சமீபத்திய பதிவுகள்

12 சிக்சர் அடித்து மார்ஷல் சாதனை

>> Sunday, August 31, 2008

 
lankasri.comகனடாவுக்கு எதிரான ஒரு தின ஆட்டத்தில் 12 சிக்சர்கள் விளாசி சாதனை புரிந்தார் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் சேவியர் மார்ஷல்
கனடாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்தது.

மேற்கிந்தியத் தீவுகளின் சேவியர் மார்ஷல் 118 பந்துகளில் 12 சிக்சர், 11 பவுண்டரிகளுடன் 157 ரன்கள் குவித்தார். ஒரு தின ஆட்டங்களில் மார்ஷல் அரை சதத்தைக் கடந்தது இதுவே முதல்முறை.

1996-ல் இலங்கையின் சனத் ஜயசூர்யவும், பாகிஸ்தானின் ஷாஹித் அப்ரிதியும் 11 சிக்சர்கள் அடித்ததே ஓர் ஆட்டத்தில் அதிக சிக்சருக்கான சாதனையாக இதுவரை இருந்தது.

தொடர்ந்து ஆடிய கனடாவும் சிறப்பாக விளையாடியது. இருப்பினும் 47.2 ஓவர்களில் 254 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மேற்கிந்தியத் தீவுகள் 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

 

http://www.lankasrisports.com/index.php?subaction=showfull&id=1219555745&archive=&start_from=&ucat=4&

StumbleUpon.com Read more...

சிரஞ்சீவிக்கு சிக்கல் நீங்கியது

   
 
Imageஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் லக்கி ரெட்டிபாளையத்தை சேர்ந்தவர் வக்கீல் சென்ன கிருஷ்ணய்யா. இவர் கடப்பா மாவட்ட தெலுங்கு தேசம் தலைவராக இருந்து வந்தார்.
கடந்த மார்ச்மாதம் இவர் தேர்தல் கமிஷனில் பிரஜா ராஜ்யம் என்ற கட்சி பெயரை பதிவு செய்தார். பின்னர், தான் தொடங்கிய கட்சிக்கு ஒன்றிரண்டு நிர்வாகிகளை நியமித்து இருந்தார்.
இந் நிலையில் சிரஞ்சீவி சமீபத்தில் திருப்பதியில் நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் தனது கட்சியின் பெயர் பிரஜா ராஜ்யம் என்று அறிவித்தார். இதை கேட்டதும் வக்கீல் சென்ன கிருஷ்ணய்யா அதிர்ச்சி அடைந்தார். உடனே இது பற்றி சிரஞ்சீவி கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்தார். இதனால் சிரஞ்சீவி கட்சிக்கு பிரஜா ராஜ்யம் என்ற பெயர் வைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து சென்ன கிருஷ்ணய்யாவை சிரஞ்சீவி கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சந்தித்து பேசினர். அப்போது அவருக்கு கட்சியில் முக்கிய பதவி மற்றும் ராயகோட்டி சட்டசபை தொகுதியில் போட்டியிட டிக்கெட் தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்று சென்ன கிருஷ்ணய்யாதான் பதிவு செய்த பிரஜாராஜ்யம் கட்சி பெயரை வாபஸ் பெற முடிவு செய்தார்.
இதையடுத்து சிரஞ்சீவியிடம் நெருங்கிய நண்பர் வினய்குமார், சிரஞ்சீவியின் வக்கீல் பிரகலாதன் ஆகியோர் சென்ன கிருஷ்ணய்யாவை டெல்லியில் உள்ள தேர்தல் கமிஷன் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.
பின்னர் அவர், தான் அங்கு பதிவு செய்த பிரஜாராஜ்யம் பெயரை வாபஸ் பெற்றார். இதையடுத்து சிரஞ்சீவி கட்சி பெயர் பிரஜா ராஜ்யத்துக்கு ஏற்பட்ட சிக்கல் நீங்கியது. இது பற்றி சென்ன கிருஷ்ணய்யா கூறும்போது, "சிரஞ்சீவி மக்கள் செல்வாக்கு மிகுந்தவர். ஏழை பங்காளன் அரசியலில் அவர் குற்றப் பின்னணி உள்ளவர்களை சேர்க்கமாட்டேன் என்று அறிவித்துள்ளார். இதன் மூலம் அவர் அரசியலில் உள்ள ரவுடிகளை ஒழிக்க முடிவு செய்துள்ளார்''.
எனவே அரசியலில் மாபெரும் மாற்றத்தை கொண்டு வர இருக்கும் சிரஞ்சீவிக்கு எனது ஆதரவை தெரிவிக்கும் வகையில் நான் பதிவு செய்த பிரஜாராஜ்யம் பெயரை வாபஸ் வாங்கி விட்டேன் என்றார்.

 

 

StumbleUpon.com Read more...

நரேந்திர மோடிக்கு விசா! அமெரிக்க அரசு மறுப்பு


அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…

Imageகுஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா கொடுக்க அமெரிக்க அரசு மறுத்துள்ளது.

 

அமெரிக்காவில் நடைபெறும் உலக குஜராத்தி மாநாட்டில் மோடி பங்கேற்பதாக உள்ளது. இந்த நிலையில் மோடிக்கு விசா வழங்கக்கூடாது என்று அமெரிக்காவில் உள்ள மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், மோடிக்கு விசா வழங்கப்பட மாட்டாது என்று அமெரிக்க அரசு உறுதியாகத் தெரிவித்துள்ளது.

2002-ம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ராவில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் மோடிக்கு பங்குண்டு என்று கூறி அவருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பெட்டி மால்கமுக்கு அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் எழுதிய கடிதத்தில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வார இறுதியில் நியூஜெர்சியில் உலக குஜராத்தி மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. எனவே நரேந்திர மோடிக்கு விசா கொடுக்கக் கூடாது என்று இதுவரை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 32 பேர் அந்நாட்டு அரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர். இந்த கடிதங்களுக்கு அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சர் மாத்யூ ரிய்னோல்ட்ஸ் பதில் கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில், உங்கள் கருத்துகளில் வெளியுறவுத் துறை அமைச்சகம் அதிக அக்கறை கொண்டுள்ளது. மோடி செய்துள்ள மனித உரிமை மீறல் செயல்களை நாங்கள் நன்றாகவே அறிந்து வைத்துள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.

இதுவரை அவருக்கு விசா வழங்கப்படவில்லை. விசா கேட்டு விண்ணப்பம் வந்தாலும் விதிகளுக்குட்பட்டுதான் பரிசீலிப்போம் என்று அவர் கூறியுள்ளார்.


http://www.adhikaalai.com/index.php?/en/?????????/???????/????????-????????-????!????????-????-???????

StumbleUpon.com Read more...

ஓ இது நல்லா இருக்கே !!!!!!!!!!!!!!

>> Friday, August 29, 2008

StumbleUpon.com Read more...

ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்து,கர்நாடகத்தில் கிறிஸ்தவ பள்ளிக்கூடம், கல்லூரிகள் இன்று மூடப்படுகிறது

>> Thursday, August 28, 2008


ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்து
கர்நாடகத்தில் கிறிஸ்தவ பள்ளிக்கூடம், கல்லூரிகள் இன்று மூடப்படுகிறது
பெங்களூர் பேராயர் பெர்னார்டு மோரஸ் பேட்டி


பெங்களூர், ஆக.29-

ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்து கர்நாடகத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) மூடப்படும் என்று பெங்களூர் கிறிஸ்தவ பேராயர் பெர்னார்டு மோரஸ் தெரிவித்தார்.

கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்

பெங்களூர் கிறிஸ்தவ பேராயரும், கர்நாடக கத்தோலிக்க பிஷப்புகள் கவுன்சிலின் தலைவருமான பெர்னால்டு மோரஸ் நேற்று பெங்களூர் பிஷப் இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கிறிஸ்தவ மதம் அமைதி, அன்பை விரும்பும் மதமாகும். மக்கள் நிம்மதியாக வாழ கல்வி போன்ற பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. இந்த நிலையில், ஒரிசாவில், நடந்த வன்முறையில், கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதில் கிறிஸ்தவர்கள் 8 பேர் கொல்லப்பட்டனர். தேவாலயங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. கிறிஸ்தவர்கள் நடத்தும் ஆதரவற்றோர் விடுதிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. கிறிஸ்தவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு உள்ளன. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவம் கிறிஸ்தவர்களின் மனதை மிகவும் புண்படுத்தி உள்ளது.

இன்று மூடப்படுகிறது

ஒரிசாவில், லட்சுமணானந்தா சரசுவதி சுவாமிகள் மற்றும் அவரது 5 சீடர்கள் கொல்லப்பட்ட பழியை கிறிஸ்தவர்கள் மீது சுமத்தி உள்ளனர்.

மக்களிடையே அன்பை போதிக்கும் கிறிஸ்தவர்கள் மீது சுமத்தப்படும் இந்த குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. வேண்டுமென்றே இந்த பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு, கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியது சரியல்ல.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கத்தோலிக்க கிறிஸ்தவ சமுதாயம் நடத்தும் பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் மூடப்படுகின்றன. இதேபோல கர்நாடகத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகள் இன்று மூடப்பட்டு, அமைதியான முறையில் போராட்டம் நடத்துவோம்.

உண்ணாவிரதம்

மேலும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கிறிஸ்தவர்கள் அனைவரும் உண்ணாவிரதம் மற்றும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் மீது ஏவிவிடப்பட்டுள்ள வன்முறையை, அந்த மாநில அரசும், மத்திய அரசும் உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கிறிஸ்தவ சமுதாயத்துக்கு இந்தியாவில் பாதுகாப்பு உள்ளது என்பதை அரசு நிரூபிக்க வேண்டும். தாக்குதலுக்கு ஆளான கிறிஸ்தவ குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு பேராயர் பெர்னால்டு மோரஸ் கூறினார்.

கண்டிக்கத்தக்கது

பேட்டியின் போது உடன் இருந்த கர்நாடக கத்தோலிக்க பிஷப்புகள் கவுன்சில் செயலாளர் ஜெயநாதன் கூறும்போது, கர்நாடகத்தில் கிறிஸ்தவர்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இது கண்டிக்கத்தக்கது. கிறிஸ்தவ மதம் உள்ளூர் கலாசாரத்தை, சீரழிப்பதாக கூறுவது தவறு என்றார்.

பேட்டியின் போது, பெங்களூர் மறை மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி அடால்ப் வாஷிங்டன், நிதி அதிகாரி பிரான்சிஸ், செயலாளர் வேதகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஆதரவு

கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இன்று நடத்தும் போராட்டத்துக்கு, கர்நாடக கிறிஸ்தவ சங்க கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்து உள்ளது.
 
 

StumbleUpon.com Read more...

ரூபாய் நோட்டுகள் வாபசாகிறது:கள்ள நோட்டு எதிரொலி:ரிசர்வ் வங்கி அதிரடி

StumbleUpon.com Read more...

ஒரிசாவில் தொடர்கிறது கலவரம்: வன்முறையில் ஈடுபடுவோரை கண்டவுடன் சுட உத்தரவு

 

 
 
lankasri.comவன்முறையில் ஈடுபடுவோரைக் கண்டவுடன் சுட காந்தமால் மாவட்ட நிர்வாகம் புதன்கிழமை உத்தரவு பிறப்பித்தது. ஒரிசா மாநிலம் துமிதிபந்த் பகுதியில் உள்ள ஜலேஸ்பேட்டாவில் சனிக்கிழமை இரவு விஎச்பி தலைவர் லட்சுமணானந்த சரஸ்வதி நக்சலைட்டுகளால் கொல்லப்பட்டார்.

இதை அடுத்து மாவட்டத்தில் ஆங்காங்கே வன்முறை ஏற்பட்டு பிற மாவட்டங்களுக்கும் பரவியது. விஎச்பி தலைவர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த பந்த் போராட்டத்தின்போது பல தேவாலயங்களுக்கு தீ வைக்கப்பட்டன. கிறிஸ்தவ அமைப்பு நடத்தும் அநாதை இல்லமும் கொளுத்தப்பட்டது. இதில் ஒரு பெண் இறந்தார்.

இதுபோன்ற வன்முறை சம்பவங்களில் இதுவரை 9 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆயினும் இந்த எண்ணிக்கை 14 ஆக இருக்கும் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில் காந்தமால் மாவட்டத்தில் வன்முறை தொடர்வதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இதை பெரும்பாலான மக்கள் மதிக்கவில்லை. பெரிய அளவில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்கின்றன. எனவே வன்முறையில் ஈடுபடுவோரை கண்டவுடன் சுடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வருவாய் கோட்ட ஆணையர் சத்யவிரத சாகு தெரிவித்தார்.

காந்தமால் மாவட்டம் பாலிகுடா மற்றும் உதயகிரிக்கு இடையே உள்ள பல இடங்களில் ஊரடங்கு உத்தரவுக்கு செவி சாய்க்காமல் ஏராளமானவர்கள் தீவைப்பு மற்றும் வன்முறையில் ஈடுபட்டனர். ஆயுதங்கள் மற்றும் மரத்தடிகளை ஏந்தியபடி வன்முறை கும்பல் நடமாடுகிறது.

மாவட்டத்தில் உள்ள ரைகியா பகுதியில் கும்பலாக வந்த சிலர் பெரிய அளவில் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

மேலும் ரைகியாவில் முன்னாள் காவல்துறை இயக்குநர் ஜான் நாயக் வீட்டின் மீதும் வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியது.

ஆதாரம் இல்லாமல் புகார் வேண்டாம்: சிவராஜ் பாட்டீல்

காந்தமால் வன்முறைச் சம்பவத்தை தொடர்ந்து பரவிவரும் வன்முறைச் சம்பவங்களுக்கு யார் பொறுப்பு என்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப்படாதவரை யாரையும் குற்றம் சாட்டவேண்டாம் என்று கூறியுள் ளார் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: மாநில முதல்வர் நவீன் பட்நாயக்குடன் தொடர்பு கொண்டு பேசி வருகிறேன். லட்சுமணானந்தா கொல்லப்பட்டது கண்டிக்கத்தக்கதே. ஆனால் அதற்காக போராட்டம் என்ற பெயரில் மற்றவர்களுக்கு சேதம் விளைவிப்பது ஏற்கத் தக்கதல்ல.

ஒரிசாவில் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர 20 கம்பெனி துணை ராணுவ படையும் ஹெலிகாப்டர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றார் சிவராஜ் பாட்டீல்.

 

 

StumbleUpon.com Read more...

தொடரை வென்றது இந்தியா!

தொடரை வென்றது இந்தியா!
lankasri.comதோனி தலைமையிலான இளம் இந்திய அணியின் வெற்றிநடை தொடர்கிறது. நேற்று நடந்த நான்காவது ஒரு நாள் போட்டியில் தோனி, சுரேஷ் ரெய்னாவின் அதிரடி அரைசதம் கைகொடுக்க, இந்திய அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது. இதன்மூலம் ஒரு நாள் தொடரை 3-1 என கைப்பற்றி, ஆசிய கோப்பை தோல்விக்கு பதிலடி கொடுத்தது.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் இலங்கையும், அடுத்த இரண்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதையடுத்து இந்திய அணி தொடரில் 2-1 என்ற முன்னிலை பெற்றது. நேற்று முன்தினம் நடைபெற வேண்டிய நான்காவது போட்டி மழையின் காரணமாக ஒரு நாள் தாமதமாக நேற்று கொழும்புவில் நடந்தது. இத்தொடரில் தொடர்ந்து நான்காவது முறையாக "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் தோனி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

சமரசில்வா நீக்கம்: இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, மூன்றாவது போட்டியில் வென்ற அதே 11 வீரர்களுடன் களமிறங்கியது. இலங்கை அணியில் சமரசில்வா நீக்கப்பட்டு, வர்ணபுரா இடம்பிடித்தார்.

கோஹ்லி அரைசதம்:துவக்க வீரர்களாக காம்பிர், கோஹ்லி களமிறங்கினர். துவக்கத்தில் நிதானமாக விளையாடிய இந்த ஜோடி, இலங்கை பந்துவீச்சை ஓரளவு சமாளித்தது. முதல் விக்கெட்டுக்கு இவர் 44 ரன்கள் எடுத்தநிலையில் காம்பிர் (17), குலசேகரா பந்தில் அவுட்டானார். அடுத்து வந்த யுவராஜ் இம்முறையும் சொதப்பினார். இவர் வாஸ் பந்தில் ஜெயவர்தனாவிடம் "கேட்ச்' கொடுத்து "டக்' அவுட்டானார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய கோஹ்லி ஒரு நாள் அரங்கில் தனது முதல் அரைசதம் கடந்தார். இவர் 7 பவுண்டரி உட்பட 54 ரன்கள் எடுத்து, வெளியேறினார்.

ரெய்னா அதிரடி: ஐந்தாவது வீரராக வந்த தோனி, ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்தார். மூன்றாவது போட்டியில் கலக்கிய இந்த ஜோடி நேற்றும் அசத்தியது. இலங்கை பந்துவீச்சை ஒரு கைபார்த்த ரெய்னா, முரளிதரன் பந்தில் பவுண்டரி அடித்து ஒரு நாள் போட்டிகளில் 7வது அரைசதம் பதிவு செய்தார்.

தோனி அசத்தல்: மறுமுனையில் இவருக்கு நல்ல ஒத்துழைப்பு தந்த தோனியும் தன்பங்கிற்கு அரைசதம் கடந்தார். இது ஒரு நாள் போட்டிகளில் இவரது 24வது அரைசதமாக அமைந்தது. அதிரடி காட்டிய ரெய்னா, முரளிதரன் பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்து, மிரட்டினார். இந்த ஜோடி தொடர்ந்து அசத்த, இந்திய அணி 38வது ஓவரில் 200 ரன்களை எட்டியது. நான்காவது விக்கெட்டுக்கு இவர்கள் 143 ரன்கள் எடுத்தநிலையில் ரெய்னா, துஷாரா பந்தில் அவுட்டானார். இவர் ஒரு சிக்சர், 6 பவுண்டரி உட்பட 78 பந்தில் 76 ரன்கள் எடுத்தார். இவரை தொடர்ந்து தோனியும் பெவிலியன் திரும்பினார். இவர் 4 பவுண்டரிகளின் உதவியுடன் 71 ரன்கள் எடுத்தார்.

பத்ரிநாத் ஏமாற்றம்: அடுத்து வந்த பத்ரிநாத், ரோகித்துடன் ஜோடி சேர்ந்தார். கடைசிக்கட்டத்தில் மந்தமாக விளையாடிய இந்த ஜோடி இந்தியாவின் ரன்வேகத்தை குறைத்தது. பத்ரிநாத் (6), ரோகித் (18) விரைவில் வெளியேறி, ஏமாற்றம் அளித்தனர். டெயிலெண்டர்களும் வரிசையாக நடையை கட்ட, இந்திய அணி 49.4 ஓவரில் 258 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷாரா 5 விக்கெட் வீழ்த்தினார்.

ஜெயசூர்யா அதிரடி: இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு ஜெயசூர்யா அதிரடி துவக்கம் தந்தார். ஆனால், மறுமுனையில் இவருக்கு போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. வர்ணபுரா (0), சங்ககரா (6) விரைவில் அவுட்டாயினர். இந்திய பந்துவீச்சை வெளுத்து வாங்கிய ஜெயசூர்யா, முனாப் பந்தில் பவுண்டரி அடித்து ஒரு நாள் அரங்கில் 66வது அரைசதம் கடந்தார். வேகப்பந்து வீச்சை இவர் அடித்து நொறுக்க, கேப்டன் தோனி பந்தை ஹர்பஜனிடம் கொடுத்தார். இதற்கு <உடனடி பலன் கிடைத்தது. இவர், ஜெயசூர்யாவை வெளியேற்றி, இந்தியாவுக்கு நம்பிக்கை தந்தார். ஜெயசூர்யா 2 சிக்சர், 8 பவுண்டரியுடன் 52 பந்தில் 60 ரன்கள் எடுத்தார். கடந்த போட்டியில் சிறப் பாக விளையாடிய கேப்டன் ஜெயவர்தனா இம்முறை 16 ரன்களுக்கு அவுட்டானார். கபுகேதரா 30, தில்ஷன் 12 ரன்களுக்கு அவுட்டாக, இந்தியாவின் வெற்றி உறுதியானது. அடுத்து வந்த டெயிலெண்டர்கள் விரைவில் பெவிலியன் திரும்ப, இலங்கை 46.3 ஓவரில் 212 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய தொடரை 3-1 என கைப்பற்றியது.

சொந்த மண்ணில் இலங்கையை வீழ்த்தி, சமீபத்தில் ஆசிய கோப்பை பைனலில் அடைந்த தோல்விக்கு சரியான பதிலடி கொடுத்தது. ஆட்டநாயகன் விருதை ரெய்னா தட்டிச் சென்றார்.

சபாஷ் தோனி: சச்சின், சேவக், டிராவிட், கங்குலி என முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில் தோனி தலைமையிலான இளம் இந்திய அணி ஒரு நாள் தொடரை வென்று சாதித்து காட்டியுள்ளது.

10 ஆண்டுக்கு பின்...: நான்காவது போட்டியில் வென்ற இந்திய அணி, இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை 3-1 என கைப்பற்றியது. இதன்மூலம் சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் இலங்கையை அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தி, சாதனை படைத்துள்ளது. கடைசியாக அசார் தலைமையிலான இந்திய அணி கடந்த 1998ல் இலங்கையில் நடந்த சிங்கர் கோப்பை பைனலில் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றிருந்தது.

வாஸ் "400": நேற்று யுவராஜின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இலங்கை வீரர் சமிந்தா வாஸ் ஒரு நாள் போட்டிகளில் 400 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார்.
http://www.lankasrisports.com/index.php?subaction=showfull&id=1219832538&archive=&start_from=&ucat=4&

StumbleUpon.com Read more...

சிரஞ்சீவிக்கு சிக்கல்

சிரஞ்சீவிக்கு சிக்கல்    

Imageநடிகர் சிரஞ்சீவியின் கட்சி பெயரை தேர்தல் கமிஷனில் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.

தெலுங்கு சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி, கடந்த 26-ந் தேதி அன்று `பிரஜா ராஜ்யம்' என்ற புதிய கட்சியை தொடங்கினார். திருப்பதியில், 10 லட்சம் ரசிகர்கள் மத்தியில் கட்சியின் பெயரையும், கொடியையும் அறிமுகப்படுத்திய அவர், அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

டெல்லியில் உள்ள தேர்தல் கமிஷனில் தனது கட்சியின் பெயரை பதிவு செய்ய கடந்த 26-ந் தேதி அவர் மனு தாக்கல் செய்து இருக்கிறார்.

இதற்கிடையில் சிரஞ்சீவியின் கட்சி பெயரை "பிரஜா ராஜ்யம்'' என்று பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. இதே பெயரில் கட்சி தொடங்க, தேர்தல் கமிஷனிடம் ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் 4 மாதங்களுக்கு முன்பே மனு தாக்கல் செய்து இருக்கிறார். அவரது மனுவை தேர்தல் கமிஷன் பரிசீலித்து, அவருக்கு பதில் கடிதமும் எழுதி இருக்கிறது.

 

எனவே சிரஞ்சீவியின் கட்சியின் பெயரையும் "பிரஜா ராஜ்யம்'' என்று வைத்துக்கொள்ள தேர்தல் கமிஷன் அனுமதி கொடுக்க முடியாது. என்றாலும் இதுபற்றி பரிசீலித்து அவருக்கு இன்னும் ஒரு வாரத்தில் கடிதம் அனுப்ப தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

இதற்கிடையில், கட்சியின் உயர்மட்ட செயற்குழு, பல்வேறு முக்கிய பிரச்சினைகளில் கட்சியின் கொள்கை ஆகியவை குறித்து சிறந்த வல்லுனர்கள் குழுவுடன், சிரஞ்சீவி ஆலோசனை நடத்தி வருகிறார். மாநிலம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்து, மக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டவும் முடிவு செய்துள்ளார்.

 

இது குறித்து கட்சி அலுவலகத்தில் நேற்று பேட்டியளித்த சிரஞ்சீவி, "முதல் கட்டமாக மக்களை நேரில் சந்தித்து அவர்களுடைய பிரச்சினைகளை நேரில் பார்த்து ஆய்வு செய்ய ஆர்வமாக இருக்கிறேன். இதற்காக மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொள்ளும் வகையில் என்னுடைய சுற்றுப்பயண விவரம் தயாராகி வருகிறது'' என்றார்.

 

இது தவிர, தனக்கு எந்த அரசியல் தலைவரும் எதிரி கிடையாது என்று கூறும் சிரஞ்சீவி, `அனைத்து கட்சி தலைவர்களும் என்னுடைய நண்பர்களே. தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவை விரைவில் சந்தித்து பேச இருக்கிறேன்' என்று தெரிவித்தார்.

http://www.adhikaalai.com/index.php?/en/?????????/???????/?????????????-???????

StumbleUpon.com Read more...

புலிகள் விமானம் குண்டு மழை

புலிகள் விமானம் குண்டு மழை
.
.
 கொழும்பு,  ஆக.27: இலங்கையில் திரிகோணமலை துறைமுகம் பகுதியில் உள்ள இலங்கை கடற்படை தளம் மீது  விடுதலைப் புலிகளின் விமானம் குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்தி உள்ளது.
.
இந்த தாக்குதலில் நான்கு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 18 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் விடுதலைப் புலிகளின் மீது அந்நாட்டு ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. புலிகளின் கட்டுப்பாட்டிலில் உள்ள பகுதிகளை கைப்பற்றும் நடவடிக்கையில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.

ராணுவத்தின் இந்த தொடர் தாக்குதல்களில் ஏராளமான விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திரிகோணமலையில் உள்ள துறைமுகம் பகுதியில் அமைந்துள்ள இலங்கை கடற்படை தளம் மீது நேற்றிரவு 9 மணிக்கு விடுதலைப் புலிகளின் போர் விமானம் குண்டு மழை பொழிந்து அதிரடி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதல்களில் 18 பேர் காயமடைந்ததாகவும், மேலும் நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுதலைப்புலிகளின் போர் விமானம் துறைமுகத்தின் மீது 2 குண்டுகளை வீசி தாக்கியதாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

துறைமுகத்தின் மீது குண்டுகள் வீசப்பட்ட சத்தம் பயங்கரமாக கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை கடற்படையினர் வானை நோக்கி சரமாரியாக பீரங்கியால் தாக்கியது.

புலிகள் நடத்திய இந்த அதிரடி தாக்குதலைத் தொடர்ந்து அந்த பகுதியில் தொலைத் தொடர்பு சேவை மற்றும் மின் விநியோகம் பாதிக்கப் பட்டதாகவும், மேலும் அப்பகுதியில்  பதட்டம் நீடிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலிகளின் போர் விமானம் திரிகோணமலை துறைமுகத்தில் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை போர் விமானங்கள் வன்னிப் பகுதிக்கு தாக்குதல் நடத்த விரைந்திருப்பதாக வவுனியாவில் வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடற்படையினரை யாழ்ப் பாணத்திற்கு அழைத்துச் செல்ல பயன்படுத்தப்படும் ஜெட்லைனர் என்ற கப்பலை குறி வைத்து விடுதலைப் புலிகள் விமானம் மூலம் தாக்கியதாக திரிகோணிமலை கடற்படை வட்டாரங்கள் கூறுகின்றன.

இதனிடையே, நேற்று நள்ளிரவு 12.15 மணிக்கு விடுதலைப் புலிகளின் போர் விமானம் மீண்டும் திரிகோணமலை துறைமுகம் மீது குண்டுகளை பொழிந்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த 2வது தாக்குதல் குறித்து இலங்கை ராணுவத் தரப்பில் இருந்து எதுவும் தெரிவிக்கப் படவில்லை

 

 

StumbleUpon.com Read more...

சூரிய சக்தியால் இயங்கும் அதிசய விமானம் 83 மணி நேரம் பறந்து உலக சாதனை

சூரிய சக்தியால் இயங்கும் கார்கள் ஏற்கனவே வெளி வந்து விட்டன. இப்போது சூரிய சக்தியால் இயங்கும் விமானங்களும் பறக்கத் தொடங்கி விட்டன.

இங்கிலாந்தைச் சேர்ந்த நிபுணர்கள் `செபிர்-6' என்ற புதிய ரக குட்டி விமானத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

அமெரிக்க ராணுவத்தின் உளவுப் பிரிவுக்காக இந்த சூரிய சக்தி விமானம் உரு வாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அரிசோனா பகுதியில் இந்த சூரிய சக்தி விமானத்தின் சோதனை ஓட்டம் நடந் தது.

இந்த ஆள் இல்லாத குட்டி விமானம் 83 மணி 37 நிமிட நேரம் இரவு பகலாக தொடர்ச்சியாக பறந்து உலக சாதனை படைத்துள்ளது.

30 கிலோ எடை உள்ள இந்த குட்டி விமானம் 60 ஆயிரம் அடி உயரத்தில் பறக் கும் ஆற்றல் கொண்டது. பகல் நேரத்தில் சூரிய சக்தியை பயன்படுத்தி பேட்டரி ரீசார்ஜ் செய்து கொண்டு இரவு நேரத்தில் அதை பயன்படுத்திக் கொள்ளும்.
http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1219665933&archive=&start_from=&ucat=2&

StumbleUpon.com Read more...

பீஜிங் ஒலிம்பிக் 2008 : முழு கண்ணோட்டம்!

lankasri.comபீஜிங்கில் நடந்த 29வது ஒலிம்பிக் அத்தியாயம் நிறைவடைந்தாலும் அதில் நிகழ்த்தப்பட்ட உலக சாதனைகளும், அதற்கு சொந்தமான வீரர்களின் பெயர்களையும் உலக மக்கள் என்றும் நினைவில் வைத்திருப்பர் என்பது மட்டும் திண்ணம்.

உலகம் முழுவதும் இருந்து 202 நாடுகளைச் சேர்ந்த 10,700 வீரர்கள் பங்கேற்ற இந்த சர்வதேச விளையாட்டு திருவிழாவில் 87 நாடுகள் பதக்கங்களை வென்றுள்ளன.

பதக்கப்பட்டியலில் இடம்பெற்றுள்ள பஹ்ரைன் (ஒரு தங்கம்) தஜிகிஸ்தான் (ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம்), சூடான் (ஒரு வெள்ளி), ஆப்கானிஸ்தான், டோகோ (தலா ஒரு வெண்கலம்) உள்ளிட்ட 5 நாடுகளுக்கு இதுவே முதல் ஒலிம்பிக் பதக்கம் என்பது பீஜிங் ஒலிம்பிக் வரலாற்றுப் புத்தக்கத்தில் சிறப்பு பக்கங்களாக என்றும் திகழும் என்பதில் ஐயமில்லை.

உலக சாதனையிலும் பீஜிங் சாதனை: ஒலிம்பிக் விளையாட்டுகளில் உலக சாதனைகள் நிகழ்த்தப்படுவது வாடிக்கை என்றாலும், இதிலும் பீஜிங் ஒலிம்பிக் போட்டி முன்னிலை வகிக்கிறது. கடந்த 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் 33 உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டது. ஆனால் பீஜிங் ஒலிம்பிக் அதனை விடக் கூடுதலாக 10 சாதனைகள் (மொத்தம் 43) நிகழ்த்தப்பட்டுள்ளன. (இதில் அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் மட்டும் 7 உலக சாதனைகளைப் படைத்துள்ளார்).

ஆசியாவின் ஆதிக்கம் ஓங்குகிறது: பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் ஆசியாவின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது கண்கூடாகத் தெரிகிறது. மொத்தமுள்ள 302 தங்கங்களில், 90 தங்கப் பதக்கங்களை ஆசிய நாடுகள் கைப்பற்றியுள்ளன.

இதேபோல் 56 வெள்ளி, 86 வெண்கலம் என மொத்தம் 232 பதக்கங்கள் (அதாவது மொத்த பதக்க எண்ணிக்கையில் சுமார் 25%) ஆசிய நாடுகளின் வசம் உள்ளது. ஆசிய நாடுகள் பதக்கப் பட்டியலில் சீனா 100 பதக்கங்களுடன் முதலிடத்திலும், தென்கொரியா 31 பதக்கங்களுடன் 2வது இடத்திலும் உள்ளன.

lankasri.comஇந்திய தங்கமகன் பிந்த்ரா: ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை பின்னடைவை சந்தித்த இந்தியாவுக்கு சரித்திரப் பெருமை கிடைத்தது பீஜிங் நகரில் தான். ஆடவர் 10 மீட்டர் ஏர்-ரைஃபிள் போட்டியில் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் வென்றது, இந்திய சரித்திரத்தில் முதல் தனிநபர் தங்கமாக அமைந்தது.

இந்தப் பதக்கம் தந்த கூடுதல் உத்வேகத்தால் அடுத்தடுத்த நாட்களில் நடந்த பல்வேறு போட்டிகளில் இந்திய வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறினர். இதன் காரணமாக இந்தியாவுக்கு மேலும் 2 வெண்கலப் பதக்கங்கள் (விஜேந்தர், சுஷில்குமார்) கிடைத்தது.

lankasri.comமின்னல் வேக நாடு ஜமைக்கா: பீஜிங் ஒலிம்பிக் தொடரில் 100, 200 மீட்டர் ஓட்டத்தில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவு தங்கப் பதக்கங்களை தட்டிச் சென்றதன் மூலம் உலகின் அதிவேக நாடு என்ற பட்டத்தை ஜமைக்கா பெற்றுள்ளது.

ஆடவர் 100, 200 மீட்டர் ஓட்டத்தில் புதிய உலக சாதனையுடன் தங்கம் வென்றதன் மூலம் கடந்த 1984இல் அமெரிக்க வீரர் கார்ல் லூயிஸ் படைத்த சாதனையை, ஜமைக்கா வீரர் யுசைன் போல்ட் சமன் செய்துள்ளார். 100 மீட்டர் ஓட்டத்தில் 9.69 நொடிகளிலும், 200 மீடடர் ஓட்டத்தில் 19.30 நொடிகளிலும் ஓடி இவர் புதிய உலக சாதனை படைத்தது இந்த ஒலிம்பிக் போட்டியின் மிகப் பெரிய பெருமையாகும். இவர் 4x100 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் பங்கேற்று 3வது தங்கத்தை தட்டிச் சென்றதன் மூலம் பீஜிங் ஒலிம்பிக் தடகளத்தில் தனது ஆதிக்கத்தை உலகிற்கு உணர்த்தினார். இதிலும் ஜமைக்கா அணி (37.10 நொடிகள்) உலக சாதனை படைத்தது.

lankasri.comத்ரீ-ரோசஸ்: ஜமைக்கா தடகள வீராங்கனைகளும் தங்கள் பிரிவுகளில் பதக்கங்களை அள்ளிச் சென்றனர். 100 மீட்டர் ஓட்டத்தில் வீராங்கனை ஷெல்லி-ப்ரேஸர் தங்கமும், கெர்ரோன் ஸ்டீவர்ட், ஷிரோன் சிம்ப்ஸன் இருவரும் தலா ஒரு வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

ஒலிம்பிக் தொடரில் ஒரே நாட்டைச் சேர்ந்த மூவர் ஒரு போட்டியில் அனைத்து பதக்கங்களையும் தட்டிச் செல்வது இதுவே முதல் முறை என்பதும் ஜமைக்காவுக்கு பெருமையளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது.

lankasri.comசாதித்தது சீனா: திபெத்திற்கு சுயாட்சி கோரி புத்த பிட்சுகள் சீனாவுக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் பீஜிங் ஒலிம்பிக் போட்டியை சீனா சிறப்பாக நடத்தி முடிக்குமா என உலகமே சந்தேகித்த நிலையில், தனது திறமையான திட்டமிடல் மற்றும் நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் பணிகளை நிறைவு செய்தல் போன்ற திறமைகளால் சீன திட்டமிட்டதை விட சிறப்பாகவே போட்டிகளை நடத்தி முடித்து பாராட்டுகளை பெற்றுள்ளது.

2004 ஏதென்ஸ் ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் 32 தங்கப் பதக்கங்களை வென்று இரண்டாம் இடத்தைப் பிடித்தது சீனா. பீஜிங் ஒலிம்பிக்கில் நிச்சயம் முதலிடத்தைப் பிடிப்போம் என சூளுரைத்தத சீனா 51 தங்கப் பதக்கங்களை வென்று அதனை சாதித்தும் காட்டி தனது ஆதிக்கத்தை மீண்டும் வெளிப்படுத்தி உள்ளது.

lankasri.comஅமெரிக்காவுக்கு 2வது இடம்: பீஜிங் ஒலிம்பிக்கில் அமெரிக்க வீரர் பெல்ப்ஸ் மட்டும் 8 தங்கங்களை வென்றிருந்தாலும், மொத்தம் 36 தங்கப் பதக்கங்களை வென்றதன் மூலம் பதக்கப்பட்டியலில் அமெரிக்காவுக்கு 2வது இடமே கிடைத்துள்ளது.

ஆடவர் மற்றும் மகளிர் 4 x 100 தொடர் ஓட்டத்தில் உலக சாம்பியனாக வலம் வந்த அமெரிக்காவுக்கு, பீஜிங் ஒலிம்பிக்கில் மரண அடி விழுந்துள்ளது. பேட்டன் மாற்றும் போது ஏற்பட்ட குழப்பத்தால் அமெரிக்க ஆடவர், மகளிர் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறத் தவறியது மொத்த அமெரிக்காவையும் நிலைகுலைய வைத்தது என்றால் மிகையில்லை.

எனினும் மொத்த பதக்கங்களின் (110 பதக்கம்) அடிப்படையில் பார்த்தால் பீஜிங் ஒலிம்பிக் அமெரிக்காவுக்கு சிறப்பானதாகவே அமைந்துள்ளது. கடந்த 1904இல் செயின்ட் லூயிஸ் நகரிலும் (இதில் 242 பதக்கம்), கடந்த 1984இல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும் (இதில் 174 பதக்கம்) நடந்த போட்டிகளுக்கு பின்னர் பீஜிங் ஒலிம்பிக்கில் அமெரிக்கா அதிக பதக்கங்களை வென்றுள்ளது.

செயின்ட் லூயிஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் ரஷ்யா பங்கேற்று இருந்தால் அமெரிக்கா இத்தனை பதக்கங்களை வென்றிருக்க முடியாது என சில விளையாட்டு ஆர்வலர்கள் கருத்து தெரிவித்ததையும் நினைவில் கொள்ளவேண்டும்.

சர்க்கரை கிண்ணத்திற்கு சுவைக்கவில்லை பீஜிங்: சர்க்கரை உற்பத்தியில் முதலிடம் வகிப்பதால் உலகின் 'சர்க்கரைக் கிண்ணம்' என செல்லப் பெயர் பெற்றுள்ள கியூபா, குத்துச் சண்டையிலும் சிறந்து விளங்கியது. ஆனால் பீஜிங் ஒலிம்பிக்கில் இந்தப் பெருமையை அதனால் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.

கடந்த 1968க்கு பின்னர் நடந்த ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிகளில் தொடர்ந்து தங்கப் பதக்கம் வென்று தனது ஆதிக்கத்தை தொடர்ந்த கியூபாவின் வெற்றி நடைக்கு பீஜிங்கில் இடறல் ஏற்பட்டுள்ளது.

பான்டம் வெயிட் பிரிவு இறுதிக்கு முன்னேறிய யான்கீல் லியான் மற்றும் வெல்டர்வெயிட் பிரிவு இறுதியில் சண்டையிட்ட கர்லோஸ் பான்டியாக்ஸ் இருவரும் தோல்வியடைந்ததால் கியூபாவின் குத்துச்சண்டை தங்கக் கனவு சுக்குநூறாக உடைந்தது என்று தான் கூறவேண்டும். எனினும் 120 கிலோ மல்யுத்தம், 110 மீட்டர் தடை ஓட்டத்தில் தலா ஒரு தங்கத்தை கியூபா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

lankasri.comமின்னிய நட்சத்திரங்கள்: பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்காவின் பெல்ப்ஸ் (8 தங்கம்), ஜமைக்காவின் யுசைன் போல்ட் (3 தங்கம்) ஆகியோர் தவிர வேறு சில பிரபலங்களும் தங்களின் ஆதிக்கத்தை உலகிற்கு உணர்த்தியுள்ளனர்.

சைக்கிள் வீரன்: இங்கிலாந்து வீரர் கிரிஸ் ஹோய் பீஜிங் ஒலிம்பிக் தொடரில் நடந்த சைக்கிள் பந்தயங்களில் 3 பதக்கங்களை வென்று பீஜிங்கில் அதிக பதக்கம் வென்றவர்கள் பட்டியலில் 2ம் இடம் பிடித்துள்ளார். 100 ஆண்டுக்கு பின்னர் ஒரே ஒலிம்பிக்கில் 3 தங்கம் வென்ற முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.

பெண் சுறா: ஆஸ்திரேலியா வீராங்கனை ஸ்டீபனி ரைஸ் மகளிருக்கான நீச்சல் போட்டியில் 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். இதில் 2 உலக சாதனைத் தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

lankasri.comபோல்வால்ட் ராணி: ஒலிம்பிக் போட்டிகளில் நிச்சயம் பதக்கம் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டவர்கள் பட்டியலில் இடம் பிடித்த போல்வால்ட் ராணி இசின்பயீவா, ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார்.

ஒலிம்பிக் துவங்குவதற்கு முன்பே 5 மீட்டர் உயரத்தை தாண்டி புதிய உலக சாதனை படைத்த பயீவா, போல்வால்ட் இறுதியில் 5.05 மீட்டர் தாண்டி தனது முந்தைய உலக சாதனையை மீண்டும் முறியடித்தார்.

lankasri.comடேபிள் டென்னிஸ் நாயகன்: டேபிள் டென்னிஸில் தொடர்ந்து சாதித்து வரும் சீனா, பீஜிங்கிலும் மின்னத் தவறவில்லை. இறுதிப் போட்டியில் சீனா வீரர் மா-லின், சகநாட்டு வீரரும், உலக சாம்பியனுமான வாங்-ஹோவை வீழ்த்தி தங்கம் வென்றார். இதன் மூலம் சீன டேபிள் டென்னிஸ் நட்சத்திரங்கள் வரிசையில் மா-லின் புதிய வரவாக இடம் பிடித்துள்ளார்.

lankasri.comஜிம்னாஸ்டிக் ராஜா: சீன வீரர் சோ-கை, ஆடவர் பிரிவு ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்றதன் மூலம், ஜிம்னாஸ்டிக் உலகின் புதிய ராஜா என்பதை பீஜிங் ஒலிம்பிக்கில் உலகிற்கு உணர்த்தியுள்ளார்.

டைவிங் இளவரசி: பல குட்டிக்கரணங்கள் அடித்து நீச்சல் குளத்தில் சாகஸம் நிகழ்த்தும் டைவிங் பிரிவு போட்டியில், சீன வீராங்கனை ஜிங்ஜிங்-குவோ பீஜிங்கில் 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் 2 தங்கம், சிட்னி ஒலிம்பிக்கில் 2 வெள்ளிப் பதக்கங்களை ஏற்கனவே வென்றிருந்த ஜிங்ஜிங், பீஜிங்கில் 2 தங்கம் வென்றதன் மூலம், மொத்தம் 6 பதக்கங்களை வென்ற முதல் டைவிங் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

நீண்ட தூர ஓட்டத்தின் ராஜா: பீஜிங் ஒலிம்பிக்கில் ஆடவர் பிரிவின் 5,000 மற்றும் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் எத்தியோப்பிய வீரர் கினினிஸா பிக்கீலே தங்கப் பதக்கங்களை தட்டிச் சென்றார். கடந்த 1980க்கு பின்னர் 2 பிரிவிலும் தங்கம் வென்ற வீரர் என்ற பெருமையை இவர் பீஜிங் ஒலிம்பிக்கில் பெற்றுள்ளார்.

நீண்ட தூர ஓட்டத்தின் ராணி: இதேபோல் மகளிர் 5,000 மற்றும் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் எத்தியோப்பிய வீராங்கனை திருனேஷ் டிபாபா தங்கப்பதக்கங்களை தட்டிச் சென்றதன் மூலம் நீண்ட தூர ஓட்டத்தின் ராணி என்ற பட்டத்தை பெற்றுள்ளார்.

lankasri.comஜொலிக்கத் தவறிய லியு-ஜியாங்: ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான அனுமதியை 2001ல் சீனா பெற்று விட்டாலும், ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் தொடரில் 110 மீட்டர் தடை ஓட்டத்தில் சீனா வீரர் லியு-ஜியாங் தங்கப் பதக்கம் வென்ற பின்னரே சீன மக்களிடையே ஒரு உத்வேகம் ஏற்பட்டது.

இந்த உத்வேகத்தை சரியாகக் கூற வேண்டுமென்றால், பீஜிங் ஒலிம்பிக் தடை ஓட்டத்தில் லியு-ஜியாங் மீண்டும் தங்கம் வென்றால் சீனாவுக்கு அதை விடப் பெரிய சந்தோஷம் எதுவும் இருக்காது என்று கூறலாம். அதேவேளை லியு-ஜியாங் முதலிடத்தை தவற விட்டால் அன்றைய தினம் சீனர்களுக்கு கருப்பு தினமாக அமையும் என்று சர்வதேச பத்திரிகைகள் கருத்து தெரிவித்திருந்தன.

ஆனால் இந்த இரண்டு விஷயங்களுமே நடக்காததால், மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட சீனாவின் தங்க மகன் லியு-ஜியாங் ஜொலிக்கத் தவறினார். 110 மீட்டர் தடை ஓட்டத்திற்கான தகுதிச் சுற்றில் பங்கேற்ற போது காலில் காயமடைந்ததால் களத்திலேயே நிலைகுலைந்த லியு-ஜியாங், ஒலிம்பிக்கில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அப்போது சீனர்கள் பலர் கண்ணீர் வடித்தனர். அவர்களில் ஜியாங்கின் பயிற்சியாளரும் ஒருவர் என்பது சோகத்தின் உச்சத்தை உணர்த்துவதாக அமைந்தது.

lankasri.comவீராங்கனைகள் எண்ணிக்கை அதிகரிப்பு: மகளிர் 200 மீட்டர் ஓட்டத்தில் பஹ்ரைன் வீராங்கனை ரோகாயா அல்-கஸரா உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை (முகம், கை விரல், கால் பாதம் தவிர) மறைத்த உடையுடன் ஓடியது போட்டியை பார்த்தவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

பெண்களுக்கு அதிக சுதந்திரம் இல்லாத பஹ்ரைன் உள்ளிட்ட அரபு நாடுகளைச் சேர்ந்த வீராங்கனை பீஜிங் போட்டியில் பங்கேற்றுள்ளது ஒலிம்பிக் போட்டிகளில் வீராங்கனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை உணர்த்துவதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி குறிப்பிட்டுள்ளது.

இதனை நாமும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். காரணம்... கடந்த ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் பஹ்ரைனில் இருந்து 2 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றனர். பீஜிங்கில் அது 4 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல் பீஜிங் ஒலிம்பிக்கில் பங்கேற்ற மொத்த போட்டியாளர்களில் 42% பேர் பெண்கள். இதன் மூலம் அதிக பெண்கள் பங்கேற்ற ஒலிம்பிக் போட்டி என்ற பெருமையையும் பீஜிங் பெற்றுள்ளது. கடந்த 1996 அட்லாண்டா ஒலிம்பிக்கில் மொத்த போட்டியாளர்களில் 34.2% பெண்கள் பங்கேற்றதே இதுவரை அதிக அளவாக இருந்தது.

சில தவறுகள்: பீஜிங் ஒலிம்பிக்கில் பல சிறப்பான விஷயங்கள் நடந்திருந்தாலும், ஒரு சில தவறுகள் நிகழ்ந்துள்ளதை மறுக்க முடியாது.

உலகமே மிகுந்த ஆச்சரியத்துடன் கண்டுகளித்த ஒலிம்பிக் துவக்க விழா நிகழ்ச்சியில், சிறுமி லின் மியாகே சிறப்பாக பாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஆனால் அடுத்த சில நாளில் உண்மை வெளியானது. துவக்க நிகழ்ச்சியில் சிறுமி உதடுகளை மட்டுமே அசைத்தார்; பாடலைப் பாடியவர் வேறு ஒருவர் என்ற உண்மை தான் அது. இது ஒலிம்பிக் ரசிகர்கள் மனதில் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்கேற்ற ஹீ-கெக்ஸின் 16 வயது நிரம்பாதவர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இவர் ஜிம்னாஸ்டிக் பிரிவில் 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

பீஜிங் ஒலிம்பிக் ஊக்க மருந்து பயன்பாடற்ற ஒலிம்பிக் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தாலும், உக்ரைன் வீரர் ரஸோரோனோவ் (பளு தூக்குதல்) மற்றும் வீராங்கனை லுட்மிலா ப்ளோன்ஸ்கா (ஹெப்டத்லான்), கிரீஸ் வீராங்கனை ஹல்கியா (தடை ஓட்டம்), வடகொரியாவின் கிம் ஜோங்-சு (துப்பாக்கி சுடுதல்), ஸ்பெயினின் இஸபெல் மோரினோ (சைக்கிள் போட்டி), வியட்நாம் வீராங்கனை தி-கன் துவோங் (ஜிம்னாஸ்டிக்) ஆகியோர் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கள நடுவருக்கு உதை: ஆடவர் டேக்வான்டோ போட்டிகளின் போது கள நடுவரை முகத்தில் உதைத்த குற்றத்திற்காக கியூபா வீரர் ஏஞ்சல் வலோடியாவுக்கு ஆயுட்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெண்கல பதக்கத்திற்கான போட்டியில், ஏஞ்சல் வாலோடியா மடோஸ், கஜகஸ்தானின் அர்மன் சில்மனொவை எதிர்த்து மோதினார். இப்போட்டியில் வாலோடியா முன்னிலையில் இருந்தாலும், கஜகஸ்தான் வீரர் வெற்றி பெற்றதாக அறிவித்து நடுவர் போட்டியை நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த வாலோடியா நடுவரை காலால் எட்டி உதைத்தார். இதையடுத்து வாலோடியாவுக்கும், அவரது பயிற்சியாளருக்கும் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

நெஞ்சைத் தொட்டது: ஒலிம்பிக் போட்டி நடந்த சமயத்தில் ரஷ்யாவுக்கும், அதன் அண்டை நாடான ஜார்ஜியாவுக்கும் உக்கிர போர் மூண்டது. மகளிர் பிரிவு 10 மீட்டர் ஏர்-பிஸ்டல் போட்டியில் தங்கம் வென்ற ஜார்ஜிய வீராங்கனை நினோ, வெள்ளிப் பதக்கம் வென்ற நடாலியா படெரினாவை கட்டித் தழுவி தனது நட்புணர்வை வெளிப்படுத்தியது ரசிகர்களின் நெஞ்சைத் தொட்டது.

ஒரு சில குறைகள் இருந்தாலும், பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளை சீனா மிகச் சிறப்பாக நடத்தியது என்பதை நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. நிறைவு விழாவில் பேசிய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் ஜாக் ரோஜே, அடுத்த ஒலிம்பிக்கை நடத்தும் இங்கிலாந்துக்கு விடுத்த கோரிக்கை என்னவெனில், பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளின் தரத்திற்கு சற்றும் குறைவில்லாத வகையில் 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியை இங்கிலாந்து நடத்தி தர வேண்டும் என்பதே.

"Webdunia"

 

http://www.lankasrisports.com/index.php?subaction=showfull&id=1219858630&archive=&start_from=&ucat=4&

StumbleUpon.com Read more...

ஒரிசா வன்முறைக்கு போப் ஆண்டவர் கண்டனம்

lankasri.comஒரிசா மாநிலத்தில் கிருஷ்ண ஜெயந்தி அன்று ஆசிரமத்தில் பூஜை செய்து கொண்டிருந்த விசுவ இந்து பரிசத் தலைவர் சுவாமி லட்சுமணானந்த சரஸ்வதி (வயது 85) மற்றும் சீடர்கள் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்து அமைப்புகள் நடத்திய "பந்த்"தின்போது கலவரம் வெடித்தது. அதில் கிறிஸ்துவ தேவாலயங்கள் எரிக்கப்பட்டன.

கிறிஸ்தவர்கள் வீடுகளும், கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன. இதில் 5 பேர் பலியாகினர். கலவர கும்பலை கலைக்க போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் உயிரிழந்தனர். இன்னும் பல்வேறு பகுதிகளில் கலவரம் நீடித்து வருகிறது. கிறிஸ்தவர்கள் மீது நடைபெறும் வன்முறை சம்பவங்களுக்கு போப் ஆண்டவர் கண்டனம் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் சுவாமி லட்சுமணானந்தா மறைவுக்கும் அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வாடிகனில் நேற்று போப் ஆண்டவர் கூறுகையில், "மனித உயிர்கள் மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலையும் நான் கண்டிக்கிறேன். அனைவரிடத்திலும் அன்பும் மரியாதையும் செலுத்த வேண்டும். வன்முறை சம்பவங்களில் பலியான அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1219902291&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

இலங்கை கிரிக்கெட்: இந்தியா வெற்றி

>> Tuesday, August 26, 2008

இலங்கை கிரிக்கெட்: இந்தியா வெற்றி
இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில், 33 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், முதல் நாள் போட்டியில் இலங்கையும், 2வது நாள் ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றிப் பெற்றன.

3வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்களான விராத் கோக்லி 25 ரன்களும், கவுதம் காம்பீர் 8 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

யுவராஜ் சிங் 12, ரெய்னா 53, பத்ரிநாத் 6, சர்மா 32 ரன்கள், தோனி 76 ரன்களும் எடுத்தனர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய இலங்கை அணியின் ஜெயசூர்யா 13, சங்ககரா 9, துஷாரா 30, ஜெயவர்த்தனே 94 ரன்கள் எடுத்தனர். அந்த அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால், இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. ஆட்டநாயகன் விருதை தோனி பெற்றார்.

இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 4வது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.

(மூலம் - வெப்துனியா)

StumbleUpon.com Read more...

கிறிஸ்தவம் பார்வை: மூலத்தொடுப்பு கொடுக்க பயந்து நடுங்கும் முஸ்லீம்கள்

ஏட்டிக்கு போட்டி : கிறிஸ்தவம் பார்வையும் ஒரு கிறிஸ்தவனின் அழுகையும்



Quote:
ChristianPaarvai said:
கிறிஸ்தவம் பார்வையும் ஒரு கிறிஸ்தவனின் அழுகையும்!

உமர் மற்றும் உண்மை அடியான் என்ற பெயர்களில் நபிகளாரை விமர்சித்து வரும் கிறிஸ்தவரை நேரடி விவாதத்துக்கு அழைத்திருந்தனர் இணையப் பேரவை சகோதரர்கள். நேரடி விவாத்தைப் பயந்தவர்கள் எங்களுக்கு நேரடி விவாதமெல்லாம் சரிப்பட்டு வராது அதில் எங்களுக்குத் திறமை இல்லை, நாங்கள் எழுத்து விவாதத்துக்குத் தயார் என்று கூறியவர்கள் இப்போது நாங்கள் விவாதிக்க தயார் ஆனால் நீங்கள் கல்லெரிவீர்கள் என்ற புதிய புலம்பலுடன் ஒரு இடுகை இட்டுள்ளனர்.



Isa Koran said:
அருமையான இஸ்லாமியர் கிறிஸ்தவன் பார்வை தள நண்பரே, "நீங்கள் கல்லெரிவீர்கள்" என்று நான் சொன்னது ஒன்றும் புதியதாக நான் சொன்னதில்லை. நீங்கள் உங்கள் பதிலில் நான்காவது பாயிண்டை கொஞ்சம் பார்த்தால் உங்களுக்கு நன்றாக புரியும், அதாவது, முஸ்லீம்கள் கல்லெரிவார்கள் என்பதை நான் ஆரம்பமுதலே சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.


Quote:
4. மேடையில் பேசும் போது, என் மீது ஒருவன் கல்லெடுத்து எரிவான், எனக்கு காயம் உண்டாகும். அதற்கு உங்கள் பதில் என்ன இருக்கும்? ", அவனுக்கு மார்க்க அறிவு கிடையாது, அதனால் தான் உன் மீது கல்லெரிந்தான்" என்று சொல்லி தப்பித்துக்கொள்வீர்கள்.

Source: http://tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&t=654&view=next





Quote:
ChristianPaarvai said:

இவர்கள் ஆதாரமில்லாமல் எழுதிய ஒவ்வொன்றுக்கும் இன்று முஸ்லிம்கள் பதில் எழுதி வருகிறார்கள். எதையேனும் எழுதினால் முஸ்லிம்கள் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்தவர்களின் வயிற்றில் புளிளைக் கரைத்தது போல் இன்று பல சிந்தனையாளர்கயும் அறிவு ஜீவிகளும் இவர்களுக்கு பதிலளித்து வருகிறார்கள்.
பல தளங்களிலிருந்தும் தங்களுக்கு அடி விழுவதை சமாளிக்க முடியாமல் இப்போது புதிய கதை கூறி வருகின்றனர். நேரடி விவாதத்துக்கு சாக்குபோக்கு கூறி எழுத்து விவாதம் செய்கிறோம் என்று கூறியவர்கள் அதிலேனும் உண்மையாக இருக்கிறார்களா?

இஸ்லாம் கல்வி தளத்தில் வெளியான எம்.எம். அக்பர் அவர்களின் திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் ஓர் ஒப்பீடு என்ற தலைப்பில் மொத்தம் ஆறு தொடர்கள் வெளியாகி இருந்தன. அதில் பைபிளில் காணப்படும் முரண்பாடுகள், இறைகொள்கையில் உள்ள குழப்பங்கள், வராற்றுத் திரிபுகள், இறைதூதர்கள் மீதுள்ள இட்டுக் கட்டுதல்கள், முரண்பட்ட வரலாற்றுத் தகவல்கள், மற்றும் திருக்குர்ஆன் அதிலிருந்து எவ்வளவு வேறுபட்டுள்ளது என்பது மிகத் தெளிவாக ஆதாரத்துடன் விளக்கப்பட்டது. அதில் வைக்கப்பட்ட ஒவ்வொரு வாதங்களுக்கும் பதிலளித்தார்களா என்றால் இல்லை. ஏதோ சிலவற்றுக்கு மட்டும் பதில் எழுதியவர்கள் சம்மந்தமில்லாமல் உளறியது தான் மிச்சம். எங்கள் பைபிளில் தவறு இருந்தால் உங்கள் குர்ஆனிலும் தவறு உள்ளது என்று சிறுபிள்ளைத் தனமாக பதிலளித்ததுதான் மிச்சம்.

ஏகத்துவம் வலைப்பதிவாளர் கிறிஸ்தவம் தொடர்பாக எழுதிப் பதிவு செய்த கட்டுரைகளுக்கு தெளிவாக பதில் அளித்துள்ளார்களா என்றால் அதுவும் இல்லை. இன்னும் இதுதான் இஸ்லாம் சுவனப் பாதை போன்று அநேகம் தளங்களில் கிறிஸ்தவம் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.




Isa Koran Said:

அருமை நண்பரே, இஸ்லாமுக்கு பதில் சொல்வதற்கு நாங்கள் சிலரே உள்ளோம், ஆனால், நீங்கள் அதிகமாக இருக்கிறீர்கள். முக்கியமாக நாங்கள் ஒரு சிலரே போதும் இஸ்லாமுக்கு பதில் சொல்வதற்கு. எனவே, கொஞ்சம் காலதாமதம் ஆகும்.

பொய்யையும், புரட்டுக்களையும் மற்ற தளங்களிலிருந்து எடுத்து எழுதி, மூல தொடுப்பையும் கொடுக்காமல் எழுதும் ஆயிரம் பேர் இருந்தாலும், உண்மையாக எழுதும் ஒரு சிலரே போதும், உங்கள் இஸ்லாமுக்கு பதில் அளிப்பதற்கு! அன்று கோலியாத்தை கொள்வதற்கு ஒரு சின்னவன் தாவீது போதும். பொருத்திருங்கள், ஏன் அவசரப்படுகிறீர்கள். நீங்களும் இருக்கப்போகிறீர்கள், உங்கள் கட்டுரைகளும் இருக்கப்போகிறது, பதில் அளிக்காமலா போவேன்.


என்னவோ பதில் அளித்துவிட்டோம் என்றுச் சொல்லிக்கொள்கிறீர்கள், மனசாட்சி என்று ஒன்று இருந்தால், ஈஸா குர்‍ஆன் தளத்தில் உள்ள கட்டுரைகளுக்கு எத்தனை கட்டுரைகளுக்கு பதில் அளித்துள்ளீர்கள் சொல்லுங்கள். ஆனால், நான் சொல்கிறேன், நிச்சயமாக உங்கள் எல்லா பொய்களுக்கும் நான் பதிலைச் சொல்வேன்.

நான் என்ன உங்களைப்போல எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எழுதமுடியுமா? ஆதாரம் இல்லாமல் எழுதமுடியுமா? அல்லது பொய்யான படங்களை தயாரித்து வெளியிட்டு இது தான் உண்மை என்று எழுதமுடியுமா? ஒரு கட்டுரை எழுத அதிக நேரமாகும், ஒருவேளை மொழிபெயர்க்கும் கட்டுரை என்றால் கொஞ்சம் சீக்கிரமாக ஆகலாம், காத்திருங்கள். கடந்த ஆண்டுலிருந்து, இதுவரை பல தளங்களை நான் பார்த்துவிட்டேன், வீராவேசமாக எழுதுவார்கள், ஒரு தில்லுமுல்லு செய்து வாயை மூடிக்கொள்வார்கள். எங்களுக்குத் தெரியாத உங்கள் நேர்மையும், நீதியும்.


Quote:
ChristianPaarvai said:
முஹம்மது நபி (ஸல்) பைபிளை விமர்சித்தார்களாம்!

பைபிள் என்ற வார்த்தையே குர்ஆனில் இல்லை. மாறாக இறைவனால் இறக்கப்பட்ட வேதம் குர்ஆன். வேதத்தில் கையூடல் செய்த யூத கிறித்தவர்களை குர்ஆன் விமர்சிக்கவே செய்கிறது. தான் அருளிய வேதத்தை தங்கள் மன இச்சைக்கு ஏற்ப மாற்றியவர்களை விமர்சிப்பது அல்லாஹ்வின் அதிகாரம்.



Isa Koran Said:
பைபிளை விமர்சிக்க உங்கள் நபிக்கு உரிமை இருக்கும் போது, உங்கள் குர்‍ஆனை விமர்சிக்க உலக மக்களுக்கு ஏன் உரிமை இல்லை?

உங்கள் முகமது என்ன உத்தம புருஷரா? அவ‌ரை ந‌பி என்று நீங்க‌ள் ந‌ம்புங்க‌ள், அது உங்க‌ள் விருப்ப‌ம், அதை நாங்க‌ள் ந‌ம்ப‌வேண்டிய‌ அவ‌சிய‌மென்ன‌?

தன் வேதத்தை மாற்றிவிட்டார்கள் என்று புலம்புவதற்கு உங்கள் இறைவனுக்கு நெருடலாக தெரியவில்லையா?

இறைவனால் இறக்கப்பட்ட வேதம் என்று நீங்கள் நம்புகிறீர்கள், அவ்வளவு தான் அது உண்மையல்ல.

முகமது தன் விருப்பத்திற்கு சொன்ன வசனங்களை குர்‍ஆன் என்று 14 நூற்றாண்டுகளாக சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்.

ஆயிரம் பேர் தன்னை நபி என்று சொல்லிக்கொண்டு வருவார்கள், அவர்கள், சொல்வதெல்லாம் உலக மக்கள் வேதம் என்று ஏற்றுக்கொள்ளவேண்டுமா என்ன? சொல்லுங்கள்?

இதைப் பற்றி ஏற்கனவே, நான் ஒரு கட்டுரையில் எழுதியுள்ளேன், அதை அப்படியே தருகிறேன். நீங்களே சொல்லுங்கள், ரஷித் காலிபா என்பவர் குர்‍ஆன் வசனத்தை மாற்றி தன் பெயரை எழுதிக்கொண்டார், ஏன் அவரை நீங்கள் நம்பவில்லை? அதேபோலத்தான் வந்தவன் எல்லாம் தன்னை நபி என்று சொல்லிக்கொண்டு வந்தால், உலகம் அப்படியே ஏற்றுக்கொள்ளாது.

எப்படி முகமது தன்னை கடைசி நபி என்று சொல்லிவிட்டுச் சென்றாரோ, அதே போல, இயேசுவும் "சில நரிகள் ஆட்டுக்குட்டியின் தோலைப்போர்த்திக் கொண்டு கள்ள நபிகளாக வருவார்கள், அவர்களை நம்பவேண்டாம்" என்று முகமதுவிற்கு முன்பு 6 நூற்றாண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்.

Quote:
ஈஸா குர்-ஆன் பதில்:

நபி (தீர்க்கதரிசி) என்று சொல்லிக்கொண்டு வருகிற எல்லாரையும் ஏற்றுக்கொள்ள முடியுமா? பைபிள் தெளிவாகச் சொல்கிறது, இயேசுவிற்கு அடுத்து, பரிசுத்த ஆவியானவருக்கு அடுத்து வேறு யாரும் வரவேண்டிய அவசியமில்லை என்று, இப்படி இருக்க கிறிஸ்தவர்கள் எப்படி முகமதுவை நம்ப முடியும்? சொல்லுங்கள்.

"மெஹ்தி" Mehdi

ஷிய முஸ்லீம்கள் "மெஹ்தி" Mehdi என்ற ஒரு "நபி" அல்லது ஒருவர் வருவார், அவர் வந்து உலகத்தை மாற்றுவார் என்று சொல்லிக்கொண்டு வருகிறார்கள். அவரை சுன்னி முஸ்லீம்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இவரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? இவரைப் பற்றி சில ஹதீஸ்கள் உள்ளது என்று விகீபீடியா சொல்கிறது (http://en.wikipedia.org/wiki/Mahdi). எனவே, ஒருவர் நபி என்று வந்தால், எல்லாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயம் ஒன்றும் இல்லை.

வந்தவர் உண்மையாக இறைவன் அனுப்பியவராக இருந்து, மக்கள் அவரை நம்பவில்லையானால், அவர்களுக்கு இறைவன் அதற்கேற்ற கூலி கொடுப்பான் என்பதை மட்டும் நான் நம்புகிறேன். கிறிஸ்தவர்களுக்கு பைபிளில் விவரமாக எல்லாம் சொன்னதால்( ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை), நாங்கள் நம்புவதில்லை, அவ்வளவு தான்.


ரஷீத் காலிஃபா:

ரஷீத் என்று ஒருவர் கூட ஒரு நபி என்று சொல்லிக்கொண்டு வந்தார் (November 19, 1935 – January 31, 1990) , குர்-ஆனில் உள்ள "Numerical Miracle" என்று சொல்லிக்கொண்டு ஒரு கலக்கு கலக்கினார். தான் மொழி பெயர்த்த குர்-ஆனில் "தன் பெயரை" கூட சேர்த்துக்கொண்டார்.

தன்னிடம் அல்லா பேசுவதாகச் சொன்னார், அவரையும் எத்தனையோ பேர் அங்கீகரித்தனர். தான் சொல்லும் இஸ்லாம் தான் உண்மையானது, இப்போது உள்ளது உண்மையானது இல்லை என்றுச் சொன்னார்.


இவரை ஒரு பெரிய "அல்லாவின் சேவகன்" என்று அஹமத் தீதத் (Ahmad Deedat) என்ற இஸ்லாமிய ஊழியர் கூட புகழ்ந்தார். இவரின் Numerical Miracle பற்றி மிகவும் அதிகமாக அஹமத் தீதத் புகழ்ந்தார்.

படிக்கவும் இங்கே: http://en.wikipedia.org/wiki/Rashad_Khalifa

Quote: from Wikipedia
Khalifa was initially well-received throughout the Muslim world upon his mathematical discoveries embedded in the text of the Quran. Prominent Shaykh Ahmed Deedat referred to him as a "great servant" of God in his book based on Khalifa's discoveries "Al-Qur'an: The Ultimate Miracle


1991ல் அவரை கொலை செய்தார்கள். இவரைப் பற்றி உங்கள் கருத்து என்ன? இவரை அஹமத் தீதத் புகழ்ந்துள்ளாரே. இவரை நம்பும்படி நான் சொல்லவில்லை, இப்படி பல பேர் வருவார்கள் என்றுச் சொல்கிறேன். ( ஒரு தமிழ் பாட்டு: யாரோ வருவார், யாரோ போவார், வருவதும் போவதும் தெரியாது..)

ரஷீத் அவர்களின் குர்-ஆன் மொழிபெயர்ப்பை இங்கு படிக்கலாம்: http://19.org/km/RK/1

கீழ் கண்ட வசனங்களில் அவர் தன்னுடைய பெயரை எழுதிக்கொண்டு குர்-ஆனை மொழி பெயர்த்தார். இவைகள் முகமதுவிற்கு என்று எங்களுக்குத் தெரியும்.
Quote:
Quran 13:30

We have sent you (O Rashad) to this community, just as we did for other communities in the past. You shall recite to them what we reveal to you, for they have disbelieved in the Most Gracious. Say, "He is my Lord. There is no god except He. I put my trust in Him alone; to Him is my ultimate destiny."

Quran 13:38

We have sent messengers before you (O Rashad), and we made them husbands with wives and children. No messenger can produce a miracle without GOD's authorization, and in accordance with a specific, predetermined time.

Quran 25:56

We have sent you (Rashad)as a deliverer of good news, as well as a warner.

Quran 34:28

We have sent you (O Rashad) to all the people, a bearer of good news, as well as a warner, but most people do not know.

Quran 34:46

Say, "I ask you to do one thing: Devote yourselves to GOD, in pairs or as individuals, then reflect. Your friend (Rashad) is not crazy. He is a manifest warner to you, just before the advent of a terrible retribution."

Quran 36:3

Most assuredly, you (Rashad) are one of the messengers.

Quran 42:24

Are they saying, "He (Rashad) has fabricated lies about GOD!"? If GOD willed, He could have sealed your mind, but GOD erases the falsehood and affirms the truth with His words. He is fully aware of the innermost thoughts.

Quran 81:22

Your friend (Rashad) is not crazy.


இப்படி சிலர் இருக்கிறார்கள், இவரை நபி என்று நாங்கள் (ஏன், நீங்கள் கூட) ஏற்றுக்கொள்ள முடியுமா? சொல்லுங்கள்.


கிறிஸ்தவத்திற்கு வெளியே ஒருவர் "நபி என்று" சொல்லிக்கொண்டு வந்தால், அவர்களை கிறிஸ்தவர்கள் நிராகரிக்கின்றனர் என்று குற்றம்சாட்டும் இவர்கள், இஸ்லாமுக்குள்ளேயே, அதன் பெயரை வைத்துக்கொண்டே "நபி என்று" வந்த மற்றும் வருவார்கள் என்று நம்பப்படுகின்ற சிலரைப் (மெஹ்தி என்பவரும், ரஷீத காலிபா ) பற்றி இவர்களின் கருத்து என்ன என்று தெரிந்தால் தானே, நாங்களும் ஏன் முகமதுவை நிராகரிக்கிறோம் என்று சொல்வதற்கு ஏதுவாகும்?

http://tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=3273





Quote:
ChristianPaarvai said:
குர்ஆன் இறைவேதம் என்பதை ஆதாரத்துடன் நிரூபித்து வருகிறோம். முந்தைய வேதங்களைத் தழுவி யூத கிறித்தவப் புரோகிதர்களால் எழுதப்பட்ட பைபிளில் அதில் காணப்படும் முரண்பாடுகளும் கட்டுக் கதைகளும், ஆபாசங்களும், அறிவுக்கு ஒவ்வாத கதைகளும், அறிவியலுக்கு முரண்பட்ட விஷயங்களும் குர்ஆனின் இந்த குற்றச்சாட்டை நிரூபிப்பதாக உள்ளது. உங்களிடம் உண்மை இருந்தால் அதற்கு மறுப்பு எழுதுங்களேன்.




Isa Koran said:

கண்டிப்பாக சகோதரரே கண்டிப்பாக, நான் உங்கள் கேள்விகளுக்கு எல்லாம் பதிலை தமிழிலேயே தருவேன். அதே நேரத்தில் உங்கள் குர்‍ஆனில் உள்ள பிழைகள், முரண்பாடுகள், தில்லுமுல்லுகள், புராண புரட்டுக்கதைகள் போன்றவற்றிற்கும் நீங்களும் பதில் தாருங்கள், உங்களால் முடிந்தால். கட்டுரைகளை படிக்கும் வாசகர்கள் முடிவு எடுக்கட்டும், இஸ்லாம் அமைதியான மார்க்கமா? அல்லது மக்களின் இரத்தத்தில் தோய்த்து அதன் அஸ்திபாரத்தில் முகமது கட்டியெழுப்பிய மார்க்கமா? என்று. எனவே, நீங்கள் எழுதுங்கள், நாங்களும் எழுதுகிறோம்.




Quote:
ChristianPaarvai said:
முஸ்லிம் பெயரை ஏன் வைத்துள்ளீர்கள் என்று கேட்டதற்கு முஸ்லிம் பெயர் வைத்தாலும் கிறித்தவனாகத் தான் அடையாளம் காட்டுகிறார்களாம். இது தான் அவல நிலை. பெயர் வைத்து விட்டீர்கள் மாற்றுவதற்கு மனமில்லை. உமர் என்ற பெயர்வைத்ததன் நோக்கம் என்ன? சற்று விளக்குவீர்களா? ஈஸா குர்ஆன் என்ற பெயருக்கு செப்டம்பர் 2007 அன்றே விளக்கம் அளித்தார்களாம். அந்த விளக்கத்துக்கு முரண்பட்டு சமீபத்தில் அனனானிமசுக்கு பதிலளித்ததை தந்திரமாக மறைத்து விட்டனர்.



Isa Koran Said:

எது சொன்னாலும் நீங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள், என்னத்தைச் சொல்ல, அதாவது மூடனை உலக்கையில் நொய்யோடு புடைத்தாலும்,அவன் மூடத்தனம் அவனைவிட்டு போகாதம். அதுபோலத் தான் உங்கள் நிலையும். நான் எதையும் மறைக்காமல் சொல்கிறேன், ஆனால், ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள். ஆனால்,

ஒருவர் தன்னை நபி என்றுச் சொன்னால் நம்புவீர்கள்

உங்கள் நபி பேத்தி வயதில் உள்ள 6 வயது சிறுமியை திருமணம் செய்துக்கொண்டாலும், அது சரிதான் என்றுச் சொல்வீர்கள்.

தன் மருமகளை திருமணம் செய்துக்கொண்டாலும், அதுவும் சரி என்றுச் சொல்வீர்கள்.

போர் செய்து நாட்டை பிடித்து, கிடைத்த பெண்ணை அன்றே கற்பழித்தாலும், அது சரியானது என்பீர்கள்.

சொர்க்கத்தில் அனேக பெண்களை அல்லா தயார் நிலையில் வைத்துள்ளார் என்றால், அதை நம்புவீர்கள்.

நாங்கள் சொல்வதை நீங்கள் நம்புவீர்களா?

மற்றபடி தந்திரமாக மறைப்பது எனக்கு வழக்கமில்லை, உங்களுக்கு அது வழக்கமாக இருக்கும், அதனால், தான் உண்மை வெளிப்பட்டு விடும் என்று தெரிந்து பல பொய்களை சொல்லி, எழுதி வருகிறீர்கள். இதில் வேறு ஆதாரமும், மூல தொடுப்புக்களையும் தருவதும் இல்லை. ஒன்று மட்டும் நிச்சயம், கடந்த ஒருவருடமாக, உங்கள் பொய்கள் ஒவ்வொன்றாக வெளிப்பட்டுக்கொண்டு இருக்கிறது.



Quote:
ChristianPaarvai said:

கிறிஸ்தவம் பார்வை: கிறிஸ்தவம் பார்வை என்பது கிறிஸ்தவ பெயர் என்று கருதவில்லை. கிறிஸ்தவத்தின் உண்மை நிலையை படம்பிடித்துக் காட்டவே இப்படி பெயர் வைக்கப்பட்டுள்ளது. பைபிள் என்றோ, ஜேம்ஸ் என்றோ, ஜோசப் என்றோ கிறித்தவப் பெயர்களை நாங்கள் வைக்க மாட்டோம். அந்த அவல நிலை எங்களுக்கு இல்லை. அனானிமசுகள் முஸ்லிமா கிறித்தவரா என்பது யாருக்கும் தெரியாது. எனவே அனானிமசுகளை இங்கே இழுக்காதீர்கள்.


Isa Koran Said:

நீங்கள் எது கருதினாலும், உலகம் அதற்கு ஆமோதம் தரவேண்டும், ஆனால், நாங்கள் கருதுவது மட்டும் உங்களுக்கு பொய்யாக தெரியும்? நல்லா இருக்கு உங்கள் கதை.

அனானிமஸ் கிறிஸ்தவரா முஸ்லீமா என்று தெரியாதா உங்களுக்கு? நாங்கள் என்ன காதில் பூ வைத்துக்கொண்டா இருக்கிறோம். கிறிஸ்தவர் போல பெயர் வைத்துக்கொண்டு எனக்கு பின்னூட்டம் இடுவது, என்னவோ கிறிஸ்தவத்தை தான் தான் காப்பாற்றுவது போல எனக்கு பின்னூட்டம் இடுவது போன்ற இஸ்லாமிய தந்திரங்கள் எல்லாம் எல்லாருக்கும் தெரியும். உங்கள் நபிக்கு மட்டும் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் வேதம் மீது நம்பி தன் மத வியாபாரத்தை நடத்தும் அவல நிலை இருந்தது.





Quote:
ChristianPaarvai said:

ஏன் லிங்க் கொடுப்பதில்லை?

உங்கள் விமர்சனங்களுக்கு நாங்கள் ஆதாரப் பூர்வமாக மறுப்பு அளித்து வருகிறோம். அவ்வாறு மறுப்பு எழுதும் போது எது சம்மந்தமாக நீங்கள் எழுதியுள்ளீர்களோ அதனை மேற்கோள் காட்டியும் வருகிறோம். உங்களைப் போன்று சம்மந்தமில்லாமல் தெளிவற்று உளறுவதில்லை. மட்டுமல்ல. இது அவசர உலகம் பக்கம் பக்கமாக படித்துக்கொண்டிருக்க யாரும் விரும்புவதில்லை. மேலும் லிங்க் கொடுக்கக் கூடிய அளவுக்கு தரம் வாய்ந்ததாக உங்கள் தளங்களை நாங்கள் கருதவில்லை. உங்களை நாங்கள் ஒரு பொருட்டாகவும் கருதவில்லை. எங்கள் கட்டுரைகளுக்கு ஆதாரப் பூர்வமாக மறுப்பு எழுதாமல் சம்மந்தமில்லாததையும் தெளிவற்ற விஷயங்களையும் எழுதும் உங்கள் பக்கங்களுக்கு நாங்கள் ஏன் லிங்க கொடுக்க வேண்டும்?




Isa Koran Said:

அதைத் தான் நானும் கேட்கிறேன், நான் எழுதிய எந்த வரிகளுக்கு நீங்கள் மறுப்பு எழுதுகிறீர்களோ, அந்த வரிகள் எந்த கட்டுரையில் இருக்கிறது என்றுச் சொல்லி, தொடுப்பு கொடுக்கும் குறைந்த பட்ச இங்கீதம் கூட உங்களுக்கு இல்லாமல் போவதைக் கண்டு தமிழ் இணைய உலகம், ஆச்சரியத்துடன் இஸ்லாமியர்களை பார்த்துக்கொண்டு இருக்கிறது.

சரி எப்படியோ, எங்கள் கட்டுரையைக் கண்டு நீங்கள் பயந்தால் சரி. வெளிச்சத்தைக் கண்டால் இருளுக்கு பயம் தானே அதைத்தான் நீங்கள் செய்கிறீர்கள்.

எங்கள் கட்டுரைகள் தரம் வாய்ந்ததாக இல்லாமல் இருந்தால், பின் ஏன் நாங்கள் எழுதுகின்ற ஒரு சில வரிகளுக்கு மட்டும் பதில் கொடுத்தே தீரவேண்டும் என்று ஏதோதோ எழுதிக்கொண்டு, உங்கள் நேரத்தை வீணாக்குகிறீர்கள்.

பாவம் நீங்கள், எங்களை ஒரு பொருட்டாக கருதவில்லையானால், ஏன் என் வரிகளுக்கு வீணாக பதில் எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள்.

எங்களை ஒரு பொருட்டாக கருதாத நீங்கள், ஏன் போல அனேக தளங்களை எங்களுக்கு பதில் சொல்ல அமைத்து வருகிறீர்கள்.

இத்தனை தளங்கள் இருப்பதும், எங்களுக்கு பதில் என்றுச் சொல்லிக்கொண்டு, உங்கள் நபி பற்றி பெருமையாக எழுதிக்கொண்டு இருப்பதும், நாங்கள் சொல்வது இஸ்லாமுக்கு ஒரு மரண அடியாக மாறிவிடும் என்று பயந்துத் தானே?







Quote:
ChristianPaarvai said:
எது கோழைத்தனம்?

நேரடி விவாதத்துக்கு அழைத்த போது நீங்கள் என்ன காரணம் கூறினீர்கள்?

//1. நான் ஒரு முழு நேர ஊழியன் கிடையாது, வாரம் ஒரு நாள் எனக்கு கிடைக்கும் ஒரு சில மணித்துளிகளை நான் என் கட்டுரைகளுக்கு பயன்படுத்துகிறேன். எனவே, மேடை விவாதத்திற்கு என்னால் வரமுடியாது.

2. மேடை விவாதத்தில் "முஸ்லீம்கள்" முன்வைக்கும் ஆதாரங்கள் உணமையா பொய்யா? என்று என்னால் கண்டுபிடிக்க முடியாது. இதுவே எழுத்து விவாதமாக‌ இருந்தால், எனக்கு அதிக நேரமிருக்கும் அந்த நேரத்தில் என்னால் சில விவரங்களை கண்டுபிடிக்கமுடியும்.

3. மேடை விவாதத்தில் விவாதிக்கும் அளவிற்கு பேச்சாற்றல் பெற்றவன் அல்ல நான். அவ்வளவு அறிவு கூட எனக்கு இல்லை. மேடை பேச்சுக்கு அனுபவம் அதிகம் வேண்டும். அது எனக்கு இல்லை. எனவே, எழுத்து வடிவ விவாதமே எனக்கு சரியானது.

4. மேடையில் பேசும் போது, என் மீது ஒருவன் கல்லெடுத்து எரிவான், எனக்கு காயம் உண்டாகும். அதற்கு உங்கள் பதில் என்ன இருக்கும்? ", அவனுக்கு மார்க்க அறிவு கிடையாது, அதனால் தான் உன் மீது கல்லெரிந்தான்" என்று சொல்லி தப்பித்துக்கொள்வீர்கள்.

5. கடைசியாக இஸ்லாம் ‍கிறிஸ்தவ விவாதம் என்பது ஒரு நாளில் பல மணிகள் மேடையில் பேசினால் தீர்ந்துவிடும் விசயம் இல்லை. இதற்கு பல ஆதாரங்களை முன்வைக்கவேண்டும், பல விவரங்களை, புத்தகங்களை படித்து தெரிந்துக்கொள்ளவேண்டும். மேடை விவாதத்தில் இதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்காது. //

எனக்கு திறமை இல்லை, பேச்சாற்றல் இல்லை, நான் அறிவற்றவன் என்றெல்லாம் கூறியவர் இப்பாது ஐயோ எனக்கு பயமாக உள்ளது என்று அழுகிறார்.




Isa Koran Said:


அன்பான நண்பரே, கொஞ்சம் கண்களை திறந்துக்கொண்டு(நீங்கள் மூக்கு கண்ணாடி அணிபவராக இருந்தால், அதை போட்டுக்கொண்டு), மேலே நான் கொடுத்த 5 பாயிண்டுகளில் நான்காவது பாயிண்டை படித்து தெரிந்துக் கொள்ளவும். ஒவ்வொரு முறையும் முழு இராமாயணத்தைச் சொல்லமுடியாது? யார் யாருக்கு என்ன எழுதவேண்டும் என்று எனக்குத் தெரியும். உங்களுக்கு இந்த வரிகள் போதும்.


Quote:
ChristianPaarvai said:
//நீங்கள் அமைதியானவர்களாக இருந்தால், உங்கள் முன் வந்து விவாதிக்க நாங்கள் தயார்? ஆனால், உங்களை யார் நம்புவார்கள்? மேடையில் விவாதம் என்றுச் சொல்லி, மேடையில் நீங்கள் பேசிக்கொண்டு இருப்பீர்கள், ஆனால், யாரோ ஒரு முஸ்லீம் எங்கள் மீது கல்லெரிவார், இது எங்களுக்கு வேண்டுமா? உங்களை நம்பலாம், ஆனால், எல்லா இஸ்லாமியர்களை நம்பமுடியாது?//

இஸ்லாமிற்கும் கிறிஸ்தவத்துக்கும் மத்தியில் பல்வேறு விவாதங்கள் நடந்துள்ளன. நடக்கின்றன. கேரளாவிலும் தமிழ் நாட்டிலும் நடந்துள்ளன. யார் கல்லெரிந்தார்கள்? அஹ்மத் தீதாத், ஜாக்கிர் நாயக், எம். எம் அக்பர், ஜைனுல் ஆபிதீன் என பல்வேறு அறிஞர்கள் கிறித்தவ மிஷினரிகளிடம் பகிரங்க விவாதம் நடத்தியுள்ளனர். எந்த அசம்பாவிதமும் இதுவரை நடை பெறவில்லை. எனவே நீங்கள் அசம்பாவிதம் நடக்கும் என்று கூறி சாக்கு போக்கு கூறாதீர்கள். உங்கள் பாதுகாப்புக்குண்டான முழு உத்தரவாதத்தையும் தருகிறோம். எந்த அசம்பாவிதமும் நடக்காது என்று உறுதி கூறுகிறோம். இப்போது தயாரா?

source: http://christianpaarvai.blogspot.com/2008/07/blog-post_24.html



Isa Koran Said:
நான் ஒன்றும்,மேலோட்டமாக கட்டுரைகளை எழுதிக்கொண்டு இருக்கவில்லை.

ஏன் முஸ்லீம் புர்கா அணிகிறார்கள்?
ஏன் மக்காவை நோக்கி நமாஜ் செய்கிறார்கள்?
ஏன் மூஸ்லீகள், 5 வேளை தொழுகிறார்கள்?

போன்ற சுலபமான கேள்விகளை கேட்பதில்லை. இப்படிப்பட்ட கேள்விகள் கேட்டால், மிகவும் சந்தோஷமாக நீங்கள் பதில் சொல்வீர்கள்.

குர்‍ஆனின் மற்றும் இஸ்லாமின் அஸ்திபாரங்கள் அதிரும் விதமான கேள்விகள் யாரும் கேட்பதில்லை. அப்படி கேட்பவர்களுக்கு நீங்கள் எப்படி பதில் தருகிறீர்கள் என்று எங்களுக்குத் தெரியும்.

எனவே, நேரடி விவாதம் என்பதை விட்டுவிட்டு, கட்டுரைகளினால் பதில்களைத் தருவீர்களானால், இணையத்தில் இருக்கும் இஸ்லாமியர்களுக்கு ஒர் அளவிற்காகவது மன ஆறுதலாக இருக்கும். இல்லையானால், சங்கு தான்.

ஒரு அறிவிப்பு: என்னிடம் எப்படி கேள்விகள் கேட்கப்படுமோ அப்படித் தான் என் பதில்களும் இருக்கும். எந்த வேகத்தில் பந்து வீசப்படுமோ அதே வேகத்தில் நானும் பந்தை வீசுவேன். எனவே, இந்த கட்டுரையில் கிறிஸ்தவன் பார்வை தளத்தின் வரிகளின் பிரதிபலிப்பே என் பதில்களும்.
 

StumbleUpon.com Read more...

ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!

ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!




ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?!
 

Quran or Qurans?!



இக்கட்டுரையை அரபியில் படிக்க: النسخة العربية
 
 
இந்த கட்டுரைக்கான விவரங்கள் கீழ் கண்ட புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது:


The reading ways of Quran dictionary: (moa'agim alqera'at alqura'nia):


இது ஒரு அரபி மொழியில் எழுதப்பட்ட புத்தகம் மற்றும் இதனை இஸ்லாமிய அறிஞர்கள் எழுதினார்கள். குவைத் பல்கலைக்கழகம்(Kuwait University) இதனை 8 பாகங்களாக வெளியிட்டது. இதன் முதல் பதிப்பு 1982ம் ஆண்டு (அரபியில்) வெளியிடப்பட்டது, இதன் ஆசிரியர்கள்:

 
 
டாக்டர். அப்துல் அல் சலாம் மக்ரெம் (Dr. Abdal'al Salem Makrem)
டாக்டர். அஹமத் மொக்தார் ஒமர் (Dr. Ahmed Mokhtar Omar)

இவர்கள் இருவரும் குவைத் பல்கலைக் கழகத்தில் அரபி மொழி பேராசிரியர்களாக இருக்கிறார்கள்.
புத்தக பதிப்பாளர்: ஜத் அல்சலாசல்-குவைத் (Zat Alsalasel – Kuwait)
 
முன்னுரை:

உத்மான் இபின் அஃபான் காலம் வரைக்கும் பல குர்‍ஆன்கள் [massahif] எழுதப்பட்டது. இவர் இதர குர்‍ஆன்களை எரித்துவிட்டார் மற்றும் ஒரு குர்‍ஆனை ஆதிகாரபூர்வமான பிரதி என்று வைத்துக்கொண்டார்.

உதாரணத்திற்கு, கீழ்கண்ட குர்‍ஆன் வகைகள்:

 
 
1. அலி பின் அபி தலிப் என்பவரின் படி குர்‍ஆன் (Quran according to Ali bin abi talib)

2. இபின் மஸூத் என்பவரின் படி குர்‍ஆன் (According to Ibn Mass'oud)

3. அபி பின் கப் என்பவரின் படி குர்‍ஆன் (According to Aobi bin ka'ab)

 
 
இதன் பொருள் இவர்கள் குர்‍ஆனை எழுதினார்கள் என்று பொருளில்லை; இதன் பொருள் அவர்கள் குர்‍ஆனை எப்படி படிக்கவேண்டும் என்ற விவரங்களை கொண்டு இருந்தனர்.

குர்‍ஆனை 7 வகையில் படிக்கலாம்(ஏழு எழுத்துக்கள் கொண்ட குர்‍ஆன் வசனத்தின் படி [alssib' ailmithani]) + 3 இதர வழிகள் (mokimila) + 4 கூடுதலான வழிகள், இதை இயல்புக்கு மாறான முறை[shaza] என்பார்கள்.

ஏழு வகையாக படிப்பவர்கள் மற்றும் அவர்களின் மாணவர்கள்:
1. நஃபா: கலன் + வர்ஷ் (Nafaa': Qalon + Warsh)
2. இபின் கதிர்: அல்பிஜி + கோன்பில் (Ibn Kathir: Albizi + Qonbil)
3. அபி அம்ரொ: அல்தோரி + அல்சோசி (Abi amro: Aldori + Alsosi)
4. இபின் அமிர்: இபின் அபன் + இபின் த்வான் (Ibn Amer: Ibn Aban + Ibn Thkwan)
5. அச்செம்: அபோ பைகர் + ஹஃபஸ் (Assemm: Abo Biker + Hafas)
6. அல் கெஸ்ஸய்: அலித் + அல்தோரி (Alkessa'i: Allith + Aldori)
7. ஹம்ஜா: அல்பிஜாஜ் + அபோ ஈஸா அல்சிர்பி (Hamza: Albizaz + Abo Isa Alsirfi)
 
 
 
மூன்று வகையாக படிப்பவர்கள் மற்றும் அவர்களின் மாணவர்கள்:
 
1. அபோ ஜிபார்: இபின் வர்தன் + இபின் ஜ்மஜ் (Abo Ji'faar: Ibn Wardan + Ibn Jmaz)
2. யாக்கோப்: ரோயிஸ் + ரோஹ் (Yaccob: Rois + Roh)
3. கலிஃப்: அலம்ரோஜி + இத்ரஸ் (Khalif: Almrozi + Iddres)
 
 
 
நான்கு வகையாக படிப்பவர்கள் மற்றும் அவர்களின் மாணவர்கள்:
 
 
1. இபின் மொஹிச‌ம்: அல்பிஜி + இபின் ஷின்போஜ் (Ibn Mohisn: Albizi + Ibn Shinboz)

2. அல்யாஜிதி: சொலைமான் இபின் அல்ஹ‌க‌ம் + அஹ்ம‌த் பின் ஃப‌ரா (Alyazidi: Soliman Ibn Alhakam + Ahmed Bin Farah)

3. அல்ஹ‌ஸ‌ன் அல்ப‌ஸ்ஸ‌ரி: அபோ ந‌யிம் அல்ப‌ல்கி + அல்தொரி (Alhassan Albassry: Abo Na'im Albalkhi + Aldori)

4. அலாம‌ஷ்: அமோடோடி + அல்ஷின்ப்ஜி அல்ஷ‌ட்டாய் (Ala'mash: Amotodi + Alshinbzi Alshttaoi)
 
 
 
வித்தியாசம் இப்படியாக உள்ளது:
 
 
1. எழுத்துக்களில் வித்தியாசம் (spelling)

2. தொனியில் வித்தியாசம் (tone - harkat)

3. அரபிக் இலக்கணத்தில் வித்தியாசம் (A'rab - Arabic grammar)

4. ஒரே பொருள் வரும் வெவ்வேறு வார்த்தைகளை பயன்படுத்துதல் (உதாரணத்திற்கு, சண்டை, கொல்) - using a similar word but different (like FIGHT, KILL)

5. வார்த்தைகளின் இடங்களை மாற்றுதல் (changing place of words)

6. வார்த்தைக‌ளை சேர்த்தல் அல்லது எடுத்துவிடுத‌ல்(adding or removing words)
 
 
நான் இங்கு என்ன சொல்ல வருகிறேன் என்பது மிகவும் தெளிவாக உள்ளது; அதாவது ஒரே ஒரு குர்‍ஆன் உள்ளது என்று ஒருவரும் சொல்லமுடியாது.

 
முஸ்லீம்களின் கவனத்திற்கு நான் கொண்டுவர விரும்பும் ஒரு விஷயம் என்னவென்றால், "filohen mahfouz" or "in saved plates" என்றுச் சொல்லக்கூடிய "தாய் குர்‍ஆன்" என்று ஒன்று இல்லை என்பது தான் உண்மை.

 
"தாய் குர்‍ஆன் ஒன்று உண்டு" என்று சொன்னால், ஏன் இப்படி பல வித்தியாசங்கள் அவைகளில் உள்ளன‌? அதிகாரபூர்வமான இயேசுவின் நற்செய்தி நூல்கள் நான்கு இருப்பதினால், முஸ்லீம்கள் அவைகளை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களுக்கு ஒரே ஒரு நற்செய்தி நூல் வேண்டும் என்றுச் சொல்கிறார்கள்.

 
முஸ்லீம்கள் "மத்தேயு/மாற்கு/லூக்கா என்பவரின் படி..." என்று எழுதப்பட்டுள்ளதை அங்கீகரிக்கமாட்டார்கள், ஆனால், தங்களிடம் அப்படி உள்ளதை அங்கீகரிக்கிறார்கள். இன்று நம்மிடம் உள்ள குர்‍ஆன் அனைத்தும் ஒபி இபின் கனப் என்பவரின் படி உள்ள குர்‍ஆன் தான் (They not accept the word "according to ..." but they have it. Today's Quran which all we use is according to Obi IBM Kanab.)
 
 
நான் என்ன சொல்லவருகிறேன்?

 
சூரா மர்யம் என்ற குர்‍ஆன் சூராவிலிருந்து மூன்று எடுத்துக் காட்டுக்களைக் காணலாம் வாருங்கள்.
 
 
1. எடுத்துக்காட்டு ஒன்று: சூரா மர்யம் 19:19
[English translation based on the one done by Rashad Khalifa]

 
* ஹஃப்ச் இவ்விதமாக படிக்கிறார்:
 
He said, "I am the messenger of your Lord, to GRANT (who does grant?: the angel) you a pure son."

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: li'ahiba
 
 
* நஃபா, அபோம்ரோ, கலன், வர்ஷ்... படிக்கிறார்கள்:
 
 
He said, "I am the messenger of your Lord, to GRANT (who does grant?: Lord) you a pure son."

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: liyihiba
 
 
* அல்பஹர் அல்மொஹித், "Alkishaf" a book for Alzimikhshiry:
 
 
He said, "I am the messenger of your Lord, HE ORDERED ME TO GRANT YOU a pure son."

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: amarani 'n 'hiba
 
 
2. எடுத்துக்காட்டு இரண்டு: சூரா மர்யம் 19:25
[English translation based on the one done by Yusuf Ali.]

 

* ஹஃப் வார்த்தைகளை இப்படியாக படிக்கிறார்:

 

And shake towards thyself the trunk of the palm-tree: IT WILL LET FALL fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: toosaqit

 

* ஹம்ஜா, அல்மிஷ்:

 

And shake towards thyself the trunk of the palm-tree: FALL fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tasaaqat

 

* அஸ்ஸெம், அல்கிஸய், அல்மிஷ்:

 

And shake towards thyself the trunk of the palm-tree: IT WILL FALL fresh ripe dates upon thee.

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: yassaqat

 

* அபோ அம்ரொ, அஸ்ஸெம், நஃபி:

 

And shake towards thyself the trunk of the palm-tree: WILL FALL fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tassaqat

 

* அபோ நஹிக், அபோ ஹை:

 

And shake towards thyself the trunk of the palm-tree: IT FALL fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tosqt

 

* அலேரப் a book for Alnahas:

 

And shake towards thyself the trunk of the palm-tree: WE WILL FALL fresh ripe dates upon thee.

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: nosaqit

 

* மஸ்ரோக்

 

And shake towards thyself the trunk of the palm-tree: IT WILL FALL [someone unknown will let fall] fresh ripe dates upon thee.

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: yosaqit

 

* அபோ ஹையா:

 

And shake towards thyself the trunk of the palm-tree: IT FALL fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tasqwt

 

* அபோ ஹையா

 

And shake towards thyself the trunk of the palm-tree: FALL fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: yasqwt

 

* அபோ ஹையா

 

And shake towards thyself the trunk of the palm-tree: IT WILL FALL one by one] fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tatasaqat

 

* அபோ அல்ஸ்மல்:

 

And shake towards thyself the trunk of the palm-tree: FALLING fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: yosqt

 

3. எடுத்துக்காட்டு மூன்று: சூரா மர்யம்: 19:26
[English translation based on the one done by Yusuf Ali.]

 

* ஜித் பின் அலி:

 

So eat and drink and cool (thine) eye. And if thou dost see any man, say, 'I have vowed a FAST to (Allah) Most Gracious, and this day will I enter into no talk with any human being'

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: syaman

 

* அபெத் அல்லா பின் மஸூத், அனிஸ் பின் மலேக்:

 

So eat and drink and cool (thine) eye. And if thou dost see any man, say, "I have vowed a SILENCE to (Allah) Most Gracious, and this day will I enter into not talk with any human being."

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: samten

 

* அபோ பின் கப், அனிஸ் பின் மலேக்:

 

So eat and drink and cool (thine) eye. And if thou dost see any man, say, "I have vowed a SILENT FAST to (Allah) Most Gracious, and this day will I enter into not talk with any human being."

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: swmen samten

 

* அனிஸ் பின் மலேக்:

 

So eat and drink and cool (thine) eye. And if thou dost see any man, say, "I have vowed a FAST AND SILENCE to (Allah) Most Gracious, and this day will I enter into not talk with any human being."

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: swmen wa samten

 

எனக்கு மெயில் அனுப்பி என்னோடு தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்: khaled@exmuslim.com

 

ஆங்கில‌ மூலம்: http://www.answering-islam.org/Quran/Text/var1.html

StumbleUpon.com Read more...

குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள்

குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள்

 

Scribal errors in the Qur'an

கீழ் கண்டவற்றில் (1) என்று உள்ள பத்தியில்(Column) இருக்கும் வார்த்தைகள் இப்போது உள்ள குர்‍ஆனில் உள்ளவைகள் ஆகும். அதே போல (2) என்று உள்ள பத்தியில் இருக்கும் வார்த்தைகள் உண்மையில் அவ்வார்த்தைகள் எப்படி இருக்க வேண்டும் என்றும் மற்றும் அரபியில் அதனை எப்படி சரிபடுத்தினார்கள் எனபதையும் குறிக்கும்.

(2)

(1)

(2)

(1)

மேலே குறிப்பிடப்பட்ட சில எழுத்து பிழைகள் பற்றி கீழ் கண்ட கட்டுரைகளில் விவாதிக்கப்படுகிறது.

மேலே உள்ள படத்தில் இடது பக்கத்தில் இருக்கும் வரிசை எண் 11ல் உள்ள குர்‍ஆன் வசனம் 21:88 பற்றிய விவரங்கள் அறிய படிக்கவும்: page 141, section 3 (a).

மேலே உள்ள படத்தில் இடது பக்கத்தில் இருக்கும் வரிசை எண் 15ல் உள்ள குர்‍ஆன் வசனம் 27:21 பற்றிய விவரங்கள் அறிய படிக்கவும்: page 96f, second last paragraph.

மேலே உள்ள படத்தில் இடது பக்கத்தில் இருக்கும் வரிசை எண் 17ல் உள்ள குர்‍ஆன் வசனம் 5:29 ஐ பற்றிய விவரங்கள் அறிய படிக்கவும்: page 18f and page 133, section (d).

மேலே உள்ள படத்தில் இடது பக்கத்தில் இருக்கும் வரிசை எண் 19ல் உள்ள குர்‍ஆன் வசனம் 51:47 பற்றிய விவரங்கள் அறிய படிக்கவும்: the middle of page 19 and the last half of page 125.

மேலே உள்ள வார்த்தைகளில் எழுத்துபிழைகள்(Scribal Errors) உள்ளது என்று இபின் கல்தன்(Ibm Khaldun – Classical Scholar) என்பவர் அங்கீகரித்துள்ளார் மற்றும் இவைகள் பிரச்சனைகள்(Problems) என்று ஹமிதுல்லா(Hamidullah – Modern Scholar) என்ற அறிஞரும் அங்கீகரித்துள்ளார்.
 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP