நந்திகிராமில் அட்டூழியம் 3 பெண்களுக்கு சரமாரி அடி-உதை நிர்வாணமாக்கி ஓட ஓட விரட்டி அடித்தனர்
>> Wednesday, May 7, 2008
நந்திகிராமில் அட்டூழியம்
3 பெண்களுக்கு சரமாரி அடி-உதை
நிர்வாணமாக்கி ஓட ஓட விரட்டி அடித்தனர்
நந்திகிராம், மே.7-
மேற்கு வங்காளத்தில் நந்திகிராமில் மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியினர் உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் செய்தனர். அப்போது சிமுல்குண்டு என்ற இடத்தில் பூமி பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த மாலதி தாஸ், கிருஷ்ண தாஸ், துளசி தாஸ் ஆகிய 3 பெண்களின் வீடுகளுக்கு சென்று தேர்தலில் தங்களுக்கே ஓட்டுப் போட வேண்டும் என்று கூறினர். அதற்கு அவர்கள் மறுத்தனர். உடனே கம்ïனிஸ்டு கட்சியினர் அவர்கள் 3 பேரையும் சுற்றி வளைத்து தாக்கியதுடன், நிர்வாணமாக்கி ஓட, ஓட விரட்டினர். அவர்களிடம் இருந்து தப்ப அந்த பெண்கள் 1 கி.மீ. தூரம் நிர்வாணமாக ஓடினர். இந்த சம்பவத்தில் 3 பெண்களும் படுகாயம் அடைந்ததால், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் இந்த சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சி மறுத்துள்ளது. தங்கள் கட்சிக்கு உள்ள நற்பெயரை கெடுக்க எதிர்க்கட்சிகள் சதி செய்வதாக அக்கட்சி கூறி உள்ளது.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=411016&disdate=5/7/2008
0 கருத்துரைகள்:
Post a Comment