சமீபத்திய பதிவுகள்

வங்காளதேசத்தில் 7 தீவிரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை

>> Thursday, July 31, 2008


வங்காளதேசத்தில் 7 தீவிரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை


டாக்கா, ஆக.1-

வங்காளதேசத்தில் கடந்த 2005-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி தொடர்குண்டு வெடிப்புகள் நடந்தன. இது தொடர்பாக பரிசால் டிவிஷனல் அதிவேக விசாரணை கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் 7 தீவிரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் 7 பேரும் தலைமறைவாக உள்ளனர். இந்த 7 பேரும் தடை செய்யப்பட்ட ஜமாத்துல் முஜாகிதீன் வங்காளதேசம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்த அமைப்பு கடந்த 2000 முதல் 2005-ம் ஆண்டு வரையான காலகட்டத்தில் நடந்த குண்டு வெடிப்புகளில் 200 பேர் பலியானார்கள். இந்த அமைப்பின் தலைவர் ஷேக் அப்துர் ரகிமான் மற்றும் துணைத்தலைவர் சித்திக்குல் இஸ்லாம் என்கிற பங்களா பாய் ஆகியோர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 29-ந்தேதி தூக்கிலிடப்பட்டனர். இதனால் அந்த அமைப்புக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த அமைப்பைச் சேர்ந்த 27 தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் 350 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=429229&disdate=8/1/2008

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP