சமீபத்திய பதிவுகள்

`செக்ஸ்' சாமியாருக்கு 10 ஆண்டு ஜெயில்: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

>> Saturday, June 14, 2008

சென்னை, ஜுன்.15-

பெண்களின் கற்பை சூறையாடிய `செக்ஸ்' சாமியார் ஒருவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையை சென்னை ஐகோர்ட்டு உறுதி செய்துள்ளது.

தண்டனை பெற்ற செக்ஸ் சாமியார் பட்டு சேலை கட்டி, தலையில் பூ வைத்து பெண் வேடம் போட்டு பெண்களுக்கு நிர்வாண பூஜை நடத்தி, பெண்களின் கற்பையும் சூறையாடியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு பற்றிய விவரம் வருமாறு:-

சென்னை சின்மயா நகரில் வசிப்பவர் சுகன்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது தந்தை பிரபல தொழில் அதிபர் ஆவார். இவரது தாயார் உடல்நிலைக் குறைவால் பாதிக்கப்பட்டார். டாக்டர்களிடம் பார்த்தும் நோய் குணமாகவில்லை. இந்த நேரத்தில் திருச்சி அருகே உள்ள குளித்தலையில் சுரேஷ்வரர் சாமியார் பெண்களுக்குள்ள நோய்களை விசேஷ பூஜை மூலம் குணப்படுத்துகிறார் என்று உறவினர்கள் கூறினார்கள். இதனால், சுகன்யாவின் தாயாரை குளித்தலை சாமியாரிடம் அழைத்து சென்றனர்.

சாமியார் சுரேஷ்வரர் விசேஷ பூஜை நடத்தி சுகன்யாவின் தாயாரை குணப்படுத்தினார். இதனால் சுகன்யாவின் குடும்பத்தினர் ஆனந்தம் அடைந்தனர். சாமியாருக்கு அடிமையானார்கள்.

இந்த நேரத்தில் சாமியார் தனது லீலைகளை தொடங்கினார். சுகன்யாவின் வீட்டில் பரிகார பூஜை நடத்த வேண்டுமென்று கூறினார். இதற்கு சுகன்யாவின் பெற்றோர் சம்மதித்தனர்.

சுரேஷ்வரர் சாமியார் பல்வேறு விசேஷ குணங்களை கொண்டவர். 35 வயது நிரம்பிய அவர் தலையில் நீண்ட கொண்டை வைத்திருப்பார். நெற்றியில் பெரிய பொட்டு வைப்பார். நல்ல உடற்கட்டோடு காணப்படும் அவர், பெண்களை வசியப்படுத்தும் கண்களை கொண்டவர்.

பூஜை செய்யும்போது பட்டுசேலை கட்டி, தலை நிறைய பூ வைத்து பெண் வேடத்தில் காட்சியளிப்பார். இதனால் பெண்களும் பூஜையில் உற்சாகமாக கலந்து கொள்வார்கள்.

சுகன்யாவின் வீட்டிலும் சுரேஷ்வரர் சாமியார் இதுபோல் தான் பெண் வேடம் போட்டு பரிகார பூஜை செய்தார். ஒருமாதம் சுகன்யாவின் வீட்டில் சாமியார் தங்கினார். அப்போது அங்கு தங்கியிருந்த சுகன்யாவின் உறவுக்காரர் சிவக்குமாருடன் பழக்கம் ஏற்பட்டது. சிவக்குமார் பி.காம். பட்டதாரி ஆவார்.

ஒரு மாத காலத்தில் சுரேஷ்வரர் சாமியார் சிவக்குமாருடன் தகாத உறவு கொண்டு பழக ஆரம்பித்தார். பின்னர் சுகன்யா மீது சாமியாரின் கண் பட்டது. சுகன்யா அப்போது 17 வயதுடன் பிளஸ்-2 படித்துக்கொண்டிருந்தார். சுகன்யாவை அனுபவிக்க சாமியார் துடித்தார்.

இதற்காக ஒரு விïகம் வகுத்தார். குறி சொல்வது போல சொல்லி சுகன்யாவுக்கு தோஷம் இருப்பதாகவும், உடனே அவருக்கு சிவக்குமாரை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்றும் சாமியார் கதை விட்டார்.

இதை உண்மை என்று நம்பி சுகன்யாவின் பெற்றோர்கள் சம்மதித்தனர். சுகன்யாவுக்கும், சிவக்குமாருக்கும் திருமணம் நடந்தது. இருவருக்கும் உடனே முதலிரவு நடத்தக்கூடாது என்று சாமியார் நிபந்தனை விதித்தார்.

சுகன்யாவின் கணவர் சிவக்குமாரை மிரட்டி சாமியார் தன் கைக்குள் போட்டுக்கொண்டார். சுகன்யா பெயருக்கு மட்டும் தான் உனக்கு மனைவி. அவளுடைய உண்மையான கணவன் நான் தான். நீ அதை கண்டுகொள்ளக்கூடாது என்று சிவக்குமாரிடம் கூறிவிட்டார். சிவக்குமாரும் இதற்கு சம்மதித்துவிட்டார்.

இருவரும் சேர்ந்து திட்டமிட்டு சுகன்யாவின் முதலிரவை அந்தமானில் நடத்த முடிவு செய்தனர். அதன்படி அந்தமானில் சுகன்யாவை முதலிரவுக்கு அனுப்புங்கள் என்று சாமியார் சொன்னவுடன் சுகன்யாவின் பெற்றோரும் மறுப்பு எதுவும் சொல்லாமல் சம்மதித்தனர்.

உடனே சிவக்குமாரும், சுகன்யாவும் கப்பலில் அந்தமான் சென்றனர். அங்குள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் முதல் இரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிவக்குமாரும், சுகன்யாவும் கப்பலில் அந்தமான் போய் சேருவதற்குள் சுரேஷ்வரர் சாமியார் விமானத்தில் அந்தமான் போய்விட்டார்.

அந்தமானில் சிவக்குமாரை வெளியே நிற்க வைத்துவிட்டு சாமியார், சுகன்யாவுடன் நட்சத்திர ஓட்டலில் முதல் இரவை கொண்டாடினார். சுகன்யா எவ்வளவோ மறுத்தும் கடுமையாக மிரட்டி தனது இச்சைக்கு பணிய வைத்தார்.

திரும்பி வரும்போது கப்பலில் 3 பேரும் சென்னை வந்தார்கள். கப்பலில் வைத்தும் சாமியார், சுகன்யாவோடு காமகளியாட்டம் நடத்தினார். வீட்டுக்கு வந்தவுடன் நடந்த சம்பவங்களை பெற்றோரிடம் சொல்லி சுகன்யா கதறி அழுதார்.

சென்னை வந்து இறங்கியவுடன் சுகன்யாவின் 35 சவரன் நகைகளை எடுத்துக்கொண்டு சாமியார் தப்பி ஓடிவிட்டார். நடந்த விஷயத்தை வெளியில் சொன்னால் எனது மந்திர சக்தியால் உனது பெற்றோரை ரத்தம் கக்கி சாகடிப்பேன் என்று சாமியார் மிரட்டிவிட்டு சென்றார். இருந்தாலும், சுகன்யா துணிச்சலாக சாமியாரின் லீலைகளை போட்டு உடைத்தார்.

சாமியார் சுரேஷ்வரர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் சுகன்யாவின் பெற்றோர் புகார் கொடுத்தனர். கடந்த 2003-ம் ஆண்டு இந்த கொடூர சம்பவம் நடந்தது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து செக்ஸ் சாமியார் சுரேஷ்வரரை கைது செய்தனர்.

அவருக்கு உடந்தையாக செயல்பட்ட சிவக்குமாரும் கைது செய்யப்பட்டார். கற்பழிப்பு, நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல், கொள்ளை போன்ற சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சாமியார் சுரேஷ்வரர், சுகன்யாவை போல பல பெண்களின் கற்பை பரிகார பூஜை நடத்தி சூறையாடியிருக்கிறார் என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

சென்னை மகளிர் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. மகளிர் கோர்ட்டில் சாமியார் சுரேஷ்வரருக்கும், சிவக்குமாருக்கும் தலா 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் இருவரும் அப்பீல் செய்தனர். சென்னை மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் உமாபதி இந்த வழக்கை நடத்தி வந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, மகளிர் கோர்ட்டு விதித்த தண்டனையை உறுதி செய்தது. சாமியார் சுரேஷ்வரருக்கும், சிவக்குமாருக்கும் தலா 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை உறுதி செய்யப்பட்டது. தற்போது ஜாமீனில் உள்ள அவர்கள் இருவரும் மீண்டும் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.
 
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP