சமீபத்திய பதிவுகள்

மருமகளை கரைட் பண்ணிய மாமனார்(அல்லாவின் ஆசீர்வாதத்துடன்)

>> Wednesday, April 30, 2008

மாமனாரும்,மருமகளும்

நேசமுடனுக்கு பதில்: மருமகளின் மாமனாரின்(முகமது) கல்யாணம் அல்லாவின் சொர்க்கத்தில் நிச்சயமானது.




10. முகமது என்னும் மாமனார்: ஒரு சிறு குறிப்பு

இஸ்லாமியர்கள் யூதாவின் தாமாரின் இந்த கதை பைபிளில் இருப்பதினால், அது ஒரு வேதமல்ல என்றுச் சொல்கிறார்கள். பழைய ஏற்பாட்டு நிகழ்ச்சிகள் நமக்கு ஒரு எச்சரிக்கையாகவும், படிப்பினையாகவும் இருக்கும்படியாக எழுதப்பட்டுள்ளது, அதை அப்படியே பின்பற்ற அல்ல.

இஸ்லாமிலும் ஒரு மாமனார் வருகிறார், அவர் பற்றியும் நாம் தெரிந்துக்கொள்ளவேண்டும் அல்லவா? அவருடைய நடக்கைக்கும் குணத்திற்கும் உலக மக்கள் யாரும் ஈடு ஆகமுடியாது, அவ்வளவு நேர்மையாக பரிசுத்தமாக வாழ்ந்தார் என்று இஸ்லாமியர்கள் பெருமைபடுவார்கள். அவருடைய வாழ்வு எல்லாருக்கும் எடுத்துக்கட்டாக உள்ளதா என்பதை, இதைப் படிப்பவர்கள் முடிவு செய்யுங்கள். அவர் தான் முகமது.

முகமதுவிற்கு ஒரு வளர்ப்பு மகன் இருந்தான், அவனுக்கு முகமது ஒரு பெண்ணை திருமணம் செய்தார். ஒரு நாள் அவர் தன் வளர்ப்பு மகனின் வீட்டிற்குச் செல்கிறார், ஆனால், தன் வளர்ப்பு மகன் அங்கில்லை. அவர் மருமகள் அவரை வீட்டிற்குள் வரும்படி அழைக்கிறார், இவர் வரமறுக்கிறார். இந்த நிகழ்ச்சியைப் பற்றி இஸ்லாமியர் சரித்திர ஆசிரியர் "டபரி" என்ன சொல்கிறார் என்றுப் பாருங்கள் .

Imam Tabari wrote (History of Tabari, vol 8):

"One day Muhammad went out looking for Zaid (Mohammed's adopted son). Now there was a covering of hair cloth over the doorway, but the wind had lifted the covering so that the doorway was uncovered. Zaynab was in her chamber, undressed, and admiration for her entered the heart of the Prophet".

The admiration was noticed by Zainab. She mentioned it to her husband Zaid later. He rushed to his father's house and offered Zainab to him. Mohammed worried about possible bad press and refused to accept it. But Allah will not take no for an answer and sent an instant revelation insisting on their union.



முகமது தன் வளர்ப்பு மகனின் வீட்டிற்குச் செல்லும் போது, வாசலில் போடப்பட்டிருந்த துணி சிறிது காற்றினால் நகர்ந்ததால், தன் மருமகளிடம் பார்க்கக்கூடாததை முகமது பார்த்துவிடுகிறார். தன் மருமகளின் அழகு இவர் உள்ளைத்திற்குள் செல்கிறது . இதை தன் கணவனுக்கு ஜைனப் தெரிவிக்கும்போது, அவன் முகமதுவிடம் சென்று "தான் தன் மனைவியை விவாகரத்து செய்துவிடுகிறேன், நீங்கள் ஆசைப்பட்டதால், திருமணம் செய்துக்கொள்ளுங்கள்" என்றுச் சொல்கிறார்.

அதற்கு முகமது, "வேண்டாம், உன் மனைவியை நீயே வைத்துக்கொள்" என்று சொல்கிறார்(அந்த காலத்தில் இஸ்லாமுக்கு முன்பு, இப்படி மருமகளை திருமணம் செய்துக்கொள்வது, மிகப்பெரும் குற்றமாக கருதப்பட்டது. அன்று மட்டுமல்ல இன்று கூட அது குற்றம் தான்.), இதை பார்த்துக்கொண்டு இருக்கிற அல்லா, உடனே ஒரு வசனத்தை இறக்குகிறார், தன் நபியின் ஆசையை பூர்த்தி செய்ய, அது தான் குர்-ஆன் 33:37.

குர்-ஆன் 33:37

(நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்; "அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்" என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். (33:37)




அல்லா சொல்கிறார், முகமதுவிற்கு தன் மருமகள் மீது ஆசை இருந்தும், மனிதர்களுக்கு பயந்து, (ஏனென்றால், அப்படிப் பட்ட வழக்கம் இருட்டில் வாழ்ந்ததாகச் சொல்லும் மக்கா அரபி மக்களிடம் கூட இல்லை) அதை மனதிலே மறைத்து " உன் மனைவியை விவாகரத்து" செய்யவேண்டாம் என்றுச் சொன்னாராம். அதை அறிந்த அல்லா, வளர்ப்பு மகன் விவாகரத்து செய்துவிட்ட பிறகு உனக்கு உன் மருமகளோடு திருமணத்தை "நாம் செய்தோம் " என்றுச் சொல்கிறார்.

இப்படியெல்லாம் நடக்கவில்லை, சரித்திர ஆசிரியர் தவறாகச் சொன்னார் என்று இஸ்லாமியர்கள் சொல்வார்கள். சரி சரித்திர ஆசிரியர் சொன்னது தவறு என்றே வைத்துக்கொள்வோம், குர்-ஆனில் அல்லா சொன்னது தவறாகுமா? இந்த வசனம் இன்று இஸ்லாமியர்களிடம் உள்ள குர்-ஆனில் இல்லையா?

ஒரு வளர்ப்பு மகன் தன் தந்தையைப் பார்த்து, "நான் விவாகரத்து செய்துவிடுகிறேன், நீங்கள் திருமணம் செய்துக்கொள்ளுங்கள்" என்றுச் சொன்னால் அதன் பொருள் என்ன? இதற்கு முன்பு என்ன நடந்துயிருந்தால் இந்த வார்த்தைகள் வெளிவரும்?

"உன் மனைவியை நீயே வைத்துக்கொள்" என்று முகமது சொன்னார் என்று குர்-ஆன் சொல்கிறது, சரித்திர ஆசிரியரை விட்டுவிடுவோம்.

முகமது சொன்னது பதில் என்றால், அதற்கு முன்பு தன் மகன் என்ன சொல்லியிருப்பான் என்று சுலபமாக யூகிக்கலாம். இதற்கு Ph.D பட்டம் படித்துவரவேண்டிய அவசியமில்லை.

எனவே, குர்-ஆன் வசனப்படி, முகமது தன் மகனின் வீட்டிற்குச் சென்று வரும் போது, ஏதோ நடந்துள்ளது, அதை தன் மனைவி மூலம் அறிந்த வளர்ப்பு மகன் தந்தையிடம் என்ன சொல்லியிருந்தால், முகமது இப்படி "உன் மனைவியை நீயே வைத்துக்கொள் " என்றுச் சொல்லமுடியும். சிந்தித்து பார்க்கவேண்டும்.

தன் மருமகளை வளர்ப்பு மகன் விவாகரத்து செய்தது உண்மையா இல்லையா?

முகமது தன் முன்னால் மருமகளை திருமணம் செய்தது உண்மையா இல்லையா? இதை யாரும் மறுக்கமாட்டார்கள்.

இந்த இரண்டு விவரங்கள் மட்டும் தவறு என்றுச் சொல்லுங்கள் பார்க்கலாம்?

இந்த கட்டுரையில் நாம் சிந்திக்கவேண்டியது:

ஒரு நபர் தன் மருமகள் வேசியாக வேடமிட்டு உட்கார்ந்து இருப்பதை அறியாமல் அவளிடம் வேசித்தனம் செய்ததால், அந்த நிகழ்ச்சி பைபிளில் இருப்பதால், அது வேதம் என்று அழைக்கப்படக்கூடாது என்றால்.....

தன் மருமகள் என்று தெரிந்தே அவள் மீது ஆசைப் பட்டு ( எப்படி ஆசை உருவானது என்று சரித்திர ஆசிரியர் சொல்வதை நாம் மறந்துவிடுவோம்), அதை அறிந்த மகன் அவளை விவாகரத்து செய்வதும், அதற்காகவே ஒரு வசனத்தை அல்லா இறக்குவதும் உண்மையானால். அப்படிப் பட்ட நபரை எப்படி ஒரு "நபி" இறைத்தூதர் என்றும், அவர் மூலமாக இறக்கிய வசனங்கள் இறைவேதம் என்றும் எப்படி நம்புவது?

எந்த ஆணாக இருந்தாலும் சரி, தற்செயலாக சில காட்சிகளை தெரியாமல் பார்த்துவிடுவது உண்டு, அதற்காக அல்லா ஒரு வசனத்தை இறக்கவேண்டுமா?

தன் தகப்பன் தன் மனைவியின் மீது ஆசைப்படுகிறான் என்றுச் சொல்லி தன் தந்தையை கொலை செய்த மனிதர்கள் பற்றி நாம் செய்தித்தாள்களில் படிக்கிறோம், ஆனால் இங்கு ஒரு மகன் தன் தந்தைக்காக தன் மனைவியையே விவாகரத்து செய்கிறான் என்றால்..... என்ன சொல்வது?

இதற்குச் சரியாக அல்லாவும், இப்படிப் பட்ட திருமணங்கள் எல்லாரும் செய்யலாம் என்றுச் சொல்லி எல்லாருக்கும் அனுமதி அளிக்கிறார், இதை யாரிடம் சொல்லி முறையிடுவது?

யூதா தெரியாமல் பாவம் செய்தான், தெரிந்துவிட்ட பிறகு வேதனைப்பட்டான் பிறகு அதைச் செய்யவில்லை. ஆனால் முகமது ? முகமதுவை விட யூதாவே மிகவும் நல்லவன் என்றுச் சொல்லத் தோன்றுகிறது.

விவரம் 2: சிலர் இந்நிகழ்ச்சியை இப்படியும் சொல்கிறார்கள், முகமது முதலிலேயே ஜைனப்பை திருமணம் செய்ய ஜைனப் பெற்றோரிடம், கேட்டதாகவும், அதற்கு அவர்கள்(முஸ்லீம்களாக மாறியவர்கள்) வயது வித்தியாசம் முகமதுவிற்கும், ஜைபப்பிற்கும் அதிகமாக இருப்பதால், கொடுக்கமாட்டேன் என்றுச் சொன்னதாகவும், இதனால் ஏமாற்றமடைந்த முகமது, தன் வளர்ப்பு மகனை ஜைனப்பிற்கு மனமுடித்து கொடுத்ததாகவும், அவர்கள் இருவரும் அதிகமாக சண்டையிட்டுக்கொண்டு இருப்பதால், வளர்ப்பு மகன் விவாகரத்து செய்ததாகவும், ஜனப்பிற்கு வேறு வழியில்லாததால், கடைசியாக முகமதின் கோரிக்கையை அல்லாவின் வசனம் இறக்கியவுடன், ஜைனப் முகமதை திருமணம் செய்ததாகவும் சொல்கிறார்கள். Source : Read this Article

விவரம் 3: இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள், ஜயத்(வளர்ப்பு மகன்), மற்றும் ஜைனப்(மருமகள்) இருவருக்கும் திருமணம் செய்து வைத்தது முகமது தான், அவர்கள் தாம்பத்திய வாழ்வில் சண்டைகள் அதிகமாக இருப்பதால், ஜையத் விவாகரத்து செய்யும் போது, அல்லாவின் கட்டளையின் படி, முகமது திருமணம் செய்தார் என்று.


மேலே சொன்ன மூன்று விவரங்களில் எது சரி என்று ஒரு தனி கட்டுரையில் பார்க்கலாம்., இந்த கட்டுரைக்கு இது போதும்.

சரித்திர ஆசிரியர் சொல்வதும், குர்-ஆன் வசனம் சொல்வதும் கவனித்தால், ஒரு உண்மை புரியும். அது என்ன? முகமது தன் வளர்ப்பு மகனின் மனைவியை விவாகரத்திற்கு பின்பு திருமணம் செய்துக்கொண்டார் என்பது. சொன்ன விவரங்களில் எது உண்மையாக இருக்கும், என்பதை கீழுள்ள் தொடுப்புகளை பார்க்கவும். மற்றும் இஸ்லாமிய தளங்களில் இதைப் பற்றிச் சொல்லும் விவரங்களையும் படியுங்கள்.

islam Watch | Muslim Hope | Islam Review | Daniel Piles | Faith Freedom | News FaithFreedom | News FaithFreedom | hadith Muslim from usc.edu |

11. வேதம் என்றால் அதில் என்ன என்ன இருக்கவேண்டும்? வேதம் என்பதின் அளவுகோல் என்ன? இஸ்லாமியர்கள் தான் சொல்லவேண்டும்.

இனி இஸ்லாமியர்கள் தான் ஒரு பட்டியல் இடவேண்டும். வேதம் என்றால், என்ன என்ன இருக்கலாம்? ஒரு "நபி" அல்லது "தீர்க்கதரிசி" என்றால் எப்படி வாழவேண்டும் என்று?

யூதாவை பின்பற்றுங்கள் என்று பைபிளில் எங்கும் சொல்லவில்லை, எந்த சர்சிலும் இதைப் பற்றி பேசினால், யூதா செய்தது தவறு தான் என்றுச் சொல்லி, எல்லா பாஸ்டர்களும் மக்களை எச்சரிப்பார்கள். ஆனால், குர்-ஆன் முகமது செய்தது ஒரு வழிகாட்டி என்றுச் சொல்கிறது அதை மற்றவர்கள் பின்பற்றும்படி வாய்ப்பும் கொடுக்கிறது.

யூதாவை கிறிஸ்தவர்கள் எப்போதோ மறந்துவிட்டார்கள், ஆனால் இஸ்லாமியர்கள் இன்னும் வளர்ப்பு மகன்களை தத்து எடுக்க பயப்படுகிறார்கள்? ஏன் தெரியுமா? மாமனாருக்கு தன் மருமகள் மீது ஆசை வந்துவிடுமோ, அதனால், அவன் விவாகரத்து செய்யவேண்டி வருமோ என்று தான்.

முகமது எத்தனை மனைவிகளை திருமணம் செய்தாலும், யாரை திருமணம் செய்தாலும், கிறிஸ்தவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, இதைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை, ஆனால், இப்படிப் பட்டவர் மூலமாக வந்த புத்தகம், பைபிள் திருத்தப்பட்டது என்றுச் சொல்வதனால் மற்றும் இஸ்லாமியர்கள் பைபிளில் உள்ள நிகழ்ச்சிகளைப் பற்றி தவறாக விமர்சிப்பதனால் தான், நாங்கள் உண்மையை வெளியே சொல்லவேண்டி வருகிறது.

இஸ்லாமியர்களே இதற்கு பதில் சொல்லுங்கள் (முக்கியமாக இது தான் இஸ்லாம் நண்பர் இதற்கு பதில் சொல்லவேண்டும்)

வேதம் என்றால் அளவு கோல் என்ன?

அதில் என்ன என்ன விவரங்கள் இருக்கலாம்?

நபி என்றால் என்ன?

அவரிடம் மனிதர்கள் எதிர்பார்க்கும் குணங்கள் என்ன?

இறைவன் ஒரு மனிதனை நபியாக தெரிந்தெடுக்க அவர் எதிர்பார்க்கும் தகுதிகள் என்ன ?

என்று சொல்வார்களானால், எல்லாருக்கும் பிரயொஜனமாக இருக்கும்.

இதற்கு பதில் சொல்வீர்களானால், பைபிளில் வரும் நபிகள் (தீர்க்கதரிசிகள்), நீங்கள் சொல்லும் தகுதிகளை பெற்று இருக்கிறார்களா இல்லையா என்று நாங்கள் முடிவு செய்கிறோம். மற்றும் நாங்களும், "நபி" என்ற ஒருவருக்கு பைபிள் படி , யேகோவா தேவன் என்ன தகுதிகளை எதிர்பார்த்தார் என்றுச் சொல்கிறோம்.

12. இயேசுவின் வம்ச வரலாறு

யூதாவின் இந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட கி.மு. 1850ல் நடந்ததாகக் கொள்ளலாம். யூதாவிற்கும் இயேசுவிற்கும் தோராயமாக 1850 வருடங்கள் இடைவேளி உள்ளது. ஒரு வம்சத்திர்கு 25 அல்லது 30 வருடங்கள் எடுத்துக்கொண்டாலும், சுமார் 61 வம்சங்கள் உள்ளது (1850/30= 61.67).

இஸ்லாமியர்கள் எனக்கு ஒரு விவரத்தைச் சொல்லுங்கள். யூதா தாமார் நிகழ்ச்சி போன்று ஒரு தவறில் ஒரு மனிதன் பிறக்கிறான். அவன் அல்லாவை நம்பி, அல்லாவின் வழியில் தவறாது வாழ்கிறான். அவனை அல்லா ஏற்றுக்கொள்ளமாட்டாரா?

இன்னும் ஒரு விவரத்தை இஸ்லாமியர்கள் மறந்து போகிறார்கள். உலம மக்கள் எல்லாரும் முகமதுவோடு கூட பிறந்தது சாதாரண கணவன் மனைவி உறவுமுறையில், ஆனால், இயேசு மட்டும் தான் தந்தையில்லாமல் பிறந்தவர். இதை மறுக்கமுடியுமா உங்களால்?

ஒருவன் எவ்வளவு பெரிய தவறு செய்தாலும், அவன் மன்னிப்பு கோரினால், மற்றும் அதன் பிறகு அவன் அப்படிப் பட்ட தவறுகள் செய்யாமல் இருந்தால், அல்லா மன்னிக்க மாட்டாரா? இந்த யுதாவும், தாமாரும் அப்படித்தான் தவறு செய்தார்கள்? பிறகு திருந்தினார்கள்.

இன்று உங்களுடைய மற்றும் இந்தியாவில் உள்ள எல்லா இஸ்லாமியர்களின் மூதாதையர்கள் யார்? விக்கிரகங்களை வணங்கியர்கள் தானே? அதனால் உங்களை அல்லா வெறுத்து தள்ளுவாரா?

இயேசு ஒரு இஸ்ரவேல் வம்சத்தில் பிறந்தவர் என்பதை காட்டவே, பைபிளில் வம்சவரலாறு சேர்க்கப்பட்டுள்ளது. இயேசு இந்த வம்சத்தில் பிறந்தார், அது சரியல்ல என்றுச் சொல்லும் நீங்கள். இயேசுவின் உண்மையான வம்சத்தைச் சொல்லுங்கள் பார்க்கலாம்? உங்களால் அந்த விவரத்தைச் சொல்லமுடியுமா?

13. முடிவுரை

தாவீது இப்படி விபச்சாரம் செய்த போது, அதன் மூலம் பிறந்த குழந்தையை மரிக்கச் செய்த யேகோவா தேவன், ஏன் யூதா மூலமாக பிறந்த இரண்டு பிள்ளைகளை மரிக்கச் செய்யவில்லை?

1.  ஆதாம் முதல் மோசே மூலம் 10 கட்டளைகள் கொடுக்கும் வரை முதல் காலகட்டம்.

2.  மேசேயின் கட்டளைகள் முதல் - இயேசுவரை இரண்டாவது காலக்கட்டம்.

3.  இயேசு முதல் - இன்று வரை மூன்றாவது காலக்கட்டம்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதனிடம் தேவன் எதிர்பார்த்த தகுதிகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.

முதல் காலக்கட்டத்தில் ஒரு குடும்பத்தை (ஆபிரகாம் மற்றும் அவர் வம்சம்) தேவன் தெரிந்தெடுத்தார். இரண்டாம் காலக்கட்டத்தில் ஒரு நாடாக (கானானுக்கு வந்த இஸ்ரவேல் நாடு) மாறினார்கள். எனவே தான்,
பத்து கட்டளைகள் கொடுக்கப்பட்டது, மற்றும் விபச்சாரம் செய்யவேண்டாம் என்ற கட்டளை, செய்தால் தண்டனை.

மூன்றாம் காலக்கட்டம், நாம் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறோம். ஒரு பெண்ணை தவறான கண்ணோட்டத்தில் பார்த்தாலே, அது விபச்சாரம் செய்த பாவத்திற்கு சமம்.


யூதா முதலாம் காலக்கட்டத்திற்கு சம்மந்தப்பட்டவன். அதனால், பாவம் செய்யலாம் என்று நான் சொல்லவரவில்லை. ஆனால், கட்டளை வந்தபிறகு பாவம் செய்பவன் தண்டனையிலிருந்து தப்பமுடியாது என்றுச் சொல்லவருகிறேன், தாவீதைப் போல.

தாவீது இரண்டாம் கால கட்டத்தில் வாழ்ந்தவன். மோசேயின் கட்டளைகள் அனைத்தும் தெரிந்தவன், மட்டுமல்லாமல் ஒரு அரசன், அவனே தவறு செய்தால், தண்டனை கொடுத்தே ஆகவேண்டும். பைபிள் தேவன் குர்-ஆனில் அல்லா போல அல்ல, தவறு செய்தவன் தன் தீர்க்கதரிசியே ஆனாலும், தண்டனை உண்டு.


இனி, நாம் மூன்றாம் காலகட்டம், எங்களிடம் தேவன் எதிர்பார்க்கும் தகுதிகள், குணங்கள் இன்னும் அதிகம். புதிய ஏற்பாட்டின் மற்றும் இயேசுவின் மலைப் பிரசங்கத்தின் முன்பு, எந்த பழைய ஏற்பாட்டு நபரும் நீதிமான் ஆகமுடியாது. எனவே காலகட்டத்தைப் மாற்றி நாம் நல்ல குணங்களை அவர்களிடம் எதிர்பார்க்கமுடியாது, கூடாது.

New International Bible Commentary, Page : 7 சொல்கிறது, "It is anachronistic to judge Joshua or David by the standards of the Sermon on the Mount". ("யோசுவாவையும், தாவீதையும் இயேசுவின் மலைப் பிரசங்க தகுதியோடு (Standard) ஒப்பிடுவது சரியானது அல்ல" )

எனவே, இஸ்லாமியர்கள் இனி ஏதாவது சொல்லவேண்டுமானால், புதிய ஏற்பாட்டில் இயேசுவைப் பற்றிப் பேசுங்கள். அவர் குணங்கள், நடத்தை, அற்புதங்கள், மன்னிக்கும் தன்மை, பொருமை போன்றவற்றைப் பற்றி கேள்வி எழுப்புங்கள். பழைய ஏற்பாட்டு நபர்கள் எங்களுக்கு ஒரு எச்சரிக்கையே தவிர, எங்கள் வாழ்விற்கு அடிப்படை இல்லை. எங்கள் அஸ்திபாரம் இயேசு மற்றும் எங்கள் கோட்பாடுகள் பெரும்பான்மையாக புதிய ஏற்பாட்டிலிருந்து எடுக்கப்படுகிறது.

நீங்கள் பழைய ஏற்பாட்டு நபர் தவறு செய்தானே என்றுச் சொன்னால், நாங்களும் ஆமாம் என்றுச் சொல்லி இன்னும் சிலவிவரங்களை உங்களுக்கு சொல்வோம். அதனால், குர்-ஆன் வேதம் என்றும், முகமது ஒரு நபி என்றும் உங்களுக்கு சாதகமாக நிருபிக்கப்படாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP