சமீபத்திய பதிவுகள்

இண்டர்நெட் மையங்களை மூட உத்தரவு

>> Thursday, July 31, 2008


பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் தலீபான்கள் மிரட்டல்
இண்டர்நெட் மையங்களை மூட உத்தரவு


இஸ்லாமாபாத், ஆக.1-

பாகிஸ்தானின் பழங்குடி இனமக்கள் வசிக்கும் பகுதியில் செல்வாக்கு செலுத்தி வந்த தலீபான், அல்கொய்தா தீவிரவாதிகள், இப்போது வளம் கொழிக்கும் பஞ்சாப் மாநிலத்திலும் அதிகாரம் செலுத்த முற்பட்டு உள்ளனர். அவர்கள் இண்டர்நெட் மையங்களை மூடும்படியும், கேபிள் டி.வி. ஒளிபரப்புகளை நிறுத்தும்படியும், இசை தட்டுக்கள் மற்றும் சி.டி.க்களை விற்கும் கடைகளை மூடும்படியும் மிரட்டல் விடுத்து உள்ளனர். பர்தா அணியாத பெண்களின் முகங்கள் மீது அமிலத்தை வீசப்போவதாகவும் அவர்கள் மிரட்டல் விடுத்து உள்ளனர். இதற்கு 15 நாள் அவகாசம் கொடுத்து உள்ளனர்.

முசாபர்கர் நகரில் உள்ள 36 இண்டர்நெட் மையங்களுக்கும், மியுசிக் சி.டி.கடைகளுக்கும் கடந்த 18-ந்தேதி மிரட்டல் இ.மெயில்களும் கடிதங்களும் வந்து உள்ளன என்று போலீஸ் தெரிவித்து உள்ளது.

இதுபோல கோட் அட்டு நகரில் உள்ள இண்டர்நெட் மையங்களுக்கு கடந்த 29-ந்தேதி மிரட்டல் கடிதங்கள் வந்து உள்ளன. அவர்கள் தங்களின் வர்த்தகத்தை மூடிவிட்டு இஸ்லாமிய நெறிக்கு உட்பட்ட வர்த்தகத்தை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.

 

 http://www.dailythanthi.com/article.asp?NewsID=429224&disdate=8/1/2008

StumbleUpon.com Read more...

வங்காளதேசத்தில் 7 தீவிரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை


வங்காளதேசத்தில் 7 தீவிரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை


டாக்கா, ஆக.1-

வங்காளதேசத்தில் கடந்த 2005-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி தொடர்குண்டு வெடிப்புகள் நடந்தன. இது தொடர்பாக பரிசால் டிவிஷனல் அதிவேக விசாரணை கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் 7 தீவிரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் 7 பேரும் தலைமறைவாக உள்ளனர். இந்த 7 பேரும் தடை செய்யப்பட்ட ஜமாத்துல் முஜாகிதீன் வங்காளதேசம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்த அமைப்பு கடந்த 2000 முதல் 2005-ம் ஆண்டு வரையான காலகட்டத்தில் நடந்த குண்டு வெடிப்புகளில் 200 பேர் பலியானார்கள். இந்த அமைப்பின் தலைவர் ஷேக் அப்துர் ரகிமான் மற்றும் துணைத்தலைவர் சித்திக்குல் இஸ்லாம் என்கிற பங்களா பாய் ஆகியோர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 29-ந்தேதி தூக்கிலிடப்பட்டனர். இதனால் அந்த அமைப்புக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த அமைப்பைச் சேர்ந்த 27 தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் 350 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=429229&disdate=8/1/2008

StumbleUpon.com Read more...

சவுதி அரேபியாவில், நாய், பூனை வளர்க்க தடை


சவுதி அரேபியாவில், நாய், பூனை வளர்க்க தடை


சவுதி அரேபியாவில் நாய், பூனை விற்பதற்கும், அவற்றை பொது இடங்களுக்கு கொண்டு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. ரியாத் கவர்னர் இளவரசர் சட்டாம் இப்படி ஒரு தடையை விதித்து ஒரு உத்தரவை பிறப்பித்து இருக்கிறார். மார்க்க அறிஞர்கள் கவுன்சில் கொடுத்த உத்தரவுக்கு இணங்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு ஒழுக்க விதிகளை மேம்படுத்தும் கமிஷன் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

இறைத்தூதர் நபிகள் நாயகம் கூறிய அறிவுரையின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக இந்த கமிஷன் தலைவர் அகமது அல் கம்தி தெரிவித்தார். வீட்டுக்குள் நாய்களை வைத்துக்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

வேட்டைக்காகவும், போலீஸ் வேலைக்காகவும், வீடுகளை காவல் காக்கவும், ஆடு, மாடுகளை விவசாயிகள் பாதுகாக்கவும் நாய்கள் வளர்க்கலாம் என்று விலக்கும் அளிக்கப்பட்டு உள்ளது.

 

 http://www.dailythanthi.com/article.asp?NewsID=429223&disdate=8/1/2008

StumbleUpon.com Read more...

எங்களைத் தீவிரவாதியாக மாற்றியது இஸ்லாமிய அமைப்புகள்தான்!-முஸ்லீம் தீவிரவாதியின் அதிரடி பேட்டி

 
03.08.08      ஹாட் டாபிக் 
 

வெடிகுண்டுகள் வெடித்து அதனால் சிதறிய ரத்தம் காயும் முன் நெல்லையில்  சேக் அப்துல் கபூர் என்பவரை அமுக்கியிருக்கிறார்கள் போலீஸார். அதேபோல சென்னை மண்ணடியில் `இறைவன் ஒருவனே' என்ற இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த அப்துல்காதர், ஹீரா ஆகியோரை போலீஸாரை  விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தனர். அந்த அமைப்பின் முக்கிய நிர்வாகிகளான தவ்ஃபீக், அபுதாகீர் ஆகியோர் தலைமறைவாக இருப்பதால் அவர்களை போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், `பெங்களூரு, குஜராத் குண்டு வெடிப்புகளில்கூட தப்பியோடிய இந்த இருவருக்கும் தொடர்பிருக்கலாம்' என்ற சந்தேகத்தின்அடிப்படையில் போலீஸார்  வலைவீசித் தேடி வந்தனர்.  போலீஸாரின் பிடியில் சிக்கிய அப்துல்காதரின் தாயார் பசீராவை நாம் மண்ணடியில்சந்தித்துப் பேசினோம்.

"காதர்தான் எனக்கு மூத்த பையன். துணிக்கடை வைத்து நல்லபடியாகத் தொழில் நடத்தி வந்தான். அந்தக் கடைக்கு போலீஸ் தேடும் தீவிரவாதிகளில் ஒருவரான தவ்ஃபீக் அடிக்கடி வருவார். என் மகனும் அவரோடு அடிக்கடி பேசுவானே தவிர, மற்றபடி அவனுக்கு  எந்தவித சம்பந்தமுமில்லை. முன்பு ஒருமுறை தவ்ஃபீக்கை தேடி போலீஸார் என் வீட்டுக்கு வந்து அப்துல்காதரைக் கைது செய்தனர். மறுநாள் பேப்பர் பார்க்கும்போது, `என் மகனைத் தீவிரவாதி' என்றும், லாட்ஜில் சதி வேலை செய்யும்போது அவனைப் பிடித்ததாகவும் தகவல் வெளியானது. நான் அதிர்ந்துபோனேன்.

அவனுக்கு ஒசாமா பின்லேடனுடன் தொடர்பு, விடுதலைப்புலிகளுடன் தொடர்பு என்றெல்லாம் கோர்ட்டில் சொன்னார்கள். பிறகு ஜாமீன் கிடைத்து, போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்தவனை, மீண்டும் கூட்டிப் போய்விட்டனர். கேட்டால் எந்த பதிலும் கிடைக்கவில்லை. தேவையில்லாமல் என் மகனைத் தீவிரவாதியாக மாற்றிவிட்டனர்'' என்ற பசீரா, உயர்நீதிமன்றத்தில் காதரை மீட்க ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். ஆனால், கோர்ட்டில் வழக்கு வரவிருந்த சிறிது நேரத்திலேயே காதரை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர் போலீஸார்.

பயங்கரவாத அமைப்புகளோடு தொடர்புடைய `தவ்ஃபீக்கும், அபுதாகீரும் எந்நேரமும் கைது செய்யப்படலாம்' என்ற தகவல் பரவியதால், மீடியாக்கள் கமிஷனர் அலுவலகத்திலேயே குவிந்து கிடந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக தலைமறைவு வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் அபுதாகீர் கோர்ட்டில் சரணடையப் போவதாகத் தகவல் பரவ, மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. கோர்ட்டில் சரணடையச் செல்வதற்கு முன்பு நாம் அபுதாகீரை, அவரது வக்கீல் ரஜினிகாந்த் உதவியோடு மண்ணடியில் சந்தித்துப் பேசினோம்.

"என்ன சொல்வதென்றே தெரியவில்லை! இந்த இரண்டு மாதத்தில் போலீஸார் என்னை `லஸ்கர் இ தொய்பா தீவிரவாதியாகவே மாற்றிவிட்டனர். மண்ணடியில் கார்மெண்ட் எக்ஸ்போர்ட் நிறுவனத்தை நடத்தி வந்தேன். ஒரு வருடத்திற்கு முன்புதான் `இறைவன் ஒருவனே' தவ்ஃபீக் எனக்கு அறிமுகம் ஆனார். அவரது பேச்சுக்களால் கவரப்பட்டு நெருங்கிப் பழக ஆரம்பித்தேன். ஒருநாள், அப்துல்காதர் என்னிடம், போலீஸ் தேடி வருவதாகச் சொன்னார். மறுநாள், `இந்து மதத் தலைவர்களைக் கொல்ல திட்டமிட்டிருப்பதாகவும், குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தொடர்பிருப்பதாகவும், லாட்ஜில் சதித்திட்டம் போட்டதாகவும், நானும் தவ்ஃபீக்கும் தப்பியோடிவிட்டதாக' தகவல் வெளியானது. ஆனால், லாட்ஜில் பழனி உமர் மட்டும்தான் தங்கியிருந்தான். ஹீராவை எக்மோர் ரயில் நிலையத்தில் கைது செய்தனர். அப்போது அவரிடம் இரண்டு வேட்டிகள்தான் இருந்தன. ஆனால், வெடிகுண்டு, துப்பாக்கி இருந்ததாகப் போலீஸ் சொன்னது.

மரபுரீதியாக நாங்கள் பேசிய பல பேச்சுக்கள் சில இஸ்லாமிய அமைப்புகளுக்குப் பிடிக்கவில்லை. அதோடு எங்கள் அமைப்புக்கு ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்தோடு வருவதும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. நாங்கள் தீவிரவாதியாக சித்திரிக்கப்பட்டதற்கு இதுதான் ஒரே காரணம். தவ்ஃபீக் மற்றும் எங்களில் சிலரை ஒழித்துக்கட்டினால்தான் நிம்மதி என்று அவர்கள் செயல்பட்டார்கள். கடந்த ஜனவரி 11_ம்தேதி நரேந்திரமோடி வந்ததற்கு, எங்களைக் கொடி பிடித்து போலீஸாரே எதிர்ப்பு காட்டச் சொன்னார்கள். நாங்கள் மறுத்ததும், பாதுகாப்புக் கைது என்ற பெயரில் பதினேழு நாட்கள் சிறையில் அடைத்தனர். இதற்கு அந்த அமைப்புகளின் தூண்டுதல்தான் காரணம்.

ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பிக்கு பின்புதான், என் மீது சதித்திட்டம்,  நாச வேலைக்கு திட்டமிட்டது என்ற ரீதியில் வழக்குகள் போடப்பட்டன. அதற்கு முன்பு என் மீது ஓர் அடிதடி வழக்குகூட கிடையாது. தவ்ஃபீக் இன்னமும் தலைமறைவாகத்தான் இருக்கிறார். அவர் வெளியில் வந்தால் போலீஸார் சுட்டுக் கொன்று விடுவார்கள். காரணம். ஒருமுறை போலீஸார் தவ்ஃபீக்கை என்கவுன்டரில் சுடப் போகும் தகவலைக் கேள்விப்பட்ட அவர் ஆவேசமாகி, `என்னை  எப்படிக் கொல்கிறார்களோ, அதேபாணியில்தான் அவர்களுக்கும் மரணம் நேரும்' என்றார். இது போலீஸாருக்கு அதீத கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.   

வேலூர் கோட்டையில் உள்ள மசூதி தொடர்பாக பிரச்னை வந்தபோது, `மசூதியை இடித்தால் எங்கள் கைகள் சும்மா இருக்காது' என இந்து முன்னணிப் பிரமுகர் ஒருவரை குறிவைத்து பேசினோம். உடனே `ராம.கோபாலன் உயிருக்குக் குறி' என்றார்கள். ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பில் எங்களுக்குத் தொடர்பு என்றதால் தலைமறைவாக இருந்தோம். இப்போது குஜராத் குண்டுவெடிப்பிற்கும் எங்களைக் கைகாட்டுகின்றனர். நாங்கள் வன்முறைப் பாதையை விரும்பவில்லை. அமைதியான வழியில்தான் இயக்க வேலைகளைச் செய்து வந்தோம்.

இரண்டு மாதமாக தலைமறைவாக இ,ருக்கிறேன். என் அலுவலகத்திற்கும் போலீஸார் சீல் வைத்துவிட்டனர். என் அப்பாவை அடிக்கடி விசாரணைக்கு அழைப்பது, என் தங்கையை நடுரோட்டில் வைத்து விசாரிப்பது என போலீஸார் செய்யும் கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அல்லாவை மட்டும்தான் நான் நம்புகிறேன். கோர்ட்டில் சரண்டரான பிறகு எனக்கு எது வேண்டுமானாலும் நேரலாம். இருப்பினும் கடவுள் மீது பாரத்தைப் போட்டுவிட்டு நடப்பதை முழுமையாக எதிர்கொள்ளவே இங்கே வந்திருக்கிறேன்'' என்றபடியே எழும்பூர் நீதிமன்றத்தில் சரண்டராக விரைந்தார் அபுதாகீர்.

நீதிமன்றத்திற்குள் அபுதாகீர்  நுழைந்தபோது, போலீஸார், மீடியாக்கள் என ஒரு பெரும்படையே அங்கே திரண்டிருந்தது. அபுதாகீரை `பதினைந்து நாட்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்புமாறு' நீதிபதி முருகானந்தம் உத்தரவிட, புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் அபுதாகீர்.

இறுதியாக, வழக்கை விசாரித்து வரும் போலீஸ் அதிகாரிகளிடம் பேசினோம். "தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தை அடுத்து, பயங்கரவாத அமைப்புகளோடு தொடர்புடையவர்களை அழைத்து விசாரித்து வருகிறோம். அப்துல்காதரை விடுவித்துவிட்டோம். ஹீரா என்பவரை விசாரிக்க நெல்லை போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர். அபுதாகீரை விரைவில் கஸ்டடியில் எடுத்து விசாரிப்போம். இந்து மதத் தலைவர்களைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியது உள்பட சில வழக்குகள் அவர் மீது இருக்கிறன. விசாரணை முடிவில் பயங்கரவாத அமைப்புகளோடு இவர்களுக்கு உள்ள தொடர்புகள் வெளியில் தெரியவரும்'' என்றனர் அவர்கள்.

படங்கள்: ஞானமணி
ஸீ ஆ. விஜயானந்த்

http://www.kumudam.com Reporter

StumbleUpon.com Read more...

பாகிஸ்தானில் 40 அல் கய்டா பய‌ங்கரவா‌திக‌ள் கைது!

>> Wednesday, July 30, 2008

 
பாகிஸ்தானில் 40 அல் கய்டா பய‌ங்கரவா‌திக‌ள் கைது!  
பாகிஸ்தானின் ஹங்கு, பாரா மாவட்டங்களில் நடந்தேடுதல் வேட்டையில், அலகய்டா அமைப்பைச் சேர்ந்த 40 பய‌ங்கரவா‌திக‌ள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமரின் அரசியல் ஆலோசகர் ரெஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தி டெய்லி டைம்ஸ் நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், அல்கய்டா தீவிரவாத அமைப்பின் அஜ்மத், ரஃபி ஆகியோர் உட்பட 40 பய‌ங்கரவாதிகளை கைது செய்யும் பணியில் 17 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டார்.

பஞ்சாப், சிந்து மாகாணங்களில் தற்கொலைத் தாக்குதல் கட்டுக்குள் வந்துள்ளதாகவும், வடமேற்கு எல்லப்புற மாகாண பகுதியில் இது 80 விழுக்காடு வரை கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்துள்ளார்.

அரசு கட்டுப்பாட்டில் உள்ள பழங்குடியினப் பகுதியில் நிலவும் பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காணவே தமது அரசு விரும்புவதாகவும் ரெஹ்மான் மாலிக் கூறியுள்ளார்.
http://tamil.webdunia.com/newsworld/news/international/0807/26/1080726057_1.htm

StumbleUpon.com Read more...

இல‌ங்கை‌‌யி‌ல் கடு‌ம் மோத‌ல்: 5 படை‌யின‌ர் ப‌லி!

எடுக்க
 
இல‌ங்கை‌‌யி‌ல் கடு‌ம் மோத‌ல்: 5 படை‌யின‌ர் ப‌லி! 
இல‌ங்கை‌யி‌லத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிகளு‌க்கு‌ம் ‌சி‌றில‌ங்க‌பபடை‌யினரு‌க்கு‌மஇடை‌யி‌லநட‌ந்கடு‌மமோத‌லி‌ல் 5 படை‌யின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன் 7 படை‌யின‌ரபடுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

வவு‌னியமாவ‌ட்ட‌‌த்‌தி‌லஉ‌ள்பாலமோ‌ட்டவ‌ழியாத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளி‌ன் ‌நிலைக‌ளி‌ன் ‌மீது ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ரதா‌க்குத‌லநட‌த்‌தியு‌ள்ளன‌ர்.

படை‌யின‌ரி‌னஇ‌ந்மு‌ன்நக‌ர்வமு‌ய‌ற்‌சி‌க்கஎ‌திராக ‌விடுதலை‌பபு‌லிக‌ள் ‌தீ‌விமு‌றிடி‌ப்பு‌ததா‌க்குத‌லநட‌த்‌தியு‌ள்ளன‌ர். இ‌ர‌ண்டதர‌ப்‌பி‌ற்கு‌மஇடை‌யி‌லநட‌ந்கடு‌மமோத‌லி‌ல் 5 படை‌யின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன் 7 படை‌யின‌ரகாயமடை‌ந்து‌ள்ளன‌ரஎ‌ன்றபு‌தின‌மஇணைதள‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.
http://tamil.webdunia.com/newsworld/news/international/0807/28/1080728080_1.htm

StumbleUpon.com Read more...

தீவிரவாதிகளின் அடுத்த குறி மும்பையா?-மிரட்டல் இ-மெயிலில் இருந்த திடுக்கிடும் தகவல்கள்

>> Sunday, July 27, 2008

தீவிரவாதிகளின் அடுத்த குறி மும்பையா?-மிரட்டல் இ-மெயிலில் இருந்த திடுக்கிடும் தகவல்கள் 

மும்பை, ஜுலை. 28-

தீவிரவாதிகளின் அடுத்த குறி மும்பையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள். இதுதொடர்பாக வந்த மிரட்டல் இ-மெயிலில் திடுக்கிடும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

கடந்த 25-ந் தேதி பெங்களூரில் அடுத்தடுத்து 8 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் ஒரு பெண் பலியானார். பலர் காயம் அடைந்தனர்.

பெங்களூர் குண்டு வெடிப்பை தொடர்ந்து நேற்று முன்தினம் குஜராத் தலைநகர் ஆமதாபாத்தில் சங்கிலி தொடர் குண்டுகள் வெடித்தன. இதில் 45 பேர் பலியானார்கள். 140-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

ஆமதாபாத் குண்டு வெடிப்புக்கு `இந்தியன் முஜாகிதீன்' என்ற தீவிரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. இது, சிமி மற்றும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கங்கள் இணைந்த அமைப்பு ஆகும். இந்த தீவிரவாத இயக்கம், 14 பக்க இ-மெயில் ஒன்றை பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. அதில் திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மராட்டிய மாநிலத்தில் சிறுபான்மை மக்கள் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள். இது நிறுத்தப்படாவிட்டால், மராட்டிய முதல்-மந்திரி விலாஸ்ராவ் தேஷ்முக்கும், துணை முதல்-மந்திரி ஆர்.ஆர்.பட்டீலும் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். கடந்த 2006-ம் ஆண்டு ஜுலை 11-ந் தேதி நடந்த குண்டு வெடிப்புகளை அவர்கள் அதற்குள் மறந்து விட்டார்களா?

சிறுபான்மை மக்கள், ராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகத்தினர் நடத்திய போராட்டத்தை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். குறைந்த மக்கள் தொகை கொண்ட குஜ்ஜார்களே, பலத்தை காட்டி, தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ளும்போது, நாம் அதை விட அதிகமாக பலத்தை காட்டி அரசாங்கத்தை பணிய வைக்க வேண்டாமா?

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, மும்பையில் மாளிகை கட்ட திட்டமிட்டுள்ள இடம், வக்பு வாரியத்துக்கு சொந்தமானது. எனவே, மாளிகை கட்டுவதற்கு முன்பு, முகேஷ் அம்பானி, ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர் மறக்க முடியாத பயங்கர அனுபவமாக அது மாறிவிடும்.

உத்தரபிரதேச பார் கவுன்சில் வக்கீல்கள் முஸ்லிம்களின் வழக்குகளில் ஆஜராக மறுக்கிறார்கள். எனவே, உத்தரபிரதேச பார் கவுன்சிலையும் எச்சரிக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மிரட்டல் இ-மெயிலின் அடிப்படையில் பார்க்கும்போது, சதிகார தீவிரவாதிகளின் அடுத்த இலக்கு மும்பையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.

மும்பையில் உள்ள பங்கு சந்தை கட்டிடம், சித்திவிநாயகர் கோவில், மந்திராலயம், மும்பை மாநகராட்சி கட்டிடம் மற்றும் பெரிய கட்டிடங்களில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இதைத் தொடர்ந்து இந்த இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இ-மெயிலில் குறிப்பிடப்பட்டுள்ள மராட்டிய முதல்-மந்திரி,
துணை முதல்-மந்திரி, முகேஷ் அம்பானி ஆகியோருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் விசேஷ பாதுகாப்பில் உள்ள மிக மிக முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பை அதிகரிக்க, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
 

StumbleUpon.com Read more...

குண்டு வெடிப்புக்கு முன் மும்பையில் இருந்து வந்தஇ-மெயில் மிரட்டல்: முடிந்தால் குண்டு வெடிப்பை தடுத்து பாருங்கள்

குண்டு வெடிப்புக்கு முன் மும்பையில் இருந்து வந்தஇ-மெயில் மிரட்டல்: முடிந்தால் குண்டு வெடிப்பை தடுத்து பாருங்கள்

ஆமதாபாத்,ஜுலை. 27-

கோத்ரா சம்பவத்துக்கு பழிக்கு பழிவாங்குவோம், முடிந்தால் அதை தடுத்து பாருங்கள் என்று தீவிர வாதிகளிடம் இருந்து இ மெயிலில் மிரட்டல் வந்தது. மும்பையில் இருந்து இந்த மிரட்டல் வந்ததாக தெரிய வந்துள்ளது.

ஆமதாபாத்தில் 14 இடங் களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு நடப்பதற்கு முன் தீவிரவாதிகளிடம் இருந்து 10 நிமிடங்களுக்கு முன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு
அந்த மிரட்டல் வந்துள்ளது. டெலிவிஷனுக்கும் இந்த மிரட்டல் அனுப்பப் பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டு இருந்த தாவது:-

இன்னும் 5 நிமிடங்கள் காத்திருங்கள் மரணத்தின் பயங்கரத்தை உணரப் போகிறீர்கள்.

புனித போர் (ஜிகாத்) மீண்டும் தொடங்கி விட்டது. குஜராத்தில் கோத்ரா சம்பவத் துக்கு பழிவாங்கப் போகிறோம் இந்தியாவில் உள்ள முஜாகதீன்களும், பிடாயின்களும் தயாராகி விட்டனர். முடிந்தால் அவர் களை தடுத்துப் பாருங்கள் புனித போரின் பயங்கரம் என்ன என்பதை உணரப் போகிறீர்கள்.

மத்திய பிரதேசம், மராட்டியம், ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் விரைவில் குண்டுகள் வெடிக்கும்.

குஜராத் முதல் மந்திரி நரேந்தர மோடிக்கு பாடம் கற்பிப்போம். நரேந்திர மோடியே உங்கள் மாநிலத்திலேயே நாங்கள் தாக்குதல் நடத்துகிறோம் பாருங்கள்.

இவ்வாறு அந்த மிரட்டல் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மிரட்டல் கடிதத்தின் முன் பகுதியில் 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவர படமும் இருந்தது.

ஆமதாபாத் குண்டு வெடிப்புக்கு நாங்கள் தான் பொறுப்பு ஏற்கிறோம் என்றும் கூறியுள்ள அந்த கடிதத்தில் அல்அர்பி, குரு அல் ஹிந்தி என்று கையெழுத்து போடப்பட்டுள்ளது.

இந்த இ மெயில் மும்பை யில் இருந்து வந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. நீத் ஹேவுட், சி.1503-1504, கினியா சி.எச்.எஸ்.பிளாட், செக்டார் 2, 3, 16-ஏ, சம்பாடா, மும்பை என்ற முகவரி இருந்தது.

மும்பையில் உள்ள ஒரு வாடகை வீட்டில்தான் மிரட்டல் கடிதத்தை அனுப் பியவன் தங்கி இருந்ததாக தெரிகிறது.
 

StumbleUpon.com Read more...

ஆமதாபாத்தில் 45 பேர் பலி வெடிகுண்டு வைத்ததாக தீவிரவாதி, டெல்லியில் கைது இஸ்லாமிய மாணவர் இயக்கத்தை சேர்ந்தவர்


புதுடெல்லி, ஜுலை.28-

45 பேரை பலிகொண்ட ஆமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக, இஸ்லாமிய மாணவர் இயக்க தீவிரவாதி ஒருவர் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரை தொடர்ந்து, நேற்று முன்தினம் குஜராத் மாநிலம் ஆமதாபாத் சங்கிலி தொடர் குண்டு வெடிப்பில் 45 பேர் பலியானார்கள்.

டெல்லியில் கைது

குஜராத் போலீசார் நடத்திய விசாரணையில், இஸ்லாமிய மாணவர் இயக்க (சிமி) தீவிரவாதி அப்துல் ஹலீம் என்பவருக்கு இந்த குண்டு வெடிப்பில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. 2002-ம் ஆண்டில் நடைபெற்ற குஜராத் கலவரத்தில் தொடர்புடைய ஹலீம், டெல்லியில் தலைமறைவாக இருந்து வந்தார்.

ஆமதாபாத் குண்டுவெடிப்பை தொடர்ந்து, குஜராத் போலீசார் டெல்லி போலீசாருடன் தொடர்பு கொண்டு ஹலீமுக்கு வலை விரித்தனர். போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், டெல்லி நகரின் இதயப் பகுதியான டேனி லிம்டாவில் பதுங்கி இருந்தபோது ஹலீம் பிடிபட்டார்.

ஹலீம் கைதான தகவலை ஆமதாபாத் இணை போலீஸ் கமிஷனர் ஆஷிஸ் பாட்டியா உறுதி செய்தார். ஆமதாபாத் குண்டுவெடிப்பு தொடர்பாக முதலில் கைதானது இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இளைஞர்களுக்கு பயிற்சி

குஜராத் கலவரத்தை தொடர்ந்து, அகதிகள் முகாமில் தங்கி இருந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் ஹலீம் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். அந்த குடும்பங்களை சேர்ந்த ஆவேசமான இளைஞர்களை திரட்டி உத்தரப்பிரதேசத்துக்கு அழைத்துச்சென்ற ஹலீம், பின்னர் அவர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி தீவிரவாத பயிற்சி பெற ஏற்பாடு செய்தார்.

அந்த இளைஞர்கள் மூலம் நாடு முழுவதிலும் பல்வேறு இடங்களில் நாச வேலைகளை மேற்கொள்வதற்கான திட்டம் தீட்டியதில் முக்கிய பங்கு வகித்தவர், அப்துல் ஹலீம் என்று குஜராத் போலீசார் தெரிவித்தனர். தற்போது போலீசாரின் பிடியில் சிக்கிய ஹலீமிடம் ஆமதாபாத் குண்டு வெடிப்பு பற்றி தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

 


 http://www.dailythanthi.com/article.asp?NewsID=428240&disdate=7/28/2008

StumbleUpon.com Read more...

பாலஸ்தீன குழந்தைகள் டெலிவிஷன் நிகழ்ச்சி




StumbleUpon.com Read more...

தொடர் குண்டு வெடிப்பு : அமெரிக்கா கடும் கண்டனம்!

தொடர் குண்டு வெடிப்பு : அமெரிக்கா கடும் கண்டனம்!  
நேற்று முன்தினம் பெங்களூருவிலும், நேற்று அகமதபாத்திலும் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது!

கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூருவில் 9 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இ‌தி‌லஇருவ‌ரகொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 16 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 45 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இதுகுறித்து அமெரிக்க தூதரகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அ‌ர்‌த்தம‌ற்ற, மோசமான இந்த தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகவும், இதில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துள் கொள்வதாகக் கூறப்பட்டுள்ளது.
http://tamil.webdunia.com/newsworld/news/international/0807/27/1080727004_1.htm

StumbleUpon.com Read more...

குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)

குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)





குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2


குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
 


முன்னுரை: இயேசுவின் பிறப்பு சம்மந்தப்பட்ட குர்‍ஆனின் வசனங்கள் பற்றி நாம் சிந்தித்துக்கொண்டு வந்துக்கொண்டு இருக்கிறோம். குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 1ஐ தொடர்ந்து, இப்போது இரண்டாம் பாகமாக, அல்லா செய்த ஒரு சரித்திர தவறை காணப்போகிறோம்.


குர்‍ஆன் 19:7ல் அல்லா சொல்கிறார்:


 
குர்‍ஆன் 19:7


'ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை" (என்று இறைவன் கூறினான்).


யஹ்யா ( யோவான் or John ) என்ற பெயர் கொண்ட நபர்களை அல்லா, யோவான் ஸ்நானனுக்கு முன்பு ஒருவரையும் உருவாக்கவில்லையாம். அதாவது, யோவான் என்ற பெயர் கொண்ட ஒருவரும் யோவானுக்கு முன்பு வாழவில்லையாம். இப்படி அல்லா சொல்வதினால், அவருக்கு சரித்திரம் பற்றிய‌ விவரம் தெரியவில்லை என்று புலனாகிறது. சரித்திரத்தை நாம் புரட்டிப்பார்த்தாலும், மற்றும் பைபிளின் பழையை ஏற்பாட்டை புரட்டிப்பார்த்தாலும், யோவான் (John) என்ற பெயர் கொண்டவர்கள் அனேகர் இருப்பதாக நாம் கண்டுக்கொள்ளமுடியும். குர்‍ஆனில் உள்ள பல பிழைகளில் இதுவும் ஒன்று.

சரித்திரத்தில் யோவான்(JOHN) பெயர்களைக் கொண்ட நபர்கள்


1) ஜான் ஹிர்கானஸ் John Hyrcanus (Yohanan Girhan):

இவர் கி.மு. 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த "ஹாஸ்மொனியன்" நாட்டு அரச‌னாவார். ஆட்சிகாலம் கி.மு. 134 - 104, மரித்த ஆண்டு : கி.மு. 104. மேலும் விவரங்களுக்கு : பார்க்க John Hyrcanus - Wikipedia | John Hyrcanus-Brittanica | John Hyrcanus - Jewish Encyclopedia

2) "ஜான்" எஸ்ஸன் - John Essenes:

ஒரு கலகம் செய்த குழுவிற்கு தலைவராக இருந்த "ஜான்" எஸ்ஸன் என்வரைப்பற்றி ஜொஸெபாஸ் சொல்கிறார். "ஜான்" எஸ்ஸன் கி.மு. வில் வாழ்ந்தவர். பார்க்க: "ஜான்" எஸ்ஸன் - John Essenes

3) 1 மக்காபீஸ் 2:1

மக்காபீஸ் என்ற நூல் ( கி.மு 100) சொல்கிறது. மத்ததியாஸ் "ஜானின்" மகன், ஜான் சிமியோனின் மகன். மற்றும் அதிகாரம் 2 வசனம் 2 சொல்கிறது, மத்ததியாஸுக்கு "ஜான்" என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான் என்று. பார்க்க : 1 மக்காபீஸ் 2:1 :
மற்றும் 1 மக்காபீஸ் 16:19 ல் கூட ஒரு முறை "ஜான்" என்ற ஒருவரைப்பற்றி சொல்கிறது. பார்க்க : 1 மக்காபீஸ் 16:19

மேல் சொல்லப்பட்ட எல்லா "ஜான்" களும் , பைபிளின் யோவான் ஸ்நானகனுக்கு முன் வாழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



யோவானுக்கு முன்பு யோவான் என்ற பெயர் கொண்ட பழைய ஏற்பாட்டு நபர்கள்:

இந்தப்பெயர் "யோகனான்"(எபிரேய மொழியில்-"யோகனான்") என்று பல முறை (27 க்கு அதிகமாக) பழைய ஏற்பாட்டில் வருகிறது. ( பார்க்க 2 இராஜா 25:23, 1 நாளா 3:15,24, 6:9,10, 12:4, 12:12, 26:3, 2 நாளா 17:15, 23:1, 28:12, எஸ்றா 8:12, 10:6, 10:28, நெகே 6:18, 12:13, 12:22,23,42, எரே 40:8 இன்னும் பல இடங்களில்.)

பல இஸ்லாமிய அறிஞர்களின் குர்-ஆன் மொழிபெயர்ப்பும். நாம் மேலே சொன்னது போல கருத்துள்ளது.

தமிழாக்கம்: டாக்டர். முஹம்மது ஜான், ஜான் டிரஸ்ட் நிறுவனம்,

19:7 'ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம்.
இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை" (என்று இறைவன் கூறினான்).

தமிழாக்கம்: தமிழாக்கம்: பி.ஜைனுல் ஆபிதீன்

19:7 "ஸக்கரிய்யாவே! ஒரு புதல்வன் பற்றி உமக்கு நாம் நற்செய்தி கூறுகிறோம். அவரது பெயர்
யஹ்யா. இப்பெயரிடப்பட்டவரை இவருக்கு முன் நாம் ஏற்படுத்தியதில்லை" (என இறைவன் கூறினான்)

ஆங்கில மொழி பெயர்ப்புக்கள்


Translation: Pickthall

(It was said unto him): O Zachariah! Lo! We bring thee tidings of a son whose name is John; we have given the same name to none before (him).

Translation: Arberry

'O Zachariah, We give thee good tidings of a boy, whose name is John. No namesake have We given him aforetime.'

Translation: Palmer

'O Zachariah! verily, we, give thee glad tidings of a son, whose name shall be John. We never made a namesake of his before.'

Translation: Rodwell

"O Zachariah! verily we announce to thee a son, - his name John: That name We have given to none before him."

Translation: Sale

[And the angel answered him], o Zacharias, verily we bring thee tidings of a son, whose name [shall be] John; we have not caused any to bear the same name before him.

Translation: Yusuf Ali

(His prayer was answered): "O Zakariya! We give thee good news of a son: His name shall be Yahya: on none by that name have We conferred distinction before."

யூசுப் அலி மட்டும் சிறிது மாற்றிச் சொல்கிறார். அவருக்கு இவ்வசனம் சரித்திரப்படி தவறானது என்று தெரிந்திருக்குமோ! குர்-ஆனை தான் நினைத்தபடி மொழிபெயர்த்துள்ளார்.

ஜலால் இவ்வசனத்திற்கு கீழ்கண்டவாறு பொருள் கூறுகிறார்(tafsir).

God, exalted be He, in responding to his request for a son that will be the incarnation of His mercy, says: 'O Zachariah! Indeed We give you good tidings of a boy, who will inherit in the way that you have requested - whose name is John. Never before have We made anyone his namesake', that is, [never has there been] anyone with the name 'John'.
Source- Tafsir al-Jalalayn


இந்த தவறைப் பற்றி இஸ்லாமியர்களின் கேள்வியும் மற்றும் பதிலும் இங்கு காணலாம்.
Question 1  Answer 1 (Historical)  Answer 2 (Scriptural)
Question 2  Answer 1  Answer 2






மேலும் படிக்க:

1) குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் - பாகம் 1 - இஸ்லாம் கல்விக்கு பதில்: பைபிளில் இல்லாத குழந்தை அற்புதம் முகமது "காப்பி" அடித்தது தான்.

2) குர்‍ஆனின் சரித்திர தவறு: "எஸ்றா அல்லாவின் குமாரனா?" யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது

3) சாத்தானின் வசனங்களும் குர்-ஆனும்

4) குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? - ஆசிரியர்: Khaled



 
 

StumbleUpon.com Read more...

"கிறிஸ்தவன் பார்வை" என்ற தள பதிவு பற்றிய ஒரு "கிறிஸ்தவனி(உமரி)ன் பார்வை"

>> Saturday, July 26, 2008

"கிறிஸ்தவன் பார்வை" என்ற தள பதிவு பற்றிய ஒரு "கிறிஸ்தவனி(உமரி)ன் பார்வை"




"கிறிஸ்தவன் பார்வை" என்ற தள பதிவு பற்றிய "ஒரு கிறிஸ்தவனின் பார்வை"

முன்னுரை: கிறிஸ்டியன்ஸ் பார்வை   என்ற தளத்தில், என்னைப் பற்றி ஒரு சில வரிகள் எழுதப்பட்டு இருந்தது, அதற்கான என் பதிலை இந்த பதிவில் காணலாம். என் கட்டுரைக்கு பின்னூட்டமிட்டிருந்த ஒரு அனானிமஸ்ஸுக்கு பதில் அளித்து இருந்தேன், அதைப் பற்றி, விமர்சனத்திற்கு என் பதிலை இந்த பதிவில் காணலாம்.


ChristianPaarvai said:
//

Source: http://christianpaarvai.blogspot.com/2008/07/1_21.html

முஸ்லிம்களின் போற்றுதற்குரிய தலைவரான உமர் (ரழி) அவர்களின் பெயரில் ஒளிந்து கொண்டு ஒரு கிறிஸ்தவர் இப்போது இஸ்லாத்தை விமர்சித்து வருகிறார். அன்று உமர் (ரழி) அவர்களின் வாழ்வில் ஒளி விளக்காய் அமைந்த குர்ஆன் மீது சேறு வாரி இறைக்கின்றார்! முஸ்லிம்களிடம் குர்ஆன் உள்ளவரை அவர்களை அசைக்க முடியாது என்று அறிந்து கொண்ட மிஷினரிகளின் விலை குறைந்த தந்திரம் இது.//

Umar said:

நீங்கள் பைபிளை விமர்சிப்பதில்லையா? பைபிளை விமர்சிப்பதை உங்கள் நபி 7ம் நூற்றாண்டிலேயே ஆரம்பித்துவிட்டாரே?

முஸ்லீம்களுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா? சொல்லுங்கள்.

உங்கள் குர்‍ஆன் சொல்வதை, உங்கள் நபி சொல்வதை நம்புவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு என்பதை நான் அறிவேன், அதே நேரத்தில் எங்கள் வேதம் சொல்வதை நம்புவதற்கு எங்களுக்கு உரிமை உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும்.

எங்கள் வேதம் பற்றி நீங்கள் விமர்சிக்கும் போது, அதற்கு பதில் தருவதும் எங்கள் கடமை, அதே நேரத்தில் பைபிளை நீங்கள் விமர்சிப்பதால், உங்கள் குர்‍ஆன் பற்றியும் நாங்கள் சில சந்தேகங்கள், உண்மைகளை நாங்கள் சொல்கிறோம், அவ்வளவு தான், இதில் விரோதிப்பதற்கு ஒன்றுமில்லை.

//குர்ஆன் மீது சேறு வாரி இறைக்கின்றார்//

7ம் நூற்றாண்டில் வந்து பைபிள் மீது சேறு வாரி இறைத்தது யார்?
உங்கள் முகமது அன்று ஆரம்பித்த வேலையை இன்றும் செய்துக்கொண்டு இருப்பவர்கள் யார்?
நீங்கள் மட்டும் பைபிள் மீது சேறுவாரி இறைப்பது சரியாகுமா?

நீங்கள் எது சொன்னாலும், கிறிஸ்தவர்கள் சும்மா இருக்கவேண்டும் அதைத் தானே நீங்கள் எதிர்ப்பார்ப்பது? உங்களுக்கு பதில் அளிக்கக்கூடாது, அதே நேரத்தில் கேள்வியும் கேட்கக்கூடாது?  கேள்வி கேட்டால், சேறு வாரி இறைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு வேறு? இது என்ன நியாயம் என்றுச் சொல்லுங்கள்?


ChristianPaarvai said:
// முஸ்லிம் பெயரை வைத்துக் கொண்டு எதையேனும் சொன்னால் முஸ்லிம்களை ஏமாற்றி விடலாம் என்று நினைக்கின்றனர். //


Umar said:

மன்னிக்கனும் நண்பரே மன்னிக்கனும். என்னைப் பொருத்தவரையில், நான் உமர் என்ற பெயர் வைத்துக்கொண்டு யாரையும் ஏமாற்றவில்லை.

1) என் கட்டுரைகளின் தலைப்பிலேயே, என் செய்தியை பெரும்பான்மையாக சொல்லி விடுவேன். "இஸ்லாமுக்கு பதில்/மறுப்பு" என்று தெளிவாக சொல்லிவிடுவேன். என் கட்டுரைகளை படிப்பதற்கு முன்பாகவே, இது ஒரு இஸ்லாமுக்கு பதில் சொல்லும் கட்டுரை என்ற எண்ணத்தை என் கட்டுரையை வாசிப்பவர்களின் உள்ளத்தில்  கொடுத்துவிடுகிறேன்.உங்களைப்போல, மூல தொடுப்புக்களை கொடுக்காமல், வாசகர்களை வஞ்சிக்கமாட்டேன்.

2)  பெரும்பான்மையாக என் கட்டுரைகளின் முதல் பத்தியிலேயே "முன்னுரை/குறிப்பு" என்று எழுதி, அந்தக் கட்டுரையில் எதைப்பற்றி விவாதிக்கப்போகிறேன் என்று விவரமாக எழுதிவிடுவேன். என் கட்டுரைகளை படிப்பவர்கள் முதல் பத்தியிலேயே இது ஒரு கிறிஸ்தவ கட்டுரை என்பதை அறிந்துக்கொள்வார்கள். பின் அவர்களுக்கு விருப்பம் இருந்தால், மேலே படிப்பார்கள், வேண்டாமென்றால் விட்டுவிடுவார்கள்.

3) இஸ்லாமியர்கள் சிலர் செய்வது போல, தங்களை கிறிஸ்தவர்களாக காட்டிக்கொண்டு, எனக்கு அறிவுரை சொல்வது போல,  என்னை ஒரு முஸ்லீமாக காட்டிக்கொண்டு, யாருக்கும் தெரியாமல் மற்ற முஸ்லீம்களுக்கு அறிவுரை சொல்வது போல சொல்லமாட்டேன்.  உதாரணத்திற்கு, ஒரு இஸ்லாமியர் தன்னை கிறிஸ்தவரைப் போல காட்டிக்கொண்டு எனக்கு பின்னூட்டம் இட்டுள்ளார். இப்படியெல்லாம் நான் செய்வதில்லை.

4) எல்லா கட்டுரைகளிலேயும் என்னை ஒரு கிறிஸ்தவன் என்று தான் காட்டியுள்ளேனே ஒழிய, ஒரு முஸ்லீமாக நான் காட்டிக்கொள்வதில்லை.

 

ChristianPaarvai said:
//ஏற்கெனவே தங்களது இணைய தளத்துக்கு ஈஸா குர்ஆன் என்று வைத்து வம்பில் மாட்டியுள்ளனர். இதற்கு முன் அனானிமசுக்கு பதிலளிக்கையில் இந்த உண்மையை உளறி விட்டனர். பெயர் வைத்ததற்காக வருத்தப் படுவதாகவும் வைத்து விட்டதால் எடுக்க முடியவில்லை என்ற வாசகத்தை மட்டும் தந்திரமாக நீக்கி விட்டனர். //

 
Umar said:
 
என் தளத்திற்கு "ஈஸா குர்‍ஆன்" என்று வைத்து என்ன வம்பில் மாட்டிக்கொண்டேன் சொல்லுங்கள் பார்க்கலாம்? யாராவது காபிரைட் வழக்கு தொடர்ந்தார்களா?  இந்த உளறும் வேலை என்னுடையது கிடையாது, அதனால், தான் நான் எப்போதும் சொல்வதுண்டு, முஸ்லீம்களை பேசவிடுங்கள், அப்போது தான் உண்மை வெளிப்படும் என்று.

என் தளத்திற்கு ஏன் இந்த பெயர் வைத்தேன் என்று போன வருடமே (செப்டெம்பர் 2007)  நான் ஒரு கட்டுரையை எழுதி அதற்கு பதில் அளித்துள்ளேன்.
பார்க்க:

-----------------

1. உங்கள் தளத்தின் நோக்கம் என்ன? உங்கள் தளத்திற்கு "ஈஸா குர்-ஆன்" என்ற பெயர் வைத்ததற்கான காரணம் என்ன?

என் தளத்தின் நோக்கம், இயேசுவைப் பற்றியும், பைபிளைப் பற்றியும் இஸ்லாமியர்கள் பறப்பிக்கொண்டு வரும் சில தவறாக கோட்பாடுகள் தவறு என்று தகுந்த ஆதாரங்களோடு எடுத்துச் சொல்வதாகும். பைபிளின் "தேவன்" குர்-ஆனின் "அல்லா" இல்லை என்பதை உலகிற்கு முக்கியமாக தமிழ் மக்களுக்குச் சொல்வதாகும்.

இயேசுவை தேவனின் வார்த்தை என்று பைபிள் சொல்கிறது, அது போல "குர்-ஆனை" இஸ்லாமியர்கள் இறைவனின் வார்த்தை என்றுச் சொல்கிறார்கள். எனவே தான் "ஈஸா குர்-ஆன்" என்று பெயர் வைத்தேன்.

Sources:
http://isakoran.blogspot.com/2007/09/1.html
http://www.geocities.com/isa_koran/tamilpages/QandA/QandAUmar/UmarQandA-1.htm
http://tamilchristians.com/modules.php?file=viewtopic&name=Forums&p=5710


நான் என்னவோ, "குர்‍ஆன்" என்ற பெயரையும், "உமர்" என்ற பெயரையும் வைத்துக்கொண்டு, உலகத்தையே சூரையாடிவிட்டதாக சொல்கிறீர்கள்.

உங்கள் நபி, பைபிளோடு தன்னை சம்மந்தப்படுத்திக்கொண்டு, தீர்க்கதரிசிகளில் தான் கடைசியானவர் என்று தன்னை காட்டிக்கொண்டு, இறைவசனம் என்றுச் சொல்லி, முந்தைய வேதங்களில் உள்ளவற்றை ஆங்காங்கே சில விவரங்களைச் சொல்ல அவருக்கு உரிமை இருக்கும் போது, வெறும் "குர்‍ஆன்" என்ற பெயரும், "உமர்" என்ற பெயரையும் வைத்துக்கொள்ள எனக்கு உரிமையில்லையா?

இப்படி பைபிளின் தீர்க்கதரிசிகளின் பெயர்களை சொந்தம் கொண்டாடியது உங்கள் முகமது என்பதை மறக்கவேண்டாம்.

எனவே, 7ம் நூற்றாண்டில் திடீரென்று ஒருவர் வந்து, நானும் ஒரு நபி தான், என்னை இறைவன் அனுப்பினார் என்றுச் சொல்லி, பைபிளோடு தன்னை சம்மந்தப்படுத்த உரிமை உங்கள் நபிக்கு இருக்கும் போது, என் தளத்திற்கு "ஈஸா குர்‍ஆன்" என்ற பெயர் வைத்தால், என்ன குடிமுழுகிவிடும் சொல்லுங்கள்.
---------

ChristianPaarvai said:
// கிறித்தவ சபையினரே! கிறித்தவர்களாகிய உங்களுக்கு முஸ்லிம் பெயர் எதற்கு? உங்கள் புரட்டுகளைப் பற்றி நாங்கள் எழுதும் போது நாங்கள் கிறித்தவ பெயரைப் பயன் படுத்துதில்லை. //

Umar Said:

இஸ்லாமியர்களே, உங்கள் நபிக்கு பைபிளோடு சம்மந்தமெதற்கு?  யூதர்களின் மற்றும் கிறிஸ்தவர்களின் விவரங்களின் அவசியமெதற்கு? சொல்லுங்கள்.

என்னவோ, இஸ்லாமிய பெயர் வைத்தால், உடனே முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களாக மாறிவிடுவது போல கவலைப்படுகிறீர்கள்?

உங்கள் புரட்டுக்களைப் பற்றி எங்களுக்குத் தெரியாதா என்ன? பொய்களை அள்ளிவீசுவதில், தில்லு முல்லு செய்வதில் உங்களை யார் ஜெயிக்கமுடியும் சொல்லுங்கள்?

உங்கள் முகமது, தன்னை ஒரு தீர்க்கதரிசி என்றுச் சொல்லி, உண்மையான தேவனின் தீர்க்கதரிசிகளாகிய மோசே, எலியா, யோவான் பட்டியலில் தன்னை இணைத்துக்கொண்டாரே, இதை விடவா ஒரு புரட்டு இருக்கமுடியும்?

முகமது தன்னை ஒரு நபி என்றுச் சொல்லட்டும், அதை நீங்கள் நம்புங்கள், இதில் தவறில்லை, ஆனால், பைபிளைப் பற்றி விமர்சிக்க அவருக்கு என்ன அதிகாரம் உண்டு? அவரை மற்றவர்கள் நம்பவேண்ட அவசியமென்ன?

உங்கள் தளத்தின் பெயர் "கிறிஸ்டியன் பார்வை" என்று வைத்துள்ளீர்கள்.

யாராவது முதலாவது உங்கள் தள பெயரைப் பார்த்தால்,  ஏதோ ஒரு கிறிஸ்தவன் தளம் என்று நினைக்கத்தோன்றும். இருந்தாலும், ஏன் வைத்தீர்கள் என்று நான் கேட்கமாட்டேன், ஏனென்றால் பெயரில் ஒன்றுமில்லை, சொல்லும் செய்தியில் தான் எல்லா விவரங்களும் உள்ளன. ஏன் "கிறிஸ்தவன்(ம்)" என்ற வார்த்தையை பயன்படுத்தினீர்கள் என்று உங்களை எந்த கிறிஸ்தவனும்  கேட்கமாட்டான், காரணம், "கிறிஸ்தவம்" என்ற பெயர் வைத்த மாத்திரத்தில், எல்லா கிறிஸ்தவனும் முஸ்லீமாக மாறிவிடப்போவதில்லை.

ChristianPaarvai said:
//உங்கள் பெயரை வைத்து எழுத வேண்டிய அவலநிலை எங்களுக்கு இல்லை. காரணம் உங்கள் புரட்டு வாதங்களுடன் மோதுவதற்கு எங்களுக்கு எந்தக் குறுக்கு வழியும் தேவையில்லை. //

Umar said:

எங்கள் பெயரை வைத்துக்கொண்டு எழுதவேண்டிய அவல நிலை உங்கள் நபிக்கு உண்டு. யூதர்களின் மற்றும் கிறிஸ்தவர்களின் விவரங்களை பயன்படுத்தி, தன்னை ஒரு நபியாக, உண்மையான இறைவன் தன்னை தெரிந்துக்கொண்டார் என்றுச் சொல்லி தன் விருப்பத்திற்கு ஏற்றார்  போல தீர்க்கதரிசனங்கள் என்ற பெயரில் வசனங்களைச் சொல்லி வாழ்ந்தவர் உங்கள் நபி.  இல்லை இல்லை, முகமது அவர்கள் சொன்னது உண்மையான தீர்க்கதரிசனங்களே என்று நீங்கள் சொல்வீர்கள். நல்லது அது உங்கள் நம்பிக்கை, இதில் தவறு இல்லை. ஆனால், கிறிஸ்தவர்களை விமர்சிக்க அவருக்கு ஏது அதிகாரம்?

எங்களுக்கு குறுக்குவழி தேவையில்லை நண்பரே, உங்களுக்குத்தான் குறுக்குவழி தேவையாக உள்ளது.

இஸ்லாமிய நாடுகளில் ஒரு முஸ்லீம் கிறிஸ்தவனாக மாறினால், அவனை கொள்ளவேண்டும் என்றுச் சொல்லி, சட்டத்தை இயற்றி இஸ்லாமை தக்கவைத்துக்கொள்வது ஒரு குறுக்கு வழி இல்லையா? விமர்சிப்பவர்களை கொன்றுவிட்டால், எதிரியே இருக்கமாட்டான் என்று கொல்வது குறுக்கவழி இல்லையா?

ஒருவன் இஸ்லாமை விட்டு போனால் போகட்டும், குர்‍ஆனுக்கு மனிதர்களை தன்னிடம் இழுத்துக்கொள்ளும் தன்மை உண்டு, உண்மை உண்டு,  எனவே, இஸ்லாமை விட்டு வெளியேறுபவனை கொல்லவேண்டாம் என்று இஸ்லாமிய நாடுகளில் சட்டமியற்ற முடியுமா?


நான் இன்று இஸ்லாமுக்கு ஒரு சவால் விடுகிறேன், உலகத்தில் இஸ்லாமை விமர்சிப்பவர்களை ஒன்றும் செய்யமாட்டோம் என்றுச் சொல்லி சட்டத்தை இயற்றி வாழ்ந்துப் பாருங்கள், இஸ்லாமை விமர்சிப்பவர்களுக்கு தீங்கை இழக்காமல் இருந்துக் காட்டுங்கள். அப்போது, உங்கள் இஸ்லாமின் நிலை என்னவாகும் என்று கற்பனை செய்துபார்க்க முடியுமா?

என் கட்டுரைகளில் யார் எழுதுகிறார்கள் என்பதை விட, என்ன எழுதுகிறேன் என்பதைத் தான் வாசகர்கள் அறிய வேண்டும் என்று விரும்புகிறேன்.

ChristianPaarvai said:
// எங்களிடம் இறைவேதம் என்ற பலமான ஆயுதம் உள்ளது. வாருங்கள்! ஒளிந்து கொண்டு கூக்குரலிடாதீர்கள்! உங்களின் கோமாளிக் கூத்தை விட்டு விட்டு இணையப் பேரவை சகோதரர்களின் அழைப்புக்கு பதிலளித்து பகிரங்கமாக வெளியே வாருங்கள். எப்போது வருகிறீர்கள்?

அனானிமசுக்கு பதில்

இப்போதெல்லாம் பதிவெழுத நேரமில்லாததாலோ என்னவோ அனானிமசுகளுக்கு அளித்த பதிலை மறு பதிவு செய்து வருகிறார்கள். எது எவ்வாறாயினும் அனானிமஸ் கேட்டுள்ள கேள்விகளுக்கு பதிலளித்ததிலும் பல மழுப்பல்கள். சில விமர்சனங்கள். அவை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். அனானிமசின் கேள்விகளும் உமர் (என்ற பெயரில் ஒளிந்துள்ள கிறித்தவனி)ன் மழுப்பல்களும் தெளிவான விளக்கங்களும். அடுத்தடுத்த பகுதிகளில் இன்ஷா அல்லாஹ்.

Source: http://christianpaarvai.blogspot.com/2008/07/1_21.html

//

Umar Said:

நீங்கள் அமைதியானவர்களாக இருந்தால், உங்கள் முன் வந்து விவாதிக்க நாங்கள் தயார்? ஆனால், உங்களை யார் நம்புவார்கள்? 

மேடையில் விவாதம் என்றுச் சொல்லி, மேடையில் நீங்கள் பேசிக்கொண்டு இருப்பீர்கள், ஆனால், யாரோ ஒரு முஸ்லீம் எங்கள் மீது கல்லெரிவார், இது எங்களுக்கு வேண்டுமா? உங்களை நம்பலாம், ஆனால், எல்லா இஸ்லாமியர்களை நம்பமுடியாது?

இப்படி எங்களுக்கு தீங்கிழைப்பது நியாயமா என்று நாங்கள் கேட்டால், "அவர்களுக்கு மார்க்க அறிவு கிடையாது, இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள்" என்று சொன்ன வேதாந்தமே மறுபடியும் சொல்வீர்கள், ஆனால், நஷ்டமடைவது யார்? நாங்கள் தான்.

உங்களால் மேடையில் தான் பேசமுடியுமா? எழுத்து மூலம் விவாதிக்க முடியாதா?  வீரர்களாக இருந்தால், எழுத்து விவாதத்திற்கு வாருங்கள்.

நாங்கள் கோழைகள் தான், வாளுக்கு, அடிகளுக்கு நாங்கள்(மன்னிக்கனும் முக்கியமாக நான்) பயப்படுகின்றோம். ஐந்தறிவு படைத்த மிருகங்கள் இருக்கும்  காட்டில் யாராவது பாதுகாப்பு இல்லாமல் நுழைய முடியுமா?
 அதுபோலத் தான், நாங்கள் பாதுகாப்பை கருதி மறைந்து எழுதுகிறோம். 

நீங்கள் தான் வீரர்கள் என்றுச் சொல்கிறீர்களே, எழுத்து விவாதத்திற்கு வருவது தானே? முகமதுவின் வாழ்க்கையை உலக மக்கள் அறிய விவாதிப்பது தானே?

உங்களிடம் தான் உண்மை சத்தியம் உண்டே, அப்படியானால், ஏன் எழுத்து விவாதத்திற்கு பயப்படுகிறீர்கள்?

யார் கோழை / யார் வீரன்:
----------------------------------------------

ஒரு சில இஸ்லாமிய தளம் தவிர மற்ற அனைத்து இஸ்லாமிய தளங்களும், வீராவேசத்தொடு பதில் எழுதுவார்கள், ஆனால், எந்த கட்டுரைக்கு பதில் எழுதுகிறார்கள் அதன் தொடுப்பு என்ன? என்று பதிக்கமாட்டார்கள் ஏன்? பயம், எங்கள் கட்டுரைகளை படித்து, உண்மையை முஸ்லீம்கள் தெரிந்துக்கொள்வார்கள் என்ற பயம்.  அவர்கள் சொல்வது பொய் என்பதை சாதாரண முஸ்லீம்கள் அறிந்துக்கொள்வார்கள் என்ற பயம். வீரம் என்பது வெறும் கட்டுரைகளையும், பதில்களையும் எழுதுவது அல்ல, அதற்கு பதிலாக யாருக்கு பதில் எழுதுகின்றோம் என்பதை தொடுப்புடன் எழுதினால், அதைத்தான் வீரம் எனலாம், அதைவிட்டுவிட்டு, நாங்கள் பதில் தருகிறோம் என்று அனானிமஸ்ஸாக எழுதுவதில்லை.


ஆனால், நாங்கள் அப்படி அல்ல, யாருக்கு பதில் எழுதுகிறோம் என்று முஸ்லீம் தளத்தின் தொடுப்பையும் கொடுப்போம், ஏன் தெரியுமா? இஸ்லாமை ஒருவன் அறிய அறிய, அதன் உண்மையை புரிந்துக்கோள்வான், மற்றும் இஸ்லாம் பற்றி சிந்திப்பவன், உண்மையாகவே, அதை விட்டு வெளியே வந்துவிடுவான். அதனால், தான் அமெரிக்காவில் இஸ்லாமுக்கு மாறுபவன் சில ஆண்டுகளிலேயே 75% பேர், இஸ்லாமை விட்டு வெளியேறி விடுகின்றனர்.

அதனால், தான் நாங்கள் எந்த இஸ்லாமிய தொடுப்பையும் கொடுக்க தயங்குவதில்லை. நாங்கள் எங்கள் கட்டுரைகளை படிக்கும் கிறிஸ்தவர்களை உங்கள் இஸ்லாமிய கட்டுரைகளை படிக்க உட்சாகப்படுத்துகிறோம், அதனால், தான் இஸ்லாமிய தள தொடுப்புக்களைக் கொடுக்கிறோம்.

உதாரணத்திற்கு, என் தளத்திலோ, அல்லது தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளத்திலோ, சென்று பாருங்கள், எத்தனை கட்டுரைகளில் இஸ்லாமிய தள தொடுப்புக்கள் இருக்கின்றன என்று. அதே போல, உங்கள் இஸ்லாமிய தளங்களில் எத்தனை தளங்களில் எங்கள் தள கட்டுரைகளின் தொடுப்பை கொடுத்துள்ளீர்கள். இதுவே போதும், நீங்கள் பயந்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதற்கு, உங்களுக்கு உங்கள் பலமான இறைவேதம் மீது எவ்வளவு நம்பிக்கை இருக்கின்றது என்று?

எங்கள் நம்பிக்கை என்னவென்றால், இயேசுவின் போதனைகளை படிக்கும் ஒரு கிறிஸ்தவன், பெரும்பான்மையாக முகமதுவின் போதனைகளால் எந்த காலத்திலும் மயங்க மாட்டான் என்ற நம்பிக்கைத் தான். இப்படிப்பட்ட நம்பிக்கை உங்களுக்கு உண்டா? அப்படி இருக்குமானால், எங்கள் தள தொடுப்புக்களை தைரியமாக தாருங்கள்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள்,  பல ஆயிர‌ கிறிஸ்தவர்கள் இஸ்லாமை தழுவினார்கள் என்று எழுதுவார்கள், ஆனால், எந்த ஒரு ஆதாரத்தையும் தரமாட்டார்கள்.

இன்னொரு குழு உள்ளது, அவர்கள், ஈஸா குர்‍ஆன் என்ற பெயரையும் எழுத பயப்படுவார்கள், உமர் என்ற என் பெயரையும் பயன்படுத்த பயப்படுவார்கள். "ஒரு கிறிஸ்தவர் எழுதுகிறார்" என்பார்கள், ஆனால், பெயரை குறிப்பிடமாட்டார்கள். இப்படி பயந்துப்போய் கட்டுரையை எழுதுபவர்கள் நீங்கள்.

ஆனால், உங்களிடம்(கிறிஸ்தவ பார்வை தளத்திடம்) நான் எதிர்ப்பார்ப்பது, (நான் பதில் எழுதும் ஒவ்வொரு தளத்திற்கும் இந்த வேண்டுதலை வைத்துள்ளேன், ஆனால், செவிடன் காதில் ஊதிய சங்கு தான்)

உங்கள் இஸ்லாம் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால்?

உங்கள் நபி உண்மையிலேயே ஒரு நபி என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால்?
குர்‍ஆனை யார் குற்றப்படுத்தினாலும், அது செல்லுபடியாகாது, குர்‍ஆன் தான் கடைசியில் ஜெயிக்கும் என்ற நம்பிக்கை இருந்தால்?
எங்கள் கட்டுரைகளைப் படித்தால், முஸ்லீம்கள் இஸ்லாமின் மீது சந்தேகம் கொள்ளமாட்டார்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால்?

எங்களுக்கு பதில் அளிக்கும் போது, எங்கள் தள கட்டுரைகளின் தொடுப்புக்களை வெளியிடுங்கள், பெயர்களை வெளியிடுங்கள். நீங்களும் இப்படி வெளியிடவில்லையானால், உங்களையும் அந்த பட்டியலில் இணைய நண்பர்கள் சேர்த்துவிடுவார்கள், மட்டுமல்ல, இஸ்லாம் ஒரு போலி என்பதை உலகம் இதன் மூலம் அறிய‌ நீங்கள் உதவி  செய்கிறவர்களாக இருப்பீர்கள்.

கர்த்தருக்கு சித்தமானால், அடுத்த பதிலில் சந்திக்கலாம்.
 
 

StumbleUpon.com Read more...

சந்திரனில் குடியேற ஆசையா?

சந்திரனில் குடியேற ஆசையா?  
சந்திரனில் நிரந்தரமாகக் குடியேறும் நோக்கிலான நிலவுப் பயணத்தை மேற்கொள்வது குறித்து நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

சந்திரன் ஆராய்ச்சித் திட்டத்தின் ஒருபகுதியாகவும், செவ்வாய் கிரகத்திற்குச் செல்லும் பயிற்சியாகவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய தலைமுறை ராக்கெட் பூஸ்டர்களை வரும் 2010ம் ஆண்டுக்குப் பின் அமைக்கவும் நாசா திட்டமிட்டுள்ளதாக டெலிகிராஃப் நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.

``மீண்டும் சந்திரனுக்குச் செல்வோம். ஆனால் இந்த முறை சந்திரனில் குடியிருப்போம். சூரிய குடும்பத்தை சீராக்கும் முயற்சியின் முதல்கட்ட நடவடிக்கை இது'' என்று நாசா ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் எஸ். பீட் வோர்டன் தெரிவித்தார்.

நிலவிற்கு மீண்டும் பயணிப்பது குறித்து விஞ்ஞானிகள் பங்கேற்கும் 3 நாள் மாநாட்டில் மேலும் விவாதம் நடத்தப்பட்டு முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.
http://tamil.webdunia.com/newsworld/news/international/0807/22/1080722049_1.htm

StumbleUpon.com Read more...

அணுசக்தி திட்டத்தை ஈரான் கைவிட வேண்டும்: ஒபாமா

அணுசக்தி திட்டத்தை ஈரான் கைவிட வேண்டும்: ஒபாமா
ணுசக்தி திட்டத்தை ஈரான் கைவிட வேண்டும் என்று மெரிக்க அதிபர் பதவிக்கான வேட்பாளர் பாரக் ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவுள்ளது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக பாரக் ஒபாமா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தற்போது ஒபாமா வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தரவு திரட்டி வருகிறார்.

இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசியை சந்தித்து பேசிய ஒபாமா நிருபர்களிடம் கூறியதாவது:

ஈரான் தனது முறையற்ற அணுசக்தி கொள்கைகளை கைவிட வேண்டும். அணு ஆயுதங்களை ஈரான் அதிகரித்து வருவது ஆபத்தானது.

உலக நாடுகளின் கோரிக்கையை ஏற்று, ஈரான் தனது அணுசக்தி கொள்கையை கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்த பின்னரும் ஈரான் தனது அணுசக்தி கொள்கைகளை கைவிட மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

(மூலம் - வெப்துனியா)

StumbleUpon.com Read more...

அகமதாபாத்தில் 17 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு-பரபரப்பு செய்திகள்

அகமதாபாத்தில் 17 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு.இது வரை 18 பேர் கொல்லப்பட்டனர்.
 
55 பேருக்குமேல் படுகாயம் அடைந்துள்ளனர்.மணி நகர்,பப்பு நகர், ஹர்கேஷ்வர்,ஜவஹர் நகர்,ராஜேந்திர பார்க், போன்ற நகரின் முக்கிய பகுதிகளில் இந்த குண்டு வெடிப்பு நடந்துள்ளது.இதனால் அந்த மாநிலமே மிகவும் உச்சக்கட்ட பரபரப்பை அடைந்துள்ளது.ஒரு மணி நேரத்துக்குள் 16 குண்டுகள் வெடித்துள்ளது,மீண்டும் 10 நிமிடத்துக்குள் மீண்டும் ஒரு குண்டு வெடித்தது.
 
 
இதில் சந்தேகத்துக்கு இடமான இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலியானோர் எண்ணிக்கை இன்னும் உயரும் என்று அஞ்சப்படுகிறது

StumbleUpon.com Read more...

குண்டுவெடிப்பு: 3 தீவிரவாத இயக்கங்கள் மீது சந்தேகம்

குண்டுவெடிப்பு: 3 தீவிரவாத இயக்கங்கள் மீது சந்தேகம்
பெங்களூரில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு லஷ்கர் - இ - தொய்பா, சிமி அல்லது வங்கதேசத்தைச் சேர்ந்த ஹர்கத் உல் முஜாஹிதீன் அமைப்பு காரணமாக இருக்கலாம் என மத்திய உளவுப் பிரிவு சந்தேகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாகவே பெங்களூரிலும், கர்நாடகத்தின் பிற பகுதிகளிலும் லஷ்கர் - இ - தொய்பா மற்றும் சிமி அமைப்புகளைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல வங்கதேசத்தை தளமாகக் கொண்டு இயங்கும் ஹூஜி எனப்படும் ஹர்கத் உல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டனர்.

எனவே இதற்குப் பழி வாங்கும் வகையில் இன்றைய குண்டுவெடிப்புக்கு மேற்கூறிய 3 அமைப்புகளைச் சேர்ந்த ஒரு இயக்கம் காரணமாக இருக்கலாம் என மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
(மூலம் - வெப்துனியா)

StumbleUpon.com Read more...

பெ‌ங்களூர்: மேலும் ஒரு வெ‌டிகு‌ண்டு க‌ண்டு‌பிடி‌ப்பு!

பெ‌ங்களூர்: மேலும் ஒரு வெ‌டிகு‌ண்டு க‌ண்டு‌பிடி‌ப்பு!
பெ‌ங்களூரில் இன்றும் ஒரு வெடிகு‌ண்டு க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரில் 9 இடங்களில் நேற்று நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 2 பேர் பலியாகினர்; பலர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பெங்களூரில் கோரம‌ங்கல‌த்‌தி‌ல் உ‌ள்ள போர‌ம் மா‌ல் அருகே இன்று ச‌ந்தேக‌த்‌தி‌ற்கிடமான ம‌ர்ம‌ பா‌ர்ச‌ல் ஒ‌ன்று ‌கிட‌ந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவ‌ல் தெ‌ரி‌வி‌க்கப்பட்டது.

போலீசார் விரைந்து வந்து அதை பரிசோதினை செய்ததில் அதில் வெடிகுண்டு இருப்பது தெரியவந்தது. உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அந்த வெடிகுண்டு செயலிழக்க செய்யப்பட்டது.

இ‌ந்த‌ ச‌ம்பவ‌த்தா‌ல் போர‌ம் மா‌ல் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

(மூலம் - வெப்துனியா)

StumbleUpon.com Read more...

நக்மா மீது பி.ஜே.பி. பாய்ச்சல்

  இந்து மதத்தினரின் மனதை புண்படுத்தியதாகக் கூறி, பா.ஜ.க.பிரமுகர் நடிகை நக்மாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக செய்திவெளியான பிறகு, மீடியாக்களிடமிருந்து ஒதுங்கியே இருந்தார் நக்மா. சொந்த பாதுகாப்பிற்காக அவர் காங்கிரஸ் கட்சியில் இணைய இருப்பதாகவும் செய்தி வெளியானது. தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் டெல்லியில் அளித்த விருந்தில் நக்மா கலந்த கொண்டது இந்தச் செய்தியை உறுதி செய்தது.

ஆனால், அரசியலில் இருந்து ஆன்மிகத்துக்கு மாறினார் நக்மா.ஏசு எனக்கு நிம்மதியளித்தார், அவரைப் பற்றி பேசுவதே இனி எனது முழுநேர வேலை என அவர் கூறியபோது அனைவரும் அதிர்ந்து போயினர். பலரும் இதனை நம்பவில்லை. ஆனால், நக்மாவின் ஏசு பிரச்சாரம் தொடர்ந்து கொண்டிருந்தது.

Nagma

சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் நடந்த ஏசு பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் நக்மா. அவரின் பேச்சு பிற மதத்தினரின் குறிப்பாக இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதமாக இருந்தது என்று கூறி, அதற்கு விளக்கம் கேட்டு பா.ஜ.க. பிரமுகர் ஒருவர் நக்மாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். விளக்கம் அளிக்காவிடில், அளிக்கிற விளக்கம் திருப்திகரமாக இல்லாவிடில் நக்மா மீது வழக்கு தொடரப்படும் எனவும் மிரட்டியுள்ளார் அந்த பிரமுகர்.

இந்த இக்கட்டிலிருந்து இறைவன்தான் நக்மாவை காப்பாற்ற வேண்டும்!
 
 
 
 
 
 
 
 
Nagma என்ன பேசினார்:http://thamilislam.blogspot.com/2008/07/blog-post_9165.html

StumbleUpon.com Read more...

களரி கற்கும் ஜப்பானியர்

>> Friday, July 25, 2008

களரி கற்கும் ஜப்பானியர்


   கோழிக்கோடு: கேரள மக்களின் வீரத்துக்கு அடையாளமான பழங்கால கலை களரிப்பயிற்று. 9ம் நூற்றாண்டு முதல் பழகப்பட்ட இந்தக் கலையின் நுணுக்கங்கள் காரணமாக உலக அளவில் பேசப்படுகிறது.

தாக்குதல், உதைத்தல், நெருக்குதல், ஆயுதம் ஏந்துதல் உட்பட பல கோணங்களில் களரிப்பயிற்று சண்டை மேற்கொள்ளப்படுகிறது.

பல திரைப்படங்களில் முக்கிய இடம்பெற்றுள்ள களரியைக் கற்பதில் நம்நாட்டினர் மட்டுமின்றி வெளிநாட்டினரும் ஆர்வம் கொண்டு கேரளாவுக்கு வருகின்றனர். கோழிக்கோட்டில் உள்ள களரி பயிற்சி மையத்தில் ஜப்பானிய இளம்பெண்கள் இருவர் பயிற்சி பெறுகின்றனர்.

StumbleUpon.com Read more...

முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?

முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?



 

An Answering-Islam.org Article

முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
 
How Muhammad's Contemporaries Really Viewed Him –
An Analysis of the witness of the Quran concerning The opinions of the Disbelievers regarding the prophet of Islam
 

இஸ்லாமிய நபியாகிய முகமது பற்றி, அவர் காலத்து மக்களின்(முஸ்லீமல்லாதவர்களின்) கருத்து என்ன? என்று குர்‍ஆன் சொல்லும் சாட்சியைப் பற்றிய ஓர் அலசல்.

இக்கட்டுரை "Muhammad as Al-Amin (the Trustworthy) How His Enemies Really Viewed Him" என்ற கட்டுரைக்கு மேலதிக விவரங்களுக்காக இணைக்கப்படுகிறது.

முகமது அவர்கள் நபித்துவம் பெறுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, தன் ஊர் மக்களிடம் ஒரு நேர்மையான மனிதராகவும், குற்றமில்லாத மனிதராகவும் பெயர் பெற்று இருந்தார் என்று இஸ்லாமிய தாவா செய்யும் அறிஞர்கள் கூறுவது வழக்கம். இஸ்லாமிய பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள், முகமது ஒரு நேர்மையானவர் என்றும், குற்றம் குறை இல்லாதவர் என்றும் தன் சமகாலத்து மக்கள் அறிந்து இருந்தார்கள் என்று கூறுவதை நாம் கண்டுயிருப்போம். இன்னும் சொல்லப்போனால், முகமது காலத்தவர்கள் முகமதுவிற்கு "அல்-அமீன் (Al-Amin)" அல்லது "நேர்மையானவர்-(Trustworthy)" என்றும் பெயர் சூட்டி இருந்தனர் என்றும் கூறுவார்கள், இப்படி பலவிதமாக கூறுவார்கள்.

முஸ்லீம்கள் இப்படியெல்லாம் சொல்வதில் உள்ள பிரச்சனை என்னவென்றால், இவர்களின் இந்த கூற்று, கண்களால் கண்டு சாட்சி சொன்னவர்களின் கூற்றின் மீது ஆதாரப்பட்டு இருக்கவில்லை, அதற்கு மாறாக முகமதுவின் மரணத்திற்கு பின்பு ஒரு சில நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்டவைகளாகும். இன்னும் சொல்லப்போனால், இவைகள் அனைத்தும் முஸ்லீம்களின் கை மற்றவர்களின் மீது ஓங்கி இருக்கும் போது(இஸ்லாமிய அரசர்கள்/கலிபாக்கள் ஆட்சி செய்தபோது) எழுதப்பட்டவைகளாகும், மற்றும் அவர்கள் சரித்திரத்தை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப திரும்ப எழுதினார்கள். அந்த கால்த்தில் முஸ்லீம்கள் தாங்கள் எந்த கண்ணோட்டத்தில் முகமதுவின் வாழ்க்கையை படிக்கவிரும்பினார்களோ அந்த நம்பிக்கையின் படி எழுத ஆரம்பித்தார்கள்(The Muslims were pretty much free to read back into the life of Muhammad their specific theological views and beliefs concerning their prophet.)

முக்கியமாகச் சொல்லவேண்டுமானால், முஸ்லீம்கள் முகமதுவிற்கு கொடுக்கும் இந்த புகழாரங்களுக்கு எதிராக‌ அவர்களின் வேதமே எதிர் சாட்சியாக அமைந்துள்ளது. நாம் குர்‍ஆனை ஆராய்ந்துப் பார்த்தால், முகமது ஒரு உண்மையின் களங்கரை விளக்காகவோ அல்லது ஒரு முழுமையான‌ நேர்மையான மனிதராகவோ இருந்தார் என்று அவரைச் சுற்றியிருந்த மக்கள் கருதவில்லை அல்லது நம்பிக்கை கொள்ளவில்லை என்பதை நாம் அறியலாம். அம்மக்களின் சாட்சி முகஸ்துதி செய்வதாக கூட இருக்கவில்லை, குறைந்தபட்சம் சொல்லவேண்டுமானால், முகமதுவிற்கு பிறகு சேகரிக்கப்பட்ட விவரங்களாகிய‌ , முகமதுவை அவரது எதிரிகள் புகழ்வதாக உள்ள விவரங்கள் அனைத்தும் வெறும் கட்டுக்கதைகளாகவும், மாயையாகவும் இருக்கிறது.

முகமதுவின் சமகாலத்து மக்கள் அவருக்கு சூட்டிய பெயர்கள், குர்‍ஆன் ஆதாரங்களின் படி:

1. முகமது ஒரு பொய்யர்(A Liar):

(நபியே!) அவர்கள் (உம்மைப் பொய்யரெனக்) கூறுவது நிச்சயமாக உம்மைக் கவலையில் ஆழ்த்துகிறது என்பதை நாம் அறிவோம்; அவர்கள் உம்மைப் பொய்யாக்கவில்லை ஆனால் இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களையல்லலவா மறுத்துக் கொண்டிருக்கிறார்கள். (குர்‍ஆன் 6:33)

உம்மை அவர்கள் பொய்ப்படுத்தினால் எனது செயல் எனக்கு; உங்கள் செயல் உங்களுக்கு. நான் செய்வதை விட்டும் நீங்கள் விலகியவர்கள்; நீங்கள் செய்வதை விட்டும் நான் விலகியவன் என்று கூறுவீராக. (குர்‍ஆன் 10:41)

இன்னும், (நபியே!) அவர்கள் உங்களைப் பொய்ப்பிப்பார்களானால் (வருந்தாதீர்), இவ்வாறே உமக்கு முன் வந்த தூதர்களையும் திட்டமாக பொய்ப்பித்தனர் - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் மீட்டப்படும். (குர்‍ஆன் 35:4)

2. முகமது கதைகளை இட்டுக்கட்டி சொல்பவர்/கட்டுக்கதைகளைச் சொல்பவர்(A Forger/Plagiarizer):

"உங்களுடைய இறைவன் எதை இறக்கி வைத்தான்?" என்று (குர்ஆனை குறிப்பிட்டு) அவர்களிடம் கேட்கப்பட்டால், "முன்னோர்களின் கட்டுக்கதைகள்" என்று அவர்கள் (பதில்) கூறுகிறார்கள். (குர்‍ஆன் 16:24)

(நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால், (உம்மிடம்)
"நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர்" என்று அவர்கள் கூறுகிறார்கள்; எ(ந்த நேரத்தில், எ)தை இறக்க வேண்டுமென்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன், எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இவ்வுண்மையை) அறிய மாட்டார்கள். (குர்‍ஆன் 16:101)

அப்படியல்ல!
"இவை கலப்படமான கனவுகள்" இல்லை, "அதனை இவரே கற்பனை செய்து கொண்டார்" இல்லை, "இவர் ஒரு கவிஞர்தாம்" (என்று காஃபிர்கள் பலவாறாகக் குழம்பிக் கூறுவதுடன்) முந்தைய (நபிமார்களுக்கு) அனுப்பப்பட்டது போல் இவரும் ஓர் அத்தாட்சியை நம்மிடம் கொண்டு வரட்டும்" என்றும் கூறுகின்றனர். (குர்‍ஆன் 21:5)

"இன்னும்; இது (அல் குர்ஆன்)
பொய்யேயன்றி வேறு இல்லை இதை இவரே இட்டுக்கட்டிக் கொண்டார் இன்னும் மற்ற மக்கள் கூட்டத்தாரும் இதில் அவருக்கு உதவிபுரிந்துள்ளார்கள்" என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர் ஆனால் (இப்படிக் கூறுவதன் மூலம்) திடனாக அவர்களே ஓர் அநியாயத்தையும், பொய்யையும் கொண்டு வந்துள்ளார்கள். (குர்‍ஆன் 25:4)

இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்; "இன்னும்
அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே அவற்றை இவரே எழுதுவித்துக் கொண்டிருக்கிறார் - ஆகவே அவை அவர் முன்னே காலையிலும் மாலையிலும் ஓதிக் காண்பிக்கப்படுகின்றன." (குர்‍ஆன் 25:5)

(நபியே!) "வானங்களிலும், பூமியிலுமுள்ள இரகசியங்களை அறிந்தவன் எவனோ அவனே அதை இறக்கி வைத்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்வோனாகவும் இருக்கின்றான்" என்று கூறுவீராக! (குர்‍ஆன் 25:6)

3. முகமது ஒரு சூனியக்காரர் (A Sorcerer/Magician):

மனிதர்களை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடம் நிச்சயமாகப் பெரும் பதவி கிடைக்கும் என்று நன்மாராயம் கூறுவதற்காகவும், அவர்களிலிருந்தே நாம் ஒரு மனிதருக்கு வஹீ அருள்கிறோம் என்பதில் மக்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டு விட்டதா? காஃபிர்களோ, "நிச்சயமாக இவர் பகிரங்கமான சூனியக்காரரே" என்று கூறுகின்றனர்.(குர்‍ஆன் 10:2)

நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள்; "இவர் (ஒரு சாதாரண) மனிதரே அன்றி வேறில்லை உங்கள் மூதாதையவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் உங்களைத் தடுத்து விடவே இவர் விரும்புகிறார்" என்று கூறுகிறார்கள்; இன்னும் அவர்கள்
"இது இட்டுக் கட்டப்பட்ட பொய்யேயன்றி வேறில்லை" என்றும் கூறுகின்றனர். மேலும், அல் ஹக்கு (சத்தியம்; திருக் குர்ஆன்) அவர்களிடத்தில் வந்தபோது, "இது வெளிப்படையான சூனியமேயன்றி வேறில்லை" என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள்.(குர்‍ஆன் 34:43)

அன்றியும் தங்களிடமிருந்தே அச்சமூட்டி எச்சரிப்பவர் தங்களிடம் வந்ததைப் பற்றி ஆச்சரியமடைந்தனர்
"இவர் ஒரு சூனியக்காரப் பொய்யர்!" என்றும் காஃபிர்கள் கூறினர்.(குர்‍ஆன் 38:4)

4. முகமது ஒரு குறிசொல்பவர்/புலவர்(A Soothsayer and Poet):

"ஒரு பைத்தியக்காரப் புலவருக்காக நாங்கள் மெய்யாக எங்கள் தெய்வங்களைக் கைவிட்டு விடுகிறவர்களா?" என்றும் அவர்கள் கூறுகிறார்கள். (குர்‍ஆன் 37:36)

எனவே, (நபியே! நீர் மக்களுக்கு நல்லுபதேசத்தால்) நினைவுறுத்திக் கொண்டிருப்பீராக! உம்முடைய இறைவனின் அருளால்,
நீர் குறிகாரரும் அல்லர், பைத்தியக்காரருமல்லர்.(குர்‍ஆன் 52:29)

(இது)
ஒரு குறிகாரனின் சொல்லுமன்று (எனினும்) நீங்கள் சொற்பமாகவே (இதை நினைந்து) நல்லறிவு பெறுகிறீர்கள்.(குர்‍ஆன் 69:42)

5. முகமது ஒரு பைத்தியக்காரர்/"ஜின்"னால் பீடிக்கப்பட்டவர்(A Madman - Majnun – lit., "jinn-possessed")

(நினைவூட்டும்) வேதம் அருளப் பட்ட(தாகக் கூறுப)வரே! நிச்சயமாக நீர் பைத்தியக்காரர்தான் என்றும் கூறுகின்றனர்.(குர்‍ஆன் 15:6)

அல்லது, "
அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது" என்று அவர்கள் கூறுகிறார்களா? இல்லை அவர் உண்மையைக் கொண்டே அவர்களிடம் வந்துள்ளார், எனினும் அவர்களில் பெரும்பாலோர் அந்த உண்மையையே வெறுக்கிறார்கள்.(குர்‍ஆன் 23:70)

அவர்கள் அவதை விட்டுப் பின் வாங்கிக் கொண்டு (மற்றவர்களால் இவர்) "கற்றுக் கொடுக்கப்பட்டவர்;
பைத்தியக்காரர்" எனக் கூறினர்.(குர்‍ஆன் 44:14)

முகமதுவின் சம காலத்து மக்கள் அவரை எப்படிப்பட்டவராக கண்டார்கள் என்று குர்‍ஆன் சொல்லும் சாட்சியை சுருக்கமாகச் சொன்னால்:

முகமது ஒரு பொய்யர்( A Liar )

முகமது கதைகளை இட்டுக்கட்டி சொல்பவர்/கட்டுக்கதைகளைச் சொல்பவர்(A forger and plagiarizer)

முகமது ஒரு சூனியக்காரர் (A sorcerer and a magician)

முகமது ஒரு குறிசொல்பவர்/புலவர் (A soothsayer and poet)

முகமது ஒரு பைத்தியக்காரர் / ஜின் என்ற ஆவியினால் பீடிக்கப்பட்டதால், இப்படி பைத்தியமாகி இருக்கலாம், அதாவது பிசாசு பிடித்தவர் (A madman, perhaps as a result of being possessed by jinn, i.e. demon-possessed. )

குர்‍ஆன் என்பது முகமதுவின் வாழ்நாட்களில் சிறிது சிறிதாக இறக்கப்பட்டது என்றும், அதில் சம காலத்து நிகழ்வுகளைப் பற்றிய விவரங்கள் உண்டென்றும் முஸ்லீம்கள் நம்புகின்றனர். மக்காவில் வாழ்ந்த மக்கள் முகமதுவை ஒரு நல்ல நேர்மையான, நம்பத்தகுந்த நபர் என்றுச் சொன்னார்கள் என்று இஸ்லாமிய ஹதீஸ்கள் சொல்லும் விவரங்களுக்கு எதிராக இந்த குர்‍ஆனின் சாட்சி உள்ளது. முஸ்லீம்களின் வேதமாகிய குர்‍ஆன், முஸ்லீம்கள் சொல்வதற்கு எதிராகச் சொல்கிறது, அதாவது முகமதுவின் சமகாலத்து மக்கள் முகமதுவை

ஒரு பொய்யராகக் கண்டனர்,

அவர் ஒரு ஏமாற்றுக்காரராகக் கண்டனர்,

கட்டுக்கதைகளை இட்டுக்கட்டுபவராகக் கண்டனர்.

மற்றும் புராண கட்டுக் கதைகளை இறைவனிடமிருந்து வந்த வெளிப்பாடுகளாக சொல்பவராகக் கண்டனர் என்று குர்‍ஆன் சாட்சி பகருகிறது. இறைவன் என்னோடு பேசினார்(வெளிப்படுத்தினார்) என்று முகமது சொல்லும் போது ஏன் மக்கள் இவரை நம்பவில்லை என்பதற்கான காரணங்கள் இவைகள் ஆகும். முகமது பழைய கற்பனைக் கட்டுக்கதைகளையும், மாயையாக கதைகளையும் சொல்கிறார் என்று அவர்கள் கண்டனர். முகமது தன்னை மக்கள் மிகவும் முக்கியமானவராக கருதவேண்டும் என்றும், தான் சொல்வதை மக்கள் கவனிக்கவேண்டும் என்றும், தன் விருப்பம் நிறைவேறவேண்டும் மற்றும் மக்கள் தன் செய்திக்கு கீழ் படியவேண்டும் என்றும் இவர் எண்ணுகின்றார் என்று அம்மக்கள் கருதினர்.

இதுமட்டுமல்ல, இஸ்லாமிய தாவா ஊழியம் செய்யும் அறிஞர்கள், இந்த இஸ்லாமியரல்லாத மக்களின் குற்றச்சாட்டுகளை புறக்கணிக்கமுடியாது. அதாவது, முகமது மீது மக்கள் வேண்டுமென்றே தவறாக குற்றம் சாட்டினார்கள் என்றுச் சொல்லமுடியாது. காரணம், அப்படி இவர்கள் சொல்வார்களானால், "இஸ்லாமில் நம்பிக்கையற்றவர்கள் முகமதுவை ஒரு நேர்மையானவராகக் கண்டனர்" என்று இவர்கள் முன்வைக்கும் வாதம் பொய் என்று தெளிவாகிவிடும், மற்றும் இவர்களின் வாதங்களில் உள்ள முரண்பாட்டை மக்கள் தெளிவாக கண்டுக்கொள்வார்கள். ஒன்றை மட்டும் எல்லாரும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள், அதாவது "முகமது ஒரு நேர்மையானவர் என்று அவர் எதிரிகள்(இஸ்லாமியரல்லாதவர்கள்) நற்சாட்சி சொன்னார்கள்" என்றுச் சொல்லி, முகமதுவின் நபித்துவததை நிருபிக்க பாடுபடுவது இந்த இஸ்லாமிய அறிஞர்களே என்பதை மறக்கக்கூடாது.

இஸ்லாமிய சகோதரரோ அல்லது சகோதரியோ, நம்பிக்கையில்லாத மக்கள் முகமதுவின் நடத்தைப் பற்றி சொல்லும் குற்றச்சாட்டை தள்ளிவிடமுடியாது அல்லது புறக்கணித்துவிடமுடியாது. குறைந்த‌ப‌ட்ச‌மாக‌, இஸ்லாமிய‌ர‌ல்லாத‌ ம‌க்கா ம‌க்கள்(எதிரிகள்) முக‌ம‌துவின் ந‌ட‌த்தைப் ப‌ற்றிச் சொன்ன ந‌ற்சாட்சியை ந‌ம்ப‌வேண்டும் என்றுச் சொல்லும் இஸ்லாமிய‌ர்க‌ள், அதே எதிரிக‌ள், முக‌ம‌துவின் ந‌ட‌த்தைப் ப‌ற்றிச் சொல்லும் இந்த‌ குற்ற‌ச்சாட்டுக‌ளையும் நாம் நம்பி, முகமது ஒரு நல்ல நடத்தையுள்ளவர் அல்ல என்று நம்பலாம் அல்லவா? இஸ்லாமியர்கள் ஏதாவது ஒன்றைத் தான் தெரிந்தெடுத்துக்கொள்ளமுடியும், கூழும் குடிக்கனும், மீசையிலும் ஒட்டக்கூடாது என்றால் அது நடக்காது.( S/he cannot therefore simply discredit the claims of the unbelievers when they are unflattering to the character of Muhammad. After all, if their testimony is reliable enough to support of Muhammad's integrity then by the same token the unbelievers' claims are also good enough to call his character into question. The Muslims cannot have their cake and eat it too.)

மூலம்: http://www.answering-islam.org/Shamoun/mhd_amin2.htm

 

 



மூலம்:ஆன்சரிங் இஸ்லாம்

StumbleUpon.com Read more...

"கிறிஸ்தவன் பார்வை" என்ற தள பதிவு பற்றிய ஒரு "கிறிஸ்தவனி(உமரி)ன் பார்வை"

"கிறிஸ்தவன் பார்வை" என்ற தள பதிவு பற்றிய ஒரு "கிறிஸ்தவனி(உமரி)ன் பார்வை"




"கிறிஸ்தவன் பார்வை" என்ற தள பதிவு பற்றிய "ஒரு கிறிஸ்தவனின் பார்வை"

முன்னுரை: கிறிஸ்டியன்ஸ் பார்வை   என்ற தளத்தில், என்னைப் பற்றி ஒரு சில வரிகள் எழுதப்பட்டு இருந்தது, அதற்கான என் பதிலை இந்த பதிவில் காணலாம். என் கட்டுரைக்கு பின்னூட்டமிட்டிருந்த ஒரு அனானிமஸ்ஸுக்கு பதில் அளித்து இருந்தேன், அதைப் பற்றி, விமர்சனத்திற்கு என் பதிலை இந்த பதிவில் காணலாம்.


ChristianPaarvai said:
//

Source: http://christianpaarvai.blogspot.com/2008/07/1_21.html

முஸ்லிம்களின் போற்றுதற்குரிய தலைவரான உமர் (ரழி) அவர்களின் பெயரில் ஒளிந்து கொண்டு ஒரு கிறிஸ்தவர் இப்போது இஸ்லாத்தை விமர்சித்து வருகிறார். அன்று உமர் (ரழி) அவர்களின் வாழ்வில் ஒளி விளக்காய் அமைந்த குர்ஆன் மீது சேறு வாரி இறைக்கின்றார்! முஸ்லிம்களிடம் குர்ஆன் உள்ளவரை அவர்களை அசைக்க முடியாது என்று அறிந்து கொண்ட மிஷினரிகளின் விலை குறைந்த தந்திரம் இது.//

Umar said:

நீங்கள் பைபிளை விமர்சிப்பதில்லையா? பைபிளை விமர்சிப்பதை உங்கள் நபி 7ம் நூற்றாண்டிலேயே ஆரம்பித்துவிட்டாரே?

முஸ்லீம்களுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா? சொல்லுங்கள்.

உங்கள் குர்‍ஆன் சொல்வதை, உங்கள் நபி சொல்வதை நம்புவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு என்பதை நான் அறிவேன், அதே நேரத்தில் எங்கள் வேதம் சொல்வதை நம்புவதற்கு எங்களுக்கு உரிமை உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும்.

எங்கள் வேதம் பற்றி நீங்கள் விமர்சிக்கும் போது, அதற்கு பதில் தருவதும் எங்கள் கடமை, அதே நேரத்தில் பைபிளை நீங்கள் விமர்சிப்பதால், உங்கள் குர்‍ஆன் பற்றியும் நாங்கள் சில சந்தேகங்கள், உண்மைகளை நாங்கள் சொல்கிறோம், அவ்வளவு தான், இதில் விரோதிப்பதற்கு ஒன்றுமில்லை.

//குர்ஆன் மீது சேறு வாரி இறைக்கின்றார்//

7ம் நூற்றாண்டில் வந்து பைபிள் மீது சேறு வாரி இறைத்தது யார்?
உங்கள் முகமது அன்று ஆரம்பித்த வேலையை இன்றும் செய்துக்கொண்டு இருப்பவர்கள் யார்?
நீங்கள் மட்டும் பைபிள் மீது சேறுவாரி இறைப்பது சரியாகுமா?

நீங்கள் எது சொன்னாலும், கிறிஸ்தவர்கள் சும்மா இருக்கவேண்டும் அதைத் தானே நீங்கள் எதிர்ப்பார்ப்பது? உங்களுக்கு பதில் அளிக்கக்கூடாது, அதே நேரத்தில் கேள்வியும் கேட்கக்கூடாது?  கேள்வி கேட்டால், சேறு வாரி இறைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு வேறு? இது என்ன நியாயம் என்றுச் சொல்லுங்கள்?


ChristianPaarvai said:
// முஸ்லிம் பெயரை வைத்துக் கொண்டு எதையேனும் சொன்னால் முஸ்லிம்களை ஏமாற்றி விடலாம் என்று நினைக்கின்றனர். //


Umar said:

மன்னிக்கனும் நண்பரே மன்னிக்கனும். என்னைப் பொருத்தவரையில், நான் உமர் என்ற பெயர் வைத்துக்கொண்டு யாரையும் ஏமாற்றவில்லை.

1) என் கட்டுரைகளின் தலைப்பிலேயே, என் செய்தியை பெரும்பான்மையாக சொல்லி விடுவேன். "இஸ்லாமுக்கு பதில்/மறுப்பு" என்று தெளிவாக சொல்லிவிடுவேன். என் கட்டுரைகளை படிப்பதற்கு முன்பாகவே, இது ஒரு இஸ்லாமுக்கு பதில் சொல்லும் கட்டுரை என்ற எண்ணத்தை என் கட்டுரையை வாசிப்பவர்களின் உள்ளத்தில்  கொடுத்துவிடுகிறேன்.உங்களைப்போல, மூல தொடுப்புக்களை கொடுக்காமல், வாசகர்களை வஞ்சிக்கமாட்டேன்.

2)  பெரும்பான்மையாக என் கட்டுரைகளின் முதல் பத்தியிலேயே "முன்னுரை/குறிப்பு" என்று எழுதி, அந்தக் கட்டுரையில் எதைப்பற்றி விவாதிக்கப்போகிறேன் என்று விவரமாக எழுதிவிடுவேன். என் கட்டுரைகளை படிப்பவர்கள் முதல் பத்தியிலேயே இது ஒரு கிறிஸ்தவ கட்டுரை என்பதை அறிந்துக்கொள்வார்கள். பின் அவர்களுக்கு விருப்பம் இருந்தால், மேலே படிப்பார்கள், வேண்டாமென்றால் விட்டுவிடுவார்கள்.

3) இஸ்லாமியர்கள் சிலர் செய்வது போல, தங்களை கிறிஸ்தவர்களாக காட்டிக்கொண்டு, எனக்கு அறிவுரை சொல்வது போல,  என்னை ஒரு முஸ்லீமாக காட்டிக்கொண்டு, யாருக்கும் தெரியாமல் மற்ற முஸ்லீம்களுக்கு அறிவுரை சொல்வது போல சொல்லமாட்டேன்.  உதாரணத்திற்கு, ஒரு இஸ்லாமியர் தன்னை கிறிஸ்தவரைப் போல காட்டிக்கொண்டு எனக்கு பின்னூட்டம் இட்டுள்ளார். இப்படியெல்லாம் நான் செய்வதில்லை.

4) எல்லா கட்டுரைகளிலேயும் என்னை ஒரு கிறிஸ்தவன் என்று தான் காட்டியுள்ளேனே ஒழிய, ஒரு முஸ்லீமாக நான் காட்டிக்கொள்வதில்லை.

 

ChristianPaarvai said:
//ஏற்கெனவே தங்களது இணைய தளத்துக்கு ஈஸா குர்ஆன் என்று வைத்து வம்பில் மாட்டியுள்ளனர். இதற்கு முன் அனானிமசுக்கு பதிலளிக்கையில் இந்த உண்மையை உளறி விட்டனர். பெயர் வைத்ததற்காக வருத்தப் படுவதாகவும் வைத்து விட்டதால் எடுக்க முடியவில்லை என்ற வாசகத்தை மட்டும் தந்திரமாக நீக்கி விட்டனர். //

 
Umar said:
 
என் தளத்திற்கு "ஈஸா குர்‍ஆன்" என்று வைத்து என்ன வம்பில் மாட்டிக்கொண்டேன் சொல்லுங்கள் பார்க்கலாம்? யாராவது காபிரைட் வழக்கு தொடர்ந்தார்களா?  இந்த உளறும் வேலை என்னுடையது கிடையாது, அதனால், தான் நான் எப்போதும் சொல்வதுண்டு, முஸ்லீம்களை பேசவிடுங்கள், அப்போது தான் உண்மை வெளிப்படும் என்று.

என் தளத்திற்கு ஏன் இந்த பெயர் வைத்தேன் என்று போன வருடமே (செப்டெம்பர் 2007)  நான் ஒரு கட்டுரையை எழுதி அதற்கு பதில் அளித்துள்ளேன்.
பார்க்க:

-----------------

1. உங்கள் தளத்தின் நோக்கம் என்ன? உங்கள் தளத்திற்கு "ஈஸா குர்-ஆன்" என்ற பெயர் வைத்ததற்கான காரணம் என்ன?

என் தளத்தின் நோக்கம், இயேசுவைப் பற்றியும், பைபிளைப் பற்றியும் இஸ்லாமியர்கள் பறப்பிக்கொண்டு வரும் சில தவறாக கோட்பாடுகள் தவறு என்று தகுந்த ஆதாரங்களோடு எடுத்துச் சொல்வதாகும். பைபிளின் "தேவன்" குர்-ஆனின் "அல்லா" இல்லை என்பதை உலகிற்கு முக்கியமாக தமிழ் மக்களுக்குச் சொல்வதாகும்.

இயேசுவை தேவனின் வார்த்தை என்று பைபிள் சொல்கிறது, அது போல "குர்-ஆனை" இஸ்லாமியர்கள் இறைவனின் வார்த்தை என்றுச் சொல்கிறார்கள். எனவே தான் "ஈஸா குர்-ஆன்" என்று பெயர் வைத்தேன்.

Sources:
http://isakoran.blogspot.com/2007/09/1.html
http://www.geocities.com/isa_koran/tamilpages/QandA/QandAUmar/UmarQandA-1.htm
http://tamilchristians.com/modules.php?file=viewtopic&name=Forums&p=5710


நான் என்னவோ, "குர்‍ஆன்" என்ற பெயரையும், "உமர்" என்ற பெயரையும் வைத்துக்கொண்டு, உலகத்தையே சூரையாடிவிட்டதாக சொல்கிறீர்கள்.

உங்கள் நபி, பைபிளோடு தன்னை சம்மந்தப்படுத்திக்கொண்டு, தீர்க்கதரிசிகளில் தான் கடைசியானவர் என்று தன்னை காட்டிக்கொண்டு, இறைவசனம் என்றுச் சொல்லி, முந்தைய வேதங்களில் உள்ளவற்றை ஆங்காங்கே சில விவரங்களைச் சொல்ல அவருக்கு உரிமை இருக்கும் போது, வெறும் "குர்‍ஆன்" என்ற பெயரும், "உமர்" என்ற பெயரையும் வைத்துக்கொள்ள எனக்கு உரிமையில்லையா?

இப்படி பைபிளின் தீர்க்கதரிசிகளின் பெயர்களை சொந்தம் கொண்டாடியது உங்கள் முகமது என்பதை மறக்கவேண்டாம்.

எனவே, 7ம் நூற்றாண்டில் திடீரென்று ஒருவர் வந்து, நானும் ஒரு நபி தான், என்னை இறைவன் அனுப்பினார் என்றுச் சொல்லி, பைபிளோடு தன்னை சம்மந்தப்படுத்த உரிமை உங்கள் நபிக்கு இருக்கும் போது, என் தளத்திற்கு "ஈஸா குர்‍ஆன்" என்ற பெயர் வைத்தால், என்ன குடிமுழுகிவிடும் சொல்லுங்கள்.
---------

ChristianPaarvai said:
// கிறித்தவ சபையினரே! கிறித்தவர்களாகிய உங்களுக்கு முஸ்லிம் பெயர் எதற்கு? உங்கள் புரட்டுகளைப் பற்றி நாங்கள் எழுதும் போது நாங்கள் கிறித்தவ பெயரைப் பயன் படுத்துதில்லை. //

Umar Said:

இஸ்லாமியர்களே, உங்கள் நபிக்கு பைபிளோடு சம்மந்தமெதற்கு?  யூதர்களின் மற்றும் கிறிஸ்தவர்களின் விவரங்களின் அவசியமெதற்கு? சொல்லுங்கள்.

என்னவோ, இஸ்லாமிய பெயர் வைத்தால், உடனே முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களாக மாறிவிடுவது போல கவலைப்படுகிறீர்கள்?

உங்கள் புரட்டுக்களைப் பற்றி எங்களுக்குத் தெரியாதா என்ன? பொய்களை அள்ளிவீசுவதில், தில்லு முல்லு செய்வதில் உங்களை யார் ஜெயிக்கமுடியும் சொல்லுங்கள்?

உங்கள் முகமது, தன்னை ஒரு தீர்க்கதரிசி என்றுச் சொல்லி, உண்மையான தேவனின் தீர்க்கதரிசிகளாகிய மோசே, எலியா, யோவான் பட்டியலில் தன்னை இணைத்துக்கொண்டாரே, இதை விடவா ஒரு புரட்டு இருக்கமுடியும்?

முகமது தன்னை ஒரு நபி என்றுச் சொல்லட்டும், அதை நீங்கள் நம்புங்கள், இதில் தவறில்லை, ஆனால், பைபிளைப் பற்றி விமர்சிக்க அவருக்கு என்ன அதிகாரம் உண்டு? அவரை மற்றவர்கள் நம்பவேண்ட அவசியமென்ன?

உங்கள் தளத்தின் பெயர் "கிறிஸ்டியன் பார்வை" என்று வைத்துள்ளீர்கள்.

யாராவது முதலாவது உங்கள் தள பெயரைப் பார்த்தால்,  ஏதோ ஒரு கிறிஸ்தவன் தளம் என்று நினைக்கத்தோன்றும். இருந்தாலும், ஏன் வைத்தீர்கள் என்று நான் கேட்கமாட்டேன், ஏனென்றால் பெயரில் ஒன்றுமில்லை, சொல்லும் செய்தியில் தான் எல்லா விவரங்களும் உள்ளன. ஏன் "கிறிஸ்தவன்(ம்)" என்ற வார்த்தையை பயன்படுத்தினீர்கள் என்று உங்களை எந்த கிறிஸ்தவனும்  கேட்கமாட்டான், காரணம், "கிறிஸ்தவம்" என்ற பெயர் வைத்த மாத்திரத்தில், எல்லா கிறிஸ்தவனும் முஸ்லீமாக மாறிவிடப்போவதில்லை.

ChristianPaarvai said:
//உங்கள் பெயரை வைத்து எழுத வேண்டிய அவலநிலை எங்களுக்கு இல்லை. காரணம் உங்கள் புரட்டு வாதங்களுடன் மோதுவதற்கு எங்களுக்கு எந்தக் குறுக்கு வழியும் தேவையில்லை. //

Umar said:

எங்கள் பெயரை வைத்துக்கொண்டு எழுதவேண்டிய அவல நிலை உங்கள் நபிக்கு உண்டு. யூதர்களின் மற்றும் கிறிஸ்தவர்களின் விவரங்களை பயன்படுத்தி, தன்னை ஒரு நபியாக, உண்மையான இறைவன் தன்னை தெரிந்துக்கொண்டார் என்றுச் சொல்லி தன் விருப்பத்திற்கு ஏற்றார்  போல தீர்க்கதரிசனங்கள் என்ற பெயரில் வசனங்களைச் சொல்லி வாழ்ந்தவர் உங்கள் நபி.  இல்லை இல்லை, முகமது அவர்கள் சொன்னது உண்மையான தீர்க்கதரிசனங்களே என்று நீங்கள் சொல்வீர்கள். நல்லது அது உங்கள் நம்பிக்கை, இதில் தவறு இல்லை. ஆனால், கிறிஸ்தவர்களை விமர்சிக்க அவருக்கு ஏது அதிகாரம்?

எங்களுக்கு குறுக்குவழி தேவையில்லை நண்பரே, உங்களுக்குத்தான் குறுக்குவழி தேவையாக உள்ளது.

இஸ்லாமிய நாடுகளில் ஒரு முஸ்லீம் கிறிஸ்தவனாக மாறினால், அவனை கொள்ளவேண்டும் என்றுச் சொல்லி, சட்டத்தை இயற்றி இஸ்லாமை தக்கவைத்துக்கொள்வது ஒரு குறுக்கு வழி இல்லையா? விமர்சிப்பவர்களை கொன்றுவிட்டால், எதிரியே இருக்கமாட்டான் என்று கொல்வது குறுக்கவழி இல்லையா?

ஒருவன் இஸ்லாமை விட்டு போனால் போகட்டும், குர்‍ஆனுக்கு மனிதர்களை தன்னிடம் இழுத்துக்கொள்ளும் தன்மை உண்டு, உண்மை உண்டு,  எனவே, இஸ்லாமை விட்டு வெளியேறுபவனை கொல்லவேண்டாம் என்று இஸ்லாமிய நாடுகளில் சட்டமியற்ற முடியுமா?


நான் இன்று இஸ்லாமுக்கு ஒரு சவால் விடுகிறேன், உலகத்தில் இஸ்லாமை விமர்சிப்பவர்களை ஒன்றும் செய்யமாட்டோம் என்றுச் சொல்லி சட்டத்தை இயற்றி வாழ்ந்துப் பாருங்கள், இஸ்லாமை விமர்சிப்பவர்களுக்கு தீங்கை இழக்காமல் இருந்துக் காட்டுங்கள். அப்போது, உங்கள் இஸ்லாமின் நிலை என்னவாகும் என்று கற்பனை செய்துபார்க்க முடியுமா?

என் கட்டுரைகளில் யார் எழுதுகிறார்கள் என்பதை விட, என்ன எழுதுகிறேன் என்பதைத் தான் வாசகர்கள் அறிய வேண்டும் என்று விரும்புகிறேன்.

ChristianPaarvai said:
// எங்களிடம் இறைவேதம் என்ற பலமான ஆயுதம் உள்ளது. வாருங்கள்! ஒளிந்து கொண்டு கூக்குரலிடாதீர்கள்! உங்களின் கோமாளிக் கூத்தை விட்டு விட்டு இணையப் பேரவை சகோதரர்களின் அழைப்புக்கு பதிலளித்து பகிரங்கமாக வெளியே வாருங்கள். எப்போது வருகிறீர்கள்?

அனானிமசுக்கு பதில்

இப்போதெல்லாம் பதிவெழுத நேரமில்லாததாலோ என்னவோ அனானிமசுகளுக்கு அளித்த பதிலை மறு பதிவு செய்து வருகிறார்கள். எது எவ்வாறாயினும் அனானிமஸ் கேட்டுள்ள கேள்விகளுக்கு பதிலளித்ததிலும் பல மழுப்பல்கள். சில விமர்சனங்கள். அவை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். அனானிமசின் கேள்விகளும் உமர் (என்ற பெயரில் ஒளிந்துள்ள கிறித்தவனி)ன் மழுப்பல்களும் தெளிவான விளக்கங்களும். அடுத்தடுத்த பகுதிகளில் இன்ஷா அல்லாஹ்.

Source: http://christianpaarvai.blogspot.com/2008/07/1_21.html

//

Umar Said:

நீங்கள் அமைதியானவர்களாக இருந்தால், உங்கள் முன் வந்து விவாதிக்க நாங்கள் தயார்? ஆனால், உங்களை யார் நம்புவார்கள்? 

மேடையில் விவாதம் என்றுச் சொல்லி, மேடையில் நீங்கள் பேசிக்கொண்டு இருப்பீர்கள், ஆனால், யாரோ ஒரு முஸ்லீம் எங்கள் மீது கல்லெரிவார், இது எங்களுக்கு வேண்டுமா? உங்களை நம்பலாம், ஆனால், எல்லா இஸ்லாமியர்களை நம்பமுடியாது?

இப்படி எங்களுக்கு தீங்கிழைப்பது நியாயமா என்று நாங்கள் கேட்டால், "அவர்களுக்கு மார்க்க அறிவு கிடையாது, இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள்" என்று சொன்ன வேதாந்தமே மறுபடியும் சொல்வீர்கள், ஆனால், நஷ்டமடைவது யார்? நாங்கள் தான்.

உங்களால் மேடையில் தான் பேசமுடியுமா? எழுத்து மூலம் விவாதிக்க முடியாதா?  வீரர்களாக இருந்தால், எழுத்து விவாதத்திற்கு வாருங்கள்.

நாங்கள் கோழைகள் தான், வாளுக்கு, அடிகளுக்கு நாங்கள்(மன்னிக்கனும் முக்கியமாக நான்) பயப்படுகின்றோம். ஐந்தறிவு படைத்த மிருகங்கள் இருக்கும்  காட்டில் யாராவது பாதுகாப்பு இல்லாமல் நுழைய முடியுமா?
 அதுபோலத் தான், நாங்கள் பாதுகாப்பை கருதி மறைந்து எழுதுகிறோம். 

நீங்கள் தான் வீரர்கள் என்றுச் சொல்கிறீர்களே, எழுத்து விவாதத்திற்கு வருவது தானே? முகமதுவின் வாழ்க்கையை உலக மக்கள் அறிய விவாதிப்பது தானே?

உங்களிடம் தான் உண்மை சத்தியம் உண்டே, அப்படியானால், ஏன் எழுத்து விவாதத்திற்கு பயப்படுகிறீர்கள்?

யார் கோழை / யார் வீரன்:
----------------------------------------------

ஒரு சில இஸ்லாமிய தளம் தவிர மற்ற அனைத்து இஸ்லாமிய தளங்களும், வீராவேசத்தொடு பதில் எழுதுவார்கள், ஆனால், எந்த கட்டுரைக்கு பதில் எழுதுகிறார்கள் அதன் தொடுப்பு என்ன? என்று பதிக்கமாட்டார்கள் ஏன்? பயம், எங்கள் கட்டுரைகளை படித்து, உண்மையை முஸ்லீம்கள் தெரிந்துக்கொள்வார்கள் என்ற பயம்.  அவர்கள் சொல்வது பொய் என்பதை சாதாரண முஸ்லீம்கள் அறிந்துக்கொள்வார்கள் என்ற பயம். வீரம் என்பது வெறும் கட்டுரைகளையும், பதில்களையும் எழுதுவது அல்ல, அதற்கு பதிலாக யாருக்கு பதில் எழுதுகின்றோம் என்பதை தொடுப்புடன் எழுதினால், அதைத்தான் வீரம் எனலாம், அதைவிட்டுவிட்டு, நாங்கள் பதில் தருகிறோம் என்று அனானிமஸ்ஸாக எழுதுவதில்லை.


ஆனால், நாங்கள் அப்படி அல்ல, யாருக்கு பதில் எழுதுகிறோம் என்று முஸ்லீம் தளத்தின் தொடுப்பையும் கொடுப்போம், ஏன் தெரியுமா? இஸ்லாமை ஒருவன் அறிய அறிய, அதன் உண்மையை புரிந்துக்கோள்வான், மற்றும் இஸ்லாம் பற்றி சிந்திப்பவன், உண்மையாகவே, அதை விட்டு வெளியே வந்துவிடுவான். அதனால், தான் அமெரிக்காவில் இஸ்லாமுக்கு மாறுபவன் சில ஆண்டுகளிலேயே 75% பேர், இஸ்லாமை விட்டு வெளியேறி விடுகின்றனர்.

அதனால், தான் நாங்கள் எந்த இஸ்லாமிய தொடுப்பையும் கொடுக்க தயங்குவதில்லை. நாங்கள் எங்கள் கட்டுரைகளை படிக்கும் கிறிஸ்தவர்களை உங்கள் இஸ்லாமிய கட்டுரைகளை படிக்க உட்சாகப்படுத்துகிறோம், அதனால், தான் இஸ்லாமிய தள தொடுப்புக்களைக் கொடுக்கிறோம்.

உதாரணத்திற்கு, என் தளத்திலோ, அல்லது தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளத்திலோ, சென்று பாருங்கள், எத்தனை கட்டுரைகளில் இஸ்லாமிய தள தொடுப்புக்கள் இருக்கின்றன என்று. அதே போல, உங்கள் இஸ்லாமிய தளங்களில் எத்தனை தளங்களில் எங்கள் தள கட்டுரைகளின் தொடுப்பை கொடுத்துள்ளீர்கள். இதுவே போதும், நீங்கள் பயந்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதற்கு, உங்களுக்கு உங்கள் பலமான இறைவேதம் மீது எவ்வளவு நம்பிக்கை இருக்கின்றது என்று?

எங்கள் நம்பிக்கை என்னவென்றால், இயேசுவின் போதனைகளை படிக்கும் ஒரு கிறிஸ்தவன், பெரும்பான்மையாக முகமதுவின் போதனைகளால் எந்த காலத்திலும் மயங்க மாட்டான் என்ற நம்பிக்கைத் தான். இப்படிப்பட்ட நம்பிக்கை உங்களுக்கு உண்டா? அப்படி இருக்குமானால், எங்கள் தள தொடுப்புக்களை தைரியமாக தாருங்கள்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள்,  பல ஆயிர‌ கிறிஸ்தவர்கள் இஸ்லாமை தழுவினார்கள் என்று எழுதுவார்கள், ஆனால், எந்த ஒரு ஆதாரத்தையும் தரமாட்டார்கள்.

இன்னொரு குழு உள்ளது, அவர்கள், ஈஸா குர்‍ஆன் என்ற பெயரையும் எழுத பயப்படுவார்கள், உமர் என்ற என் பெயரையும் பயன்படுத்த பயப்படுவார்கள். "ஒரு கிறிஸ்தவர் எழுதுகிறார்" என்பார்கள், ஆனால், பெயரை குறிப்பிடமாட்டார்கள். இப்படி பயந்துப்போய் கட்டுரையை எழுதுபவர்கள் நீங்கள்.

ஆனால், உங்களிடம்(கிறிஸ்தவ பார்வை தளத்திடம்) நான் எதிர்ப்பார்ப்பது, (நான் பதில் எழுதும் ஒவ்வொரு தளத்திற்கும் இந்த வேண்டுதலை வைத்துள்ளேன், ஆனால், செவிடன் காதில் ஊதிய சங்கு தான்)

உங்கள் இஸ்லாம் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால்?

உங்கள் நபி உண்மையிலேயே ஒரு நபி என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால்?
குர்‍ஆனை யார் குற்றப்படுத்தினாலும், அது செல்லுபடியாகாது, குர்‍ஆன் தான் கடைசியில் ஜெயிக்கும் என்ற நம்பிக்கை இருந்தால்?
எங்கள் கட்டுரைகளைப் படித்தால், முஸ்லீம்கள் இஸ்லாமின் மீது சந்தேகம் கொள்ளமாட்டார்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால்?

எங்களுக்கு பதில் அளிக்கும் போது, எங்கள் தள கட்டுரைகளின் தொடுப்புக்களை வெளியிடுங்கள், பெயர்களை வெளியிடுங்கள். நீங்களும் இப்படி வெளியிடவில்லையானால், உங்களையும் அந்த பட்டியலில் இணைய நண்பர்கள் சேர்த்துவிடுவார்கள், மட்டுமல்ல, இஸ்லாம் ஒரு போலி என்பதை உலகம் இதன் மூலம் அறிய‌ நீங்கள் உதவி  செய்கிறவர்களாக இருப்பீர்கள்.

கர்த்தருக்கு சித்தமானால், அடுத்த பதிலில் சந்திக்கலாம்.
 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP