apostle said, "On the night of my Ascension to Heaven, I saw (the prophet) Moses who was a thin person with lank hair, looking like one of the men of the tribe of Shanua; and I saw Jesus who was of average height with red face as if he had just come out of a bathroom. And I resemble prophet Abraham more than any of his offspring does. Then I was given two cups, one containing milk and the other wine. Gabriel said, 'Drink whichever you like.' I took the milk and drank it. Gabriel said, 'You have accepted what is natural, (True Religion i.e. Islam) and if you had taken the wine, your followers would have gone astray.' " ( Bhukar Volume 4, Book 55, Number 607)


முகமது இப்படி பயணம் செய்தாரா என்பது ஒருபுறம் இருக்க:

1. ஏன் காபாவை (மக்காவை) விட்டுவிட்டு எருசலேமுக்குச் செல்லவேண்டும்?

2. மூஸாவும், ஆபிரகாமும், இயேசுவும் ஏன் இவரோடு எருசலேமில் பேசவேண்டும்? எருசலேம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததோ?

3. ஆபிரகாம் மக்காவில் உள்ள காபாவை கட்டியது(பழுது பார்த்தது), தொழுதுகொண்டது உண்மையானால், ஏன் ஆபிரகாம் காபாவில் முகமதுவை சந்தித்து பேசவில்லை? ஏன் எருசலேமுக்கு வரவேண்டும்?

4. (ஆபிரகாம் மக்காவிற்குச் சென்று காபாவை கட்டியதாகவும், அல்லாவை அங்கு தொழுதுகொண்டதாகவும் எந்த ஒரு சரித்திர அல்லது தொல்பொருள் ஆராய்ச்சி ஆதாரமும் இதுவரையிலும் இல்லை)



-------------------------------------------------------------------------------------

4. யூதர்களின் நம்பிக்கையின்மையும், கிப்லா மாற்றமும்:


தான் ஒரு தீர்க்கதரிசி என்றுச் சொல்லி மக்காவில் 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது, முகமதுவிற்கு மக்காவில் பிரச்சனைகள் அதிகரிக்கிறது. மதினாவிற்கு அவரும் அவரை பின்பற்றியவர்களும் மதினாவிற்கு செல்கிறார்கள். இதையே "ஹிஜரி" என்றுச் சொல்வார்கள், இஸ்லாமிய காலண்டர் இந்த வருடத்திலிருந்து (கி.பி. 622) ஆரம்பிக்கிறது.

மதினாவில் உள்ள யூதர்கள் இவரை ஒரு தீர்க்கதரிசி என்று நம்ப மறுக்கின்றனர். அற்புதங்கள் செய்துகாட்டும்படி கேட்கின்றனர். (மரித்தவர்களை உயிரோடு எழுப்பி, பல அற்புதங்கள் செய்த இயேசுவையே யூதர்கள் மேசியா என்று நம்பவில்லை, இப்படியிருக்க,ஒரு அற்புதமும் செய்யாத, செய்யமுடியாத முகமதுவையும், அல்லாவையும் எப்படி நம்புவார்கள் யூதர்கள்). இவரால் ஒரு அற்புதமும் செய்யமுடியவில்லை.

இது போதாதென்று யூதர்களுக்கு "வேதம் கொடுக்கப்பட்டோர்" (People of the Book) என்று குர்-ஆனில் பட்டம் சூட்டப்பட்டாகிவிட்டது, இவர்களை எப்படி சமாளிப்பது, மட்டுமில்லாமல், இவர்களுடைய தேவாலயம் உள்ள எருசலேம் பக்கமே "கிப்லாவாக" நினைத்து பல ஆண்டுகளாக நமாஜ் செய்துக்கொண்டு இருக்கின்றனர். இவர்களை தண்டித்து, வரி வசூலிக்கலாம் என்றால், இப்படி பல பிரச்சனைகளில் ஏற்கனவே முகமதுவும், அல்லாவும் மாட்டிக்கொண்டுள்ளனர்.

அப்போது முகமது மிகவும் குழப்பத்தில் இருக்கிறார். இஸ்லாமையும், முகமதுவையும் எதிர்க்கிறவர்களை ஆரம்பத்திலேயே கிள்ளிவிடுவதில் தானே இஸ்லாமின் சக்தியே அடங்கியிருக்கிறது. இன்று கூட அதுதானே நடந்துக்கொண்டு இருக்கிறது. அடிக்கடி வானத்தை நோக்கி பார்த்தவண்ணம் இருக்கிறார் முகமது, ஏதாவது ஒரு செய்தி அல்லாவிடமிருந்து வருமா? வந்ததே....! குர்-ஆன் 2:144


குர்-ஆன் 2:144
2:144 (நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம்; எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்; ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்; நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பராமுகமாக இல்லை.


முகமது எப்போதெல்லாம் என்ன வேண்டுமென்று ஆசைப்படுகிறாறோ!, அப்போதெல்லாம் அல்லா ஒரு வசனத்தை இறக்குவான் முகமதுக்காக. என்னே ஒரு அருமையான தெய்வம் மற்றும் தொண்டன். ஒருமுறை தன் வளர்ப்பு மகனின் மனைவியை முகமது திருமணம் செய்ய மனதிலே ஆசைப்படும் போது, இதை அறிந்து அல்லா ஒரு வசனத்தை இறக்குகின்றான் குர்-ஆன் 33:37.

குர்-ஆன் 33:37.
33:37 (நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்: 'அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்" என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும்.


முகமதுவிற்கு பல மனைவிகள் உண்டு. இவர் ஒவ்வொருவருக்கும் ஒரு நாள்(இரவு) ஒதுக்கியிருப்பார். இப்படி பல மனைவிகள் இருந்தால் அவர்களுக்கு இப்படி நியாயம் செய்யுங்கள்(ஓரே மனைவியுடன் எல்லா நாட்களும்(இரவு) இருக்காமல்) ஒவ்வொருவருடனும் ஒரு நாள் இருப்பது போல பார்த்துக்கொள்ளுங்கள் என்று அல்லா கட்டளையிட்டுள்ளார். ஆனால் சில நேரங்களில் முகமதுவிற்கு இந்த டைம் டேபுலை (நேர அட்டவனை) மாற்றி, ஒரு மனைவியிடம் அதிக நாள் இருக்க விருப்பப்படுகிறார். இவருக்கு ஆயிஷா என்றால் அதிக விருப்பம் (குறைந்த வயதுடைய மனைவி).

இவருக்காகவே அல்லா தனிப்பட்ட முறையில் சில வசனங்களை குர்-ஆனில் புகுத்துகிறார். இதனை அவர் மனைவி வாயாலேயே கேட்போம். அல்லா எப்படி முகமதுவுடைய ஆசைகளை நிறைவேற்றுவதில் அதிக வேகம் காட்டுகிறார் என்று ஆயிஷாவே வேடிக்கையாகச் சொல்கிறார்.

Bhukari Volume 6, Book 60, Number 311Narrated Aisha: I used to look down upon those ladies who had given themselves to Allah's Apostle and I used to say, "Can a lady give herself (to a man)?" But when Allah revealed: "You (O Muhammad) can postpone (the turn of) whom you will of them (your wives), and you may receive any of them whom you will; and there is no blame on you if you invite one whose turn you have set aside (temporarily).' (33.51)I said (to the Prophet), "I feel that your Lord hastens in fulfilling your wishes and desires."

Quran 33:51 YUSUFALI: Thou mayest defer (the turn of) any of them that thou pleasest, and thou mayest receive any thou pleasest: and there is no blame on thee if thou invite one whose (turn) thou hadst set aside. This were nigher to the cooling of their eyes, the prevention of their grief, and their satisfaction - that of all of them - with that which thou hast to give them: and Allah knows (all) that is in your hearts: and Allah is All-Knowing, Most Forbearing.

33:51 அவர்களில் நீர் விரும்பிய வரை ஒதுக்கி வைக்கலாம். நீர் விரும்பியவரை உம்முடன் தங்கவைக்கலாம், நீர் ஒதுக்கி வைத்தவர்களில் நீர் நாடியவரை உம்முடன் சேர்த்துக் கொள்ளலாம். (இதில்) உம்மீது குற்றமில்லை; அவர்களுடைய கண்கள் குளிர்ச்சியடையும் பொருட்டும், அவர்கள் விசனப்படாமல் இருப்பதற்கும் அவர்கள் ஒவ்வொருவரும் நீர் அவர்களுக்கு கொடுப்பதைக் கொண்டு திருப்தி அடைவதற்காகவும், இது சுலபமான வழியாகும். மேலும், அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் இருப்பதை நன்கறிகிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்; மிக்க பொறுமையாளன்.


-------------------------------------------------------------------------------------


5. கிப்லா மாற்றம், முகமதுவை பின்பற்றினவர்களுக்கு வந்த சந்தேகம்:


கிப்லாவை முகமது மாற்றினார் என்றவுடன் சில இஸ்லாமிய அன்பர்களுக்கு சந்தேகம் எழுகின்றது. கிப்லா எருசலேமாக இருக்கும் போது அதற்கு நேராக நின்று தொழுதவர்கள்(நமாஜ் செய்தவர்கள்) மற்றும் அவர்கள் இப்போது இல்லை மரித்துவிட்டார்கள். கிப்லா மக்காவாக மாற்றிய பிறகு செய்யப்படும் தொழுகை மட்டும் தான் இனி செல்லுபடியாகுமானால், அவர்களின் நிலை என்ன? அவர்கள் எருசலேமை பார்த்தபடி செய்த தொழுகைக்கான நன்மை அவர்களுக்கு கிடைக்குமா?

இந்த சந்தேகத்திற்கு அல்லா சொல்லுகின்றான், "இல்லை, எருசலேம் பக்கம் பார்த்தவண்ணம் (கிப்லா) செய்த தொழுகைகள் வீணாக்கப்படாது, அவைகளும் கணக்கில் கொள்ளப்படும்" குர்-ஆன் 2:143.



Bhukari Volume 1, Book 2, Number 39: Narrated Al-Bara' (bin 'Azib): When the Prophet came to Medina, he stayed first with his grandfathers or maternal uncles from Ansar. He offered his prayers facing Baitul-Maqdis (Jerusalem) for sixteen or seventeen months, but he wished that he could pray facing the Ka'ba (at Mecca). The first prayer which he offered facing the Ka'ba was the 'Asr prayer in the company of some people. Then one of those who had offered that prayer with him came out and passed by some people in a mosque who were bowing during their prayers (facing Jerusalem). He said addressing them, "By Allah, I testify that I have prayed with Allah's Apostle facing Mecca (Ka'ba).' Hearing that, those people changed their direction towards the Ka'ba immediately. Jews and the people of the scriptures used to be pleased to see the Prophet facing Jerusalem in prayers but when he changed his direction towards the Ka'ba, during the prayers, they disapproved of it.

Al-Bara' added, "Before we changed our direction towards the Ka'ba (Mecca) in prayers, some Muslims had died or had been killed and we did not know what to say about them (regarding their prayers.) Allah then revealed: And Allah would never make your faith (prayers) to be lost (i.e. the prayers of those Muslims were valid).' " (2:143).

குர்-ஆன் 2:143 இதே முறையில் நாம் உங்களை ஒரு நடு நிலையுள்ள உம்மத்தாக (சமுதாயமாக) ஆக்கியுள்ளோம்; (அப்படி ஆக்கியது) நீங்கள் மற்ற மனிதர்களின் சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், ரஸூல் (நம் தூதர்) உங்கள் சாட்சியாளராக இருப்பதற்காகவுமேயாகும்; யார் (நம்) தூதரைப் பின்பற்றுகிறார்கள் யார் (அவரைப் பின்பற்றாமல்) தம் இரு குதிங் கால்கள் மீது பின்திரும்பி செல்கிறார்கள் என்பதை அறி(வித்து விடு)வான் வேண்டி கிப்லாவை நிர்ணயித்தோம்; இது அல்லாஹ் நேர்வழி காட்டியோருக்குத் தவிர மற்றவர்களுக்கு நிச்சயமாக ஒரு பளுவாகவே இருந்தது; அல்லாஹ் உங்கள் ஈமானை (நம்பிக்கையை) வீணாக்கமாட்டான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிகப்பெரும் கருணை காட்டுபவன், நிகரற்ற அன்புடையவன்.



இப்படியாக தன்னை ஒரு யூத முறையில் வந்த தீர்க்கதரிசி என்றுக்காட்டிக்கொள்ளவும், யூதர்களை நம்பவைப்பதற்கும், பல ஆண்டுகள் முகமதுவும், அவருடைய வழியை பின்பற்றியவர்களும் எருசலேமுக்கு நேராக நின்று நமாஜ் செய்தனர் (அல்லாவை வணங்கினர்). ஆனால் எப்போது யூதர்கள் நம்பவில்லையோ, கிப்லாவை திடீரென்று மக்காவிற்கு மாற்றிவிட்டார். இது அல்லா சொன்னதா, அல்லது இவராகவே மாற்றியதா?

இதன் பிறகு தான் யூதர்களை முகமது அழிக்கமுயன்றார். இவர்களிடமிருந்து "ஜிஸ்யா" வரி வசூலித்தார். பல பேரை கொன்று குவித்தார்.


சிந்திக்க சில கேள்விகள்:

1. கிப்லா எருசலேமிலிருந்து மக்காவிலுள்ள "காபா"விற்கு மாற்றமான போது, அந்த காபாவில் 360 விக்கிரகங்கள் இருந்தன. இதை மறந்துவிட்டாரோ அல்லா?


2. நமாஜ் செய்துக்கொண்டுயிருக்கும் போது, முன்னால் யாராவது (நாயோ, பெண்ணோ) வந்துவிட்டால், அந்த நமாஜ் கெட்டுவிடும், எனவே மறுபடியும் படிக்கும் இஸ்லாமிய நண்பர்களே, முகமதுவும், அவர் கூட்டனியும் சேர்ந்து பல வருடங்கள் ( மக்காவை பிடிக்கும்வரை) 360 விக்கிரகங்கள் உள்ள காபாவை நோக்கி நமாஜ் செய்தார்களே. ஏன் அப்போது அவர்கள் நமாஜ் கெடவில்லை?

3. இதன் பிறகு யூதர்களிடமிருந்து "ஜிஸ்யா" வரி வசூலித்த இஸ்லாம், ஏன் இதற்கு முன்பு வசூலிக்கவில்லை, அவர்கள் ஆலயத்திற்கு ( எருசலேமிற்கு )நேராக நமாஜ் செய்ததாலா?


Kuran 9:29
YUSUFALI: Fight those who believe not in Allah nor the Last Day, nor hold that forbidden which hath been forbidden by Allah and His Messenger, nor acknowledge the religion of Truth, (even if they are) of the People of the Book, until they pay the Jizya with willing submission, and feel themselves subdued.

9:29 வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.


----------------------------------------------------------------------------------

முடிவுரை:
இந்த விவரங்களே போதும், முகமது ஒரு தீர்க்கதரிசி இல்லை என்பதற்கு. மட்டுமில்லை பைபிளில் முடிவு யெகோவா தேவன் எடுப்பார், தீர்க்கதரிசிகள் அதனை பின்பற்றுவார்கள், ஆனால் இங்கோ முடிவு முகமது எடுப்பார், அல்லா உடனே ஒரு வசனத்தை தீர்க்கதரிசனமாக அவருக்கே வெளிப்படுத்துவார். ஆப்கனிஸ்தானிலே பல நூற்றாண்டு பழமைவாய்ந்த புத்தர் சிலையை உடைத்தார்கள் இப்போதுள்ள இஸ்லாமியர்கள், ஆனால் அதனை தோற்றுவித்தவரோ! 360 சிலைகள் உள்ள, விக்கிரகங்களின் இருப்பிடத்தை நோக்கியவாறு பல ஆண்டுகள் தொழுகை நடத்தியுள்ளார். இஸ்லாமிய நண்பர்களே சிந்தியுங்கள்.

-------------------------------------------------------------------------------------

Reference :
source : http://www.geocities.com/isa_koran/tamilpages/Articles/WhyQiblaChanged.html

Hadith Data base : http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/

Tamil Quran : http://www.tamililquran.com/suraindex.asp
 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP