சமீபத்திய பதிவுகள்

தேசபக்தி என்ற போற்வையில் தீவிரவாதிகளை உருவாக்கும் இ மு

>> Sunday, April 13, 2008

தேசபக்தி என்ற போற்வையில் தீவிரவாதிகளை உருவாக்கும்  இந்து RSS மதவெறிக்கூட்டங்கள்
 
 
 
தீவிரவாத பயிற்சியில் RSS
 
RSS பென் தீவிரவாதி
 
இவர்களெல்லாம் யார்?
 
 
 

 

இவர் யார்? தேச பக்தரா?
 
தேச பாதுகாப்பில்...
 
 
 
 
இதே போல் நாட்டை துண்டாட இஸ்லாமிய தீவிரவாதிகளின் சதி
 
 

"படை திரட்டும்' மனிதநீதிப் பாசறை: போலீஸார் கவலை

ப. இசக்கி

திருநெல்வேலி, ஏப். 9: தமிழகம் முழுவதும் மனிதநீதிப் பாசறை அமைப்பினர் மேற்கொண்டு வரும் "ராணுவப் பயிற்சியால்' காவல்துறையினர் கவலை அடைந்துள்ளனர்.

பயிற்சியின் நிறைவில், சுதந்திர தின நாளான ஆகஸ்ட் 15-ல் மதுரையில் அணிவகுப்பை நடத்தவும் மனிதநீதிப் பாசறை அமைப்பினர் முடிவு செய்துள்ளதாக காவல்துறையின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.

கோவை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பின்பு "அல்-உம்மா' தீவிரவாத அமைப்பு தடை செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் பரவி இருந்த அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆங்காங்கே வன்முறை மற்றும் வெடிகுண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர கண்காணிப்பால் எஞ்சிய உறுப்பினர்கள் இதர அமைப்புகளில் கலந்து தங்கள் அடையாளத்தை மாற்றிக் கொண்டனர்.

"அல்-உம்மா' அமைப்பு தடை செய்யப்பட்ட பின்பு, வேலைவாய்ப்பற்ற, விரக்தி அடைந்த இஸ்லாமிய இளைஞர்களை திரட்டி ஒருங்கிணைக்கும் வகையில் சில அமைப்புகள் ஆங்காங்கே உருவாகி திரைமறைவில் இயங்கி வருகின்றன.

இந்த சூழ்நிலையில் கடந்த 2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட "மனிதநீதிப் பாசறை' அமைப்பினர், தங்களது வெளிப்படையான செயல்பாடுகளால் தமிழகம் முழுவதும் கிளைகளை உருவாக்கி, நிர்வாகிகளை நியமித்து செயல்பட்டு வருகின்றனர்.

"தீவிரவாதத்தில் உடன்பாடில்லை' என கூறும் இவர்கள், முக்கியமாக மனித உரிமை மீறல்கள், காவல்துறையின் அத்துமீறல்கள் போன்றவற்றுக்கு எதிராக களமிறங்கி பணியாற்றி வருகின்றனர்.

எனினும், இவர்களது நடவடிக்கைகளை உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் காவல்துறையின் சிறப்பு புலனாய்வுப் பிரிவினர், இவர்களுக்கும் தீவிரவாதத்தின் சாயல் இருப்பதாகவே கருதி அவர்களின் ஒவ்வோர் அசைவையும் கண்காணித்து வருகின்றனர்.

சுதந்திர தின அணிவகுப்பு: இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி மதுரையில் சுதந்திர தின அணிவகுப்பை நடத்தும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய இடங்களில் பாசறையை சேர்ந்த இளைஞர்களுக்கு "ராணுவப் பயிற்சி' அளித்து வருவதாக கிடைத்த தகவல் போலீஸôரை கவலைகொள்ளச் செய்துள்ளது.

தென் மாவட்டங்களில் இஸ்லாமிய சமுதாய மக்கள் அதிகம் வசிக்கும் கடையநல்லூர், செங்கோட்டை, ஏர்வாடி, காயல்பட்டினம், திருவிதாங்கோடு, இடலாக்குடி ஆகிய இடங்களில் உள்ள இளைஞர்களை திரட்டி இந்த பயிற்சியை அளித்து வருவதாகக் கூறப்படுகிறது.

நாட்டுக்கு நல்லதல்ல: தமிழ்நாடு முழுவதும் சுமார் 22 ஆயிரம் பேரை உறுப்பினர்களாக கொண்டுள்ள இந்த அமைப்பில், மாவட்டத்திற்கு சுமார் 300 பேர் வீதம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சி பெற்ற இவர்கள் எதிர்காலத்தில் தனிப்படையாக உருவெடுத்தால் அது நாட்டுக்கு நல்லதல்ல. இதை அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்பது சிறப்பு புலனாய்வுப் பிரிவினரின் கருத்து.

இதுகுறித்து மனிதநீதிப் பாசறை அமைப்பின் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகி முகம்மது முபாரக் கூறியதாவது:

""நாம் பெற்ற சுதந்திரமானது, இந்து, முஸ்லிம் என வேற்றுமை இல்லாமல் அனைவரும் ஒன்றுசேர்ந்து பாடுபட்டு பெற்று தந்தது. அந்த சுதந்திர உணர்வை எல்லா மக்களிடமும் எடுத்துச் செல்லும் நோக்கத்தில் சுதந்திர தினத்தன்று எங்கள் இயக்கத்தின் சார்பில் சீருடை அணிவகுப்பை நடத்த உள்ளோம். புதுதில்லியில் ராணுவத்தினர் நடத்துவது மாதிரிதான் இதுவும். அணிவகுப்பு நடத்தப்படும் இடம் இன்னும் முடிவாகவில்லை.

அணிவகுப்பில் பங்கேற்க மாவட்டத்திற்கு சுமார் 50 பேர் வீதம் பயிற்சி அளிக்கப்பட்டு, மொத்தம் சுமார் 1,000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். திருநெல்வேலி மாவட்டத்தில் ஏர்வாடியில் உள்ள எங்களுக்குச் சொந்தமான மைதானத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ரகசியம் ஒன்றும் இல்லை. பயிற்சி குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு எழுத்து மூலம் தகவல் தெரிவித்துள்ளோம்'' என்றார் முபாரக்.

 

நன்றி:தினமணி

 

 

 

 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP